Wednesday, March 18, 2020


கொரோனாவால் மொபைல் மூலம் திருமணம்

Updated : மார் 18, 2020 00:41 | Added : மார் 18, 2020 00:40 

ஐதராபாத்,: உலகையே அச்சுறுத்தி வரும் 'கொரோனா' வைரஸ் காரணமாக, தெலுங்கானாவில், ஒரு ஜோடி, 'மொபைல்' போன் மூலம் திருமணம் செய்து கொண்டது. சவுதி அரேபியாவில், ஐந்து ஆண்டுகளாக பணியாற்றி வருபவர், முகமது அத்னன் கான். இவருக்கு, திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.




வருத்தம்

இதையொட்டி, அவர், சவுதியில் இருந்து விமானம் மூலம், தெலுங்கானா மாநிலம் கம்மம் நகருக்கு வர இருந்தார். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக, திடீரென விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால், அவரால் முன்னதாக வர முடியவில்லை. வேறு நாடு வழியாக, நேரடியாக திருமண மண்டபத்திற்கு வர முயற்சித்தும் முடியவில்லை. இதனிடையே, திருமண நாளும் வந்தது. மணமகன் மற்றும் மணப்பெண் வீட்டார், மண்டபத்தில் காத்திருந்தபோது, 'தன்னால் திருமணத்திற்கு வர முடியவில்லை' என, முகமது அத்னன் மொபைல் போனில் வருத்தத்துடன் கூறினார். உடனே, மொபைல் போன் வழியாக திருமணம் நடத்த, இரு தரப்பு வீட்டாரும் முடிவு செய்தனர்.


அதன்படி, மொபைல் போனின், 'வீடியோ கால்' வாயிலாக முகமது அத்னன் திரையில் தோன்ற, இங்கு மணப்பெண் அமர்ந்திருக்க, இஸ்லாமிய வழக்கப்படி, 'நிக்கா' சடங்குகள் நடைபெற்றன. வாழ்த்துமணமகன் மொபைல்போன் வாயிலாக, திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, மணமகள் சம்மதத்துடன் திருமணம் இனிதே முடிந்தது. திருமணத்திற்கு வந்திருந்தோர், மொபைல் போன் வழியாகவே, மணமகனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024