Sunday, January 26, 2020

வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்

By DIN | Published on : 26th January 2020 12:34 AM |

சென்னை எழும்பூா்-மதுரைக்கு வரும் திங்கள்கிழமை (ஜன. 27) இயக்கப்படும் விரைவு ரயில் 75 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

விழுப்புரம்-திருச்சிராப்பள்ளி பிரிவில் ரயில்வே பராமரிப்பு பணி நடக்கவுள்ளது. இதன் காரணமாக, சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு திங்கள்கிழமை மதியம் 1.40 மணிக்கு இயக்கப்படும் ரயில் தாமதமாக புறப்படும். அதாவது, அதேநாளில் 75 நிமிடம் தாமதமாக பிற்பகல் 2.55 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024