Monday, August 16, 2021

27,000 சதுர அடி கட்டடங்களுக்கு உள்ளூரிலேயே அனுமதி பெறலாம்!



தமிழ்நாடு

27,000 சதுர அடி கட்டடங்களுக்கு உள்ளூரிலேயே அனுமதி பெறலாம்!

Added : ஆக 16, 2021 00:12

சென்னை-'சென்னைக்கு வெளியில் உள்ள பகுதிகளில், 26 ஆயிரத்து 909 சதுர அடி வரையிலான தளபரப்பு உடைய கட்டடங்களுக்கு, உள்ளூர் அளவிலேயே ஒப்புதல் வழங்கலாம்' என, நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., உத்தரவிட்டுள்ளது.

ஒப்புதல்சென்னை பெருநகருக்கு வெளியில் உள்ள பகுதிகளில், கட்டுமான திட்ட அனுமதி வழங்கும் பொறுப்பு, டி.டி.சி.பி.,யிடம் உள்ளது. இதில், பொது கட்டட விதிகளின் அமலாக்கத்துக்காக, சில அதிகார பகிர்வுகளை டி.டி.சி.பி., வழங்கியது.இதன்படி, அதிக உயர மில்லாத கட்டடங்களுக்கு உள்ளூர் நிலையில் ஒப்புதல் வழங்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், இந்த நடைமுறை பின்னர் மாற்றப்பட்டது.இந்நிலையில், டி.டி.சி.பி., இயக்குனர் சரவணவேல்ராஜ் பிறப்பித்துள்ள உத்தரவு:அதிக உயரமில்லாத கட்டடங்கள் வகையில், 26 ஆயிரத்து 909 சதுர அடி வரையிலான தளபரப்பு உள்ள கட்டடங்களுக்கு, கள அலுவலர் நிலையிலேயே ஒப்புதல் வழங்கலாம்.இது, 18.3 மீட்டருக்கு மிகாத உயரம் உள்ள குடியிருப்பு, வணிக, நிறுவன கட்டடங்களுக்கு பொருந்தும்.

நடைமுறை

இதே போல சிட்கோ, சிப்காட் தொழிற்பேட்டைகளில் உள்ள மனைகளில், 29 ஆயிரத்து 909 சதுர அடி வரையிலான தளபரப்பில் உள்ள 18.3 மீட்டர் உயர கட்டடங்களுக்கு, மாவட்ட அலுவலர்கள் ஒப்புதல் வழங்கலாம்.நகர பகுதியில் 5ஏக்கர் வரையும்; ஊரக பகுதிகளில் 10 ஏக்கர் வரையிலான மனைப்பிரிவு திட்டங்களுக்கு தலைமையகத்தில் தான் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், இந்த வரையறையில், குடும்பத்துக்குள் பங்கு பிரிப்பது, சொந்த உபயோக மனைப்பிரிப்புக்கு, மாவட்ட அலுவலர் ஒப்புதல் வழங்கலாம். இந்த புதிய அதிகார பகிர்வு நடைமுறைகளை, உடனடியாக அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024