Friday, March 27, 2020

வீட்டில் மதுபானம் விற்பனை : மாஜி பெண் கவுன்சிலர் கைது

Added : மார் 27, 2020 00:57

தஞ்சாவூர் :பேராவூரணியில் 144 தடை உத்தரவை பயன்படுத்தி, வீட்டில் வைத்து மது விற்ற, முன்னாள் அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர், பேராவூரணி அடுத்த திருப்பூரணிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் மனைவி ராஜகுமாரி,42. அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய கவுன்சிலர். பேராவூரணியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில், 3 மதுக்கடைகள் ஒரே இடத்தில் உள்ளது. அதில் ஒரு மதுபானக் கடையில் ராஜகுமாரி, 3 ஆண்டாக பார் நடத்தி வந்தார். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை, 144 தடை உத்தரவால், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ராஜகுமாரி, மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்தார். இதுகுறித்து பேராவூரணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை ராஜகுமாரி வீட்டிற்கு, பேராவூரணி இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் உள்ளிட்ட போலீசார் சென்று, ராஜகுமாரியை கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக வைத்திருந்த, 200 மதுபாட்டில்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Man gets 7-yr jail for holding two govt jobs Continued To Draw Pay From Health, Edu Depts

Man gets 7-yr jail for holding two govt jobs Continued To Draw Pay From Health, Edu Depts  TIMES NEWS NETWORK 11.03.2022 Lucknow : A local c...