Wednesday, January 3, 2018

House panel to scrutinise Medical Commission bill

New Delhi: The Lok Sabha on Tuesday referred the National Medical Commission Bill, 2017, to a parliamentary standing committee for scrutiny, defusing the protests over the government bid to overhaul the Medical Council of India. The apex body of doctors had called a strike on Tuesday in protest against the bill. However, the Lower House has asked the standing committee to submit its report in the budget session, raising the prospects of the bill being taken up for passage soon. The budget session will start around end-January or February 1.

Parliamentary affairs minister Ananth Kumar told LS that government had agreed to the demand of various parties across the ruling NDA and the opposition that the bill be vetted by the standing committee. The bill was introduced by health minister J P Nadda amid protests from members on Friday.

However, minister Kumar urged Speaker Sumitra Mahajan to ask the committee to give its report before the budget session. He underlined that the bill had to be taken up at the earliest in view of the Supreme Court order.

In her brief ruling, the Speaker said that the report of the standing committee be tabled before the budget session. The Indian Medical Association called off its strike in protest against the bill on Tuesday after Parliament referred it to the standing panel. TNN

Bill will affect medical aspirants: Stalin

Chennai: The Centre is denying states their rights and the latest instance of this is the National Medical Commission (MNC) Bill and changes being proposed in issue of licence to motorists, said DMK working president M K Stalin on Tuesday.

Across the country, doctors are on a warpath against the NMC which is proposed to be set up in place of Medical Council of India, said Stalin. “After the fraud committed by former MCI chief Ketan Desai, several committees were set up. Even before getting their reports, the Centre appointed another committee under a joint secretary in the Prime Minister's Office. The measures being taken are only based on the joint secretary’s report,” said Stalin in a statement.

He said the proposed NMC would hit students aspiring to do medicine. “The National Eligibility cum Entrance Test (NEET) has affected students from the lower strata. Only after clearing the NEET, a student can enter any medical college. The new medical Bill proposes entrance for PG courses also. Thus at each and every stage of medical education, there is a hurdle which the students will have to cross,” said Stalin.

Stalin said the new Motor Licence Bill was another attempt to usurp the rights of states. TNN
Rajini-Kamal star war a look back at MGR-Sivaji rivalry

MT.Saju@timesgroup.com

Chennai: Four decades ago, the political landscape of Tamil Nadu witnessed intense competition between actors: MGR and Sivaji Ganesan. Both had a huge fan base, but Sivaji lost out in the political race.

Today, a similar competition is hotting up between two other superstars. A couple of months ago, Kamal Haasan decided to chart a political course, and a couple of days ago his arch-rival Rajinikanth followed suit.

The stage is set once again for the clash of two film titans intent on grabbing political space. While his charity work also helped MGR build up a loyal following, Sivaji failed to do so. His followers saw him as a great matinee idol, but were reluctant to support his political image. The entry of Rajini-Kamal into politics is working on a similar plot. Some observers feel that ‘Rajini is MGR and Kamal is Sivaji.’ “Rajini has a huge fan following across Tamil Nadu. He is accessible to public and even considered a simple, straightforward person. Kamal is brilliant and honest but it will be a tough game for him in politics,” said R Kannan, Dravidian scholar and author of “MGR: A Life” and “Anna: The Life and Times of C N Annadurai”.

MGR showed great concern for public welfare and successfully used his movies to lay the foundation for his entry to politics.

“From the beginning, unlike Sivaji Ganesan, he (MGR) cultivated and promoted artists, directors, poets, producers and technicians who suited his professional and political ends. He patronised them and their careers became inextricably linked to his. In 1971, a generous MGR gave poet Pulamaipithan money to buy back his ancestral house that had been mortgaged,” said Kannan.

Despite being a great actor, Sivaji Ganesan couldn’t transfer his cinematic image to politics. But, the MGR-Sivaji Ganesan fight was long ago, on a socially and culturally different backdrop. Today’s political landscape is different. “MGR was a success both in cinema and in politics. Actor-turned politician Vijayakanth succeeded a little bit in politics, but lost out later. Rajini has a great fan-following in the state. But, he is a very shy person. His success depends on how he is going to showcase his public life now,” said Kannan.

At a time when even seasoned politicians like DMK working president M K Stalin have still not been given a clean chit by the public, it remains to be seen how actors like Kamal Haasan and Rajinikanth are going to win over the hearts of voters. “What Rajini needs is to build up interaction with the public. As an actor, he has done his job. But being a good politician is not easy and Rajini is new to it. But I believe he will put up a better show compared to Kamal Haasan in politics,” said K Murugesan, a retired professor of politics.



Rajinikanth and Kamal Haasan


இறுதிச்சடங்கிற்கு ரூ.2 லட்சம் காசோலை எழுதிவைத்துவிட்டு தம்பதியினர் தற்கொலை!

By DIN | Published on : 02nd January 2018 03:36 PM

சென்னை: சென்னையை அடுத்த போரூரில் இரு கணவர்களைப் பிரிந்த மகள் மற்றும் குடிபோதைக்கு அடிமையான மகனின் நடவடிக்கைகளால், கணவன் மனைவி இருவரும் தங்களின் இறுதிச்சடங்கு செலவிற்காக ரூ.2 லட்சம் காசோலை எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போரூரை அடுத்த அய்யப்பன் தாங்கல், புஷ்பா நகர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரான இவரது மனைவி ஜீவாவும், மத்திய அரசு ஊழியர் ஆவார். இவர்களுக்கு சரவணன் என்ற மகனும், கார்த்திகா என்ற மகளும் உள்ளனர். மனோகரனின் மகள் கார்த்திகா, இரண்டு திருமணங்கள் செய்த நிலையில் அவர்களை பிரிந்து தந்தை மனோகரனின் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.



மகன் சரவணனும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதோடு, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரை பிரிந்து வந்துவிடுமாறு பெற்றோர் கூறியும் மகன் சரவணன் கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மனோகரனும் அவரது மனைவியுடன் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.

இதையடுத்து இன்று காலை முதலில் விஷமருந்திய மனைவி ஜீவா மயங்கி விழுந்த பின்னர், கணவன் மனோகரன் தனது மீது தீ வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து மனோகரன் வீட்டிலிருந்து புகை வந்ததைக்கண்ட அருகிலிருந்தோர், போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.



பின்னர் போலீஸார் மனோகரன் வீட்டில் நடத்திய சோதனையில், மனோகரன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றினர். கடிதத்தில், தங்களது உடலை புதைக்காமல், எரித்து விடவும் என்றும், இறுதி சடங்கிற்காக தலா ரூ.2 லட்சம் என காசோலை எழுதி வைத்து விட்டு, தற்கொலை செய்து கொள்வதாக மனோகரன் எழுதியிருந்தார்.

மேலும் தற்கொலை குறித்து உறவினர்கள் யார் யாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் மனோகரன் அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார். தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரஜினியை ‘ஆடு ராஜா ஆடு’ என விமரிசித்துள்ள இயக்குநர் விசு! ‘வான்கோழிகள் மயிலாகுமா?’ எனவும் கேள்வி...!

y DIN | Published on : 02nd January 2018 02:24 PM

2017-ம் ஆண்டின் கடைசி நாளன்று வருகின்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். இவருடைந்த அறிவிப்பிற்கு ஆதரவுகளும், எதிர்ப்புகளும் ஒருசேர எழுந்து வரும் நிலையில் தற்போது இயக்குநர் விசு அவர்களும் இது குறித்த விமரிசனத்தை முன் வைத்துள்ளார்.

முதலில் அதிமுக-வில் இருந்த இயக்குநர் விசு பின்னர் பாஜக-வில் தன்னை இணைத்துக் கொண்டார். தற்போதைய தமிழக அரசியல் சூழலைப் பற்றிய தனது கருத்துகளை அவ்வப்பது முன் வைத்துக் கொண்டும் இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு கமலின் அரசியல் வருகையைக் கடுமையாக எதிர்த்துப் பதிவிட்டிருந்த இவர், தற்போது ரஜினியின் அரசியல் வருகை குறித்தும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

“கான மயிலாட, கண்டிருந்த வான்கோழி,
தானும் அதுவாகப் பாவித்து தன் பொல்லாச்சிறகை விரித்து ஆடினால்?!

காட்டுல மயில் அழகா தோகையை விரிச்சு சூப்பரா dance ஆடுமாம்...
உடனே வான் கோழிக்கு அடி வயிறு எரியுமாம்
பொறாமை புடுங்கித் தின்னுமாம்...

அதுவும் அசிங்கமான உடம்பை வச்சுக்கிட்டு
கண்றாவியா தத்தக்கா பொத்தக்கான்னு dance ஆடுமாம்...
ரஜினி நீ மயில்... மற்ற உதிரி கோஷ்டிகள் வான்கோழி...
நீ ஆடு ராஜா ஆடு...

உன் இறகால் நொந்து போன தமிழ்நாட்டு மக்களின்
இருதயங்களை ஆன்மீக வருடல் வருடி இருக்கிறாய்...
நன்றி ரஜினி நன்றி...!

-இயக்குநர் விசு”

இவ்வாறு, ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்தும் ரஜினி குறிப்பிட்ட ஆன்மிக அரசியல் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார் இயக்குநர் விசு.

ஆன்மிக அரசியல் என்றால் என்ன?

By DIN | Published on : 03rd January 2018 01:34 AM




தான் தெரிவித்த ஆன்மிக அரசியல் என்றால் என்ன என்பதற்கான விளக்கத்தை நடிகர் ரஜினிகாந்த் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.


சென்னை போயஸ் கார்டனில் காரில் அமர்ந்தபடியே செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் ஆன்மிக அரசியல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், ''ஆன்மிக அரசியல் என்றால் உண்மையான, நேர்மையான, நாணயமான, ஜாதி, மதச்சார்ப்பற்ற அறவழி அரசியல் ஆகும். ஆன்மிகம் ஆத்மாவோடு தொடர்புடையது'' என்று விளக்கம் அளித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது, தனது அரசியல் ஆன்மிக அரசியலாக இருக்கும் என்று பேசினார். இது பல்வேறு சர்ச்சைகளையும், 


விவாதங்களையும் கிளப்பின. அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆன்மிக அரசியலுக்கான விளக்கத்தை நடிகர் ரஜினிகாந்த் செவ்வாயக்கிழமை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் நடத்துவது ஜனநாயகப் போராட்டம்: அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி

By DIN  |   Published on : 03rd January 2018 01:37 AM  |
rajini-7zc
சுதந்திரப் போராட்டம் போன்று, இது எனது ஜனநாயகப் போராட்டம் என்று அரசியல் நிலைப்பாடு குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்துத் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, சென்னையில் செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது அவர் பேசியது:-
ஆரம்ப கால கட்டத்தில் இரண்டு மாதங்கள் பத்திரிகையில் வேலை பார்த்த அனுபவம் எனக்கு உண்டு. பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத நிலையில், ஏதாவது வேலைக்குப் போக வேண்டும் என்று தோன்றியது. அப்போது என் நண்பர் சந்திரசேகர் ராவ், பத்திரிகையில் பிழை திருத்துநராக வேலை பார்த்து வந்தார். 'சம்யுக்த கர்நாடக' என்ற தினசரி பத்திரிகையில் என்னையும் வேலைக்குச் சேர்த்து விட்டார். 2 மாதங்கள் அங்கே பிழை திருத்துநராக வேலை பார்த்தேன்.


முதல் பேட்டி: சென்னைக்கு வந்த பின்னர் 1976-ஆம் ஆண்டு எனது முதல் பேட்டி 'பொம்மை' இதழில் வந்தது. நான் எப்போதுமே பத்திரிகையாளர்களை விட்டு விலகியே இருப்பேன். ஏனென்றால் அரசியல் குறித்து கேள்வி எழுப்பும் போது எனக்கு என்ன சொல்வதென்றே தெரியாது. ஆனால், அரசியலுக்கு வந்து விட்டேன். இத்தனை நாள்களாக நடந்த 'ரசிகர்கள் சந்திப்பை' உலகம் முழுவதும் கொண்டு போய்ச் சேர்த்தீர்கள். நேர்மையான வழியில் அந்த செய்திகள் வெளிவந்தன. 


சுதந்திரப் போராட்டம் மாதிரி இது ஜனநாயகப் போராட்டம் என்று நினைக்கிறேன். சுதந்திரத்துக்கான எல்லா போராட்டங்களும் தமிழகத்தில் இருந்துதான் தொடங்கியிருக்கின்றன. இதுவும் அப்படித்தான். ஊடகங்கள் இந்தப் போராட்டத்துக்கு துணையாக இருக்க வேண்டும் என்றார் ரஜினிகாந்த்.

