Thursday, May 7, 2015

யாராக இருந்தால் என்ன?

Dinamani


2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த மும்பை கார் விபத்தில் ஹிந்தி நடிகர் சல்மான் கான் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருப்பது, திரையுலகுக்கும் அவரது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக இருப்பினும் இந்தத் தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்று.
சல்மான் கானை போல, இன்னும் எத்தனை எத்தனையோ மேட்டுக்குடியினரின் போதை சாகசங்களுக்கும், விளையாட்டுகளுக்கும் பலியாகும் சாலையோரவாசிகளின் அவலம் பற்றி அரசும் சரி, நாமும் சரி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அவர்களுக்குத் தங்கும் விடுதிகள் அமைத்துக் கொடுக்கத் தவறிவிட்ட அரசையும், மாநகராட்சியையும் கூடத் தீர்ப்பில் கண்டித்திருக்க வேண்டும்.
நீதிமன்றத்தில் சல்மான் கானின் வழக்குரைஞர் குறிப்பிட்டதைப்போல, அவர் மனிதாபிமான சேவை புரிந்தவர் என்றாலும்கூட, சாலையோரம் படுத்திருந்த நபரின் மீது மது போதையில் வாகனத்தை ஏற்றிக் கொன்ற செயலை நீதிமன்றம் ஒதுக்கிவிட மறுத்துவிட்டது.
இந்த வழக்கிலிருந்து தான் எப்படியும் தப்பித்துவிட முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்த சல்மான் கான், தீர்ப்பு வழங்கும் நாளன்று வரையிலும்கூட தான் காரை ஓட்டவில்லை என்றே குறிப்பிட்டார். இதற்கிடையே, கடைசி முயற்சியாக, உயிரிழப்பை ஏற்படுத்திய காரை கிரேன் மூலம் தூக்கியபோது அது தவறி விழுந்ததாகவும், ஏற்கெனவே காயமடைந்திருந்த நபர் அந்த விபத்தில்தான் இறந்திருக்கிறார் என்றும்கூட ஒரு புதுமையான வாதத்தை நீதிமன்றத்தில் முன்வைத்தார்கள்.
இந்த வழக்குத் தொடர்பாக சல்மான் கான் மேல்முறையீடு செய்யவும், தண்டனை குறைக்கப்படவும்கூட வாய்ப்புகள் இருக்கின்றன என்றாலும், அவர் மீதான மான் வேட்டை வழக்கு ஒன்றும் இப்போதும் நிலுவையில் இருப்பதையும், அந்த வழக்கில் சல்மான் கானுக்கு எதிரான சாட்சியங்கள் வலுவாக இருப்பதும், அவரது சிறைவாசத்தை மேலும் உறுதிப்படுத்துவதாகவே உள்ளன.

சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்களின் வாகனங்களுக்கு ஓட்டுநர் இருந்தாலும்கூட மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவதென்பது அவர்களால் விளையாட்டாகப் பார்க்கப்படுகிறது. அதன் விளைவுதான் இத்தகைய விபத்துகளும் மரணங்களும்! குறிப்பாக, வசதி படைத்த இளைஞர்களிடம் இத்தகைய மனநிலை அதிகமாகவே காணப்படுகிறது.
மது அருந்தி போதையில் வாகனம் ஓட்டுவோருக்கு தாங்கள் பிடிபட்டாலும் கையூட்டு தந்தால் வீடு சென்றுவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. போக்குவரத்து வட்டார அலுவலர்கள், காவல் துறையினர் இந்த நம்பிக்கையைத் தகர்த்தாலே போதும், மது அருந்தி வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை கணிசமாக சரியும்.

தற்போது நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சாலைப் பாதுகாப்பு மசோதாவில் மிகவும் கடுமையான விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. மது அருந்தியவர் என நிர்ணயிப்பதற்கான, ரத்தத்தில் சாராய அளவை மேலும் குறைத்துள்ளனர். ஓட்டுநர் உரிம ரத்தும், அபராதமும், தண்டனையும் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த சட்டத்தைக் கண்டித்து லாரி, ஆட்டோ ஓட்டுநர்கள் அண்மையில் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்தார்கள் என்பதுதான் விந்தையிலும் விந்தை.
ரயில் ஓட்டுநர் ஒவ்வொருவரும் பணியைத் தொடங்கும்போது மது அருந்திய சோதனைக்கு உள்படுத்தப்படவும், ரத்தத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதல் சாராயம் இருப்பின் அவரை அன்று பணிசெய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் புதிய நடைமுறையை ரயில்வே அண்மையில் அறிமுகம் செய்தது. இதற்கும் கடும் எதிர்ப்பு.
நெடுஞ்சாலைகளில் மதுக் கடைகளை அனுமதிக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டாலும், இன்னமும் அந்தத் தீர்ப்பு நடைமுறைக்கு வரவேயில்லை.

மது அருந்தி, போதையில் வாகனம் ஓட்டினால் எத்தகைய தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்கின்ற விழிப்புணர்வை இன்றைய இளைஞர்களிடமும் நடுவயதினரிடமும் இந்தத் தீர்ப்பு ஒரே நாளில் நாடு முழுவதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக வலைதளங்களிலும் சுட்டுரைகளிலும் இதுபற்றிப் பேசாதவர்களே இல்லை. அந்த வகையில் இந்தத் தீர்ப்பு கணிசமான அச்ச உணர்வைக் கொண்டு சேர்த்திருக்கிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி சாலை விபத்து
களில் உலகம் முழுவதிலும் ஓராண்டில் 12 லட்சம் பேர் மரணமடைகிறார்கள். 5 கோடிப் பேர் காயமடைகிறார்கள். இவர்களில் மது அருந்திய விபத்தால் மரணமடைவோர் எண்ணிக்கை 4.8 லட்சம். காயமடைவோர் 200 லட்சம் பேர். சற்றொப்ப, பாதிக்குப் பாதி விபத்துகள் மது, போதை மாத்திரைகளால் நேரிடுகின்றன. இந்தியாவில் இந்த விகிதம் 70 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.

அதே நேரத்தில், மது அருந்தி வாகனம் ஓட்டியதற்காக இந்தியாவில் தண்டிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு. தண்டிக்கப்படுவோரும் சரி, அபராதம் மற்றும் நீதிமன்றம் கலையும் வரையிலான சிறைத் தண்டனை மட்டுமே பெறுவர். விபத்துகளை ஏற்படுத்திய இனங்களில் மட்டுமே, அதிலும்கூட மது அருந்தியது உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளில் மட்டுமே ஓட்டுநர்கள் சிறை செல்கிறார்கள். இந்த எண்ணிக்கையும் இந்தியாவில் மிகமிகக் குறைவு. இதில் பெரும் பணக்காரர்களும், பிரபலங்களும் சிக்காமல் தப்புவதுதான் வழக்கம்.

இப்போது சல்மான் கான் தண்டனை பெற்றிருக்கிறார் என்றால், 13 ஆண்டுகள் வழக்கு இழுத்தடித்துக் கொண்டு, சாட்சிகள் ஜோடிக்கப்பட்டு, ஊடகங்களில் அவர் மன்னிக்கப்பட வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு அனுதாபம் ஏற்படுத்தியும்கூட, சட்டம் தனது கடமையை செவ்வனே செய்து முடித்திருக்கிறது. இதுவே இனி வரும் காலங்களில் முன்னுதாரணமாக ஆக்கப்படும் என்பதால் இந்தத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.

Wednesday, May 6, 2015

மது அருந்தி கார் ஓட்டிய வழக்கில் சல்மான் கான் குற்றவாளி: மும்பை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

மும்பை: மது அருந்திவிட்டு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் குற்றவாளி என மும்பை அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
2002ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி, மும்பையின் பாந்த்ரா பகுதியில் சல்மான் கான் சென்ற கார் சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியது. இதில் நூருல்லா மெஹ்பூப் செரிஃப் என்பவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர்.

அன்றைய தினமே கைது செய்யப்பட்ட சல்மான் கான், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு விடுவிக்கப்பட்டார். பின்னர் 2002 அக்டோபரில் கைது செய்யப்பட்ட அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு மீதான விசாரணை 2006ஆம் ஆண்டு பாந்த்ரா மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தொடங்கியது.

அதன் பின்னர் 2012ஆம் ஆண்டு இவ்வழக்கு மும்பை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, புதிதாக விசாரணை தொடங்கியது. 2013ஆம் ஆண்டு சல்மான் மீது மேலும் சில பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
 
சல்மான் கான் மது அருந்தி கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டு சாட்சியங்களும் பெறப்பட்டன. இந்நிலையில் சம்பவத்தின் போது தான் கார் ஓட்டவில்லை எனவும், தனது டிரைவர் அசோக் சிங்தான் கார் ஓட்டினார் எனவும் சல்மான் வாக்குமூலம் அளித்தார். அசோக் சிங்கும் நீதிமன்றத்தில் ஆஜராகி அதனை ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், இந்த வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என மும்பை பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி டி.டபிள்யூ தேஷ்பாண்டே இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.

நீதிபதி கூறும்போது, உங்கள் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபணமாகிவிட்டது. சம்பவத்தன்று நீங்கள் மது அருந்தியிருந்தீர்கள். அன்றைய தினம் நீங்களே காரை ஓட்டியிருக்கிறீர்கள். மேலும் லைசன்ஸ் இல்லாமலும் காரை ஓட்டியிருக்கிறீர்கள். இந்த வழக்கில் நீங்கள் குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதைத் தொடர்ந்து சல்மான் கானிடம், "நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டுமா" என நீதிபதி கேட்டார். அதற்கு சல்மான் கான், "நான் காரை ஓட்டவில்லை" என்று தெரிவித்தார்.

நீதிபதி தீர்ப்பு வழங்கும்போது, டெல்லியில் நிகில் நந்தா என்பவர் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்து வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மேற்கோள் காட்டினார்.

நீதிபதி தீர்ப்பு வழங்கும் போது, சல்மான் கான் கண்களில் கண்ணீர் மல்க அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.  

அந்த வழக்கில் சல்மான் கானுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

சரியாக எழுதிய விடையை கோடுபோட்டு அடித்தனர் பிளஸ்–2–வில் 100 சதவீத மதிப்பெண் பெற மாணவர்கள் மேற்கொண்ட புதிய தந்திரம் அதிகாரிகளின் நடவடிக்கையால் வெளிச்சத்துக்கு வரும் புதிய மோசடி


சென்னை,

பிளஸ்–2 தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற மாணவர்கள் மேற்கொண்ட புதிய தந்திரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

200–க்கு 200 மதிப்பெண்

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 5–ந்தேதி பிளஸ்–2 தேர்வு தொடங்கி மார்ச் 31–ந்தேதி முடிவடைந்தது. மாணவர்கள் மருத்துவம் அல்லது முன்னணி கல்லூரிகளில் என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு கட் ஆப் மதிப்பெண் 200–க்கு 200 பெறவேண்டும் என்று நினைப்பது வழக்கம்.

சில மாணவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் தேர்வுகளில் 150–க்கு 140 மதிப்பெண் எடுக்கும் சூழ்நிலையில் தேர்வு எழுதினார்கள். 150–க்கு 150 மதிப்பெண் எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டால் சரியாக எழுதிய விடைத்தாள் அனைத்தையும் அடித்துவிடுங்கள். அவ்வாறு செய்தால் விடைத்தாளை திருத்துபவர்கள் நீங்கள் அடித்த பகுதியை மதிப்பீடு செய்யாமல் 0 மதிப்பெண் போட்டு விடுவார்கள் என்று சில பள்ளி ஆசிரியர்கள் ஆலோசனை கூறியிருக்கிறார்கள்.

அதற்கு காரணம், பெயிலான மாணவர்களுக்கு உடனடியாக தேர்வு நடத்தப்படும். அப்போது கேள்விகள் எளிதாக இருக்கும். 150–க்கு 150 மதிப்பெண் எடுத்துவிடலாம். அப்படி எடுத்தால் மருத்துவத்துப்படிப்பில் அல்லது என்ஜினீயரிங் கல்லூரிகளில் முன்னணி கல்லூரிகளில் சேர முடியும் என்று அந்த மாணவர்களின் ஆசிரியர்கள் சொன்னதாக கூறப்படுகிறது.

விடைத்தாளில் கோடு போட்டனர்

ஆசிரியர்கள் சொன்னது போலவே, குறைவான மதிப்பெண் கிடைக்கும் என்று நினைத்து மாணவர்கள் விடைத்தாள்களில் சரியாக எழுதியதை கோடு போட்டு அடித்துவிட்டு அந்த தாளை தேர்வு கண்காணிப்பாளரிடம் கொடுத்துள்ளனர். அவ்வாறு கோடு போட்டால் அதை திருத்தாமல் விடுவது வழக்கம்.

இவ்வாறு கோடு போட்ட விடைத்தாள்களை மதிப்பீடு செய்த ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் இந்த தகவலை அரசு தேர்வுத்துறைக்கு தெரிவித்துள்ளார். எனவே அந்த விடைத்தாள்களை மதிப்பீடு செய்யவேண்டாம் என்று முதன்மை கல்வி அதிகாரி வழியாக அரசு தேர்வுத்துறை அதிகாரி வாய்மொழியாக கூறியதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரியிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–

பெற்றோர்கள் கேட்டுக்கொண்டதால்

சில பிளஸ்–2 மாணவர்கள் விடைத்தாள்களில் எழுதியது அனைத்தையும் அடித்து உள்ளனர். இது பெரிய பிரச்சினை ஆகும் என்று கருதி அந்த மாணவர்களின் பெற்றோர்கள் நேரில் வந்து எங்கள் பிள்ளைகள் தெரியாமல் விடைத்தாளில் கோடு போட்டுவிட்டனர். அந்த விடைத்தாள்களை மதிப்பீடு செய்யுங்கள் என்று வேண்டி கேட்டுக்கொண்டனர். இதையொட்டி அந்த விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தப்பட்டன.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

தேர்வுத்துறை விடைத்தாள்களை திருத்திவிட்டதால் பெயிலாகி மீண்டும் தேர்வு எழுதி 100 சதவீத மதிப்பெண் எடுக்கலாம் என்று கனவு கண்டவர்களின் கனவு தவிடு பொடியாகிவிட்டது

இந்த தந்திரம் தான் தற்போது கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Periyar University gets ‘A’ Grade

Periyar University has been accredited with an ‘A’ Grade by the National Assessment and Accreditation Council (NAAC).

