Sunday, November 6, 2016

Supreme Court closes deemed university case, HRD seeks legal opinion 

Supreme Court closes deemed university case, HRD seeks legal opinion NEW DELHI: In a move that could once again stir the debate around deemed universities, the Human Resource Development (HRD) ministry has sought legal opinion on a recent Supreme court ruling and whether or not it should act on the controversial Tandon committee report that had recommended shutdown of 44 poor quality deemed to be universities in the UPA era.

  The move comes a month after the SC ‘closed’ the 2006 PIL filed by lawyer Viplav Sharma alleging several flaws in the grant of the deemed university status. With the apex court now having closed the PIL, the HRD ministry and UGC have to decide on the next course of action vis a vis the universities which were found deficient by the Tandon committee. 

 ET has learnt that the HRD ministry, treading cautiously, has now sought clarity from the Law ministry on what are the implications of the court ruling and whether it requires them to take action on the basis of the Tandon committee report or not.  The quality of deemed varsities has been questioned repeatedly. During the second stint of the Congress­led UPA government, then HRD minister Kapil Sibal ordered a review through the Tandon committee, which found 44 of the 126 deemed universities to be seriously deficient. 

 The Tandon committee had found only 38 of the deemed universities worthy of the tag that allows them to confer degrees. It had recommended closure of 44 deemed universities and found the remaining deficient on some counts but could be improved upon in three years. 

 These institutions challenged the Tandon committee report in court, while some of them opted out of the deemed varsity system and applied for Institute of National Importance status, after which 38 of the 44 varsities have been under the scanner. 

 A UGC panel set up in 2014 to examine afresh the 44 blacklisted varsities effected a surprising U­turn, saying that no more than seven of them were found to be inadequate on specified standards and should face action.  

Saturday, November 5, 2016

டிரைவருக்கு கார் ஓட்டிய கலெக்டர்



அகோலா: தனக்கு டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவருக்கு, நன்றி தெரிவிக்கும் வகையில், அவருக்கு டிரைவராக சேவகம் செய்த, மாவட்ட கலெக்டரை பொதுமக்கள் பாராட்டினர்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்ன விஸ் தலைமையிலான, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஒருவர் ஓய்வு பெறும் போதும், அவரது பதவிக்கேற்ப, உடன் பணிபுரிவர்கள் பிரியாவிடை அளிப்பது வழக்கம். அகோலா மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்துக்கு, டிரைவராக பணிபுரிந்த, திகம்பர், 58, சமீபத்தில் ஓய்வு பெற்றார். இவரது பணிக்காலத்தில், 18 கலெக்டர்களுக்கு டிரைவராக இருந்தார்.

ஓய்வு பெறும் நாளில், திகம்பருக்கு வித்தியாசமான பரிசளிக்க, கலெக்டர் முடிவு செய்தார். அதன்படி, பணி நிறைவு நாளன்று, திகம்பரை, காரின் பின் சீட்டில் அமர வைத்து, அவரது வீடு வரை, கார் ஓட்டி சென்றார், கலெக்டர். ''திகம்பர், அரசு பணியில், 35 ஆண்டுகள் டிரைவராக பணிபுரிந்து உள்ளார். அவரது சேவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவருக்காக கார் ஓட்டிச் சென்றேன்,'' என, கலெக்டர் ஸ்ரீகாந்த் கூறினார்.



ஓய்வு பெறும் போது கலெக்டர் அளித்த பரிசை, வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்று கூறிய திகம்பர், கலெக்டருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். டிரைவருக்கு, டிரைவராக சிறிது நேரம் சேவகம் செய்த கலெக்டரை, அப்பகுதிமக்கள் பாராட்டினர்.

Excess admissions in MBBS course due to human error, High Court told Court extends hearing


Indore: On a petition challenging cancellation of some admissions in private medical colleges, the director medical education on Thursday informed Indore bench of Madhya Pradesh High Court that excess admissions in MBBS course had taken place due to human error so the same were cancelled.

In its reply to division bench, the DME stated that excess admission were granted in some private medical colleges due to human error while compiling computer admission sheets. “Later, the mistake was detected and additional admission were cancelled,” he said.

Admissions of as many as 37 students were cancelled by the DME after which they moved court. The court had sought the DME reply on the petition.
Objecting to the DME’s reply, the petitioners argued that it was not their mistake if any human error had taken place on government’s side and their admissions should be validated.

