Monday, June 8, 2015

No more pulling chain to stop train

BAREILLY: "To stop train pull chain" notice inside railway coaches is soon set to become history. The railway ministry has decided to do away with these chains. An official said railways had incurred a loss of Rs 3,000 crore because trains ran late with the indiscriminate chain-pulling for no good reason.

At Izzatnagar in Bareilly, the work of removing the chains from trains has already begun. Officials say that as an alternative arrangement, the mobile phone number of the driver and assistant driver could be displayed in coaches, so passengers can call in case of an emergency.

Rajendra Singh, public relations officer of the North Eastern Railways, Izzatnagar division, said, "The alarm chains will no longer be installed in new coaches being manufactured at rail coach factories across the country. The Railway Board has already issued a notification requiring that the chains not be installed. Maintenance workshops have already started removing the alarm chains from existing coaches. At Izzatnagar railway workshop, technicians have already started removing the alarm chain from coaches coming in for maintenance."

He said that in addition to displaying the mobile phone numbers of the driver and assistant driver, one employee carrying a walkie-talkie would be present for every three coaches in each train.

Singh said it was no secret that the chain was rampantly misused by travellers who pulled it in self-interest rather that in case of emergency. The alarm chain is meant to be pulled only in case of emergency, and only when contact cannot be established with the travelling ticket examiner (TTE) on board. As things are now, people pull the chain when relatives or friends might miss the train, the officer said.

During a recent visit to the city, Union minister of state for railways Manoj Sinha had said that chain-pulling to stop the train was a big menace in UP and Bihar, and train schedules were thrown out of whack by miscreants who pulled the chain for no good reason, causing huge losses to the railways.

Divisional railway manager, (DRM) Izzatnagar division, Chandra Mohan Jindal, said, "It is undeniable that chain-pulling is among the major factors delaying trains. This has come up for discussion before the Railway Board. The problem is acute in states like Bihar UP, Rajasthan, Punjab and Haryana."

IRT Medical College plans to increase number of hostel rooms for girls

Owing to higher proportion of girl students gaining admission over the years by virtue of scoring high marks, the IRT Medical College, Perundurai, has contemplated having an additional block for girls’ hostel.

The boy-girl ratio was currently 35:65 for the 60 seats for each year. During the early nineties when the hostels were constructed, the admission trend used to be the other way about.

There are now two blocks for boys and one for girls.

The idea of the college authorities is to convert the boys hostel into girls’ hostel and vice-versa.

The toilets will have to be replaced accordingly.

Measures were being taken to secure necessary approval for completion of the work before admitting students for the current academic year, said College Dean M. Rajendran.

Scope for utilising funds earmarked for renovation of hospital toilets for setting right toilets in the hostels would be explored, he said.

In the first year, three students share a room, and in the second year, a room is provided for two students. In the third year, each student occupies a room, and in the subsequent year, a single room with attached toilet is provided for every student.

Every year, girls have been faring well, scoring the necessary cut-off. Last year, the cut-off was 198.5 for forward caste, 197.75 for BC, 194 for MBC, and 188 to 190 for SC/ST.

Having applied for increase in intake from 60 to 100 students, the college authorities were keen to set right the hostels at the earliest possible.

In all likelihood, the intake would increase for admissions next year, the Dean said.

Though the college had applied for increasing student strength in 2010, there has been progress in the proposal only in recent months.

The college is confident about securing approval of Medical Council of India before completion of this academic year.

Sunday, June 7, 2015

நடனத் தாரகை இ.வி.சரோஜா



எம்.ஜி.ஆரும் சிவாஜியும் நாயகர்களாக உருவாகிவந்த ஐம்பதுகளின் தொடக்கத்தில்தான் நடனத் தாரகை இ.வி.சரோஜாவும் சினிமாவில் நுழைந்தார். 1952-ல் வெளியான ‘என் தங்கை’ படத்தில் எம்.ஜி.ஆரின் தங்கையாக அறிமுகமானார் சரோஜா.

என்கண் தந்த கலைச்செல்வி

இன்றைய திருவாரூர் மாவட்டத்தில் பழம்பெருமை மிக்க, பாடல்பெற்ற முருகன் தலமாக இருக்கும் ‘என்கண்’தான் இ.வி.சரோஜா பிறந்து வளர்ந்த ஊர். வேணு பிள்ளை ஜானகி அம்மையார் தம்பதியின் இரண்டாவது வாரிசாகப் பிறந்த இவருக்கு சிறு வயதுமுதலே நடனத்தில் ஆர்வம். இரண்டு வயதுமுதல் அம்மாவிடம் நடனம் கற்றுக்கொண்டு பிரகாசித்தார்.

அப்போது மயிலாடுதுறை அருகில் உள்ள வழுவூர் பரதக் கலையின் வித்தக மையமாக விளங்கியது. அதற்குக் காரணம் வழுவூர்ப் பாணி நாட்டியம் டெல்லிவரை புகழ்பெற்று விளங்கியது. காண்போரை மயக்கும் லயசுத்தமும், அங்க சுத்தமும் கொண்டதே அதற்குக் காரணம். அதை உருவாக்கியவர் நாட்டிய மேதை நட்டுவனார் பி. ராமையாபிள்ளை.

திரையுலகில் அன்று முத்திரை பதித்த குமாரி கமலா, வைஜயந்திமாலா, லலிதா, பத்மினி அனைவரும் வழுவூராரின் மாணவிகளே. பதினோரு வயதில் இ.வி. சரோஜாவின் திறமையைக் கண்டு, அவரைத் தனது பள்ளியில் சேர்த்துக் கொண்டு முறைப்படி நடனம் பயிற்றுவித்தார் வழுவூரார். ஆசானின் பெயரைக் காப்பாற்றும் விதமாக 14 வயதில் அரங்கேற்றம் செய்து 16 வயதுக்குள் 100 மேடை நிகழ்ச்சிகளில் ஆடிச் சாதனை புரிந்தார் சரோஜா.

மயக்கிய மான் நடனம்

அறிமுகப் படம் தந்த புகழ் அவரை மடமடவென்று புகழ்பெற்ற நட்சத்திரமாக்கியது. ஐம்பதுகளில் ஒல்லியான உடலமைப்பு கொண்ட கதாநாயகிகள் அபூர்வம். இ.வி. சரோஜாவுக்கு ஒல்லியான உடற்பாங்குடன் அகலமான நெற்றி, நீளமான முகம், கருணையும் கவர்ச்சியும் இணைந்த கண்கள், கொவ்வை இதழ்கள், குளிர் சிரிப்பு என்று ரசிகர்களைத் தன் கண்ணியமான அழகினால் கவர்ந்தார்.

வழுவூர் பாணி நடனத்தை சினிமாவுக்கான நடத்துடன் இணைத்து ஒவ்வொரு நடன அசைவையும் இவர் நளினமாக வெளிப்படுத்திய பாங்கில் ரசிகர்கள் உருகிப்போனார்கள். இளம் மான்போல் துள்ளித் துள்ளி பல படங்களில் இவர் ஆடிய நடனம், ரசிகர்களின் இதயத்தை வருடியது.
பின்னாளில் புகழ்பெற்ற இயக்குநராக விளங்கிய திரைக்கதாசிரியர் ஏ. பி. நாகராஜன் கதை, வசனம் எழுதி நடித்த ‘பெண்ணரசி’ படத்தை வேணுசெட்டியாரின் தயாரிப்பில் இயக்கினார் கே.சோமு. அதில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்துத் தனது திறமையான நடனத்தால் கவர்ந்தார்.
பின்னர் டி.ஆர். ராமண்ணா இயக்கத்தில் எம்.ஜி. ஆர், டி.ஆர். ராஜகுமாரி, நடித்த ‘குலேபகாவலி’ படத்தில், முக்கிய வேடத்தில் நடித்தார். அந்தப் படத்தில் “சொக்கா போட்ட நவாப்பு... செல்லாதுங்க ஜவாபு” என்ற பாடலுக்கு பாடி ஆடிய நடனம், சரோஜாவைப் பட்டிதொட்டியெங்கும் பிரபலப்படுத்தியது.

பின்னர் எம்.ஜி. ஆருக்கு வெள்ளிவிழா காவியமாக அமைந்த ‘மதுரை வீரன்’ படத்தில் கதாநாயகி பொம்மியின் (பானுமதி) தோழியாக நடித்தார். அந்தப்புரத்துக்குள் நுழைந்துவிடும் புள்ளிமானைத் துரத்திவரும் மதுரைவீரன் எம்.ஜி.ஆரை “வாங்க மச்சான் வாங்க, வந்த வழியைப் பார்த்துப் போங்க” என்று பகடி செய்யும் விதமாக இ.வி.சரோஜா பாடி ஆடிய நடனம் அமோக வரவேற்பைப் பெற்றது.

இதேபடத்தில் பானுமதி, பத்மினி ஆகியோர் ஆடிய நடனங்கள் இடம்பெற்றிருந்தாலும் இ.வி. சரோஜாவின் நடனமே ரசிகர்களைத் திரையரங்குக்குத் திரும்பத் திரும்பச் சுண்டி இழுத்தது. இ. வி. சரோஜாவின் நடனக் காட்சி இருந்தால் அந்தப் படம் வெற்றிபெறும் என்று நம்பப்பட்டது. இதனால் 50க்கும் அதிகமான படங்களில் அவரது நடனம் கதையில் பொருத்தப்பட்டது.

மதுரை வீரனுக்குப் பிறகு ‘அமர தீபம்’, ‘ பாவை விளக்கு’, ‘கற்புக்கரசி’, ’எங்க வீட்டு மருமகள்’, ‘தங்கப் பதுமை’, ‘ நீலமலைத் திருடன்’ என்று சரோஜாவுக்குப் புகழைச் சேர்த்த படங்கள் பல. நகைச்சுவை நடிகருடன் ஜோடி சேர்ந்தால் கதாநாயகி ஆக முடியாது என்ற மாயையையும் சரோஜாவே முதலில் உடைத்தார்.
சந்திரபாபுவுடன் மூன்று படங்களில் இணையாக நடித்த அவர், பிறகு எம். ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், தெலுங்குப் படவுலகில் அக்னிநேனி நாகேஷ்வரராவ் என முன்னணிக் கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார். பதினைந்து வயதில் தொடங்கி 26 வயதுவரை மட்டுமே நடித்த இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் உட்பட சுமார் 60 படங்களில் நடித்திருக்கிறார். சில படங்களுக்கு நடன இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.

நடனத் தாரகை

புகழின் உச்சியில் இருந்தபோது, இயக்குநர் டி.ஆர்.ராமண்ணாவைத் திருமணம் செய்துகொண்டார். தன் சகோதரர் இ.வி. ராஜனுடன் இணைந்து படநிறுவனம் தொடங்கி ‘கொடுத்து வைத்தவள்’ என்ற படத்தைத் தயாரித்தார். ப. நீலகண்டன் இயக்கிய இந்தப் படத்தில் எம்.ஜி.ஆரும், இ.வி.சரோஜாவும் இணைந்து நடித்தனர். இதுவும் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

அந்தப் படத்தில் சரோஜாவின் நடிப்புக்குப் பாராட்டு மழை கிடைத்தது. ஆனால் அதுவே அவரது கடைசிப் படமாக அமைந்தது. சரோஜா ராமண்ணா தம்பதிக்கு நளினி என்ற ஒரே மகள். திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டாலும் நடனத்தைத் தன் கண்ணென நேசித்ததால் ‘மனோன்மணியம்’ காவியக் கதையை நாட்டிய நாடகமாக தயாரித்து இந்தியா முழுவதும் நடத்திக் காட்டி நடனத்திலும் தனது பங்களிப்பைச் திறம்படச் செய்த இவர் கடந்த 2006-ம் ஆண்டு இறையடி சேர்ந்தார். ஆனால் நடனத்தில் அவர் வைத்த ஒவ்வொரு அடியும் அமரத்துவம் பெற்றது.

மக்கள் மனதில் பதிந்திருக்கும் பி.பி. ஸ்ரீனிவாஸின் பிம்பம்..



ரோஜா மலரே ராஜகுமாரி’ என காதல் பாடலாகட்டும், ‘மயக்கமா கலக்கமா’ என சோக ராகமாகட்டும். கள்ளமும், கபடமும் இல்லாத காந்தக் குரலில் பாடித் திரிந்த கானக்குயில் பி.பி.ஸ்ரீனிவாஸ் இன்று நம்முடன் இல்லை. தங்கச்சரிகை தலைப்பாகை, பட்டு அங்கவஸ்திரம், கண்ணாடி, கலர்கலராய் பேனாக்கள், இடது தோள்பட்டையில் ஒரு ஜோல்னா பை... இதுதான் மக்கள் மனதில் பதிந்திருக்கும் பி.பி. ஸ்ரீனிவாஸின் பிம்பம்..

அப்போது தமிழில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் எம்.ஜி. ஆருக்கும் டி.எம்.சௌந்தரராஜன்தான் பின்னணி பாடிக்கொண்டிருந்தார். அவர் குரல் ஜெமினி கணேசனுக்கு சரியாக பொருந்தாததால் அவருக்கு ஏ.எம்.ராஜா பின்னணி பாடிவந்தார்.

1959-ம் ஆண்டு வெளிவந்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜெமினி கணேசனுக்காக ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே’ என்ற பாடலை முதன் முதலாகப் ஜி.ராமநாதனின் இசையில் பாடினார் பி.பி.ஸ்ரீனிவாஸ். ஜெமினி கணேசனின் குரலுக்கு கனகச்சிதமாகப் பொருந்தியது ஸ்ரீனிவாஸின் குரல். அதன்பின்னர் அவர் கிட்டத்தட்ட ஜெமினி கணேசனின் குரலாகவே மாறிப்போனார் என்றுகூட சொல்லலாம். பி.பி. ஸ்ரீனிவாஸ் 12 மொழிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இத்தனை பாடல்களை பாடிய இவர், தான் கலைத்துறையில் நுழைவதற்கு தடையாக இருந்த ஜோதிட சாஸ்திரத்தை அடித்து நொறுக்கிய கதை தெரியுமா?

ஸ்ரீனிவாஸ் கலைத்துறையில் வெற்றி பெறுவாரா என்று அறிவதற்காக அந்தக் காலத்தில் புகழ்பெற்ற ஜோதிடர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார் அவரது தயார் சேஷகிரி அம்மாள். ஸ்ரீனிவாஸின் ஜாதகத்தை நன்றாக அலசி ஆராய்ந்த ஜோதிடர் கலைத்துறையில் இந்தப் பிள்ளை ஒரு அடிகூட எடுத்து வைக்க மாட்டான் என்று அடித்துக் கூறிவிட்டார். ஜோதிடரின் கூற்றால் தாயார் மனம் கலங்கினாலும், ஸ்ரீனிவாஸ் துளியும் அசரவில்லை.

