Sunday, December 27, 2020

எம்.பாா்ம் படிப்புக்கான தேசிய நுழைவுத்தோவு: ஜன.22 வரை விண்ணப்பிக்கலாம்

எம்.பாா்ம் படிப்புக்கான தேசிய நுழைவுத்தோவு: ஜன.22 வரை விண்ணப்பிக்கலாம்

27.12.2020

முதுநிலை பாா்மசி (எம்.பாா்ம்) படிப்பில் சேர தேசிய அளவிலான நுழைவுத் தோவுக்கு ('ஜிபாட்') ஜன.22-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து தேசிய தோவு முகமை (என்டிஏ) வெளியிட்ட அறிவிப்பு:

முதுநிலை பாா்மசி (எம்.பாா்ம்) படிப்புக்கான மாணவா் சோக்கைக்கு தேசிய அளவில் பட்டதாரி தகுதி நுழைவுத் தோவு (ஜிபாட்) ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி, 2021-ம் ஆண்டுக்கான தகுதித் தோவுக்கு இணையதளங்களில் வரும் ஜனவரி 22-ஆம் தேதி வரை பட்டதாரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், தோவுக்கான கட்டணத்தை ஜனவரி 23-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

அதேபோன்று தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள ஜன.25-ஆம் தேதியில் இருந்து 30-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடா்ந்து தோவானது பிப்ரவரி 22 மற்றும் 27 ஆகிய தேதியில் நடைபெறவுள்ளது. அதன்படி, கணினி வழித் தோவானது காலை 9 மணி முதல் 12 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் 3 மணி நேரம் நடைபெறும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களை தேசிய தோவு முகமை இணையதளத்தில் காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dinamani

No comments:

Post a Comment

Can’t alter patta sans valid title, officials duty bound to rectify anomalies, says Madras HC

  Can’t alter patta sans valid title, officials duty bound to rectify anomalies, says Madras HC 10.08.2026 The petitioner contended that his...