Sunday, October 6, 2019

தீபாவளிக்காக வசூல் வேட்டை 5.59 லட்சம் ரூபாய் பறிமுதல்

Added : அக் 06, 2019 00:24

சென்னை:தமிழகத்தில், அரசு அலுவலகங்களில், கணக்கில் காட்டப்படாத, 5.59 லட்சம் ரூபாயை, லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில், அரசு அலுவலகங்களில், ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்காக, வசூல் வேட்டை நடப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, புகார்கள் குவிந்து வருகின்றன.இதையடுத்து, சென்னை, கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலகம், துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம், கோவை மாவட்டம், துடியலுார் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகியவற்றில், லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று முன்தினம், திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில், 3 லட்சத்து, 17 ஆயிரத்து, 380 ரூபாய், கணக்கில் காட்டப்படாத பணம்பறிமுதல் செய்யப்பட்டது. துடியலுார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், 2 லட்சத்து, 715 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், சென்னை, கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், 40 ஆயிரத்து, 710 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மொத்தம், 5 லட்சத்து, 58 ஆயிரத்து, 805 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துஉள்ளனர்.

No comments:

Post a Comment

பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் டிரான்ஸ்பர்களை ஒருபோதும் ஏற்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் டிரான்ஸ்பர்களை ஒருபோதும் ஏற்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு 12.04.2025 மதுரை: பழிவாங்கும் ...