நீங்கள் சொல்லும் பலன்கள் எல்லாம் பலிக்குமா என்று ஸ்ரீனிவாஸ் ஜோதிடரைக் கேட்க, பெரும்பாலும் பலிக்கும். சிலவேளை பலிக்காமலும் போகலாம் என்று பதிலளித்தார் ஜோதிடர். அப்போது ஸ்ரீனிவாஸ் அவரிடம் “என் விஷயத்தில் உங்கள் ஜோதிடம் பலிக்காமல் போகலாம்” என்று சொல்ல, இந்த பதிலால் ஜோதிடரே சற்று மிரண்டு போனாராம். அதேமாதிரி சொன்னபடியே ஜோதிடத்தை பொய்யாக்கியாக்கியும் காட்டினார் ஸ்ரீனிவாஸ்.

சென்னையில் அண்ணாசாலையை ஒட்டிய உட்லேண்ட்ஸ் ட்ரைவ் இன் ஹோட்டல் இடம் மாற்றப்படும் வரை தினமும் மாலை நாலுமணி அளவில் பி.பி.ஸ்ரீனிவாஸை அங்கே பார்க்கமுடியும். அவருக்கும், அவருக்கு பரிமாறும் ஊழியருக்குமான உறவு மிகவும் அலாதியானது. தனக்கு இன்னது வேண்டுமென அவரும் சொல்லமாட்டார், ஓட்டல் ஊழியரும் கேட்கமாட்டார். ஒரு டம்ளரில் தண்ணீர் வரும், அதைத் தொடர்ந்து காஃபி வரும். தன் பையில் இருந்து ஒரு மேரி பிஸ்கெட் பாக்கெட்டை எடுத்து ஒரு சில பிஸ்கெட்டுகளை அந்த காஃபியில் தொட்டு சாப்பிடுவார். தன் சுற்றத்தை கவனிக்காத ஒரு ஏகாந்தியாய் பிஸ்கெட்டையும், காஃபியையும் ருசித்துக் கொண்டிருப்பார். அதன்பின், தான் கொண்டுவந்திருக்கும் பேப்பரை எடுத்து வைத்துக்கொண்டு தீவிரமான யோசனையுடன் எழுத ஆரம்பிப்பார். இது அவரின் அன்றாட வழக்கமாகவே மாறிப்போனது.

பாடாத பாட்டெல்லாம் பாடியபின், தமது 83 வயதில் மறைந்த அந்த மாமனிதரின் குரல் தமிழையும் அதன் அழகையும் இனிவரும் காலத்துக்கும் சொல்லிக்கொண்டேயிருக்கும்.

கருணை வேலை பெற்ற அதிகாரிக்கு பணிமூப்பு தனி நீதிபதியின் உத்தரவில் குறுக்கிட மறுப்பு



சென்னை:'கருணை வேலை பெற்றவர்களை நேரடித் தேர்வு பெற்றவர்களுக்கு முன் இடம் பெறச் செய்து மோட்டார் வாகன ஆய்வாளர் பணிமூப்பு பட்டியலை தயாரிக்கும்படி உத்தரவிட்டது சரியே' என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மோட்டார் வாகன ஆய்வாளர், கிரேடு-2 பணிக்கு சிவகுமரன் என்பவர் 1992ல் கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்டார். அவருக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத விலக்கு அளித்து அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.

அதன்பின் மோட்டார் வாகன ஆய்வாளராக வெங்கடராமன் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேரடி நியமனம் பெற்றனர். இவர்கள் 1998ல் கிரேடு-1 அதிகாரியாக பதவிஉயர்வு பெற்றனர். ஆனால் சிவகுமரனுக்கு 1999ல் பதவி உயர்வு அளிக்கப்பட்டது.பணி வரன்முறை செய்யும் போது பட்டியலில் சிவகுமரனுக்கு முன் வெங்கடராமன் கிருஷ்ணமூர்த்தி இருந்தனர். கடந்த 2006ல் மண்டல போக்குவரத்து அதிகாரி பதவி உயர்வுக்கு 15 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

இவர்களில் வெங்கடராமன் கிருஷ்ணமூர்த்தியின் பெயர்களும் இடம்பெற்றன.கடந்த 2010ல் மண்டல போக்குவரத்து அதிகாரியாக சிவகுமரன் பதவி உயர்வு பெற்றார். பணி மூப்பு பட்டியல் தயாரிக்கப்படாததால் தனக்கு அடுத்தகட்ட பதவி உயர்வு பாதிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவகுமரன் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் நேரடி நியமனம் பெற்ற இருவருக்கு முன் சிவகுமரன் பெயரை இடம்பெறச் செய்து பணிமூப்பு பட்டியலை தயாரிக்கும்படி உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து பாஸ்கரன் என்பவர் உள்ளிட்ட ஐந்து பேர் 'அப்பீல்' மனுவை தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த சமீபத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தனபாலன் மற்றும் நீதிபதி சொக்கலிங்கம் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:முன் தேதியிட்டு சிவகுமரனுக்கு பணிவரன்முறை செய்யப்பட்டுள்ளது. கால தாமதமாக வழங்கப்பட்டதற்கு சிவகுமரன் காரணம் அல்ல. உரிய விதிமுறைகள் அரசாணையின் படி தான் சிவகுமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

எனவே கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்ற சிவகுமரனை நேரடி நியமனம் பெற்ற இருவருக்கு முன் இடம்பெறச் செய்து பணிமூப்பு பட்டியலை தயாரிக்கும் படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறுக்கிட விரும்பவில்லை. அந்த உத்தரவு செல்லும்.இவ்வாறு 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

Never use a lift during a fire, you could even put rescuers at risk, say experts

MUMBAI: The news of many of the victims of Saturday's fire tragedy perishing in lifts prompted senior fire officials and experts to issue an advisory to citizens on the dangers of using lifts during fires.

Those who get into a lift during fires put themselves at immense risk, they said. The first precautionary step that building guards and those manning lifts are often asked to take is switching off the power mains. "This prevents the fire from spreading along the electrical circuit and to the rest of the building but those using lifts can get stuck indefinitely and die of suffocation," a retired fire brigade official said.

Besides, some of the modern systems are engineered in such a way that they stop working automatically in case of fire alarms going off. "There is every possibility of the lift breaking down or stopping to work even if power mains are not switched off deliberately," another fire official said.

Those who use lifts in such situations also put at risk the rescuers, say experts. "People getting trapped in lifts are an added worry for rescuers and put them under even more pressure," an official at the spot of Saturday's fire said. "It's best people avoid lifts and either stay put, waiting for rescuers to reach them or use alternate routes like fire escapes," he added.

"தவறாகப் பயன்படுத்தப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டம்'

தகவல் அறியும் உரிமைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.ராஜா தெரிவித்தார்.

சென்னை வர்த்தக சபை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற சட்டக் கருத்தரங்கில் அவர் பேசியதாவது: கடந்த 2005-ஆம் ஆண்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. அரசு, அரசு உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து, மக்கள் உரிமையுடன் தகவல்களை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்ட சட்டமாகும் இது.

இதன் வாயிலாக, அரசு செயல்பாடுகளின் வெளிப்படைத் தன்மையை அறியவும், அங்கு நடைபெறும் ஊழல்களைக் கண்டறியவும் உதவும் என்ற நோக்கில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.

இந்தச் சட்டம் ஒரு சிலரால் தவறாகக் கையாளப்பட்டு வருகிறது. சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்களால், தகவல் ஆணையத்தின் நேரமும், நீதிமன்றத்தின் நேரமும் வீணடிக்கப்படுகிறது.

அதாவது, பயனில்லா விவரங்களைக் கோரி விண்ணப்பிப்பதால் தகவல் ஆணையத்தின் முக்கியப் பணிகளில் தேக்க நிலை உருவாகும் சூழல் ஏற்படுகிறது. இந்தச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்பதற்கு ஒரு உதாரணம் கூறுகிறேன்.

கடந்த சில ஆண்டு முன்னர், சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்ட மேதை அம்பேத்கர் உருவச் சிலை நிறுவுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதற்கான இடத்தைத் தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, சிலையை நீதிமன்ற வளாகத்தின் உள்ளேயே அமைக்க பரிந்துரை செய்தது. அதன்படி, நீதிமன்றத்தின் வளாகத்தில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது.

பின்னர் சிலை அமைத்தது தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்ட இடத்துக்கு அருகே இருந்த 70 ஆண்டுகள் பழைமையான மரத்தின் இரு கிளைகள் வெட்டப்பட்டுள்ளன.

அதற்கான காரணத்தை நீதிமன்றம் விரிவாக எடுத்துரைக்க வேண்டும் என அதில் கேட்கப்பட்டிருந்தது. அந்த விண்ணப்பத்துக்கு, வெட்டப்பட்ட கிளைகள் எதிர் காலத்தில் வளரும்போது, சிலைக்கு சேதம் விளைவிக்கும் என்பதால் அவை வெட்டப்பட்டன என்று நீதிமன்றம் பதில் கூறியது.

இதுபோன்று பயனற்ற விவரங்களைக் கோருவது, அந்தச் சட்டம் இயற்றப்பட்டதற்கான நோக்கத்தைச் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது என்றார் நீதிபதி டி.ராஜா.

Lufthansa set to make indirect bookings dearer

NEW DELHI: Full service airlines may soon levy a new surcharge on passengers who do not buy tickets from them directly.

German mega airline Lufthansa group will from September 1, 2015, charge in India and abroad a fee of almost $18 (about Rs 1,200) on every ticket that is not bought from their own website or offices.

A surcharge, distribution cost charge (DCC), will have to be paid for Lufthansa group tickets bought through global distribution system (GDS) that are used by travel agents and travel portals in India and abroad.

Full service airlines pay about $5-6 per ticket as GDS charge for sales through travel agents and portals. "They do not charge this separately from passengers and the GDS fee is built in their ticket price. With Lufthansa soon going to charge separately, other full services airlines in India and abroad may follow suit," said a senior airline official.

In fact, the head of an Indian full service airline described the Lufthansa move as "interesting and worth emulating in India."
Travel agents in India are peeved at this move as it makes buying tickets from them more expensive and render them uncompetitive. Their biggest worry is that once a mega carrier like Lufthansa starts such a fee, it is just a amtter of time that other foreign airlines also follow suit.

"The new charge will not be added to flight tickets purchased using own booking channels. This predominately includes the (group) airline websites (of Lufthansa, Swiss, Austrian and Brussels Airlines), as well as, the service center and ticket counter at the airports," a Lufthansa statement said.

The German carrier's decision comes at a time when arguably the 'meanest' low cost carrier in the world, Ryanair, has decided not to "unnecessarily piss people off", in the words of the Irish carrier's chief Michael O'Leary. In recent days, it has gone soft on some of its hefty fees and charges.

Lufthansa has, in fact, hinted that it will go in for unbundling — something that

low cost carriers do by treating each service as separately and charging for them separately too. "In the future, the airlines will therefore offer their services on a more flexible and modular basis, with individualized price options and ancillary services...based on the principle 'you only pay for the services you want'," the airline said.

This new commercial strategy takes into account the cost differentiation in various booking channels. "Presently, the costs for using GDS are several times higher than for other booking methods, such as our own online portal... These services, however, are primarily used by other partners in the value chain. A large number of services are paid by the Lufthansa Group carriers, but are only partly used by them," the airline said.

"Among others, the GDS services comprise functionalities, which offer many extra services in addition to the basic features of booking, processing and ticketing. Such examples include the option of combining and booking world-wide, multiairline flight offers, as well as, an integrated booking and invoice processing," it added while declaring the introduction of DCC of 16, roughly $18, from September 1 for tickets not purchased directly from its group airlines.

More engg. seats expected to fall vacant this year?

The number of candidates who have submitted forms this year for engineering courses offered through single window counselling by Anna University has come down by 20,000.

The University has received 1,54,450 filled in forms this year as against over 1.71 lakh forms last year. While engineering education observers say the number of vacancies would go up, University officials do not expect a serious dip in the allotment of seats. Last year over 1.26 lakh seats remained vacant; this year it is expected to touch 1.36 lakh.

“More than one lakh students will get allotment through counselling. The number of allotments has always remained constant at 1.20 or 1.15 lakh,” said an official. University sources cite the delay in issue of forms as a reason for lower purchase this year. Normally, Anna University begins to issue forms several days ahead of class XII results. This year, forms sale began just a day ahead of results. “We have noticed that candidates often apply for engineering simply because they had bought the forms. This time delay in issue of forms has checked such tendencies,” a University faculty said.

Orientation programme for medical professionals and paramedics

Medical professionals and paramedics were sensitised to techniques of specialised maintenance of circulation in organs, harvested from cadavers, at a meet held at the medical college hospital here on Thursday.

The State-level transplant authority, TRANSTAN, conducted the meet, the first of its kind here, for the benefit of healthcare specialists in the region. The participants were oriented to the concept of brainstem death and not just stopping of heart or cardiac arrest as “death.” It was explained that the brain stem was like the main switch of the body and when the brain stem ceased to function, then life was not possible thereafter.

However, even when the brain stem ceases to function, select organs remain active by the blood pumped by the heart.

Speakers said that those organs could be of use to those suffering from organ failure. Organs such as heart and lungs, liver, kidneys, skin, cornea, joints and bone harvested from the dead could help prolong the life of others who required them. They said that the Tamil Nadu Cadaver Transplant Program started in October 2008 to facilitate harvesting of organs and furnishing them to patients with organ failure has been doing a yeoman service to hundreds of patients.

With the cooperation of many transplantation hospitals across the State, there have been 649 cadaver donors, donating organs to 3,572 recipients. Since Tamil Nadu ranks first in cadaver organ donation in India, the Centre has designated Tamil Nadu as the regional centre for the southern States.

P.G. Sankaranarayanan, Dean, TMCH, recalled that the first live related renal transplant was done in the TMCH on February 20 this year and the patient was recovering well.

Special equipment and infrastructure needed for organ harvesting was available in the facility.

The required empanelling of doctors to certify the brainstem death was in progress.

Around 40 doctors and 20 paramedics from Thanjavur Medical College and private hospitals attended the programme.

Passed Class X at the age of 12? Unbelievable, says HC

The Madras High Court Bench here has expressed surprise over an Additional District Court having ordered change of date of birth in a government schoolteacher’s service register without considering the fact that such a change would lead to an improbable presumption that the teacher would have passed his Class X examinations at the age of 12.

Dismissing a writ petition filed by the teacher seeking a direction to the Director of School Education to comply with the lower court order, Justice S. Vaidyanathan said: “It would be conjectural to presume that the petitioner’s parents might have admitted him in school at an early age either because he was a mischievous but shrewd child or because he was extremely studious.”

He went on to state: “If this petition is allowed, then there is every possibility of similarly placed persons approaching this court seeking the same relief by obtaining a judgment and decree in one way or the other… Though it is a fit case to impose costs, this court refrains from such imposition since the petitioner happens to be one belonging to a noble profession.”

The judge pointed out that the petitioner had joined government service as a Secondary Grade teacher in 1989. Then, his date of birth was recorded as October 26, 1956 as mentioned in his SSLC and other educational certificates.

However, after nine years of service, the petitioner wanted the State to alter his date of birth to September 23, 1958 as mentioned in his Baptism certificate.

His plea was turned down on the ground that, as per rules, such requests should be made within five years of joining service. Subsequently, he filed a civil case and obtained a decree from an Additional District Court in Pudukottai in 1999. Nevertheless, the government officials refused to change his date of birth and made him retire from service on May 31 this year even as the present writ petition was pending.