After hearing both the parties, the court extended the date of hearing in the case.

Now, Yoga becomes part of nursing curriculum

Lessons to focus on the therapeutic potential of the practice that targets body-mind harmony

Yoga has now become part of the nursing curriculum at the Mahatma Gandhi Medical College and Research Institute (MGMCRI) under the Sri Balaji Vidyapeeth (SBV).

The Centre for Yoga Therapy, Education and Research (CYTER), SBV, which had pioneered the incorporation of Yoga concepts in the MBBS curriculum two years ago and later for dental education, has now introduced slightly modified modules on the therapeutic potential of the practice of attaining body-mind harmony for nursing students.

Ananda Balayogi Bhavanani, CYTER Deputy Director, said that although the curriculum content was largely similar for all streams, there were minor modifications.

If MBBS students were taught about how Yoga could complement modern medicinal interventions in the management of lifestyle disorders such as diabetes or hypertension, nurses would learn more about those aspects of yoga that help patients recuperate from illness.

Students of dental sciences are exposed to Yoga concepts more as a self-care tool in addressing postural problems, he added.

The Nursing College has included Yoga Therapy in the BSc Nursing curriculum with students receiving 90 hours of Yoga Therapy training through CYTER during the three-year course.

The first batch of 100 nursing students are due to complete the 45 hours of Yoga classes during their first year. The batches would undergo 30 hours of Yoga classes in their second year and 15 hours of exposure in the final year, Professor Bhavanani said.

K. Renuka, Dean, Nursing Faculty and Principal of Kasturba Gandhi Nursing College, stated that it was a first that all medical, dental and nursing students of a medical university were receiving regular training in Yoga.

In fact, CYTER hosted the 6th Foundation Day on the theme of ‘Introducing Yoga in Nursing Education’.

Addressing the meet, SBV Vice Chancellor Professor K.R. Sethuraman reminded nursing students of their vital role in healthcare as the primary caregivers for patients and stressed the importance of Yoga in their personal and professional lives.

Professor N. Ananthakrishnan, Dean, Allied Health Sciences, Professor A.R. Srinivasan, SBV Registrar, Vijaya, Yoga educator from Gitananda Yoga Society of Berlin, Germany, Professor VN Mahalakshmi, Vice Principal, MGMCRI, Professor Madanmohan, CYTER Director and Meena Ramanathan, Yoga therapist were among those who took part in the event.

A book on ‘Yoga Practical Notes’, compiled and edited by Sri G Dayanidy, lecturer at CYTER, was released on the occasion.

The staff and students of KGNC and CYTER gave a special performance that included poetry, singing, dancing and demonstrations of advanced Yogasana to mark the occasion.

Educators from MGMC&RI, KGNC, CMTER, ICYER at Ananda Ashram, Yoganjali Natyalayam and Pondicherry Yogasana Association also attended the events.

Professor Bhavanani pointed to the need for a holistic integration of modern and traditional systems for the best possible outcomes in patient care.

“It is imperative that advances in medicine include the holistic approach of Yoga to face the current challenges in healthcare. The antiquity of Yoga must be united with the innovations of modern medicine to improve quality of life throughout the world,” he said.