The NAAC team has accorded final Cumulative Grade Point Average (CGPA) of 3.15 points (performance descriptor “Very Good”), while according “A” Grade to Periyar University.

An elated C. Swaminathan, Vice-Chancellor, Periyar University, in a statement here on Tuesday said that by getting a CGPA of 3.15, the University had got a special status among the State universities in Tamil Nadu. He also expressed that the grade would propel the development activities in the University to further heights and students would be benefited to a larger extent.

An expert team headed by Bhoomitra Dev, former Vice-Chancellor, Dean Dayal Upadhyay Gorakhpur, University, and Rohil Khand, Agra, visited Periyar University from March 18 – 20 in connection with the re-accreditation process.

The NAAC peer team assessed the University in various criteria to award the grade. It met all the stakeholders of the University including teachers, students, non-teaching staff, alumni and parents. The team assessed the level of academic, research and other facilities in the 24 University departments.

The peer team also assessed the performance of the various centres of the University. The NAAC team presented the report after assessing the activities at University and the grade is based on this report.


Mr. Swaminathan said that the quality of teaching and research activities and other extension activities had fetched this great pride to the University.

நாளை பிளஸ் 2 'ரிசல்ட்' : 14ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

சென்னை: தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை வெளியாகிறது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, வரும் 14ம் தேதி முதல், மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.பிளஸ் 2 தேர்வு, மார்ச் 5ம் தேதி துவங்கியது; மார்ச், 31ம் தேதி முடிந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 8.43 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள், நாளை காலை 10:00 மணிக்கு வெளியாகிறது.
இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தேர்வர்கள் தங்கள் பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டு விவரத்தை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை பாட வாரியாக மதிப்பெண்களுடன், குறிப்பிட்ட இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும், தேசிய தகவல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணம் இன்றி, தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள், தங்கள் பள்ளிகள் மூலமும் மதிப்பெண்களுடன் முடிவுகளை அறியலாம்.இந்த ஆண்டு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் முதன்முறையாக அறிமுகமாகிறது. தலைமை ஆசிரியரால் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, தங்கள் பள்ளிகளில், வரும் 14ம் தேதி முதல், மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
தனித்தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின், தலைமை ஆசிரியர் மூலம் பதிவிறக்கம் செய்து பெறலாம். மேலும், பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் தேவைப்பட்டால், வரும் 18ம் தேதி முதல், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தங்கள் பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து, தாங்களே பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு, தேர்வுத் துறை இயக்குனர் அறிவித்து உள்ளார்.
இணையதள முகவரி
www.tnresults.nic. in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in

பிஞ்சுகளா? பிஞ்சிலே பழுத்ததுகளா? By ஜோதிர்லதா கிரிஜா

Dinamani

இளம் குற்றவாளிகள் பற்றிய பேச்சு அண்மைக்காலமாக ரொம்பவே அடிபட்டுக் கொண்டிருக்கிறது. பதினெட்டு வயது வரையில் உள்ளவர்களை சிறார்கள் எனக் கருதலாம் என்று இருக்கும் சட்டம் திருத்தப்பட்டு, அது பதினாறு வயதாகக் குறைக்கப்பட இருக்கிறது.
மக்களவையில் அது நிறைவேறிவிடக் கூடும் என்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகமாகத் தெரிகின்றன.
ஆனால், சில அமைப்புகள் மட்டுமன்றி மக்களில் ஒரு பகுதியினரும் பதினெட்டைப் பதினாறாகக் குறைக்கக் கூடாது என்று வாதிட்டு வருகின்றனர்.
இவர்களில் ஆண், பெண் இருபாலருமே அடக்கம். ஆண்கள் மறுதலிப்பதில் வியப்பு இல்லை. ஆனால், பெண்களில் சிலரும் ஆட்சேபிக்கின்றனர். அதற்குக் காரணம், அவர்களில் பலரும் ஆண் குழந்தைகளுக்குத் தாய்மார்களாக இருப்பதே காரணமாக இருக்கக்கூடும்.
தங்கள் பிள்ளைகள் அந்தத் தவறுகளைப் புரிந்துவிட்டால் என்ன செய்வது என்கிற கவலையே நியாயக்கண் அவிந்து போனதற்குக் காரணம்.
இதே தாய் - தந்தைமார்கள் தங்கள் மகள்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டாலோ, அதன்பின் கொலையும் செய்யப்பட்டாலோ என்ன பேசுவார்கள், அந்தக் குற்றவாளியை எவ்வாறு அணுகுவார்கள் என்பது வெள்ளிடைமலை.
குலத்தளவே ஆகுமாம் குணம் என்று சொல்லப்படுகிறது. இது தப்பு என்றே படுகிறது. பிறப்பளவே ஆகும் குணம் என்று இதை மாற்ற வேண்டும் என்றும் தோன்றுகிறது.
மனிதர்கள் முந்தைய பிறவி சார்ந்த நல்ல தன்மைகளுடனும், தீய தன்மைகளுடன் பிறக்கிறார்கள் என்பதே உண்மையாக இருக்க வேண்டும். இல்லாவிடில், சில குழந்தைகள் மேதைகளாகவே பிறப்பதன் அடிப்படைதான் என்ன? இதே விதி பொல்லாதக் குணங்களுடனும் அவர்கள் பிறக்கக் கூடிய சாத்தியக்கூற்றையே
விளக்குகிறது.
எத்தனை வயது கடந்தாலும், பெற்றோருக்கு அவர்கள் குழந்தைகளே. ஆனால், அதற்காக என்ன குற்றம் புரிந்தாலும் அவர்களைக் குழந்தைகளாகக் கருதிச் சீர்திருத்தப் பள்ளியில் சேர்ப்பதோ, மிகக் குறைவான தண்டனைக்குப் பின் வெளியே விடுவதோ தவறாகும்.
அண்மையில் பதினாறு அகவை முடிந்த ஓர் இளைஞன் ஒரு பெண்ணை வன்புணர்ச்சி செய்ய முயன்றபோது அவனைத் தடுக்க முற்பட்ட அப்பெண்ணின் பாட்டியைக் கொலை செய்துவிட்ட செய்தி நாளிதழ்களில் வந்தது.
தான் செய்யப்போவது தப்பு என்பது தெரிந்திருந்ததால்தானே, அதைத் தடுக்க முயல்பவர்களைக் காயப்படுத்தி அச்சுறுத்தவோ, கொலை செய்யவோ வேண்டும் என்கிற முன் எண்ணத்துடன் அவன் தயாராகக் கத்தியும் கையுமாய் அந்தப் பெண்ணை அணுகி இருந்திருக்க வேண்டும். அந்தப் பெண்ணையும் அச்சுறுத்தும் எண்ணத்துடனும்தானே அவன் திட்டமிட்டு வந்திருக்க வேண்டும்.
இத்தகைய மனப்போக்கு உள்ள பிஞ்சில் பழுத்த வஞ்சகர்களைச் சிறார்கள் என்னும் பட்டியலில் எவ்வாறு சேர்ப்பது?
மேலும், நம் நாட்டில் தண்டனைகள் போதாது. அரபு நாட்டில் கையூட்டு வாங்குபவரின் கையை வெட்டிவிடுவார்களாமே! இங்கே செய்யும் குற்றம் எதுவாக இருப்பினும் பிரியாணி என்ன, முட்டை என்ன, இட்லி - சட்னி என்ன என்று வயிறு முட்டச் சோறு கிடைக்கும் சிறையில் அன்றோ அடைக்கிறார்கள்.
நமது நாட்டில் சிறையிலுள்ள குற்றவாளிகளுக்கு - அவர்கள் வெளியே வர முடிவதில்லை என்பது ஒன்று நீங்கலாக - மற்ற எல்லாமே கிடைக்கச் செய்கிறார்களாமே.
தன் காதலைப் புறக்கணித்த பெண்ணின் மீது அமிலத்தைப் பீய்ச்சி அவளைக் குருடாக்கும் கயவனுக்குச் சிறைத் தண்டனை மட்டுமே போதுமா? அவனையும் குருடாக்க வேண்டியதுதானே நியாயம்.
இப்படி ஒரு சட்டம் இருந்தால், எவனேனும் பெண்கள் மீது அக்கினிக் குழம்பை வீசத் துணிவானா? இப்படிச் செய்யும் கயவர்கள் பதினெட்டைக் கடந்தவர்களாக இருந்தால் மட்டுமே தண்டிக்கப்பட வேண்டுமா?
இந்த விஷயத்தில் பைத்தியக்காரத்தனமான ஒரு யோசனையும் சொல்லப்படுகிறது. அதாவது, மனோதத்துவ முறையில் அணுகுமுறை இருக்க வேண்டுமாம்.
இந்தக் குற்றவாளிகளின் குடும்பப் பின்னணி, வளர்ந்த முறை, கல்வி போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, எந்தெந்தக் காரணங்களால் இவர்கள் குற்றவாளிகள் ஆனார்கள் - அதாவது ஆக்கப்பட்டார்கள் - என்பது ஆராயப்பட
வேண்டுமாம்.
சமுதாயம், சுற்றுச்சூழல், குடும்பப் பின்னணி ஆகியவை சரியாக இல்லாவிட்டால், இவர்கள் மன்னிப்புக்கோ, குறைந்த தண்டனைக்கோ உரியவர்களாம்.
அப்படிப் பார்த்தால், இந்த அசட்டுத்தனமான மனோதத்துவம் பதினெட்டைத் தாண்டியவர்களுக்கும் கூடப் பொருந்துமே.
ஆக மொத்தம், எல்லாக் குற்றவாளிகளையும் வெளியே விட்டு விடவேண்டுமா அல்லது சிறையின் சொகுசான வாழ்க்கையைத் தண்டனை என்னும் பெயரால் இவர்களுக்கு அளிக்க வேண்டுமா? இதென்ன பிதற்றல்.
பதின்மர் வயதின் தொடக்கமே பிள்ளைப் பிராயத்தின் முடிவெனக் கருதுவதே சரியாக இருக்கும். அதாவது, பன்னிரண்டு வயது முடிந்ததும் ஒருவரின் குழந்தைப் பருவம் முடிந்து விடுவதாகக் கருதுவதே முறையாக இருக்கும்.
பதினெட்டு வயது நிறைந்தவர்களைக் குழந்தைகள் என்று கூறுவது சரியானதல்ல.
இருபத்தெட்டு வயதுக்காரன் செய்வதைப் பதினாறு, பதினேழு வயதிலேயே செய்யத் துணிபவனுக்குக் குற்றத்தின் தன்மைக்கேற்ற தண்டனையை வழங்க வேண்டுமேயல்லாது, அவனைச் சிறுவன் என்று சொல்லுவது அதனினும் அதிக முட்டாள்தனமானது.


Company told to pay Rs 53,000 for selling defective phone

CHENNAI: A much vexed consumer will now laugh all the way to the bank. A consumer court in the city has awarded him 53,000 as compensation after he purchased a defective mobile phone worth 6,700, which was not repaired by the manufacturer despite more than 150 calls.

K Ponselvam of Thirumullaivoyal said he had purchased a XOLO mobile phone on June 23, 2013. While the phone had one year warranty, battery, charger and head phone had six months warranty. Within the warranty period, the phone started malfunctioning. He approached the seller, Univercell Telecommunications, and was asked to give the phone at the authorised customer service centre in Kilpauk.

He handed over the mobile on September 19 and received it 12 days later. A month after the repairs, it again malfunctioned. He gave the phone to the customer service centre on November 7, 2013. As the staff there did not give him a proper reply, he sent a representation to the centre's head on November 18. Next day, he received a reply saying his complaint has been registered. But, despite calling the centre more than 150 times, there was no reply.

Ponselvam then contacted the customer service department head of XOLO, but to no avail. He then sent a legal notice to the mobile manufacturer and the seller. As there was no reply, he moved the district consumer disputes redressal forum (North Chennai).

A bench of president K Jayabalan and member T Kalaiyarasi said though the mobile seller had received the notice, it did not appear before the forum. The manufacturer appeared but failed to file a written reply.

The bench said, "Evidence shows that the customer service centre had failed to rectify the defect." The forum directed them to refund the cost of the phone along with 50,000 as compensation for mental agony and 3,000 as costs.

Students courier applications, ComedK denies hall tickets

Bengaluru: Sixty five students from Telangana were denied admission tickets to appear for the May 10 ComedK entrance test. The reason: Their applications were sent through courier instead of speed post. Based on their petition, the high court on Tuesday ordered notices to the government and ComedK. A vacation division bench headed by justice Anand Byrareddy also ordered notice to Sri Chaitanya Junior Kalasala, a residential school at Ranga Reddy district in Telangana where petitioners Mohammed Abdul Rab and others were pursuing their course. The school authorities reportedly failed to send the applications through speed post as stipulated in the examination notification. The matter is posted for May 7. The petitioners have challenged the condition 5 of the April 13, 2015, notification issued by ComedK making it mandatory to send applications through speed post only. Terming the rule "arbitrary and unsustainable in law", they said despite meeting all the educational requirements mentioned in the notification, ComedK has denied them an opportunity to appear for the examination and also their right to education which amounts to nipping their career itself. They claimed that since it was a residential school and they were not allowed to venture outside the campus, they requested the school authorities to post the applications along with demand drafts to ComedK. But, the institution sent the applications through courier on March 12.

BU answer scripts stolen from college

BENGALURU: Nearly 200 blank answer scripts of the ongoing Bangalore University undergraduate exams have been stolen from a north Bengaluru college. The answer scripts had been kept in the cupboard of the locked staff room of Sambhram Academy of Management Studies (SAMS), MS Palya, Jalahalli East, Vidyaranyapura, on April 25. The staff found the room door ajar around 8.15am on April 27. However, the fact that 173 answer scripts were missing was noticed only around 4pm. In their complaint to Vidyaranyapura police, the college authorities said some students or outsiders may have entered the staff room by breaking the window pane. A senior BU official said the answer scripts could be filled up and slipped into bundles of legitimate answer-sheets when they are dispatched to BU after the exam. B Thimme Gowda, vice-chancellor of BU, has directed KN Ninge Gowda, registrar (evaluation), to file a police complaint against SAMS. The vice-chancellor confirmed the directive to BU.

