Friday, March 27, 2020

சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

Added : மார் 26, 2020 21:21

சென்னை : சி.பி.எஸ்.இ., பள்ளிகள், இணைப்பு அந்தஸ்துபெற, விண்ணப்பிப்பதற்கான அவகாசம், ஏப்ரல், 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் பாட திட்டத்தில் செயல்பட உள்ள பள்ளிகள், ஆண்டுதோறும்இணைப்பு அந்தஸ்து பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில், இந்த அந்தஸ்தை பெறுவதற்கு பள்ளிகள் தரப்பில் விண்ணப்பிக்க, மார்ச், 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. தற்போது, கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, நாடு முழுதும், 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், விண்ணப்பம் தாக்கல் செய்வதற்கான அவகாசம், ஏப்., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை, சி.பி.எஸ்.இ., செயலர்,அனுராக் திரிபாதி பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win  G Babu Jayakumar & D Sekar 1 2 May 2026 10:05 PM  AMMK member Kamraj supports TVK, expell...