Wednesday, April 1, 2020

வீட்டு வாடகை கேட்காதீர் அரசு அதிரடி உத்தரவு

Updated : ஏப் 01, 2020 00:11 | Added : ஏப் 01, 2020 00:02 |

சென்னை:'வாடகைக்கு குடியிருக்கும் தொழிலாளர்களிடம், வீட்டின் உரிமையாளர்கள், ஒரு மாதம், வாடகை கேட்க வேண்டாம்' என, தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

பல்வேறு மாநிலங்களில் இருந்து இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், தடையுத்தரவை மீறி, தங்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுரையை ஏற்று, தமிழக அரசு, சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதன் விபரம்:வெளி மாநில தொழிலாளர்களுக்கு, அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே, தற்காலிக இருப்பிடம், உணவு போன்றவற்றை, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து தர வேண்டும்.வெளி மாநிலங்களில் இருந்து, தமிழகத்தில் உள்ள சொந்த ஊர் வரும் தொழிலாளர்களை பரிசோதனை செய்து, 14 நாட்கள் தனியே தங்க வைக்க வேண்டும்.

ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள், கடைகள் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் அதில் வேலை பார்த்த ஊழியர்கள், தொழிலாளர்கள் நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.

தொழிற்சாலை, கடைகள் போன்றவற்றில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு, தடையுத்தரவு காலங்களில், சம்பளம் வழங்கப்பட வேண்டும். தொழிலாளர்கள் வசிக்கும் வீட்டின் உரிமையாளர்கள், ஒரு மாதம், வாடகை கேட்கக் கூடாது.தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை, வீட்டை காலி செய்யும்படி, இடத்தின் உரிமையாளர் கூறினால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...