Tuesday, January 21, 2020

நவஜோதிர்லிங்க யாத்திரைக்கு தனி ரயில் இயக்குது ஐ.ஆர்.சி.டி.சி.,

Added : ஜன 20, 2020 22:56

சென்னை:நவஜோதிர்லிங்க கோவில்களுக்கு சென்று வர, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., தனி சிறப்பு ரயிலை இயக்குகிறது.

இந்த ரயில், திருநெல்வேலியில் இருந்து, வரும், பிப்ரவரி 19ல் புறப்பட்டு, மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், சென்னை பெரம்பூர் வழியாக செல்லும். இப்பயணத்தில், மஹாராஷ்டிரா மாநிலத்தில், திரையம்பகேஷ்வர், பீம்சங்கர், குருஸ்ணேஸ்வர், அவுங்நாக்நாத், பார்லி வைத்யநாத், குஜராத்தில் சோம்நாத் கோவில்களுக்கு செல்லலாம். மத்தியபிரதேசத்தில், ஓம்காரேஸ்வர், உஜ்ஜையினி மஹாகாலேஸ்வர், ஆந்திராவில் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் ஆகிய, ஒன்பது ஜோதிர்லிங்கங்களை தரிசித்து வரலாம். மொத்தம், 13 நாட்கள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு, 15 ஆயிரத்து, 320 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.மேலும் தகவலுக்கு, சென்னை, எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் உள்ள, ஐ.ஆர்.சி.டி.சி., மையத்துக்கு, 90031 40680, 82879 32121 என்ற மொபைல் போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

தேவை... திறன்களை மதிப்பிடும் முறை!

தேவை... திறன்களை மதிப்பிடும் முறை !  ]இன்றைய அவசர உலகில் மாணவா்கள் பல்வேறு திசைதிருப்பல்களுக்கு மத்தியில் தோ்வுக்கு தயாராவது என்பது கடினமே....