Friday, January 24, 2020

இன்று தை அமாவாசை : புனித நீராட குவியும் பக்தர்கள்

Updated : ஜன 24, 2020 08:05 | Added : ஜன 24, 2020 08:04

புதுடில்லி : இன்று (ஜன.,24) தை அமாவாசையை முன்னிட்டு நதிகள் மற்றும் கடலில் ஏராளமான மக்கள் புனித நீராடி, தங்களின் முன்னோர்களுக்கு தர்பணம் அளித்து வருகின்றனர்.

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலை மகாலிங்கம் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். ஈரோடு பவானி கூடுதுறையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கும் தர்பணம் அளித்து, வழிபட்டு வருகின்றனர்.

உ.பி.,யில் புகழ்பெற்ற வாரணாசியில் மவுனி அமாவாசையை முன்னிட்டு கங்கை நதியில் ஏராளமானவர்கள் புனித நீராடி, வழிபாடு நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024