Monday, October 7, 2019

ரயில் டிக்கெட் முன்பதிவு விவர குறுந்தகவல் வருவதில் தாமதம்: பயணிகள் புகார்

சென்னை  07.10.2019

ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவுக்கு பிறகு வர வேண்டிய குறுந்தகவல் உடனுக் குடன் வருவதில்லை. இதனால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.

இந்திய ரயில்வே துறை சார்பில் இயக்கப்படும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களில் பயணம் செய்ய ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இணையதள வசதி கொண்டுள்ள செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவ தால், ஆன்லைனில் டிக்கெட் முன் பதிவு செய்வது 70 சதவீதமாக உயர்ந்துள்ளது. இருப்பினும், சமீபகாலமாக ரயில் டிக்கெட் முன்பதிவின்போது வரவேண்டிய குறுந்தகவல்கள் தாமதமாக வருவ தால் பயணிகள் அவதிப்படுகின் றனர்.

இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, “ரயில் பயண டிக்கெட் முன்பதிவுக்கு பிறகு செல்போனுக்கு உடனுக் குடன் வரவேண்டிய குறுந்தகவல் மணிக்கணக்கில் தாமதமாக வரு கிறது. சில நேரங்களில் ரயில்கள் புறப்படும் சிறிது நேரத்துக்கு முன்புதான் இந்த குறுந்தகவல் வருகிறது. இதனால், பயணிகள் அவதிப்படுகின்றனர். மேலும், டிக்கெட்டை நகல் எடுத்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, இந்த தொழில்நுட்ப கோளாறை சரி செய்து, ரயில்வே உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

No comments:

Post a Comment

SC relief to Hamdard Institute of Medical Sciences and Research, admissions allowed for 150 MBBS, 49 PG seats

SC relief to Hamdard Institute of Medical Sciences and Research, admissions allowed for 150 MBBS, 49 PG seats 03.06.2026 Written By : Barsha...