தத்தளிக்கும் போக்குவரத்துக் கழகங்கள்

By பழ. நெடுமாறன்  |   Published on : 03rd January 2018 02:15 AM
 
மக்களுக்கு குறைந்த செலவில் போக்குவரத்து வசதி அளிப்பதற்காகத் தொடர்வண்டித்துறையை தேசிய மயமாக்கியது மத்திய அரசு. அதே நோக்கத்துடன் மாநில அரசுகள் பேருந்துகள் போக்குவரத்தைத் தேசியமயமாக்கின. இந்தியாவிலேயே தமிழ்நாடு இத்துறையில் சிறப்பான இடத்தினைப் பெற்றிருந்தது. கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு குறைந்த கட்டணத்திலும் தமிழ்நாட்டின் சகல பகுதிகளுக்குச் செல்லும் வகையிலும் பயண வசதி கிடைத்தது. தமிழக அரசுக்குச் சொந்தமான 8 போக்குவரத்துக் கழகங்களின் மூலம் 23 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 12 ஆயிரம் பேருந்துகள் கிராமப்புறப் பகுதிகளில் இயங்குகின்றன.

நாள்தோறும் அரசுப் பேருந்துகளில் 2 கோடிக்கு மேற்பட்ட மக்கள் பயணம் செய்கின்றனர். 40 இலட்சம் மாணவர்களுக்கு இலவச பயணச் சீட்டுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கான 50% மானியத்தை அரசு அளிக்கிறது. பாக்கியுள்ளதை போக்குவரத்துக் கழகங்கள் ஏற்கின்றன. இது தவிர விடுதலைப் போராட்டத் தியாகிகள், இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரர்கள், மிகை நோயாளிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கும் இந்தச் சலுகை அளிக்கப்படுகிறது. 


ஆனால், தமிழக அரசுப் போக்குவரத்துறையின் இப்போதைய நிலைமை அதிர்ச்சி தரத்தக்கதாக அமைந்துள்ளது. ஆண்டு தோறும் ரூ.3000 கோடி இழப்பு ஏற்படுகிறது. அரசு ரூ.1000 கோடி ரூபாய் மட்டுமே மானியமாகத் தருகிறது. இழப்பை ஈடுகட்டுவதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் அதனுடைய தலைமை அலுவலகங்கள், பேருந்து பணிமனைகள் மற்றும் சொத்துக்கள் அனைத்தும் வங்கிகளிலும், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதிக் கழகத்திலும் அடமானம் வைக்கப்பட்டு ஏறத்தாழ ரூ.15 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய பணம், தற்போதைய ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய பல்வேறு வகையான நிதி ஆகியவற்றைக் கொடுக்க முடியாத நிலைக்கு போக்குவரத்துக் கழக நிருவாகம் ஆளாகியுள்ளது. கடந்த 15 ஆண்டு காலமாக இத்தகைய விரும்பத்தகாத நிலைமை நீடித்து வருகிறது.


பேருந்து ஒன்றினை 6 ஆண்டுகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அதாவது சுமார் 7 இலட்சம் கிலோ மீட்டர்கள் ஓடிய பேருந்துகளை அதற்கு மேலும் பயன்படுத்துவது கூடாது. ஆனால், தமிழக அரசு போக்குவரத்துத் துறையில் உள்ள பேருந்துகளில் 70%க்கும் மேற்பட்டவை இந்த அபாயகரமான கட்டத்தைத் தாண்டியவையாகும். இதன் விளைவாக விபத்துகள் ஏற்பட்டு அப்பாவி மக்கள் பலியாகிறார்கள். நடுவழியிலேயே பேருந்துகள் பழுதாகி நிற்கின்றன. மக்கள் சாலைகளில் நின்று தவிக்கிறார்கள்.


இந்த நிலைமையில் ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவர் செய்த முறையீட்டின் விளைவாக கடந்த செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி உயர் நீதிமன்றம் நடத்திய விசாரணையின்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய பணம் ரூ.1138.66 கோடியாகும். தற்போதைய ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய பணம் ரூ.5349.93 கோடியாகும். கடன்களுக்காகக் கட்ட வேண்டிய பணம் ரூ.10,576.29 கோடியாகும். இந்த அவல நிலைமையை உயர் நீதிமன்றம் கடுமையாகக் கண்டனம் செய்தது. டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் இந்த நிலைமையைச் சீர்படுத்துவதாக போக்குவரத்துத்துறையின் செயலாளர் அளித்த உறுதிமொழியை ஏற்று ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய தொகை முழுவதையும் அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் ஆணையிட்டது.


ஆனால், அக்டோபர் 9-ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் அரசு சார்பில் இத்தொகை முழுமையும் ஒரே தவணையில் அளிக்க முடியாது எனவும், நவம்பர் 15 முதல் மூன்று மாதத்திற்கு ஒரு தவணை விகிதம் அளிப்பதாக உறுதி கூறப்பட்டது. தனது அதிருப்தியைப் பதிவு செய்த உயர்நீதிமன்றம் அக்டோபர் 16-ஆம் தேதிக்குள் ஓய்வுபெற்ற 25,846 ஊழியர்களுக்கு தலைக்கு ரூ.39 ஆயிரம் வீதம், ரூ.100.79 கோடியை அளிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்தது.
இதன்படி பணம் அளிக்கவும் போக்குவரத்துத்துறையால் இயலவில்லை. டிசம்பர் 25-ஆம் தேதிக்குள் ரூ.175 கோடி அளிப்பதாக உறுதி கூறியது. அது மட்டுமல்ல, கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு உயர் நீதிமன்றம் திறந்தவுடன் சனவரி 15-ஆம் தேதிக்குள் இரண்டாவது தவணையான ரூ.240 கோடியை அளிக்க வேண்டும் என்றும் மூன்றாவது தவணை குறித்து அன்று ஆணை பிறப்பிப்பதாகவும் அறிவித்துள்ளது. ஓய்வு பெற்ற ஊழியர்கள் தங்களுக்குரிய ஓய்வூதியத்தை நம்பி வாழும் முதியவர்களாவார்கள். அவர்களை தவிக்கவிட்டு வேடிக்கைப் பார்ப்பது எந்த வகையிலும் நியாயமானது அல்ல. 


தனியார் நடத்தும் போக்குவரத்து நிறுவனங்கள் ஆதாயத்துடன் நடைபெறும்போது, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பெரும் இழப்புடன் இயங்குவது ஏன்? தேசியமயமாக்கும் கொள்கையே கேள்விக்குரியதாக ஆக்கப்பட்டுள்ளது.


அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நடைபெறும் ஊழல் இதற்கு முக்கியக் காரணமாகும். புதிய பேருந்துகள் வாங்குவதிலும், டயர்கள் மற்றும் உதிரி பாகங்கள் வாங்குவதிலும் பெரும் ஊழல் நடைபெறுகிறது. அரசுக்கு வேண்டாத ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை போக்குவரத்துக் கழகங்களின் தலைவர்களாக நியமிக்கும் போக்கு நீடிக்கிறது. இந்த அதிகாரிகள் ஆட்சி நிருவாகத்திற்கும், காவல் நிருவாகத்திற்கும் பயிற்சி பெற்றவர்கள். இவர்கள் பெற்ற பயிற்சிக்கும் போக்குவரத்துத் துறைக்கும் எள் முனை அளவு கூட தொடர்பு இல்லை. இத்தகையவர்களால் எப்படித் திறம்பட செயல்பட முடியும்?


போக்குவரத்துக் கழகங்களின் இழப்பிற்கு மத்திய அரசின் போக்கு மற்றொரு காரணமாகும். மாநில அரசு நடத்தும் போக்குவரத்துக் கழகங்களுக்கு மத்திய அரசு வருமான வரி உள்பட பல்வேறு வரிகளை விதிக்கிறது. இதை எதிர்த்து ஆந்திர மாநில அரசு வழக்குத் தொடுத்தபோது உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு மத்திய அரசிற்குச் சாதகமாக அமைந்துவிட்டது. தொழில், வணிகம் ஆகியவற்றிற்கு வரி விதிக்கும் அதிகாரம் மத்திய அரசிற்கு உண்டு என அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டிருப்பதின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மக்களுக்குப் போக்குவரத்து வசதிகளை குறைந்த செலவில் செய்து கொடுப்பதற்காகவும், தனியாரின் சுரண்டலை தடுப்பதற்காகவும், பேருந்து போக்குவரத்தை மாநில அரசுகள் நடத்த முன்வந்ததை மத்திய அரசு பாராட்டி அவற்றை ஊக்குவிக்கும் வகையில் வருமான வரி மற்றும் வரிகளை தள்ளுபடி செய்ய முன்வந்திருக்க வேண்டும். ஆனால், தனியார் நிறுவனங்களுக்கு வரி விதிப்பதைப் போல மாநில அரசின் நிறுவனங்களுக்கு வரி விதிப்பது எந்த வகையிலும் நீதியானது அல்ல.


போக்குவரத்துக் கழகங்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றிற்கு மத்திய அரசு சுங்க வரிகளை அதிகமான அளவிற்கு விதிக்கிறது. இந்த வரிகளை தள்ளுபடி செய்து சலுகை விலையில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை அளிப்பதற்கு மத்திய அரசு பிடிவாதமாக மறுக்கிறது. இந்தியாவில் கிடைக்கும் பெட்ரோலியப் பொருட்களில் 60% வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. 40% மட்டுமே உள்நாட்டில் கிடைக்கிறது. உள்நாட்டில் கிடைக்கும் 40% கச்சா எண்ணெயிலிருந்து கிடைக்கும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றையாவது மாநிலப் போக்குவரத்துக் கழகங்களுக்கு சலுகை விலையில் மத்திய அரசு கொடுத்தால் இழப்பைக் குறைக்க முடியும்.


இந்தியாவில் உற்பத்தியாகும் சர்க்கரையில் 10% தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது. இதில் பெரும்பகுதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், பொது வழங்கல் திட்டத்திற்காக மானிய விலையில் கணிசமான அளவு சர்க்கரையை மத்திய அரசு கட்டாயப்படுத்திப் பெற்றுக்கொள்கிறது. அதைப்போலவே சிமெண்ட் உற்பத்தியில் தமிழ்நாடு தேசிய அளவில் நான்காம் இடத்தில் உள்ளது. மத்திய அரசு தனது தேவைக்கான சிமெண்டை மானிய விலையில் பெற்றுக்கொள்கிறது. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரை, சிமெண்ட் ஆகியவற்றை மானிய விலையில் பெற்றுக்கொள்ளும் மத்திய அரசு, அதே சலுகையை மாநில அரசிற்கு பெட்ரோல், டீசல் வழங்குவதில் அளிக்க மறுக்கிறது.
இந்திய அரசியல் சட்டத்தின் 269-ஆவது பிரிவின்படி தொடர்வண்டிப் பயணிகள் கட்டண வரிச் சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டம் 1947-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி இந்த வரியை விதிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகள் பெற்றிருந்தன. 1961-ஆம் ஆண்டில் இந்த சட்டம் முழுமையாக நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக இந்த வரி தொடர்வண்டி பயண அடிப்படை கட்டணங்களோடு இணைக்கப்பட்டுவிட்டது.


ஆனால், இதற்கு ஈடான மானியம் மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. 1958-1960 ஆகிய இரண்டாண்டுகளில் மாநிலங்களுக்கு கிடைத்த பங்கின் அடிப்படையில் இந்த மானியம் வழங்கப்படும் என மத்திய அரசு கூறியது. ஆனால், அதற்குப் பிறகு தொடர்வண்டிக் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுவிட்டன. அதற்கு ஈடான மானியத்தை மத்திய அரசு வழங்க மறுக்கிறது. 1965-ஆம் ஆண்டிற்குப் பிறகு, மாநிலங்களுக்கு வழங்கப்படும் இந்த மானியத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.


பயணிகள் வருகையின்போது ஒவ்வொரு ஊரிலும், நகரத்திலும் அவர்களுக்குத் தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதிகள் போன்றவற்றை செய்ய வேண்டியப் பொறுப்பு மாநில அரசுகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உரியது. ஆனால், இதற்கான வரியை மத்திய அரசு திரட்டிக்கொள்கிறது. செலவை மட்டும் மாநிலங்களின் மீது சுமத்துகிறது.
மாநில அரசுகளுக்குச் சொந்தமான போக்குவரத்துக் கழகங்கள் செவ்வனே இயங்க வேண்டும் என்றால் மத்திய அரசின் உதவியும் இருக்க வேண்டும். வருமான வரி தள்ளுபடி, பெட்ரோல், டீசலுக்கான சுங்க வரி தள்ளுபடி போன்றவற்றை மத்திய அரசு அளிக்க முன்வர வேண்டும். மாநிலப் போக்குவரத்துக் கழகங்களில் ஊழலை முழுமையாக ஒழிப்பதற்கு அவற்றின் நிருவாக கட்டமைப்பை அடியோடு திருத்தியமைக்க வேண்டும். 


வாகனத் தொழில்நுட்ப அறிவுபெற்றவர்களை பொறுப்பான பதவிகளில் நியமிப்பதோடு, நிருவாகத்தில் தொழிலாளர்களுக்கும் பங்களிக்க வேண்டும். அப்போதுதான் தேசியமயமாக்கப்பட்ட பேருந்து போக்குவரத்துக் கழகங்கள் உண்மையில் மக்களுக்கு சிறந்த வகையில் தொண்டாற்ற முடியும்.

