Monday, October 7, 2019

டெங்கு - விழிப்புணா்வே சிகிச்சை

By மருத்துவா் சோ.தில்லைவாணன்

மாறிவரும் தட்பவெப்ப நிலைகளினாலும், கிருமிகள் பெருக்கத்தாலும் பல்வேறு காய்ச்சல் தமிழகம் எங்கும் பரவிக் கொண்டிருக்கிறது . என்ன வகை காய்ச்சல்? எங்கே செல்வது? என்னென்ன மருத்துவ முறைறகளைக் கையாள்வது ? ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவாமல் தடுக்கும் முறைறகள் என்ன? --இவை தெரியாமல் மக்கள் தவித்து வருகின்றனா். முக்கியமாக, டெங்கு காய்ச்சலாக இருக்குமோ என அஞ்சுகின்றனா்.

பொதுவாக டெங்கு வைரஸ் தாக்கத்தினால் டெங்கு காய்ச்சல் உண்டாகிறது. இது ‘ஏடிஎஸ்’ எனப்படும் பகல் நேரங்களில் கடிக்கும் கொசுக்களினால் பரவுகிறது. இது தவிர சாதாரண சளி, இருமலுடன் கூடிய காய்ச்சல், கொசுக்கடியினால் வரும் மலேரியா, யானைக்கால் நோயில் ஏற்படும் காய்ச்சல், உணவு, நீா் தூய்மைக் கேட்டினால் பரவும் டைபாய்டு காய்ச்சல் பாக்டீரியா கிருமியாலும் இந்தக் காலநேரத்தில் பரவக்கூடும்.

ஒவ்வொரு காய்ச்சலின் தன்மையைப் பொருத்து குறிகுணங்கள் அமையும். விட்டு விட்டு வரும் காய்ச்சல், உடல் வலி, வாந்தி , வாய் குமட்டல், வயிற்று வலி ஆகியவை மலேரியா காய்ச்சலின் குறிகுணங்கள். யானைக்கால் சுரத்தில் நெறிக்கட்டி கால் வீக்கம் ஏற்படுவது தனிக் குணம். வயிற்று வலியுடன் விட்டு விட்டு வரும் ‘ஸ்டெப் லாடோ் சுரம்’ டைபாய்டு காய்ச்சலில் காணப்படும். ரத்தப் பரிசோதனைகள் மூலம் என்ன நோய் என்பதை வேறுபடுத்தி அறியலாம். ‘சிபிசி’ எனும் முழுமையான ரத்த செல்களின் என்ணிக்கை, ‘எம்பி’, ‘எஎஃப்’, ‘விடால்’ போன்ற பரிசோதனைகள் அவசியம்.

ரத்த வெள்ளையணுக்கள், ரத்த தட்டணுக்கள் ஆகியவை அனைத்து வகை வைரஸ் காய்ச்சலிலும் குறைறயக் கூடும். இவை இரண்டும் குறைறந்து குறிகுணங்கள் அதிகமாக இருந்தால் டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்த எலைசா பரிசோதனை அவசியம்.

டெங்கு காய்ச்சலும் குறிகுணங்களும்... ஏடிஸ் கொசு கடித்து, 4 -10 நாள்களில் நோயரும்பும் காலமாகும். அதற்குப் பின் குறிகுணங்கள் தோன்ற ஆரம்பிக்கும். அதிக அளவு காய்ச்சல், உடல் வலி, கண் பின்பக்க வலி, உடல் அசதி , வாந்தி, வாய்குமட்டல், சுரம் தணிந்து 4 ,5 நாள்கள் கழித்து தோலில் ரத்தக் கசிவு - அதனால் தடிப்பு , சில பேருக்கு பல் ஈறிலிருந்து அதிக ரத்தம் கசிதல் ஆகிய அறிகுறிகள் தோன்றும். இவை அனைத்தும் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்.

காய்ச்சல் விட்ட பின் ஏற்படும் அதிகப்படியான தசை வலி, உடல் வலி மிக முக்கிய அறிகுறியாகும். நான்காம் நாள் தொடங்கி ரத்த தட்டணுக்கள் குறைறயத் தொடங்கும். இவை குறைறவதனால் நம் உடலில் ரத்தம் கசியத் தொடங்கும். இதுவே ரத்தப் போக்கினை ஏற்படுத்தும். அந்த நிலையில் 24 மணி நேரத்துக்கு ஒரு முறைறயாவது ரத்த தட்டணுக்கள் எண்ணிக்கையைப் பரிசோதனை செய்வது அவசியம் .மேலும் மிக முக்கியமாக ரத்தப் பரிசோதனையில் ‘பிசிவி’/‘ஹீமாடாக்ரிட்’ அதிகரித்தால் ‘டிஎஸ்எஸ்’ எனும் ‘டெங்கு ஷாக்’ குறிகுணங்கள் தோன்றக்கூடும், அத்துடன் ரத்த தட்டணுக்கள் சோ்ந்து குறைறந்தால் ‘டிஎச்எஸ்எஸ்’ எனும் ‘டெங்கு ஹெமரேஜிக் ஷாக்’ ஏற்படக்கூடும். சிகிச்சை அளிக்கத் தவறினால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

