Saturday, August 4, 2018


முதுமையில் உதவும் உரிமைகள்!


By பி.கே. குருவிளா | Published on : 04th August 2018 01:11 AM |

முதியோர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்பது ஒரு காலத்தில் வளர்ந்த நாடுகளில் மட்டும் நிலவும் விவகாரமாகப் பார்க்கப்பட்டது. இப்போது இந்தியாவும் அந்தப் பாதையில் போய்க் கொண்டிருக்கிறது என்று தெரியவரத் தொடங்கியுள்ளது.

நாட்டின் மக்கள்தொகையில் முதியோரின், அதாவது 60 வயதைக் கடந்தவர்களின் விகிதம் கடந்த 1971-ஆம் ஆண்டில் 5.6 சதவீதமாக இருந்தது. அது 2007-இல் 7.5 சதவீதத்தைத் தொட்டது. வரும் 2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் எட்டு பேரில் ஒருவர் முதியவராக இருப்பார் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மற்றொரு குறிப்பிடத்தக்க புள்ளிவிவரம், பிறரைச் சார்ந்திருப்போர் விகிதாசாரம் பற்றியது. அதாவது, பணிக்குச் செல்வோருக்கும் - முதுமையால் பணிக்குச் செல்ல இயலாமல் பிறரைச் சார்ந்திருப்போருக்கும் இடையேயான விகிதாசாரம் என்பது இதன் பொருள்.
இந்தியாவில், சென்ற 2001-ஆம் ஆண்டில் பிறரைச் சார்ந்திருப்போர் விகிதம் 11.9 சதவீதமாக இருந்தது. வரும் 2050-ஆம் ஆண்டில் இந்த விகிதாசாரம் 28.2 சதவீதமாக உயரும். அதாவது, நாட்டின் மக்கள்தொகையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கையினர் வருமானம் - சுய வாழ்வாதாரம் இன்றி பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையில் இருப்பார்கள் என்று அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த வகையினர் கிராமப்புறப் பகுதிகளில் அதிகமாக இருப்பார்கள். மற்றொரு குறிப்பிடத்தக்க விவரம் - பிறரைச் சார்ந்திருக்கும் முதியோரிடையே ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமாம். அதே சமயத்தில், மொத்த மக்கள்தொகையில் இளைய வயதினரில் பெண்களின் எண்ணிக்கையைவிட ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

ஒரு பெரும் நெருக்கடியான நிலையை உருவாக்கப் போகிறது.
சென்ற 1956-ஆம் ஆண்டிலேயே ஹிந்து சட்டத் திருத்தத்தின்போது, ஒரு ஷரத்து சேர்க்கப்பட்டது. அதன்படி,முதுமைப் பருவம் அடைந்த பெற்றோரைப் பேணிப் பராமரிப்பது, மகன்கள் மற்றும் மகள்களின் கடமையாகும். அதன் பிறகு 1973-இல் குற்றவியல் சட்ட நடைமுறையில் ஒரு பிரிவு சேர்க்கப்பட்டது. அதன்கீழ், வாரிசுகளால் புறக்கணிக்கப்பட்ட முதியோர் நீதிமன்றத்தை அணுகிமுறையிடலாம். ஆனால், தங்கள் வாரிசுகளுக்கு வசதி இருந்தும் தங்களின் பராமரிப்புக்கு நிதி உதவி மறுக்கப்படுகிறது என்பதை நீதிமன்றத்தில் முதியோர் நிரூபிக்க வேண்டும். இதன் பிறகு 2007-இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன் சட்டம்' ஒரு முக்கியத் திருப்பமாக அமைந்தது.

இந்த சட்டத்தின் கீழ், மூத்த குடிமக்களைப் பேணுவதும் பராமரிப்பதும் அவர்களுடைய பிள்ளைகளின் கடமை மட்டுமல்ல, அவர்களின் பேரன், பேத்திகள் மற்றும் வாரிசுதாரர்களின் கடமையும் என்பது கட்டாயமானது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் உள்பட அனைத்து இந்திய பிரஜைகளுக்கும் இந்த சட்டம் பொருந்தும் என்பது இதில் குறிப்பிடத்தக்கஅம்ச
மாகும்.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்து மாநில அரசுகளும், கோட்ட அளவில் முதியோர் பரமாரிப்பு குறித்த புகார்களுக்கான தீர்ப்பாயங்களை அமைத்துள்ளன. மாவட்ட அளவில் மேல் முறையீட்டுத் தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. நீதிமன்றங்களை அணுகுவதைக்காட்டிலும், இந்தத் தீர்ப்பாயங்களை அணுகி புகார் அளிக்கும் நடைமுறையும் மனு தாக்கல் செய்யும் நடைமுறையும் எளிமையாக்கப்பட்டுள்ளன. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக, தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் கோரிக்கை மனுக்களையோ புகார் மனுக்களையோ தாக்கல் செய்யலாம்.

மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன்' சட்டத்தைத் தவிர, ரிவர்ஸ் மார்ட்கேஜ்' என்கிற, வீட்டின் மீதான மறு அடைமானம் மூலம் கடன் தொகை திரட்டும் திட்டமும் தேசிய ஓய்வூதியத் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டன.
மறு அடைமானம் திட்டத்தின் கீழ், ஒரு மூத்த குடிமகன் தனது வீட்டை வங்கியில் அடைமானம் வைத்து, தனது ஆயுள் காலம் வரை, மாதந்தோறும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஒரு தொகையைப் பெறலாம். ஒருவர் புதிதாக வாங்கும் வீட்டுக்கு கடன் பெறுவது என்பதற்கு நேர் எதிரான முறையில், அடைமானம் வைத்த வீட்டுக்கு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஈடுத் தொகை பெறும் முறை இது.

இதன் கீழ் ஒரு கோடி ரூபாய் வரை வீட்டு அடைமானத் தொகை பெற இயலும். மிக அவசரத் தேவைக்கு ரூ. 15 லட்சத்தை ஒரே தவணையாகப் பெற முடியும். வீட்டின் உரிமையாளரான முதியவர் தனது வாழ்நாளில் இந்தக் கடனை திருப்பி அடைக்க வேண்டியதில்லை. இதனிடையே அவர் அந்த வீட்டை விற்கவும் முடிவு செய்யலாம். அவ்வாறு விற்பனை செய்ய முடிவு செய்தால், கடன் தொகை போக மீதித் தொகையை அவர் பெற்றுக் கொள்ள முடியும். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பெயரில் சொத்து இருக்கும் பட்சத்தில், வீட்டின் கடைசி உரிமையாளர் காலமாகும் வரை, கடனைத் திருப்பிச் செலுத்தும் நிலை எழாது. இறுதி உரிமையாளர் காலமான பின்னர், வாரிசுகள் அந்தக் கடனை திருப்பிச் செலுத்தி வீட்டை தங்கள் பெயரில் வாங்கிக் கொள்ளலாம்.
முதுமைக் காலத்தில் உதவுவதற்காக உருவான மற்றொரு திட்டமான தேசிய ஓய்வூதிய திட்ட'த்தில் (என்.பி.எஸ்.) இணைவதற்கு முதுமை வரை காத்திருக்க வேண்டியதில்லை. இளமையில் பணி காலத்தில் ஒரு நபர் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து கணக்கைத் தொடங்கினால், அவர் வேறு எந்த நிறுவனத்துக்கு மாறினாலும், தொடர்ச்சியாக ஒரே என்.பி.எஸ். கணக்கை வைத்திருந்து, அதில் ஓய்வு காலத்துக்கான தொகையைச் செலுத்தி வரலாம். ஓய்வூதியத் திட்டம் இல்லாத தனியார் துறை ஊழியர்கள், தங்கள் முதுமை கால வருவாயைத் திட்டமிட்டுக் கொள்ள இது மிகவும் உதவும். அமைப்பு சாரா தொழில்களில் உள்ளவர்களும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து, கணக்குத் தொடங்கி, தங்கள் பணி காலம் முழுவதும் அதைப் பராமரித்து, பலன் பெற முடியும்.

அந்தக் கணக்கைத் தொடங்கிய நபருக்கு 60 வயது நிறைவடையும்போது, அவரது கணக்கில் செய்துள்ள முதலீட்டின் அடிப்படையில் அவர் ஆயுள் காலம் வரை ஓய்வூதியம் பெறலாம். பணி-ஊதிய பாதுகாப்பற்றோரில் சிலருக்கு தற்போது இந்தத் திட்டம் சிறு ஓய்வூதியத் தொகையை அளித்து வருகிறது என்றாலும், இந்தத் திட்டம் இன்னும் பரவலான முறையில் மக்களைச் சென்றடையவில்லை என்பதே உண்மை.

இந்தத் திட்டங்களைத் தவிர, வங்கி சேமிப்புக் கணக்கு, வைப்புத் தொகை போன்றவற்றில் முதியோருக்கு என அதிக வட்டி விகிதம், பல விதமானக் கட்டணங்களில் அவர்களுக்கு சலுகை நடைமுறையில் உள்ளன. மேலும், ரயிலில் படுக்கை வசதியில் சலுகை - முன்னுரிமை, பேருந்துகளிலும் பிற போக்குவரத்து வசதிகளிலும் முதியோருக்கு இருக்கை - முன்னுரிமை உள்ளிட்ட சில சலுகைகள் அளித்து, முதியோர் நல்வாழ்வுக்கு வழிகோலப்பட்டுள்ளது.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, முதியோரின் இலையுதிர்' காலத்தில் அவர்களுடைய மன நலன் குறித்து சிந்திக்க வேண்டியதும் முக்கியமல்லவா?
கடந்த இருபது ஆண்டுகளாக இந்தக் கருத்தைப் பற்றி ஏராளமான கட்டுரைகளும் ஆய்வுகளும் குவிந்துள்ளன. இவை எல்லாவற்றிலும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் விஷயம், பிணைப்பு' என்பதாகும். அதாவது, முதியோர் பிறருடன் தொடர்பு கொண்டிருப்பது, பிணைந்திருப்பதுதான் மிகவும் முக்கியம் என்கிறது. முதியோர் நலனில் அரசும் சமூகமும் சில நல்ல முயற்சிகளை எடுத்தாலும்கூட, தற்போதைக்கு அவை பலவீனமாகவே இருக்கின்றன. நமது நாடு மிகவும் பரந்து, விரிந்திருக்கிறது; பொருளாதார வளம் போதாது; இங்கு மாற்றங்கள் மெதுவாகத்தான் ஏற்பட முடியும்.

முதியோர் சுயமாக தங்களுக்கு என்று எதுவும் செய்து கொள்ள முடியாதா? தங்கள் வயதையொத்த அந்நியர்களுடன் - புதியவர்களுடன் நட்பைத் தேடி வளர்த்துக் கொள்வது என்பது அவர்களின் வாழ்வின் அந்திப் பொழுதில் நடக்கிற காரியமல்ல.

நமது வாழ்நாளின் துடிப்பான காலகட்டத்திலேயே, சமூகத்தின் ஏணிப்படிகளில் துள்ளியேறும் பருவத்திலேயே, மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் மனநிலையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். நட்புகளை வளர்த்துக் கொள்வதும் பிறர்க்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதும் அவசியம். உதவி-ஆதரவு தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்ய நாம் நேரம் ஒதுக்குவோமானால், பின்னாளில் அது நமக்குப் பெரும் வெகுமதிகளை அள்ளித் தரும்.

அனைத்து முதியோரும் தங்களுடைய உரிமைகளைப் பற்றி அறிந்திருக்கிறார்களா என்பது கேள்விக்குறியே. பெண்கள், படிப்படியாகத் தங்களுக்கு உள்ள உரிமைகளைப் பற்றி அறிந்து கொண்டு வருகின்றனர். அதே போல, ஓய்வு காலத்துக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்பவர்கள், தங்களது உரிமைகள் குறித்து அறிந்திருப்பதும், அவசியம் ஏற்படும்போது அவற்றால் பயன் பெறுவது முக்கியமாகும்.

முதுமைக் காலத்தில் புனித இடங்களுக்குச் சுற்றுலா செல்வோர், தம் வாழ்வின் இறுதி ஆண்டுகளில் சந்நியாசம் வாங்கிக் கொள்வோர் - இப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகச் சிறியதுதான். எல்லா முதியோருக்கும் அந்த வழிமுறை சரியான தீர்வாக அமைந்துவிடாது. கட்டுரையாளர்:

மனநல மருத்துவர்.
பழைய பெருமை பேச வேண்டாம்

By வாதூலன் | Published on : 04th August 2018 01:10 AM

  சில மாதங்களுக்கு முன்பு பெரியவர் ஒருவரின் சதாபிஷேக விழாவுக்குச் சென்றிருந்தேன். சொல்லப் போனால் அவர் அந்த வயதைப் போன வருடமே எட்டி விட்டார். ஆனாலும் மகன்கள் இரண்டு பேரும் இப்போதுதான் சேர்ந்து வர முடிந்திருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் பல உறவினர்களையும், நண்பர்களையும் சந்தித்தேன்.

உறவினர் ஒருவரிடம் குடும்ப விஷயங்களை விசாரித்தபோது, அவர் ஓ காட்! எங்கள் குடும்பம் பாரத விலாஸ்... ஸாரி இன்டர்நேஷனல் வில்லா..' என்று தொடங்கி, தன் வாரிசுகள் எல்லாரும் அயல்நாட்டினரைத் திருமணம் புரிந்து கொண்டதைப் பெருமையாகவும் விரிவாகவும் சொல்லிக் கொண்டே போனார்.
சதாபிஷேக நாயகர், குறிப்பிட்ட சூழ்நிலையில் அந்தப் பேச்சை ரசிக்கவில்லையோ என்னவோ, குறுக்கிட்டு உரையாடலை திசை திருப்பினார். அந்த உறவினர் பெருமையாகப் பேசுவது போல் தோன்றினாலும், உள்ளுக்குள் வருத்தம் தோய்ந்திருந்ததைப் பேச்சில் கண்டுகொள்ள முடிந்தது. மனப் புண்ணை ஆற்றுவதற்கு ஒரு களிம்பு!