வங்கிகளும் பீதி செய்திகளும்!

By  எஸ்.ராமன்  |   Published on : 02nd January 2018 02:50 AM  |

வாராக்கடன்களின் சுமையால் சோர்ந்து போயிருந்த வங்கி துறைக்கு புத்துணர்வு அளிக்கும் விதமாக, மறு முதலீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டு சில வாரங்கள் கூட முடியவில்லை. அதற்குள், நலிவுறும் வங்கிகளின் விதியை நிர்ணயிக்கும் நோக்கத்தில் புனையப்பட்ட "நிதி தீர்வு மற்றும் வைப்புத் தொகைக்கான காப்பீட்டுச் சட்ட மசோதா'வின் வரைவில், வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகை சம்பந்தமான எதிர்மறை குறிப்பு பகுதிகள் வெளியாகி, அனைத்து தரப்பினரிடமிருந்தும் பல்வேறு மாறுபட்ட கருத்துகளை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. வங்கிகள் மட்டுமின்றி, காப்பீட்டு நிறுவனங்கள், மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற நிதி நிறுவனங்களும் இந்த மசோதோவின் வரம்புக்குள் அடங்கும்.

 ரூ.115 லட்சம் கோடி அளவிலான வங்கி டெபாசிட்டுகளின் பெரும்பகுதி, நடுத்தர மக்களின் பங்களிப்பாகும். அந்த டெபாசிட் தொகைதான் சிறு தொழில் முதல் பெரிய நிறுவனங்கள் வரை கடன் வழங்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. கல்வி, திருமணம், சொத்துகள் வாங்குதல், மருத்துவம், முதுமைக் காலம் போன்ற பல தேவைகளுக்காக சேமிக்கப்படும் வைப்புத் தொகையை அதன் முதிர்வு காலத்தில், வங்கி நிர்வாகத்தின் எந்த தலையீடுமின்றி, சுதந்திரமாக எடுத்து செலவழிக்கத்தான் ஒவ்வொரு வாடிக்கையாளரும் விரும்புவார். அந்த எதிர்பார்ப்புக்கு எதிர்மறையான எந்த நடவடிக்கையும், வங்கி வாடிக்கையாளரின் நம்பிக்கையை பாதித்துவிடும் வாய்ப்புகள் உள்ளன.


 உயர் பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. போன்ற மத்திய அரசின் பொருளாதாரக் கணைகளின் தாக்கத்திலிருந்து மெதுவாக மீண்டு வந்து கொண்டிருக்கும் நடுத்தர மக்களுக்கு, வங்கி வைப்புத் தொகை சார்ந்த எதிர்மறை செய்திகள், புதிய வகையான பீதியை உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை.


 வழக்கமான "பெயில்-அவுட்' முறையைப் பின்பற்றாமல், திவால் நிலைக்குத் தள்ளப்படும் வங்கிகளின் விதியை கையாள "பெயில்-இன்' என்ற மாறுபட்ட முறை இந்த வரைவில் குறிப்பிடப்பட்டிருப்பதுதான் அனைத்து விவாதங்கள் மற்றும் சந்தேகங்களுக்கும் வித்திட்டிருக்கிறது. இது மேற்கத்திய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு மாறுபட்ட வழிமுறையாகும்.


 2008-ஆம் ஆண்டு அமெரிக்கா சந்தித்த பொருளாதார வீழ்ச்சி என்கிற சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டு திவாலான 400-க்கும் மேற்பட்ட வங்கிகளை அரசால் காப்பாற்ற முடியாமல் போன பிறகு, பிறந்த புதிய பொறுப்பு துறப்பு சித்தாந்தம்தான் "பெயில்-இன்' முறையாகும். திவால் நிலையில் தவிக்கும் வங்கிகளுக்கு போதிய நிதி ஆதாரத்தை வழங்கி அரசு காப்பாற்றினால் அது பெயில்-அவுட் முறையாகும்.


 பெயில்-இன் முறையில், நலிந்த வங்கிகள், தங்கள் நோய்க்கு சுயமாக மருந்து கண்டுபிடித்து, வாழ்வா அல்லது சாவா என்ற தங்கள் விதியை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளவேண்டும். அந்த விதி நிர்ணயப் போராட்டத்தில், வாடிக்கையாளர்களின் வைப்பு நிதி பலியாகும் அபாயம் காத்திருக்கிறது. தங்கள் நிர்வாக சீர்கேட்டினால் நலிவுறும் வங்கிகள், ஒரு தவறும் செய்யாத டெபாசிட்தாரர்களின் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடிப்பது அல்லது தப்பிப்பது இந்த முறையில் சாத்தியமாகும்.


 மேற்கண்ட புதிய சித்தாந்தம் அமெரிக்காவிலிருந்து ஜி-7 நாடுகளுக்குப் பரவி, இந்தியா போன்ற ஜி-20 நாடுகளுக்குள்ளும் கசிந்ததன் விளைவுதான் இந்த வரைவு மசோதாவில் அடங்கியிருக்கும் குறிப்புகளாகும்.


 மறு முதலீட்டு திட்டம் போன்ற ஆதரவு திட்டங்கள் மூலம் நலிவுற்றிருக்கும் அரசு வங்கிகளை காப்பாற்றும் நடவடிக்கைகளின் இனிய ஸ்வரங்கள் ஒருபுறம் ஒலித்துக்கொண்டிருக்க, மறுபுறம், அதற்கு எதிர்மறையான முறைகளை உள்ளடக்கிய திட்டங்களைப் பற்றிய அபஸ்வரங்கள் வெளியானது சற்று முரண்பாடுதான்.


 இந்த மசோதாவின்படி, நலிவுறும் வங்கிகளை, நிதி ஆதாரங்கள் மூலம் அரசு காப்பாற்றாது; அதற்கு பதிலாக, அந்த வங்கியின் விதியை புதிதாக அமைக்கப்படவுள்ள தீர்வுக் கழகம் நிர்ணயிக்கும். முற்றிலும் திவால், நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைப்பது போன்ற முக்கிய முடிவுகள் தீர்வுக் கழகத்தின் அதிகார வரம்புக்குள் கொண்டு வரப்படும். வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகையில் ஒரு பங்கு திருப்பித் தரப்படலாம். பெரும்பங்கு, பங்குகளாக அல்லது கடன் பத்திரங்களாக மாற்றப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
 இம்மாதிரி மாற்று யோசனைகள், வங்கி வியாபாரத்தின் ஆணிவேரான வாடிக்கையாளரின் நம்பிக்கையைச் சிதைத்து விடும் வல்லமை படைத்தவை என்று வாதிடப்படுகிறது.
 இந்திய வங்கி வரலாற்றில், கடந்த 40 ஆண்டுகளில் வங்கிகள் திவாலாகி, அதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் டெபாசிட் தொகையை இழந்ததாக சரித்திரம் இல்லை. உண்மையில், டெபாசிட்தாரர்களை காப்பாற்றுவதற்காகவே, பாங்க் ஆஃப் தஞ்சாவூர், பாங்க் ஆஃப் தமிழ்நாடு, பாங்க் ஆஃப் கொச்சின், குளோபல் டிரஸ்ட் பாங்க் போன்ற நலிவுற்ற வங்கிகள் மற்ற வங்கிகளோடு இணைக்கப்பட்டன. இம்மாதிரி பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தவிர, டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் மூலம் ஒவ்வொரு வங்கி டெபாசிட்டுக்கும் ஒரு லட்சம் ரூபாய் வரை காப்பீட்டு பாதுகாப்பும் நடமுறையில் உள்ளது. ஆனால், இந்த காப்பீட்டு நிறுவனம் இதுவரை, 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவிளான ப்ரீமியம் வருமானத்தை மட்டும்தான் ஈட்டியிருக்கிறதே தவிர, இழப்பீட்டு தொகைக்கான விண்ணப்பங்களைச் சந்தித்தது இல்லை.


 மேலும், சமீப காலங்களில் வெளியாகும் உடனடித் திருத்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் வங்கிகள் பற்றிய செய்திகளும் வங்கி வாடிக்கையாளர்களை பீதியில் ஆழ்த்துகின்றன. இந்திய வங்கித் துறைக்கு இந்த நடைமுறை புதிது அல்ல. ஒரு வங்கியின் வியாபாரச் செயல்பாடுகள் அபாய கட்டத்திற்குள் நுழைவதற்கு முன்பாகவே, ரிசர்வ் வங்கி, அதற்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் கீழ், சம்பந்தப்பட்ட வங்கிக்கு, அதன் குறைபாடுகளை நீக்கும் வண்ணம், நுண்ணிய ஆலோசனைகளை வழங்குகிறது. புதிய கடன் வழங்குதல் மற்றும் செலவுக் கட்டுப்பாடுகள், வாராக்கடன் வசூலை வேகப்படுத்துதல் போன்ற ஆலோசனை நடவடிக்கைகள் இதில் அடங்கும்.


 சமீப காலங்களில், சுமார் 10 அரசு வங்கிகள் இந்த நடவடிக்கையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இது வங்கிகளையும் அதன் வாடிக்கையாளர்களையும் பாதுகாக்கும் திட்டம்தானே தவிர, சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு மூடு விழா கொண்டாடும் திட்டம் இல்லை என்பதை வங்கி வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்ளவேண்டியது அவசியமாகும். அந்த புரிதல்தான், தேவையற்ற பீதியைக் களைய உதவும்.


 வாராக்கடன்களின் வரலாறு காணாத வளர்ச்சிதான் வாடிக்கையாளர்களின் பீதிக்கு வித்திடும் இம்மாதிரி பல நிகழ்வுகளுக்கு காரணமாக அமைகின்றன. தங்களுக்கு ஒதுக்கப்படிருக்கும் சமூக கடமைகளைத் தவிர்த்து, மற்ற விஷயங்களில் அரசு வங்கிகள், முற்றிலும் வியாபார நோக்குடன்தான் செயல்பட வேண்டும்.
 ஆனால், வங்கி நிர்வாகங்கள் பல்வேறு காரணங்களினால், தங்கள் அன்றாடச் செயல்பாடுகளில் அரசியல் தலையீடுகளைத் தவிர்க்க முடிவதில்லை என்பதுதான் உண்மை நிலைமை ஆகும்.


 இதற்கான காரணத்தின் ஒரு பகுதி, அரசியல்வாதிகள் மூலம் தங்கள் பணி மேம்பாட்டை மேம்படுத்த துடிக்கும் சில உயர்நிலை வங்கி அதிகாரிகளைச் சாரும். கடன் வழங்கும் முறையில் நுழையும் அரசியல் தலையீடுகளைப் பற்றி, வங்கிகள், வங்கி கூட்டமைப்பின் தலைமைக்கு ரகசிய அறிக்கை அனுப்பும் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
 சுமார் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது கூடும் வங்கி நிர்வாக இயக்குநர் குழுக்கள், வங்கியின் வருவாயை உலுக்கும் பல்வேறு செயல்பாடுகளை அலசி ஆராய்ந்து, குறைபாடுகளைக் களைவதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும். அதற்கு, இயக்குநர் குழுவினரின் வங்கி சார்ந்த நிபுணத்துவம் மிக அவசியம். அம்மாதிரி நிபுணத்துவத்தை மேம்படுத்தும் விதமாக தற்போதைய வங்கி இயக்குநர் குழுக்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வங்கியின் இயக்குநர் குழுவில் அங்கம் வகிக்கும் ரிசர்வ் வங்கியின் பிரதிநிதி, வெறும் பார்வையாளராக மட்டும் செயல்படுவதைத் தவிர்த்து, ரிசர்வ் வங்கியின் பொருளாதார தூதுவராக இயங்க வேண்டும்.


 கடன் வழங்குதல், வழங்கிய கடன்களின் நிர்வாகம், கடன் வசூல் ஆகியவற்றில் வங்கிப் பணியாளர்களின் திறன் உடனடியாக பல மடங்கு உயர்த்தப்பட வேண்டியது மிக அவசியம். மக்களின் வரிப்பணம் வாராக்கடன்கள் மூலமாக வீணடிக்கப்படுவதை தவிர்க்கும் பொறுப்புணர்வோடு வங்கி அதிகாரிகள் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
 அரசு வங்கிகளின் தற்போதைய பொருளாதார நிலைமையை மேம்படுத்த நிதி ஆதாரத்துடன், அரசியல் தலையீடுகளுக்கு அடிபணியாத, நாட்டு நலனில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செயல்படக்கூடிய, திறமையான அதிகார வர்க்கம் தேவை.