Upholding the decision of the officials, the judge said: “Even assuming for a moment that the petitioner’s parents have erroneously furnished a wrong date of birth, the petitioner has all along continued his employment on being satisfied with the same. On one fine morning, he cannot wake up and expect the officials to alter his date of birth according to his own whims and fancies and contrary to the rules.”

Rejects teacher’s plea for change of date of birth as per Baptism certificate

SSLC supplementary exam: candidates must register on June 9, 10

Candidates taking the SSLC supplementary examinations this year must register with the School Education Department on June 9 or 10.According to an official release, the examinations would be held in June-July for candidates who appeared for the March-2015 SSLC public examinations either as school or private candidate.

They can register at the office of Chief Education Officer on Raja Street. The examination fee was Rs. 675. It must be paid in cash.

PG medical counselling stalled, students allege irregularities

The revised third phase of counselling for postgraduate courses offered by the Tamil Nadu Dr. MGR Medical University was stalled for two hours on Saturday as candidates refused to participate.

At the Kilpauk Medical College, candidates allotted seats in the third phase held between June 2 and 4 said they would lose the seats if fresh counselling was held.

Around 30 candidates had been allotted seats earlier this week. But the Directorate of Medical Education received a fax from the Medical Council of India late on June 2, permitting Annamalai University to add four PG seats.

According to officials the decision to nullify the earlier counselling was taken following a representation by some students.

“We took the decision as we wanted all students to get a fair chance. Last year, we had a similar situation and seats remained vacant as we had completed the process by then,” said an official.

Some parents and students, however, alleged that the decision was taken to accommodate the daughter of a politician. But officials denied the charge.

The decision to declare null the earlier session of counselling upset some students as they had to give up seats in coveted colleges. Medical education officials said there were around 55 seats and candidates would in all probability get the colleges they desired. The changed seat matrix following the addition of new seats had raised the hope of garnering a seat under community quota.

The parent of a candidate from BC (Muslim) community said his daughter was denied seat under the quota as she was told it was already filled.

Community quota

Selection committee officials said community quota seats would be allotted as per reservation policy. During the first two phases of counselling too, the process had been followed, an official said.

Some students alleged that though seats we available in MMC, they were not exhibited during counselling. However, selection committee secretary Uma Sadasivan said the seats are allotted based on the colleges’ declaration. The seat matrix is then drawn up. “Each seat is precious to us,” she said.

Counselling for PG courses will be completed by Sunday.

Saturday, June 6, 2015

கடலூர் சிப்காட், இன்னொரு போபால்?



இந்திய வரைபடத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் போபால் தென்படுகிறது. ஆனால், அந்த வரைபடத்தில் தென்படாத இன்னொரு போபால் தமிழகத்தில் இருக்கிறது. அது கடலூர் சிப்காட்!

‘கெமிக்கல் தீபகற்பம்' - இப்படித்தான் சிப்காட் பகுதியை இந்த ஊர் மக்கள் சொல்கிறார்கள் என்கிறார் விவசாயி அமிர்தலிங்கம். சிப்காட் பகுதியில் இருக்கும் சுமார் 20 கிராமங்களில் ஒன்றான ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் இவர். இந்தக் கிராமத்தில் விவசாயம் நிர்மூலமானதில் பெரும்பங்கு நிலத்தடி நீருக்கு உண்டு.

"மூன்று பக்கமும் தொழிற்சாலைகள், ஒரு பக்கம் உப்பனாறு. அந்த ஆற்றையொட்டிப் பல காலம் ஆற்றுப் பாசனம் நடந்திருக்கிறது. ஆனால், தொழிற்சாலைக் கழிவுகள் பல வருடங்களாகத் தொடர்ந்து ஆற்றில் விடப்பட்டதால் இப்போது அது சீர்கெட்டுக் கிடக்கிறது. அது நிலத்தடி நீரையும் பாதித்துள்ளது" என்று விவசாயம் பொய்த்ததற்குக் காரணத்தை விளக்குகிறார் அமிர்தலிங்கம்.

மிகப் பெரிய சாதனை

இந்த ஆற்றையொட்டி ஈச்சங்காடு வாய்க்கால் என்ற ஓடை ஓடுகிறது. இதன் மூலம் ஓடைப் பாசனமும் நிகழ்ந்துள்ளது. ஆனால், சிப்காட் தொழிற்சாலைகள் இந்த ஓடையையும் விட்டுவைக்கவில்லை. அந்த ஓடையைக் கழிவு நீர் எடுத்துச் செல்லும் பாதையாகப் பயன்படுத்திவந்திருக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக அந்த ஓடையை மீட்டெடுக்கப் போராடிவருகிறார் ஈச்சங்காடு கிராமத் தலைவர் செந்தாமரைக்கண்ணன்.

"நெல், கடலை, வெள்ளரி போன்ற பயிர்கள்தான் இங்கே பயிரிடப்பட்டுவந்தன. ஆனால், நிலத்தடி நீர் கெட்டுப் போனதற்குப் பிறகு இங்கு எல்லோரும் கம்பெனிகளுக்கு வெறும் ரூ.120-க்கு செக்யூரிட்டி வேலைக்குப் போகிறார்கள். எங்களை நிலத்தில் இருந்து வெளியேற்றியதுதான் சிப்காட்டின் மிகப் பெரிய சாதனை" என்றார் செந்தாமரைக் கண்ணன்.

மீனும் போனது

விவசாயிகளின் நிலை இப்படி என்றால், மீனவர்களின் நிலையோ இன்னும் மோசம். "உப்பனாற்றில் முன்பெல்லாம் கெளுத்தி உட்பட 50 வகையான மீன் இனங்கள் இருந்தன. ஆனால், இப்போது வெறும் 5 இனங்கள்தான் இருக்கின்றன" என்கிறார் பாரம்பரிய மீன்பிடித் தொழிலாளரான புகழேந்தி.

"தைக்கால் முகத்துவாரத்தில் இருந்து ஆலப்பாக்கம்வரை நீண்டிருக்கிறது இந்த உப்பனாறு. இடைப்பட்ட தொலைவில் 10 மீனவக் கிராமங்கள் இருக்கின்றன. இவர்களில் பெரும்பாலானவர்கள் குச்சி வலை என்கிற பாரம்பரிய முறையில்தான் மீன்பிடித்துவருகிறார்கள். சுமார் 15 அல்லது 20 வருடங்களுக்கு முன்னால் 4 மணி முதல் 5 மணி நேரம் ஆற்றில் இருந்தால் 300 முதல் 400 மீன்கள் வரை கிடைக்கும். இப்போது அதே அளவு நேரம் மீன்பிடித்தால் 100 முதல் 150 மீன்கள் வரை கிடைத்தால் பெரிய விஷயம்" என்கிறார் புகழேந்தி.

முதிர்கன்னிகள்

கடலூர் தொழிற்சாலைகள் ஏற்படுத்திய பாதிப்பு விவசாயிகள், மீனவர்களுடன் நின்றுவிடவில்லை. போபால் விஷ வாயுக் கசிவுக்குப் பிறகு அந்த ஊரில் திருமணமாகாத பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்துவருகிறது. அதற்குக் காரணம், ஒரு வேளை அந்தப் பெண்களும் விபத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அவர்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கும் பிறவிக் குறைபாடுகள், மற்ற உடல்நலப் பாதிப்புகள் ஏற்படலாம் என்று பலரும் நம்புவதுதான்! அவர்களில் பலர் இன்றைக்கு முதிர்கன்னிகளாக தங்கள் வாழ்க்கையைக் கடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த நிலைமை இன்னும் சில ஆண்டுகளில் கடலூர் சிப்காட் பகுதியிலும் ஏற்படலாம். என்ன ஒரே வித்தியாசம்... முதிர்கன்னிகளோடு சேர்த்து முதிர்கண்ணன்களும் இங்கே இருப்பார்கள் என்பதுதான்!

"கடலூரில் பெண் கொடுப்பதற்கும், பெண் எடுப்பதற்கும் யாரும் முன்வருவதில்லை. மூச்சு திணறல், கண், தோல் எரிச்சல், குழந்தையின்மை, கருக்கலைதல், புற்றுநோய் உள்ளிட்ட பல பிரச்சினைகள் இங்கே பலருக்கு இருக்கின்றன. அதை அடிப்படையாக வைத்துத்தான் இங்குப் பலருக்கும் திருமணம் தடை பட்டிருக்கிறது. ஆரோக்கியமாக இருப்பவர்களும்கூட இந்தப் பகுதியில் வாழ்ந்துவருகிறோம் என்று சொல்லிவிட்டால் அவர்களுக்கும்கூட வரன் கிடைப்பதில்லை" என்கிறார் அமிர்தலிங்கம்.

என்ன காரணம்?

இந்த நிலையை மாற்றுவதற் காகத்தான் இங்கே நோய் தொற்று காரணவியல் ஆய்வு (epidemiology study) வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கைவிடுத்துவருகின்றனர்.

அப்படி ஆய்வு நடத்தப்பட்டால் எத்தனை பேர் எந்தெந்த விதமான நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். அது தெரிந்துவிட்டால், அந்த நோய்கள் ஏற்படக் காரணம் என்ன என்பதும் தெரிந்துவிடும். அதன் மூலம், அந்தக் காரணங்களைக் கட்டுப்படுத்த வழி பிறக்கும்.

கடலூர் சிப்காட் பகுதியில் வசித்துவரும் மக்கள் மீது இப்படிச் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பல்முனைத் தாக்குதல் தொடுப்பதற்கு என்ன காரணம்? அங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் நச்சு வாயுக்களை நோக்கிக் கைகள் நீள்கின்றன. இதற்குச் சாட்சியமாக ‘தேசியச் சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம்' (Neeri) மேற்கொண்ட ஆய்வு சுட்டிக்காட்டப்படுகிறது.

கரிம மாசு

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, 2007-ம் ஆண்டு கடலூர் சிப்காட் பகுதியில் நீரி ஆய்வு மேற்கொண்டது. அதில் ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் (volatile organic compounds) குறித்து ஆராயப்பட்டது.

ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் என்பது இயல்புநிலையிலேயே அதிக ஆவி அழுத்தம் கொண்டவை. அதனால், சில வேதி பொருட்கள் குறிப்பிடத்தக்க அளவு ஆவியாகி வளி மண்டலத்தில் கலந்துவிடும் வேதியியல் சேர்மங்களாகும். இப்படி வளிமண்டலத்தில் கலக்கும் வேதி சேர்மங்களால் காற்று மாசுபடுகிறது. அந்தக் காற்றைச் சுவாசிக்கும் மக்களும் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.

இந்த ஆய்வில் சிப்காட் பகுதியில் 14 வகையான ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது (பார்க்க: பெட்டிச் செய்தி).

நடைப்பிணம்

இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்ட காலத்தில் சிப்காட் பகுதியில் மொத்தம் இருந்த 51 தொழிற்சாலைகளில் 25 தொழிற் சாலைகள் மூடப்பட்டிருந்தன. மீதி 26 தொழிற்சாலைகள் மட்டுமே இயங்கின. மூடப்பட்ட அந்தத் தொழிற்சாலைகளும் முழு அளவில் இயங்க ஆரம்பித்தால், மேற்கண்ட வேதி பொருட்களின் அளவு மூன்று மடங்கு கூடுதலாக இருக்கலாம். அப்படியென்றால் ஏற்கெனவே பாதிப்புகளால் திணறிக்கொண்டிருக்கும் மக்கள், இன்னும் மோசமான பாதிப்புகளால் அவதிப்பட நேரிடலாம் என்பதுதான் நிதர்சனம்.

ஆகவே, எந்தெந்தத் தொழிற்சாலைகள் எந்தெந்த விதமான வேதி பொருட்களை வெளியேற்றுகின்றன என்பதை அடையாளம் கண்டு, அவற்றைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். அதற்கு நோய் தொற்று காரணவியல் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். ஆனால், தீர்வு கண்ணில் தெரியும் நாள் மட்டும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

அதுவரையில், வேதனையோடு உடலில் நச்சு வேதி பொருட்களையும் சுமந்துகொண்டு நடைப்பிணம் போல வாழ்ந்துவருகிறார்கள் கடலூர் மக்கள்.

(கட்டுரையாளர், தொழிற்சாலை மாசுபாடு குறித்து ஆய்வு செய்வதற்காக டெல்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் 19-வது ஊடக நல்கை (Centre for Science & Environment, CSE - 19th Media Fellowship) பெற்றவர்.)

‘மேகி' மட்டும்தான் குற்றவாளியா? - மருத்துவர் கு. சிவராமன்


மருத்துவர் கு.சிவராமன்


மேகி தடை செய்யப்பட்டிருப்பதற்குக் காரணமாகக் கூறப்படும் மோனோ சோடியம் குளூட்டமேட் பற்றி பிரபல எழுத்தாளரும் மருத்துவருமான கு. சிவராமன் என்ன சொல்கிறார்?:

ஓர் உணவுப் பொருளில் சுவை என்பது இயல்பாக வரவேண்டும். இயற்கையாகச் சில உணவுப் பொருட் களைச் சேர்க்கும்போது உருவாகும் சுவையைத் தாண்டி கூடுதலாகச் சுவையூட்டுவதற்கு, மருத்துவ, உணவியல் அடிப்படையில் நமது பாரம்பரியத்தில் சுவைகள் கூட்டப்பட்டன. ஏலக்காய், வெல்லம், எலுமிச்சை போன்ற சுவையூட்டிகளின் குணமறிந்து சேர்க்கப்பட்டன.

அடிப்படையே தவறு

இந்தப் புரிதலும் அக்கறையும் தூக்கியெறியப்பட்ட உணவுப் பொருள் பெருவணிகத்தில், வலிந்து சுவையைக் கூட்டும்போது, எந்தப் பொருட்களின் அடிப்படையில் அந்தச் சுவை கூட்டப்பட்டது என்பதை அறிய முடிவதில்லை. இப்படி வலிந்து சுவையூட்டுவது அடிப்படையிலேயே தவறு என்கிறார்கள் உணவியல் வல்லுநர்கள். எம்.எஸ்.ஜி. என்று சுருக்கமாகவும், அஜினோமோட்டோ என்ற வணிகப் பெயரிலும் விற்பனையாகும் மோனோ சோடியம் குளூட்டமேட் என்ற செயற்கை சுவையூட்டியின் தயாரிப்பு முறை தெளிவற்றதாக இருக்கிறது. தாவரப் பொருட்களில் இருந்து குளூட்டமிக் அமிலம் கிடைப்பதாகக் கூறப்பட்டாலும், காப்புரிமை சம்பந்தப்பட்டிருப்பதால் அதன் தயாரிப்பு முறை ரகசியம் காக்கப்படுகிறது. அதில் என்னவெல்லாம் இருக்கிறது என்று தெரியாது.

