Friday, March 27, 2020

நிமோனியா தடுப்பு ஊசி போடுங்கள்! மூத்த குடிமக்கள் கோரிக்கை

Added : மார் 27, 2020 00:53

சென்னை: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், நிமோனியா தடுப்பூசி போட, அரசு முன் வரவேண்டும் என, மூத்த குடிமக்கள் அமைப்பு சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

சூடான உணவுஉலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில், மூத்த குடிமக்களே அதிகளவில் உயிரிழந்துஉள்ளனர். 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போகும் காரணத்தால், இறப்பு சதவீதம் அதிகமாவதாக கூறப்படுகிறது.எனவே, மூத்த குடிமக்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, நிமோனியா தடுப்பு ஊசி போட, அரசு தனி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மூத்த குடிமக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.இதனிடையே, கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில், மூத்த குடிமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து, ஓய்வு பெற்ற அரசு மருத்துவரும், மூத்த குடிமக்கள் அறக்கட்டளை நிறுவனருமான டாக்டர் வி.எஸ்.நடராஜன் கூறியதாவது:

முதியவர்கள் குளிர்ச்சியான உணவு, பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும். சுடுநீர் குடிக்க பழக வேண்டும். முடிந்தவரை சூடான உணவுகளை சாப்பிட வேண்டும்.நடைபயிற்சிவைட்டமின் சி உள்ள ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லி ஆகியவற்றுடன் பாதாம், பாகற்காய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட காலத்திற்கு, குழந்தைகளை விட்டு தள்ளி இருக்க வேண்டும். தினமும், சூரிய ஒளி உடலில் படும்படி, சிறிது நேரம் அமர வேண்டும்.தடை உத்தரவு காரணமாக, வீட்டிலேயே நடை பயிற்சி மேற்கொள்வது நல்லது. ரத்த கொதிப்பு, சர்க்கரை, கிட்னி பிரச்னை உள்ளவர்கள், முடிந்தவரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Man gets 7-yr jail for holding two govt jobs Continued To Draw Pay From Health, Edu Depts

Man gets 7-yr jail for holding two govt jobs Continued To Draw Pay From Health, Edu Depts  TIMES NEWS NETWORK 11.03.2022 Lucknow : A local c...