Another senior varsity official told TOI, "It is the duty of the principal and other authorities of the college to safeguard the answer scripts. We had provided 6,000 answer scripts to this college. But due to their negligence, some of them have been stolen."

TO THE SCRIPT November 2014: Nine students and an attendant of BNM College, Banashankari, were caught writing BCom and BBM exams at a house in Basavanagudi by BU authorities December 2014: Four blank answer scripts of BU provided to New Horizon College, Marathahalli, were found at a bar in HAL police station limits

Serial nos will nail culprits We have submitted the serial numbers of the stolen answer papers to the BU. If anyone tries to misuse them, they will be caught. There was a security guard yet the miscreants stole them

Spokesperson of SAMS

Anna University to start admissions tomorrow


CHENNAI: Anna University will be issuing BE/BTech application forms on Wednesday. Over 2.4 lakhs application forms will be available in over 60 centres across the state.

The applications are priced at Rs500 for general categories and for SC/ST candidates it will cost Rs250. The last date to send in the filled application forms to Anna University is May 29 and for its affiliated colleges you need to submit the forms by May 27.

Application forms for second year BE/BTech degree courses under lateral entry scheme for the 2015-2016 academic year will be issued from May 13 to June 6. Applicants can get forms for seats in government, government aided and self-financing engineering colleges under the Directorate of Technical Education and Anna University.

The cost of applications is Rs 300 for general categories. For SCA/SC/ST candidates the forms can be availed free of cost.

The applications will be issued between 10am and 5pm at various centres across the state, which includes Chennai, Cuddalore, Coimbatore, Dharmapuri, Erode, Kanchipuram, Kanyakumari, Madurai, Nagapattinam, Pudukottai, Salem, Thanjavur, Tirunelveli, Tiruchy, Vellore and Villupuram.

The last date for the receipt of filled in application is June 9.

Supreme Court upholds maintenance for live-in partners


NEW DELHI: The Supreme Court on Tuesday said if a live-in relationship breaks down, the man is bound to pay maintenance to the woman and the children born from the relationship.

A bench of Justices Vikramajit Sen and A M Sapre dismissed a petition by a man who claimed that since he was already married before entering into the live-in relationship, his partner could not claim the status of a wife to be legally entitled to maintenance under Hindu Marriage Act.

The petition was filed by 'Z', who works in Bollywood, challenging an order of the Bombay high court, which had held that his live-in partner of nine years and the child were entitled to maintenance after their relationship ended. 'Z' argued that he was legally married to another woman for the last 49 years, hence his live-in partner was not entitled to maintenance as she was well aware of his marital status.

READ ALSO: Couple living together will be presumed married, SC rules

He said his live-in partner was a 'call girl' and alleged that she had decided to live with him on her own wish since 1986. They lived together for nine years and a child was born to them in 1988.

Justices Sen and Sapre slammed 'Z' for referring to his erstwhile live-in partner as a 'call girl' and said he was a philanderer as he was living with another woman despite being married.

"How absurd is your argument. You yourself went for the live-in relationship but now you are branding the poor lady as call girl. You are such an idiot that you went for a relationship. You are yourself a philanderer as you got into a relationship despite being married," the bench said.

READ ALSO: Children born of live-in relationships are legitimate, SC rules

In this case, the woman had first approached the family court in Bandra for declaration of their relationship as husband and wife. The court, however, refused her plea after 'Z' told the court that he was already married to someone else. She then approached the HC which had said she was eligible to claim maintenance for herself and her daughter. 'Z' challenged the HC order in the apex court.

The court in its various orders has recognized the concept of live-in relationship in society. It has gone to the extent of saying that if a man and woman "lived like husband and wife" for a long period and had children, the judiciary would presume that the two were legally married.

In April, the apex court had said continuous cohabitation of a couple would give rise to the presumption of a valid marriage and it would be for the opposite party to prove that they were not legally married.

READ ALSO: Can't keep live-in relations outside purview of rape, HC rules

"It is well settled that the law presumes in favour of marriage and against concubinage, when a man and woman have cohabited continuously for a long time. However, the presumption can be rebutted by leading unimpeachable evidence. A heavy burden lies on a party who seeks to deprive the relationship of legal origin," it had said.

சமையல் எரிவாயு மானியத்திற்கு வருமான வரி கிடையாது; மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி,

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த மானியத் தொகைக்கும் வருமான வரி கட்ட வேண்டும் என்ற தகவல் வெளியானது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிதி தொடர்பான சட்டதிருத்தத்தில், ஒரு தனி நபர் தான் பெறக்கூடிய மானியங்கள், ஊக்கத்தொகை போன்ற பலன்களும் அவரது வருமான கணக்கில் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டு இருந்ததே இதற்கு காரணம் என்றும் நிபுணர்கள் கூறினர்.

மத்திய அரசு இதனை மறுத்துள்ளது. மத்திய நிதித்துறை அமைச்சகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நிதி சட்ட திருத்தத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் தனி நபர் பெற்றுவரும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் அல்லது இதர நலத்திட்டங்கள் தொடர்பான மானியங்களுக்கு பொருந்தாது. இது வணிகம் மற்றும் தொழில் தொடர்பாக பெறப்படும் லாபங்கள், இதர வகையில் வரும் வருமானங்கள் தான் இதில் சேரும். எனவே சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம், நலத்திட்டங்கள் வாயிலாக பெறக்கூடிய மானியங்களுக்கு வருமான வரி கிடையாது’’ என்று கூறப்பட்டுள்ளது.

தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்றதால் பரபரப்பு பெட்ரோல் ‘பங்க்’கை முற்றுகையிட்டு வாகனஓட்டிகள் போராட்டம்

சேலையூர் அருகே தண்ணீர் கலந்த பெட்ரோல் போடப்பட்டதால் வாகனங்கள் நடுரோட்டில் நின்றன. இதனையடுத்து அந்த பெட்ரோலை விற்பனை செய்த பெட்ரோல் ‘பங்க்’கை முற்றுகையிட்டு வாகனஓட்டிகள் போராட்டம் நடத்தினர்.

தண்ணீர் கலந்த பெட்ரோல்

சென்னையை அடுத்த சேலையூர் அருகே ராஜகீழ்ப்பாக்கத்தில் தனியார் பெட்ரோல் ‘பங்க்’ உள்ளது. இங்கு நேற்று காலை வழக்கம்போல பலர் கார், மோட்டார்சைக்கிள்களில் வந்து பெட்ரோல் போட்டு சென்றனர்.

பெட்ரோல் போட்டு சென்ற வாகனங்கள் சிறிது தூரத்திலேயே நின்று விட்டன. ஒன்றன்பின் ஒன்றாக 50–க்கும் மேற்பட்ட வாகனங்கள் நின்றதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே தங்கள் வாகனங்களில் இருந்த பெட்ரோல் டேங்கை திறந்து பார்த்தனர். அப்போது பெட்ரோலில் தண்ணீர் கலந்து இருந்தது தெரியவந்தது.

முற்றுகை

உடனே அவர்கள் பெட்ரோல் ‘பங்க்’கிற்கு சென்றனர். வாகனங்களை தள்ளிக்கொண்டு பொதுமக்கள் கூட்டமாக வருவதை பார்த்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வாகனஓட்டிகள் பெட்ரோல் ‘பங்க்’கை முற்றுகையிட்டனர்.

பெட்ரோலில் தண்ணீர் கலந்திருப்பதாக அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் அங்கு சேலையூர் போலீசார் விரைந்து வந்து வாகனஓட்டிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நீர்கசிவு

பின்னர் பெட்ரோல் ‘பங்க்’ நிர்வாகத்தினர் மெக்கானிக்கை வரவழைத்து வாகனங்களில் இருந்த தண்ணீர் கலந்த பெட்ரோலை வெளியே எடுத்து சுத்தம் செய்தனர். பெட்ரோலுக்கு கொடுத்த பணமும் திருப்பி அளிக்கப்பட்டது. இதன்பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

பெட்ரோல் ‘பங்க்’கில் பெட்ரோல் சேமித்து வைக்கப்படும் டேங்க் பூமிக்கு அடியில் உள்ளதால் நீர் கசிவு ஏற்பட்டு பெட்ரோலில் தண்ணீர் கலந்திருக்கலாம் என தெரிகிறது. இதை சீர் செய்யும் பணியில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

வரக்கூடாத காதல்!

ஆசிரியர் பணி அறப்பணி; அதற்கு உன்னை அர்ப்பணி’ என்பது ஆண்டாண்டுகாலமாக கூறப்படும் நன்மொழி. ஒரு குழந்தை பிறந்து 5 ஆண்டுகள் வரைக்கும்தான் பெற்றோரின் வழிகாட்டுதலில் இருப்பார்கள். அதுவும் இப்போது 3 ஆண்டுகளாக குறைந்துவிட்டது. ஆக, 3 வயதில் இருந்து, வாழ்க்கையை தானே தொடங்கும்வரை, மழலை வகுப்பில் இருந்து கல்லூரி படிப்பை முடிக்கும் 18 ஆண்டுகளுக்கு மேலாக, கல்வி புகட்டுவதில் இருந்து ஒழுக்க நெறிகளை கற்றுக்கொடுப்பது, சிறந்த குணநலன்களை அவர்களுக்குள் விதைத்து சமுதாயத்துக்கு சிறந்த மக்களை தரும் பொறுப்பு ஆசிரியர்களுக்குத்தான் இருக்கிறது. ஆசிரியர்களின் பிரதிபலிப்பாகத்தான் மாணவர்கள் அறிவு, ஆற்றல், குணநலன்களில் மிளிருவார்கள். ஆசிரியர்கள்தான் மாணவர்களுக்கு முன்மாதிரிகள் (ரோல்மாடல்கள்). இந்த அருமையான சமூகவலைக்கு பங்கம் ஏற்பட்டுவிடுமோ? என்று அஞ்சும் வகையில், சமீபகாலங்களாக சில விரும்பத்தகாத சம்பவங்கள் ஆசிரியர்களால் அரங்கேற்றப்படுவது வேதனையாக இருக்கிறது.

தன்னிடம் படிக்கவரும் பிஞ்சு மலர்களையே கசக்கி எறிவதுபோல, சிலர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுகிறார்கள். பட்டம்பெற்று ஆசிரியர் பொறுப்புக்கு வரும் இளம் ஆசிரியைகள் தன்னிடம் படிக்கும் ‘டீன் ஏஜ்’ என்று கூறப்படும் பதின் பருவம், அதாவது 15, 18 வயது மாணவர்களையே தன் காதல் வலையில் வீழ்த்தி, தகாத உறவுகளை கற்றுக்கொடுத்து இழுத்துக்கொண்டு ஓடி, சில நேரங்களில் மாலையும் கழுத்துமாக மணமக்களாக வலம்வரும் காட்சியைப் பார்க்கும்போது, நிச்சயமாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய காலத்தின் கட்டாயம் வந்துவிட்டது. இப்போதுதான் தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் பையன்களையும், பெண்களையும் படிக்க அனுப்ப மும்முரமாக இருக்கும் நேரத்தில், இப்படி சம்பவங்கள் பெற்றோரை அச்சப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் உள்ள ஓர் ஆசிரியர் சங்கம், ஆசிரியர்களுக்கு உடை கட்டுப்பாடு கொண்டுவர வேண்டும், பெண் ஆசிரியர்களை ‘ஓவர் கோட்டு’ அணியச்சொல்லவேண்டும் என்று ஆலோசனை கூறியிருக்கிறது. உடை கட்டுப்பாடெல்லாம் கொண்டு வருவதால் எந்த பயனும் ஏற்பட்டுவிடாது. மாணவர்களை வேண்டுமானால் சலனப்படுத்தாமல் இருக்கலாம். ஆனால், ஆசிரியர்களின் மனதில் கறைபடியாமல் இருக்கவேண்டுமானால், ஆசிரியர் பயிற்சி கல்வியில் ஒழுக்க நெறிமுறைகளை பாடத்திட்டத்தில் முக்கியமாக சேர்க்கவேண்டும். புதிதாக எம்.பி.பி.எஸ். படிப்புக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ள பாடத்திட்டத்தில், மருத்துவ தொழில் முக்கியத்துவத்தோடு, மருத்துவர்களின் நெறிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளதுபோல, ஆசிரியர்களின் மனோபாவத்தில் தூய்மை நிலவும் பாடத்திட்டங்களை சேர்க்கவேண்டும். 18 வயதில் திருமணம் செய்வது சட்டப்பூர்வமானது என்றாலும், இப்படி ஆசிரியர்–மாணவர் திருமணம் ஆசிரியர்களின் ஒழுக்க நெறிமுறைகளுக்கு மாறானது என்ற வகையில், ஆசிரியர்கள் கடைப்பிடிக்கவேண்டிய பணிநெறிமுறையில் சேர்த்து, மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளதுபோல, நல்ல ஒழுக்கம் இல்லாமல் ஒரு ஆசிரியர் இருக்கமுடியாது. அது இல்லை என்றால் அவர்கள் உப்புத்தன்மை இல்லாத உப்பை போலத்தான் இருப்பார்கள். ஆசிரியர்கள் கடவுளுக்கு சமமானவர்கள், அந்த உயர்ந்த நிலையில் இருந்து அவர்கள் கீழ்நிலைக்கு வந்துவிடக்கூடாது. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதுபோல, நன்னடத்தைக்கு எடுத்துக்காட்டாக ஆசிரியர்கள் திகழவேண்டும். அவர்கள் பொறுப்பில் நம்பிக்கையோடு விடப்பட்டுள்ள மாணவர்களுக்கு நற்குணங்களை ஊட்டவேண்டும். நீதிபதி எஸ்.வைத்தியநாதன் சொன்னது, அதில் அர்த்தமுள்ளது. இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ள அறிவுரைகளை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு அனுப்பி பொன்மொழியாக பின்பற்ற சொல்லவேண்டும்.

Tuesday, May 5, 2015

கைவிட்ட உறவுகள்... கைகொடுத்த விகடன்...களத்தில் இறங்கிய டாக்டர்!