அடிமைப்படுத்தும்

குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் உள்ளிட்ட உடனடி உணவுப் பொருட்களில் அமிலத்தன்மை வாய்ந்த இந்த உப்பு சேர்க்கப்படுகிறது. அதனால் வயிற்றுப் புண், அல்சர் போன்ற இரைப்பை சார்ந்த பிரச்சினைகளைச் சாதாரணமாக இது ஏற்படுத்தலாம். இந்த உப்பு ஒருவித அடிமைத்தன்மையை உருவாக்கக்கூடியது. இந்த உப்புச்சுவையை உணர்ந்தவர்களுக்கு, மற்ற உணவு வகைகளின் மீதான நாட்டம் குறையும். டாக்டர் பிளேலாக் எழுதி 1970-களில் வெளியான ‘தி டேஸ்ட் தட் கில்’ என்ற புத்தகத்தில், மோனோ சோடியம் குளூட்டமேட் மூளையின் ஹைப்போ தலாமஸ்வரை பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்றும், வயிற்றுவலியில் தொடங்கி அறிவாற்றலைச் சிதைப்பதுவரை பல்வேறு கோளாறுகளை உருவாக்கக்கூடியது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேகி மட்டுமல்ல

அதேநேரம் தடை செய்யப்பட்டுள்ள மேகி நூடுல்ஸில் மட்டுமல்ல, வேறு பல உடனடி நூடுல்ஸ் வகைகள், ஹோட்டல்-ரோட்டு கடைகளில் விற்கப்படும் சீன, தந்தூரி உணவு வகைகள், சிக்கன், பனீர், கடாய் உணவு வகைகளில் மோனோ சோடியம் குளூட்டமேட் சேர்க்கப்படுகிறது.

திருமண வீடுகள், விசேஷங்களுக்குச் சமைக்கும்போதும் சாம்பார், ரசத்தில்கூட இதைக் கலந்துவிடுகிறார்கள். பர்கர், ரொட்டி, கோழி வறுவல் உள்ளிட்ட பிரபலப் பன்னாட்டு ஹோட்டல் சங்கிலித்தொடர் கடைகளில் பரிமாறப்படும் உணவு வகைகளிலும் இது சேர்க்கப்படுகிறது. அதனால்தான் ஒருவித தனிச்சுவை கிடைக்கிறது.

மேகி நூடுல்ஸை தடை செய்வதில் காட்டும் அக்கறையை, மோனோ சோடியம் குளூட்டமேட் சேர்க்கப்பட்ட அனைத்து உணவு வகைகளைத் தடை செய்வதிலும் அரசு காட்டுமா என்பதுதான் தற்போதைய கேள்வி.

- ஆதி

தொழில் ரகசியம்: தவறை ஒப்புக்கொள்ளாமல் இருப்பது பெரிய தவறு



சுடச்சுட நாம் சாப்பிட்ட உடனடி உணவு இன்று சூடான விவகாரத்தில் சிக்கியிருக்கிறது. ‘மேகி’யில் அளவிற்கு அதிகமாக மோனோசோடியம் குளூடமேட் மற்றும் லெட் (காரீயம்) இருப்பதாக உத்திரப் பிரதேச ‘எஃப்டிஏ’ பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த காற்றழத்த தாழ்வு மண்டலம் நாடெங்கும் சூறாவளியாக உருவெடுத்து கடைகளில் கரையேறி மக்கள் மனங்களில் மேகி பற்றிய பலத்த சேதத்தை உண்டாக்கியிருக்கிறது.

பல மாநிலங்கள் மேகி விற்பனைக்குத் தடை விதித்திருக்கிறது. பல கடைகள் மேகியை போகி பண்டிகைக்கு குப்பையில் போட்டு எரிப்பதைப் போல் தூக்கி எறிந்துவிட்டன. இச்செய்தி காலை டிபன் மாதிரி தினமும் மீடியாவில் பரிமாறப்படுகிறது. ‘டூ மினிட்ஸ்’ என்று கூறிய பிராண்டிற்கு ‘டூ மினிட்ஸ்’ அஞ்சலி செலுத்தவேண்டிய நிலை வராமலிருக்கட்டும்!

ஏதோ இந்த மட்டும் மேகியாக இருப்பதால் ஓரளவேனும் தாக்குப் பிடிக்க முடிகிறது. மேகிக்கு ஏற்பட்ட நிலை சாதாரண பிராண்டிற்கு ஏற்பட்டால் கதை கந்தலாகி, பெயர் பொத்தலாகி, கந்தர்வகோலமடைந்து டங்குவார் கிழிந்திருக்கும். இது போன்ற நெருக்கடியில் பிராண்ட் என்ன செய்வது? பிராண்ட் சிக்கலை எப்படி சமாளிப்பது? எப்படி மீள்வது? நெருக்கடியில் சிக்கி மாண்ட, மீண்ட பிராண்டுகளிடமிருந்து பாடம் பயில்வோம் வாருங்கள். ஆறு ‘A’க்கள் கொண்ட பாடம். ஜஸ்ட் டூ மினிட்ஸ் தான்!

அலர்ட்டாக இருங்கள் (Alert)

வருமுன் காப்பது மட்டுமல்ல, உஷாராய் இருப்பதும் விவேகம். நெருக்கடி தாக்கும் முன்பு அதை சமாளிக்கும் செயல்களை துவங்கவேண்டும். நெருக்கடி சுழற்றியடிக்கும் போது என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கிவிடும்.

அதனால் நெருக்கடி எந்த ரூபத்தில் எல்லாம் வரலாம் என்று சிந்தித்து அச்சமயத்தில் என்ன செய்வது, எப்படி சமாளிப்பது போன்ற திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். சிக்கல்களை திறம்பட சமாளிக்கும் (கிரைசிஸ் மேனேஜ்மெண்ட்) நிர்வாகக் குழு உருவாக்கப்படவேண்டும். ஒவ்வொருவரும் ஊடகத்திற்கு பேட்டி கொடுக்காமல் யார், எப்படி, என்ன பேசுவது என்பது முன்னமேயே தீர்மானிக்கப்படவேண்டும்

ஆராயுங்கள் (Analyze)

நம்மை விட நம் பிராண்டைப் பற்றி யாருக்கு தெரியும். அதை சதாசர்வ காலமும் கண்காணிப்பது முக்கியம். மார்க்கெட்டில் என்ன பேச்சு அடிபடுகிறது, மக்கள் மனதில் நம் பிராண்ட் எவ்வாறு இருக்கிறது, மீடியா நம் பிராண்டைப் பற்றி என்ன நினைக்கிறது போன்ற விஷயங்களை 24x7 கண்காணிக்கவேண்டும். ‘ஃபேஸ்புக்’, ‘ட்விட்டர்’ போன்றவற்றில் நம் பிராண்டைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று ஆராய அலுவலகத்தில் ஒரு தனியாக ஒருவரை நியமித்தாலும் தப்பில்லை.

பிரச்சினை பிராண்டின் ஆதார பொசிஷனிங்கையே அசைக்கும் போதுதான் பிராண்ட் ஆட்டம் காணத் துவங்குகிறது. சில மாதங்கள் முன் ‘மெக்டானல்ட்ஸ்’சிலிருந்து ஒரு தெருச் சிறுவன் வெளியேற்றப்பட்டது பெரும் பரபரப்பை உருவாக்கியது. ஆனால் அது சில நாட்களிலேயே மறைந்தும் விட்டது. காரணம், மெக்டானல்ட்ஸ் என்பது சாப்பிடும் இடம். அதன் ஆதார பொசிஷனிங் வேகமான, சுவையான சாப்பாடு. அந்த அடிவயிற்றில் கை வைக்காத நெருக்கடி பிராண்டை ஆட்டம் காண வைக்காது.

ஒப்புக்கொள்ளுங்கள் (Acknowledge)

நெருக்கடியில் இருக்கும் பிராண்டுகள் செய்யும் பெரிய தவறு தன் தவறை ஒப்புக் கொள்ளாமல் இருப்பது. தவறு இருப்பின் முதல் காரியமாய் ஒப்புக்கொள்ளுங்கள். இல்லை என்று சமாளிக்காதீர்கள். நொண்டிச் சாக்கு சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். ‘குறைக்கான காரணங்களை ஆராய்கிறோம், நிவர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்’ என்று உறுதிபட கூறுங்கள். நீங்களே கூறும்போது செய்தி உங்கள் கட்டுப்பாட்டிலிருக்கும். இல்லையென்றால் வருவோர் போவோ ரெல்லாம் செய்திக்கு கண் மூக்கு வைத்து சின்ன நெருக்கடி வளர்ந்து பிராண்டையே சின்னாபின்னமாக்கிவிடும்.

‘ஏர் ஏசியா’ விமானம் நடுவானில் காணாமல் போன போது கம்பெனியின் தலைமைச் செயல் அதிகாரியே (சிஇஓ) அதை உலகிற்கு தன் ட்விட்டர் மெசேஜ் மூலம் தெரியப்படுத்தி உடனுக்குடன் விஷயங்களை மீடியாவிற்கு தந்து வந்தார். இதனால் பிராண்டிற்கு எந்த பெரிய பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க முடிந்தது.

தெளிவாக பதிலளியுங்கள் (Answer)

நெருக்கடி ஏற்பட்டால் ஆயிரம் சோதனை வரும். ஆளுக்கொரு கேள்வி கேட்பார்கள். பொறுமையாக பதிலளிக்கவேண்டும். எழும் ஒவ்வொரு கேள்விக்கில்லை என்றாலும் முடிந்தவரை பதிலளிக்கவேண்டும். அப்பொழுது தான் கம்பெனி உண்மையிலேயே கவலைப்படுகிறது, தேவையான செயல்களை செய்கிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும்.

நெருக்கடியில் சிக்கியிருக்கும்போது நாமே நம் பிராண்டைப் பற்றி நல்ல விஷயங்கள் பேசுவதை விட மற்றவர்களை விட்டு நம் பிராண்டைப் பற்றி கூற வைப்பது பலன் தரும். கோவாவில் டிரையல் ரூமில் கேமிரா வைக்கப்பட்டது என்று மத்திய அமைச்சரே குற்றம் சாட்டி பெரும் பரபரப்பிற்குண்டான ‘ஃபேப்மார்ட்’டிற்கு ஆதரவாக அந்த மாநில முதல் அமைச்சரே சர்டிஃபிகேட் கொடுத்தது அந்த பிராண்டிற்கு பெரிய உதவியாய் அமைந்தது.

வேகமாய் செயல்படுங்கள் (Alacrity)

கொசுக்கடி என்றால் பட்டென்று கடித்த இடத்தை அடிக்கிறோம். நெருக்கடி என்றால் நம் பதில் நடவடிக்கைகளில் போர்கால வேகம் தேவை. ஆடி அசைந்து ஆற அமர அசமஞ்சமாய் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் சுறுசுறுப்போடு செயல்படவேண்டும். ‘தாஜ் மஹால்’ ஹோட்டலை தீவிரவாதிகள் தாக்கிய போது தாஜ் நிறுவனம் உடனுக்குடன் ஹோட்டலிலிருந்த விருந்தாளிகளை காப்பாற்றி வெளியேற்றியது. அதோடு தாக்குதல் நடைபெற்ற எழுபது மணி நேரமும் தங்கள் வெப்சைட்டில் உடனுக்குடன் நிலவரத்தை அப்டேட் செய்துகொண்டே இருந்தது. அதனாலேயே அந்த இமாலய நெருக்கடியிலிருந்து தாஜ் மஹால் ஹோட்டல் மீண்டு இன்று புதுப்பொலிவுடன் பட்டொளி வீசி பட்டையை கிளப்ப முடிகிறது!

ெநருக்கடிக்குப் பின்னும் செயல்படுங்கள் (Aftermath)

நெருக்கடிப் புயல் ஓய்ந்து செய்தி மழை விட்டுவிட்டது என்பதற்காக குடையை மடக்கி வைத்து விட்டு காது குடைய உட்காராதீர்கள். நெருக்கடியால் பிராண்டிற்கு ஏற்பட்ட இழப்பு எத்தகையது என்று ஆராயுங்கள். விற்பனை குறைந்ததா என்று மட்டும் பார்க்காமல் பிராண்டின் நற்பெயருக்கு எத்தகைய குந்தகம் விளைந்திருக்கிறது என்று வாடிக்கையாளரிடம் ஆய்வு செய்யுங்கள்.

செய்தி சேகரிப்பு குழு ஒன்றை ஏற்படுத்தி நெருக்கடி எதனால் ஏற்பட்டது, எவ்வாறு வளர்ந்தது, மீண்டும் நடக்காமல் இருக்க என்ன செய்வது போன்ற விஷயங்களை சேகரியுங்கள். இக்குழுவில் கம்பெனி ஆட்களை மட்டும் சேர்க்காமல் தேர்ந்த நிபுணர்களை சேர்த்துக்கொள்ளுங்கள். இப்படி செய்வது மக்கள் மனதில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உங்களையும் உங்கள் பிராண்டையும் மன்னிக்கக்கூட மக்கள் தயாராய் இருப்பார்கள்.

கெட்ட செய்தியைச் சொல்வதா என்று மீடியாவும் அமங்கல செய்தியை படிப்பதா என்று மக்களும் வருதப்பட்ட காலம் ஒன்று உண்டு. இன்று கெட்ட நியூஸ் கிடைக்காதா என்று இருவருமே காத்திருக்கின்றனர். நாம் தான் உஷாராய் இருக்கவேண்டும். பிராண்ட் ரெண்டுபட்டால் ஊர் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம். கொஞ்சம் அசந்தால் பிராண்டை மென்று தீர்த்து விடுவார்கள். ஊர்காரர் போதைக்கு ஊறுகாய் ஆகாமல் பார்த்து கொள்வது அவசியம்!

நெருக்கடி ஒவ்வொரு தெருக்கோடியிலும் காத்திருக்கிறது. போட்டி பெருக்கெடுத்து ஓடும், மீடியா நெருக்கித் தள்ளும் இன்றைய மார்க்கெட்டிங் உலகில் அசால்ட்டாய் இருந்தால் அல்பாயுசு. ஆறு ‘A’ கொண்டு உஷாராய் இருப்பதே ஆயுள் காப்பீடு!

satheeshkrishnamurthy@gmail.com

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1000 ஆசிரியர்களுக்கு அரசு காலக்கெடு: 2016 நவம்பருக்குள் ‘பாஸ்’ செய்யுமாறு உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வு | கோப்புப் படம்: எம்.கோவர்தன்

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆயிரம் ஆசிரியர்கள் 2016 நவம்பர் மாதத்துக்குள் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

மத்திய அரசு இச்சட்டத்தை கடந்த 2010 ஆகஸ்ட் 23-ம் தேதி நடைமுறைப்படுத்தியது. தமிழகத்தில் இதுதொடர்பான அரசாணை கடந்த 2011 நவம்பர் 15-ம் தேதி வெளியிடப்பட்டது. முதலாவது தகுதித் தேர்வு 2012-ல் தான் நடத்தப்பட்டது. சட்டம் அமல்படுத்தப்பட்ட 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 3 முறை இத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 5 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது. பல ஆசிரியர்கள் இத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று வருகின்றனர். ஆனாலும், பள்ளிக்கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் ஆயிரம் ஆசிரியர்கள் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றி வருவதாக கல்வித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம்

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 5 ஆண்டு அவகாசம் என்பது மத்திய அரசின் இலவச கல்விச் சட்டம் அமலுக்கு வந்த 2010 ஆகஸ்ட் முதல் கணக்கிடப்படுமா, தமிழக அரசாணை வெளியிடப்பட்ட 2011 நவம்பர் முதல் கணக்கிடப்படுமா என்ற குழப்பம், ஆசிரியர்கள் மத்தியில் இருந்தது.

