Tuesday, January 1, 2019

dinamalar 01.01.2019

'கஜா' புயல் நிவாரணத்திற்காக, தமிழகத்திற்கு ஏற்கனவே, 173 கோடி ரூபாய் அளித்த நிலையில், நேற்று, 1,146 கோடி ரூபாயை விடுவித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புயல் சேதத்திற்காக கேட்ட இடைக்கால நிதி விடுவிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசும், பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில், நவ., 16 அதிகாலை, 'கஜா' புயல், கரையை கடந்தது. புயலால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில், வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டது. 

டெல்டா மாவட்டங்கள், முழுமையாக பாதிக்கப்பட்டன.ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள், பல லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மக்கள், தங்களின் வாழ்வாதாரங்களை இழந்தனர். புயல் சேதங்களை பார்வையிட்ட முதல்வர் பழனிசாமி, நவ., 20ல், டில்லி சென்றார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தார்.'புயலால்



பாதிக்கப்பட்ட பகுதிகளில், தற்காலிக புனரமைப்புக்கு, 1,431 கோடி ரூபாய்; நிரந்தர புனரமைப்பு மற்றும் பேரிடர் மீட்புக்கு, 14 ஆயிரத்து, 910 கோடி ரூபாய் வழங்க வேண்டும். புயல் சேதங்களைப் பார்வையிட, மத்திய குழுவை அனுப்ப வேண்டும்' என, பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தினார்.
இதையேற்று, மத்திய குழுவை அனுப்ப, பிரதமர் உத்தரவிட்டார். மத்திய குழுவினர், நவ., 23 முதல், 27 வரை, புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்று, சேதங்களை பார்வையிட்டனர். அவர்களிடம், தமிழக அரசு சார்பில், இடைக்கால நிவாரணமாக, 2,700 கோடி ரூபாய் வழங்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து, மத்திய குழுவினர் ஆய்வு முடித்தபின், புயல் நிவாரணப் பணிகளுக்கு

உதவ, மாநிலங்களுக்கான பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து, மத்திய அரசின் பங்காக, 353.70 கோடி ரூபாயை, மத்திய அரசு விடுவித்தது. அதன்பின், மத்திய வேளாண்மைத் துறை சார்பில், தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், 173 கோடி ரூபாய், விவசாயிகளுக்கு உதவுவதற்காக வழங்கப்பட்டது. 

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில், நேற்று, உயர்நிலைக் கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில், மத்திய நிதி அமைச்சர், அருண்ஜெட்லி, வேளாண்துறை அமைச்சர், ராதா மோகன் சிங், நிதி ஆயோக் துணைத் தலைவர், ராஜிவ்குமார் மற்றும் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், கஜா புயல் நிவாரணமாக, தமிழகத்திற்கு, 1,146 கோடி

ரூபாய் ஒதுக்க, அனுமதி அளிக்கப்பட்டது. மத்திய அரசு, இடைக்கால நிவாரணமாக, 1,146 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது, தமிழக அரசுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் இந்த உதவியால், தங்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்கான சலுகைகள் கிடைக்கும் என, டெல்டா மாவட்ட விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கூடுதல் தொகை

தமிழகத்தில், வர்தா புயலால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளானபோது, தமிழக அரசு, மத்திய அரசிடம், 22 ஆயிரத்து, 573 கோடி ரூபாய் நிதி கேட்டது. மத்திய அரசு, 266.17 கோடி ரூபாய் ஒதுக்கியது.ஒக்கி புயலால், தென் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டபோது, மத்திய அரசிடம், 5,255 கோடி ரூபாய் நிவாரணம் கோரியது. இதற்கு, 133 கோடி ரூபாயை மட்டும், மத்திய அரசு வழங்கியது. தற்போது, கஜா புயல் நிவாரணத்திற்கு, இடைக்கால நிவாரணமாக, 1,431 கோடி ரூபாய் கேட்ட நிலையில், இரண்டு கட்டமாக, 1,319 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.- நமது நிருபர் -

No comments:

Post a Comment

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...