இதே மாதிரி அடிக்கடி கோயிலில் சந்திக்கும் சினேகிதி ஒருவர் என் மனைவியிடம் தன் பெயரனின் உடல் நிலையைப் பற்றிச் சொன்னார். என் அண்ணா 40 வருஷமாகப் பிட்ஸ்பெர்கில் இருக்கான். அங்கே கூட இதற்கு மருந்து கண்டு பிடிக்கப்படவில்லையாம்' என்றார் (பாவம், ஏதோ நரம்புத் தசைக் கோளாறாம்). அதாவது உலகத்தில் எங்குமே சிகிச்சை கிடைக்காத வினோத நோய் தங்கள் பெயரனைப் பிடித்துள்ளதாம். இத்தகைய மனோபாவமும், ஆழமான சோகத்தை உள்ளுக்குள் புதைத்து விட்டு, வெளியே பெருமையாகக் காட்டிக்கொள்ளும் ரகம்தான்.
இப்போது இந்தியாவிலேயே மருத்துவத்தில் அபார முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அறுபது வயசு ஆயுளே அதிசயமாக இருந்தது முன்பெல்லாம். இப்போது நூறு வயது கூட வியப்பில்லை. என்னைவிட வயதான மனிதர் ஒருவர் என்னைப் பார்க்கும் போதெல்லாம் என் வயதை கேட்டுக் கொள்ளுவார். எனக்கு எண்பத்தைந்து... பாரு, நீ ரொம்ப சின்னவன்' என்று கூறி இரு சக்கர வாகனத்தில் பெருமை பொங்க ஏறிக் கொண்டு போவார். நீண்ட காலம் நலமுடன் வாழ்வது என்பது இறைவன் அளித்த வரம் அல்லது இயற்கை தந்த அரும்கொடை.

ஆனாலும் ஒரு சில பெருமைகள் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் அமைகின்றன என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். எங்கள் குடும்ப மருத்துவரிடம் வழக்கமான பரிசோதனைக்குச் சென்ற போது என் மனைவியிடம் பரவாயில்லைம்மா, டயாபிடிஸ் எல்லாம் குறைஞ்சிருக்கு' என்றார். அதே தினம் எனக்கு அவர் மகனையும் பார்ப்பதாக நிச்சயித்திருந்தாலும், அவரைப் பார்க்க முடியவில்லை. அதைப் பற்றிக் கேட்டபோது, நகரிலுள்ள பிரபல மருத்துவமனையின் பெயரைக் குறிப்பிட்டு அங்கு ஒரு ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணினான். அந்த பேஷன்ட்ட பார்க்கப் போயிருக்கான்' என்றார். டாக்டருடைய முகத்தில் பெருமை ஜொலித்தது. மகன் தந்தைக்காற்றும் உதவி' என்று நினைத்துக் கொண்டேன்.
தொழில் பெருமைபோல, கலைப் பெருமை என்பதும் ஒன்றுண்டு. சென்ற டிசம்பர் சீஸனில், ஒரு கச்சேரிக்குப் போயிருந்தோம். எங்களுக்கு மூன்று வரிசை முன்பாக ஒருவர் உட்கார்ந்து கொண்டு ஆ! பலே! அப்படிப் போடு' என்று தொடையில் தாளம் போட்டுக் கொண்டு, தானும் பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அவர் பாடகரின் தகப்பனார் என்ற உண்மை, கச்சேரி முடிந்த பின்தான் தெரிய வந்தது. நூற்றுக்கணக்கான ரசிகர்களைத் தன் குரல் வளத்தால் கட்டிப்போட்டு மகிழ்விப்பது எளிதான செயலா என்ன? தன் மகனைப் பற்றிய அந்த மனிதரின் பெருமை நியாயமானதாகவே தோன்றியது.

செய்தொழில், கலை போன்றவற்றில் பெயரெடுத்திருப்பவரின் முதுகில் தட்டிக் கொடுப்பது அந்த நபரை மேலும் உற்சாகப்படுத்த உதவும்தான். ஆனால், வியாபாரத்தில் இந்தத் தன்மை சில சமயங்களில் எதிர்மறையாக மாற்றிவிடும்.

அண்மையில் ஒரு நிகழ்வு. எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் தனது வியாபாரத்தை விரிவுபடுத்திக் கொண்டே போனார். அவரின் தாயார் எல்லாரிடமும் பெருமையாகச் சொல்லியபடியிருந்தார். அவன் சூப்பர் இன்டெலிஜென்ட் மாமி' போன்ற அடைமொழிகள் வேறு. உள்ளபடியே அவன் பெயர் பிரபல நாளேடுகளில் நல்லபடியாக அடிபட்டுக் கொண்டிருந்தது.
ஆனால், போகப் போக நிலைமை முற்றிலும் மாறியது. வெற்றிப் பாதையில் விரைந்து செல்கையில் எங்கேயோ சறுக்கியது. விளைவு? இன்று சிக்கலில் மாட்டிக் கொண்டு வழக்குரைஞர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறான். இப்போதும் அவன் பெயர் ஏடுகளில் வருகிறது. ஆனால் வேறுவிதமாக! பெற்றோரும் உற்றாரும் முக்கியமான வேளைகளில் அறிவுரை சொல்லி, வேகத்தைக் குறைக்கும் வேகத்தடையாக இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

இன்றைய நாளில் பழைய பாரம்பரியப் பெருமைகளைப் பேசிக் கொண்டிருந்தால், அதைச் செவிமடுக்க யாரும் தயாரில்லை. நூறு ரூபாய் சம்பளத்தில் மூன்று பேரைக் கட்டிக் காத்தேன்'... 1960-லேயே எங்களுக்கு ரெண்டு கார் இருந்தது' போன்ற பெருமைகள் வீண்.

ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் அதை உணராமல், பழம் பெருமைகளைப் பேசிக் கொண்டே பொழுதைக் கடத்துகிறார்கள். மொழி, மதம், குடும்பம் என்று ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொன்று. அவர்கள் கூற்றில் ஓரளவு உண்மை இருப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அதே சமயம் எதார்த்த நிலைமையை உணராது செயல்பட்டால்? மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலே மகிமை இல்லை' என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பே பாரதியார் பாடியிருக்கிறாரே?

இன்றைய அரசியலில் மிக தூக்கலாகத் தெரிவது இரண்டு தன்மைகள்தான். முதலாவது, குறைந்துவரும் சகிப்புத் தன்மை; இரண்டாவது அதிகரித்துவரும் ஊழல். என்றைக்கு முன்னது அதிகரித்து, இரண்டாவது குறைகிறதோ அன்றுதான் இந்தியக் குடிமகனாக நாம் ஒவ்வொருவரும் பெருமைப்பட்டுக் கொள்ள முடியும்.
விமானத்தில் 150 பேர் உயிர் தப்பினர்

Added : ஆக 04, 2018 05:32

புதுடில்லி:மேற்காசிய நாடான, சவுதி அரேபியாவின், ரியாத் நகரில் இருந்து, 150 பேருடன் மும்பை புறப்பட்ட, 'ஜெட் ஏர்வேஸ்' விமானம் சறுக்கியபடி, ரன் வேயை விட்டு வெளியில் சென்று நின்றதால், விபத்து நடக்காமல் தப்பியது.
நேற்று காலை, ரியாத்தில் இருந்து, 142 பயணியர் உட்பட, 150 பேருடன், மும்பைக்கு புறப்பட்ட, 'ஜெட் ஏர்வேஸ்' விமானம் சறுக்கியதால், ரன் வேயை விட்டு வெளியே சென்று நின்றது.உடனே சம்பவ இடத்திற்கு வந்த, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்தில் இருந்த பயணியரை பத்திரமாக கீழே இறக்கி, விமான நிலைய வளாக கட்டடத்தில் தங்க வைத்தனர்.
ரன் வேயில் சென்ற போது, விமானி திடீரென பிரேக் போட்டதால், விமானம், ரன் வேயை தாண்டி சென்று நின்றதாக, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.சம்பவம் குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பதாக, மும்பையை சேர்ந்த, ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
மருத்துவ இடங்கள் நிரம்பின இன்று மாணவர் சேர்க்கை இல்லை

Added : ஆக 04, 2018 00:04

சென்னை:தமிழகத்தில், நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள் அனைத்தும் நிரம்பின. இதனால், இன்று நடைபெறுவதாக இருந்த மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அரசு, தனியார் மருத்துவ கல்லுாரிகளில், மாநில ஒதுக்கீட்டில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள் அனைத்தும் நிரம்பி, வகுப்புகள் நடைபெறுகின்றன. நிர்வாக ஒதுக்கீட்டில், 516 எம்.பி.பி.எஸ்., - 715 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இதற்கான கவுன்சிலிங், ஜூலை, 30, 31ல் நடந்தது.
இந்த கவுன்சிலிங்கில் நிரம்பாத, 128 இடங்களுக்கான கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நேற்று நடந்தது. இதில், பகல், 12:30 மணிக்குள் அனைத்து இடங்களும் நிரம்பின. இதனால், இன்று நடைபெற இருந்த கவுன்சிலிங் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மருத்துவ தேர்வுக்குழு செயலர், செல்வராஜன் வெளியிட்ட அறிவிப்பு:நிர்வாக ஒதுக்கீட்டில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன. இதனால், இன்று நடைபெற இருந்த கவுன்சிலிங் ரத்து செய்யப்படுகிறது. மாணவர்கள் யாரும் வர வேண்டாம். இன்றைய கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டிருந்த மாணவர்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படுவர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
ராமாயண காவிய யாத்திரை ரயில் ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்பாடு

Added : ஆக 03, 2018 23:39 |


சென்னை: ராமஜென்ம பூமியான அயோத்திக்கு, ராமாயண காவிய யாத்திரை என்ற, 'ஏசி' சிறப்பு ரயிலை, ஐ.ஆர்.சி.டி.சி., இயக்குகிறது. இந்த யாத்திரை ரயில், கேரள மாநிலம், கொச்சுவேலியில் இருந்து, வரும், 31ல் புறப்பட்டு, மதுரை, திருச்சி, சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்படுகிறது.

இப்பயணத்தில், ராமபிரான் வனவாசம் தொடங்கிய, மத்திய பிரதேசத்தில் உள்ள சித்திரக்கூடம், அகலிகை சாபவிமோசனம் பெற்ற இடமான, உத்தர பிரதேசத்தில் உள்ள சிருங்கவெற்பூர் மற்றும், துளசிதாசர் ராமாயணம் இயற்றிய, துளசி மானசமந்திர் சென்று வரலாம்.

பீஹார் மாநிலத்தில் உள்ள பழமையான மிதிலை நகரான தர்பங்கா, சீதை பிறந்ததாக கருதப்படும் சீதாமார்ஹி, ராமர் பிறந்த உத்தர பிரதேசம், அயோத்தி, சீதை தங்கியிருந்த மஹாராஷ்டிரா மாநிலம் பஞ்சவடி, ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற, தமிழகத்தின் ராமேஸ்வரம், திருப்புல்லாணி, தேவிபட்டினம் உட்பட, பல புனித தலங்களுக்கு சென்று வரலாம்.

மொத்தம், 12 நாட்கள் சுற்றுலாவிற்கு, 'ஏசி' மூன்றடுக்கு பெட்டியில் பயணம் செய்ய, ஒருவருக்கு, 39 ஆயிரத்து, 350 ரூபாய் கட்டணம்.மேலும் தகவலுக்கு, சென்னை, ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 90031 40681, 98409 02919 என்ற, மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
அண்ணா பல்கலையில் ஊழலுக்கு இடமில்லை: துணைவேந்தர் உறுதி

Added : ஆக 03, 2018 14:21 |


  சென்னை: அண்ணா பல்கலையில் ஊழலுக்கு இடமில்லை என துணைவேந்தர் சூரப்பா கூறியுள்ளார்.

சஸ்பெண்ட்

அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளுக்கு தேர்வு நடத்தும் தேர்வுத் துறையில் விடைத்தாள் திருத்துவதில் முறைகேடு நடந்ததாக புகார்எழுந்தது. அதிக மதிப்பெண் வழங்க மாணவர்களிடம் தலா 10 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, திண்டிவனத்தில் உள்ள அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லுாரி முதல்வர் விஜயகுமார் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, உமா, விஜயகுமார், அண்ணா பல்கலையில் கணிதத்துறையில் உதவி பேராசிரியராக பணிபுரியும் சிவக்குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 19 மாணவர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் பெற்ற 19 மாணவர்களுக்கு சம்மன் அனுப்பி லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், துணைவேந்தர் சூரப்பா கூறுகையில், மறுமதிப்பீட்டு முறைகேடு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது; முறைகேட்டில்ஈடுபட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊழலுக்கு இடமளிக்க மாட்டேன் என்றும் அவர் கூறினார்.

பறிமுதல்

இது தொடர்பாக அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா கூறுகையில், அண்ணா பல்கலையில் ஊழலுக்கு இடமில்லை. விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடு புகாரில் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் எத்தனை பேருக்கு தொடர்பு உள்ளது என்பது தெரியாது. புகார் குறித்து விரிவான , வெளிப்படையான விசாரணை நடத்தப்படும். இந்த விவகாரத்தில் தொடர்புள்ளவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். விடைத்தாள் முறைகேடு தொடர்பாக சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோப்பையும் கவனமாக பரிசீலனை செய்து வருவதாக கூறினார்.

நடவடிக்கை

அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறுகையில், பேராசரியை உமா முறைகேட்டில் ஈடுபட்டது நிருபணமாகியுள்ளதாகவும், ஆய்வுக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

இந்தியாவில் முதன்முறையாக தினமலர் ஐ பேப்பர் அறிமுகம்

Updated : ஆக 03, 2018 15:51 | Added : ஆக 03, 2018 12:50 |



சென்னை: இந்தியாவில், முதல்முறையாக ஐ பேப்பர் ஆப்பை தினமலர் அறிமுகம் செய்துள்ளது என்பதை வாசகர்களுக்கு மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம். பத்திரிகை உலகில் தொழில்நுட்ப ரீதியில் தினமலர் எப்போதும் முதன்மை நிறுவனமாக சிறந்து விளங்கி வருகிறது. பல்வேறு தொழில்நுட்ப யுக்திகளை வாசகர்களுக்கு வழங்குவதில் தினமலர் எப்போதும் முதலிடத்தை பிடிக்கும்.

வீடியோவை நேரடியாக பார்க்கலாம்

ஆன்லைன் செய்திகளில் பெரும் புரட்சி செய்து வரும் தினமலர், புதிதாக ஐபேப்பர் எனும் அப்ளிகேஷனை அறிமுகம் செய்துள்ளது. செய்திகளின் இடையே வீடியோவும், புகைப்பட தொகுப்புகளும் இடம்பெறும். இதனை நேரடியாக பார்த்து கொள்ளலாம்.

