Friday, January 24, 2020

ரூ.1.5 கோடி அபராதம் வசூல்; டிக்கெட் பரிசோதகர் சாதனை

Updated : ஜன 24, 2020 03:17 | Added : ஜன 24, 2020 03:16




மும்பை: கடந்த, 2019ம் ஆண்டில், ரயில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர், டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களிடம் இருந்து, 1.51 கோடி ரூபாய் வரை அபராதமாக வசூலித்துள்ளார்.

மத்திய ரயில்வேயின், பறக்கும் படையில் வேலை பார்க்கும், டிக்கெட் பரிசோதகர், எஸ்.பி.கலாண்டே என்பவர், 2019ம் ஆண்டில், டிக்கெட் இல்லாமல் பயணித்த, 22 ஆயிரத்து 680 பயணியரிடம் இருந்து, 1.51 கோடி ரூபாய் அபராதமாக வசூலித்திருக்கிறார். அவருடன், மேலும், மூன்று டிக்கெட் பரிசோதகர்களும், ஒரு கோடி ரூபாய்க்கும் மேல், அபராதம் வசூலித்துள்ளனர்.




எம்.எம்.ஷிண்டே, 1.07 கோடி ரூபாயும், டி.குமார், 1.02 கோடி ரூபாயும், ரவிகுமார், 1.45 கோடி ரூபாயும் அபராதமாக வசூலித்துள்ளனர். அவர்களின் பங்களிப்பை பாராட்டி, ஊக்கத்தொகையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 2019ல், டிக்கெட்இல்லாமல், பயணம் செய்தவர்களிடம், 192.51 கோடி ரூபாயை, மத்திய ரயில்வே, அபராதமாக வசூலித்துள்ளது.

No comments:

Post a Comment

T.N. govt. to launch health insurance for the elderly

T.N. govt. to launch health insurance for the elderly The Hindu Bureau CHENNAI. 18.08.2026 Tamil Nadu will launch the ‘Chief Minister’s Elde...