Friday, August 3, 2018

மாவட்ட செய்திகள்

கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா: மாவட்டத்தில் 8-ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் ரோகிணி அறிவிப்பு




சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் 8-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 03, 2018 05:04 AM

சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வருகிற 8-ந் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவலர்கள் கவனிக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.09.2024