Wednesday, January 3, 2018

வக்கீல் கொலை: 6 பேர் கைது : கள்ளக்குறிச்சி அருகே பதற்றம்

Added : ஜன 03, 2018 01:23

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், வக்கீலை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம், பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலை கும்பலை சேர்ந்த, ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனுாரைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் நாராயணன்,42; வக்கீல். இவரது மனைவி வெண்ணிலா, 38; இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஜெயபிரகாஷ் நாராயணன், கள்ளக்குறிச்சியில் இருந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:30 மணிக்கு, ராயல் என்பீல்டு புல்லட்டில், தென்கீரனுாருக்கு சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து, இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல், ஜெயபிரகாஷ் நாராயணனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தப்பிச் சென்றது.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் உடலை கைப்பற்றி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெயபிரகாஷ் நாராயணனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த, கிருஷ்ணனுக்கும்,40, கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது, முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. 


மேலும், ஜெயபிரகாஷ் நாராயணன், கடந்த சில மாதங்களுக்கு முன், தன் நிலத்திற்கு, ஏரியிலிருந்து வண்டல் எடுத்தபோது, முறைகேடாக மண் எடுப்பதாக கிருஷ்ணன், அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தார். இதனால், விரோதம் அதிகமானது.
இந்நிலையில்,சீனுவாசன் என்பருடன், கிருஷ்ணனுக்கு தகராறு ஏற்பட்டது.
அதில் ஜெயபிரகாஷ் நாராயணன், சீனுவாசனுக்கு ஆதரவாக வழக்கு தொடர்ந்ததை அடுத்து, கிருஷ்ணனும், அவரது சகோதரரும் சிறை சென்றுள்ளனர்.
ஜெயபிரகாஷ் நாராயணன் தனக்கு எதிராக செயல்பட்டு வருவதாக கருதிய கிருஷ்ணன், அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.


நேற்று முன்தினம் நள்ளிரவு, கிருஷ்ணனும், அவரது சகோதரர் வேலு, 43, மற்றும் 25 - 35 வயதுடைய நான்கு பேர் சேர்ந்து கொலை செய்தது, போலீஸ் விசாரணையில், தெரிய வந்தது.
இதனால், ஆத்திரமடைந்த, ஜெயபிரகாஷ் நாராயணனின் உறவினர்கள், தென்கீரனுாரில் உள்ள கிருஷ்ணனின் வீட்டை தீ வைத்து கொளுத்தினர்.
கள்ளக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர்.
இக்கொலையில், தொடர்புடைய கிருஷ்ணன் உட்பட, ஆறு பேரையும் போலீசார் கைது செய்தனர். கொலையில் கூலிப்படையினருக்கு தொடர்புள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தென்கீரனுாரில் பதற்றத்தை தணிக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

DM arrives late, sparks min’s fury, reprimand

DM arrives late, sparks min’s fury, reprimand  Neha.Lalchandani@timesofindia.com  28.03.2026 Lucknow : Made to wait for 45 minutes by the di...