 தற்போதைய கருத்து கணிப்புப்படி, பல அரசு வங்கிகள் முடக்க நிலையில்தான் உள்ளன. இந்த முடக்க நிலைமையை அப்படியே நீடிக்கவிட முடியாது. அரசு வங்கிகள் திவால் ஆனால், அரசே திவால் ஆனது போல்தான் என்பதால், நலிவுற்ற வங்கிகளை வங்கி இணைப்புகள் மூலம் காப்பாற்றும் நடவடிக்கை இந்த சூழலில் வங்கித் துறைக்கு அருமருந்தாகக் கருதப்படுகிறது.
 நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் அரசு வங்கிகள் திவாலாகும் பேச்சுக்கே இடமில்லை. ஆகவே, புதிய மசோதாவினால், அரசு வங்கிகளில் சேமிக்கப்பட்டிருக்கும் தங்கள் வைப்புத்தொகை பறிபோய்விடும் என்ற வாடிக்கையாளர்களின் அச்சம் தேவையற்றது என்று உறுதியாகச் சொல்லலாம்.
 அவசியமற்ற அச்சங்களைத் தவிர்த்து, பல அரசு நிதி திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் அரசு வங்கிகள் விரைவில் தற்போதைய நிலைமையிலிருந்து மீண்டு எழுந்து, புத்துணர்ச்சியுடன் செயல்பட வேண்டும் என்ற நம் அனைவரது நல்வாழ்த்துகளை இங்கு பதிவு செய்வோம்.
ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்களின் பயண அட்டை ரத்து

By DIN | Published on : 03rd January 2018 04:41 AM |

ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பயண அட்டை ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னையில் செவ்வாய்க்கிழமை தெற்கு ரயில்வே கோட்ட பாதுகாப்பு ஆணையர் லூயிஸ் அமுதன் கூறியது :


சென்னை புறநகர் உள்ளிட்ட ரயில்களில் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்பான புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அவர்களின் முகங்களை விடியோ எடுத்து அதை பயண அட்டை புகைப் படத்துடன் ஒப்பிட்டு ரயில்வே பாதுகாப்புப் படை நடவடிக்கை எடுத்து வருகிறது. 


இனி வருங்காலங்களில் ரயில் படிக்கட்டுகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணித்தால் அவர்களின் பயண அட்டை ரத்து செய்யப்படும். காஞ்சிபுரம், திருவள்ளூரைத் தொடர்ந்து தற்போது சென்னையிலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
ராமேஸ்வரத்தில் ரூ.500க்கு தரிசனம் - கூடுதல் விலையில் புண்ணிய தீர்த்தம் : நீராடல் முதல் தரிசனம் வரை முறைகேடு

Added : ஜன 03, 2018 04:48

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் அதிகாரிகள் ஆசியுடன் உலா வரும் வெளிநபர்கள் சிறப்பு தரிசனத்திற்கு ரூ.500ம், தீர்த்த பாட்டில் கூடுதல் விலைக்கு விற்பதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தத்திலும் நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். ஆனால் இங்குள்ள சிலர் அடாவடி வசூலால், பக்தர்கள் மனவேதனையில் செல்கின்றனர். கோயிலுக்கு தினமும் 50 ஆயிரம் வரை பக்தர்கள் வருவதால், நெரிசலை தவிர்க்க சிறப்பு தரிசனம் (ஒரு நபருக்கு ரூபாய் 50) வழியாக செல்ல பக்தர்கள் காத்திருப்பர்.

அதிகாரிகள் கவனிப்பு? : இதனை பயன்படுத்தி கோயிலுக்குள் உலா வரும் வெளிநபர்கள், பக்தர்களிடம் ரூபாய் 300 முதல் 500 வரை வசூலித்து, அதிகாரிகளை கவனித்த(!) பிறகு 'முக்கிய கதவு' வழியாக பக்தர்களை அழைத்து செல்கின்றனர். இதனால் 50 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் கடும் மன வேதனையடைகின்றனர்.

வெளிநபர்கள் அடாவடி : இதுதவிர பஞ்சமிர்தம், ருத்ரா அபிேஷக பூஜைக்கு ரூபாய் 1,500க்கு டிக்கெட் இருந்தாலும், டிக்கெட் இன்றி பக்தர்களை சிறப்பு பூஜையில் பங்கேற்க வைத்து, அவர்களிடம் ரூபாய் 3 முதல் 5 ஆயிரம் வரை வசூலிக்கின்றனர். மேலும் கோயிலுக்குள் ஒரு நாளைக்கு 3 முதல் 5 ஆயிரம் வரை விற்கும் கோடி தீர்த்த பாட்டில், ரூபாய் 20 க்கு விற்க வேண்டும். ஆனால் விலை பட்டியல் பலகையை கவிழ்த்து வைத்து கூடுதலாக விற்கின்றனர்.இதற்கு கோயில் அதிகாரிகள் சிலரின் ஆசியுள்ளதால் நாளுக்கு நாள் வெளி நபர்களின் அடாவடி அதிகரித்து கொண்டே வருகிறது.

கூடுதல் வசூல் : மேலும் கோயிலுக்குள் புனித நீராட ஒரு நபர் ரூபாய் 25க்கு டிக்கெட் வாங்க வேண்டும். ஆனால், தீர்த்தம் ஊற்றும் பணியாளர்கள் கோயில் வாசல் முன் நின்று
பக்தரிடம் ரூபாய் 100 முதல் 300 வரை பேரம் பேசி (கூட்ட நெரிசல் அதிகமுள்ள நாளில் இதை விட கூடுதலாக வசூலிப்பது), குறுக்கு வழியில் நீராட அழைத்து சென்று வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி துணை தலைவர் சரவணன் கூறியதாவது: கோயில் அதிகாரி ஒருவரின் ஆசியுடன் கோயிலுக்குள் உலா வரும் வெளிநபர்கள் பக்தரிடம் தரிசனத்திற்கு ரூபாய் 300 முதல் 500 வசூலித்தும், நீராடும் பக்தரிடம் ரூபாய் 25ஐ விட தீர்த்தம் ஊற்றும் பணியாளர்கள் கூடுதலாக 200 வரை வசூலிக்கின்றனர். கோடி தீர்த்தம் ஒருபாட்டிலுக்கு கூடுதலாக ரூபாய் 10 விற்கின்றனர். முறைகேடுகளுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதால் வெளிநபர்கள் அடாவடி வசூலை தடுக்க முடியவில்லை. முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரி, ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்துவோம், என்றார்.

கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி கூறுகையில், ''கோயிலுக்குள் சுற்றி திரியும் வெளிநபர்கள் யார் என கண்டுபிடித்து அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் விலைக்கு தீர்த்த பாட்டில் விற்பதாக பக்தர்கள் ஒருவர் கூட புகார் கொடுக்கவில்லை. இருப்பினும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
அரசு மருத்துவமனையில், 'ஆப்பரேஷன்'; அரியலூர் பெண் கலெக்டர் அசத்தல்

Added : ஜன 03, 2018 01:34 | 



பெரம்பலுார் : அரியலுார் பெண் கலெக்டர், அரசு மருத்துவமனையில், குடல்வால் ஆப்பரேஷன் செய்து கொண்டார்.

அரியலுார் மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா, 38. இவர், 2017, ஜூலை, 12ல் பொறுப்பேற்றது முதலே, மக்கள் நலனில், அக்கறையுடன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சில நாட்களாக, இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை, 6:00 மணியளவில், கலெக்டருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.

தொடர்ந்து, குடும்பத்தாரிடம், அரியலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூற, அவர்களும் அழைத்துச் சென்றனர். கலெக்டரை பரிசோதித்த டாக்டர்கள், குடல் வால் வளர்ந்துள்ளதால், உடனடியாக ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என தெரிவித்தனர். அங்கேயே, ஆப்பரேஷன் செய்யுமாறு கலெக்டர் கேட்டுக் கொண்டார்.

நேற்று முன்தினம் இரவு, முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர், கலெக்டருக்கு ஆப்பரேஷன் செய்தனர். ஆப்பரேஷனுக்கு பின், அங்கேயே உள்நோயாளியாக தங்கி, சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது, நலமுடன் உள்ளார்.

கலெக்டராக உள்ளவர், தனியார் மருத்துவமனைகளை தவிர்த்து, அரசு மருத்துவமனையில் ஆப்பரேஷன் செய்து, சிகிச்சை பெற்று வருவதை அறிந்த பொதுமக்கள், அவரை நேரில் பார்த்து பாராட்டி, நலம் பெற வாழ்த்தினர்.
வக்கீல் கொலை: 6 பேர் கைது : கள்ளக்குறிச்சி அருகே பதற்றம்

Added : ஜன 03, 2018 01:23

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், வக்கீலை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம், பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலை கும்பலை சேர்ந்த, ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனுாரைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் நாராயணன்,42; வக்கீல். இவரது மனைவி வெண்ணிலா, 38; இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஜெயபிரகாஷ் நாராயணன், கள்ளக்குறிச்சியில் இருந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:30 மணிக்கு, ராயல் என்பீல்டு புல்லட்டில், தென்கீரனுாருக்கு சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து, இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல், ஜெயபிரகாஷ் நாராயணனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தப்பிச் சென்றது.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் உடலை கைப்பற்றி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெயபிரகாஷ் நாராயணனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த, கிருஷ்ணனுக்கும்,40, கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது, முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. 


மேலும், ஜெயபிரகாஷ் நாராயணன், கடந்த சில மாதங்களுக்கு முன், தன் நிலத்திற்கு, ஏரியிலிருந்து வண்டல் எடுத்தபோது, முறைகேடாக மண் எடுப்பதாக கிருஷ்ணன், அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தார். இதனால், விரோதம் அதிகமானது.
இந்நிலையில்,சீனுவாசன் என்பருடன், கிருஷ்ணனுக்கு தகராறு ஏற்பட்டது.
அதில் ஜெயபிரகாஷ் நாராயணன், சீனுவாசனுக்கு ஆதரவாக வழக்கு தொடர்ந்ததை அடுத்து, கிருஷ்ணனும், அவரது சகோதரரும் சிறை சென்றுள்ளனர்.
ஜெயபிரகாஷ் நாராயணன் தனக்கு எதிராக செயல்பட்டு வருவதாக கருதிய கிருஷ்ணன், அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.


நேற்று முன்தினம் நள்ளிரவு, கிருஷ்ணனும், அவரது சகோதரர் வேலு, 43, மற்றும் 25 - 35 வயதுடைய நான்கு பேர் சேர்ந்து கொலை செய்தது, போலீஸ் விசாரணையில், தெரிய வந்தது.
இதனால், ஆத்திரமடைந்த, ஜெயபிரகாஷ் நாராயணனின் உறவினர்கள், தென்கீரனுாரில் உள்ள கிருஷ்ணனின் வீட்டை தீ வைத்து கொளுத்தினர்.
கள்ளக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர்.
இக்கொலையில், தொடர்புடைய கிருஷ்ணன் உட்பட, ஆறு பேரையும் போலீசார் கைது செய்தனர். கொலையில் கூலிப்படையினருக்கு தொடர்புள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தென்கீரனுாரில் பதற்றத்தை தணிக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பொங்கல் சிறப்பு பஸ்கள் இன்று அறிவிப்பு

Added : ஜன 03, 2018 01:01

சென்னை: பொங்கல் சிறப்பு பஸ்கள், முன்பதிவு மையங்கள் குறித்த அறிவிப்பு, இன்று வெளியாகிறது. தமிழர் பண்டிகையான பொங்கல், வரும், 14ல் கொண்டாடப்படுகிறது. சென்னை உள்ளிட்ட மாவட்ட தலைநகரங்களில் இருந்து, வெளியூர் செல்லும் பஸ்களில், 90 சதவீத முன்பதிவு முடிந்து விட்டது. மாநிலத்தின் பல நகரங்களில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு செல்வோர், சிறப்பு பஸ்களுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், சென்னை, பல்லவன் இல்லத்தில், இன்று மாலை நடக்கும் ஆலோசனை கூட்டத்திற்கு பின், சிறப்பு பஸ்கள், முன்பதிவு மையங்கள் குறித்து, போக்குவரத்து துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிக்க உள்ளார்.
சித்தா டாக்டர்கள் 100 பேர் நியமனம்

Added : ஜன 03, 2018 00:43

சென்னை: புதிதாக தேர்வு செய்யப்பட்ட, 100 சித்தா டாக்டர்கள் உட்பட, 105 பேருக்கு, பணி நியமன ஆணைகளை, முதல்வர் பழனிசாமி வழங்கினார். அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற, சித்தாவில், 100 பேர்; ஆயுர்வேதத்தில், ஒருவர்; ஓமியோபதியில், நான்கு பேர் என, 105 உதவி மருத்துவ அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கான, பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில் உள்ள முதல்வரின், முகாம் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

முதல்வர் பழனிசாமி, 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது:
காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில், 105 மருத்துவர்களுக்கு, பணி ஆணை வழங்கப்படுகிறது. தமிழகத்தில், பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சை, முறையாக தரப்படுகிறது. நாட்டிலேயே, சுகாதாரத்தில், தமிழகம் முதலிடம் வகிக்கிறது. பணியாணை பெறுகின்ற, அனைத்து மருத்துவர்களும், சிறந்த முறையில் பணியாற்றி, மக்கள் சேவை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலர் கூடுதல் பொறுப்பு, சண்முகம், சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நஷ்டத்தில் இயங்கும் கிளைகளுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி, 'நோட்டீஸ்'

Added : ஜன 03, 2018 01:20


புதுடில்லி: நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத் துறை நிறுவனமான, பஞ்சாப் நேஷனல் வங்கி, நடப்பு ஆண்டில், நஷ்டத்தில் இயங்கும், 300 கிளைகளை மூட திட்டமிட்டுள்ளது.
கடந்த மாதம், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பொதுத் துறை வங்கி தலைவர்களுடன் நடத்திய கூட்டத்தில், வங்கிகளை லாபகர மாக மாற்றுவது குறித்து விவாதித்தார்.
அப்போது, வங்கித் துறையில், செலவினங்களை கட்டுப்படுத்துவதற்கு, பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.


