Wednesday, January 3, 2018

ரூ.2,000 கள்ள நோட்டு  வங்கிகளில் ஊடுருவலா?
 
வங்கிகளுக்கு நேரடியாக சென்று வாங்கும், 2,௦௦௦ ரூபாய் நோட்டுகளில், கள்ள நோட்டு கலந்திருப்பது, வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரூ.2000,கள்ள நோட்டு,வங்கி,ஊடுருவலா?

வங்கி ஏ.டி.எம்.,களில், கள்ள நோட்டு கலந்து வருவது வாடிக்கையாகி விட்டது. சமீப காலமாக, வங்கிக் கிளைகளில், நேரடியாக பணம் எடுப்போருக்கும், கள்ள நோட்டு கிடைப்பது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக, 2,000 ரூபாய் நோட்டுகள் தான், இப்படி கலந்து வருகின்றன. அவற்றை

திருப்பிக் கொடுத்தால், அதை அந்த கிளையிலேயே மாற்றித் தர மறுக்கின்றனர். அத்துடன், காவல் நிலையத்திலும் புகார் தருவர். தங்கள் சேமிப்பில் இருந்த பணத்தை இழந்தது மட்டுமின்றி, காவல் நிலையத்திற்கும் அலைய வேண்டியுள்ளதால், மக்கள் அவதிப்படுகின்றனர்.

சமீபத்தில், சென்னையில், தேசியமய வங்கி வாடிக்கையாளர் ஒருவருக்கு, அதன் கிளையில் தரப்பட்ட பணத்தில், 2,000 ரூபாய் கள்ள நோட்டு வந்தது. வங்கி ஊழியர்கள், சிரத்தையாக இருந்திருந்தால், அந்த நோட்டு, கிளைக்குள் வந்திருக்காது என, அவரை போல் ஏமாந்தவர்கள், புகார் கூறுகின்றனர்.

இது குறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொதுச் செயலர், வெங்கடாசலம் கூறியதாவது: வங்கி ஊழியர்கள், கள்ள நோட்டுகள் சரிபார்க்கும் இயந்திரத்தில், சோதித்து பார்த்த பிறகே, அவற்றை வாங்க வேண்டும். எனினும், தமிழகத்தில் உள்ள, 16

ஆயிரம் கிளைகளில், பல கிளைகளில், அந்த கருவிகள் இல்லை. அவற்றை, அரசு வழங்க வேண்டும்.

மேலும், வரிசையில் நிற்கும் வாடிக்கையாளர்களும் பொறுமை காப்பதில்லை; அவசரப்படுத்துவதால், ஊழியர்கள், கள்ள நோட்டை வாங்க நேரிடுகிறது. இருப்பினும், வங்கி ஊழியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

DM arrives late, sparks min’s fury, reprimand

DM arrives late, sparks min’s fury, reprimand  Neha.Lalchandani@timesofindia.com  28.03.2026 Lucknow : Made to wait for 45 minutes by the di...