தோல்விப் படத்திலிருந்து ஒரு வெற்றி

ராமு (1966) - 50 ஆண்டுகள் நிறைவு

தோல்விப் படத்திலிருந்து ஒரு வெற்றி

எத்தனை பெரிய நட்சத்திரம் என்றாலும் ஒருநாள் தோல்வியையும் ருசி பார்க்க வேண்டியிருக்கும். வரிசையாகத் தோல்விகள் என்றால் வெளியே தலைகாட்ட முடியாது. தமிழ் சினிமாவின் இரண்டாவது ‘காதல் மன்னன்’ என்று புகழப்பட்ட ஜெமினி கணேசனுக்கும் இது நடந்தது. ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘தேன்நிலவு’ என்று சூப்பர் டூப்பர் வெற்றிகளைக் கொடுத்தவர், காதல் கதைகளை அதிகம் நம்பியதால் மூன்று பாதாளத் தோல்விப் படங்களைக் கொடுத்தார். அதுவும் அடுத்தடுத்து. அது கோடம்பாக்கத்தின் வாய்க்கு அவல் கிடைத்ததுபோல் ஆகிவிட்டது. ‘ஜெமினியின் சுக்ரதசை ஸ்வாகா’ என்று பேச ஆரம்பித்தார்கள்.
இனியும் தாமதம் கூடாது என்று நினைத்த ஜெமினி, தனது கீரிடத்தைக் கழற்றி வீட்டில் வைத்துவிட்டு மெய்யப்பச் செட்டியாரைக் காண ஏ.வி.எம். ஸ்டூடியோவுக்குள் நுழைந்தார். “சார்… நீங்க அனவுன்ஸ் பண்ணியிருக்கற ‘ராமு’ படத்துல எனக்கு வாய்ப்பு கொடுங்க. ராஜா கேரக்டர் எனக்கு பர்ஃபெக்டா ஃபிட் ஆகும். இது என் உள்மனசோட ஆரூடம்” – ஜெமினி இப்படிக் கேட்டதும் ‘‘ராஜா கேரக்டர் உங்க காது வரைக்கும் எப்படி வந்துச்சு” என்று செட்டியார் கேட்கவில்லை.
ஏனென்றால் ‘ராமு’ படத்துக்குத் திரைக்கதை எழுதியவர் ஜெமினியுடன் திரையுலகில் ஒன்றாகப் பயணித்த ஜாவர் சீதாராமன். ஜெமினியும் அவரும் நல்ல சிநேகிதர்கள். “இந்த சிச்சுவேஷன்ல உனக்கு ‘ராமு’தான்டா சரியான ஸ்கிரிப்ட். வெட்கத்தை விட்டு செட்டியார்கிட்டே கேட்டுடு. ரெமுனரேஷன் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்னு சொல்லிடு” என்று அட்வைஸ் கொடுத்தார்.
பிள்ளைகளின் பிடிவாதம் தந்தையின் தீர்மானம்
செட்டியாரின் பிள்ளைகள் தலையெடுத்து திரைப்படத் தயாரிப்பு நிர்வாகத்தில் அட்டகாசமாகப் பங்கெடுத்துக்கொண்டிருந்த அறுபதுகளின் மையப் பகுதி. ‘ராமு’ படத்துக்கு ஜெய்சங்கரை ஹீரோவாக அமர்த்துவது என்று முடிவு செய்து அதை தங்கள் அப்பச்சியிடம் சொல்லி சம்மதம் பெற்று வைத்திருந்தார்கள். ஆனால் ஜெமினி போல் ஜனங்களின் அபிமானம் பெற்ற ஒரு மெகா ஸ்டார் வந்து கேட்டால் செட்டியாரால் முடியாது என்று மறுக்க முடியுமா? மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் செட்டியார் அமைதி காத்த அந்த சில விநாடிகளின் மவுனத்தைத் தனதாக்கிக்கொண்டார் ஜெமினி.
“இந்தப் படத்துக்கு நீங்க என்ன சம்பளம் கொடுத்தாலும் வாங்கிக்கிறேன். இந்தப் படத்தை முடிச்சுக்கொடுத்துட்டு அடுத்த படத்துக்குப் போறேன்” என்றார். ‘களத்தூர் கண்ணம்மா’ எனும் ஏ.வி.எம்முக்கு புகழ்சேர்த்த காவியத்தில் நடித்தவர், இவ்வளவு பெரிய நடிகர் இத்தனை இறங்கி வருகிறாரே என்று இதயம் இளகியது செட்டியாருக்கு. என்றாலும் “ பிள்ளைகள்கிட்ட கொஞ்சம் கலந்துக்கிறேன். நாளைக்கு நல்ல பதில் சொல்றேன்” என்று நம்பிக்கையோடு அனுப்பி வைத்தார்.