ன்றைக்கு மதியம் சேலம் அரசு மருத்துவமனையின் பக்கம் சென்றிருந்தோம்.

மருத்துவமனையின் உள்ளே இருந்த (நுழைவாயிலுக்கு அருகிலேயே)... சாக்கடைத் தொட்டிக்குள்  அசைவற்ற நிலையில் படுத்திருந்தார் ஒரு மூதாட்டி. அவர் முகத்தில் மிகப்பெரிய கட்டி ஒன்று இருந்தது. அவரது முகத்தையே மறைத்திருந்தது அந்த கட்டி. ஒட்டிய உடலில் வெறும் எலும்பு மட்டுமே தெரிகிறது. அந்த மூதாட்டியின் உடலில் இருந்து மூச்சுக்காற்று மட்டுமே வெளிவருகிறது. மற்றபடி எந்தவிதமான அசைவுகளும் இல்லை. செருப்பு இல்லாமல் தரையில் காலைக்கூட வைக்க முடியாத அளவுக்கு வெயில் அடித்துக்கொண்டிருக்க, கட்டியால் பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டியின் முகம் வெயிலால் கொதித்துக் கிடந்த சிமெண்ட் கட்டையில் படிந்திருந்தது. மருத்துவமனையில் கேட்பாரற்று கிடந்தார் ஆதரவற்ற மூதாட்டி.
 
நூற்றுக்கணக்கான மருத்துவர்கள், ஆயிரக்கணக்கான நோயாளிகள், பார்வையாளர்கள் என அந்த நுழைவாயிலின் வழியாக  மருத்துவமனையின் உள்ளே செல்லும் அத்தனை மனிதர்களும்(!) அந்த மூதாட்டியை பார்த்துவிட்டுத்தான் போயாக வேண்டும். சிலர் பார்த்தும் பார்க்காதது போல தலையை திருப்பிக் கொண்டு சென்றார்கள். இன்னும் சிலரோ..  'ஐயோ பாவம்..!' என்று வாயிலேயே வைத்தியம் பார்த்துவிட்டு சென்றார்கள். ஆனால், அவரை நிழலில் தூக்கி போடக் கூட ஆள் இல்லை. இந்த அவலத்தை நாம் கண்டது ஓர் உயிர் காக்கும் மருத்துவமனையில் என்பதுதான் வேதனை.

உடனடியாக மருத்துவமனையின் ஆர்.எம்.ஓ. டாக்டர் செல்வகளஞ்சியத்தை தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னோம்.  "வெளியில் இருக்கும் 108 ஆம்புலன்சிடம் சொல்லி, அவரை உள்ளே அழைத்துவரச் சொல்லுங்கள் உடனடியாக சிகிச்சை கொடுப்போம்!" என்றார். சும்மாவே நின்ற ஆம்புலன்ஸ்காரர்கள், மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே உள்ள வெறும் 10 அடி தூரத்துக்கு வருவதற்கு,  "நீங்க 108க்கு கால் பண்ணுங்க. அவுங்க சொன்னாதான் நாங்க வர முடியும்!" னு பதில் தந்தார்கள். 
 

 
ஆனால், அடுத்த ஐந்து  நிமிடத்திற்குள்ளாக வெளியில் ஓடிவந்தார் டாக்டர் செல்வகளஞ்சியம். ஆம்புலன்சை அழைத்தார். "எங்கே இருக்கிறார் அந்த மூதாட்டி?" என்று நம்மை அழைத்துக்கொண்டு அந்த இடத்திற்கு ஓடி வந்தார். மூதாட்டியின் உடம்பு அழுக்கு நிறைந்திருந்தது. ஆடையில்லாமல் கிடந்தது. ஆனால், சற்றும் யோசிக்கவில்லை அவர். ஒரு உதவியாளரை கூப்பிட்டு அவரே அந்த மூதாட்டியை மேலே தூக்கி வைத்தார். ஸ்ட்ரெக்ச்சர் கொண்டுவரப்பட்டு மூதாட்டியை உள்ளே அழைத்துச் சென்று அனுமதித்து சிகிச்சையளித்தார் டாக்டர் செல்வகளஞ்சியம்.

சில மணி நேரம் கழித்து டாக்டர் செல்வகளஞ்சியத்திடம் பேசினோம்.
"இப்போதுதான் அந்த மூதாட்டியை குளிக்க வைத்தோம். அவருக்கு கன்னத்தில் இருக்கும் எச்சில் சுரப்பியில் கட்டி இருக்கிறது. தவிர காதும் கேட்கவில்லை. அவருடைய உறவினர்கள் யாரோதான் இங்கு கொண்டுவந்து விட்டுவிட்டு போயிருக்கிறார்கள். அவரை பெட்டில் சேர்த்து சிகிச்சையளித்து வருகிறோம். ஆனால் கட்டியை அகற்றுவது கடினம். அது கேன்சர் கட்டியாக கூட இருக்கலாம். ஆனால் எங்களால் முடிந்தவரை முயற்சி பண்ணுகிறோம்" என்றார். 

ஏழைகளுக்கு டாக்டர்தானே கடவுள்...!


- எம்.புண்ணியமூர்த்தி

படங்கள்: 
எம்.விஜயகுமார்

பிளஸ் 2: எப்படிப்பட்ட தேர்வு முடிவுக்கும் கவலை வேண்டாம்!

Return to frontpage
எஸ்.எஸ்.லெனின்

பள்ளி மாணவர்களைத் தேர்வுக்கு தயார் செய்வது ஒரு கலை என்றால், தேர்வு முடிவுகளை எதிர்கொள்ள ஆயத்தம் செய்வதும் ஒரு கலைதான். முன்னதற்கு வருடம் முழுக்க உழைப்பைக் கொட்டும் மாணவரின் குடும்பத்தினர், பின்னதை அலட்சியப்படுத்தக் கூடாது. அப்படிச் செய்தால், அதற்குக் கொடுக்கும் விலை சில நேரம் மோசமான விளைவைத் தந்துவிடலாம்.

காரணம் தேர்வு முடிவுகளில் தோல்வியை உணர்வது ஆளாளுக்கு மாறும். ’ஜஸ்ட் பாஸ்’ என்பது சில மாணவர்களுக்கு உற்சாக வெற்றியாகவும், உச்ச மதிப்பெண்ணில் ஒன்றிரண்டு குறைந்துபோவது பலருக்கு துவளச்செய்யும் தோல்வியாகவும் உணரப்படுவது இந்த வகையில்தான்.

சொச்ச மதிப்பெண் இழப்பால் குறிப்பிட்ட உயர்கல்வி படிப்புக்கான வாய்ப்பை இழக்கும் நெருக்கடி, இன்றைய மாணவர்களை அதிகளவில் அச்சுறுத்துகிறது. அந்த வகையில் தேர்வுத் தோல்விக்காக முந்தைய தலைமுறையினர் மேற்கொண்ட தவறான முடிவை, எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை எனத் தற்போது எடுக்கும் உணர்வுபூர்வமானவர்கள் அதிகரித்துவிட்டார்கள். தேர்வு முடிவை எதிர்கொள்வது, உயர்கல்வி தொடர்பான முடிவை எடுப்பது போன்ற நெருக்கடி மிகுந்த ‘தங்கத் தருணங்களை’க் கையாளும் மன நல மேலாண்மை குறித்து ஆலோசனை வழங்குகிறார் திருச்சி மன நல ஆலோசகர் டயஸ்:

முடிவுகளை நொந்து பயனில்லை

தேர்வு முடிவுகள் பெரும்பாலும் அறுதியிடப்பட்டவை. வருடம் முழுக்க மாணவர் உழைத்ததற்கான பலாபலன்தான் தேர்வு முடிவு. தேர்வு முடிவு இன்னதென்று மாணவர் மட்டுமல்ல, அவருடைய குடும்பத்தினரும் முன்கூட்டியே அனுமானிக்க இயலும். அப்படியிருக்கும்போது தேர்வு முடிவு வெளியானதும் பெரிதாகப் பதற்றப்படுவதால், ஆகப்போவது ஒன்றுமில்லை.

ஒரு வேளை பாதகமான தேர்வு முடிவாக இருப்பினும், அந்த முடிவுகள் மாணவரை முடக்கிவிடாமல் தற்காப்பதும், அதிலிருந்து மீள்வதற்கு உதவுவதும் ஆரோக்கியமான போக்கு. வாழ்வின் அடுத்தகட்டத்துக்கான, ஒரு இனிய தொடக்கத்துக்கான வாய்ப்பை, தேர்வு முடிவு அப்போதைக்கு நழுவச் செய்திருக்கலாம்; ஆனால், எந்த வகையிலும் அதுவே வாழ்க்கையின் முடிவாக மாற வாய்ப்பு தரக் கூடாது.

99 சதவீதம் தோல்வியாளர்களே!

தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டதும் தன்னை முழு வெற்றியாளராக மெச்சிக்கொள்பவர்கள் மிகக் குறைவு. முதன்மை வெற்றியாளர்களை அணுகிக் கேட்டால், தாங்கள் எதிர்பார்த்ததிலிருந்து ஒரு சில மதிப்பெண்களை இழந்திருப்பதை ஒப்புக்கொள்வார்கள். அதாவது தேர்வு முடிவுகளில் 99 விழுக்காட்டினர் தனிப்பட்ட வகையில் தோல்வியாளர்களே!

வெளிப்பார்வைக்கு வெற்றி பெற்றிருந்தும் விரும்பிய தொழிற்கல்வி அல்லது பாடப்பிரிவு கைநழுவும் கவலையில் மன அழுத்தம் உள்ளிட்ட மன நலப் பிரச்சினைகளோ, விளிம்பு நிலை உந்துதல்களோ அந்த நேரம் மாணவர்களை அலைக் கழிக்கலாம். ஆகவே, நன்றாகப் படிக்கும் மாணவரின் குடும்பத்தினரும் இது தொடர்பாக உரிய ஆயத்தங்களை மேற்கொள்வது அத்தியாவசியம்.

குடும்பத்தினர் அரவணைப்பு

வெற்றியோ தோல்வியோ அந்தத் தருணத்தில் குடும்பத்தினரின் அரவணைப்பைத்தான் மாணவர்கள் அதிகம் எதிர்பார்ப்பார்கள். அதைச் சரியாக வழங்க குடும்பத்தினர் கூடிப் பேசி, தங்களுக்குள் முதலில் தெளிவைப் பெற வேண்டும். எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்வது அல்லது அவற்றை அதிகம் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருப்பது மாணவருக்கு இயல்பான சூழலை உருவாக்கும்.

தேர்வு எழுதும்வரை தங்கள் எதிர்பார்ப்புகளை மாணவர்கள் உணரச்செய்வது, ஒரு வகையில் நியாயமானது. ஆனால், அதையே தேர்வு முடிவுவரை பிடித்து இழுத்துக்கொண்டிருப்பது, மாணவர்களைக் கடும் மன நெருக்கடிக்குத் தள்ளும். மாறாக மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை இல்லை; அதில் சறுக்கியவர்கள்கூடப் பல சாதனைகளை செய்திருக்கிறார்கள் என்பதை மாணவர்கள் உணரச் செய்யலாம்.

மீண்டு வர அவகாசம்

தேர்வு முடிவில் ஒரு வேளை எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காமல் போனால், உடனடியாகப் பெற்றோர் தங்கள் குமுறலை வெளிப்படுத்த வேண்டாம். அதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை. எதிர்பார்ப்புகளும், அது பொய்க்கும்போது உருவாகும் ஏமாற்றமும் எந்த வகையிலும் புறக்கணிக்கக்கூடியதல்ல.

அதேநேரம், அப்போதைக்கு அதைத் தள்ளிவைத்து, தேர்வு முடிவு ஆரவாரம் அடங்கிய பிறகு, அதைப் பற்றி ஆரோக்கியமாகப் பகிர்வது எதிர்காலத்தில் எச்சரிக்கையாக இருக்க உதவும். இழப்பு மற்றும் வருத்தத்தில் கரைந்து போனதில் இருந்து மீண்டு வரும் மாணவர்கள், தோல்வி அல்லது சறுக்கல் குறித்து விவாதிக்கவும் ஆலோசனை பெறவும் அவர்களாகவே முன்வருவார்கள்.

எதிர்மறையாளர்களை விலக்குங்கள்

தேர்வு முடிவு நேரத்தில் அனைவரது வீடுகளிலும் இந்த அபத்தம் அதிகம் நடக்கும். ஆளாளுக்கு விசாரிக்கிறேன் பேர்வழி என்று அபத்த வாதங்களையும் அறிவுரைகளையும் அள்ளி வழங்குவார்கள். சில குதர்க்கவாதிகள் குத்திக்காட்டுவதும் உண்டு. முக்கியமாக, பள்ளியில் உடன் படிக்கும் அல்லது அருகில் குடியிருக்கும் சக மாணவர்கள், உங்கள் நண்பர்களின் வீடுகளில் உள்ள மாணவர்களை ஒப்பிட்டு உங்கள் பிள்ளைகளைக் கடிந்து கொள்ளாதீர்கள்.

அது அந்த நேரத்தில் அவர்களை உடையச் செய்யும். எதிர்மறையாளர்கள் முதலில் இந்த அஸ்திரத்தை எடுத்து வீசுவார்கள். அப்படியானவர்களை ஒரு சில நாட்களாவது அண்ட விடாமல் பார்த்துக்கொள்வதுடன், அவர்களுடைய தொலைபேசி விசாரிப்புகளையும் குடும்பத்தினரே எதிர்கொள்வது நல்லது. தேர்வு முடிவு பிள்ளைகளை அதிகம் பாதித்திருந்தால், இடத்தை மாற்றுவதுகூட நல்லது.

தேர்வு முடிவில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் இல்லாது போனால் மறு கூட்டல், திருத்தல் முறையிடல் மூலமாகச் சரி செய்ய வாய்ப்புண்டு. அல்லது அதற்கு உரிய ஆயத்தங்களை மேற்கொள்வதன் மூலம், விரக்தி விலகி அப்போதைய நம்பிக்கை கீற்றுக்கு வாய்ப்பளிக்கலாம். அதே நேரம் மிகையான அல்லது பாவனையான ஆறுதல்களைப் பிள்ளைகள் உணர்ந்தால், மேலும் உடைந்து போக அதுவே காரணமாகிவிடும்.

