Tuesday, October 8, 2019

24 மணிநேரம் காத்திருந்துஏழுமலையான் தரிசனம்

Added : அக் 07, 2019 22:43

திருப்பதி : திருமலை ஏழுமலையானை தரிசிக்க, சரஸ்வதி பூஜையான நேற்று, பக்தர்கள், 24 மணிநேரம் காத்திருந்தனர்.

திருமலையில் திங்கள்கிழமை முதல், வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. அதைக்காண, பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர். மேலும், தொடர் விடுமுறை காரணமாக திருமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.எனவே, தேவஸ்தானம் வரும், 14ம் தேதி வரை, இலவச முதன்மை தரிசனங்கள் அனைத்தையும் ரத்து செய்துள்ளது. பக்தர்கள், 300 ரூபாய் விரைவு தரிசனம் மற்றும் தர்ம தரிசனத்தில் மட்டுமே, ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

நேற்று ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள், 24 மணி நேரம் காத்திருந்தனர். இன்றும், இந்த நிலை நீடிக்கும் என, கூறப்படுகிறது.இதற்கிடையில், திருமலையில் நடந்து வரும், ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின், 8ம் நாளான நேற்று காலை திருத்தேரோட்டம் நடந்தது. திருத்தேரில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி பவனி வந்து மாடவீதியில் கூடியிருந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்று தீர்த்தவாரியுடன், வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு பெற உள்ளது.

No comments:

Post a Comment

SC relief to Hamdard Institute of Medical Sciences and Research, admissions allowed for 150 MBBS, 49 PG seats

SC relief to Hamdard Institute of Medical Sciences and Research, admissions allowed for 150 MBBS, 49 PG seats 03.06.2026 Written By : Barsha...