ஏ.வி.எம். தயாரிப்பில் அப்போது தயாராகிக் கொண்டிருந்த ‘குழந்தையும் தெய்வமும்’ படத்திலும் ஜெய்சங்கர்தான் நாயகன். எனவே குழந்தையை மையப்படுத்திய இந்தக் குடும்பப் படத்திலும் ஜெய்சங்கரையே ஒப்பந்தம் செய்துவிடுவது சரியாக இருக்கும் என்று நினைத்தார்கள் பிள்ளைகள். அதனால் தந்தையுடன் விவாதித்தார்கள். “கதையில் வரும் கொள்ளைக்காரர்களையும் கதாநாயகியை அழிக்க நினைக்கும் வில்லன் அசோகனையும் அடக்கச் சரியான ஆள் ஜெய்சங்கர்தான்” என்றார்கள்.
ஆனால், செட்டியாரின் சிந்தனை வேறு விதமாக இருந்தது. “சம்சாரத்தை இழந்து, மகனும் வாய்பேச முடியாம போயிடுற சோகத்தை தாங்கணும். அதுக்கு ஜெமினிதான் என்னோட சாய்ஸ்” என்றார். அப்பச்சியின் பேச்சுக்கு மறுபேச்சு ஏது? பிள்ளைகளின் பிடிவாதம், தந்தையின் தீர்மானத்தால் தளர்ந்தது. ஏ.சி. திருலோகச்சந்தரின் இயக்கத்தில் படம் விறுவிறுவென்று வளர்ந்தது. ஜெமினி கணேசன், கே.ஆர். விஜயா, மாஸ்டர் ராஜ்குமார், எஸ்.ஏ. அசோகன், ஓ.ஏ.கே. தேவர்,
வி. நாகையா, வி.கே. ராமசாமி, வி.எஸ். ராகவன், சி.எஸ். புஷ்பலதா எனப் பல புகழ்பெற்ற நட்சத்திரங்கள் நடித்த இந்தப் படம் 10.06.1966ல் வெளியாகிப் பல திரையரங்குகளில் 100 நாள் கொண்டாடியது. முதலில் ‘குழந்தையும் தெய்வமும்’ படத்தைப் போலவே அந்த ஆண்டின் சிறந்த மாநில மொழிப் படத்துக்கான தேசிய விருதை ’ராமு’ தட்டிக்கொண்டு வந்தது.
கதையின் கதை
அப்படிப்பட்ட இந்தப் படத்தின் கதை ஒரு படுதோல்வியடைந்த இந்திப் படத்தின் கதையை ஆதாரமாகக் கொண்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ‘குழந்தையும் தெய்வமும்' படத்தை இந்தியிலும் தயாரித்துக்கொண்டிருந்தது ஏ.வி. நிறுவனம். பாம்பேயில் நடந்து வந்த அந்தப் படத்தின் படப்பிடிப்புக்குச் சென்றார் செட்டியாரின் புதல்வர் சரவணன். விமானத்திலிருந்து இறங்கி காரில் ஸ்டூடியோ நோக்கிப் போய்க்கொண்டிருந்தவரை ஈர்த்தது ஒரு சினிமா சுவரொட்டி.
ஒரு சிறுவனுடன் அந்நாளின் முன்னணி இந்திப் பட நாயகன் கிஷோர் குமார் சோகம் கவியும் முகத்துடன் அந்தச் சினிமா சுவரொட்டியில் நிற்க, காரை ஓட்டிக்கொண்டிருந்த டிரைவரிடம் “இது என்ன படம்? பெரிய ஹிட்டா?” என்றார். கிஷோர் குமாருக்காக அந்தப் படத்தை ஏற்கெனவே பார்த்து நொந்துபோயிருந்த டிரைவர் “இதுவொரு மொக்க ‘மூங்கா’ படம். வாய்பேச முடியாத ஒரு சிறுவனைப் பற்றிய கதை. கடைசிவரைக்கும் அழுவாச்சி காவியம்” என்று அலுத்துக்கொண்டார். அந்தப் படம்தான் “தூர் ககன் கி சாவோன் மேயின்' (Door Gagan Ki Chhaon Mein) என்ற இந்திப் படம்.