தினமலர் நாளிதழை ஆண்ட்ராய்டு போன் மூலம் எளிதில் முழுமையாக வாசிக்கும் வகையில் இந்த அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தினமலர் ஐ பேப்பர் படிக்க ipaper.dinamalar.com
அப்ளிக்கேஷனை பதிவிறக்கம் செய்ய கீழ்க்காணும் லிங்கை பயன்படுத்தலாம் : https://play.google.com/store/apps/details?id=com.ipaper.dinamalar

முதல்கட்டமாக ஆண்ட்ராய்டு போன்களுக்காக அறிமுகமாகியிருக்கும் இந்த அப்ளிகேஷன், விரைவில் ஐபோன், ஐபாட்களுக்காகவும் அறிமுகப் படுத்தப்படவுள்ளது.
மாநில செய்திகள்

பயணிகள் சேவையில் 40 ஆண்டுகளை நிறைவு செய்த வைகை எக்ஸ்பிரஸ்





பயணிகள் சேவையில் 40 ஆண்டுகளை நிறைவு செய்த வைகை எக்ஸ்பிரஸ்

பதிவு: ஆகஸ்ட் 04, 2018 04:45 AM

சென்னை,

பயணிகள் சேவையில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சுதந்திர தினத்தன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறது. 1977-ம் ஆண்டிலேயே 105 கி.மீ. வேகத்தில் சென்ற அதிவிரைவு ரெயில் இதுவாகும்.

தமிழகத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்றைக்கு அதிகம் இயக்கப்பட்டு வந்தாலும், வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு தனி சிறப்புகள் உண்டு. மதுரை-சென்னை இடையே இயக்கப்படும் இந்த ரெயில் 1977-ம் ஆண்டு சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு தனது முதல் பயணத்தை தொடங்கியது.

ரெயில் பெட்டிகள் அப்போது மஞ்சள் மற்றும் பச்சை வர்ணம் பூசப்பட்டிருந்தன. கனடா நாட்டில் தயாரிக்கப்பட்ட 1,850 குதிரைதிறன் கொண்ட ‘ஒய்.டி. எம்.4.ஏ’ என்ற டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு இருந்தது. அந்த காலத்திலேயே மீட்டர்கேஜ் பாதையில் மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் சென்றது.

இந்த ரெயிலை இயக்குவதற்காகவே வேம்படையான், வெங்கடாசலம் என்ற 2 டிரைவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது இந்தியாவில் அதிவேகமாக (மணிக்கு 100 கி.மீ.) சென்ற ராஜஸ்தான்-டெல்லி ‘பிங்க் சிட்டி’ எக்ஸ்பிரஸ் ரெயிலில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி முடிந்ததும் மதுரை திரும்பிய அவர்கள் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை நீராவி என்ஜினில் சோதனை செய்தபோது வேகம் கிடைக்காததால் டீசல் என்ஜினை பொருத்தி மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் இயக்கினர். எனவே வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் தனது முதல் பயணத்தை டீசல் என்ஜினுடனேயே தொடங்கியது. இதற்கான அனுமதியை ‘லோகோ’ இன்ஸ்பெக்டர் சேவியர் வழங்கினார்.

ரெயிலில் தலா 8 முன்பதிவு மற்றும் முன்பதிவில்லாத பெட்டிகளும் இணைக்கப்பட்டிருந்தன. ரெயிலை வேம்படையான், வெங்கடாசலம் ஆகிய இருவரும் மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் இயக்கி புதிய சாதனை படைத்தனர். அவர்களைப்போல பால்டேவிட் சாம் உள்பட 6 பேர் கொண்ட டிரைவர் குழுவினர் ஷிப்டு முறையில் அந்த ரெயிலை இயக்கினர். இன்றைக்கும் அதே 105 கி.மீ. வேகத்திலேயே இந்த ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்ட ஏ.சி. பெட்டி முதல் முறையாக 1984-ம் ஆண்டு இந்த ரெயிலில் தான் இணைக்கப்பட்டது. தெற்கு ரெயில்வேயில் நவீன ஜன்னல், கண்ணாடி ஜன்னல், டியூப்-லைட் போன்ற வசதிகளும் இந்த ரெயிலில் தான் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டன.

அதிக திறன்கொண்ட முதல் என்ஜின் இந்த ரெயிலில் தான் பொருத்தப்பட்டது. 1980-ம் ஆண்டில் 2 குழல் கொண்டு ஒலியை எழுப்பும் ‘ஹாரன்’கள் இந்த ரெயிலில் மட்டுமே பொருத்தப்பட்டிருந்தது.

வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை அப்போது இயக்கிய டிரைவர்களில் பால்டேவிட் சாம், ‘லோகோ’ இன்ஸ்பெக்டர் சேவியர் ஆகியோர் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அந்தநாள் ஞாபகங்கள் குறித்து 85 வயதை கடந்த பால்டேவிட் சாம் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

1970-ம் ஆண்டுகளில் தமிழக ரெயில்களின் சராசரி வேகம் மணிக்கு 70 முதல் 75 கி.மீ. தான் இருந்தது. இதுபோன்ற சூழ்நிலையில் தான் வைகை எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த காலத்தில் ‘டோக்கன் சிக்னல்’ முறைதான் இருந்தது. டென்னிஸ் பேட் வடிவில் இருக்கும் டோக்கனை ஒரு ரெயில் நிலையத்தை ரெயில் கடக்கும்போது டிரைவர் தூக்கி எறிந்துவிட்டு, அந்த ரெயில் நிலையத்தில் வேறொரு டோக்கனை ஓடும் ரெயிலில் நின்றபடியே வாங்கிச்செல்ல வேண்டும்.

ஆனால் வேகமாக செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் அது முடியாது என்பதால், இதற்காகவே என்ஜினில் நவீனகருவி பொருத்தப்பட்டிருக்கும். இன்னும் குறைந்த நேரத்திற்குள்ளாகவே மதுரை-சென்னை இடையே இந்த ரெயிலை இயக்க முடியும். அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் ரசிகர் சென்னையை சேர்ந்த அருண் பாண்டியன் கூறும்போது, “சேத்துப்பட்டு பாலத்தில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் அசுரவேகத்தில் புழுதியை கிளப்பிக்கொண்டு செல்வதை பார்க்கவே சந்தோஷமாக இருக்கும். இந்த ரெயிலின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் எனது நண்பரும், இந்த ரெயிலின் முதல் டிரைவர் குழுவில் உள்ளவருமான பால்டேவிட் சாமின் மகன் கிறிஸ்டோபருடன் இணைந்து மதுரை ரெயில் நிலையத்தில் ‘கேக்’ வெட்டி கொண்டாடுவது வழக்கம். அன்றைக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் இருந்த மஞ்சள் - பச்சை நிறத்திலேயே மீண்டும் வர்ணம் பூச வேண்டும் என்பது எங்கள் ஆசை” என்றார்.
தலையங்கம்

முதிர்வயதில் பராமரிப்பு



முதுமை என்பது மனிதனுக்கு மட்டுமல்ல, அத்தனை உயிர்களுக்கும் துயர்தருவது. நெற்றியில் சுருக்கங்களும், உடலில் உபாதைகளும், நடையில் தளர்ச்சியும் ஏற்படும் நேரம்.

ஆகஸ்ட் 04 2018, 03:00

முதுமை என்பது மனிதனுக்கு மட்டுமல்ல, அத்தனை உயிர்களுக்கும் துயர்தருவது. நெற்றியில் சுருக்கங்களும், உடலில் உபாதைகளும், நடையில் தளர்ச்சியும் ஏற்படும் நேரம். இந்தநேரத்தில் ஆலமரம் கீழே விழுந்துவிடாமல் இருக்க விழுதுகள் தாங்குவது போல, முதிர்வயதில் அவர்களை பெற்ற பிள்ளைகள் காப்பாற்றுவது கடமையாகும். அரசு பணிகளில் ஓய்வுபெற்றவர்களுக்கு மாதாந்திர பென்‌ஷன் வரும், தங்கள் காலில் தாங்களே நிற்கமுடியும். தனியார் நிறுவனங்களில் மாதச்சம்பளம் பெறுபவர்களுக்கு ஓய்வுபெறும் நேரத்தில் பணிக்கொடை, ‘பிராவிடண்ட் பண்டு’ என்று பணம் வரும். ஆனால் அன்றாடங் காய்ச்சிகளுக்கு தினமும் சாப்பிட செலவழிப்பதற்குத் தான், தொட்டுக்கோ, துடைத்துக்கோ என்று பணம் இருக்குமேதவிர, சேமிப்புக்கு பணம் இருக்காது. பிள்ளைகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்திருப்பார்கள். ஆனால் படித்தவர்களோ, படிக்காதவர்களோ, பணம் படைத்தவர்களோ–பாமரர்களோ தங்களை பெற்ற பெற்றோரை முதிர்வயதில் கவனிக்காத சூழ்நிலை பல இடங்களில் இருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் நாம், மன வேதனையுடன் பார்த்து வருகிற ஒரு பிரச்சினைக்கு, அசாம் மாநிலம் தீர்வுகாண முயன்று இருக்கிறது. முதிர்வயதில், தம் பிள்ளைகளால் கைவிடப்பட்டு, ஆதரவற்றோர் இல்லங்களில் வாழும் (வாடும்) பெரியவர்களுக்கு மன ஆறுதலைத் தருகிறவகையில், ‘பிரணாம்’ என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அசாம் மாநில அரசு ஊழியர்கள், தமது பெற்றோரிடம் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வதற்கான வழிமுறைகள் சட்டம் 2017 (சுருக்கமாக ‘பிரணாம்’ சட்டம்) வருகிற அக்டோபர் 2–ந்தேதி காந்தி ஜெயந்தி முதல் அமலுக்கு வருகிறது. இப்போதைக்கு இந்தச் சட்டம், மாநில அரசு ஊழியர்களை மட்டுமே கட்டுப்படுத்தும். நாளடைவில், பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று, அசாம் அரசின், அதிகாரபூர்வ இணையதளம் தெரிவிக்கிறது. பாதிக்கப்பட்ட பெற்றோர், தம் பிள்ளைகளுக்கு எதிராகப் புகார் அளிக்க இந்தச் சட்டம் வழி வகுக்கிறது. அதன் மீது, உரிய அலுவலரால் விசாரணை நடத்தப்படும். பிள்ளைகளின் மாத சம்பளத்தில், 10 முதல் 15 சதவீத சம்பளத் தொகை பிடித்தம் செய்யப்பட்டு, பெற்றோர் அல்லது மாற்றுத் திறன் கொண்ட அவர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப் படும். இந்தியாவிலேயே முதன்முறையாக, அசாம் மாநிலத்தில்தான் இது அறிமுகம் ஆகிறது. இந்தச் சட்டத்தின் கீழ் புகார் தெரிவிக்கிற பெற்றோர், வேறு ஏதும் வருமானம் அல்லது ஓய்வூதியம் பெறுகிறவராக இருத்தல் கூடாது. அத்தகைய பெற்றோருக்கு இந்தச் சட்டம் பொருந்தாது.


அசாம் மாநிலத்தின் இந்தச் சட்டம் மூலம், சுமார் 4 லட்சம் பெற்றோர் உடனடியாகப் பலன் பெறுவார்கள். சுமார் 3 கோடி மக்கள் வாழும் அசாம் மாநிலத்திலேயே இத்தனை பேர் பயன் பெறுவார்கள் என்றால், 7 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட, பட்டி தொட்டிகளில்கூட, அரசு அலுவலகங்கள் நிறைந்துள்ள தமிழ்நாட்டில், மாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், அனைத்து மக்களும் தங்கள் பெற்றோரை கவனிக்கும்வகையில் இந்த சட்டம் கொண்டுவந்தால் பயன் பெறுகிறவர்கள் எத்தனை கோடி இருப்பார்கள்? ஆகவே மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அறிமுகப்படுத்துவதில், அமலாக்குவதில் இந்தியாவுக்கே வழி காட்டுகிற நிலையில் உள்ள தமிழகம், உடனடியாக ‘பிரணாம்’ சட்டத்தை தமிழ்நாட்டிலும் நிறைவேற்ற முடியுமா? என்று பரிசீலிக்க வேண்டும். பெற்றோர் இன்றி, அறிவேது? உயர்வேது? வாழ்வேது? வேர் இன்றி, தண்டு ஏது? கிளை ஏது? பழம்தான் ஏது..?

Friday, August 3, 2018

DVAC to examine students in revaluation marks scam

CHENNAI, AUGUST 03, 2018 00:00 IST



At the epicentre:Investigators perused at least 75 answer scripts of Anna University students. 

Will probe printing of marksheets disproportionate to need



The Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) will examine engineering students who reportedly benefited in the alleged revaluation marks scandal that has rocked Anna University.

After perusing at least 75 answer scripts in which the marks awarded in the third revaluation were found to be grossly disproportionate to the original score, investigators have decided to record the statements of students in the sensational bribery case involving academicians of the varsity, including its former Controller of Examinations G.V. Uma, sources in the agency said.

Pattern studied

“We studied the pattern of pass or enhanced marks that were given to students in April/May 2017. There is clear suspicion since students who scored single-digit marks in the first valuation were awarded 10 times more in the third valuation. Thousands of answer scripts that were forged by the suspects to favour students were destroyed,” a DVAC official said. After establishing the prime facie offence, the DVAC registered a case of criminal misconduct, forgery, cheating and conspiracy against 10 professors/assistant professors.

No student named so far

“We have not named any student as accused so far. Preliminary investigation revealed that the students paid Rs. 10,000 for boosting marks in the revaluation process. Investigating officers will also examine evaluators who were debarred for not cooperating with the suspects.”

Another scam

Meanwhile, another scam relating to the printing of empty mark statements over and above the requirement has surfaced in the university. The Department of Higher Education has formally lodged a complaint with the DVAC since the alleged scam involves several crores of rupees. The University varies its grading system with each regulation and the marksheets reflect the variations.

The allegation is that a work order was placed to print empty marksheets much more than the actual requirement. “Instead of printing the marksheets for one academic year, the order was given to stock the empty statements for at least nine academic years. This would be a waste since the grading, format, etc is bound to change...this has caused a huge loss to the State exchequer. A formal complaint has been lodged with the DVAC for appropriate action,” a senior official in the Department of Higher Education said on Thursday.

A source at the university said there was no need to print in such huge quantities as regulations change and the university had shifted to choice-based credit system. The scam itself was exposed after a petition was received by the higher education department several months ago. When contacted, University Vice-Chancellor M.K. Surappa said, “If people are guilty, I will certainly take action against them.”

(Inputs from R. Sujatha)
Trichy gears for ‘Aadi Perukku’ fest, declares local holiday in dist today
TIMES NEWS NETWORK

Trichy:  03.08.2018


A local holiday has been declared in Trichy district in view of the Aadi Perukku festival to be held on the banks of the Cauvery river on Friday.

