Wednesday, January 3, 2018

பொங்கல் சிறப்பு பஸ்கள் இன்று அறிவிப்பு

Added : ஜன 03, 2018 01:01

சென்னை: பொங்கல் சிறப்பு பஸ்கள், முன்பதிவு மையங்கள் குறித்த அறிவிப்பு, இன்று வெளியாகிறது. தமிழர் பண்டிகையான பொங்கல், வரும், 14ல் கொண்டாடப்படுகிறது. சென்னை உள்ளிட்ட மாவட்ட தலைநகரங்களில் இருந்து, வெளியூர் செல்லும் பஸ்களில், 90 சதவீத முன்பதிவு முடிந்து விட்டது. மாநிலத்தின் பல நகரங்களில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு செல்வோர், சிறப்பு பஸ்களுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், சென்னை, பல்லவன் இல்லத்தில், இன்று மாலை நடக்கும் ஆலோசனை கூட்டத்திற்கு பின், சிறப்பு பஸ்கள், முன்பதிவு மையங்கள் குறித்து, போக்குவரத்து துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிக்க உள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 24-26.10.2024