Wednesday, December 30, 2020

கல்லுாரி முதல்வர் தாய்க்கு ரூ. 22 லட்சம்


கல்லுாரி முதல்வர் தாய்க்கு ரூ. 22 லட்சம்

Added : டிச 29, 2020 23:26

சென்னை: நாமக்கல் மாவட்டம், ஆதனுாரைச் சேர்ந்தவர், ஜெயசூர்யநாதன், 27; தனியார் கல்லுாரி முதல்வர். இவர், பைக்கில், 2018 டிசம்பரில், நாமக்கல் மாவட்டம், வெண்ணாந்துார் பகுதியில் சென்றபோது, அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் மோதி, உயிரிழந்தார்.

மகன் இறப்பிற்கு இழப்பீடு வழங்கக் கோரி, ஜெயசூர்யநாதனின் தாய் பழனியம்மாள், சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், வழக்கு தொடர்ந்தார். விசாரணை, நீதிபதி பி.சரோஜினிதேவி முன் நடந்தது.'மனுதாரருக்கு இழப்பீடாக, 21.83 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு, 7.5 சதவீத வட்டியுடன், ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...