Tuesday, March 3, 2020

மூன்றாவது குழந்தை பேறுக்கு ஊதியம் வழங்கும் உத்தரவு ரத்து

Added : மார் 02, 2020 22:21

சென்னை: இரட்டை குழந்தை பெற்ற பின், அடுத்த குழந்தை பேறு காலத்துக்காக, ஊதிய சலுகை வழங்கும்படி பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில், மத்திய தொழிலக பாதுகாப்பு படையில், ஆஷியா பேகம் என்பவர் பணியாற்றுகிறார். இவருக்கு, ஒரே பிரசவத்தில், இரட்டை குழந்தைகள் பிறந்தன. விடுமுறைஅடுத்த பேறு காலத்துக்காக, விடுமுறையில் சென்றார். விடுமுறை கால ஊதியம் மறுக்கப்பட்டதால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரியின் உத்தரவை ரத்து செய்து, பேறு கால விடுமுறை மற்றும் ஊதிய பலன்களை வழங்கும்படி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு, மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் இயக்குனர் ஜெனரல், ஐ.ஜி., - டி.ஐ.ஜி.,யும் மேல்முறையீடு செய்தனர்.மனுவை, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது. மத்திய அரசு சார்பில், கே.சீனிவாசமூர்த்தி ஆஜராகி, ''பேறு கால விடுமுறை மற்றும் சலுகைகள், மத்திய அரசு பணி விதிகளின்படி தான் வழங்க முடியும். அதன்படி, சரியான முடிவே எடுக்கப்பட்டுஉள்ளது,'' என்றார்.

மேல்முறையீட்டு மனுவை விசாரித்த, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:இந்த வழக்கு, பேறு கால விடுமுறைக்கு ஊதியம் வழங்குவது தொடர்பானது. மத்திய அரசு பணி விதிகளின்படி, இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால், ஊதிய சலுகை இல்லை. இரட்டை குழந்தை பேறின் போது, முதலில் ஒரு குழந்தை, அடுத்ததாக ஒரு குழந்தை என, பெற்றெடுக்கப்படும்.அதிகாரம்அந்த குழந்தைகளில் யார் பெரியவர் என்பது கூட, இடைவெளியை வைத்து கணக்கிடப்படும். மத்திய அரசு விதிகளை கவனத்தில் கொள்ளாமல், ஊதிய சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இது தவறு. எனவே, தனி நீதிபதியின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது.விதி விலக்கான சூழ்நிலைகளில், நிபந்தனைகளை தளர்த்த, மத்திய அரசுக்கு அதிகாரம் இருந்தால், இந்த வழக்கில் தகுந்த முடிவை அதிகாரிகள் எடுக்கலாம்.இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024