தமிழக அரசாணை வெளி யிடப்பட்ட 2011 முதல்தான் அந்த 5 ஆண்டு அவகாசம் கணக்கிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா தற்போது விளக்கம் அளித்துள் ளார். இதுதொடர்பான உத்தரவு பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக் கக் கல்வி இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆகியோ ருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி, அரசு அளித்துள்ள 5 ஆண்டு அவகாசம் 2016 நவம்பர் 15-ம் தேதியுடன் முடிந்துவிடும். அதற்குள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும். அதுவரையிலும் தேர்ச்சி பெறாவிட்டால் கூடுதல் அவகாசம் அளிக்கப்படுமா, ஆசிரியராகப் பணியாற்றும் தகுதியை அவர்கள் இழப்பார்களா என்பது குறித்து அந்த உத்தரவில் எதுவும் கூறப்படவில்லை.

நேர்மையின் இன்றைய நிலை


மது நாட்டில் அரசுத்துறைகளில் நடக்கும் ஊழல்கள், முறைகேடுகளைப் பற்றி வெளிவரும் உண்மைகள் கடலில் உள்ள சிறு நீர்த்துளி போலத்தான். கடலளவு உண்மைகள் மறைந்து கிடக்கின்றன. இப்படிப்பட்ட அரசுத்துறைகளில் பணியில் சேர்ந்து நேர்மையாக இருப்பது என்பது சுனாமியில் எதிர்நீச்சல் அடிப்பதைவிட சிரமமான ஆபத்தான காரியம் என்பது மறுக்க முடியாத உண்மை.

சிறுவயது முதல்,  தான் கற்ற கல்வி, புத்தகங்கள் மற்றும் பெரும் தலைவர்களின் வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொண்ட ஒழுக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நேர்மையாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் அரசுப் பணிக்கு வருபவர்கள் சந்திக்கும் சோதனைகள் ஏராளம். இது போன்ற ஊழல்கள், முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் அவர்களுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். பிறர் முன்னிலையில் அவர்களை மிகவும் ஏளனமாக நடத்துவார்கள். இவை எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டுதான் நேர்மையாக செயல்பட வேண்டும்.

அப்படிப்பட்ட சோதனைகளையும் மீறி நேர்மையாக இருக்கும் அதிகாரிகளை, உடன் வேலை பார்ப்பவர்களும் அரசியல் செல்வாக்கு பெற்ற வெளி நபர்களும் நிம்மதியாக இருக்க விடுவதில்லை. சமீபத்தில் அரசுத் துறையில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு அதிகாரி,  தனது துறையில் பணியாற்றும் சக ஊழியர்களின் பிரிவுபசார விழாவில் பங்கேற்றுபேசும்போது, தனது பணிக்காலத்தில் மேலதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் முறைகேடான செயல்களுக்கு ஒப்புதல் கொடுக்கச சொல்லி நெருக்கடிகளைச் சந்தித்ததாக கூறுகிறார்.

இதுபோன்ற உள்ளக் குமுறல்கள் அவ்வப்போது வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. அதிகாரிகள் இது போன்ற விஷயங்களை பணி ஓய்வு பெற்ற பிறகு ஏன் சொல்ல வேண்டும்? ஏன் இது குறித்து அப்போதே தங்களின் துறையில் உள்ள மேலதிகாரிகளுக்கு புகார் அளித்திருக்கக் கூடாது என்று பலரும் நினைக்கலாம். ஊழல் என்பது எல்லா இடங்களிலும் எல்லா மட்டங்களிலும் கிருமி போல பரவி இருப்பதால் எந்தப் பக்கம் திரும்பினாலும் பாதிக்கப்படுவது நேர்மையாளர்கள்தான். இதனால் அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.

இது போன்ற நேர்மையாளர்களை ஓரம்கட்ட ஊழல்வாதிகள் பல குறுக்கு வழிகளை கையாள்வதுண்டு. நேர்மையாளர்களின் நேர்மைக்கு களங்கம் கற்பிக்கும் பொய்ப் புகார்களை உருவாக்கி பிற ஊழல் அதிகாரிகளின் கூட்டு முயற்சிகளால் அவர்களின் வாழ்க்கை முழுவதும் வருந்தும்படியான தண்டனையைக்கூட பெற்றுத் தந்துவிடுவார்கள். இன்று பல இடங்களில் நிர்வாகம் அப்படித்தான் நடந்துகொண்டு இருக்கிறது.
அதிகாரிகளுக்கு முதலில் முறைகேடுகளுக்கு உடன்படும்படி நெருக்கடி வரும். தங்களின் உயிருக்கு பயந்து பல அதிகாரிகள் மனசாட்சிக்கு விரோதமாக முறைகேடுகளுக்கு துணை போகிறார்கள். அதற்கு சம்மதிக்காத அதிகாரிகளுக்கு முறைகேடுகளை கண்டுகொள்ளாமல் இருக்கும்படி நெருக்கடி வரும்.

அப்படி இல்லையென்றால் அந்த அதிகாரிகளின்மீதே வீண்பழி சுமத்தி நெருக்கடி கொடுப்பார்கள். அதைப் பொய் என நிரூபிக்க அதிகாரிகள் ஆயுள் முழுவதும் போராட வேண்டி இருக்கும். அப்படியும் தங்கள் மீதான புகாரை அவர்கள் பொய் என்று நிரூபிக்க முடியாமல் போனால் தங்களின் இறப்பிற்கு பின்பும் தீராப்பழியாக அது இருக்கும் என்ற அச்சம் பல அதிகாரிகளுக்கு உண்டு.

இவை எல்லாவற்றையும் தாண்டி தன் அதிகாரத்திற்கு கவனத்திற்கு உட்பட்டு எந்த முறைகேடுகளும் நடக்காத வண்ணம் தடுத்து, தன்மேலும் வீண்பழி விழாமல் பார்த்துக்கொண்டு சமாளிக்கும் திறமையுள்ள சில அதிகாரிகள்,  பணி ஓய்வு பெற்ற பின் தங்களின் உயிரைவிட நேர்மையே பெரிது என்று தங்களின் உள்ளக்குமுறலை மனசாட்சியை உறுத்திக்கொண்டு இருக்கும் விஷயங்களை பொது வெளியில் சொல்கிறார்கள்.

மத்திய அரசில் பணிபுரியும் சிபிஐ அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என்று அரசின் எல்லா மட்டத்திலும் உள்ள அதிகாரிகள் தங்களின் பணிக்காலம் முடிந்த பின்னர்,  தங்களின் அனுபவங்களை பேட்டிகள் மூலமாகவும் தாங்கள் எழுதும் புத்தங்கள் மூலமாகவும் பொது வெளியில் பகிர்ந்துகொள்கிறார்கள். இவற்றில் சில நமது அரசு நிர்வாகத்தில் புரையோடிப் போயிருக்கும் ஊழலை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

இன்று அரசுத்துறையில் வேலை பார்க்கும் பல அதிகாரிகள் லஞ்சம் வாங்கி வசதியான வாழ்க்கை வாழ்வதைப் பார்த்து,  மற்றவர்களும் அப்படி வாழ ஆசைப்பட்டு அரசு வேலைக்கு விரும்பி வருகிறார்கள். நேர்மையாக இருக்கும் சில அதிகாரிகளை அவர்களின் குடும்ப உறுப்பினர்களே மதிப்பதில்லை என்பது கசப்பான உண்மை.

மனித உடலில் உயிரை அழிக்கும் கிருமி புகுந்ததைப்பொல லஞ்சமும், ஊழலும் நமது அரசு நிர்வாகத்தில் புகுந்து ஆட்டிப்படைக்கிறது. திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது முன்னோர்களின் சொலவடை. இங்கு திருடன் திருடுவதை அங்கீகரிக்கும் பெருமையாக நினைக்கும் மனப்பாங்கு அதிகரித்துக்கொண்டு வருகிறது. இது நம் சமுதாயத்திற்கு எந்த வகையிலும் நன்மையைத் தராது.

இது பற்றிய விழிப்புணர்வு நம்மில் இருந்து நம் வீடுகளில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். நம் பிள்ளைகளுக்கு நேர்மையை கற்றுத்தர வேண்டும். அப்போதுதான் அடுத்து வரும் தலைமுறைகளேனும் நேர்மையுடன் நடக்க ஆரம்பிக்கும்.

- ருத்ரன்

தட்கல் ரயில் டிக்கெட் இப்போது இன்னும் வேகமாக...எளிதாக...!

த்திர, அவசரத்திற்கு ரயிலில் தொலை தூரங்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்பவர்களுக்கு கைகொடுப்பது தட்கல் முறையிலான டிக்கெட். ஆனால் தட்கலில் முன்பதிவு டிக்கெட் கிடைப்பதென்பது அத்தனை சுலபமானதாக இருந்ததிலை.
முன்பதிவு கவுண்டர்களில் முந்தைய நாள் இரவிலேயே காத்துக்கிடந்தும், புக்கிங் தொடங்கிய 3 அல்லது 4 நிமிடங்களிலேயே "வெயிட்டிங் லிஸ்ட்தான்...!" என்று கவுண்டரிலிருந்து வரும் குரலை கேட்டு கடுப்பானவர்களுக்கும்,  காலை 10 மணிக்கு தொடங்கும் முன்பதிவுக்கு 9.30 மணிக்கே கம்ப்யூட்டரை ஆன் செய்து,  ஸ்கிரீனையே வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டு புக்கிங்கிற்கான விவரங்களை பதிவு செய்து பேமண்ட் கேட்டுக்கு செல்லும் தருவாயில் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மறுபடியும் மொதல்ல இருந்து கதையாக ஆரம்பிக்கும்போது, 'வெயிட்டிங் லிஸ்ட்'  என்று காண்பிக்கும்போதும் வருமே வெறுப்பும்...ஆத்திரமும்...அதனை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. 

'ஏஜெண்டுகள் மொத்தமாக லவட்டி விடுகிறார்கள், ஐஆர்சிடிசி சைட் ரொம்ப ஸ்லோ...!' என்றெல்லாம் டிக்கெட் கிடைக்காதவர்கள் மூலம் வெளிப்பட்ட விரக்தி புலம்பல்கள் ஐஆர்சிடிசி இணைய நிர்வாகத்திற்கு எட்டியதோ என்னவோ...பீக் அவர் எனப்படும் முன்பதிவு தொடங்கும் காலை 10 மணிக்கு தட்கல் டிக்கெட் முன்பதிவு வேகத்தை இரு மடங்காக ஆக்கி, முன்பதிவை எளிமையாக ஆக்கி உள்ளது. 

இதற்காக முன்பதிவுக்குரிய இரண்டு உயர் திறன் சர்வர்களை ஐஆர்சிடிசி நிறுவியுள்ளது. கடந்த ஜூன் 1 முதல் இந்த மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம் கடந்த 30 ஆம் தேதி வரை நிமிடத்திற்கு 7,200 டிக்கெட்டுகளாக இருந்த முன்பதிவு திறன், தற்போது 14,000 டிக்கெட்டுகளாக அதிகரித்துள்ளது. 

இத்தகவலை ஐஆர்சிடிசி தலைவரும் நிர்வாக இயக்குனருமான டாக்டர் ஏ.கே. மனோச்சா, மேற்கூறிய நடவடிக்கைகள் மூலம் ஆக்கப்பூர்வமான பலன்கள் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார். 

தற்போது நாடு முழுவதும் 54 சதவீத டிக்கெட்டுகள் ஆன் லைன் மூலமே முன்பதிவு செய்யப்படுவதாகவும், நாளொன்றுக்கு சராசரியாக 5.5 முதல் 6 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

மகாமகமும் அதன் மகத்துவமும்!

ட்சத்திரங்களில் சிறப்பானது மக நட்சத்திரம். 'மகம் ஜெகத்தை ஆளும்' என்பது பழமொழி. மாசி மாதம் வரும் மக நட்சத்திரம் விசேஷமானது எல்லா மாத பௌர்ணமிகளையும் விட,  அதிக வெளிச்சம் உடையது மாசி நிலவு. ஆகையால்தான் பெரும்பாலான கோவில் தெப்ப உற்சவங்களையும், ரத உற்சவங்களையும் இந்த நாளில் வைத்தனர் பெரியோர்கள். 

மாசி மாதம் உற்சவம் இல்லாத கோவில்களே இராது. மாசி மாத பௌர்ணமியில் சந்திரனும், மக நடசத்திரமும் உச்சமாகும்போது ஏற்படும் சிறப்பை, அபிதான சிந்தாமணி எனும் தமிழ் கலைக்களஞ்சியம் சிறப்புறக் கூறுகிறது. சிம்ம ராசியில் குரு பிரவேசிக்கும்போது, சூரியன் கும்ப ராசியில் இருக்க, பவுர்ணமி நன்னாளில் 16/2/2016-ல் மஹாமகம் பிரமாண்ட முறையில் குடந்தை என்னும் பெருமை வாய்ந்த கும்பகோணத்தில் கொண்டாடப்படுகிறது.

பேரூழிக் காலத்தில் பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்கி, இறைவன் தந்த அமுத கலசம் தங்கிய  இடமாதலின் இத்தலம் கும்பகோணம் என்று பெயர் பெற்றது. 'கோயில் பெருத்தது கும்பகோணம்' எனும் முது மொழிக்கேற்ப, எண்ணற்ற கோயில்களைக் கொண்டது கும்பகோணம். 

இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவில்குளம், மகாமகக் குளம் ஆகும். இது தமிழ் நாட்டில் உள்ள பெரிய கோவில் குளங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.  வருடந்தோறும் நடைபெறும் மாசி மகத் திருவிழாவில் 1 லட்சம் மக்களும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமக திருவிழாவில் கிட்டத்தட்ட 20 லட்சம் பேரும் பங்கு பெறுகிறார்கள். 

இத்தலமும், மகாமகக்குளமும் நான்கு கரைகளிலும் 16 சந்நிதிகளையுடையதாய், நடுவில் 9 கிணறுகளைக் கொண்டு விளங்குகிறது. கும்பகோணத்திலுள்ள அமிர்த வாவிகள் என்று சொல்லப்பட்ட பொற்றாமரைக் குளம், மஹா மகக் குளம். இவ்விரண்டும் புண்ணிய தீர்த்தங்களுக்குப் புண்ணிய தீர்த்தமென்று புராணம் சொல்லுகிறது.
அதெப்படியெனில் முற்காலத்தில் ஒன்பது தீர்த்த தேவதைகளும் ஈசனிடத்தில் சென்று, “கடவுளே, உலகத்திலுள்ள பாவிகளெல்லாரும் எங்களிடம் வந்து மூழ்கித் தங்கள் பாவங்களையெல்லாம் எங்களுக்குக் கரைத்து விட்டுவிட்டுப் புண்ணியாத்மாக்களாகிச் செல்லுகின்றனர். நாங்கள் சம்பாதிக்கும் இந்தப் பாவங்களுக்கெல்லாம் விமோசனம் அருள் புரிய வேண்டும்” என்று பிரார்த்தனை செய்தனர். 