அதிலொரு முடிவாக, நஷ்டத்தில் இயங்கும், 300 கிளைகள் கண்டறியப்பட்டு, அவற்றை மூட, பஞ்சாப் நேஷனல் வங்கி முடிவு செய்துள்ளது.


இது குறித்து, அந்த வங்கியின் நிர்வாக இயக்குனர், சுனில் மேத்தா கூறியதாவது:
நாடு முழுவதும், பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு, 7,000 கிளைகள் உள்ளன. அவற்றில், நஷ்டத்தில் இயங்கும், 300 வங்கிக் கிளைகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுஉள்ளது.
நடப்பு ஆண்டிற்குள், வங்கியை லாபகரமானதாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும். 


ஓராண்டிற்குப் பின்னரும் நஷ்டத்தில் இயங்கினால், அந்த வங்கிகளை மூட அல்லது மற்ற கிளைகளுடன் இணைப்பது அல்லது வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து முடிவு செய்யப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.



ரூ.2,000 கள்ள நோட்டு  வங்கிகளில் ஊடுருவலா?
 
வங்கிகளுக்கு நேரடியாக சென்று வாங்கும், 2,௦௦௦ ரூபாய் நோட்டுகளில், கள்ள நோட்டு கலந்திருப்பது, வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரூ.2000,கள்ள நோட்டு,வங்கி,ஊடுருவலா?

வங்கி ஏ.டி.எம்.,களில், கள்ள நோட்டு கலந்து வருவது வாடிக்கையாகி விட்டது. சமீப காலமாக, வங்கிக் கிளைகளில், நேரடியாக பணம் எடுப்போருக்கும், கள்ள நோட்டு கிடைப்பது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக, 2,000 ரூபாய் நோட்டுகள் தான், இப்படி கலந்து வருகின்றன. அவற்றை

திருப்பிக் கொடுத்தால், அதை அந்த கிளையிலேயே மாற்றித் தர மறுக்கின்றனர். அத்துடன், காவல் நிலையத்திலும் புகார் தருவர். தங்கள் சேமிப்பில் இருந்த பணத்தை இழந்தது மட்டுமின்றி, காவல் நிலையத்திற்கும் அலைய வேண்டியுள்ளதால், மக்கள் அவதிப்படுகின்றனர்.

சமீபத்தில், சென்னையில், தேசியமய வங்கி வாடிக்கையாளர் ஒருவருக்கு, அதன் கிளையில் தரப்பட்ட பணத்தில், 2,000 ரூபாய் கள்ள நோட்டு வந்தது. வங்கி ஊழியர்கள், சிரத்தையாக இருந்திருந்தால், அந்த நோட்டு, கிளைக்குள் வந்திருக்காது என, அவரை போல் ஏமாந்தவர்கள், புகார் கூறுகின்றனர்.

இது குறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொதுச் செயலர், வெங்கடாசலம் கூறியதாவது: வங்கி ஊழியர்கள், கள்ள நோட்டுகள் சரிபார்க்கும் இயந்திரத்தில், சோதித்து பார்த்த பிறகே, அவற்றை வாங்க வேண்டும். எனினும், தமிழகத்தில் உள்ள, 16

ஆயிரம் கிளைகளில், பல கிளைகளில், அந்த கருவிகள் இல்லை. அவற்றை, அரசு வழங்க வேண்டும்.

மேலும், வரிசையில் நிற்கும் வாடிக்கையாளர்களும் பொறுமை காப்பதில்லை; அவசரப்படுத்துவதால், ஊழியர்கள், கள்ள நோட்டை வாங்க நேரிடுகிறது. இருப்பினும், வங்கி ஊழியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -


எனக்கே தெரியாது,கட்சி,பெயர்,சின்னம்,நடிகர்,Rajini,Rajinikanth,ரஜினி,ரஜினிகாந்த்,பளிச்அரசியலில் குதித்துள்ள, நடிகர் ரஜினி, தன் கட்சியின் பெயர், சின்னம் குறித்து, தனக்கு எதுவும் தெரியாது; போக போக தெரியும் என, நேற்று காலையில், சினிமா பாணியில் தெரிவித்தார். மாலையில், 'கட்சி கொடி தயாரிக்கும் பணி நடக்கிறது. பெயர், சின்னம் பற்றி விரைவில் அறிவிப்பேன்' என, பதில் அளித்தார். அதோடு, 'ஆன்மிக அரசியல்' குறித்தும் விரிவான விளக்கம் அளித்தார். தன் அரசியல் பிரவேசத்தை, உலகறிய செய்ததற்காக, பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், தொடர்ந்து ஆதரவு தரவும், வேண்டுகோள் விடுத்தார்.



நடிகர் ரஜினியின், அரசியல் பிரவேசம், அவரது ரசிகர்களிடம் உற்சாகத்தையும், அரசியல் கட்சிகளிடம் கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அதையடுத்து, அவர், அடுத்த கட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

தன் ரசிகர்களையும், பொது மக்களையும் ஒருங்கிணைப்பதற்காக, ரசிகர் மன்றம் பெயரில், இணைய தளம் மற்றும், 'மொபைல் ஆப்' உருவாக்கி உள்ளார்.அதைத் தொடர்ந்து, மன்றத்தில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி வேகம் பெற்றுள்ளது. அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும், ஆர்வமுடன் உறுப்பினராகி வருகின்றனர்.

நேற்று காலையில், சென்னை, போயஸ் கார்டனில் உள்ள வீட்டின் முன், நிருபர்களிடம் பேசிய ரஜினி, ''என் கட்சி பெயர், சின்னம் குறித்து எனக்கே தெரியாது; போக போக தான் தெரியும்,'' என்றார்.

கொடி தயாரிப்பு :

'ஆன்மிக அரசியல்' கடுமையாக விமர்சிக்கப்படுவது குறித்து கேட்ட போது, 'உண்மையான, நேர்மையான, நாணயமான, ஜாதி, மதச் சார்பற்ற அரசியலே, ஆன்மிக அரசியல்' என, பதில் அளித்தார். சென்னையில், நேற்று மாலை, பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, 'கட்சி பெயர், சின்னம், கொடி தயாரிப்பு பணி நடந்து வருகிறது' என்றார்.

சென்னையில் ரசிகர்களை சந்தித்து, புகைப்படம் எடுத்துக் கொண்டது போல், பத்திரிகையாளர்களை சந்தித்து, தனித்தனியே பேசி, புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அப்போது, அவர் பேசியதாவது: சென்னையில், ஆறு நாட்களாக, ரசிகர்களை சந்தித்து பேசிய விபரங்களை, உலகமறிய செய்த பத்திரிகைகளுக்கு நன்றி. நானும் சிறு வயதில், பத்திரிகையில் பிழை திருத்துபவராக பணியாற்றி உள்ளேன். நண்பர் ராமசந்திர ராவ், என்னை கன்னட தினசரி பத்திரிகை ஒன்றில், பிழை திருத்துனராக சேர்த்து விட்டார். அங்கு, இரண்டு மாதம் பணியாற்றினேன்.

தமிழ் வார இதழ் ஒன்றுக்கு, 1976ல், பேட்டி கொடுத்தேன். அதன் பின், 1996ல், பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அதன் பின், இன்று வரை, அறிக்கை மட்டுமே கொடுத்து வருகிறேன். பத்திரிகையாளர்களை எப்படி கையாள வேண்டும் என, எனக்கு தெரியவில்லை. நான் ஏதாவது சொன்னால், அது, பெரிய விவாதமாகி விடுகிறது. இந்த சந்திப்பு, மரியாதை நிமித்தமானது மட்டுமே. நான் ஏதாவது தவறாக செய்திருந்தால் மன்னிக்கவும்.

நம் எல்லாருக்கும் ஒரு கடமை உள்ளது. சுதந்திரப் போராட்டத்தை போல்,
தற்போது, ஜனநாயகப் போராட்டம் துவங்கி உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க, நிறைய போராட்டங்கள், தமிழகத்திலிருந்து தான் துவங்கி உள்ளன.

அரசியல் புரட்சி:

இங்கிருந்து, அரசியல் புரட்சி துவங்க வேண்டும் என்பதே, என் ஆசை. இந்த தலைமுறையில், இந்த போராட்டம் துவங்கினால், வரும் தலைமுறையினரும் சந்தோஷப்படுவர். அதற்கு, உங்கள் ஒத்துழைப்பு தேவை. விரைவில், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.


தனி விதம்!

நடிகர் ரஜினி, யாரை சந்திக்கிறாரோ, அது தொடர்பான விஷயங்களை நினைவுகூர்வதை வழக்கமாக்கி உள்ளார். சமீபத்தில், நெல்லை, கோவை, மதுரை, சென்னை மாவட்ட ரசிகர்களை சந்தித்த ரஜினி, அந்தந்த மாவட்ட மக்கள் குறித்தும், அந்தந்த ஊரில் நடந்த சம்பவங்களையும் கோடிட்டு காட்டிய பின்னரே, பேச்சை துவக்கினார். நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தபோதும், இரண்டு மாதம், கன்னட பத்திரிகையில் வேலை பார்த்ததாக கூறினார்.

பல ஆயிரம் பேர் :

ரஜினி ஆரம்பித்துள்ள மன்றத்தில், இதுவரை, பல ஆயிரம் பேர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி மன்றம் பெயரில், இணையதளம் மற்றும், 'மொபைல் ஆப்' செயலியை துவக்கியுள்ள ரஜினி, அதில் சேருமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். அதன்படி, ரசிகர் மன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என, பல ஆயிரம் பேர் இணைந்திருப்பதாக, ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

- நமது நிருபர் -
 சேலம் மாவட்டத்தில் 5 ஆயிரம் டாக்டர்கள் வேலை நிறுத்தம்
 
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்டத்தில் 5 ஆயிரம் டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 
 
சேலம், 

மத்திய அரசு புதிதாக தேசிய மருத்துவ ஆணையத்தை கொண்டுவர உள்ளதாக அறிவித்தது. இதற்கு நாடுமுழுவதும் உள்ள டாக்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் நேற்று டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் தமிழகத்திலும் நடந்தது. சேலம் மாவட்டத்தில் 142 தனியார் ஆஸ்பத்திரிகள் உள்ளன. இந்த ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வரும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள் நேற்று காலை முதல் மாலை வரை பணிக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் தனியார் ஆஸ்பத்திரிகளில் உள்ள வெளிநோயாளிகள் பிரிவு பெரும்பாலும் மூடப்பட்டிருந்தன. ஆஸ்பத்திரிகளில் வழக்கமான பணிகள் நடக்கவில்லை என்பதால், சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் பலர் ஏமாற்றத்துடன் திரும்ப நேர்ந்தது.

அதே வேளையில் அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு மற்றும் உள்நோயாளிகள் பிரிவு வழக்கம்போல இயங்கின. ஆனாலும், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்பட்டனர்.

இது குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில துணைத்தலைவர் டாக்டர் பிரகாசம் கூறியதாவது:–

இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு, தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மருத்துவ கவுன்சிலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாக 139 பேர் இருப்பார்கள். ஆனால், தேசிய மருத்துவ ஆணையத்தில் 25 பேர் மட்டுமே இருப்பார்கள். இதில் தலைவர் உள்பட 14 பேர் அரசால் நியமிக்கப்படுவார்கள். 5 பேர் டாக்டர்களாக இருக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட ஆணையக்குழுவில் எந்த கோரிக்கையும் வைக்க முடியாது.
மேலும் 25 பேரில் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடையாது. எம்.பி.பி.எஸ். தேர்ச்சி மற்றும் பயிற்சி பெற்ற டாக்டர்கள் மீண்டும் தேர்வு எழுதி வெற்றிபெற்ற பின்னரே தேசிய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய முடியும் என்பது இயலாத காரியம். இதனால், மருத்துவ மாணவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாவார்கள். எனவே, புதிய சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும். நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் டாக்டர்களின் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மத்திய அரசின் புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில் பயிற்சி டாக்டர்கள் காலை 10 மணி முதல் 11 மணிவரை, பணியை புறக்கணித்து ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, பழைய மருத்துவ கவுன்சிலே நீடிக்க வேண்டும். மத்திய அரசு கொண்டுவர உள்ள புதிய மருத்துவ ஆணையத்தால் டாக்டர்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். எனவே, புதிய ஆணையத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவை திரும்பபெற வேண்டும் என டாக்டர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

அதன் பின்னர் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேட்டூர், ஆத்தூர், ஓமலூர், வாழப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வரும் 500–க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
வேலை நியமனங்களில் முறைகேடா?