A statement issued by collector K Rajamani said all schools, colleges and government offices would remain closed on Friday. Government offices and educational institutions would function on August 18 (Saturday) in lieu of the holiday. The festival is celebrated to show gratitude to the Cauvery river for sustaining prosperity in the region.

The Trichy corporation has identified seven spots on the Cauvery banks for devotees to take a safe dip. The safe zones identified include Garuda mandapam, Amma mandapam, Thillainayagam ghats, Ayyalamman ghats, Gandhi ghats, Odathurai ghats and Subramaniaswamy temple ghats along the Cauvery banks. The civic body said barricades and drinking water tanks were provided in all the seven safe zones, which are equipped with floodlights to enable early morning prayers.

“Since people follow the customary practice of abandoning wet clothes in the river, we have placed baskets for them to drop the used clothes. Similarly, there will be tanks in Amma mandapam ghats filled with Cauvery water for people to take bath instead of entering the river,” an official with civic body said. Two medical teams will be fielded in Amma mandapam and Odathurai ghats to address emergency medical needs of visitors whose count is expected to exceed one lakh. The fire service department said a rescue team of 150 personnel will be fielded across the Cauvery banks with safety ropes and life jackets to prevent any untoward incidents.


PREPARED: Water tanks set up close to Cauvery banks in Amma mandapam ghats for people to take bath instead of entering the river
‘I’m being targeted for bringing in reforms’

Former Anna University controller of examinations G V Uma, the prime accused in the DVAC case of a racket of professors and examiners taking money to rig re-evaluation marks told TOI that she has been falsely implicated in the case for bringing in reforms in the system. Excerpts from an interview on Thursday:

You are accused of taking Rs10,000 each for re-evaluation of papers.

It’s completely false. I have no link to this scandal. If anything has happened at the lower level, I’m unaware of it. I’m not connected with any money transaction.

As the controller of examinations, you had barred 1,100 examiners in November 2017, as there were huge variations between marks given during primary evaluation and re-evaluation.

I believe I’m targeted for bringing in reforms. I’m yet to recover from this. I have transparently given the details of re-evaluation data to media regularly. Boldly I gave 10 years data. So I have nothing to hide. Every reform has been done after taking the approval of senior officials. I have implemented perfect systems. Earlier it was not well-defined. During evaluation, we have taken affidavits from teachers that they would give marks only as per the key.

Has the vice-chancellor spoken to you?

I met the VC and briefed him today morning.

How do so many Anna University students who flunk pass after re-evaluation?

Educational pedagogy is such that no two teachers give the same mark for the same paper. At the state level there were 64 lakh answer sheets, of which only 16,000 had mark change (referring to the April/May 2017 exam).

When records show 73,000 failed students passed after reevaluation, how can you say only 16,000 got higher marks?

I’m talking about grade variation (meaning 16,000 got a new grade after re-evaluation).
CASH FOR MARKS

Anna univ cash-for-marks in vogue for 10 years: Ex-VC

Students Pass Down ‘Paper-chasing’ Skills To Juniors

Siddharth.Prabhakar@timesgroup.com  03.08.2018

The cash-for-mark scam at Anna University, which the directorate of vigilance and anti-corruption (DVAC) has sought to expose, has been happening for more than ten years, and such things cannot happen without the knowledge of the vice-chancellor, former Anna University vicechancellor E Balagurusamy told TOI.

“Crores of rupees have been made through this,” he said. For students, too, it is not new. Paper chasing—that’s what Anna University students call the malpractice.

“It signifies how one has to chase and find out who the examiner in-charge of re-evaluating your paper would be, paying the bribe and getting a pass mark,” explains a student who has seen it all. The code — for bribing professors to get pass marks in re-evaluation — is no longer a secret, they say.

DVAC officials said one of the papers in their custody shows an increase of 70 marks after reevaluation. Officers said they’ve found that a small group of university staff (teaching and non-teaching) doubled up as agents who secretly dealt with students in need. For students of affiliated colleges, contact details of these agents were passed on from seniors to juniors; only trusted people were allowed into the circle.

“Numbers are shared only if the student in question has flunked exams multiple times and has the financial wherewithal to clear the arrears by paying bribe. Even close friends are not privy to it,” said a former student. In the FIR filed on Tuesday, DVAC said former controller of examinations G V Uma and some professors had taken ₹10,000 per student to forge answer sheets or rig the marks.

Former students of the university told TOI that it wasn’t so simple; there were multiple rates depending on the number of arrears and the agent who the student gets in touch with. For instance, around three years ago, the bargain for rigging one re-evaluation paper started at ₹2,000. “Two of my friends paid ₹15,000 for clearing the arrears through re-evaluation,” said an Anna University graduate, now an IT employee. “Some agents assure pass mark, while some others are non-committal.”

“For qualitative subjects, people write pages and pages, and hope for pass mark. But for papers which have problem solving, they just cannot pass without knowing the subject well. After repeated arrears, they go paper chasing,” said another alumnus.

Asked what systemic changes are needed to clean up the system, former vice-chancellor Balagurusamy said first the vice-chancellor and the controller of examinations should be honest.

Break year students bag 40% of med seats in govt colleges

Ram.Sundaram@timesgroup.com

Chennai 03.05.2018

: Nearly half the candidates who secured an MBBS seat in government medical colleges this year had taken a break of at least a year or more to prepare for National Eligibility cum Entrance Test (NEET), data shows.

Of the 2,500 candidates who cleared NEET and got admission at medical colleges, as many as 1,269 cleared had their Class XII board exams before 2017, according to official data. The remaining 1,263 belonged to the current batch (2017-2018).

Compared to the previous year, there has been an increase in the number of candidates taking a break after Class XII board exams. Data shows that last year, a little over 40% candidates belonged to the previous batches. Many among them had joined private coaching centres and paid a hefty fee to prepare for NEET, say experts.

Commenting on this, Educationist Prince Gajendra Babu said this figure will increase further in the coming years as parents, who are either unable to pay the fees demanded by private medical colleges or not sure about the quality of teaching in these private institutions, encourage their children to skip the counselling that particular year, prepare better next year and get a seat in government medical college the following year.

“Instead of spending ₹30 lakh to ₹35 lakh in private colleges for the MBBS course, some prefer spending ₹2 lakh to ₹3 lakh at coaching centres for two years to ensure that they get a government seat where the fees would be much less. But meritorious students from economically weaker sections of the society will be eliminated from the competition in the longer run,” Babu said.

G R Ravindranath, general secretary, Doctor’s Association for Social Equality, said the trend is unavoidable with the government relaxing rules pertaining to upper age limit to take up NEET .

However, this trend might change in the next few years given the rate of corporatisation and privitisation of the health care system in the country and the weakening of public healthcare by reducing fund allocation.

“Many small and medium size medical clinics would shut down becaue of these policies thereby bringing down the demand for doctors. Also, given the duration of the course (seven-and-a-half years including postgraduation), high cost of education and fewer job opportunities, would deter more students from pursuing medicine,” he told TOI.
Caught with lover, woman bites off penis of husband

Karal.Marx@timesgroup.com

Vellore: 03.08.2018

The Vellore police on Wednesday arrested a 45-yearold woman for biting off a part of her husband’s penis during a scuffle with him after he caught her with her lover in Thuraimoolai village near Gudiyatham in Vellore district.

The woman, Jayanthi, has been charged with attempted murder, a police officer said.

The incident happened in the early hours of Monday after which villagers took a bleeding Senthamarai and the severed part of his penis to Vellore Government Hospital and later to Rajiv Gandhi Government Medical College and Hospital in Chennai for advanced care.

Senthamarai, 55, a farmer, and Jayanthi had taken part in avillage temple festival on Sunday as part of the auspicious Aadi month festivities.

CAUGHT RED HANDED

‘Enraged, he threatened to make their illicit relationship public’

After the temple event, they went for a street play, the officer said. Around 1.30am Jayanthi slipped out of the crowd on the pretext of needing to relieve herself.

When Jayanthi failed to return more than an hour later, a worried Senthamarai went in search of her. He later found her in a compromising position with another villager, Dhatchanamoorthi.

“Enraged, Senthamarai grabbed his wife and her lover and threatened to make their relationship public,” the officer said. “ Noise from the festivities outside drowned out Dhatchanamoorthi’s cries for help.”

“In the scuffle that ensued, Senthamarai’s dhoti fell

off. Jayanthi, fearing she and her lover would be thrashed, wanted to escape before villagers reached the spot,” he said. “She bit his penis, severing part of it, and fled with her lover.”

Doctors at Vellore Medical College and Hospital provided Senthamarai with first aid before he was moved to Rajiv Gandhi Government Medical College and Hospital in Chennai. Senthamarai’s condition is said to be stable.

Police tracked down Jayanthi by monitoring Dhatchanamoorthi’s cellphone. They registered a case under sections IPC Sections 294(b) (obscenity in public), 324 (causing hurt with dangerous weapons or means) and 307 (attempt to murder).

Police later said she “confessed to the crime”. When she was produced in court, it remanded her in Vellore Central Prison for Women.
15 ஆயிரம் ரூபாய்க்கு ‘ஆப்பிள் ஐபோன்’: சோப்புக்கட்டியைக் கொடுத்து வங்கி மேலாளரை ஏமாற்றிய நபர்கள்

Published : 01 Aug 2018 21:56 IST

சென்னை

 

ஏமாற்றிய நபர், சோப்புக்கட்டி, ஐபோன்

குறைந்த விலையில் ஆப்பிள் ஐபோன் கிடைக்கிறதே என்று ஏமாந்து சோப்புக்கட்டியை வாங்கிய வங்கி மேலாளர் மயிலாப்பூர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

மயிலாப்பூர், நடுத்தெருவில் வசிப்பவர் ரமேஷ் (36). இவர் லஸ் சர்ச் சாலையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராகப் பணியாற்றுகிறார்.

வங்கியின் வழக்கமான பணிகள் முடிந்த பின்னர் தனது அறையில் அமர்ந்து கோப்புகளைப் பார்த்துக்கொண்டிருந்தார் ரமேஷ். அப்போது இரண்டு பேர் அவரைப் பார்க்க வந்திருப்பதாக செக்யூரிட்டி சொல்ல, உள்ளே வரச்சொல்லி தனது அறையில் அமர வைத்திருக்கிறார்.

'அவர்களிடம் என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள்?' என்று கேட்டுள்ளார். 'சார், நாங்கள் ஐபோன் கம்பெனியில் பணியாற்றுபவர்கள், எங்களுக்கு மட்டும் குறைந்த விலையில் ஐபோன் கிடைக்கும், அதை முக்கியமான நபர்களுக்கு அதே விலையில் விற்றுவிடுவோம்' என்று கூறியுள்ளனர்.

அவர்களை சந்தேகத்துடன் பார்த்த ரமேஷ், 'எனக்கு செல்போன் எல்லாம் வேண்டாம்' என்று கூறியுள்ளார். 'சார், அப்படிச் சொல்லாதீர்கள். இது பல வசதிகள் கொண்ட ஐபோன். போனால் கிடைக்காது' என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். 'என்ன விலைக்கு தருவீர்கள்? உங்களை எப்படி நம்புவது?' என்று கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் புத்தம் புதிய ஐபோன் டப்பாவை எடுத்துக் காட்டியுள்ளனர். அதனுள்ளே புத்தம் புது ஐபோன் இருந்தது. அதை எடுத்து ஆன் செய்து காட்டியுள்ளனர். அதில் உள்ள அம்சங்களைப் பார்த்தவுடன் ரமேஷுக்கும் ஆசை வந்துள்ளது. 'எவ்வளவு விலை?' என்று கேட்டுள்ளார். 'வெறும் 15 ஆயிரம் மட்டும்தான் சார்' என்று அவர்கள் கூறியுள்ளனர்.

'அவ்வளவு குறைவாக ஏன் தருகிறீர்கள்?' என்று கேட்டதற்கு, 'அதான் சொன்னோமே சார், நாங்கள் அந்த நிறுவனத்தில் பணியாற்றுவதால் எங்களுக்கு குறைந்த விலைக்கு கிடைக்கும். அதை நாங்கள் விற்றுவிடுவோம்' என்று கூறியுள்ளனர்.

மிகுந்த தயக்கத்துடன் 15 ஆயிரம் கொடுத்து செல்போனை வாங்கியுள்ளார். செல்போனை பழையபடி அட்டைப்பெட்டியில் போட்டு அவரிடம் கொடுத்துள்ளனர். அதை வாங்கி டேபிள் மீது வைத்துள்ளார்.

’சார் வேறு யாருக்காவது வேண்டுமென்றாலும் சொல்லுங்கள் சார், அடுத்த வாரம் வருகிறோம்' என்று கூறி அவர்கள் விடைபெற்றுச் சென்றனர். ஐந்து நிமிடங்கள் கழித்து ஆவலோடு ஆப்பிள் ஐபோனைப் பிரித்துப் பார்த்துள்ளார்.

அட்டைப்பெட்டியை பிரித்துப் பார்த்தவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அட்டைப்பெட்டிக்குள் ஆப்பிள் ஐபோனுக்குப் பதில் பிரபல கம்பெனியின் சோப்புக்கட்டி இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ரமேஷ் அறையைவிட்டு வெளியே ஓடிவந்து பார்த்துள்ளார். அதற்குள் அந்த நபர்கள் மாயமாகிவிட்டனர்.

வேறு வழியில்லாமல் சோப்புக்கட்டியை எடுத்துக்கொண்டு மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்ற போலீஸார், 'சார் எங்காவது ஆப்பிள் ஐபோன் 15 ஆயிரத்துக்கு கிடைக்குமா? அதை விற்பவன் வங்கி உள்ளே வந்துதான் விற்க வேண்டுமா?' என்று கேட்டு புகாரை வாங்கியுள்ளனர்.

பின்னர் வங்கியில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி பதிவுகளை எடுத்துள்ளனர். அதில் இரண்டுபேர் முதுகில் பையை மாட்டியபடி நிற்பதும், வங்கி மேலாளருடன் பேசுவதும் பதிவாகி இருந்தது. அதை வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதைபதைத்துப் போய் விசாரித்தார்; என்ன உதவி வேண்டும் என்றார்: ஸ்டாலின் நேரில் வந்ததால் நெகிழ்ந்த பிரியாணி கடைக்காரர் பேட்டி

Published : 02 Aug 2018 14:06 IST

சென்னை
 


பிரியாணி ஹோட்டலில் ஊழியர்களை நலம் விசாரிக்கும் ஸ்டாலின்

சம்பவம் நடந்ததைக் கேள்விப்பட்டவுடன் என்னை அழைத்து பதைபதைத்துப்போய் கேட்டார், என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன் என்றார், அவர் அன்பால் நெகிழ்ந்து போனோம் என்று பிரியாணி கடை உரிமையாளர் கூறியுள்ளார்.