உள்ளக் கிடக்கையை உணருங்கள்

தேர்வு முடிவுக்கு முன்னும் பின்னும் உள்ள நாட்களில் மாணவர்கள் அதிகம் தனித்திருக்கும் வாய்ப்புகளைத் தவிர்க்க வேண்டும். அவர்களுடைய நலம் நாடும் முதிர்ச்சியானவர்கள் அருகிலிருப்பது அவசியம். நாம் பேசுவதைவிட, அவர்கள் பேச வாய்ப்பளிக்க வேண்டும். உள்ளக் கிடக்கை அவர்களை அறியாது வெளிப்படும்போது, அதற்கேற்றவாறு எதிர்வினையாற்றுவது குடும்பத்தினருக்கு எளிதாக இருக்கும்.

பெண் குழந்தைகளை அழ அனுமதிக்கும் நம் சமுதாய அமைப்பு, ஆண்களுக்கு அந்த வாய்ப்புகளை வழங்குவதில்லை. இதனால், பையன்கள் மிகுந்த மன அழுத்தத்தை உணருவார்கள். மனம் விட்டுப் பேச வைப்பது அவர்கள் மனசை லேசாக்கும்.

இந்த நேரத்தில் அவர்கள் உதிர்க்கும் வார்த்தைகள், உணர்த்தும் குறிப்புகள் அவர்களின் மனப்போக்கைக் கண்ணாடியாகக் காட்டும். குடும்பத்தினர் அவற்றை உற்றுக் கவனித்து, தேவையான அனுசரணையை வழங்குவது அவசியம். ஏனென்றால், எந்தவொரு தவறான முடிவும், அதற்கான எச்சரிக்கைக் குறிப்புகளைச் சுற்றி இருப்பவர்களுக்கு முன்னதாகவே வழங்கும்.

மற்ற பாதிப்புகள்

தேர்வில் தோல்வி அல்லது சறுக்கல் என்பது பல மன நலப் பாதிப்புகளை மாணவர்களிடையே விதைக்கப் பார்க்கும். அவற்றைக் கவனிக்காது விட்டால் பழக்க வழக்கங்கள் மற்றும் சுபாவத்தில் சில மாறுதல்களை உருவாக்கி மீள வாய்ப்பில்லாத புதைகுழிக்குள் இழுத்துவிடும். முக்கியமாக, தன்னம்பிக்கையை இழப்பார்கள். தாழ்வு மனப்பான்மை கவ்வப் பார்க்கும்.

உயர்கல்வியில் சேர்ந்த பின்னர் படிப்பில் முன்புபோல் ஈடுபாடு இல்லாமல் இருப்பார்கள். மாணவரின் நட்பு வட்டம் மாறுவதுடன், அது தவறான புதிய பழக்கங்களுக்கு வித்திடவும் கூடும். ஒரு சிலர் போதை மற்றும் அதற்கு நிகரானவற்றைப் பரிசோதிப்பார்கள். மன ஆறுதலுக்கு வாய்ப்பளிக்கும் நண்பர் குழாமை அதிகம் ஆதரிப்பார்கள். அவர்கள் தரும் அழுத்தத்துக்கு ஏற்ப மாறுவார்கள். இதே ஆறுதலுக்காக சிலர் எதிர்பாலினக் கவர்ச்சியில் இடறுவார்கள்.

இவற்றையெல்லாம் குடும்பத்தினர் அறிந்து வைத்திருப்பதும் அவற்றுக்கான வாய்ப்பில்லாத வகையில் இதமான அரவணைப்பைத் தருவதும், அவர்களைப் பழையபடி மீட்கும். இதற்கு, நேர்மறையான உத்திகள் மட்டுமே பலனளிக்கும். மாணவர்களின் மற்ற திறமைகள், முந்தைய வெற்றிகள் ஆகியவற்றை நினைவுபடுத்துவதுடன், பிரகாசமான எதிர்காலத்துக்கு மிச்சமிருக்கும் உருப்படியான உயர்கல்வி வாய்ப்புகளை உணரச் செய்யலாம்.

அவசியமென்றால் மனநல ஆலோசகர் உதவியையும் நாடலாம். அதில் எந்தத் தயக்கமும் தேவையில்லை.

பேஸ்புக்கில் தேடப்படும் குற்றவாளியின் படம் வெளியீடு: லைக் செய்து மாட்டிக் கொண்ட திருடன்

அமெரிக்காவின் காஸ்காதே நகரத்தைச் சேர்ந்த லேவி சார்லஸ் ரியர்டன் என்பவனை திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளி என்று பேஸ்புக்கில் காவல்துறை வெளியிட, அந்த படத்துக்கு லைக் செய்ததன் மூலம் அவரே காவல்துறையிடம் மாட்டிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, வழிப்பறி, திருட்டுச் சம்பவங்களில் தேடப்பட்டு வந்த ரியர்டன், தனது பெயர் மற்றும் புகைப்படத்தை பேஸ்புக்கில் காவல்துறை வெளியிட்டதைப் பார்த்ததும், குறும்பாக, அதற்கு லைக் செய்துள்ளான்.

அவன் லைக் செய்ததை வைத்து இணையதள முகவரியின் அடிப்படையில், காவல்துறையினர், அவன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து கையில் விளங்கை மாட்டிவிட்டனர்.

இதைத் தான் தன் தலையில் தானே மணலை வாறிப் போட்டுக் கொள்வது என்பார்களோ...

மயான புத்ரி! ஆச்சர்யமூட்டும் ஜெயந்தி

cinema.vikatan.com
ன்று, பெண்கள் செய்யாத வேலை என்று எதுவும் இல்லை. அந்த வகையில், மின்மயானத்தில் சிதையூட்டும் பெண்ணாக நிமிர்ந்து பார்க்க வைக்கிறார், நாமக்கல்லைச் சேர்ந்த ஜெயந்தி. நாமக்கல் நகராட்சியும், யுனைடெட் வெல்ஃபேர் அறக்கட்டளையும் இணைந்து நடத்திவரும் மின்மயானத்தில் மேனேஜராகவும், சிதையூட்டும் பணியாளராகவும் வேலை செய்து வரும் ஜெயந்தி, பிராமண இனத்தைச் சேர்ந்த பெண்!
‘‘இந்த பாடியை முடிச்சிட்டு வந்துடறேன்...’’ என்ற ஜெயந்தி, அரை மணி நேரத்தில் வந்தார்.
‘‘பக்கத்துல இருக்கிற கூலிப்பட்டி கிராமத்துல பிறந்தவ நான். அப்பா பட்டுகுருக்கள், சிவன் கோயில் அர்ச்சகர். எங்க வீட்டுல மூணு பொண்ணுங்க. நான்தான் கடைசிங்கிறதால, அப்பாவுக்கு என் மேல ரொம்ப பாசம். எம்.ஏ முடிச்ச நேரத்துல வேற ஜாதியைச் சேர்ந்த வாசுதேவனைக் காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எங்கம்மா, அக்கா எல்லோரும் என்னை ஒதுக்க, அப்பா மட்டும் எதிர்க்கல. கணவர் வீட்டுல என்னை ஏத்துக்கிட்டாங்க. எனக்கு ரெட்டைக் குழந்தைகள் பிறந்தன.
 என் அப்பா திடீர்னு இறந்துட்டாரு. அவரை அடக்கம் பண்ணும்போது, பெண்ணா இருந்தாலும் நான் அங்கே இருந்தேன். அப்போ ஓர் உடலா இல்லாம, தெய்வமாதான் தெரிஞ்சாரு எங்கப்பா. நான் தையல் வேலை கத்துக்கிட்டு, அதை செய்திட்டிருந்தேன். தையல் மெஷினை மிதிக்க மிதிக்க வயித்துவலி அதிகமாக... டாக்டர், வயித்துல ரெண்டரை கிலோ கட்டி இருக்கிறதா சொன்னாங்க. சீரியஸான நிலையில ஆஸ்பத்திரியில அட்மிட் ஆனேன். உயிர் பிழைக்கிறது கஷ்டம்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. எங்கப்பாதான் தெய்வமா இருந்து அறுவை சிகிச்சையில் என்னைக் காப்பாத்திக் கொடுத்தார்.
வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம் என்ற குடும்பச் சூழலில்தான், நாலு வருஷத்துக்கு முன்ன இந்த மின்மயானத்துல தோட்டப் பராமரிப்பு வேலைக்காக வந்தேன். இடிபாடுகளாவும், மண்டை ஓடு, எலும்புகளாவும் இருந்த இடத்தை, நானும், மலர்னு ஒரு பெண்ணும் சேர்ந்து மூணே மாசத்துல பச்சைப்பசேல் தோட்டமா மாத்தினோம். சில மாசங்கள்ல, சிதையூட்டிட்டு இருந்த ஆண்கள் வேலையை விட்டுப் போக, நான் அந்த வேலையைச் செய்றேன்னு நிர்வாகத்துக்கிட்ட கேட்டேன். ‘உன்னோட கணவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தா வேலை தர்றோம்'னு சொல்லிட்டாங்க. வீட்டுல எல்லாரையும் சம்மதிக்க வெச்சு இந்த வேலையில சேர்ந்தேன். என்னோட பணி நேர்த்தியைப் பார்த்து, ஒரே வருஷத்துக்குள்ள, என்னையே இந்த மின்மயானததுக்கு மேனேஜர் ஆக்கிச்சு நிர்வாகம்’’ என்ற ஜெயந்தி, தொடர்ந்தார்.
‘‘இறந்தவங்களோட உறவினர்களை எல்லாம் வெளிய அனுப்பிட்டு, நான், எனக்கு உதவியா மலர்னு ரெண்டு பொம் பளைங்க மட்டும், டிராலியில உடலை வைக்கிறதுல இருந்து, கடைசி வரைக்கும் எல்லா வேலைகளையும் செய்தாலும், கொஞ்சம்கூட பயந்ததில்ல. அதுக்காக சிதையூட்டும் வேலை சுலபமானதும் இல்ல. இயற்கை மரணம் எய்தினவங்களை சிதையூட்டும்போது, 45 நிமிஷத்துல சாம்பலை எடுத்திடலாம். ஆனா, போஸ்ட் மார்ட்டம் பண்ணின உடலா இருந்தா, சிதையூட்டின கொஞ்ச நேரத்துலயே, சூட்டுல எல்லா உறுப்புகளும் தனியா சிதறி விழும். அதை எல்லாம் மறுபடியும் எடுத்து, மரக்கட்டை மேல போடணும். சிரமமான அந்த வேலைகளை, தைரியமா பண்ணியிருக்கேன்.
ஒரு நாளில் அதிகபட்சமா 9 உடல்கள் வரை, பின்னிரவு வரைகூட இருந்து சிதையூட்டி இருக்கேன். அநாதைப் பிணங்களை இலவசமா சிதையூட்டுவேன். சின்ன வயசுல, பக்கத்துல யாராச்சும் முட்டை சாப்பிட்டாகூட மூக்கை மூடிக்குவேன். இப்போ பிண வாடை பழகிப் போச்சு. அதான் வாழ்க்கை!’’ என்ற ஜெயந்தியின் கண்களிலும் படர்கிறது சிரிப்பு.
‘‘பிணங்கள் எனக்குப் பயம் தராததுக்குக் காரணம், என் அப்பாவை நான் சவமா பார்த்த காட்சிதான். அப்படி இங்க வர்ற சவங்கள் எல்லாம் யாரோட அப்பாவோ, அம்மாவோ, கணவரோ, பிள்ளையோனு நினைக்கும்போது, பயமா இருக்காது... பாவமாதான் இருக்கும். எங்கப்பா போலவே எல்லாரையும் தெய்வமா நினைச்சிக்குவேன். பேய், பிசாசுனு எதிர்மறையா நினைச்சதில்ல. அப்படி நினைக்கிறவங்களால, அடுத்த நொடி இந்த வேலையைப் பார்க்க முடியாம போயிடும்!’’ என்று அழகாக உளவியலும் பேசுகிறார் ஜெயந்தி.
‘‘இப்போ மயானத்துல எனக்கு உதவியா கலாராணி, சாரதானு ரெண்டு பெண்கள் இருக்காங்க’’ என்ற ஜெயந்தி, அந்தப் பெண்களை அறிமுகப்படுத்த, ‘‘ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பரமசிவம் தவிர, நாங்க மூணு பேரும்தான் எல்லா வேலைகளையும் செய்துட்டு இருக்கோம்’’ என்றார் கலாராணி.
‘‘சார், ஆம்பளைங்க செய்ற எல்லா வேலைகளையும் இப்போ பொம்பளைங்களும் செய்றாங்கங்கிறது சந்தோஷமான விஷயம். ஆனா, இது அதைவிட ஸ்பெஷல். ஏன்னா, எல்லா ஆம்பளைங்களாலயும் செய்ய முடியாத வேலை இது. அந்த வகையில நாங்க எல்லாம் சூப்பர்உமன்!’’ என்று துள்ளலுடன் பேசும் சாரதாவுக்கு, வயது 23!
சபாஷ்!

தமிழ்நாட்டிலும் இருக்கிறது மத்திய பல்கலைகழகம்..!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தங்கள் பிள்ளைகள் அடுத்த என்ன படிக்கலாம் என பெற்றோர்களும், தான் என்ன படிக்க வேண்டும் என்பதை பிள்ளைகளும் இணையத்தையும், சுற்றத்தாரையும் நாடி தெரிந்து கொண்டிருக்கின்றனர்.
“இந்த கல்லூரி சிறந்தது, அந்த கல்வி நிறுவனம் சூப்பர்...இங்கே படித்தால் உடனே வேலை கிடைக்கும், அங்கு படித்தால் எல்லோரும்  கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகலாம்...' என விளம்பரங்கள் சூழ்ந்து கொண்டிருக்க, நாம் எதை தேர்ந்தெடுப்பது என்பதில் அதிக குழப்பம் நிலவுகிறது.  

இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், வழக்கம்போல் அதிகம் பேரின் விருப்பம் டாக்டர், என்ஜினியர் கோர்ஸ்கள்தான். ஆனால், இவற்றையும் தாண்டி பட்டப்படிப்பு என ஒன்று இருக்கிறது அல்லவா ? அதற்கு ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது - தமிழ்நாடு மத்தியப் பல்கலைகழகம் ( CUTN - Central University of Tamil Nadu ).  