தலையெழுத்தை மாற்றிய திரைக்கதை
படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பதினைந்தாயிரம் ரூபாய்க்கு (இன்றைய பணத்துக்கு அது பதினைந்து லட்சம் என்று கூடக் கொள்ளலாம்) வாங்கிய பின் அந்தப் படத்தை இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு, திருலோகச் சந்தர், கதை-வசனகர்த்தா ஜாவர் சீதாராமன் ஆகியோருக்குப் போட்டுக்காட்டியிருக்கிறார்கள்.
படம் முடிந்ததும் “இது சுத்த வேஸ்ட்” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்களாம் கிருஷ்ணனும் பஞ்சுவும். அவர்கள் மிகவும் நம்பும் எழுத்தாளர் ஜாவர் சீதாராமனோ, “பிறவியிலேயே வாய் பேச முடியாத சிறுவனின் கதையான இதைத் தேற்றுவது கல்லில் நார் உரிப்பது போல” என்று நழுவ, அவரைப் பிடித்து நிறுத்திய சரவணன், “அந்தச் சிறுவன் பிறவியிலேயே வாய் பேச முடியாதவன் இல்லை. இடையில் ஏற்பட்ட ஒரு விபத்தினால் ஊமையானவன். அது எப்படிப்பட்ட விபத்து, அந்த விபத்து யாருக்கு நடந்தது என்று திரைக்கதையில் அவனுக்கு நடந்த விபத்தை ஃப்ளாஷ் பேக்காக மாற்றி எழுதிப் பாருங்கள்” என்று சொல்ல “எனக்கு இப்படி ஒரு ஐடியா தோன்றாமல் போய்விட்டதே?” என்று வியந்து, ஒரு தோல்விப் படத்தின் கதையை ஆதாரமாகக் கொண்டு அதன் தலையெழுத்தை ஐந்தே நாட்களில் மாற்றிப் புதிய திரைக்கதையை எழுதி முடித்தார் சீதாராமன்.
கிஷோர் குமாரின் பாராட்டு
இந்தப் படத்தின் நூறாவது நாள் விழாவில் கலந்துகொள்ள செட்டியாரின் அழைப்பை ஏற்று மெட்ராஸ் வந்தார் இந்திப் படத்தின் கதாநாயகனான கிஷோர்குமார். விழாவில் கலந்துகொள்ளும் முன் அவருக்கு படத்தைத் திரையிட்டுக் காட்டப்பட்டது. வெற்றி விழாவில் பேசிய கிஷோர் குமார் “ தமிழ் ரீமேக்கை பார்த்ததும் நாங்கள் கதையை எத்தனை பலவீனமாக அமைத்திருக்கிறோம் என்பதை உணர்ந்தேன். திரைக்கதையாசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்” என்றார்.
இசையமுதம்
இந்தப் படத்தின் வெற்றிக்குத் திரைக்கதை முதல் காரணம் என்றால் இசை இரண்டாவது காரணம். மெல்லிசை மன்னரின் இசையில் வெண்பனிக்குரலோன் பி.பி. நிவாஸ் பாடிய ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ பாடல் இன்றளவும் புதுமையோடு ஒலிக்கிறது. அதேபோல ‘பச்சைமரம் ஒன்று இச்சைக்கிளி ரெண்டு’ பாடலும் இன்றும் நம் நினைவுகளைக் கிளறக்கூடியது. இந்தப் படத்தில் ‘ராமு’வாக நடித்திருந்த மாஸ்டர் ராஜ்குமாரின் நடிப்பையும், படத்தில் தோன்றும் அவனது அன்புக்குரிய நாயின் உயிர்காக்கும் தோழமையும் தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாதவை.
'கத்தி சண்டை' இசை வெளியீட்டு விழாவில் வடிவேலு பேசிய போது...

