Tuesday, January 1, 2019

தமிழகம் முழுவதும் நாளை முதல் ஆர்டிஓ அலுவலகங்களில் பணமில்லா பரிவர்த்தனை



கி.மகாராஜன் 01.01.2019

தமிழகம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் அனைத்து சேவைகளுக்கும் ஆன் லைனில் மட்டுமே பணம் செலுத்தும் பணமில்லா பரிவர்த்தனைத் திட்டம் ஜன.1 முதல் அமலுக்கு வருகிறது.

இதுவரை பழகுநர், ஓட்டுநர் உரிமம், ஆர்சி புத்தகத்தில் பெயர் மாற்றம் செய்தல், ஆர்சி புத்தகத் தின் நகல் பெறுதல், முகவரி மாற்றம் போன்ற சில சேவைகளுக்கு மட்டும் ஆன்லைனில் பணம் வசூலிக்கப்பட்டது.

ஜன. 1 முதல் போக்குவரத்து வாகனங்களுக்கு வரி செலுத்துதல், வாகன உரிமை மாற்றம் செய்தல், தகுதிச்சான்று புதுப்பித்தல், தவணை கொள்முதல், தவணை ரத்து செய்தல் போன்ற அனைத்து பணிகளுக்கும் இணையதளம் மூலம் மட்டுமே பணம் செலுத்த முடியும். பின்னர் ஆன்லைனில் பணம் கட்டியதற்கான ஒப்புகைச் சீட்டுடன் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை அணுகி எளிதில் சேவையைப் பெறலாம்.

மதுரையில் இதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடை பெற்றது. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கல்யாணகுமார் (மதுரை மத்தி) தலைமை வகித்தார்.

இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், லாரி உரிமையாளர்கள் சங்கத்தி னர், மேக்ஸிகேப் உரிமையாளர்கள் சங்கத்தினர், சுற்றுலா பேருந்து, ஆட்டோ உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலு வலக சேவைகளுக்கு இணைய தளம் மூலம் பணம் செலுத்துவது தொடர்பாக செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது

No comments:

Post a Comment

DM arrives late, sparks min’s fury, reprimand

DM arrives late, sparks min’s fury, reprimand  Neha.Lalchandani@timesofindia.com  28.03.2026 Lucknow : Made to wait for 45 minutes by the di...