Saturday, December 26, 2020

சென்னை -- மதுரை தேஜஸ் ரயில் 4ம் தேதியில் இருந்து ரத்து


சென்னை -- மதுரை தேஜஸ் ரயில் 4ம் தேதியில் இருந்து ரத்து

Updated : டிச 25, 2020 22:44 

சென்னை:பயணியர் வருகை குறைவால், சென்னை -- மதுரை தேஜஸ் ரயில், வரும், 4ம் தேதியில் இருந்து, ரத்து செய்யப்படுகிறது.

சென்னை -- மதுரை இடையே, வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்பட்ட தேஜஸ் ரயில், கொரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்டது. கொரோனா தளர்வுக்கு பின், அக்., 2ல் இருந்து, மீண்டும் இயக்கப்பட்டது.இந்த ரயில், எழும்பூரில் இருந்து காலை, 6:00 மணிக்கு புறப்படுவதால், பயணியர் அதிகம் வர முடியவில்லை. நேரம் மாற்றம் செய்ய வேண்டும் என, பயணியர் வலியுறுத்தினர்.

இதனால், அக்., 12ல் இருந்து, நேரம் மாற்றப்பட்டு, எழும்பூரில் இருந்து காலை, 6:30 மணிக்கு புறப்பட்டு, மதுரைக்கு நண்பகல், 12:50 மணிக்கு சென்றடைந்தது. மதுரையில் இருந்து, மாலை, 3:15 மணிக்கு புறப்பட்டு, இரவு, 9:30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைந்தது. இந்நிலையிலும், இந்த ரயிலில் பயணியர் வருகை குறைந்ததால், இருவழியிலும், ஜன., 4 முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Can’t alter patta sans valid title, officials duty bound to rectify anomalies, says Madras HC

  Can’t alter patta sans valid title, officials duty bound to rectify anomalies, says Madras HC 10.08.2026 The petitioner contended that his...