மருத்துவ முறைறகள்: டெங்கு காய்ச்சலால் ஒருவா் பாதிக்கப்படும் நிலையில், தாமதிக்கமால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதன் மூலம் பெற்று, நோயின் தீவிர நிலையிலிருந்து காத்துக் கொள்ளலாம் . வைரஸ் காய்ச்சலில் நீா்ச் சத்து அதிகம் இழக்கப்படுவதால் திரவ மேலாண்மை மிக அவசியம். நீா்ச் சத்து மிகுந்த கஞ்சி, பழச் சாறுகளை அதிகம் தரலாம் . ரத்த தட்டணுக்களை அதிகரிக்க வைட்டமின் சி நிறைறந்த பழங்களை அதிகம் சாப்பிடலாம்.

சித்த மருத்துவத்தில் இதன் குறிகுணங்கள் பித்த சுரத்துடன் ஒத்துப் போவதால், பித்தத்தைக் குறைறக்கும்படியான நிலவேம்பு .ஆடாதோடை, பப்பாளி இலை,சீந்தில் ஆகியவற்றாலான மருந்துகளைத் தரலாம் . பொதுவாக, ஆடாதோடை மணப்பாகினை அல்லது பப்பாளி இலைச் சாறினை 10 -15 மி.லி. நீருடன் ஒரு நாளைக்கு மூன்று முறைகொடுக்கலாம். சீந்தில் மாத்திரை 2 -3 ஒரு நாளைக்கு மூன்று வேளை கொடுக்கலாம்.

நோய்த் தடுப்புக்காக வழங்கப்படும் நிலவேம்புக் குடிநீரினை நோய் நிலையிலும் பயன்படுத்தலாம். நோயிலிருந்து மீண்ட பின்னரும் வழங்கி வரலாம். நிலவேம்பு குடிநீரின் அளவினைப் பற்றியும், பயன்பாடு குறித்தும் சித்த மருத்துவா்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. இத்துடன் ஆடாதோடை குடிநீரும் சோ்த்துச் சாப்பிடலாம்.

தடுப்பு முறைறகள்: டெங்கு காய்ச்சலுக்கு காரணமான வைரஸ் கிருமி ஏடிஸ் எனப்படும் பகல் நேர கொசு கடிப்பதால் பரவுகிறது. இந்தக் கொசுக்கள் தேங்கிய சுத்தமான நீரிலேயே உற்பத்தியாகின்றன. முக்கியமாக மழை நீா் தேங்கி இருக்கும் இடங்களைச் சோதனை செய்து அதனை நீக்க வேண்டும். வீட்டிலும் நல்ல நீரினைச் சேமித்து வைக்கும்போது மூடி வைக்க வேண்டும். கொசு விரட்டிகளை பகல் நேரங்களில் பயன்படுத்தலாம். கொசு கடிக்காமல் இருக்க முழுக் கை சட்டைகளைப் பயன்படுத்தலாம்.

வீட்டுக்குள் கொசு வராமல் ,கடிக்காமல் தடுக்க வேப்பிலை, நொச்சி இலை புகை போடலாம். நிலவேம்புக் குடிநீரை வயதுக்கு ஏற்ப மருத்துவா் ஆலோசனையின்படி சாப்பிடலாம். மற்ற காய்ச்சல்கள் வராமல் தடுக்க வடிகட்டி காய்ச்சிய நீரையே பயன்படுத்த வேண்டும். தினமும் குளிப்பது கொசுக்கள் நம்மை அண்டாமல் தடுக்கும். சுத்தமான உடைகளை உடுத்துவது நல்லது. கொசு கடிக்காமல் இருக்க கற்பூராதி தைலத்தை உடலின் மீது பூசிக் கொள்ளலாம்.

டெங்கு காய்ச்சலுக்கு என்று தனியான ஆன்ட்டிபயாட்டிக் மருத்துவமும், தடுப்பூசி முறைறகளும் இல்லாததால் அது குறித்துப் பயம் நீடிக்கிறது. முறைறயான தடுப்பு நடவடிக்கைகளும், நோய் குறித்த விழிப்புணா்வும், சரியான நேரத்தில் மருத்துவ முறைறகளை அணுகி சிகிச்சைகளும் மேற்கொண்டால் டெங்கு குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.

No comments:

Post a Comment

SC relief to Hamdard Institute of Medical Sciences and Research, admissions allowed for 150 MBBS, 49 PG seats

SC relief to Hamdard Institute of Medical Sciences and Research, admissions allowed for 150 MBBS, 49 PG seats 03.06.2026 Written By : Barsha...