 
தமிழ்நாட்டில் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது. தொழில்வளர்ச்சி அதிகம் இல்லாதநிலையில், தனியார்துறையில் வேலைவாய்ப்பு அதிகளவில் உருவாகவில்லை. 
 
மிழ்நாட்டில் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது. தொழில்வளர்ச்சி அதிகம் இல்லாதநிலையில், தனியார்துறையில் வேலைவாய்ப்பு அதிகளவில் உருவாகவில்லை. அதனால்தான் அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை 80 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்தவகையில், தமிழ்நாட்டில் உள்ள 46 அரசு பாலிடெக்னிக்குகளில் விரிவுரையாளர் பணிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டன. 1,058 காலிப்பணியிடங்களுக்காக கோரப்பட்டதில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 500 பேர் விண்ணப்பம் செய்து எழுத்துதேர்வும் எழுதியிருந்தனர். இந்தத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 2 ஆயிரம் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டனர். இந்தநேரத்தில் ஆசிரியர் தேர்வுவாரியத்துக்கு சில விண்ணப்பதாரர்கள் எடுத்த மதிப்பெண்கள் பற்றி புகார்கள் வந்தது. அதை சரிபார்த்தபோது, அவர்கள் உண்மையாக எடுத்த மதிப்பெண்களைவிட அதிகமாக போடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக ஆசிரியர் தேர்வுவாரியம் 2 ஆயிரம் பேர்களின் மதிப்பெண்களையும் சரிபார்த்தது. அதில் 226 பேரின் விடைத்தாள்களில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களில் 50 முதல் 100 மதிப்பெண்கள் வரை கூடுதலாக போட்டு சான்றிதழ் சரிபார்க்கும் பட்டியலுக்கு தகுதிபடைத்தவர்களாக்கும் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக இந்தத்தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டு, விடைத்தாள்களுடன் கூடிய புதியமதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. முறைகேட்டுக்காக ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம்வரை வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் யார்–யார்? ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போலீசில் புகாரும் கொடுக்கப்பட்டு, இப்போது 156 பேர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மதிப்பெண்களை கூடுதலாக போட ஏஜெண்டாக செயல்பட்டதாக ஒரு கால்டாக்சி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தேர்வு மதிப்பெண்களை பதிவிடும் பணிகளை செய்த நொய்டாவில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் கம்பெனி ஊழியர்கள் இந்த முறைகேட்டை செய்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரைவில் போலீசாரும், ஆசிரியர் தேர்வுவாரியமும் இந்த முறைகேட்டை முழுமையாக கண்டுபிடிப்பதோடு, ஊழல், தவறுகளுக்கு இடமளிக்கும் அத்தனை வழிகளையும் அடைத்து, இனிமேல் நடக்கும் அனைத்து தேர்வுகளும் எந்தவித முறைகேடுக்கும் இடம்இல்லாத வகையில் மிக கண்காணிப்போடு நடத்தப்பட வழிவகைகளை காணவேண்டும்.

அரசு பணிகளுக்கான தேர்வு என்பது தகுதியின் அடிப்படையில், திறமையின் அடிப்படையில் இருந்தால்தான் அரசு பணிகள் மீது இளைஞர்களுக்கு ஒரு நம்பிக்கை வரும். நாம், நமது தகுதியை வளர்த்துக்கொண்டோம் என்றால், திறமையை பெருக்கிக்கொண்டோம் என்றால், இத்தகைய தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்றோமென்றால் நிச்சயம் அரசுப்பணி தானாகக்கிடைக்கும் என்ற உணர்வு இளைஞர்கள் மனதில் விதைக்கப்படவேண்டும். தகுதி மட்டுமே அளவுகோலாக இருக்கவேண்டும். அதைவிடுத்து பணம் கொடுத்தால்போதும் தகுதியும், திறமையும் தேவையில்லை என்றநிலைமை ஏற்பட்டால், நிச்சயமாக அது நாட்டுக்கு நல்லதல்ல. அரசுப்பணி நியமனங்களில் ஊழலை ஒழித்தால்தான் திறமையானவர்கள், நேர்மையானவர்கள் அரசுப்பணிக்கு வரமுடியும். பணம் கொடுத்து வேலைக்கு வருபவர்கள், வேலைக்கு வந்தவுடனேயே லஞ்சம் வாங்குவதில்தான் குறியாக இருப்பார்கள். பணியிலும் அக்கறை காட்டமாட்டார்கள்.
மத்திய அரசு ஊழியர்கள் ரத்த தானம் அளித்தால் சம்பளத்துடன் கூடிய விடுமுறை

மத்திய அரசு ஊழியர்கள் ரத்த தானம் அளித்தால் சம்பளத்துடன் கூடிய விடுமுறை
 
மத்திய அரசு ஊழியர்கள் ரத்த தானம் அளித்தால் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என பணியாளர்கள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. #blooddonation
புதுடெல்லி, 

மத்திய அரசு ஊழியர்கள் ரத்த தானம் அளிப்பது தொடர்பாக மத்திய பணியாளர் நல அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:– ரத்த தானம் அல்லது ரத்த கூறுகள் (சிவப்பு அணுக்கள், பிளாஸ்மா, தட்டணுக்கள்) தானம் அளிப்பதற்கு சிறப்பு தற்செயல் விடுப்பை அளிக்க மத்திய பணியாளர் நல அமைச்சகம் முடிவு செய்து இருக்கிறது. 

அதன்படி அங்கீகரிக்கப்பட்ட ரத்த வங்கிகளில் ரத்த தானம் அல்லது ரத்தக் கூறுகளை தானம் அளிக்கும் நாளன்று (ஒருநாள் மட்டும்) ஊழியர்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையாக எடுத்துக்கொள்ளலாம். ஆண்டுக்கு அதிகபட்சமாக இதுபோல் 4 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள இயலும். இதற்கு தானம் அளித்ததற்கான தகுந்த ஆதாரங்களை இணைப்பது அவசியம்’’.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 


சிங்கப்பூர் விபத்தில் பலி: தவிக்கும் தமிழர் குடும்பம்

Added : ஜன 03, 2018 05:05

சிங்கப்பூர்: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர், செல்வம் வீரய்யா, 33; சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார். 2017 டிச., 22ல் நடந்த சாலை விபத்தில், அவர் உயிரிழந்தார். சிங்கப்பூரைச் சேர்ந்த, இந்தியர்கள் நலனுக்காக போராடும் தன்னார்வ அமைப்பு, 1.25 லட்சம் ரூபாய் ஏற்பாடு செய்து, அவருடைய குடும்பத்தாருக்கு அனுப்பி வைத்தது. ஏழு ஆண்டுகளாக, சிங்கப்பூரில் பணியாற்றி வந்த செல்வத்தின் வருமானத்தையே, அவருடைய தந்தை, தாய், மனைவி, இரு சகோதரிகள் கொண்ட குடும்பம் நம்பி இருந்தது. இந்நிலையில், சாலை விபத்தில் இறந்த செல்வத்துக்கு, விபத்து இழப்பீடு அளிப்பது குறித்து, சிங்கப்பூரின் மனிதவள மேம்பாட்டுத் துறை ஆய்வு செய்கிறது. அதன்படி, அவருடைய குடும்பத்துக்கு, 33 லட்சம் - 98 லட்சம் ரூபாய் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

பணி விலகிய ராணுவ வீரருக்கு இயலாமை ஓய்வூதியம் தர உத்தரவு

Added : ஜன 03, 2018 01:01


சென்னை: ராணுவ விதிப்படி, 10ஆண்டு பணியை பூர்த்தி செய்யாத ராணுவ வீரருக்கு, இயலாமை ஓய்வூதியம் வழங்க, ராணுவ தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர், நரசய்யா கோமுலா, 35. இவர், 2001ல், ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். 2007 செப்டம்பரில், 20 நாட்கள் விடுமுறையில் சென்ற போது, விபத்தில் சிக்கினார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அடுத்தவர்களின் உதவியுடன் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டார். பின், பணியில் இருந்து விலகிய கோமுலா, இயலாமைக்கான ஓய்வூதியம் அளிக்க கோரி விண்ணப்பித்தார். 10 ஆண்டுகள் பணியை பூர்த்தி செய்யாததால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 


இதையடுத்து, சென்னையில் உள்ள ராணுவ தீர்ப்பாயத்தில், இயலாமைக்கான ஓய்வூதியம் அளிக்க உத்தரவிடக்கோரி, கோமுலா மனு தாக்கல் செய்தார்.
வழக்கு விசாரணையின் போது, ராணுவ அமைச்சகம் தாக்கல் செய்த பதில் மனுவில், 'கோமுலா, விடுப்பில் இருந்த போது, விபத்தில் சிக்கி உள்ளார்; இதற்கும், ராணுவ பணிக்கும் தொடர்பில்லை' என, தெரிவித்தது.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பாபு மேத்யூ பி ஜோசப், உறுப்பினர், சுரேந்திரநாத் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர், 10ஆண்டு பணியை முடிக்காவிட்டாலும், ராணுவத்தில் பணியாற்றி உள்ளார். தற்போது, இயலாமையில் இருப்பதால், அவரது குடும்பத்தை வழி நடத்த, அவருக்கு பண உதவி வேண்டும். எனவே, மனுதாரருக்கு, ராணுவ அமைச்சகம் குறைந்தபட்ச ஓய்வூதியம் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Monday, January 1, 2018

தமிழக அரசியலில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்: ரஜினி அரசியல் பிரவேசத்துக்கு பாரிவேந்தர் வரவேற்பு

Published : 31 Dec 2017 12:00 IST



நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று கூறியதற்கு பாரிவேந்தர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களாக தமிழக மக்களிடம் இருந்த கேள்விக்கும், எதிர்பார்பிற்கும் இன்று விடை சொல்லியிருக்கிறார் திரு.ரஜினிகாந்த் அவர்கள். தான் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாகவும், வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

அவர் புகழ் பெற்ற வெறும் நடிகராக மட்டுமல்லாது, அவ்வப்பொழுது ஏற்படும் அரசியல் – சமூக நிகழ்வுகளுக்கு ஏற்ப குரல் கொடுப்பவராகவும் இருந்துள்ளார். இதனால் அவரின் அரசியல் நுழைவு பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியதில் வியப்பில்லை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் நான் போட்டியிட்ட போது, தொலைபேசியில் என்னை அழைத்து, நான் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்தார். தேசப்பற்றும், நேர்மறையான சிந்தனையும், நல்ல உள்ளமும் கொண்ட அரசியல் தலைவர்களுக்கான பஞ்சம் தமிழகத்தில் நிலவுகிறது. இந்நேரத்தில் திரு ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் நுழைவு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. அவ்வகையில், திரு. ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பிரவேசத்தை வரவேற்பதோடு, அவரின் நல்ல நோக்கங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகின்றேன்.

ஆங்கிலம் அறிவோமே 193: அதையும் தாண்டி அதிகமானது!

Published : 26 Dec 2017 11:59 IST
Updated : 26 Dec 2017 11:59 IST

ஜி.எஸ்.எஸ்.

 


கேட்டாரே ஒரு கேள்வி

“என் காதலியை வர்ணித்துச் சில பல பாடல்களை எழுதப்போகிறேன். ஒப்பிட முடியாத என்று பொருளைத் தரும் Non-comparable என்ற வார்த்தைக்குச் சமமான வேறு ஆங்கில வார்த்தைகளைக் கொட்ட முடியுமா?

நிச்சயமாக. ஆனால், ஓர் எச்சரிக்கை. Non-comparable என்பது எப்போதுமே உயர்வு நவிற்சியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அதற்குச் சம வார்த்தைகளாக inadequate, incompetent, insufficient, mediocre போன்றவற்றைகூடக் குறிப்பிட முடியும்.

எனவே, ஒப்பிட முடியாத என்பதை incomparable (non-comparable அல்ல) என்று வைத்துக்கொள்வோம். இதன் சமமான வார்த்தைகளாக matchless, peerless, unmatched, unequalled, unrivalled, unique, rare, outstanding, unsurpassable ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

இந்த இடத்தில் இன்னொன்றையும் பகிர்ந்துகொள்கிறேன். Unique, infinite, entire, impossible போன்ற வார்த்தைகள் ஒப்பிடக் கூடாதவை. அதாவது it is an impossible task என்று கூறலாம். It is the most impossible task என்று கூடாது.