பிரியாணி கடையில் ஊழியர்களை திமுகவினர் தாக்கிய வீடியோ வைரலாகி கடும் விமர்சனம் எழுந்த நிலையில் இது செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதுபோன்ற வன்முறைகளை எந்நாளும் திமுக ஏற்றுக்கொள்ளாது என்று அவர் தெரிவித்து அவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றார்.
 
இதனிடையே, வன்முறையில் ஈடுபட்டு ஓட்டல் ஊழியர்களைத் தாக்கிய யுவராஜ், திவாகர் இருவரையும் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்வதாக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார்.

ஸ்டாலின் தனது ஹோட்டலுக்கு நேரில் வந்து ஆறுதல் கூறிச் சென்றதில் பெரிதும் நெகிழ்ந்து போன பிரியாணிக்கடைக்காரர் தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “நேற்றே எங்களை அறிவாலயத்துக்கு ஸ்டாலின் அழைத்தார், அண்ணா அறிவாலயம் சென்றோம், தாக்கப்பட்டவர்களையும் அழைத்துச் சென்றோம். அவர்களுக்கு ஆறுதல் சொன்ன அவர் மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டார். பின்னர் எந்தப் பகுதியில் கடை உள்ளது என்று கேட்டார்.

விருகம்பாக்கத்தில் கடை அமைந்துள்ள இடம் பற்றிக் கூறினோம். நாளை நான் நேரில் வருகிறேன் என்றார். நாங்கள் பதறிப்போய், உங்களுக்கு பல்வேறு பணிகள் உள்ளன. எங்களைத்தான் அழைத்து பார்த்துவிட்டீர்கள், உங்கள் பணிகளுக்கு இடையூறாக எதற்கு வரவேண்டும் என்று தெரிவித்தோம். இல்லை எனக்கு மனது கேட்கவில்லை வந்தே தீருவேன் என்று நேரில் வந்தார்.

ஊழியர்களிடம் நலம் விசாரித்தார். சம்பவம் நடந்த இடத்தையும் பார்வையிட்டார், தாக்கியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும், உங்களுக்கு வேறு என்ன மாதிரி உதவி வேண்டும் என்று தயங்காமல் கேளுங்கள் என்றார்.

நாங்கள் நெகிழ்ந்து போனோம். நீங்கள் வந்ததே எங்களுக்குப் போதும் வேறு உதவி வேண்டாம் என்று மறுத்துவிட்டோம்'' என்று தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
கணவரின் சொத்தா மனைவி?- உச்ச நீதிமன்றம் கேள்வி

Published : 03 Aug 2018 08:05 IST

புதுடெல்லி 

 


உச்ச நீதிமன்றம்: கோப்புப்படம்

திருமண பந்தத்தில் மனைவி என்பவர் கணவரின் தனிப்பட்ட சொத்தா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இத்தாலியில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த ஜோசப் ஷைன் உச்ச நீதிமன்றத்தில் கடந்த டிசம்பரில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “இந்திய தண்டனை சட்டத்தின் 497-வது பிரிவு அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இந்த சட்டத்தின்படி, தவறான உறவின்போது ஆண்கள் மட்டுமே குற்றவாளிகளாக கருதப்படுகின்றனர். பெண்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்படுவது இல்லை. ஆண்களுக்கு எதிரான இந்த சட்டப்பிரிவை நீக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ரோஹின்டன் நாரிமன், கான்வில்கர், சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியதாவது:

இந்திய தண்டனை சட்டம் 497-வது பிரிவு பெண்களுக்கு சாதகமானது போன்று தெரியும். ஆனால் இந்த சட்டம் பெண் களுக்கு எதிரானது. கணவரின் ஒப்புதலுடன் மனைவி தவறான உறவில் ஈடுபட்டால் அது தவறில்லை. கணவரின் ஒப்புதல் இல்லாமல் மற்றொரு ஆணுடன் உறவு கொண்டால் அது தண்டனைக்குரிய குற்றம் என்று சட்டம் கூறுகிறது.

திருமண பந்தத்தில் மனைவி, கணவரின் தனிப்பட்ட சொத்தா கவே பாவிக்கப்படுகிறார். இது எந்த வகையில் நியாயம்? இவ் வாறு தலைமை நீதிபதி கூறினார்.

இதே வழக்கு கடந்த டிசம்பரில் விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்றம் இதே கருத்தை வெளியிட்டது. திருமணமான பெண் கணவரின் சொத்தா, ஜடப்பொருளா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இந்த வழக்கில் கடந்த ஜூலை யில் மத்திய அரசு 11 பக்கங்கள் அடங்கிய பதிலை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், “திருமண பந்தத்தின் புனிதத் தன்மையை பாதுகாக்க தவறான உறவை குற்றமானதாகவே கருத வேண்டும். 497-வது சட்டப்பிரிவை ரத்து செய்யக்கூடாது” என்று கோரப்பட்டுள்ளது.

பயமுறுத்தும் சாலை விபத்துகள்


By எஸ். ஸ்ரீதுரை | Published on : 03rd August 2018 01:28 AM |

கோயம்புத்தூர் - பொள்ளாச்சி சாலையில், வெகுவேகமாக வந்த ஒரு சொகுசு கார் மோதியதில் ஆறு பேர் ஆகஸ்ட் 1-ஆம் தேதி உயிரிழந்த சம்பவம் கோவை நகரை மட்டுமின்றி தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது. மேலும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாலைகள் பாதுகாப்பானவைதானா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. நெருநல் உளனொருவன் இன்றில்லை' என்பது திருவள்ளுவரின் வாக்காகும். நேற்று உயிருடன் இருந்தவர் இன்று உயிருடன் இல்லை என்பதே இவ்வுலக வாழ்வின் சிறப்பு என்ற கருத்துடைய இக்குறள் மனித வாழ்க்கையின் நிலையாமையை எடுத்துக்கூறுகின்றது.
அன்றாடம் நாம் கேள்விப்படும் சாலை விபத்துக்களோ, சென்ற விநாடி இருந்தவர் இந்த விநாடியில் உயிருடன் இல்லை என்ற புதிய விதியை உருவாக்கி வருகின்றன.

அதிக வேகம், அலட்சியம், சாலை விதிகளை மதியாமை போன்று எத்தனையோ காரணங்களால் சாலை விபத்துக்கள் நேர்கின்றன. விபத்துகள் எதிர்பாராமல் ஏற்படக்கூடியவையே. ஆயினும், விபத்துகள் தவிர்க்கப்படக் கூடியவையே என்பதையும் வாகனங்களை இயக்குவோர் புரிந்து கொள்ள வேண்டும்.

சூழ்நிலைகள் மிக வேகமாக மாறி வருகின்றன. அம்பாசிடர்', பியட்' போன்ற கார்களை மட்டுமே நம் நாட்டுச் சாலைகள் பார்த்த காலம் ஒன்று உண்டு. எப்போதாவது அபூர்வமாக சில நவீன ரக கார்கள் கண்ணில் தென்படும். சென்ற தலைமுறையினரில் பலரும் இருசக்கர வாகனங்களுக்கு முன்பணம் கட்டிவிட்டு, வருடக் கணக்கில் காத்திருந்து வாங்கியவர்கள்தான்.
இப்போது எல்லாம் தலைகீழாக மாறியிருக்கிறது. புதிய பொருளாதாரக் கொள்கை, விதவிதமான வாகனங்களை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்துகொள்ளவும், தேவைக்கேற்ப வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துகொள்ளவும் வழிவகை செய்துள்ளது.

வீட்டுக்கு ஒரு சைக்கிள் இருந்தாலே பெரிது என்ற காலம் போய், ஆளுக்கொரு ஸ்கூட்டர் அல்லது பைக் மற்றும் குடும்பத்துக்கு ஒரு கார் (குறைந்தபட்சம்) சொந்தம் என்ற நிலை உருவாகி விட்டது. யாருக்கும் யாருடனும் பேசுவதற்குக்கூட நேரமில்லை
.
நடுத்தர வர்க்கத்தினரின் நிலை இப்படி இருக்க, பணக்காரர்கள் மற்றும் பெரும் பணக்காரர்களின் தேவைக்கு வானமே எல்லை என்றாகிவிட்டது.
அதிகபட்ச வசதிகள் மற்றும் அதிவிரைவுப் பயணம் என்ற குறிக்கோளுடன் வாகனங்களை வாங்க விரும்பும் இவர்களுக்கென்றே பல லட்சம் ரூபாய்களில் (சில கோடிகளில் கூட) இறக்குமதித் தயாரிப்புகள் கிடைக்கின்றன. விலைக்கு ஏற்ப இறக்குமதி வரிகளும் உண்டு. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று சமூக அந்தஸ்தின் குறியீடாகவே இத்தயாரிப்புகள் வாங்கப்படுகின்றன.

இளைஞர்களும், இளம்பெண்களும் இத்தகைய கார்களை ஓட்டும்போது ஆகாயத்தில் பறப்பது போன்று உணர்வார்கள். ஆனால், சட்டென்று பிரேக் பிடிக்க நேரும்போது வண்டி அவர்களின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்காது. விபத்து நேரிடும்போது யாருக்குமே தப்பிக்க வழியிருக்காது.
சென்னையில் சினிமா நட்சத்திரங்கள் சிலரும் கோடீஸ்வர வீட்டு வாரிசுகளும் இத்தகைய விலையுயர்ந்த இறக்குமதி வாகனங்களை விரைவாக ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்துவதையும் அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படுவதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். குறிப்பாக, பழைய மகாபலிபுரம் சாலை இத்தகைய நிகழ்வுகளுக்கு நிரந்தர சாட்சியாகிவிட்டது. இச்சாலையில் பைக் ரேஸ், ஆட்டோ ரேஸ் படுத்தும் பாடு ஒரு தனிக்கதை.

குடியிருப்புப் பகுதிகளிலேயே, வண்டியைக் கிளப்பி, சில விநாடிகளில் அறுபது எழுபது வேகத்தைத் தொடுபவர்கள் நம்மவர்கள். இந்நிலையில், நல்ல தரமான சாலைகளில், வெளிநாட்டு இறக்குமதி வண்டியை ஓட்டுபவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பது நம்மால் யூகிக்கப்படக்கூடியதே. உண்மையிலேயே விரைவாக ஓர் இடத்தை அடையவேண்டிய தேவையில் இத்தகைய வண்டிகளில் பயணிக்கக் கூடியவர்களும் உண்டு. தாம் நிர்வகிக்கும் தொழிலில் ஒரு விநாடியைக் கூட வீணடிக்க முடியாத நபர்களை நாம் விமர்சிப்பதற்கு ஒன்றும் இல்லை.

அதே நேரம், இத்தகைய வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் (உரிமையாளரே ஓட்டினாலும் சரி) மிகமிகத் திறமையான ஓட்டுநர்களாக இருப்பது முக்கியம். சாலை விதிகளைத் தாங்கள் மதிப்பது மட்டுமல்லாமல், நமது நாட்டில் சாலைகளைப் பயன்படுத்தும் பெரும்பாலானவர்கள் (சாலையைக் கடக்கும் பாதசாரிகள் உட்பட) சாலை விதிகளை முழுவதுமாக மதிக்காதவர்கள் என்பதைப் புரிந்துகொண்டவர்களாக இருத்தல் மிகமிக முக்கியம்.

மது அருந்திவிட்டு இவ்வாகனங்களை ஓட்டக் கூடாது என்பதைத் தனியே கூறத் தேவையில்லை. கோவையில் ஏழு உயிர்களை வாங்கிய காரின் ஓட்டுநர் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. உடல்நிலை சரியில்லாததால், தனக்குச் சற்றே மயக்கமாக இருந்ததாக அவர் கூறியதாகவும் ஒரு செய்தி உலா வருகின்றது. இவற்றில் எது உண்மை என்பது முழுமையான விசாரணைக்குப் பின்பே தெரியவரும்.
ஓட்டுநர்களைப் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களும் அவர்கள் சரியாக உணவருந்தியிருக்கிறார்களா, போதிய ஓய்வு எடுத்துவிட்டு வண்டியை இயக்க வந்திருக்கிறார்களா, ஏதாவது அச்சம் அல்லது கவலையுடன் இருக்கின்றார்களா என்பதுடன் அவர்கள் போதைப் பொருள் பழக்கமுள்ளவர்களா போன்ற தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். எல்லா வாகன ஓட்டிகளுக்கும் இவை பொருந்தும் என்றாலும், மின்னல் வேக இறக்குமதி வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு இந்தக் காரணிகள் வெகுவாகப் பொருந்தும். மத்திய, மாநில அரசுகளும் இவ்விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தி, பள்ளி - கல்லூரி வாகனங்கள், அரசு விரைவுப் பேருந்துகள் போல, இத்தகைய வெளிநாட்டு சொகுசு வண்டிகளுக்கு வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துவது குறித்து யோசிக்க வேண்டும்.

நம் நாட்டின் மக்கள்தொகை, வாகனப் பெருக்கம் இவற்றைக் கணக்கில் கொண்டு, எந்த வண்டியும் எந்தச் சூழ்நிலையிலும் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் விரையக் கூடாது என்ற கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தால்தான் விலைமதிப்பு மிக்க மனித உயிர்கள் காப்பாற்றப்படும்.
மருத்துவ இடம் கைவிட நாள் அறிவிப்பு

Added : ஆக 03, 2018 02:06


சென்னை:'அகில இந்திய கவுன்சிலிங்கில் பெற்ற இடங்களை கைவிட, வரும், 6ம் தேதி கடைசி நாள்' என, மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட அகில இந்திய கவுன்சிலிங், ஜூன், 20, 21ல் நடந்தது. இதற்கான முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இடங்களை பெற்ற மாணவர்கள், அந்தந்த கல்லுாரிகளில், வரும், 8ம் தேதிக்குள் சென்று சேர வேண்டும்.