அவர்களிடம் கருணை பாலித்து இறைவன் , “புண்ணிய தீர்த்தங்களே! பாவங்களாலே தீண்டப்படாத அமிர்த வாவிகள் இரண்டை நான் கும்பகோணத்தில் உருவாக்கியிருக்கிறேன். அவற்றில் சென்று குளித்தால்  உங்களுடைய பாவங்கள் விலகிவிடும்” என்று கட்டளை புரிந்தார். பன்னிரண்டு வருஷங்களுக்கு ஒருமுறை இங்கு கங்கை முதலிய தீர்த்த தேவதைகள் வந்து புனித நீராடல் செய்கின்றன.

காசியில் பிறந்தோர் பாவம் கும்பகோணத்தில் போகும், கும்பகோணத்தில் பிறந்தோர் பாவம் மகாமகக் குளத்தில் நீராடினால் போகும் என்று புராணங்கள் கூறுகின்றன. மஹாமகத்துக்கு தமிழக அரசு ரூ. 270 கோடி  பணம் ஒதுக்கி, அதில் 70 கோடி வரை செலவிடப்பட்டது. காந்தி பூங்காவில் நன்றாக விளக்கு வசதி செய்து தந்து விட் டார்கள். ஒரு தனியார் வங்கி சுமார் 15 லட்ச  ரூபாயை பூங்கா மராமத்து செய்ய ஒதுக்கி உள்ளது.
அம்மா உணவகம்,  குளிர் சாதன வசதி கொண்ட பேருந்து நிறுத்தம் பக்தர்களுக்காக நிறுவப்பட்டுள்ளது. 

நாகேஸ்வரன் கோவிலில் கோபுர கட்டுமான புதுப்பித்தல் வேகமாக நடந்தேறி வருகிறது. மகாமகத்துக்காக ரயில்வே துறையும் சகல  ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. பத்து  கோடி ரூபாய்  ஒதுக்கி, ரயில் நிலை யங்களில் மக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துகிறார்கள். 

2016 பிப்ரவரி 16 ஆம் தேதி கும்பகோணம் வந்து கூடுங்கள். பக்தி பரவசத்துடன் மகாமகம் கண்டு மகிழுங்கள்! 

-ஷான் ( மயிலாடுதுறை)
  . 

Karnataka Government's 'Sexist' Circular to its Employees is Withdrawn

NDTV

BENGALURU, KARNATAKA: A circular issued to the ten thousand employees of Vidhana Soudha and Vikas Soudha in Bengaluru last month, tells them not to waste time talking in groups in the corridors or talk to loudly on the mobile phone. Fair enough ? But there is one line that specifically targets women employees of the secretariats of Karnataka state assembly and council, telling them not to wander around unnecessarily.

Champa Prakash, a visitor to the assembly said, "Even we have certain works to be done. We are fighting for the cause of public, we are not coming for our individual self here. So whoever has told, it is wrong."

But the no talking rule seems to have been taken very seriously. NDTV asked many women employees about their views, but most did not want to speak.

And some agree with the rule.

Kausalya, a woman employee said, 'It is wrong to move around, as we have come here to work. We just need to work well, and not wander around. It is wrong. Work is worship. That is the true word."

But NDTV certainly didn't agree and we spoke to the law minister, who finally agreed to change the sexist wording.

T.B. Jayachandra, Law Minister said, "It applies to all, not exclusively for women, of course one word is mentioned about that. And in other two paras it is clearly mentioned all employees."

NDTV asked if the circular could be re-issued without the word 'mahila' or women being singled out. The minister said, "No problem, we will re-issue covering all. It pricks us also, so we will correct it and issue again."

And NDTV saw those orders being given for correction in the circular.

தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு ஊசி செலுத்தியதால் கல்லூரி மாணவியின் முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு பாதிப்பு: ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.2 லட்சம் ஊசிபோட்டு தீவிர சிகிச்சை

ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சர்மிளா.

தனியார் கிளினிக்கில் காய்ச் சலுக்கு ஊசி போட்டதால் ஒவ்வாமை ஏற்பட்டு கல்லூரி மாணவியின் முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு பாதிக்கப் பட்டுள்ளது. அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அந்த மாணவிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சென்னை பரங்கிமலை முத்துரங்க முதலி தெருவை சேர்ந்தவர் கோசலைராமன் (40). துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி (38). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சர்மிளா (18). தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த மாதம் 22-ம் தேதி சர்மிளாவுக்கு காய்ச்சல் ஏற்பட் டதால் பரங்கிமலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். காய்ச்சல் குறையாததால், மறுநாள் 23-ம் தேதி அதே பகுதியில் உள்ள வேறு கிளினிக்குக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த டாக்டர் சர்மிளாவுக்கு ஊசி போட்டுள்ளார். இதையடுத்து 2 நாட்கள் கழித்து சர்மிளாவுக்கு ஒவ்வாமை (அலர்ஜி) காரணமாக உடம்பில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. அவரது உடல் முழு வதும் தீக்காயங்கள் ஏற்பட்டது போல தோல் உரிந்துவிட்டது.

ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஊசிகள்

இதையடுத்து கடந்த மாதம் 29-ம் தேதி அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சர்மிளா சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பற்றி டாக்டர்கள் கூறியதாவது:

சர்மிளாவுக்கு ஏற்பட்டுள்ள ஒவ்வாமைக்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்து வருகிறோம். முதல் கட்ட பரிசோதனையில் அவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருப்பது தெரிந்தது. அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஊசி போட்டுள்ளோம். தலா ரூ.1 லட்சம் மதிப்புள்ள 2 ஊசிகள் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அவருக்கு போடப்பட்டுள்ளன.

சர்மிளா மருத்துவமனைக்கு வரும் போது மிகவும் மோசமான நிலையில் இருந்தார். தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சிறப்பு வார்டில் தண்ணீர் படுக் கையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 10 நாட்களில் அவரது உடல்நிலை சரியாகிவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தந்தை கண்ணீர்

இது தொடர்பாக சர்மிளாவின் தந்தை கோசலைராமன் கூறும்போது, “கடந்த மாதம் 22-ம் தேதி பரங்கிமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மகளுக்கு போடப்பட்ட ஊசியில் எந்த பிரச்சினையும் இல்லை. 23-ம் தேதி தனியார் கிளினிக்கில் ஊசி போட்ட பிறகுதான் இப்படி ஆகிவிட்டது. ஊசி போட்ட டாக்டரை தொடர்புகொண்டு மகளை வந்து பார்க்கும்படி தெரிவித்தேன். ஆனால், அவர் கடைசி வரை வரவே இல்லை. இந்த நிலையில் மகளை பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. என்னுடைய மகளைப் போல் யாரும் பாதிக்கப்படக்கூடாது. ஊசி போட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார்.

இதற்கிடையில் மகளின் நிலைமைக்கு காரணமான தனியார் கிளினிக் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மவுன்ட் காவல் நிலையத்தில் கடந்த 4-ம் தேதி புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின் றனர்.

எம்சிஐ-யில் புகார் அளிக்கலாம்

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவரும், இந்திய மருத்துவக் கவுன்சில் (தமிழக கிளை) உறுப்பினருமான டாக்டர் கே.செந்தில் கூறியதாவது:

சில நேரங்களில் ஒரு சில மருந்துகளால் ஒவ்வாமை போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற ஆபத்தான சம்பவங் கள் எப்போதாவது ஒன்று நடக்கிறது. பெண்ணின் தந்தை சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் புகார் கொடுக்கலாம்.

அந்த புகாரின்படி விசாரணை நடத்தி டாக்டரின் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப் படும். டாக்டர்களிடம் சிகிச்சைக்கு செல்லும் பொதுமக்கள் தங்க ளுக்கு போடப்படும் ஊசி மற்றும் எழுதிக் கொடுக்கப்படும் மாத்திரை, மருந்துகளின் தன்மை மற்றும் பக்க விளைவு பற்றி கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். நோயாளிகளின் கேள்விகளுக்கு டாக்டர்கள் பதில் அளிக்க வேண்டும் என்றார்.

எங்க வீட்டுப் பிள்ளை 50 ஆண்டுகள் நிறைவு: மறுபடியும் முதல்லேருந்தா?


தமிழ்த் திரைப்பட உலகில் வசூலில் சாதனை படைத்த எங்க வீட்டுப் பிள்ளை 1965-ம் ஆண்டு ஜனவரி 14-ல் வெளியானது. இப்போது 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். சரோஜா தேவி, ரத்னா, நம்பியார், எஸ்.வி. ரங்காராவ், பண்டரிபாய், தங்கவேலு, நாகேஷ் நடித்தது. பாடல்கள் வாலி, ஆலங்குடி சோமு. இசை விஸ்வநாதன் - ராமமூர்த்தி. தயாரிப்பு விஜயா புரொடக் ஷன்ஸ், நாகிரெட்டி, சக்ரபாணி. இயக்கம் சாணக்யா.

சிக்கல் இல்லாத தெளிவான கதை, அளவான வசனங்கள், உறுத்தல் இல்லாத காதல் காட்சிகள், மிகையில்லாத நடிப்பு. அற்புதமான படத்தொகுப்பு. தெவிட்டாத இசை. சுவையான காட்சிகள். எம்.ஜி.ஆர். என்ற நட்சத்திரக் கதாநாயகனுக்காகத் திணிக்கப்பட்ட காட்சிகளாக இல்லாமல் திரைக்கதைக்கு ஏற்ற காட்சிகளை மட்டுமே வைத்து சுவை குன்றாமல் கொண்டு போயிருக்கிறார்கள். பாடல்களில் ‘பெண் போனால்… இந்தப் பெண் போனால்’ என்ற பாட்டு மட்டுமே சுமார். அதுகூட இல்லாவிட்டால் அந்தக் காலத்து தியேட்டர் பீடா ஸ்டால்கள் பிழைப்பது எப்படி?

பூஞ்சோலை ஜமீன்தார் குடும்பக் கதை. ஜமீன்தாருக்கு ஒரு மகள், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டைக் குழந்தைகளாக இரண்டு பையன்கள். பழனி பங்குனி உத்திரத் திருவிழாவில் இளைய மகன் காணாமல் போய்விடுகிறான். புத்திசாலியான ஜமீன்தார் தம்பதி தங்களிருவரின் புகைப்படங்கள் பொருத்திய லாக்கெட்டை இரண்டு மகன்களுக்கும் முதலிலேயே போட்டுத்தான் கூட்டிச் செல்கிறார்கள். சுமார் 15 அல்லது 20 வருடங்களுக்குப் பிறகு அதை ஆதாரமாக வைத்து அவர்கள் இணைகிறார்கள். சின்ன மகன் காணாமல் போன ஏக்கத்தில் ஜமீன்தாரிணி இறந்துபோக, அவர் இறந்த ஏக்கத்தில் ஜமீன்தார் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறார். பிறகு அவரும் இறந்துவிடுகிறார். ஜமீன்தாரின் பெண்ணுக்கே தனது தம்பியைத் திருமணம் செய்துவைத்துவிடுகிறாள் இளைய ஜமீன்தாரிணி.

ஜமீன்தாரின் மகன் ராமுவைப் படிக்க வைக்காமல், பயந்தாங்கொள்ளியாக வளர்த்து சொத்தை அபகரிக்கப் பார்க்கிறார் நம்பியார். கிராமத்தில் குடியானவர் வீட்டில் வளரும் இன்னொரு எம்.ஜி.ஆர். நன்றாகப் படித்ததுடன் அடி தடி சண்டைகளில் ஆர்வமுள்ளவராக வளர்கிறார். விவசாயத்தில் நாட்டம் போகவில்லை அவருக்கு. அந்த ஊருக்குப் பக்கத்தில் சங்கரன்காடு என்ற கிராமத்தில் பழைய ஜமீன்தாரிணி அம்மா புத்தி பேதலித்து, பேத்தியுடன் தனியாக வாழ்கிறார். அவர்தான் இரட்டையர்கள் புதிரை அவிழ்த்து கிளைமேக்ஸில் அனைவரையும் இணைத்து வைக்கிறார்.

குதிரை சவுக்கால் அடி வாங்கி நொந்துபோகும் சாது எம்.ஜி.யார் வீட்டைவிட்டு ஓட, இன்னொரு எம்.ஜி.ஆர். தற்செயலாக அதே வீட்டுக்கு வந்தவுடன் கதை சூடு பிடிக்கிறது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் திரைப்படத்தின் முழுக்கதையையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ராமாயணம், மகாபாரதம், பராசக்தி ஆகியவற்றுக்குப் பிறகு அதிகம் பாராயணம் செய்யப்பட்ட கதை இதுவாகத்தான் இருக்கும். நம்பியார், அப்பாவி எம்.ஜி.ஆரை அடிக்கும்போது நமக்கு ஏற்படும் வருத்தம் எல்லாம், துணிச்சல்கார எம்.ஜி.ஆர். வந்து நம்பியாரை அடிக்கும்போது மகிழ்ச்சியாக மாறிவிடுகிறது. இந்த ஒரு காட்சியே இந்தத் திரைப்படத்தின் மிகப் பெரிய ஈர்ப்பு.

தீமையை நன்மை வெல்லும் இந்த சவுக்கடியோபதேசம் பிற்காலத் திரைப்படங்களில் பல வழிகளில் காட்டப்பட்டாலும் ‘அசல் ஒரிஜினல் நாகப்பட்டினம் மிட்டாய்க் கடை’ இனிப்பாக நாவில் புரளுவது இந்தக் காட்சிதான். இன்னொரு 50 ஆண்டுகளுக்கும் இந்தத் திரைப்படம்தான் வழிகாட்டிப் படமாக இருக்கும்.

வடிவேலு இக்காலத் திரைப்பட ரசிகர்களுக்கு அளித்திருக்கும் ஒரு பஞ்ச் டயலாக், ‘மறுபடியும் முதல்லேருந்தா?’. அதை இந்தத் திரைப்படத்தில் கேட்கலாம். தம்பி எம்.ஜி.ஆர். (இளங்கோ) ஏகப்பட்ட பலகாரங்களை ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு நைசாக நழுவிவிட, அப்பாவி எம்.ஜி.ஆர். (ராமு) அதே மேஜையில் வந்து உட்கார்ந்து, ‘ரெண்டு இட்டிலி’ என்று கேட்டதும் அந்த சர்வர், ‘மறுபடியும் முதல்லேருந்தா?’ என்று வாயைப் பிளக்கிறார்.

நாகேஷ் இப் படத்தில் கோவிந்தன் என்ற பெயருள்ள கதாபாத்திரத்தில் வந்தாலும் குளறுவாயன் என்றே எம்.ஜி.ஆரால் அழைக்கப்படுகிறார். அவர் குளறுவதும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. ‘நான் ஆணையிட்டால்’ பாடல் காட்சியில் சுருளிராஜனும் ஒரு ஓரத்தில் தெரிகிறார் பாருங்கள்.