**********************

Mum’s the word என்பதன் பொருள் என்ன?

அம்மாவைக் குறிக்க Mum என்ற வார்த்தை பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படுவதுண்டு (மம்மி என்பதன் சுருக்கம்தான் Mum). ஆனால், Mum is the word என்பதன் முதல் சொல் அம்மாவைக் குறிப்பிடுவதில்லை.

யாராவது ஒரு கேள்வியைக் கேட்க நீங்கள் அதற்குப் பதில் கூறாமல் ‘mmmmmm’ என்ற ஒலியை எழுப்பினால் நீங்கள் பதில்கூற விரும்பவில்லை என்று பொருள். இதைத்தான் mum’s the word என்கிறார்கள்.

எகிப்திய மம்மி பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை ஏன் மம்மி என்கிறோம்?

பிடுமேன் (Bituman) என்பது கருநிறம் கொண்ட பிசுக்குத் தன்மையுள்ள பொருள். இந்தப் பிசினைப் பாரசீக மொழியில் ‘மம்’ என்பார்கள். சடலங்களை இப்படிப் பாடம் செய்ய Mum பயன்படுத்தப்பட்டதால் அதை Mummy என்கிறோம்.

**********************

‘He is a vet’ என்கிறார்களே. அப்படியென்றால் என்ன?

Veterinary Surgeon என்பதை Vet என்று சுருக்கிக் கூறுகிறார்கள். அதாவது, கால்நடை மருத்துவர்.

A sick cow is being treated by the Vet.

ராணுவத்தில் பணிபுரிந்தவரை அமெரிக்காவில் veteran என்றும், பேச்சுவழக்கில் vet என்றும் அழைக்கிறார்கள்.

கவனமாக ஒன்றை உறுதி செய்துகொள்வது என்ற அர்த்தத்தில் vet என்பது verb ஆகப் பயன்படுகிறது. During the emergency, the Government vetted all news reports.

சிலரை ‘Hyper’ என்கிறார்களே, ஏன்?

அது Hyperactive என்பதன் சுருக்கம். கிரேக்க மொழியில் hyper என்றால் அதிகப்படியாக, அதையும் தாண்டி என்று பொருள்.

Hyper ஆக இருப்பவர் மிகவும் ஆற்றல்வாய்ந்தவராக இருப்பார். பள்ளிக்கூடத்தில் உட்கார மாட்டார். உட்காராமல் அங்குமிங்கும் ஓடிக்கொண்டும் தொடர்ந்து உற்சாகமாகப் பல விஷயங்களைச் (விஷமங்களை) செய்துகொண்டிருக்கும் குழந்தைகள் இந்த hyper பிரிவில் அடங்க வாய்ப்பு உண்டு.

Hyperbole என்று ஒரு வார்த்தை உண்டு. உவமை, உவமானம் மாதிரி இதுவும் ஓர் அணிவகை. “எனக்கு இருக்கிற பசிக்கு நான் உன்னையே விழுங்கிவிடுவேன்” என்றோ “பசியில் என் பெருங்குடல் சிறுகுடலைத் தின்கிறது” என்றோ சொன்னால் அது hyperbole. அதிகப்படியாக ஒன்றை விவரிப்பது.

Hyperbole ஆகப் பேசலாம். ஆனால், hyperventilate செய்யக் கூடாது. Hyper ventilate என்றால் மிக அதிகமாகச் சுவாசத்தை வெளியேற்றுவது. இதன் மூலம் உங்களுக்கு ஒருவித மயக்க உணர்வு உண்டாகலாம்.

Hyperbaric என்றால் ஒரு வாயுவை அதன் வழக்கமான அழுத்தத்தைவிட அதிக அழுத்தத்தில் செயல்படவைப்பது.

When, while ஆகிய இரு வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது தனக்கு மிகுந்த குழப்பம் ஏற்படுவதாக வருத்தப்பட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

When என்றால் எப்போது என்ற ஒரு பொருள் உண்டு. அதை விட்டுவிடுவோம். When, while ஆகிய ‘குழப்பப் பயன்பாடுக’ளைப் பார்ப்போம்.

While என்பது ஒரு தொடர்ந்த நிலையைக் குறிக்கிறது. I listened to the radio while I was making dinner. We conversed while walking.

When என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தையோ அதற்குச் சற்றுப் பிந்தைய காலகட்டத்தையோ குறிக்கிறது.

Cover your mouth when you sneeze. Do not smoke when you are pregnant.

வேறொரு சிறிய வித்தியாசத்தையும் கவனிக்கலாம். She opened the door when I knocked என்று கூறும்போது அது கதவைத் தட்டியவுடன் (அதாவது, கதவைத் தட்டிய பிறகு) அவள் கதவைத் திறந்தாள் என்ற பொருளைக்கொடுக்கிறது.

Shen opened the door while I knocked எனும்போது கதவைத் தட்டுவதும், கதவைத் திறப்பதும் ஒரே நேரத்தில் நடப்பதைப் போல இருக்கிறது. எனவே, இங்கு when என்ற பயன்பாடுதான் பொருத்தமாக உள்ளது.

ஒரே நேரத்தில் தொடரும் இரு விஷயங்களைக் குறிக்கிறது while. ஒரே நேரத்தில் நடக்கும் அல்லது அடுத்தடுத்து நடக்கும் இரு வேலைகளைக் குறிக்க when.

தொடக்கம் இப்படித்தான்

‘Brownie points’ என்பதன் பொருளைக் கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

நீங்கள் செய்ததற்காக உங்களுக்கு அளிக்கப்படும் பாராட்டுதான் ‘Getting brownie points’. இது உண்மையான விருதோ மதிப்பெண்ணோ அல்ல. கொஞ்சம் நகைச்சுவையாகவும் பயன்படுத்தப்படுகிறது. Let me score some brownie points with my mother-in-law by offering to cook dinner.

Browny என்பது ஒரு கற்பனை உயிரினம். நாடோ​டிக் கதைகளில் நிலவுவது. முக்கியமாகப் பெண் Browny-க்கள் கருணை உள்ளம் கொண்டவை. குடும்பமே தூங்கும்போது சத்தம் போடாமல் வீட்டு வேலைகளையெல்லாம் செய்துவிடும்.

பெண் சாரணர் இயக்கத்தில் Girl guide Brownies என்பவர்கள் உண்டு. அவர்கள் செய்த நல்ல செயல்களுக்காக அவர்களுக்கான பேட்ஜ்களை அளிப்பார்கள். இவற்றை Brownie points என்பதுண்டு.


சிப்ஸ்

# He has fallen over என்று சிலரும் he fell over என்று சிலரும் சொல்கிறார்களே!

முன்னவர் பிரிட்டிஷ்காரராகவும், பின்னவர் அ​மெரிக்கராகவும் இருக்க வாய்ப்பு உண்டு.

# “She is surrounded by toadies” என்ற வாக்கியத்தின் பொருள் என்ன?

சுயலாபத்துக்காக ஒருவரைப் புகழ்ந்து பேசுபவரை toady என்பார்கள்.

# Boutique என்றால்?

சிறிய கடை. நாகரிகமான உடைகள், நகைகள் போன்றவற்றை விற்கும் கடையாக இருக்க வாய்ப்பு அதிகம்.


தொடர்புக்கு: aruncharanya@gmail.com
Sleuths of DVAC seize Rs 10.75 lakh from govt staff 

DECCAN CHRONICLE.

Published Jan 1, 2018, 6:22 am IST

During the search, officials seized bundles of cash from regional assistant director Kannan and superintendent Nagarajan, sources said.



The regional office controls 33 town panchayats in Salem district and 19 town panchayats in Namakkal district.

Salem: Sleuths of the Directorate of Vigilance and Anti Corruption (DVAC) conducted surprise inspection at office of the Regional Assistant Director of Town Panchayats in Salem on Saturday night and seized Rs 10.75 lakh of unaccounted money from officials.

The regional office controls 33 town panchayats in Salem district and 19 town panchayats in Namakkal district. On a tip-off that officials were allegedly collecting New Year and Pongal gifts from lower level staff, a team led by DVAC DSP Chandramouli went on a surprise inspection.

During the search, officials seized bundles of cash from regional assistant director Kannan and superintendent Nagarajan, sources said. After checking the executive officers and office assistants who visited the office to pay the sum, DVAC officials seized Rs 10.75 lakh of unaccounted money.
Rajinikanth takes aim, but holds fire 

D Govardan | TNN | Jan 1, 2018, 05:58 IST



Rajinikanth After waiting for ages for the almighty to give him the green signal, actor Rajinikanth has finally taken the plunge into politics. However, by setting his eyes on the assembly election, the next one scheduled for the summer of 2021 in Tamil Nadu, he looks like he is buying time to test the waters.

The big question is - why will someone announce his entry into politics, but set a longer deadline for the actual launch. Can he keep up the excitement surrounding his entry for the next three to four years? Given his 'Hindutva ideologies' and BJP connections, perhaps he thinks midterm polls cannot be ruled out, say observers. There are more questions, than answers at present.




For the lakhs of his fans, just the announcement of launch of a party and fielding of candidates in all 234 assembly segments in the state was enough to get them euphoric. It did not bother them that their 'thalaivar' is yet to name the party and spell out its policies. For the numerous die-hard fans of Rajinikanth, who lived a better part of their lives thriving on his one-liners in films, his statement of heralding "spiritual politics" was enough.

The larger public, however, would surely look for more and better signals from him. But, that is not going to come in a hurry. Rajinikanth himself had dropped sufficient hints in his speech.

"Until we form the party, there is no need for any of us, including me, to attack anyone. It is also not necessary to react to every political development until then," he told fans on Sunday.

Till his announcement, the general perception was that he missed the bus in 1996. But, despite the twodecade delay, he had kept his reach with the masses intact. His fans, though aged compared to the present day millennial generation, are spread far and wide. With J Jayalalithaa's death and DMK leader M Karunanidhi retiring from politics, Rajinikanth and Kamal Haasan see a potential space.

Rajinikanth surely has a base to start his political wagon. But after his "even God cannot save Tamil Nadu" statement in 1996, he had largely confined his comments to non-political issues.

"Spiritual politics is something that (Mahatma) Gandhi had pursued and that is the path Rajinikanth will follow. There is no room for corruption, mistakes and crime in spiritual politics, which is different from religious path," said political commentator and Gandhian movement leader Tamilaruvi Manian.
Rajinikanth's political journey: All you need to know

TIMESOFINDIA.COM | Updated: Dec 31, 2017, 19:43 IST

Highlights

Speculations about film actor Rajinikanth entering politics had been rife for last two decades. However, the actor, so far, had kept the cards close to his chest.

Today, the actor ended years of speculation and revealed that he will be contesting the assembly elections in 2021. In the wake of his announcement, here is a look at superstar’s hobnobbing with politics.



*The actor's first-known tryst with politics happened in the run-up to 1996 assembly elections in Tamil Nadu, when he announced his willingness to support the Indian National Congress.
*However, plans of him supporting Congress remained inconclusive and Congress, much to the dismay of the actor, went forward to support AIADMK.

*Following the alliance between AIADMK and the Congress, the actor had famously said - "If Jayalalithaa (AIADMK chief) is voted back to power, even God cannot save Tamil Nadu."

*The AIADMK alliance lost, while DMK in alliance with Tamil Manila Congress swept the 1996 polls.

*A decade later, the actor went on to claim that his famous quote was the prime reason behind AIADMK party chief J Jayalalithaa's defeat in 1996.

*In the past, the actor was often accused of not fighting for the state's lifeline issues such as Cauvery water row with Karnataka. Every time, the Cauvery issue erupted, the pro-Tamil outfits used to target him for his "silence," in the matter.

*In 2002, seeking to counter such attacks, the actor had said he would start a people's movement on the Cauvery issue and also pursue the government for interlinking of Himalayan and peninsular rivers. The same year, he went on a fast asking the Karnataka government to release the Cauvery waters.

*He also offered to donate Rs 10 million from his personal fund for a project linking all the major rivers of the country in one centralised grid to solve the water problem across the country.

*In 2004, the actor extended his support to the NDA-led front on the assurance that, if elected, it will implement the water-linking project to solve country's water crisis.

*In 2008, the actor, along with colleagues from the Tamil film industry, sat on a day-long fast in Chennai protesting against Karnataka's objections to the planned drinking water project in Hogenekkal, situated on the border between Karnataka and Tamil Nadu.

*In 2014, in the run-up to the Lok Sabha polls, the actor once again stirred up talks of his entry into politics following his meeting with BJP's prime ministerial candidate Narendra Modi.

Top CommentOn Dec 31 normal people go to party, but Rajnikanth forms his own party on 31 Dec. His style remains...Kasturirangan

*In October 2014, the actor left everyone guessing when he met Jayalalithaa after her release from the prison. (The AIADMK leader was in in prison for 21 days following her conviction in the disproportionate assets case.) During the meeting, the actor expressed his confidence that the AIADMK leader would make a comeback as the chief minister of the state.

