Tuesday, May 5, 2015

பேஸ்புக்கில் தேடப்படும் குற்றவாளியின் படம் வெளியீடு: லைக் செய்து மாட்டிக் கொண்ட திருடன்

அமெரிக்காவின் காஸ்காதே நகரத்தைச் சேர்ந்த லேவி சார்லஸ் ரியர்டன் என்பவனை திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளி என்று பேஸ்புக்கில் காவல்துறை வெளியிட, அந்த படத்துக்கு லைக் செய்ததன் மூலம் அவரே காவல்துறையிடம் மாட்டிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, வழிப்பறி, திருட்டுச் சம்பவங்களில் தேடப்பட்டு வந்த ரியர்டன், தனது பெயர் மற்றும் புகைப்படத்தை பேஸ்புக்கில் காவல்துறை வெளியிட்டதைப் பார்த்ததும், குறும்பாக, அதற்கு லைக் செய்துள்ளான்.

அவன் லைக் செய்ததை வைத்து இணையதள முகவரியின் அடிப்படையில், காவல்துறையினர், அவன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து கையில் விளங்கை மாட்டிவிட்டனர்.

இதைத் தான் தன் தலையில் தானே மணலை வாறிப் போட்டுக் கொள்வது என்பார்களோ...

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024