Wednesday, January 3, 2018

ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்களின் பயண அட்டை ரத்து

By DIN | Published on : 03rd January 2018 04:41 AM |

ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பயண அட்டை ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னையில் செவ்வாய்க்கிழமை தெற்கு ரயில்வே கோட்ட பாதுகாப்பு ஆணையர் லூயிஸ் அமுதன் கூறியது :


சென்னை புறநகர் உள்ளிட்ட ரயில்களில் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்பான புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அவர்களின் முகங்களை விடியோ எடுத்து அதை பயண அட்டை புகைப் படத்துடன் ஒப்பிட்டு ரயில்வே பாதுகாப்புப் படை நடவடிக்கை எடுத்து வருகிறது. 


இனி வருங்காலங்களில் ரயில் படிக்கட்டுகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணித்தால் அவர்களின் பயண அட்டை ரத்து செய்யப்படும். காஞ்சிபுரம், திருவள்ளூரைத் தொடர்ந்து தற்போது சென்னையிலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win  G Babu Jayakumar & D Sekar 1 2 May 2026 10:05 PM  AMMK member Kamraj supports TVK, expell...