அப்படின்னா என்ன...அதுல என்ன ஸ்பெஷல் ? 

மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மத்தியப் பல்கலைக் கழகம் இயங்கி வருகிறது. இந்தியா முழுவதும் 42 மத்திய பல்கலை கழகங்கள் இயங்கி வருகின்றன. அரசாங்கத்தின் முதன்மை கல்வி நிறுவனங்களான IIT போன்ற முக்கிய கல்விநிறுவனங்கள் வரிசையில் மத்திய பல்கலைகழகமும் இடம் பெறுகிறது.  இதில் படித்து நாம் பெறுகிற பட்டம் என்பது மதிப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அத்தகைய பல்கலைகழகம் தமிழகத்தில் அமைந்திருப்பது பலரும் அறியாததாக இருப்பதுதான் அறியாமையின் உச்சம். ஏனெனில், தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டது தமிழக மக்கள் கல்வியில் முதிர்ச்சி அடைய வேண்டும் என்கிற காரணத்தினால். ஆனால், இங்கு படிக்கக் கூடிய தமிழ் மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.  மற்ற மாநில மாணவர்கள் அதிகம் படித்தாலும் அவர்களோடு போட்டி போட்டு படிக்கும் திறன் படைத்த தமிழ் மாணவர்கள் இதை பற்றி அறியாமலே பல்வேறு வகையில் தங்கள் வட்டத்தை சுருக்கி கொள்கின்றனர்.

விவசாயத்தை பெரும்பாலும் நம்பி இருக்கக் கூடிய திருவாரூர் மாவட்டத்தில் அமைந்திருக்கக் கூடியது தான் இந்த மத்திய பல்கலைக்கழகம் (CUTN - Central University of Tamil Nadu ) . திருவாரூருக்கு செல்லக் கூடிய மயிலாடுதுறை சாலை, கும்பகோணம் சாலை இவை இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஆற்றாங்கரை ஓரம் அமைந்திருக்கக் கூடியது சியுடிஎன். திருவாரூர் மாவட்டத்தில் நீலக்குடி, நாகக்குடி எனும் இரு கிராமத்தில் 516 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது சியுடிஎன். சுற்றுப்புற பகுதிகளுக்கு ஒத்துவராத, உயர் தர வடிவமைப்பிலான கட்டடங்கள், சியுடிஎன் என காட்டுகின்றன.
சுற்று வட்டாரத்தில் இப்படி ஒரு வடிவமைப்பு எங்கும் காணப்படவில்லை. செக் போஸ்ட் தாண்டி நேரே உள்ளே சென்றால், அங்கே பறந்து நிற்கிறது நிர்வாக அலுவலகம். அதை சூழ்ந்து நிற்கும் கட்டடங்கள் என்ன? அங்கே என்ன படிக்கலாம்? அதனால் என்ன வாய்ப்புகள் கிடைக்கிறது?
ஹாஸ்டல் வாய்ப்புகள் எவ்வாறு உள்ளன? போன்ற முழு விவரங்களையும் அறிந்துகொள்ள உதவினர் இதன் துணைவேந்தர் (பொ) முனைவர் பேராசிரியர் செங்கதிர் மற்றும் ஊடகம் & தகவல் தொடர்பியல் துறை தலைவர் பேரா. ஆதி ராமானுஜமும் வந்தார்.

பல்கலைகழகத்தில் ஹாஸ்டல் வசதி உள்ளது.  இதில் இரண்டு பேருக்கு ஒரு அறை எனும் விகிதத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. குடிநீர், வெந்நீர் குளிர் நீர் என வகைபடுத்தி தண்ணீர் தாரளமாக கிடைக்கிறது.  உணவுக்கு தட்டுப்பாடு இல்லை.  ஹாஸ்டலில் தங்குபவர்களுக்கு மெஸ் தனியாக வைக்கப்பட்டுள்ளது. ஹாஸ்டல் வாசிகளுக்கு உணவுக்குத் தான் கொஞ்சம் செலவாகிறது. மற்றபடி செலவு இங்கு குறைவாக இருக்கிறது. பிஹெச்டி படிக்கக் கூடிய மாணவர்களுக்கு தனித் தனியாக வீடுகளே ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் திருமணம் ஆனவர்கள் தங்கள் துணைகளுடன் இருந்தும் படிக்கலாம் என்ற ஒரு முறையும் பின்பற்றப்படுகிறது.

சியுடிஎன் கேம்பஸ்ஸில் வைபை இணைய வசதி  தரப்பட்டுள்ளது. பல்கலை முழுமையும் வெளிச்சமான காற்றோட்டமான அறைகள் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் க்ளாஸ் ரூம் முறை பின்பற்றப்படுகிறது. அறிவியல் ஆய்வகங்கள் முழு வசதிகளுடான் தரப்பட்டுள்ளன. இலவச இணைய வசதி நூலகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பாடம் தொடர்பான புத்தகங்கள் எண்ணிக்கையில் அடங்காத அளவிற்கு உள்ளன. இரவு பகல் என வித்தியாசம் பாராது ஏதேனும் ஒரு நிகழ்வு பல்கலை வளாகத்தினுள் நடந்து கொண்டிருப்பதை காண முடிகிறது. 'அல்லைட்' எனும் துணைப் பாடங்களை தானே தேர்ந்தெடுக்கும் முறையும் இங்கு மாணவர்களுக்கு தரப்பட இருக்கிறது. இன்னும் பல்கலைகழகத்தில் பொறியியல் கொண்டு வரவில்லையே என கேட்டதற்கு, அதுதான் எல்லா இடங்களிலும் இருக்கிறதே என பதில் வருகிறது. இந்த வருடத்திலிருந்து எம்.டெக் கோர்ஸ்கள் கூட ஆரம்பமாகிறது.

பல்கலைகழகம் நேரடியாக மத்திய அரசின் கீழ் இயங்குவதால் ஏராளமான வசதி வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். இங்கு செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பெறும் செம்மொழி தமிழ் எம் ஏ படிப்பிறகு குறிப்பிட்ட அளவு ஸ்டைபண்ட் வழங்கப்பெறுகிறது. இது மட்டுமில்லாமல் ஆய்வக வசதிகள் அதிகம் நிறைந்து காணப்படுகின்றன. எம் ஏ ஊடகம் தகவல் தொடர்பியல் துறைக்கு அதிகமான தொழில் நுட்பபொருட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவை மாணவர்களால் இலகுவாக கையாளவும் கற்றுத் தரப்படுகிறது. கேமரா, வீடியோ மிக்சர் என பல வகைகளிலும் இந்த துறை மாணவர்களுக்கு நன்றாக பயிற்சி அளிக்கப்படுவதாக அந்த துறை தலைவர் பேரா. ஆதி ராமானுஜம் தெரிவித்தார்.

தினமும் ஏதாவது கருத்தரங்கம் (கான்பரன்ஸ்) நடைபெற்று கொண்டிருக்கிறது. இங்கு இருக்கக் கூடிய பேராசிரியர்கள் அனைவரும் கல்வியில் முதன்மை இடம் பிடித்துள்ளவர்கள். வெளி நாட்டில் பிஎஹ்டி க்கு மேலே படித்தவர்களும் இங்கு வேலை பார்கின்றனர். வெளி நாட்டு அறிஞர்களின் தொடர்புகள் இங்கு பயிலக்கூடிய மாணவர்களுக்கு எளிதில் கிட்டுகிறது.  எல்லா மாநிலத்து மாணவர்களும் இங்கு படிப்பதால் கலாச்சார ஒற்றுமை மேம்படுகிறது. பயிற்று மொழி ஆங்கிலமாக உள்ளது.

இதில் என்ன கோர்ஸ் இருக்கிறது பார்க்கும் போது, ஐந்து வருட எம்.எஸ்ஸி இன்டக்ரேட்டட் பிரிவும், இரண்டு வருட எம்.ஏ பிரிவும் இரண்டு வருட எம்.எஸ்ஸி பிரிவும் பிஎஹ்டி படிப்பும் இருக்கிறது. சியுடிஎன் பின் வரும் நிறுவனங்களுடன் சில கற்றல் நிலைகளை ஒப்பந்த முறையில் கொண்டு சில படிப்புகளை வழங்குகிறது, அவை: Madras School of Economics (MSE) , Central Institute of Classial Tamil   (CICT) National Law School of India (NLSIU) and Tamil Nadu Agricultrual University (TNAU).

 
என்னவெல்லாம் கோர்ஸ்கள் இருக்கின்றன? 


Five Years M.Sc  Integrated Courses (after 10+2)

                Integrated MSc. Chemistry

                Integrated MSc. Economics *

                Integrated MSc. Life Sciences

                Integrated MSc. Mathematics

                Integrated MSc. Physics

 
Two Year M.Sc Couses (after graduation)

               MSc. Chemistry

               MSc General Economics**

               MSc Financial Economics**

              MSc Acturarial Economics**

              MSc Environmental Economics**

              MSc Aplied Quantitative Finance **

 

Two Year M.Tech Courses *** ( after graduation)

M.Tech Material Science & Nano Technology

M.Tech Energy & Environmental Technology

 

Two Year M. A Courses ( after graduation)


M.A English Studies

M.A HIndhi

M.A Media & Communication

M.A Social Work

M.A Tamil

 

Ph D ( after post graduation)

Ph D in Chemistry

Ph D in Economics

Ph D in English

Ph D in Lifescience

Ph D in Mathematics

Ph D in Physics

Ph D in Tamil

    

*Academic Mentoring by Madras School of Economics, Chennai

**  Conducted at Madras School of Ecoonomics (MSE) Chennai

*** Programmes provisionallu proposed from the academic year 2015-2016

 

 இங்கு படிக்கும் அனுபவம் எப்படி என சில மாணவர்களிடம் கேட்டபோது...

பிந்துஜா ( எம்.ஏ ஊடகம் தகவல் தொடர்பியல் இரண்டாமாண்டு, கேரளா)

கேரள மத்திய பல்கலை கழகத்தில் படிக்க முயற்சி செய்தேன்.  ஆனால், சியுடிஎன் சீட் கிடைச்சது. கிட்டத்தட்ட மலையாளம் தமிழ் போல, ஆகவே, இங்கே எனக்கு ஒத்து வரும் என்று தோன்றியது. எல்லாரும் நல்லா பழகுவாங்க. நாமேளே எல்லா பொருட்களையும் இலகுவாக உபயோகப்படுத்தலாம். இங்கே படிக்கறது கொஞ்சம் ஜாலிதான் என கொஞ்சும் குரலில் முடித்தார்.

 
அருண் குமார் ( எம்.ஏ தமிழ் இரண்டாமாண்டு, திருவண்ணாமலை) 

நான் சென்னையில் ஜர்னலிசம் படித்தேன். பின் அச்சு ஊடகம் மீது ஆர்வம் இருந்ததால் எனக்கு தமிழ் படிக்க ஆசை. அதனால் இங்க தமிழ் தேர்ந்தெடுத்தேன்.  எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. முடிச்சிட்டு தில்லியில் எம்.பில் பண்ணப் போறேன்.  இங்க படிப்பதால் நிறைய அறிஞர்களின் தொடர்புகள் கிடைக்கிறது. அது மட்டுமில்லாமல் ஸ்டைபன்ட் வேற உண்டு. நல்ல காற்றோட்டமான வகுப்பு, ஹாஸ்டல் ரூம் இதை தவிர வேற என்ன வேணும் பாஸ்.

 
ஜெய்கரன் ( கணிதம் மூன்றாமாண்டு, உ.பி.) 

நான் நாலைந்து இடங்களில் விண்ணப்பம் போட்டிருந்தேன். இங்க வந்து மூன்று வருடம் முடியப் போகுது. ஹாஸ்டல் வசதி எல்லாம் பரவாயில்லை. நல்ல செமினாரெல்லாம் கண்டக்ட் பண்ணுவாங்க.பயனுள்ளதாக இருக்கும். இப்போதுதான் வளர்ந்து வரதால சியுடிஎன்-க்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. மாணவர்கள் நிறைய கற்றுக் கொள்ள இங்க இருக்க உபகரணங்கள் உதவும்.

வெங்கடேஸ்வரி (வேதியியல் இரண்டாமாண்டு, தஞ்சாவூர்) 

நான் ப்ளஸ் டூவில் 75%க்கு மேல  மார்க் எடுத்தேன். இங்க படிச்சா நல்லா இருக்கும்ன்னு சொன்னங்க. இருந்தாலும், 'ஹாஸ்டல் ஒத்துக்குமா? அஞ்சு வருடம் தொடர்ந்து படிக்கணுமே...?'ன்னு  கேள்வி வந்துச்சு. சேர்ந்ததுக்கு அப்புறம் அந்த கவலை இல்லை. நான் சேர்ந்தப்ப 3௦ சீட் ஒரு கிளாசுக்கு.  Sc/St 15 பேர்,  Obc 8 பேர்,  General Quota 7 பேர் என்ற முறையில்தான் சேர்த்தாங்க. இப்பவும் அந்த சிஸ்டம் இருக்குன்னு நினைக்கிறேன். இன்னும் மூணு வருசத்துக்கு படிப்பு சம்பந்தமா கவலை இல்லை.

நுழைவுத் தேர்வில் தேர்வாகிற நபர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். அதில் தேர்வாகிற நபர்கள் இங்கு படிக்க தகுதியுடையவர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒருகிணைந்த முதுகலை படிப்பில் ஒரு வகுப்பிற்கு 30 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்" என்றார். 

ஏப்ரல் ஆறாம் தேதி துவங்குகிற ஆன்லைன் விண்ணப்பம் மே ஐந்தாம் தேதியோடு முடிவடைகிறது.  நுழைவு தேர்வுக்கான அட்மிட் கார்டு 21.௦5.2௦15 முதல் தரப்படுகிறது. மத்திய பல்கலை கழகத்துக்கான நுழைவுத் தேர்வு ஜூன் ௦6 & ௦7 தேதி. ஜூன் 2௦ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியீடு. இந்த தேர்வு முறை  பெரும்பாலும் அப்ஜெக்டிவ் டைப் தேர்வாகவே இருக்கும். 

