Tuesday, August 13, 2019

டில்லியில் சித்தா மருத்துவமனை

Added : ஆக 13, 2019 02:25

வேலுார்:டில்லியில் சித்தா, ஆயுர்வேத மருத்துவத்துக்காக, எய்ம்ஸ் போன்ற மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது என, மத்திய அமைச்சர், ஸ்ரீபத் யசோ நாயக் கூறினார்.

வேலுார் அடுத்த திருமலைக்கோடியில், 5 கோடி ரூபாய் செலவில், நாராயணி சித்தா மற்றும் ஆயுர்வேதா மருத்துவமனை துவக்க விழா, நேற்று நடந்தது.மத்திய, பாதுகாப்புத் துறை மற்றும் ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஹோமியோபதி மற்றும் யோகா துறைகளின் இணை அமைச்சர், ஸ்ரீபத் யசோ நாயக், மருத்துவமனையை திறந்து வைத்தார்.நிருபர்களிடம், அவர் கூறியதாவது:சித்தா, ஆயுர்வேத மருத்துவம், நாடு முழுவதும் உள்ள, அனைத்து மருத்துவமனைகளிலும் வழங்கப்படுகிறது. இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும், 150 மாவட்டங்களில், 150 சித்தா, ஆயுர்வேதா மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளன. டில்லியில் சித்தா, ஆயுர்வேத மருத்துவத்துக்காக, எய்ம்ஸ் போன்ற மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது.வெளிநாட்டு நோயாளிகள், இந்திய இயற்கை வழி மருத்துவத்தை நாடி வருகின்றனர்.தற்போது, ஜம்மு - காஷ்மீரில், 144 தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது. மேலும் அங்கு, அமைதி நிலை திரும்புகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':  Liver, kidney-related side effects to know etimes.in | Apr 16, 20...