Monday, October 7, 2019

காற்று மீது வழக்கு போடுங்க: பொன்னையன் குசும்பு

Added : அக் 06, 2019 23:44

சென்னை : 'பேனர்' சரிந்து விழுந்து, இளம்பெண் சுபஸ்ரீ இறந்த நிலையில், 'காற்றால் தான் விபத்து நடந்தது; காற்று மீது தான் வழக்கு போட வேண்டும்' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியுள்ளது, சர்ச்சையை எழுப்பியுள்ளது.

சென்னையில், அ.தி.மு.க., பிரமுகர் இல்ல விழாவிற்காக, சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்து, இளம்பெண் சுபஸ்ரீ இறந்தார். இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி போட்ட நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும், 'இனி பேனர் வைப்பதில்லை' என்ற, முடிவிற்கு வந்துள்ளன.

இடையூறு

இந்நிலையில், பேனர் விபத்து குறித்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்னையன், தனியார் தொலைக்காட்சிக்கு, அளித்த பேட்டி: நிகழ்ச்சிகள் குறித்து, பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக, சாலைகளில் பேனர்கள் வைக்கப்படுகின்றன. தி.மு.க., ஆட்சியில் இருந்தே, இந்த பேனர் கலாசாரம் தொடர்கிறது. பொதுமக்களுக்கு இடையூறாக, பேனர்கள் வைக்கக்கூடாது என்பதில், அரசும், அ.தி.மு.க., தலைமையும் உறுதியாக உள்ளன.

பேனர் விபத்தில் இறந்த சுபஸ்ரீக்கும், அ.தி.மு.க., நிர்வாகி ஜெயபாலுக்கும், தனிப்பட்ட வகையில், எந்த பிரச்னையும் இல்லை. அந்த பெண் வாகனத்தில் செல்கிறார். அப்போது, காற்றடித்து பேனர் விழுகிறது; விபத்து நடக்கிறது. எனவே, வழக்கு போடுவது என்றால், காற்றின் மீது தான் போட வேண்டும். இவ்வாறு, பொன்னையன் கூறினார்.

'காற்று மீது வழக்கு போட வேண்டும்' என்ற, பொன்னையனின் பேட்டி தொடர்பான வீடியோ பதிவுகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. கண்டனம்பொன்னையனுக்கு, பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். ஏற்கனவே, 'விதியால் சுபஸ்ரீ இறந்து விட்டார்' என்று கூறிய, விஜயகாந்த் மனைவி பிரேமலதா, கடும் விமர்சனத்திற்கு ஆளானார். இப்போது, பொன்னையனும், அதேபோன்ற கருத்தை கூறி, நெட்டிசன்களிடம் வசமாக சிக்கியுள்ளார்.

No comments:

Post a Comment

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...