வாய்ப்பில்லாமல் முடங்கவில்லை: மனம் திறந்த வடிவேலு


எனக்கு வாய்ப்பு இல்லாமல் வீட்டில் உட்காரவில்லை என்று 'கத்தி சண்டை' இசை வெளியீட்டு விழாவில் வடிவேலு தெரிவித்தார்.

சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, ஜெகபதிபாபு, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கத்தி சண்டை'. ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கும் இப்படத்தை நந்தகோபால் தயாரித்திருக்கிறார். கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தை விநியோகம் செய்கிறது. நவம்பர் 18ம் தேதி வெளியீடாக இப்படம் திரைக்கும் வரவிருக்கிறது.

இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விஷால், வடிவேலும், இயக்குநர் சுராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். தமன்னா, சூரி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

இவ்விழாவில் வடிவேலு பேசியது, "ரொம்ப இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடித்திருப்பதாக பலரும் சொன்னார்கள். உண்மையில் எனக்கு கேப்பே கிடையாது. எனக்கு கேப்பும் கிடையாது; ஆப்பும் கிடையாது. எப்போதுமே இந்த வடிவேலு டாப்பு தான். அதற்கு காரணம் மக்கள் தான்.

எந்தப் பேப்பர், வாட்ஸ்- அப் எடுத்தாலும் நான் தான் கார்டூம் பொம்மையாக வருகிறேன். அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கூட என்னை வைத்து தான் காமெடி பண்ணிப் போடுகிறார்கள். இதற்கு என்னுடைய உழைப்பு தான் காரணம். 24 மணி நேரமும் சினிமாவைப் பற்றி மட்டும் தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

'கத்தி சண்டை' என்றவுடன் கத்தி எடுத்துக் கொண்டு சண்டைப் போடும் படம் கிடையாது. இந்தப் படம் ஒரு புத்தி சண்டை. இக்கதையைக் கேட்டவுடன், என்னுடைய கதாபாத்திரம் என்ன எனக் கேட்டேன். டூபாக்கூர் மருத்துவரா எனக் கேட்டேன். டூபாக்கூர் மாதிரியே இருக்கும், ஆனால் டூபாக்கூர் மருத்துவர் கிடையாது என்று சொன்னார் சுராஜ்.

கதை சரியில்லாமல் தான், நிறைய படங்களை வேண்டாம் என்று சொன்னேன். உண்மையில், எனக்கு வாய்ப்பு இல்லாமல் வீட்டில் உட்காரவில்லை. நிறைய கதைகளைக் கேட்டேன், அப்படிக் கேட்ட கதைகளில் பிடித்த கதை இந்த 'கத்தி சண்டை'. படம் பார்க்கும் மக்கள், முழுமையாக சிரித்துக் கொண்டே பார்ப்பது போன்று ரொம்ப அற்புதமாக இயக்கியிருக்கிறார் சுராஜ்.

மக்களிடையே நடக்கும் விஷயங்களை எடுத்து தான், தங்கம் மூலாம் பேசி காமெடியாக மக்களிடையே கொடுத்துவிடுவேன். சில நாட்களுக்கு முன்பு எனது அப்பத்தா இறந்துவிட்டது. நான் ஊருக்கு சென்ற போது "ஏம்ப்பா வடிவேலு... எதுல வந்த" என கேட்டது. "ப்ளைட்ல வந்தேன்" என்றேன். "டிக்கெட் எவ்வளவு வாங்குறாய்ங்க" எனக் கேட்டவுடன் "4000 ரூபாய் வாங்குறாங்க" என்றேன். "எவ்வளவு நேரத்துல வந்த" என்ற போது "அரை மணி நேரத்துல வந்தேன்" என்றேன். உடனே "4000 ரூபாய் வாங்கிவிட்டு, அரை மணி நேரத்துல கொண்டு வந்து விடுறானா. ஏண்டா 180 ரூபாய் வாங்கிட்டு ரயிலில் இரவு முழுவதும் படுக்கப் போட்டு கூட்டிட்டு வர்றான். உன்னை ஏமாத்திட்டாங்கடா.. நாலு பெரிய மனுஷங்களை வைத்துப் பேசி காசு வாங்கப் பாருடா" என்று சொன்னது என் அப்பத்தா. கொஞ்சம் நேரம் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் சொன்ன விஷயத்தில் அவ்வளவு காமெடி இருக்கிறது. இப்படித்தான் சில காமெடிகளை எடுத்துக் கொள்கிறேன்.

மக்களிடையே என்ன நடக்கிறதோ, அதை தான் அப்படியே என் காமெடிக்குள் வைத்துக் கொள்வேன். நான் இந்தளவுக்கு வளர்ந்ததிற்கு காரணம் மக்கள் தான். அவர்களுடைய ஆசிர்வாதம் என்றைக்குமே இருப்பதால் மட்டுமே எனக்கு இந்த புகழ். அனைவருமே என்னை LEGEND என்கிறார்கள். அப்படியென்றால் என்னவென்று கூட எனக்கு தெரியாது. என்னுடைய வலு என்ன என்பது எனக்கு தெரியாது. யானைக்கு தன்னுடைய பலம் தெரிந்துவிட்டால், வேறு மாதிரி ஆகிவிடும்.

