Wednesday, January 3, 2018

நஷ்டத்தில் இயங்கும் கிளைகளுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி, 'நோட்டீஸ்'

Added : ஜன 03, 2018 01:20


புதுடில்லி: நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத் துறை நிறுவனமான, பஞ்சாப் நேஷனல் வங்கி, நடப்பு ஆண்டில், நஷ்டத்தில் இயங்கும், 300 கிளைகளை மூட திட்டமிட்டுள்ளது.
கடந்த மாதம், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பொதுத் துறை வங்கி தலைவர்களுடன் நடத்திய கூட்டத்தில், வங்கிகளை லாபகர மாக மாற்றுவது குறித்து விவாதித்தார்.
அப்போது, வங்கித் துறையில், செலவினங்களை கட்டுப்படுத்துவதற்கு, பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.


அதிலொரு முடிவாக, நஷ்டத்தில் இயங்கும், 300 கிளைகள் கண்டறியப்பட்டு, அவற்றை மூட, பஞ்சாப் நேஷனல் வங்கி முடிவு செய்துள்ளது.


இது குறித்து, அந்த வங்கியின் நிர்வாக இயக்குனர், சுனில் மேத்தா கூறியதாவது:
நாடு முழுவதும், பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு, 7,000 கிளைகள் உள்ளன. அவற்றில், நஷ்டத்தில் இயங்கும், 300 வங்கிக் கிளைகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுஉள்ளது.
நடப்பு ஆண்டிற்குள், வங்கியை லாபகரமானதாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும். 


ஓராண்டிற்குப் பின்னரும் நஷ்டத்தில் இயங்கினால், அந்த வங்கிகளை மூட அல்லது மற்ற கிளைகளுடன் இணைப்பது அல்லது வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து முடிவு செய்யப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.



No comments:

Post a Comment

NEWS TODAY 24-26.10.2024