இந்நிலையில், முதற்கட்ட கவுன்சிலிங்கில் இடங்கள் பெற்றவர்கள், தங்கள் பெற்ற இடங்களை கைவிட விரும்பினால், வரும், 6ம் தேதிக்குள் கைவிடலாம் என, மத்திய சுகாதார இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:முதற்கட்ட கவுன்சிலிங்கில் இடம் பெற்றவர்கள், இடத்தை கைவிட நினைத்தால், கல்லுாரி நிர்வாகத்தை அணுகி, வரும், 6ம் தேதி மாலை, 3:00க்குள் இடங்களை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடலூர் பெண்ணை மணந்த செக் குடியரசு மாப்பிள்ளை

Added : ஆக 03, 2018 00:24



  விருத்தாசலம் : கடலுாரைச் சேர்ந்த பெண் இன்ஜினியரிங் பட்டதாரியை, செக் குடியரசு நாட்டைச் சேர்ந்தவர், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில், திருமணம் செய்து கொண்டார்.

கடலுார் அடுத்த கோண்டூரைச் சேர்ந்தவர் குணசேகரன் - மணிமேகலை தம்பதியின் மகள் சாருலதா, 32; பி.இ., பட்டதாரி. இவர், ஐரோப்பிய நாடான செக் குடியரசில் ஆங்கிலம் கற்பிக்கும் பணி புரிகிறார். அதே நாட்டைச் சேர்ந்த தாமஸ் - க்வேதா தம்பதியின் மகன் லுாகாஸ், 40; கணினி நெட்வொர்க் தொழில் நுட்ப பணியாளர். இருவரும், காதலித்தனர்.

தங்களது பெற்றோரிடம் தெரிவித்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன், கடந்த மார்ச் மாதம் செக் குடியரசு நாட்டின் பாரம்பரிய முறைப்படி லுாகாஸ், சாருலதாவை மணம் முடித்தார். சாருலதா வீட்டில்,தமிழ் பாரம்பரிய முறைப்படியும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

அதையடுத்து. மணமக்கள் இந்தியா வந்தனர். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில், தமிழ் பாரம்பரிய கலாச்சாரப்படி, வேட்டி சட்டை அணிந்த லுாகாஸ், சாருலதாவின் கழுத்தில் தாலி கட்டி, திருமணம் செய்து கொண்டார். உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்தினர்.

மஞ்சளும் தந்தாள்! மலர்கள் தந்தாள்! மங்கள மங்கை மீனாட்சி

Added : ஆக 02, 2018 23:53



மஞ்சளும் தந்தாள்! மலர்கள் தந்தாள்! மங்கள மங்கை மீனாட்சி

ஆடிவெள்ளியும், ஆடிப்பெருக்கும் இணையும் நன்னாள் இன்று. இந்நாளில் காவிரியன்னையுடன் மீனாட்சி, காமாட்சி உள்ளிட்ட அம்மன்கள் மற்றும் மகா லட்சுமியை வழிபட்டால் மங்கள வாழ்வு உண்டாகும்.

* 'பெருக்கு' என்றால் 'பெருகுதல்' மட்டுமல்ல, 'சுத்தம் செய்தல்' என்றும் பொருள். ஆடிப்பெருக்கில் காவிரி பெருக்கெடுத்து ஓடும். அப்போது ஆற்றில் கிடக்கும் எல்லா அசுத்தங்களும் அடித்துச் செல்லப்பட்டு துாய்மை பெறும். மனதிலுள்ள தீய எண்ணங்களை பக்தி என்னும் வெள்ளத்தை பாய்ச்சி அகற்ற வேண்டும் என்பதை ஆடிப்பெருக்கு உணர்த்துகிறது.

* திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், ஈரோடு பகுதிகளில் மக்கள் ஆற்றில் புனித நீராடுவர். ரங்கநாதர், விநாயகர், அகத்தியர் போன்றவர்களோடு சம்பந்தம் கொண்ட காவிரிநதியில் நீராடினால் சுமங்கலி பாக்கியம் உண்டாகும். புதுமணத் தம்பதிகள் மாங்கல்ய பலம் பெற புதிய மஞ்சள் கயிறு மாற்றுவர். விவசாயிகள் விளைச்சல் பெருக வழிபாடு நடத்துவர்.

*தங்க நகைகள் வாங்க ஏற்ற சுபநாள் இன்று. வீட்டுக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் வாங்கலாம். செய்த நற்செயல்களால் புண்ணியம் பெருகுவது போல இந்நாளில் செய்யும் சேமிப்பும் பன்மடங்கு பெருகும். அதோடு தொழில் துவங்கினால் லாபம் பெருகும்.

*லட்சுமி தாயாருக்கு பால், தேன், தானியம், சர்க்கரைப் பொங்கல் படைத்து பூஜை செய்ய மனம் குளிர்ந்து அருள்புரிவாள். பாலை குழந்தைகளுக்கும், தேனைப் பெண்களுக்கும், தானியத்தைப் பறவைகளுக்கும், பொங்கலை ஏழைகளுக்கும் தானம் அளிக்க வேண்டும். மாலையில் விளக்கேற்றும் முன் வாசலில் மாக்கோலம் இட வேண்டும். இதனால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
மாவட்ட செய்திகள்

கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா: மாவட்டத்தில் 8-ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் ரோகிணி அறிவிப்பு




சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் 8-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 03, 2018 05:04 AM

சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வருகிற 8-ந் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவலர்கள் கவனிக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட செய்திகள்
 
சென்னையில் நாளை மின்தடை உள்ள இடங்கள்

சென்னையில் நாளை மின்தடை உள்ள இடங்கள்
 
சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (சனிக் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
சென்னை, 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் நாளை(சனிக் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

கொடுங்கையூர்: முத்தமிழ் நகர் 1 முதல் 5 மற்றும் 7-வது பிளாக், டி.எச்.சாலை, கிருஷ்ணன் தெரு, சந்திரன் தெரு, ஆசிரியர் காலனி, காந்தி நகர், வடிவுடையம்மன் கோவில் தெரு, நேதாஜி தெரு, காவேரி சாலை.

புழல்: ஸ்ரீபத்மாவதி நகர் 1 முதல் 120-வது தெரு, லட்சுமி காந்தம்மாள் நகர், ஸ்ரீ லட்சுமியம்மன் நகர், ஆர்.சி.அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வெங்கடேசுவரா நகர், திருமால் நகர் 1 முதல் 24-வது தெரு, கிரேஸ் நகர், விஜயலட்சுமி நகர், வேல் முருகன் நகர், காமராஜ் நகர்.

புழல் குடிநீர் தேக்க நிலையம்: சென்னை குடிநீர் தேக்க நிலையம், புழல் சிறைச்சாலை 1 மற்றும் 2, புழல் பெண்கள் சிறைச்சாலை.

பெசன்ட் நகர்: 1-வது மெயின் ரோடு, பீச்.ஓம்.அவென்யூ, தமோதரபுரம்.

அடையாறு: ஜீவரத்தினம் நகர், பத்மநாபன் நகர், பரமேசுவரி நகர், பெசன்ட் அவென்யூ.

பெருங்களத்தூர்: பழையபெருங் களத்தூர், பார்வதி நகர், முடிச்சூர், ராயப்பா நகர், கிருஷ்ணா நகர், லட்சுமி நகர், வரதராஜபுரம், ரங்கா நகர்.

கிண்டி: கிண்டி தொழிற்பேட்டை ஏ, பி, சி, டி பிளாக், அம்பாள் நகர், பிள்ளையார் 3, 5, 6-வது தெரு, பூமகள் தெரு, அண்ணாசாலை பகுதி, ஜே.என்.சாலை, பல்லவன் தெரு, கபிலர் தெரு, வ.உ.சி. தெரு, பாரதியார் தெரு, தனகோடி ராஜா தெரு, கணபதி காலனி.

பரங்கிமலை: மெகஸின் சாலை, பட்ரோடு, பட்லேன், மிலிட்ரி குடியிருப்பு மற்றும் மருத்துவமனை, நந்தம்பாக்கம் மெயின் ரோடு, ராமர் கோவில் தெரு, செயிண்ட் தாமஸ் மவுண்ட், மீனம்பாக்கம், ஆலந்தூர், நசரத்புரம், மவுண்ட்-பூந்தமல்லி சாலை, பர்மா மற்றும் ஸ்ரீபுரம் காலனி, போலீஸ் அதிகாரி சாலை, அச்சுதன் நகர்.

தரமணி: தெற்கு லாக், மேற்கு கேனல் சாலை, அங்காளம்மன் கோவில் தெரு, ஏரிகரை தெரு, குருவப்பா தெரு, பூண்டி தெரு, வரதராஜபுரம், நாயுடு தெரு, துலுகாத்தம்மன் கோவில் தெரு, கருணாநிதி தெரு, புது தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு.

வேளச்சேரி: புவனேஸ்வரி நகர், வி.ஜி.பி.செல்வ நகர், அன்னை இந்திரா நகர், நாதன் சுப்பிரமணியம் காலனி.

திருமுடிவாக்கம்: நத்தம் காலனி, சம்பந்தம் நகர், பத்மாவதி நகர், மாணிக்கம் நகர், தேவகி நகர், தேவி நகர், வழுதலம்பேடு.

ராயபுரம்: எம்.சி.சாலை, என்.என்.கார்டன், எம்.எஸ். கோவில் தெரு, ராமன் தெரு, தொப்பை தெரு, பி.வி. கோவில் தெரு, வெங்கடாசலம் தெரு, அர்த்தூன் சாலை, மசூதி தெரு, ஜெகநாதன் தெரு, மணிகண்ட முதலி தெரு, ஆண்டியப்பா முதலி தெரு, ஆதம் தெரு, மரியதாஸ் தெரு, கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மாதா தெரு, சிங்கார கார்டன், சோமசெட்டி தெரு, மீனாட்சியம்மன் பேட்டை, டேங் தெரு, டோபி கான தெரு, பிச்சான்டி தெரு, பணைமரத்தொட்டி, வைகுண்ட நாடார் தெரு, தாண்டவமூர்த்தி தெரு, மாநகராட்சி மாடல் லேன், அப்பையர் லேன், வீராசாமி தெரு, சஞ்சீவராயணன் தெரு, கிழக்கு மற்றும் மேற்கு கல்மண்டபம், என்.ஆர்.டி.சாலை, வெங்கடேசன் தெரு 1 முதல் 4-வது தெரு வரை, அம்மன் கோவில் 1 முதல் 8-வது தெரு வரை, பி.சி.பிரஸ் தெரு.

செம்பியம்: சிம்சன் கம்பெனி, டப்பே 2 பாயின்ட், அடிசானால் பெயின்ட், எல்.எம். வேன் மெப்ப, டப்பே ஆர்-டி, பைய்மெட்டால் பேரிங்.

பனையூர்: கடற்கரை நகர் 1 முதல் 6-வது அவென்யூ, குடிமியான்டி தோப்பு, வேலுநாயக்கர் தெரு, ஆதியாரம் நகர், பனையூர் குப்பம், ஜெ.நகர், எம்.ஜி.ஆர்.நகர்.

மாலை 4 மணிக்கு பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மீண்டும் மின் வினியோகம் கொடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் வீடுகளில் அதிரடி சோதனை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை




தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். #AnnaUniversity

பதிவு: ஆகஸ்ட் 03, 2018 05:45 AM

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மாணவர்கள் தேர்வுத்தாள் மறுமதிப்பீடு செய்ததில் கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து அதில் தேர்ச்சி பெற்ற 90 ஆயிரம் மாணவர்களிடம் தலா ரூ.10 ஆயிரம் வீதம் லஞ்ச பணம் பெற்று மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வு கட்டுப்பாடு அதிகாரி பேராசிரியை ஜி.வி.உமா, திண்டிவனம் மண்டல அதிகாரிகளான உதவி பேராசிரியர்கள் விஜயகுமார், சிவகுமார் மற்றும் 7 உதவி பேராசிரியர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதன் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, திண்டிவனத்தில் உள்ள விஜய குமார், சிவகுமார் மற்றும் 7 உதவி பேராசிரியர்கள் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அவர்களது அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

அதிகாரி உமா சென்னை கோட்டூர்புரம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். அவரது வீட்டில் நடந்த சோதனையில், பணம், நகை போன்ற எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும், வழக்கு தொடர்பான ஆவணங்களும், அசையா சொத்துக்கள் வாங்கியதற்கான ஆவணங்களும் மட்டுமே சிக்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குற்றச்சாட்டுக்குள்ளான விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழக அரசு என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) விஜயகுமார், உதவி பேராசிரியர் (கணக்கு) சிவக்குமார் ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்தி, அவர்களின் வீடுகளில் சோதனை நடத்துவதற்காக சென்னையில் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் 6 பேர் கொண்ட குழுவினர் நேற்றுமுன்தினம் திண்டிவனம் சென்றனர்.

தொடர்ந்து அவர்கள் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவியுடன் திண்டி வனம் அரசு என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் திண்டிவனம் அரசு மருத்துவமனை பின் புறம் உள்ள விஜயகுமார் வீடு, திண்டிவனம் மயிலம் சாலை இந்திராநகரில் உள்ள சிவக் குமார் வீடு ஆகிய இடங்களிலும் 3 குழுவாக பிரிந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் காலை 7 மணியில் இருந்து மாலை 3.30 மணி வரை இந்த சோதனை நீடித்தது. சோதனையின் போது 2 வீட்டு கதவுகளும் பூட்டப்பட்டு, அவர்களது வீடுகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை மிகவும் ரகசியமாக நடந்தது.

சோதனையின்போது அவர்களிடம், திண்டிவனம் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் இருந்து மறுமதிப்பீட்டுக்கு எத்தனை மாணவர்களிடம் இருந்து பணம் பெறப்பட்டது என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் மாலையில் சோதனையை முடித்த போலீசார் விஜயகுமார் வீட்டில் இருந்து 64 முக்கிய ஆவணங்களையும், உதவி பேராசிரியர் சிவக்குமார் வீட்டில் இருந்து 14 ஆவணங்கள் என மொத்தம் 78 முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி சென்னைக்கு கொண்டு வந்தனர்.

இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும், வழக்கிற்கு தேவையான ஆவணங்கள் சேகரிக்கப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்பு உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனவே வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது இப்போதைக்கு கைது நடவடிக்கை இருக்காது என்று தெரிய வந்துள்ளது.

10 பேராசிரியர்கள் வீடுகளில் சோதனை நடத்தியது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

10 பேர் வீடுகளிலும் 50-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா வீட்டில் ஒரு கூடுதல் சூப்பிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 3 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீஸ் படையினர் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின்போது வழக்கு தொடர்பான ஏராளமான ஆவணங்கள் சிக்கியது. பிரச்சினைக்குரிய மாணவர்களின் பெயர் பட்டியலும் சிக்கி உள்ளது. ஆவணங்களை ஆய்வு செய்தபோது, முறைகேடு தொடர்பாக நிறைய தகவல்கள் கிடைத்துள்ளது.

