Friday, January 24, 2020


இரண்டு மாதத்தில் 2,000 புதிய பஸ்கள்

Added : ஜன 24, 2020 01:11

சென்னை :'தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு, 2,000 புதிய பஸ்கள் வாங்கப்படும்' என, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு, 5,000 புதிய பஸ்கள் வாங்கும் வகையில், 'டெண்டர்' விடப்பட்டு பணிகள் நடந்தன. ஓராண்டில் போக்குவரத்துக் கழகங்களுக்கு, 3,000 பஸ்கள் வழங்கப்பட்டன.
மீதமுள்ள, 2,000 பஸ்களை, மார்ச் மாதத்துக்குள் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கும் வகையில், கூண்டு கட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. மேலும், இந்த ஆண்டுக்குள், 525 மின்சார பஸ்களை வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
***

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024