Wednesday, January 3, 2018

சித்தா டாக்டர்கள் 100 பேர் நியமனம்

Added : ஜன 03, 2018 00:43

சென்னை: புதிதாக தேர்வு செய்யப்பட்ட, 100 சித்தா டாக்டர்கள் உட்பட, 105 பேருக்கு, பணி நியமன ஆணைகளை, முதல்வர் பழனிசாமி வழங்கினார். அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற, சித்தாவில், 100 பேர்; ஆயுர்வேதத்தில், ஒருவர்; ஓமியோபதியில், நான்கு பேர் என, 105 உதவி மருத்துவ அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கான, பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில் உள்ள முதல்வரின், முகாம் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

முதல்வர் பழனிசாமி, 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது:
காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில், 105 மருத்துவர்களுக்கு, பணி ஆணை வழங்கப்படுகிறது. தமிழகத்தில், பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சை, முறையாக தரப்படுகிறது. நாட்டிலேயே, சுகாதாரத்தில், தமிழகம் முதலிடம் வகிக்கிறது. பணியாணை பெறுகின்ற, அனைத்து மருத்துவர்களும், சிறந்த முறையில் பணியாற்றி, மக்கள் சேவை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலர் கூடுதல் பொறுப்பு, சண்முகம், சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 24-26.10.2024