Friday, March 27, 2020

'கொரோனா'வால் தினசரி இழப்பு 35-40 ஆயிரம் கோடி ரூபாய்

Updated : மார் 27, 2020 04:49 | Added : மார் 27, 2020 04:47 |

மும்பை: 'கொரோனா' தொற்று பாதிப்பு காரணமாக, நாட்டின் பொருளாதாரத்தில், தினசரி, 40 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என, 'கேர் ரேட்டிங்ஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:தற்போதைய, 21 நாள் முடக்கத்தின் காரணமாக, 80 சதவீத உற்பத்தி இழப்பு ஏற்படும் நிலையில், நாட்டின் பொருளாதாரத்தில், தினசரி, 35 ஆயிரம் முதல், 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும். மொத்தத்தில் இழப்பு, 6.3 - 7.2 லட்சம் கோடிரூபாயாக இருக்கும்.

இந்த மதிப்பீடு, நடப்பு நிதியாண்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பான, 140 - 150 லட்சம் கோடி ரூபாய் என்பதன் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது.இருப்பினும், முடக்கம் என்பது, 21 நாட்கள் என்பதை தாண்டி, 30 அல்லது 60 நாட்கள் வரை நீடிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

நான்காவது காலாண்டில், வளர்ச்சி எதிர்மறையாக இருக்காவிட்டாலும், 1.5 - 2.5 சதவீதமாக குறைய வாய்ப்பிருக்கிறது. மிகப் பெரிய கவலையாக இருப்பது, வேலைவாய்ப்பின்மை தான். முன்பை விட இப்போதைய நிலையில், இது மேலும் அதிகரிக்கும்.இவ்வாறு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024