முதலில் எழுதிய தேர்வில் ஒரு மாணவன் 7 மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளான். அந்த மாணவனுக்கு மறுமதிப்பீட்டின் போது 70 மதிப்பெண்கள் கிடைத்துள்ளது. 10 மடங்கு அதிகமாக மதிப்பெண் போடப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு தான் இது. இதுபோல் நிறைய மாணவர்களுக்கு முறைகேடாக மதிப்பெண்கள் போட்டிருக்கிறார் கள். அனைத்து விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
தலையங்கம்

தேர்வுத்தாள் திருத்துவதில் முறைகேடா?




மாணவர்கள் எழுதும் தேர்வுத்தாளை திருத்துவது ஆசிரியர்களுக்கு ஒரு புனிதமான கடமையாகும். இதில் விருப்பு, வெறுப்பு, முறைகேடு என்பதற்கு இடமே கொடுக்கக்கூடாது.

ஆகஸ்ட் 03 2018, 03:00

மாணவர்கள் எழுதும் தேர்வுத்தாளை திருத்துவது ஆசிரியர்களுக்கு ஒரு புனிதமான கடமையாகும். இதில் விருப்பு, வெறுப்பு, முறைகேடு என்பதற்கு இடமே கொடுக்கக்கூடாது. நீதி தேவதைபோல கையில் துலாக்கோலை வைத்துக்கொண்டு, விடைத்தாளை துல்லியமாக மதிப்பிட வேண்டிய கடமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். பொறியியல் கல்லூரி படிப்பில் ஆசியாவில் முன்னணியில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில், 13 உறுப்புக் கல்லூரிகளும், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோவையில் மண்டல மையங்களும் இருக்கின்றன. இதுதவிர, 593 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன. இந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளின் விடைத்தாள் மறுமதிப்பீட்டில், பெரிய முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2011–ம் ஆண்டு முதல் இதுவரை தேர்வு எழுதி மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களில் 40 சதவீத மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்களை பெற்றிருக்கிறார்கள் என்று ஏற்கனவே புகார் வந்தது. இப்போது, 2017 ஏப்ரல், மே மாதங்களில் நடந்த மறுமதிப்பீட்டில் 3 லட்சத்து 2 ஆயிரத்து 380 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். இதில், 73 ஆயிரத்து 733 மாணவர்கள் பாஸ் மார்க் பெற்றுள்ளனர். 16 ஆயிரத்து 636 மாணவர்கள் தாங்கள் ஏற்கனவே பெற்றதாக அறிவிக்கப்பட்ட மதிப்பெண்களைவிட கூடுதல் மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள். ஆக, 90 ஆயிரத்து 369 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதில், பெரிய முறைகேடு லஞ்சஒழிப்பு போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு மாணவர், தான் தேர்வில் பெற்ற மதிப்பெண் திருப்தியில்லாமல் மறுமதிப்பீடு செய்ய விரும்பினால் ரூ.300 பணம் கட்டி முதலில், குறிப்பிட்ட விடைத்தாளின் போட்டோ காப்பியை பெறவேண்டும். அதில், மதிப்பெண் குறைவாக போடப்பட்டிருப்பது தெரியவந்தால், மீண்டும் ரூ.400 கட்டி மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு மறுமதிப்பீடு செய்வதற்காக, அமைக்கப்பட்ட மையத்தில்தான் இந்த முறைகேடு நடந்திருக்கிறது. லஞ்சஒழிப்பு போலீசார் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில், ஒவ்வொரு தேர்வுத்தாளுக்கும் கூடுதல் மதிப்பெண் வழங்குவதற்காக ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் ரூ.10 ஆயிரம் லஞ்சமாக பெறப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த முறைகேட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக முன்பு பணியாற்றிய பேராசிரியை ஜி.வி.உமா உள்பட 10 ஆசிரியர்கள் மீது லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், பேராசிரியர்கள் மத்தியிலும், இவர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் மத்தியிலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரையில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஒரு பெரிய மவுசு உண்டு. கஷ்டப்பட்டு படித்து தேர்வு எழுதும் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணை விட, பணம் கொடுத்து சரியாக படிக்காத மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெறுவது என்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். அண்ணா பல்கலைக்கழகம் உடனடியாக விடைத்தாள் திருத்தும் முறை, மறுமதிப்பீட்டு முறையில் ஒரு கண்டிப்பான நடைமுறையை கொண்டுவர வேண்டும். மறுமதிப்பீட்டில் சிறிதும் தவறு ஏற்படக்கூடாது. மறுமதிப்பீட்டில் பெரிய மாற்றம் இருந்தால், ஏற்கனவே விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக இதை செய்யாவிட்டால் வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் மீது நம்பிக்கை இழந்து, இங்குவந்து கேம்பஸ் இண்டர்வியூ நடத்த தயங்கிவிடுவார்கள். இது மாணவர்களின் எதிர்காலத்தையே பாதித்துவிடும்.

Thursday, August 2, 2018

மருத்துவம்: கூடுதல் இடம் இல்லை

சுப்ரீம் கோர்ட் கைவிரிப்பு  02.08.2018

புதுடில்லி : தமிழகத்தில் அமலில் உள்ள, 69 சதவீத இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட, தகுதியுள்ள மாணவர்கள் மருத்துவக் கல்லுாரியில் சேரும் வகையில், கூடுதல் இடங்கள் உருவாக்கும்படி விடுக்கப்பட்ட கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.



தமிழகத்தில், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், குறிப்பிட்ட சில சமூகத்தினருக்கு, 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட இரு மாணவர்கள், தாங்களும்

மருத்துவக் கல்லுாரியில் சேரும் வகையில், கூடுதல் இடங்களை உருவாக்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு, நீதிபதிகள், அருண் மிஸ்ரா, அப்துல் நஸீர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. வாதங்கள் முடிந்த பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட, தகுதியுள்ள மாணவர்கள், மருத்துவக் கல்லுாரியில் சேரும் வகையில், கூடுதல் இடங்கள் உருவாக்கி, இதற்கு முன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கலாம்; அத்தகைய உத்தரவுகளை, நீதிபதிகள் பிறப்பித்திருக்கக் கூடாது. எனவே, அதை, நாங்கள் மீண்டும் செய்யப் போவதில்லை.

மருத்துவக் கல்லுாரிகளில் கூடுதல் இடங்களை உருவாக்கும்படி, நீதிபதிகள் கூற முடியுமா என்பதே, தற்போதுள்ள கேள்வி.

சட்டப்படி, இந்திய மருத்துவ கவுன்சில் வரையறுத்த எண்ணிக்கையை விட அதிகமாக, ஒரு இடத்தைக் கூட புதிதாக உருவாக்க முடியாது.

அவ்வாறு உருவாக்க, சம்பந்தப்பட்ட மாநில அரசு சம்மதித்தாலும், நாங்கள் அதை செய்ய முடியாது. இட ஒதுக்கீடு, 50 சதவீதத்துக்குள் இருக்க வேண்டுமா என்பதை மட்டுமே, நீதிமன்றம் பரிசீலிக்க முடியும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இன்ஜினியருக்கு, 'நோட்டீஸ்' : வருமான வரி துறை குளறுபடி

Added : ஆக 02, 2018 00:43

பல்ராம்கர்: ஹரியானா மாநிலத்தில், 585 சதுர அடி வீட்டில் வசிக்கும் ஓய்வுபெற்ற இன்ஜினியருக்கு, 27 கோடி ரூபாய் முதலீடு குறித்து விளக்கம் கேட்டு, வருமான வரி துறை, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
முதலீடு : ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பரீதாபாத் மாவட்டத்தில் வசிப்பவர் நந்த கிஷோர்.தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி, 2010ல் ஓய்வு பெற்றார். ஓய்வுக்கு பின் கிடைத்த, ஏழு லட்சம் ரூபாயை, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தார்.குறிப்பிட்டபடி, முதலீட்டு தொகைக்கு வட்டி தராமல், நிதி நிறுவனம் ஏமாற்றியது. மேலும், அசல் தொகையை திருப்பித் தராமல் மோசடி செய்தது. இதுகுறித்து போலீசில், நந்த கிஷோர் புகார் அளித்துள்ளார்.இந்நிலையில், சமீபத்தில், வருமான வரித் துறையில் இருந்து, 27 கோடி ரூபாய் முதலீடு குறித்து விளக்கம் அளிக்கும்படி வந்த நோட்டீசை பார்த்து, நந்த கிஷோர் அதிர்ச்சி அடைந்தார்.

அவர் கூறியதாவது:ஏற்கனவே, முதலீடு செய்த பணத்தை தராமல், மோசடி செய்த, தனியார் நிதி நிறுவனம் மீது அளித்த புகார், விசாரணையில் உள்ளது. 585 சதுர அடிதற்போது இருக்கும், 585 சதுர அடி வீட்டை தவிர, வேறு எந்த சொத்தும் இல்லை. வருமான வரி நோட்டீசில் கூறியது போல், என் பெயரில் எந்த முதலீடும் இல்லை.வருமான வரி துறை துணை இயக்குனர் கவுரவ் பாரிலை தொடர்பு கொள்ள முடியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

எம்.பி.பி.எஸ்., வகுப்புகள் துவங்கின : மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

Added : ஆக 01, 2018 23:42





சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, நேற்று வகுப்புகள் துவங்கின. மாணவர்களை, மூத்த மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்த, முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று துவங்கின. கல்லுாரிக்கு வந்த புதிய மாணவர்களுக்கு, ரோஜா மலர் கொடுத்தும், மரக்கன்றுகள் நட்டும், மூத்த மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.'ராகிங் செய்ய மாட்டோம்' என, மூத்த மாணவர்கள், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வாக்குறுதி அளித்தனர். மேலும், 'விடுதிகளில் அளிக்கப்படும் உணவுகள் தரமானதாக இருக்கும்' என, பெற்றோரிடம் விடுதி காப்பாளர்கள் தெரிவித்தனர்.சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரியில், சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர், செயலர், ராதாகிருஷ்ணன் புதிய மாணவர்களை வரவேற்று, வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை மருத்துவக் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், டீன், ஜெயந்தி பேசியதாவது:பள்ளிகளை போல், மருத்துவக் கல்லுாரி வகுப்பறை இருக்காது. மாணவர்கள் தாங்களாகவே படிக்க, கற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்கள் விடுதியில் தங்கி படிக்க உள்ளதால், பெற்றோர் அவர்களை கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் விடுதியில் இருக்கும் நேரங்களில் தொடர்பு கொண்டு, பெற்றோர் ஆறுதலாக பேச வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரி டீன் பொன்னம்பல நமச்சிவாயம் பேசுகையில், ''இந்த பருவத்தில், மாணவர்களுக்கு கவனச் சிதறல் ஏற்படும். மாணவர்கள் கவனத்துடன் படிக்க வேண்டும். ''பிள்ளைகளை அவ்வப்போது பெற்றோர் சந்தித்து, அவர்களிடம் ஏற்படும் மாற்றத்தை கண்காணிக்க வேண்டும்,'' என்றார்.

ஓமந்துாரார் அரசு மருத்துவ கல்லுாரி டீன், நாராயணபாபு பேசுகையில், ''நோயாளிகள் நம்மிடம் மருத்துவ சிகிச்சை போலவே, ஆறுதலையும் எதிர்பார்க்கின்றனர். எனவே, சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி, அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து, அவர்களிடம் அன்பாக பழக வேண்டும்,'' என்றார்.

ராகிங் தொல்லையா? புகார் தெரிவிக்கலாம் : ராகிங் குறித்து, அந்தந்த கல்லுாரிகளில் உள்ள, ராகிங் தடுப்புக்குழு மற்றும், டீன்களிடம் புகார் அளிக்கலாம். எம்.சி.ஐ., எனப்படும் இந்திய மருத்துவ கவுன்சிலில், ராகிங் தடுப்புக்கான ஒழுங்குமுறை கமிட்டிக்கு, 18001 11154 என்ற இலவச எண்ணிலும், 011 - 2536 7033, 2536 7035, 2536 7036 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.மேலும், mci@bol.net.in, contact@mciindia.org என்ற இ - மெயில் முகவரிகள் மற்றும், www.mciindia.org என்ற இணையதளத்திலும் புகார் தெரிவிக்கலாம். இதுதவிர சிறப்பு அவசர உதவிக்கான, 011 - 2536 1262 என்ற எண்ணிலும், 2536 7324 பேக்ஸ் எண்ணிலும், antiragging-mci@nic.in என்ற, இ - மெயிலிலும், மருத்துவ மாணவர்கள் புகார் தெரிவிக்கலாம்.

மொபைல் போனுக்கு தடை : மாணவர்கள், ஜீன்ஸ், டி - சர்ட் அணியக்கூடாது. பேன்ட், முழுக்கை சட்டை, ஷூ அணியலாம். மாணவியர் சேலை, சுரிதார் ஆகிய உடைகளை அணியலாம்; மேற்கத்திய உடைகளை தவிர்க்க வேண்டும். மாணவியர் தலை முடியை விரித்து போடக்கூடாது. மாணவர்கள் விடுதியில், மொபைல் போன் பயன்படுத்தி கொள்ளலாம்; வகுப்பறைக்குள் பயன்படுத்தக் கூடாது. விதிமுறைகளை பின்பற்றாத மாணவர்கள், வகுப்பறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
எட்வின் ஜோ, மருத்துவ கல்வி இயக்குனர்
லண்டன் டாக்டர் வருகை கருணாநிதிக்கு சிகிச்சை

Added : ஆக 01, 2018 23:20


சென்னை/: கருணாநிதியின் உடல் நலம் விசாரிப்பதற்காக, அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், நேற்றும் மருத்துவமனை வந்து சென்றனர்.தி.மு.க., தலைவர் கருணாநிதி, உடல் நலக்குறைவு காரணமாக, ஜூலை, 27ம் தேதி நள்ளிரவு, 1:30 மணிக்கு, சென்னை, ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை படிப்படியாக முன்னேறி வருவதாகவும், இன்னும் சில தினங்கள், அவர் மருத்துவமனையில் தங்கி, சிகிச்சை பெற வேண்டியுள்ளது என்றும், மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.அவரது உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக, தினமும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். நேற்று காலை, முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சி தலைவருமான, அஜித் சிங், மருத்துவமனைக்கு வந்தார். தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலினை சந்தித்து, கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் வேலு, த.மா.கா., தலைவர் வாசன், நடிகர் விவேக், தொழில் அதிபர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், மருத்துவமனைக்கு வந்து, கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.முன்னாள் துணை ஜனாதிபதி, ஹமீத் அன்சாரி, ஒடிசா முதல்வர், நவீன் பட்நாயக், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர், அகிலேஷ் யாதவ் ஆகியோர், தொலைபேசியில் ஸ்டாலினை தொடர்பு கொண்டு, கருணாநிதி யின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

லண்டன் டாக்டர் : முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் ஏற்பாட்டில், லண்டன் மற்றும் வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற, தொற்று நோய் சிகிச்சை நிபுணர், நேற்று காவேரி மருத்துமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவர், கருணாநிதியின் உடலை பரிசோதித்தார்; சிகிச்சை ஆவணங்களை பார்த்தார். பின், 'கருணாநிதியின் வயது முதிர்வால், அவருக்கு தற்போது அளித்து வரும் மருத்துவ சிகிச்சை போதுமானது' என, தெரிவித்தார். மேலும், தொற்று நோய் பரவாமல் இருப்பதற்கு, சில ஆலோசனைகளையும் வழங்கினார். 