ஒரு படத்தில் ஆயிரம் இருந்தாலும் சரியான திரைக்கதை இல்லாவிட்டால் வேலைக்காகாது. எம்.ஜி.ஆரின் அனாயாசமான நடிப்பு, அவரது நட்சத்திர வசீகரம், கதாநாயகிகள், பாடல்கள் என எல்லாம் சரியாக அமைந்திருந்த இந்தப் படத்திற்குத் தெளிவான, திருப்பங்கள் நிறைந்த திரைக்கதைதான் மகுடம். நாடோடி மன்னன், மாட்டுக்கார வேலன், நீரும் நெருப்பும், குடியிருந்த கோயில், நாளை நமதே ஆகிய அனைத்தும் வெற்றிப் படங்களாக இருந்தாலும் இரட்டை வேடக் கதாநாயகன் படங்களுக்கான டெம்பிளேட் படம் இதுதான். இந்தப் படம் தந்த வெற்றியை மறக்காமல் ‘புதிய பூமி’ திரைப்படத்தின் ஒரு பாடலே, ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை’ என்று ஆரம்பமாகிறது.

இதெல்லாம் இருக்கட்டும். காவியத் தன்மை பெற்றுவிட்ட அந்தப் பாடலைப் பற்றிச் சொல்லாமல் இந்தக் கட்டுரை எப்படி முடியும்? ஒரு வீட்டில் நடக்கும் அராஜகத்தை எதிர்க்கும் இளங்கோ என்னும் பாத்திரம் கொடுமைக்கார மாமாவின் கையிலிருக்கும் சாட்டையைப் பிடுங்கி அவரையே அடிக்கும்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்வதில் வியப்பில்லை. ஆனால், அந்த வீட்டில் இருப்பவர்களைக் காப்பாற்றும் காட்சியில் வரும் பாடலில் ஏழை எளியவர்கள் எங்கே வந்தார்கள் என்று யாரும் கேட்கவில்லை. காரணம், சவுக்கு கையில் வந்ததும் இளங்கோ எம்.ஜி.ஆராகிவிடுகிறார். பாத்திரங்கள் தமிழக மக்களாகிவிடுகிறார்கள். “நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இந்த ஏழைகள் வேதனைப்பட மாட்டார்” என்று எம்.ஜி.ஆர். சொல்லும்போது திரையரங்கம் புல்லரிக்கிறது.

எம்.ஜி.ஆரை அரியணையில் ஏற்றியதில் இந்தப் பாடலுக்கும் ஒரு பங்கிருக்கிறது என்பது மறுக்க முடியாதது. இந்தப் படத்தை மறக்க முடியாத படமாக ஆக்கும் காரணிகளில் ஒன்றாகவும் இது அமைந்துவிட்டது.

படங்கள் உதவி: ஞானம்

Speak only with our nod, govt tells UGC boss

NEW DELHI: The HRD ministry has severely reprimanded UGC chairperson Ved Prakash for his outbursts against Rashtriya Uchchatar Shiksha Abhiyan (RUSA) before Parliament's standing committee on May 26 and asked him to take prior permission to articulate views contrary to the government's policies.

Criticizing the flagship programme at the meeting, Prakash said because of it the programme money was not reaching the institutions directly with the state governments having become "middlemen".

READ ALSO: UGC a failure, must be scrapped, HRD panel says

In a terse letter, former education secretary SN Mohanty, who has since been transferred, told Prakash that "government's position including policy is articulated in unison and no discordant note is voiced". Reminding him that there is a set convention in such meetings, Mohanty said this should be kept in mind "for future interactions with the Parliamentary bodies".

"Any departure from the confirmed policy position of the government, if it is to be articulated, must be done with prior permission of the secretary," said the letter written a day after the incident.

A source said, "The UGC chairperson's criticism caused enough consternation in the ministry. Many senior officials had protested against Prakash's behaviour and wanted that it should not be repeated in future." "Heads of autonomous bodies go for standing committee meetings to assist the secretary, not to take adversarial position," a senior official said. HRD minister Smriti Irani was also later briefed about the incident.

HRD minister Smriti Irani (R) with UGC chairman Ved Prakash.

Prakash told the parliamentary panel that RUSA whose primary function is to fund state universities and ensure that systemic reforms are carried out - a job that was being done by the UGC - is undermining the Commission. His angst was that the funding of RUSA could adversely affect UGC's endeavour to push for research and innovation. Prakash's argument was disputed by HRD officials in the meeting.

READ ALSO: HRD minister pans UGC chief's clarification on foreign trip

RUSA is now carrying out three functions of UGC, including funding of model degree colleges. Only 60 of these colleges have been set up though the plan is to have one each in 374 educationally backward districts. RUSA is now also involved in financing upgradation of colleges to universities and disburses infrastructure grant. More than 30 states and union territories have committed to abide by conditions set by RUSA. More than 20 states have set up state higher education council, the first condition by RUSA. States also have to move to semester system and carry out other reforms.

கெட்டதிலும் ஒரு நல்லது!

நெஸ்லே சந்தைப்படுத்தியுள்ள ஒன்பது வகை மேகி உணவுப் பொருள்கள் "பாதுகாப்பற்றவை, உடலுக்கு ஊறு விளைவிப்பவை' என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தனது ஆய்வுகளுக்குப் பிறகு ஜூன் 5-இல் அறிவித்திருக்கிறது. மேலும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் "மேகி ஓட்ஸ் மசாலா நூடுல்ஸ்' என்ற புதிய உணவுப் பொருளின் விற்பனைக்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருந்த நெஸ்லே, அனுமதி கிடைக்கும் முன்பாகவே அதைச் சந்தைப்படுத்தியிருப்பது சட்டத்தை மீறிய, தண்டனைக்குரிய செயல் என்றும் தெரிவித்திருக்கிறது.
1982 முதலாகவே சுமார் 32 ஆண்டுகளாக நெஸ்லே நிறுவனத்தின் "2 நிமிட நூடுல்ஸ்' இந்தியாவில் சந்தையில் இருந்தும்கூட, இதுநாள் வரை இந்த உணவுப் பொருளின் பாதுகாப்புத் தன்மை குறித்து மாதிரி ஆய்வுகள் நடத்த வேண்டும் என்று தோன்றவே இல்லை என்பது ஆச்சரியமும், வேதனையும் தருவதாக உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாகவே, பதப்படுத்தப்பட்ட உணவின் கேடுகள் குறித்த விழிப்புணர்வுக்கு ஒரு சில பத்திரிகைகளும், ஊடகங்களும் மேலதிகமான கவனம் தந்து வருவதோடு, இந்தப் பொருள்களின் பாதுகாப்பு குறித்துத் தனியார் அமைப்புகள் நடத்திய ஆய்வு முடிவுகளையும் வெளியிட்டு, எச்சரிக்கவும் செய்தன.
இந்தியாவில் சந்தைப்படுத்தப்படும் மென்பானங்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள், இறக்குமதி செய்யப்படும் பழ வகைகள் என பலவற்றைக் குறித்தும் எச்சரிக்கை செய்யும் கட்டுரைகள், ஊடக நிகழ்வுகள் இடம்பெறவும் செய்தன.
அடுமனைகளில் கோதுமை ரொட்டி தயாரிப்பின்போது அவை வெண்ணிறமாகவும், கூடுதலாகப் பூரித்தெழவும் சேர்க்கப்படும் வேதிப் பொருள் குறித்த விழிப்புணர்வும், அஜினோமோட்டோ உப்பு உடலுக்கு ஏற்படுத்தும் தீமைகள் குறித்தும் கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகின. ஆனால், இப்போதுதான், நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் மீதான ஆய்வு செய்யப்பட்டு, பாதுகாப்பற்றது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பல மாநிலங்களில் மேகி நூடுல்ஸ் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்தியா முழுவதிலும் இதற்குத் தடை விதிக்கப்படும் என்பது நிச்சயம். இதிலும் தமிழகம் தனித்துவத்துடன், சந்தையில் உள்ள நான்கு நிறுவனங்களின் நூடுல்ஸýக்கும் தடை விதித்துள்ளது. வாய்வாய் எக்ஸ்பிரஸ் நூடுல்ஸ், ஸ்மித் அன்டு ஜோன்ஸ் சிக்கன் மசாலா நூடுல்ஸ், ரிலையன்ஸ் செலக்ட் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் ஆகியவற்றுக்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
மற்ற நிறுவன நூடுல்ஸ் குறித்து மாதிரி ஆய்வுகள் நடத்தும் முயற்சிகளில்கூட மற்ற மாநிலங்கள் இறங்கவில்லை. அனைத்து நிறுவனங்களின் நூடுல்ஸ் மசாலாக்கள் அனைத்தும் ஆய்வுக்கு உள்படுத்தப்பட வேண்டும்.
எத்தனை கோடி ரூபாய் செலவழித்தாலும் ஏற்படுத்த முடியாத உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வை இரண்டே நாளில் ஏற்படுத்திவிட்டது நெஸ்லே தயாரிப்பான 2 நிமிட நூடுல்ஸ். ஒவ்வொரு வீட்டிலும் இது குறித்த பேச்சும், அச்சம் கலந்த விவாதமும் கடந்த இரண்டு நாள்களாக நடந்து கொண்டிருக்கின்றன.
இந்தத் தருணத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும், இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டுள்ள ஆயத்த உணவுப் பொருள்கள் அனைத்தையும் ஆய்வுக்கு உள்படுத்தவும், அதன் வேதிப் பொருள்களை மறுஆய்வுக்கும், தர நிர்ணயத்துக்கும் உள்படுத்தவும் இதுபோன்ற ஒரு சந்தர்ப்பம் இனி அமையாது.
நெஸ்லே உள்ளிட்ட நிறுவனங்கள் நூடுல்ஸýடன் மசாலாவை தனி பொட்டலங்களில் வழங்குவதைப் போல, நாடு முழுவதிலும் ஹோட்டல்களிலும், தள்ளுவண்டிக் கடைகளிலும் பயன்படுத்தப்படும் காலிபிளவர் மசாலா, சில்லிசிக்கன் மசாலா பொட்டலங்கள் உள்ளூர் நிறுவனங்களால் இலச்சினையோடும், வணிக இலச்சினை இல்லாமலும் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன என்பதையும், அவற்றிலும் காரீயம், அஜினோமோட்டோ அளவுக்கு அதிகமாக இருப்பதையும் மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.
இத்தகைய மசாலா பொட்டலங்களையும் ஆய்வுக்கு உள்படுத்தி தரத்தை உறுதிப்படுத்த வேண்டும். இத்தகைய மசாலாவைப் பயன்படுத்தும் இந்தியர் எண்ணிக்கை, நூடுல்ஸ் பயன்படுத்தும் இந்தியர்களைவிட அதிகம் என்பதையும் மறக்கலாகாது.
அஜினோமோட்டோ உப்பு விற்பனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை ஒருபுறம் இருக்க, இந்திய உணவு தானியங்களில் காரீயம் அளவு என்ன என்பது குறித்த ஆய்வும் இன்றியமையாதது. ரசாயன உரங்கள் மட்டுமன்றி, தானியங்களில் காரீயம் சேர நிலத்தின் தன்மையும் காரணமாகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். நிலத்தின் தன்மை பயிர்க்கு உளதாகுமாம்! ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலங்களில் விளையும் உணவு தானியங்களில் காரீயத்தின் அளவைத் தற்சோதனை நடத்துவதும் அவசியம்.
இந்தியா முழுவதும் பாதுகாப்பான உணவு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள இந்த வேளையில், பாரம்பரிய உணவுப் பழக்கங்களுக்குத் திருப்புவது மிக எளிது. மேற்கத்திய உணவு முறைகள் கேடு விளைவிப்பவை என்று சொல்வதைக் கொஞ்சம் நிறுத்திவைத்து, அவற்றுக்கு இணையான நல்ல, ருசியான இந்திய உணவுகளை, குறிப்பாகக் குழந்தைகளுக்கு, அறிமுகம் செய்ய வேண்டிய தருணம் இதுவே. குழந்தைகளுக்கு உள்ளூர் காய்கறிகள், உள்ளூர் பழ வகைகளின் சுவையை அறிமுகம் செய்யவும், சிறுதானிய உணவுகள், பயறு வகை உணவுகளைக் கொடுத்துப் பழக்குவதும், இந்தியத் தின்பண்டங்களை விதவிதமாகச் செய்து கொடுப்பதும் இன்றைய பெற்றோர்களின் கடமை.
32 ஆண்டுகளாக நெஸ்லே பழக்கப்படுத்திய பாதுகாப்பற்ற சுவை, இரண்டே நாளில் காணாமல் போனபோதிலும், கேட்டிலும் ஓர் நன்மை விளைந்திருக்கிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதில்தான் நமது புத்திசாலித்தனம் இருக்கிறது.

ஆவின் பால் புதிய அட்டையை இணையதளம் மூலம் பெறலாம்: தமிழக அரசு அறிவிப்பு

புதிதாக பால் அட்டை பெறவும், பழைய அட்டையைப் புதுப்பிக்கவும், ஆவின் இணையதளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை பெருநகரில் ஆவின் பால் குறைந்த விலையில் பெறுகின்ற வகையில் மாதாந்திர பால் அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த அட்டைகள் 16 ஆவின் வட்டார அலுவலகங்கள், 49 பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை பெருநகரில் மாதாந்திர பால் அட்டைகள் மூலம் நாளொன்றுக்கு 7.15 லட்சம் லிட்டர் பால் வழங்கப்படுகிறது.
புதிய மாதாந்திர பால் அட்டைகளைப் பெற வழிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. புதிய ஆவின் பால் அட்டைகள் பெற விரும்பும் நுகர்வோர்கள், வட்டார அலுவலகங்கள், பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களைத் தொடர்பு கொண்டு அதற்குரிய விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் இருப்பிட அல்லது அடையாள சான்றிதழ்களின் நகல்களை இணைக்க வேண்டும்.
இந்த விண்ணப்பங்கள் வட்டார அலுவலக ஊழியர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக புதிய பால் அட்டைகள் வழங்கப்படும். மேலும், இணையதளம் மூலம் புதிய அட்டைகள் பெறவும், பால் அட்டைகளை மாதந்தோறும் புதுப்பிக்கவும் வசதி உள்ளது. www.aavinmilk.com என்ற இணையதளத்தை அணுகி புதிய பால் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம். அதிலுள்ள விண்ணப்பத்தைப் பதிவு செய்தவுடன், கள ஆய்வு செய்யப்பட்டு அவர்களுக்கு புதிய பால் அட்டைகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Chaos in medical PG counselling, government scraps process

CHENNAI: The state health department has scrapped the postgraduate medical counselling process that was held over the past three days, following allegations of discrepancies and lack of transparency.

A fresh phase of counselling will be held over the weekend.

More than 6,000 MBBS graduates aspiring to pursue a PG degree were vying for 800 seats available in the third phase of counselling held over three days since June 2.

Out of the total 1,200 PG seats available, Tamil Nadu was left with 600 seats after surrendering the other half to the All India Quota, along with the 100 seats surrendered by private medical colleges and 100 All India quota seats that fell into the common pool.

More than 12,000 candidates had appeared for the entrance out of which 6,000 were eligible to attend counselling.

Several candidates alleged lack of transparency. "Vacancies in different specialities were not revealed until the last minute. When the seats were finally displayed, it was allotted to candidates who were not eligible," said an applicant.

The doctor explained that MD seats in dermatology were displayed on the second day of counselling, and one of the seats was given to an "ineligible" candidate who was related to a politician.