*On December 31, 2017, the actor announced he would contest the next (2021) assembly election and would field candidates in all the 234 assembly constituencies in Tamil Nadu.
E-tatkal software under CBI lens

TIMES NEWS NETWORK

New Delhi: A week after CBI arrested its assistant programmer along with another person for allegedly running a Tatkal ticketing racket, the central agency said that a large number of online software programmes being used by travel agents to trick the IRCTC booking system is under itsscanner.

These programmes, CBI has learned while probing its own assistant programmer Ajay Garg, are easily available online for a price and they work on “auto fill” system where details of large number of ticket seekers are entered and kept ready even before Tatkal bookings open on the IRCTC website at 10am for trains departing next day.

Garg had developed one such software.

Sources added that these programmes speed up the PNR generating process, bypassing the IRCTC captcha and allowing login with multiple IDs, enabling a large number of ticket bookings simultaneously on a single click of the mouse. They further allow the users to fraudulently gain unauthorised access to computer network in contravention of rules and regulations.

“All such software programmes are under the scanner. We are examining them and may soon take action, if any illegality is found in their operations,” an official said.

“Useof such software isillegal as per rules and regulations of the IRCTC and also under the Railways Act,” said an officer. Apart from Garg, CBIhad arrestedhis associate Anil Gupta last week for developing and distributing the software to agentsfor a price.

The ticket bookings under Tatkal quota open at 10am for AC class and 11am for non-AC coaches for the trains departing next day. Under the quota, a fixed number of seats, in each coach, are sold at a premium by the railways to travellers who need tickets urgently. A common complaint of passengers is that by the time they enter details on the IRCTC website or complete booking process, seats under Tatkal quota gets full within minutes of start of the booking. Their bookings are either rejected or they get a waitlisted ticket that too at a very steep prices. Some travel agents offer to provide confirmed tickets under the quota by charging a premium.
CBI books bank officials in ₹14cr housing scam

TIMES NEWS NETWORK

Chennai: The CBI has booked 44 people including top retired officials of the State Bank of India in Chennai for a ₹14 crore housing scam.

The retired SBI officials entered into a criminal conspiracy in 2015-16 with Shreepavi Constructions, a company owned by a builder S Alagesan, and sanctioned loans to ineligible persons on the basis of forged documents to help Alagesan, said the CBI. This caused a loss of ₹13.77 crores to the erstwhile State Bank of Mysore, which has now been merged with SBI.

The bank employees named as accused are Premlatha Vaikal, then chief manager of SBM, Shastri Nagar, K Jagadeeswara Rao, AGM (retired), SBM, N Bupesh, chief manager (retired) at the bank, V Saaikumar, chief manager SBI (maintenance), M Srikumar, deputy manager (sanction), VVSN Raju, deputy manager (maintenance) and Arumugam, deputy manager (maintenance). Thirty-four borrowers are also named as coaccused. A case of criminal conspiracy, cheating, forgery and criminal misconduct by public servants has been made out.

In order to fund eight projects in and around Chennai, Alagesan had allegedly conspired with the bank employees to create namesake borrowers from SBI. Documents like the income details, bank account statements, salary slips, IT returns and Form-16 of these prospective buyers were either not obtained or verified properly by the bank officials.

The bank officials had recommended, processed, sanctioned and disbursed the loans despite knowing that some flats were not occupied. Twelve flats were not fully constructed yet full disbursement was made, the documents of 34 borrowers were fabricated and inspection reports on the progress of construction were not accurate.

The valuation of these flats and houses under construction was inflated to the extent of the margin money required to be brought in by the borrowers, said the CBI. The valuation was done by Natarajan and his associates and legal opinion of the loans was offered by the empanelled advocate KRA Muthukrishnan who did not verify the documents properly. Both have also been named as co-accused.
ESIC official booked for demanding bribe from yarn manufacturing co

TIMES NEWS NETWORK

Chennai: The CBI, Chennai, booked a deputy director of the Employees State Insurance Corporation (ESIC) in Madurai for allegedly giving monetary benefit to a yarn manufacturing company which was involved in a dispute over remittance of ESI for one decade.

The CBI said that the company Ramalinga Millsin Aruppukottai was chargedwith not paying the ESI contribution of ₹5.2 lakh and ₹20.8 lakh during 2003-2006. Two claims were raised against the company and notices were issued, but it had filed appeals with the ESI court in 2007, which were pending.

The accused ESIC DD Thineshkumar, who took charge in 2016, got the matter transferred from the court and back to him so he could register a favourable order for the company, the CBI alleged.

On June 30, the ESI court in Madurai set aside earlier orders and remitted the matter back to the DD to conduct a fresh enquiry.

The CBI said that during the enquiry, Thineshkumar aided Ramalinga Mills by reducing the amounts, altering facts, earlier admitted by the company and giving it undue monetary benefits. He passed orders on October 6 which caused wrongful loss to ESIC, the CBI said.

Thineshkumar also allegedly approached the company and negotiated an illegal gratification of ₹3 lakh for giving them a favourable order, investigators said. This happened through an advocate M Elanchezian, who has been named in the FIR along with the company.

A case of criminal conspiracy, cheating and criminal misconduct by a public servant has been filed by the CBI.
WELCOME, RAJINI Now, where’s the party? 

Vows To Contest All Seats In TN Assembly Polls

Abdullah.Nurullah @timesgroup.com

More than 22 years after he gave a call to “save TamilNadufrom J Jayalalithaa”, Tamil superstar Rajinikanth sought to occupy the political space vacated by the AIADMK supremo, and DMK president M Karunanidhi, announcing his entry into politics. He, however, did not spell out the name of his party or his policies.

After five days of interaction with his fans following the RK Nagar byelection won by AIADMK rebel T T V Dhinakaran, Rajinikanth said he wouldfloat a political party that wouldcontest all the 234 assembly constituencies in the state.

“My political entry is confirmed. This is the need of the hour,” said Rajini, calling for an honest and transparent system of governance to uproot corruption and practise “spiritual politics”.

Political reactions to the 67-year-old actor’s entry varied from caution to confrontation. BJP was the first party to welcome Rajini’s announcement. Tamil nationalist outfit Naam Tamizhar criticised the actor, referring to his non-Tamil roots.

Constantly cheered by fans, Rajini took on the AIADMK without naming it. “Political developments in the past year have brought shame to the people here,” he said. “In the olden days, when a king invaded a country, his men went about plundering the coffers. Generals and soldiers would loot the people on the losing side. Today however, partymen, under the guise of democracy, are looting their own people.”

The superstar asked his fans to take the message to every street in every village of Tamil Nadu. “First, we must integrate the registered and unregistered fans associations and bring them under one umbrella. We mustthen prepare to facetheelection through democratic means. Until then, there is no need to criticise other politicians or hold agitations. There are many others already doing that,” Rajini told fans.

The film star asked his supporters to strengthen the fans association through an enrolment drive. “Bring all those around you to the association, be it the young, the old, the illiterate or the educated.”

Fans of Rajinikanth have waited for about three decades to turn into cadres. “I do not want cadres. I want guardians capable of questioning erring legislators, officials and even partymen. I will just be a representative of the peoplewho will supervise these guardians,” said Rajini, asking fans to turn into an army of guardians. Rajini said that the guardians should not seek personal favours from legislators and officials. “The guardians will keep the plunderers out so that the people receive the benefits they are entitled to,” he said.



RAJINI BEGAN SPEECH BY QUOTING GITA

The superstar promised his fans that he was not entering politics for fame, money or power. “You have already given me much more than I could ever dream of. The throne came my way back in 1996, but I pushed it away. If I did not want the throne at the age of 45, why would I want it now when I am 68?” Rajini said.

The ‘Padaiyappa’ actor, who plans to launch his independent party at a suitable time before the state assembly election, told fans, “Our mantra is honesty, hard work and growth. Our ideology is to think, talk and do only good. Good things will happen. If elected to power we will deliver on our promises within three years. If we fail, then we will resign.”

Earlier, Rajini began his speech by quoting a verse from Bhagavad Gita. In Kurukshetra, Karnan told Arjun, “Put in your efforts. I will take care of the rest.” Citing the incident where Arjuna hesitates entering the war, Rajinikanth said, “Wage war. If you win, you will rule the country. If you are killed in war you will go to heaven. If you do not go to war they will call you a coward.”

The superstar energised his fans with his war cry. “I have put in my efforts already. All that is left is to shoot the arrows. We will contest in all 234 assembly constituencies of TN. As the local body elections are already nearing, we do not have time to prepare. As for the 2019 general election, I will make a decision as per circumstances.”

ரஜினி எதிர்கொள்ள வேண்டிய மூன்று சவால்கள்

By  சென்னை,  |   Published on : 01st January 2018 01:20 AM
vairamuthuC
அரசியலில் காலடியெடுத்து வைத்திருக்கும் ரஜினி மூன்று சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என கவிஞர் வைரமுத்து கூறினார்.

 இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:


 "ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறித்து, அவரின் நண்பர்களில் ஒருவன் என்ற முறையில் வரவேற்கிறேன். இந்த அறிவிப்புக்குப் பின்னர் ஊடகங்களில் ரஜினிக்கு வாழ்த்துகளும், வசை மொழிகளும் குவிந்து வருவதைக் கண்டேன். வாழ்த்துவதற்கும், வசைபாடுவதற்கும் போதுமான கால அவகாசத்தை ரஜினிக்குக் கொடுக்கவில்லை என்பது என் எண்ணம். வாழ்த்துகிறவர்களெல்லாம், அவரை நாளை வசைபாடலாம். வசைபாடுகிறவர்கள், நாளை வாழ்த்தலாம். இந்த கருத்துகள் இடமாற்றத்துக்கு கொஞ்சம் கால அவசகாசம் தேவைப்படும்.


 தொலைபேசியில் வாழ்த்து: அரசியல் அறிவிப்பு வெளியான பின்னர் தொலைபேசியில் ரஜினியைத் தொடர்புகொண்டு வாழ்த்துச் சொன்னேன். நாற்பதாண்டு காலம் கலைத் துறையில் நீங்கள் செலுத்திய உழைப்பைப் போல, இரு மடங்கு உழைப்பை இந்த அரசியல் வெளிக்கு தரவேண்டி இருக்கும் என்று சொன்னேன். அதற்காக உங்கள் உடல் நலனும், மன வளமும் செறிந்திருக்க வேண்டும்; செழித்திருக்க வேண்டும் என்று வாழ்த்தினேன்.
 கலைஞன்- தலைவன் இடைவெளி... ரஜினி மிகப்பெரிய கலைஞன், இப்போது தலைவனாக அவர், தனது வாழ்க்கையை நகர்த்தியிருக்கிறார். கலைஞன், தலைவன் என இந்த இரண்டுக்குமான இடைவெளி மற்ற மாநிலங்களில் மிக மிக அதிகம். தமிழகத்தில் சிலருக்கு இந்த இடைவெளி மிகக்குறைவு. ரஜினிக்கு, கலைஞன் என்பதற்கும், தலைவன் என்பதற்குமான இடைவெளி குறுகியதா; நீண்டதா என்பதைக் காலம் சொல்லும்.


 அரசியலில் காலடியெடுத்து வைத்திருக்கும் ரஜினியின் முன்பாக மூன்று பிரச்னைகள் முன்னிற்பதாக நான் கருதுகிறேன். முதலில் தனது எதிரி அல்லது எந்த கருத்தியலை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் என்று அவர் முடிவு செய்ய வேண்டும். நண்பன் யார் என்பதை பின்னர் கூட முடிவு செய்துகொள்ளலாம். ஆனால், எதிரியை முதலாவதாக முடிவு செய்ய வேண்டும். இரண்டாவதாக மற்ற அரசியல் தலைவர்கள் யாரும் சாதிக்க முடியாததை, நான் எப்படி சாதித்துக் காட்டுவேன் என்பதற்கான கொள்கை விளக்கம். அந்தக் கொள்கை விளக்கத்தைத் திட்டவட்டமாகத் தெளிவாகத் தீர்மானித்து, தமிழக மக்களுக்கு அவர் அறிவிக்க வேண்டும். சொல்லப்போனால், தலைவன் மற்றும் கலைஞன் ஆகிய இரண்டுக்குமான இடைவெளியை இந்த கொள்கைதான் இட்டு நிரப்பும் என்று நான் நம்புகிறேன்.
 மூன்றாவது, கொள்கை என்று ஒன்று அறிவிக்கப்பட்டால், அதைக் கொண்டுசெலுத்துவதற்கு, அதை அடைவதற்கு சிறந்த சிந்தனையாளர்களும், சிறந்த செயல் வீரர்களும் ஒரு இயக்கத்துக்கு, ஒரு தலைவருக்குத் தேவை. இந்த மூன்றும் ரஜினி எதிர்கொள்ள வேண்டிய மிகப்பெரிய சவால்கள்' என்றார்.

NEWS TODAY 24-26.10.2024