 மற்ற மாநிலங்களில் மத்திய பல்கலைகழகம் இருந்தாலும் அங்கே போட்டி அதிகம் காணப்படும். அங்கே நுழைவு தேர்வு எழுதி மாணவர்கள் இங்கு வந்து படிக்கலாகின்றனர். அவர்களுக்கு போட்டியாக நாளைய தமிழகத்தை தாங்கப் போகிற, இந்தியாவை வலுப்படுத்தப் போகிற தமிழகத்து மாணவர்களும் நிறைய பேர் இதற்கு விண்ணபித்து சியுடிஎன்-னை நிரப்புவார்கள் என்கிற நம்பிக்கையில் அந்த வளாகத்தை விட்டு வெளி ஏறினோம். சவாலை சந்தியுங்கள்.

 மத்திய பல்கலை நுழைவுக்கான இணையதளம் :http://www.cucet2015.co.in/ 


-த.க.தமிழ் பாரதன் (மாணவ பத்திரிகையாளர்)

புகைப்படங்கள்:க.சதீஷ்குமார்

Major scam of leaking AIPMT question paper unearthed in Haryana

CHANDIGARH: The Haryana police has unearthed a major scam with the arrest of a gang specializing in leaking question papers of All India Pre-Medical and Pre-Dental Test (AIPMT) and taking hefty fees from students whom they helped.

The cops have so far arrested two dental surgeons and an MBBS student of the prestigious Post Graduate Institute of Medical Sciences, all of whom were based in Rohtak.

Gang leader Roop Kumar Dangi, also a resident of Rohtak, is on the run. Investigators say he is most likely a suspended employee of the Haryana government's food and civil supplies department but they are in the process of getting more details. They have also arrested a local small-time businessman.

According to the police, the gang had succeeded in leaking the AIPMT exam paper on Sunday at Rohtak. The members had made deals with nine students and offered to help them for fees ranging between Rs 15 lakh and Rs 20 lakh.

While the accused student has been identified as Ravi Kumar, the doctors are Bhupender Sangwan, who runs a clinic at Rohtak, and Sanjeet Kumar, who cleared his bachelor in dental surgery from a Yamunanagar institute in 2012.

A resident of Greater Noida, Ravi had got admission to the MBBS course in 2007 and has cleared just one year in the past eight years. Police suspect he may have been involved in a few other paper leaks as well and are questioning him to get more details.

The fourth accomplice, Rajesh Kumar, ran a business of money transfer and share-dealing at Rohtak. All four were produced in a Rohtak court on Monday from where they were sent to the police remand for four days.

Suspecting foul play, Rohtak's newly appointed inspector general of police Shrikant Jadhav had set up a team of officials to keep an eye on the exam but the gang succeeded in leaking the question paper. By following their cellphone locations, police tracked down and arrested the four men while they were in a car.

The men revealed during interrogation that they had already sent answer keys for all 90 questions to nine students through Whatsapp just before the exam started. They had also provided electronic equipment which was supposedly to be used to solve the question paper.

As per the deal, the students had to make the payment after the result of the exam on June 5.

The modus operandi

The police have recovered mobile phones, Bluetooth devices, three under-shirts, three bras along with chips from the accused. "A device called 'makhi' (housefly) was put in an ear while installing another in the under-shirt or bra. This equipment works like a cellphone. As per the plan, the gang members would tell students answer keys through their mobile phones from a distant place," said inspector Vijay Kumar, who is part of the investigation team.

Engineer kills self blaming superior for harassment

TRICHY: In a chilling reminder of an agricultural department executive engineer's suicide in Tirunelveli two months ago for which a former minister and an official were arrested, a 36-year-old engineer in Tiruvarur has killed himself, apparently unable to bear harassment from a superior officer at workplace.

R Muthukrishnan, site supervisor with the state's District Rural Development Agency, doused himself with kerosene and set himself ablaze on Sunday. Before his death on Monday morning, he gave a dying declaration to Tiruvarur magistrate P Kavitha blaming Senthil Kumar, an executive engineer in the department, for his death.

Tiruvarur RDO Muthumeenakshi and DSP J Anbazhagan were also present when the statement was recorded.

Police registered a case under Section 306 (abetment of suicide) of the IPC against Kumar, who is absconding. Muthukrishnan accused Kumar of giving him lots of work and putting him under undue pressure. DRDA sources said there were differences of opinion between Muthukrishnan and Kumar with regard to selection of beneficiaries under the Tamil Nadu government's flagship solar-powered green house scheme, meant for the poor homeless.

Muthukrishnan, a resident of Ammaiyappan Nagar in Tiruvarur, has been working as a site supervisor in Nannilam union for the past eight months. He was earlier attached to DRDA in Tiruvarur as a junior draftsman. He had apparently sought transfer to Nannilam because of Kumar's harassment. But even after the transfer, the harassment continued, it was alleged.

On Sunday, after dinner, Muthukrishnan left his house for a walk. He doused himself in kerosene and set himself ablaze in the middle of the road. By the time onlookers came to his rescue, he was badly burnt. He was rushed to Tiruvarur government hospital, where he died. As news of his death spread on Monday, government officials attached to DRDA and members of site supervisors' association staged a demonstration in front of the Tiruvarur collectorate.

His family initially refused to accept the body after postmortem. They were pacified by district collector N Mathivanan, who assured a free and fair investigation. Muthukrishnan is survived by wife Thilagavathi and two sons.

On February 20, agriculture department engineer S Muthukumarasamy, 57, killed himself by jumping before a train in Tirunelveli district. It was alleged that he was being harassed by the staff in then agriculture minister S S Krishnamoorthy's office with regard to certain appointments in the department. Krishnamoorthy, who was subsequently dropped from the cabinet, was later arrested along with agriculture department chief engineer M Senthil and charged with abetment to suicide.

Top Kerala cop caught cheating in law exam

KOCHI: A senior Kerala police official was on Monday sent out of the examination hall after being caught cheating while writing the Master of Laws (LLM) examination.

T J Jose, inspector general of police of Thrissur range, was appearing for a supplementary paper on constitutional law at St Paul's college, Kalamassery. An off-campus LLM student, Jose had appeared for the exam at the college at 10am. Around 11.30am, the invigilator caught the IG copying from a chit allegedly kept between the answer sheets.

"The invigilator immediately informed the external examiner and college manager. They questioned him and the IG left the campus and took the chit with him. We have informed MG university and also send them the invigilator's statement for necessary action," said college vice-principal Peter VJ.

Confirming the incident to the media, the vice-principal said the incident will be intimated to the Mahatma Gandhi University.

The IG, however, denied reports that he had been caught by the invigilators. "Nobody has caught me for copying, no papers have been recovered from me. The examination began at 10 am, and I finished writing my paper at about 12 and I came out. Nobody has given me any report of copying,'' the IG said.

Replying to questions he said. "I had appeared for the one of the papers of the LLM examination held on Saturday, I appeared for the examination today also. I will be appearing for the examination to be held on Tuesday also.''

He conceded that the police higher ups had sought an explanation from him on the alleged incident. "I told them the same details," he said.

Asked about the reports that the state home minister had directed ADGP Sankar Reddy to probe the charge, Jose said, "It is natural that there would be a probe whenever such a charge is made."

When contacted the ADGP said the probe will begin at the earliest. "Home minister has given the direction for the probe. We only have to see the availability of the college officials involved in the examination duty. The inquiry report will be submitted within the minimum time possible," Sankar Reddy said.

2 varsity employees suspended after answer sheets go missing

AJMER: The authorities at Maharishi Dayanand Saraswati University suspended two employees on Monday and ordered a probe after a bundle of checked answer sheets of UG exams went missing.

According to sources, varsity employees Chand Singh Rawat and Papu Singh Rathore were given the responsibility to bring the evaluated answersheets from Udaipur and Bhilwara to Ajmer. They took the vehicle of the university to collect the answers sheets from different centres and returned on Saturday.

On Monday, while verifying the answer sheets, it was found that one of the bundles was missing.

The employees of the secrecy department informed the university authorities about the missing bundle and a massive search was carried out on the varsity premises.

Later, university registrar Renu Jaipal suspended both Rawat and Rathore for negligence in their duty.

Preliminary, it seemed that either the employees had not closed the vehicle's door properly during their return journey and the bundle fell off en route or they didn't collect the bundle from the evaluation centre. The university had made coordinating centres in different districts of the state to evaluate the answer sheets of graduation exams. Such a system helps in getting the evaluation done by teachers of different universities and colleges.

Sources said the university has informed all the police stations of Udaipur, Bhilwara and Ajmer about the incident.

According to sources, if the bundle of answer sheets is not found, then the provision of giving average marks to students would apply, as is done when copies get destroyed.

Jaipal refused to comment on this issue.

After the two employees were suspended, the university employees' union staged a protest against the administration and demanded a roll back of the order. The employees abstained from work and shouted slogans against the university.

According to sources, such an incident had happened in 2009 too when a bundle of answer sheets had gone missing while being brought to Pali. Another such incident had occurred in 2007 when question papers had gone missing from an envelope in the university.

SSLC answer-script with threat goes viral

Bengaluru: SSLC candidates pinning currency notes to their answer-scripts, penning heart-wringing pleas, dropping threats, offering inducements or indulging in claptrap is not new. Several such answer-scripts have gone viral on WhatsApp in the past few days, exposing blatant violation of the ban on mobile phones inside evaluation centres. In one answer-script that has gone viral, the candidate has oscillated between threatening to invoke black magic against the evaluator to committing suicide. Another candidate has waxed eloquently on how to make chicken curry. The Karnataka Secondary Education Examination Board (KSEEB), which has banned use of mobile phones inside evaluation centres of SSLC answer-scripts from this year, has said evaluators uploading scripts on WhatsApp will face the music. Yashoda Bopanna, director of KSEEB, told TOI that students should focus on studying well, instead of writing such things. "We don't know whether they are original answer-scripts or not and where they originated. We will conduct an inquiry, if anyone is found guilty of leaking them. We will take action against them," she said. Evaluation of answer-papers is going on at 210 centres and around 57,000 teachers are evaluating the scripts. The SSLC results are expected to be announced in the second week of May. According to sources in KSEEB, some students write such things on answer- papers every year but evaluators are now violating the rules by leaking them. They said the evaluator who leaked the suicide threat might have been scared and put it on WhatsApp. But leaking answer scripts that have chicken curry recipe is only mischief, they added.

WHAT THE STUDENT WROTE

"If the evaluator doesn't pass me, I will commit suicide. I will also perform black magic on the evaluator and his or her family members, so that they die. Maths is a difficult subject. I have done well in other subjects. If I fail in this subject, I will only be abused by my family members."

A student in maths answer-script

Discharge petition of government employee dismissed by court

The Madras High Court Bench here has refused to discharge a government employee from a case registered against him on a charge of canvassing depositors who had been cheated by a finance company run by his wife and son in Tiruchi in May 2010.
Justice S. Nagamuthu rejected the plea to discharge C. Chandrasekaran from the case booked under the Tamil Nadu Protection of Interest of Depositors (In Financial Establishments) Act, 1997 though he claimed that he was neither a partner nor in any way connected to the firm. Pointing out that as many as 218 depositors had been reportedly cheated to the tune of Rs. 45.60 lakh by the finance company, the judge said that the petitioner before the court should necessarily face trial in the case since there were materials to doubt that he had canvassed for deposits.

A slow start to this summer

Those days that define Chennai are here again. Though city residents complained of sultry heat on Monday, the first day of peak summer season, popularly known as ‘ kathiri ’, the weather observatories recorded nearly two degrees less than the average monthly temperature.

This month had a hot start to ‘ kathiri ’ when the mercury level soared to 36 degree Celsius and 37 degree Celsius on May 1 and May 2. However, there has been a dip in the day temperature since Sunday. On Monday, Nungambakkam and Meenambakkam registered 34.6 degree Celsius and 34.7 degree Celsius, respectively.

Normally, the peak summer days last till May 29. Cloud cover was one of the reasons for the temperature to drop slightly. However, residents would have experienced sultry weather because of humidity, said officials of the Meteorological Department.

The department forecasts that the mercury level will hover around 36 degree Celsius on Tuesday. There is a possibility of light showers in city due to convective activity, which follows a period of intense heat.While the weather observatory has recorded a relatively lower temperature, residents said Monday was more of a typical peak summer day and the real feel was more like 42 degrees Celsius.

“There may be a difference in the heat felt by people venturing outdoors because of the increasing solar radiation. The maximum temperature is recorded at the observatory under shade and ventilation to maintain equilibrium. This kind of temperature is felt at those houses with proper ventilation,” Y.E.A. Raj, former deputy director general of meteorology, Chennai.

He said in 2014, the city recorded its first hot day when the mercury level crossed the 40–degree mark on May 15.

“We experienced light showers around the same time — between May 5 and May 8.”

Pay for bus ticket and now, pay for luggage too

To avoid getting fleeced by autorickshaw drivers, N. Arun of Mylapore hopped into an MTC bus to reach Chennai Central. He was on his way to his hometown and had a suitcase in his hand. But to his dismay, he ended paying for two tickets – one for himself and the other for the luggage.

“I paid Rs.10 extra to the conductor despite having just one suitcase. When I asked him why he was charging more, he did not have proper explanation,” says Mr. Arun.

For many who cannot afford an auto rickshaw or a call taxi, MTC buses are the only refuge. “They should have a permissible limit for luggage. If a passenger carries more than two bags, then he can be charged extra,” says M. Selvi, a housemaid, who visits her hometown Madurai every month.

Meanwhile conductors claim that the ticket inspectors create a problem if they do not issue a ticket for the luggage. “This is one issue that triggers an argument with the passengers. Most often, the problem arises in routes connecting railway stations and bus termini,” says a bus conductor.

Another conductor said that unlike SETC buses, the ones plying for MTC do not have space for luggage. “The baggage causes inconvenience to other passengers. Buses connecting railway stations and bus termini should be provided with luggage space to solve the problem,” he adds.

