Friday, August 3, 2018


மஞ்சளும் தந்தாள்! மலர்கள் தந்தாள்! மங்கள மங்கை மீனாட்சி

Added : ஆக 02, 2018 23:53



மஞ்சளும் தந்தாள்! மலர்கள் தந்தாள்! மங்கள மங்கை மீனாட்சி

ஆடிவெள்ளியும், ஆடிப்பெருக்கும் இணையும் நன்னாள் இன்று. இந்நாளில் காவிரியன்னையுடன் மீனாட்சி, காமாட்சி உள்ளிட்ட அம்மன்கள் மற்றும் மகா லட்சுமியை வழிபட்டால் மங்கள வாழ்வு உண்டாகும்.

* 'பெருக்கு' என்றால் 'பெருகுதல்' மட்டுமல்ல, 'சுத்தம் செய்தல்' என்றும் பொருள். ஆடிப்பெருக்கில் காவிரி பெருக்கெடுத்து ஓடும். அப்போது ஆற்றில் கிடக்கும் எல்லா அசுத்தங்களும் அடித்துச் செல்லப்பட்டு துாய்மை பெறும். மனதிலுள்ள தீய எண்ணங்களை பக்தி என்னும் வெள்ளத்தை பாய்ச்சி அகற்ற வேண்டும் என்பதை ஆடிப்பெருக்கு உணர்த்துகிறது.

* திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், ஈரோடு பகுதிகளில் மக்கள் ஆற்றில் புனித நீராடுவர். ரங்கநாதர், விநாயகர், அகத்தியர் போன்றவர்களோடு சம்பந்தம் கொண்ட காவிரிநதியில் நீராடினால் சுமங்கலி பாக்கியம் உண்டாகும். புதுமணத் தம்பதிகள் மாங்கல்ய பலம் பெற புதிய மஞ்சள் கயிறு மாற்றுவர். விவசாயிகள் விளைச்சல் பெருக வழிபாடு நடத்துவர்.

*தங்க நகைகள் வாங்க ஏற்ற சுபநாள் இன்று. வீட்டுக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் வாங்கலாம். செய்த நற்செயல்களால் புண்ணியம் பெருகுவது போல இந்நாளில் செய்யும் சேமிப்பும் பன்மடங்கு பெருகும். அதோடு தொழில் துவங்கினால் லாபம் பெருகும்.

*லட்சுமி தாயாருக்கு பால், தேன், தானியம், சர்க்கரைப் பொங்கல் படைத்து பூஜை செய்ய மனம் குளிர்ந்து அருள்புரிவாள். பாலை குழந்தைகளுக்கும், தேனைப் பெண்களுக்கும், தானியத்தைப் பறவைகளுக்கும், பொங்கலை ஏழைகளுக்கும் தானம் அளிக்க வேண்டும். மாலையில் விளக்கேற்றும் முன் வாசலில் மாக்கோலம் இட வேண்டும். இதனால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

No comments:

Post a Comment

Changes in visa regulations leave students in limbo, many reconsider plans to study abroad

Changes in visa regulations leave students in limbo, many reconsider plans to study abroad  Amisha.Rajani@timesofindia.com 22.09.2024  Hyder...