"Limited seats that were available in some specialities were casually allotted to candidates in the same community while the deserving ones were skipped," he said.

Another candidate alleged that the coordinators at the venue did not give satisfactory replies when asked about the discrepancies and the students were asked to leave the premises. "We had to approach the health secretary," he said.

Extending support to the candidates, Doctors' Association for Social Equality general secretary Dr G R Ravindranath said the state government should order an investigation into the irregularities that took place in the counselling.

A senior health official said the counselling process was held with transparency and since candidates expressed their complaints, the directorate of medical education has decided to conduct fresh counselling.

NTR health university to join hands with Harvard Medical School for setting up laboratory

NTR University of Health Sciences (NTRUHS) will soon become one of the few institutions in the country to have a Human Leukocyte Antigen (HLA) typing and cross-matching laboratory. Accordingly, the Harvard Medical School (HMS) will provide technical know-how for the lab to be set up by NTRUHS at an estimated cost of Rs. 2 crore to Rs. 3 crore.

The laboratory will come in handy for the implementation of the Cadaver Transplant Programme (CTP), also called ‘Jeevandan’, under which tissue-typing is done to ensure compatibility of organs.

Besides, it can generate income for the government by rendering HLA typing and cross-matching services to the needy beyond the ambit of the CTP.

NTRUHS Vice-Chancellor and Chairman of the Appropriate Authority for Cadaver Transplantation (Andhra Pradesh) T. Ravi Raju during his recent visit to the US met Ajay K. Singh, Associate Dean for Global Education at HMS, who suggested a Memorandum of Understanding (MoU) for taking the project forward.

Dr. Ravi Raju conveyed the same to Chief Minister N. Chandrababu Naidu through the top brass of Department of Health, Medical and Family Welfare and got a positive response but it is yet to reach the stage of signing MoU.

“The proposed laboratory will save precious time while ascertaining the types of organs of donors and recipients,” Dr. Raju said. He also expressed hope that the government would seize the opportunity at the earliest.

According to NTRUHS Director (R&D) G. Krishna Murthy, the lab will reduce the State’s dependence on the NIMS.

Plus Two toppers file case against MBBS admission norms

A group of 16 students who cleared their Plus Two examinations this year have filed a petition in the Madras High Court Bench here challenging the State Government’s decision to permit students who cleared the examinations in the previous years to compete with them for admission into medical colleges this year.

The petitioners claimed that such permission would only benefit students who passed out last year since the number of centum scorers in science subjects was high in 2014. When the matter came up before Justice S. Vaidyanathan on Friday, he directed the Registry to club the petition along with two similar cases pending in the principal seat of the High Court in Chennai.

Petitioners’ counsel Isaac Mohanlal pointed out that 2,710 students had scored centum in physics in 2014 as against just 214 students this year. Similarly, the number of centum scorers in chemistry and biology was 1,693 and 652 respectively in 2014 but the corresponding figure for this year was only 1,049 and 387.

“Many students were able to score high marks last year due to relatively easy question papers set during that year. It was not the case this year. Last year many students could not gain admission in MBBS course since the number of centum scorers was very high. Those students had to be content with studying dental courses in various colleges in the State.

Jayalalithaa declares assets worth Rs. 117 crore

Return to frontpage

Every time Chief Minister Jayalalithaa declares her wealth, it doubles.

As on Friday, the AIADMK supremo has declared assets worth Rs 117.13 crore. She has movable assets worth Rs. 45.04 crore and immovable assets worth Rs.72.09 crore.

When she filed the affidavit in Srirangam for the 2011 Assembly elections, she declared assets worth Rs 51.40 crore, against Rs 24.7 crore in 2006.

In the affidavit she furnished before the Returning Officer on Friday along with the nomination papers to contest the R.K. Nagar by-elections, Ms. Jayalalithaa stated that her deposits amounted to Rs. 9.80 crore. She had invested Rs 31.68 crore in five firms, including Kodand Estate, as a partner.

‘Veda Nilayam’

valued at Rs. 44 crore

The current market value of residential building ‘Veda Nilayam’, 81, Poes Garden in S.No1567 of Teynampet Village, measuring an area of 10 grounds equalling 24,000 sqft with a built-up area of 21,662 sq ft, is Rs.43.96 crore. The property was purchased by Ms. Jayalalithaa and her mother on July 15, 1967 at a cost of Rs. 1.32 lakh. She owns commercial buildings in four places including Poes Garden in Chennai and Sri Nagar Colony, Hyderabad. The current market value of Ms. Jayalalithaa’s agricultural land measuring 14.5 acres in Jeedimetla Village in Ranga Reddy District in Hyderabad, Telangana, is Rs. 14.44 crore.

Nine vehicles, including two Toyota Prado SUVs, a 1980 model Ambassador car and 1990 model Contessa have a current market value of Rs.42.25 lakh.

Gold articles weighing 21280.300 grams seized by the police were lying with the Treasury, Karnataka Government (in the DA case).

Therefore the value could not be ascertained, she said.

In 2013-2014, the total income shown as per the income tax returns filed by her is Rs. 33.32 lakh.

Ms. Jayalalithaa has no dependents.

The value was

Rs. 51.40 crore in 2011, against Rs. 24.7 crore in 2006

Friday, June 5, 2015

டில்லி மெட்ரோ முதன் முதலாக டிரைவர் இல்லாத ரயிலை அறிமுகப்படுத்துகிறது

புதுடில்லி: டில்லி மெட்ரோ ரயில் சேவை முதன் முதலாக டிரைவர் இல்லாத ரயிலை அறிமுகம் செய்கிறது.

தென்கொரியாவின் சாங்வான் நகரில், அந்நாட்டு தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்படும், டிரைவர் இல்லாமல் ஓடக்கூடிய இந்த ரயில், டில்லி மெட்ரோ ரயில் கட்டுப்பாட்டு மையங்கள் மூலமாக இயக்கப்படும்.

இந்த ரயில், டில்லியில் மஜ்லிஷ் பூங்கா-ஷிவ் விஹார் மார்க்கத்தில் 59 கி.மீ., தூரமும், ஜனக்பூரி மேற்கு-பொட்டானிக்கல் கார்டன் மார்க்கத்தில் 38 கி.மீ., தூரமும் தினமும் பயணிகளை சுமந்து செல்ல காத்திருக்கிறது. இதில் டிரைவருக்கு என்று தனியாக கேபின் இல்லை என்பதால் வழக்கமாக டிரைவரால் இயக்கப்படும் ரயிலை விட கூடுதலாக 240 பேர் பயணம் செய்ய முடியும். அதாவது ஒரே நேரத்தில் 2,280 பேர் பயணிக்க முடியும்.

பாதுகாப்புக்காக, ரயிலின் உட்புறமும், வெளிப்புறமும் சி.சி.டி.வி கேமராக்கள் அமைக்கப்பட்டு, மெட்ரோ ரயிலின் கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் கண்காணிக்கப்படும்.இந்த ரயிலுக்குத் தேவையான ரயில் பெட்டிகள் தென் கொரியாவிலும், இந்தியாவில் பெங்களூருவில் உள்ள பி.இ.எம்.எல் நிறுவனத்திலும் வடிவமைக்கப்படும் எனவும், இந்த ரயில் சேவை 2016 ல் நடைமுறைக்கு வரும் என்றும் மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முதுநிலை மருத்துவப் படிப்பு: நாளை முதல் மீண்டும் புதிய கலந்தாய்வு


முதுநிலை மருத்துவப் படிப்புகள், முதுநிலை மருத்துவ பட்டயப் படிப்பு, ஆறு ஆண்டு நரம்பியல் அறுவைச் சிகிச்சை படிப்பு (எம்.சிஎச்.-நியூரோசர்ஜரி) ஆகியவற்றுக்கு மீண்டும் புதிய கலந்தாய்வு சனிக்கிழமை (ஜூன் 6), ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7)

நடத்தப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org-ல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் மேலே குறிப்பிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு கடந்த ஜூன் 2-ஆம் தேதி முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது.

எனினும் கலந்தாய்வு தொடங்கிய பிறகு, முதுநிலை மருத்துவப் படிப்புப் பிரிவுகளில் உள்ள சில இடங்களை அண்ணாமலை பல்கலைக்கழகம் சமர்ப்பித்தது. இதையடுத்து கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் புதிய இடங்களை ஒதுக்கீடு செய்வது குறித்து பிரச்னை எழுப்பத் தொடங்கினர்.

கலந்தாய்வு ரத்து: இதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 2-ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் நடத்தப்பட்ட முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை ரத்து செய்ய மருத்துவக் கல்வி தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது. கலந்தாய்வு ஒதுக்கீடும் ரத்து செய்யப்படுவதாக தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

சுகாதாரத் துறையின் இணையதளத்தில் திருத்தப்பட்ட கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

டாக்டர் சங்கம் கோரிக்கை: இதனிடையே முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை நேர்மையுடனும் வெளிப்படைத் தன்மையுடனும் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கேட்டுக் கொண்டுள்ளார்.

கிரிக்கெட் பந்தை 6 மணி நேரம் தொடர்ந்து தட்டி மதுரை மருத்துவ மாணவர் கின்னஸ் சாதனை முயற்சி

மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் கெüதம் நாராயணன் வியாழக்கிழமை ஒரே இடத்தில் நின்று கிரிக்கெட் பந்தை மட்டையால் தொடர்ந்து 6 மணி 14 நிமிடம் தட்டி கின்னஸ் சாதனை முயற்சியை மேற்கொண்டார்.
சேலம் மாவட்டம், குகை பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் மகன் கெளதம் நாராயணன். மதுரை மருத்துவக் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். கிரிக்கெட் மட்டையால், கிரிக்கெட் பந்தை ஒரே இடத்தில் நின்றபடி தட்டி கின்னஸ் சாதனை முயற்சியை வியாழக்கிழமை காலை 11.10-க்குத் தொடங்கினார். அவருக்கு ஒன்றரைக் கிலோ எடையுள்ள கிரிக்கெட் மட்டை, 60 கிராம் எடையுள்ள பந்து அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் சாதனை முயற்சியை தொடக்கி வைத்தார். மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ரேவதி கயிலைராஜன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஒரே இடத்தில் நின்றபடி வலது கையில் கிரிக்கெட் மட்டையால் பந்தை தட்டியபடி கெüதம் நாராயணன் சாதனை முயற்சியை மேற்கொண்டார். இரண்டு மணி நேரம் தொடர்ந்து தட்டினாலே அவர் சாதனைக்கு தகுதி பெற்றாலும், நீண்ட நேரம் தட்டி சாதிக்க வேண்டும் என அவர் தொடர்ந்து செயல்பட்டார்.
தண்ணீர், உணவு எடுத்துக் கொள்ளாமல், மாலை 5 மணி 24 நிமிடத்துக்கு பந்தைத் தட்டுவதை நிறுத்தி சாதனை நிகழ்த்தினார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கின்னஸ் அமைப்பு வெளியிடும் என்று சாதனை முயற்சியின் நடுவர்கள் தெரிவித்தனர்.

Bride gave birth to a child soon after she landed up at her in-laws house

KANPUR: A marriage was called off when a bride gave birth to a child soon after she landed up at her in-laws house in Kanpur Dehat district.

The incident unfolded on Tuesday in the Sabdalpur village under the limits of Derapur police station of the district, 50 km from the Industrial City. The bride, Meena (name changed), went into labour pain soon after she reached her in-laws house. "Before, the bride could reach the hospital, she delivered a baby right at the wedding-room being decorated for the 'first-night'," informed villagers.

Embarrassed by the sudden turn of events, the woman's family, which hails from Nasarseda of the district, was summoned by the bridegroom, who later walk-off the marriage.

A 'panchayat' was called which later asked the girls parents to return the gifts exchanged during 'Tilak' ceremony. "They later took home not only their daughter, but also the newborn baby," informed village sources. The couple had got married on Monday.

The Ahmedabad Municipal Corporation (AMC) is toying with a new idea of paying people money if they visit the nearest public toilets.


AHMEDABAD: Henceforth you will be tipped a rupee to pee at the right spot! The Ahmedabad Municipal Corporation (AMC) is toying with a new idea of paying people money if they visit the nearest public toilets.

This idea was first implemented in Darechowk in Katmandu in Nepal and had worked well.

In Ahmedabad, the AMC will implement the scheme in 67 nuisance spots in the city with a public toilet nearby. Once successful, the scheme will be implemented across all public toilets in the city.

"The whole motive of the scheme is to popularize the public toilet. We plan to generate revenue through advertising," said a senior AMC official.

The proposal was taken up by the standing committee of the AMC on Thursday. The AMC sanitary department plans to advertise the scheme near open defecation sites and even impose heavy fines on the offenders.

Standing committee chairman Pravin Patel said: "We are going to implement this project because people near 67 pay and use toilets are found defecating in the open. Some even defecate on footpaths and pose a major public health risk. Our move will encourage people to use public toilets and AMC officials will also explain their family to do the same."

"There are around 300 public toilets in the city out of which the service will be available in 67 public toilets. Most of them are located near slum areas," Patel added.

Manipal University sets its sights on being in top 200 universities in the world

MANIPAL: Manipal University is set to go several notches higher and hopefully figure count among the best universities in the world. This is the goal new Vice Chancellor Dr H Vinod Bhat has set for himself. During the acceptance speech at a function to felicitate outgoing Vice Chancellor Dr K Ramnarayan and to welcome him as new VC here on Wednesday, Dr Bhat said, "I set myself a target of breaking into the (Quacquarelli Symonds) QS 200 World Ranking by 2020".

Briefly, Dr Bhat gave the roadmap for the progress to be made during the next five years that he will be in the Vice Chancellor's chair."In the last seven years, we have been at our productive best. We have set up 16 departments and started close to 100 different programmes and the student intake has gone up considerably. This momentum has to continue. And, I set myself a target of setting up 100 new departments in the next five years," Dr Bhat asserted.

"It is time for us to rededicate ourselves to a larger national cause. We represent the best of higher education in India and we need to expand both within and in the neighbourhood. We need to be empathetic towards our students and patients who continue to be our primary stakeholders. The University has come this far with overarching support of MAHE Trust and university Board, the vision and ideas of Dr Ramdas Pai (Chancellor) and all authorities," Dr Bhat said. Dr Ballal described Dr Ramnarayan as the "Man on the move". "He has done a lot of innovation, like academic activities, functioning of board of studies, academic senate and others. Our university was nowhere in BRICS rankings. He was responsible for the rise of the university. We figured in the BRICS ranking - was 100th and then moved to the 85th position the very next year. Dr Ballal also welcomed the new VC Dr Bhat and lauded his administrative skills.

Dr Ramnarayan, redesignated vice-president, faculty development and alumni relations, Manipal University was felicitated for his services as VC for five years from May 2010. Dr Ullas Kamath, Dean, MMMC, Manipal, Dr Dilip Naik, MCODS, Mangaluru and Dr Harishchandra Hebbar, director SOIS, Manipal, and Pro Chancellor Dr H S Ballal shared their thoughts. Dr Ramdas Pai handed over the citation and Dr Ranjan Pai, MD-cum-CEO of MEMG a memento.

NEWS TODAY 20.09.2024