நொறுக்கு தீனி, 'மாஜி' : கட்சி தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், பக்கோடா, மிக்சர், முறுக்கு, காரசேவ் போன்ற நொறுக்கு தீனிகளை, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த, இரண்டு எழுத்து முன்னாள் அமைச்சர் ஒருவர், அடிக்கடி வரவழைத்து சாப்பிடுவது வழக்கம். அதை, காவேரி மருத்துமனையிலும் அவர் விட்டு வைக்கவில்லை. அங்கேயும், தன் அறைக்கு, நொறுக்கு தீனிகளை கொண்டு வர வேண்டும் என, ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். போலீஸ் பாதுகாப்பு, மருத்துவமனை பாதுகாப்பு தாண்டி, அந்த, 'மாஜி'க்கு நொறுக்கு தீனி எடுத்து செல்லப்படுகிறதுகருணாநிதியை சந்திக்க வரும் முக்கிய பிரமுகர்களின் பெயர்களை, கருணாநிதியின் சார்பில், உதவியாளர் சண்முகநாதனும், ஸ்டாலின் சார்பில், நவீன் உள்ளிட்ட இரு இளைஞர்களும், பதிவு செய்கின்றனர். அவர்களிடம், இரண்டு எழுத்து மாஜி, 'அழகிரியை சந்திக்க வரும் பிரமுகர்களின் பெயர்களை குறிப்பு எடுக்க வேண்டாம்' என, கூறியதாக தெரிகிறது.
DMK men attack hotel staff for biriyani in Chennai

DECCAN CHRONICLE.

PublishedAug 2, 2018, 2:06 am IST

Police arrest a person in connection with attack.



CCTV grab shows biriyani stall staff being attacked.

Chennai: In a shocking incident, a group of inebriated DMK men attacked employees of a restaurant in Virugambakkam after they told them they were closed for the day. The police arrested a person in connection with the attack.

According to police, the incident happened on July 29 and the action has been taken after the CCTV footage of the attack went viral on Wednesday and Virugambakkam police arrested Rudrakumar.

However main accused K.L. Yuvaraj, a DMK functionary, who is seen punching the hotel staff in their faces several times injuring them severely, was in RSS and Tamil Manila Congress earlier. Soon after the incident came to light on Wednesday, DMK working president M.K. Stalin suspended Yuvaraj and another party member Diwakar for attacking the hotel staff and cautioned the cadre of stern action on Twitter if their actions bring disrepute to the party.

The police said that the incident happened at Salem RR Biriyani restaurant on Kamarajar Salai in Virugambakkam. "A group of men led by Yuvaraj entered the restaurant and demanded food for about 30 party members who have camped outside the Kauvery hospital, where DMK leader M. Karunanidhi has been admitted. When the manager Prakash told them that they were closed for the day, Yuvaraj got into an argument with him and started attacking him," the police said.

He was soon joined by his other men who were waiting at the doorstep and a few other waiters of the restaurant were also attacked. Anbu, the owner of the biriyani shop, has told police that Yuvaraj has the previous enmity with him after an argument over parking his vehicle in front of the shop.

DMK suspends biriyani boxer for attacking staff

Upset at not getting biriyani at a hotel, a burly DMK functionary along with his musclemen brutally beat up the staff of a biriyani hotel at Virugambakkam here on Sunday. With the CCTV visuals of the rowdyism going viral and lapped up by the TV channels, DMK general secretary K. Anbazhagan suspended the gang leader, Yuvraj, said to be the secretary of the party's thondar-ani (volunteers' wing), as well as one of his associates named Dhivakar, from the primary membership as both "behaved in a manner that is not in line with the party discipline and brought disrepute to the party".

DMK working president M.K.Stalin tweeted his deep anger at the party members' unruly conduct. "The attack on the shop staff in Virugambakkam is highly condemnable. We have removed the men who violated the principles of our party. Strict action will be taken against those who act in a manner that brings disrepute to the party", he tweeted.

While the DMK's action in merely suspending the two men from the party and not sacking them outright received much flak on the social media, party leaders took pains to explain to the media that the DMK constitution does not allow expulsion from the party right away without first giving the delinquent a notice seeking explanation and slapping suspension on the person awaiting his reply.

Yuvraj and his gang members bashed up the hotel staff when the latter told them that the hotel had run out biriyani and they were about to down the shutters.

"They seemed drunk. We pleaded that our stock of biriyani got over and there was no more food available. They started punching us, causing bleeding injuries as they were wearing metal bangles. Some of the staff needed stitches", said a hotel staff still not recovered from the brutal attack.

CCTV footage showed Yuvraj jumping up and down like a boxer to deliver his fast punches at the hapless hotel cashier and his staff. The other members of the rowdy gang joined their leader in delivering their own share of hard blows at the quivering workers in the eatery. The gang pulled down the hotel shutter after the attack and walked away. Police arrested one of them much later, while the rest of the gang, including Yuvraj, remained untraceable.
Hubby candidate, but wife allowed to set questions?

Academicians demand inquiry by government into conduct of SET; university denies charges.

Published: 01st August 2018 04:38 AM 

Express News Service

COIMBATORE: How fair the outcome of a test would be when the question paper set by a woman professor has her husband appearing as an examinee?

This is the poser academicians are seeking an answer to from the Mother Teresa Women’s University, which conducted the State Eligibility Test (SET) on March 4 last. What has set the cat among the pigeons is the fact that the question paper setting panel for the SET had on board the head of Commerce Department at Bharathiar University, M Sumathy, whose husband G Venkatesan was one of the candidates.

While the university has scotched all allegations of nepotism, saying that no single professor would be aware of the final question paper, irate academicians and candidates have sought an inquiry by State government and the UGC.

Mother Teresa Women’s University in Kodaikanal conducted the Tamil Nadu State Eligibility Test for assistant professorship on March 4. For the commerce question paper, M Sumathy was on the panel of five professors roped in by the university to set the question paper.

While it was not clear whether Venkatesan had cleared the paper, it emerged that he opted Coimbatore as center despite mentioning Lakshipuram South in Karur and his permanent address. Both Venkatesan and Sumathy were not available for comments.

When contacted, Mother Teresa Women’s University Vice-Chancellor G Valli said that they had looked into the issue. The question paper was set by a panel of five professors from different universities.

“We got 100 questions each from each professor and pooled it to form a question bank consisting of 500 questions. After removing previous year questions, the university selected questions for this year’s SET. There is no chance that any professor who was part of the panel would know about the SET question paper,” she said.

However, not buying the university’s explanation was advisor of The NET SLET Association S Swaminathan, who said, “We have already moved a court for reexamination as paper-I questions were repetition of previous year’s NET. Now, we will bring this issue to the knowledge of the court.”

“During semester question paper setting, universities will ask an undertaking saying no blood relation will be writing the particular examination. Even if it was a few questions, it gave an edge to a particular candidate.

“The Mother Teresa Women’s University should conduct a reexamination. Apart from this, the departmental enquiry should be conducted and appropriate penal action taken,” he demanded.
UGC puts distance education out of reach

Distance education programmes helped State universities generate a sizable amount of revenue; this played a vital role in managing the expenditure of the institution.

Published: 02nd August 2018 06:42 AM | 

Express News Service

COIMBATORE : Distance education programmes helped State universities generate a sizable amount of revenue; this played a vital role in managing the expenditure of the institution. However, with the UGC bringing in stringent norms in an intent to regulate the programmes offered under distance education mode could very well push the universities into financial crisis, predict academics.

One of the criteria set by the UGC in its Open and Distance Learning Regulation is that only those universities that have a NAAC score of 3.26 and above can offer distance education programmes. Many of the State universities do not meet this criterion; subsequently, Annamalai and Periyar universities have obtained a stay against the UGC regulation. At the recent meeting of Vice Chancellors and Registrars, the Higher Education department has advised other universities to file a case and get stay orders too.

The UGC regulation also stipulates that State universities can only operate within the territorial jurisdiction and in no case beyond the territory of the State. This rule forced many State universities to close down private centre through which they had been offering distance education programmes under franchise mode. For instance, Bharathiar University in Coimbatore had to close down more than 450 franchises, including 200 located outside Tamil Nadu.

It had been offering various degree and diploma courses under distance mode through these centres. In May, the University called upon arts and science colleges across the State to act as learning resource centres to offer distance education programmes. At the end of the deadline, it received applications only from 42 colleges, informed a former syndicate member of the University. “Loss in revenue through distance education centres following the UGC’s new regulation will have a serious impact on university’s finance,” he says.

Commenting on this, Association of University Teachers former general secretary C Pichandy says, “It should help people and industries and others who cannot afford regular education. If the university looks at it as a commercial revenue generating venture again, universities are opening up a channel for corruption. Hence, government should regulate properly, fix geographical areas and domain.”
Court questions HR&CE official’s arrest in haste

The Special Bench of Justices R Mahadevan and P D Audikesavalu, constituted to deal with the idol theft cases, before which the bail application of Kavitha came up for hearing on Wednesday.

Published: 02nd August 2018 06:48 AM 



Madras High Court (File|PTI)

By Express News Service

CHENNAI : The High Court on Wednesday asked the police what was the urgency of arresting M Kavitha (52), Additional Commissioner of HR&CE, in the case of misappropriation of gold in the two idols of the Kancheepuram temple. The court said Kavitha was not at all an accused in the FIR filed in 2017. The subsequent FIRs filed in 2018 were already stayed by the High Court on July 23 last. Moreover, the main accused in the case had already been granted bail, the bench noted.

The Special Bench of Justices R Mahadevan and P D Audikesavalu, constituted to deal with the idol theft cases, before which the bail application of Kavitha came up for hearing on Wednesday, said the official was arrested on July 31 and sent to judicial custody.The petitioner was arrested by the Inspector of Police, Sivakanchi, Kancheepuram on a complaint lodged by one Annamalai with regard to making of two new panchaloha idols for Sri Ekambaranathat temple in Kancheepuram. The court posted the matter to Friday.

Employees to stage token strike against Idol Wing head

Chennai: HR and CE department officials across the State, including Joint Commissioners, Deputy Commissioners, Assistant Commissioners, Grade III and IV executive officers have decided to stage a token strike on Thursday protesting against the attitude of AG Pon Manickavel, who is heading the Idol Wing. Sources said the officers have sought a day’s leave on Thursday for this purpose. The protest move comes a day after the arrest of M Kavitha, Additional Commissioner on Tuesday.

The complaint of officials is that Manickavel has been interfering in the affairs of HR and CE department unnecessarily. “His job is to find out the missing idols and draw plans for protecting existing idols. But complaints regarding irregularities need to be investigated by top officials of HR and CE department and Manickavel has no business in this connection,” an official said. Though officials will be on strike on Thursday, routine work in temples will not be affected, he said.
Committee reduces NEET marks to fill management seats

The selection committee of the Directorate of Medical Education has announced that candidates who secured marks even below 365 in NEET can attend medical counselling.

Published: 02nd August 2018 06:02 AM | 

By Express News Service

CHENNAI : The selection committee of the Directorate of Medical Education has announced that candidates who secured marks even below 365 in NEET can attend medical counselling. The panel has extended the first phase of medical counselling to fill MBBS seats under management quota in self-financing colleges as many seats were not filled even at the end of counselling.Speaking to Express, G Selvarajan, committee secretary, said, “128 MBBS seats under management quota in self-financing colleges were not filled even after the end of the first phase of counselling. So, we have extended the first phase.

Earlier, for the first phase, only candidates who secured above 365 marks in NEET were eligible to attend counselling. But, since we have vacant seats now, we have reduced the marks. Candidates who have secured even below 365 can attend,” he said.

According to a notification on Selection Committee website, counselling will be conducted on August 3 and 4. Candidates who secured NEET marks from 364 to 305 can attend counselling on August 3 and candidates who secured marks from 304 to 268 can attend on August 4. No individual call letters will be sent. Candidates can download the call letters from www.tnhealth.org and www.tnmedicalselection.org websites. The notification said more number of candidates are being called for counselling. Meanwhile, all seats in Christian Medical College were filled during the first phase of counselling.
Local holiday on Aug. 3

STAFF REPORTER

SALEM, AUGUST 02, 2018 00:00 IST

The district administration has announced a local holiday on August 3 to observe the death anniversary of freedom fighter Dheeran Chinnamalai and Adi Perukku festival.

District Collector Rohini R. Bhajibhakare in a press release said that government offices and educational institutions will not function on August 3.

The release said that August 18 will be a working day for compensating the local holiday.

Since the holiday is not announced as per Negotiable Instrument Act 1881 (Central Act XXVI of 1881), district treasury will function with limited employees on that day.
Doctors begin strike


MADURAI, AUGUST 02, 2018 00:00 IST

Members of the Tamil Nadu Government Doctors Association (TNGDA) began the first phase of their protest seeking pay on par with Central government doctors here on Wednesday.

Other associations such as the Senior Civil Surgeon Association and the Tamil Nadu Medical Officers Association joined the doctors.

A total of 18,000 doctors across the State — 1,000 from Madurai — said they had a single-point agenda.

M. Ramesh, secretary of TNGDA, said all doctors sported a badge to raise awareness about the strike among the public. “We will raise the intensity of the protest with each phase. For the first three days, the badge will display our displeasure. Eventually, we will stop classes and association meetings. On September 21, we have planned a token strike,” he said.

The strike was in protest against the steep disparity in pay. “We begin with the same pay, but their (Central) promotions are quicker and their pay jumps higher.”

NEWS TODAY 20.09.2024