Wednesday, December 30, 2020

10 ஆயிரம் பெண் குழந்தைக்கு செல்வமகள் சேமிப்பு கணக்கு


10 ஆயிரம் பெண் குழந்தைக்கு செல்வமகள் சேமிப்பு கணக்கு

Added : டிச 30, 2020 02:17

திருப்பூர்:தமிழகம் முழுவதும், 10 ஆயிரம் பெண் குழந்தைகளுக்கு இலவசமாக, 'செல்வமகள்' சேமிப்பு கணக்கு துவங்க, திருப்பூர் மேற்கு ரோட்டரி கிளப் திட்டமிட்டுள்ளது.

பெண் குழந்தைகளின் எதிர்கால சேமிப்புக்காக, செல்வமகள் சேமிப்பு திட்டத்தை பிரதமர் அறிமுகப்படுத்தினார். 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் தபால் அலுவலகங்களில் கணக்கு துவங்கலாம். ஓராண்டுக்கு குறைந்தபட்சம், 250 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும்.ஆண்டுக்கு, 7.6 சதவீத வட்டி உண்டு. 21 வயதில் கணக்கு முடிக்கும் போது, மூன்று மடங்கு தொகை கிடைப்பதால், மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் திருப்பூர் மேற்கு ரோட்டரி கிளப் சார்பில், 10 ஆயிரம் பெண் குழந்தைகளுக்கு இலவசமாக கணக்கு துவங்கப்பட உள்ளது. ரோட்டரி கிளப் தலைவர் ரகுபதி கூறுகையில், ''அந்தந்த பகுதியில் உள்ள பயனாளர்கள், தபால் அலுவலகங்கள் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.

ஒவ்வொருவரின் பெயரிலும், 250 ரூபாய் செலுத்தி கணக்கு துவங்கப்படும். மத்திய அமைச்சர்கள் முன்னிலையில், இதற்கான பாஸ்புத்தகம் வினியோகிக்க திட்டமிட்டுள்ளோம். பயன்பெற விரும்புவோர், 98435 12288 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.

No comments:

Post a Comment

The Vijay phenomenon enters research circles as hot topic

The Vijay phenomenon enters research circles as hot topic  Kamini.Mathai@timesofindia.com  10.06.2026  Chennai : “Good morning, Professor. C...