லஞ்ச வழக்கில் அதிகாரி 'சஸ்பெண்ட்'ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை,: தீயணைப்பு துறை அதிகாரியின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.கன்னியாகுமரி கோட்டத்தில், தீயணைப்பு துறையில், கோட்ட அதிகாரியாக, செல்வராஜா என்பவர் பணியாற்றி வந்தார். தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்காக, ஆரோக்கியராஜ் என்பவரிடம், 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, செல்வராஜா மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து, அவரை, 'சஸ்பெண்ட்' செய்து, 2013, மே மாதம், தமிழக அரசு உத்தரவிட்டது. 'சஸ்பெண்ட்' உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனுவை பரிசீலிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் செல்வராஜா மனுத் தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தகுதி அடிப்படையில், சட்டப்படி பரிசீலிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட்டது. 'சஸ்பெண்ட்' உத்தரவை ரத்து செய்ய, அரசு மறுத்து விட்டதால், சென்னை உயர் நீதிமன்றத்தில், செல்வராஜா மீண்டும் மனுத் தாக்கல் செய்தார்.மனுவை, நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்தார். அரசு தரப்பில், கூடுதல் பிளீடர் தனபாலன் ஆஜரானார். மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:
லஞ்சம் பெற்றதாக, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், செல்வராஜா மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புலன் விசாரணைக்குப் பின், நாகர்கோவில், தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முன், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில், தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்வதில்லை என, அரசு முடிவெடுத்துள்ளது. ஊழல் வழக்கில், தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய முடியாது என்ற அதிகாரிகளின் முடிவில் குறுக்கிட, உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.

வண்டு கடியால் பாதிக்கப்பட்டவருக்கு நாய்க்கடி சிகிச்சை

காஞ்சிபுரம்: வண்டு கடித்ததால் காஞ்சிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த பாதிக்கப்பட்ட வாலிபருக்கு, நாய்க்கடி ஊசி போட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.காஞ்சிபுரம் அடுத்த, சிறுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி, 33; பெயின்டர்.கடந்த வாரம் வியாழக்கிழமை, தன் விவசாய நிலத்தில், பாலசுப்ரமணி வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது, வண்டு ஒன்று, எதிர்பாராத விதமாக, அவரது கையில் கடித்து விட்டது. கை வீங்கத் துவங்கியது. மறுநாள் காலை, காஞ்சிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.புறநோயாளிகளுக்கான சீட்டை பெற்று, பொது மருத்துவப் பிரிவு மருத்துவரை அணுகியுள்ளார்.பாலசுப்ரமணியை பரிசோதித்த மருத்துவர், ஏ.ஆர்.வி., (ஆன்டி ரேபீஸ் வேக்சின்) என்ற ஊசி போடும் படி, சீட்டில் எழுதி, கொடுத்துள்ளார்.அதை பெற்றுக்கொண்டு ஊசி போடும் இடத்திற்கு சென்ற பாலசுப்ரமணிக்கு, ஊசி போடப்பட்டது. மேலும், அவரை 4ம் தேதி வரும்படி அறிவுறுத்தினர்.அதன்படி, நேற்று காலை மீண்டும், அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அவர் சென்றபோது, பொது மருத்துவப் பிரிவில், வேறு ஒரு மருத்துவர் இருந்துள்ளார்.பாலசுப்ரமணியின் கையில் உள்ள புண்ணை பரிசோதித்த மருத்துவர், அவரை தோல் வியாதிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரை பார்க்க அறிவுறுத்தியுள்ளார்.இதனால், தோல் வியாதி பிரிவுக்கு சென்ற பாலசுப்ரமணி, பழைய சீட்டை காட்டி வண்டு கடித்துவிட்டது; இரண்டாவது ஊசியை போடும்படியும் கேட்டுள்ளார்.
மருத்துவச் சீட்டை பார்த்த மருத்துவர், அதில் நாய்க்கடிக்கு ஊசி போடும்படி எழுதியிருப்பதை பார்த்து, பாலசுப்ரமணியிடம் விசாரித்துள்ளார். அவரும் தனக்கு வண்டு கடித்து பாதிக்கப்பட்டதை கூறியுள்ளார்.இதனால், அதிர்ச்சி அடைந்த மருத்துவர், 'வண்டு கடிக்கு ஊசி தேவையில்லை; மாத்திரை மட்டும் போதும்' என, சீட்டு எழுதிக் கொடுத்துள்ளார்.
அரசு மருத்துவமனை, அதுவும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவரின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட பாலசுப்ரமணி கூறியதாவது:
கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சை அளித்த மருத்துவர், வண்டுக்கடிக்குத்தான் ஊசி போட எழுதி தந்திருப்பார் என நம்பினேன். ஆனால், இரண்டாவது முறையாக ஊசி போட வந்தபோது தான், அதிர்ச்சியான உண்மை எனக்கு தெரிய வந்தது.அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள், நோயாளிகளின் வாழ்க்கையில் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த பிரச்னை தொடர்பாக, மருத்துவமனை இணை இயக்குனரை தொடர்பு கொண்டு விளக்கம் பெற முயன்றபோது, அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை.
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில், 'சாதாரண நோய்க்கு பதில், நாய்க்கடி ஊசி போட்டால் பாதிப்பு எதுவும் இருக்காது. நோயாளியின் உடலில் எதிர்ப்பு சக்தி இல்லை என்றால், இரண்டு மணி நேரத்தில் அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கும். இதனால், எந்த பாதிப்பும் ஏற்படாது; இருந்தாலும், கவன குறைவாக சிகிச்சை அளித்தது தவறுதான்' என்றனர்.

மானிய விலை சமையல் எரிவாயுவருமான வரி செலுத்த வேண்டும்?..DINAMALAR 5.5.2015

புதுடில்லி: மத்திய அரசின் புதிய சட்டத்தால், எரிவாயு மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் பெறும் பயனாளிகள், வருமான வரி செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கடந்த வாரம், லோக்சபாவில், 2015ம் ஆண்டு நிதி மசோதா நிறைவேற்றப்பட்டது; அதில், 1961ம் ஆண்டு, வருமான வரிச் சட்டத்தின் கீழ், துணை பிரிவு சேர்க்கப்பட்டு, வருவாய்க்கான வரையறை விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, மானியங்கள், நிதியுதவி, ரொக்க ஊக்கத்தொகை, செலுத்திய வரியை திரும்ப பெறும் சலுகையில் பெறும் தொகை ஆகியவை, வருவாய் என, குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால், நேரடி மானிய திட்டத்தின் கீழ், சமையல் எரிவாயு மானியத்தை வங்கிக் கணக்கில் பெறுவோரும், தாங்கள் பெறும் மானியத்திற்காக வருமான வரி செலுத்த நேரிடும். அதேசமயம், இது வருமான வரி விலக்கு வரம்பான, 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் உள்ளவர்களுக்கே பொருந்தும். எனினும், மசோதாவில் சேர்க்கப்பட்ட, 'மானிய வருவாய்' என்ற சொற்றொடருக்கு, அரசு விளக்கம் அளித்தால் மட்டுமே, இந்த விஷயத்தில் தெளிவு கிடைக்கும் என, வருமான வரித் துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.


●ஆண்டுக்கு, 12 எரிவாயு சிலிண்டர்களுக்கு, மானியம் வழங்கப்படுகிறது.
● இதன்படி, சராசரியாக, ஒரு சிலிண்டருக்கு, ஒருவர், 200 ரூபாய் வீதம், ஆண்டுக்கு, 2,400 ரூபாய் மானியம் பெறுவார்.
● அவர், உயர் வருவாய் பிரிவின் கீழ், வரி செலுத்துபவராக இருந்தால், எரிவாயு மானியம் பெற்ற வகையில், 600 ரூபாய்க்கும் அதிகமாக வரி செலுத்த வேண்டும்.

வருகிறது 'தத்கல்' சிறப்பு ரயில்; ரயில்வே வாரியம் அனுமதி

கிராக்கி இருக்கும் நேரத்தில், 'தத்கல்' சிறப்பு ரயிலை இயக்க, ரயில்வே வாரியம் அனுமதி அளித்து உள்ளது. தற்போது, தேவையான வழித்தடங்களில், சிறப்பு ரயில்கள் மற்றும் பிரீமியம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பிரீமியம் ரயிலில், டிக்கெட் கையிருப்பு, பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். விமான சேவையில் தான் இது போன்ற கட்டண முறை உள்ளது. ஆனால், சிறப்பு ரயில்களில் வழக்கமான கட்டணம் தான். தற்போது, கோடை விடுமுறைக்கு நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சில வழித்தடங்களில், சிறப்பு ரயில்களுக்கு கிராக்கி இருந்தால், அங்கு, 'தத்கல்' சிறப்பு ரயிலாக இயக்க, ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இந்த வகை ரயில்களில், வழக்கமான கட்டணத்துடன், கூடுதலாக, 100 ரூபாய் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட வழித்தடத்தில், இரு மார்க்கங்களிலும் கிராக்கி இருந்தால், இரு மார்க்கங்களிலும், 'தத்கல்' கட்டணம் வசூலிக்கலாம். திரும்பும் போது கிராக்கி இல்லாவிடில், வழக்கமான கட்டணம் வசூலிக்கலாம். ரயில்வே வருவாயை அதிகரிக்க, இந்த நடைமுறையை கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்த சுற்றறிக்கையை, ரயில்வே வாரியம், மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பி உள்ளது.இதுகுறித்து, தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில், இந்த நடைமுறை இதுவரை செயல்படுத்தவில்லை. பிரீமியம் சிறப்பு ரயில்களில், முழுமையாக டிக்கெட் விற்கப்படாததால், 'தத்கல்' ரயில் இயக்கம் குறைவாகவே இருக்கும். இருப்பினும், பண்டிகை நாட்களில், 'தத்கல்' சிறப்பு ரயில் இயக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

லஞ்சத்துக்கு வைத்த ஆப்பு

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மக்களுக்கும் சமுதாயத்துக்கும், தேவையான பல முடிவுகள் எடுக்கப்பட்டன. சமுதாயத்தில் புரையோடிப்போய் உள்ள லஞ்சத்தை ஒழிக்க புதிய சட்டத்திருத்த மசோதா, தீவிர காடுவளர்ப்பு திட்டத்தை அமல்படுத்த ரூ 38 ஆயிரம் கோடியை பயன்படுத்த வகை செய்யும் மசோதா, ரூ 48 ஆயிரம் கோடி செலவில் புதிய 100 நவீன நகரங்கள், ரூ 50 ஆயிரம் கோடி செலவில் 500 நகரங்களை மேம்படுத்தல், நகர்ப்புற பகுதிகளில் ஏழை மக்களுக்கு 3 லட்சத்து 60 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுப்பதற்கான காலத்தை 2 ஆண்டுகள் நீட்டித்தல், நலிந்துவரும் சர்க்கரைத்தொழிலுக்கும், கரும்பு விவசாயிகளுக்கும் உதவ வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சர்க்கரைக்கான இறக்குமதி வரியை 25 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்துதல், என்று பல முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதில் மக்கள் மிக முக்கியமாக கருதி வரவேற்பது லஞ்சத்துக்கு ஆப்பு வைக்கும் சட்டதிருத்த மசோதாவுக்கான ஒப்புதல்தான். ஒருபுறம் லஞ்சத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை, மறுபுறம் நேர்மையான அதிகாரிகள் எந்தவித அச்சமுமின்றி துணிந்து செயல்பட இந்த மசோதா வழிகாட்டியுள்ளது. லஞ்சம் என்பது கொலை, கற்பழிப்பு போல ஒரு கொடுங்குற்றமாக கருதப்பட இந்த மசோதா வழிவகுக்கும். லஞ்சம் வாங்குபவர் மட்டுமல்லாமல் அதைக் கொடுப்பவரும் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கும் பிரிவுகள் இந்த மசோதாவில் இருக்கிறது. பணமாக வாங்குவது மட்டுமே லஞ்சம் அல்ல, மற்ற வகைகளில் சலுகைகள் பெறுவதும் அதாவது விருந்தோபசாரம், வெளிநாடு சுற்றுப்பயணம், பிள்ளைகள் வெளிநாடுகளில் படிக்க உதவி பெறுவது, செக்ஸ் ஏற்பாடுகளை பெறுவது உள்பட பல வசதிகளை பெறுவதும் கொடுங்குற்றங்களாக கருதப்படும். இதுவரையில் லஞ்சம் வாங்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்ச தண்டனை 6 மாதம் என்றும் அதிகபட்ச தண்டனை 5 ஆண்டுகள் என்றும் இருந்தது. இந்த புதிய மசோதாவில் லஞ்சம் கொடுங்குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால் குறைந்தபட்ச தண்டனை 3 ஆண்டுகள் என்றும் அதிகபட்ச தண்டனை 7 ஆண்டுகள் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும் லஞ்சம் வாங்கியவர்களின் சொத்துக்களை முடக்கும் அதிகாரம் விசாரணை நீதிமன்றத்துக்கே வழங்கப்பட்டுள்ளது. இது எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு என்னவென்றால் லஞ்ச வழக்குகளை அதிகபட்சமாக 2 ஆண்டுகளுக்குள் புலன் விசாரணை செய்து, விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதுதான்.

ஒட்டுமொத்த சமுதாயமே லஞ்சத்தை ஒழிக்க வேண்டும், தூய்மையான நிர்வாகம் வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தாலும் அதற்கான சட்டங்கள் பலம் இல்லாமல் இருந்ததால் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி ஊழல் பெருச்சாளிகள் தப்பித்து வந்தன. ஆனால் இந்த புதிய சட்டம் அனைத்து ஓட்டைகளையும் அடைத்துவிட்டது. ஏற்கனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த சட்டம் மோடி அரசாங்கத்தின் புதிய திருத்தங்களோடு தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதிலும் அரசியல் நுழைந்துவிடாமல் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு கிளம்பிற்றுகாண் சிங்கக்கூட்டம் என்று மக்கள் பாராட்டும் வகையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். அரசாங்கம் சட்டத்தை உருவாக்கித் தந்தாலும் அதை நிறைவேற்ற வேண்டிய அமைப்புகள் சமுதாய கடமையாக செயல்படுத்தி லஞ்சத்தை ஓட ஓட விரட்ட வேண்டும். இந்த சட்டத்தின் பலன் அதை திறம்பட செயல்படுத்துவதில்தான் இருக்கிறது.

NEWS TODAY 20.09.2024