விஷாலுடன் திரையில் எனது முதல் படம் 'திமிரு'. அது வெற்றி. ஜனாதிபதி தேர்தல் மாதிரி ஒரு தேர்தல் நடந்தது. அதிலும் வெற்றி. அது தான் 'நடிகர் சங்கத்தைக் காணவில்லை'. அவரோடு இணையும் மூன்றாவது படம் 'கத்தி சண்டை'. கண்டிப்பாக இதுவும் வெற்றி தான். அதற்கு காரணம் விஷாலுடைய நல்ல மனது" என்று பேசினார் வடிவேலு.

A day after protests, Madras University confirms faculty probation orders

CHENNAI: University of Madras confirmed the probation orders of 87 of the 94 faculty members belonging to the Madras University Teachers Association (MUTA) during its syndicate meeting on Friday.

This comes a day after MUTA members staged protests regarding the issue.

University registrar David Jawahar, whose tenure ends on March 6 next year, confirmed the declaration of the probation orders, and said it was one of the key outcomes of the syndicate meeting held after a period of five months. The meeting had 85 items on the agenda including routine administrative matters.

During the meet, syndicate members raised the 'precarious' financial issue of the Madras University, following which secretary of higher education department, A Karthik, instructed for white paper to be issued regarding the varsity's funds.

During the protest on Thursday, general secretary of MUTA and syndicate member G Ravindran had demanded white paper on the University's financial position and asked that an inquiry committee be constituted probe into possible misappropriation and diversion of funds during the previous Vice Chancellor R Thandavan's term in office.

However, senior UoM officials maintained that these records were already presented in the budget book.

A 3-member heritage restoration committee was formed during the syndicate meeting. The committee is to make recommendations regarding the restoration of the senate house.

However, the scope and powers of the committee is yet to be specified. It comprises of syndicate members G Ravindran, head of ancient history and archaeology department P D Balaji and Principal of KCS Nadar College Murugesan.

Another issue raised during the meeting was regarding the 15 students of AM Jain College who were not allowed to attend exams due to delay in paying fee.

A request was made to allow these students to attend exams. Madras University officials too said that students could not be blamed as there is no fixed deadline for paying exam fee.

"Since there is no last date of payment, the college has to accordingly update payment records until the last few students have submitted their fee. However this was not done," said a Madras University official.

The college has made the same mistake twice earlier and had levied a fine of 10,000 earlier, the oficial added.


ஓட்டு போட ரெடியா? வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் 'சர்வே' எடுக்கும் தேர்தல் ஆணையம்

புதுதில்லி: இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் பங்கேற்று ஓட்டுப் போடுவதில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உள்ள விருப்பத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு, இந்திய தேர்தல் ஆணையமானது வெள்ளிக்கிழமை முதல் 'ஆன்லைன் சர்வே' ஒன்றைத் துவக்கி இருக்கிறது.

இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்திய தேர்தல் நடைமுறைகள் குறித்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் எவ்வளவு தூரம் அறிந்திருக்கிறார்கள் என்பது பற்றி தெரிந்து கொள்ளுதல், அவர்கள் வாக்களிப்பிற்கு பதிவு செய்து கொள்ளுதலை உறுதி செய்தல் மற்றும் அவர்கள் எந்த அளவுக்கு ஆர்வமாக இருக்கிறார்கள் ஆகியவற்றை அறிந்து கொள்வதே இந்த சர்வேயின் நோக்கமாகும்.

அத்துடன் அவர்கள் எந்த முறையில் வாக்களிக்க விரும்புகிறார்கள் மற்றும் அதில் அவர்களுக்கு உள்ள சவால்கள் குறித்து அறிந்து கொள்வதற்கு இந்த சர்வே பயன்படும்.

இந்த சர்வே மூலம் கிடைக்கும் தகவல்கள் அரசு மற்றும் சட்டம் இயற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.

மக்களுக்காக நடைபெறும் நமது அரசாங்கத்தில் ஒவ்வொருவரின் குரலும் ஒவ்வொரு வாக்கும் முக்கியம்.அந்த வகையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எதிர்கொள்ள இந்த சர்வே உதவும் என்று தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் சைதி இந்த அறிக்கையில் செய்தி வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழாவா? சென்னைப் பல்கலை. பேராசிரியர்கள் எதிர்ப்பு
By DIN | Last Updated on : 05th November 2016 02:44 AM | அ+அ அ- |


சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் பட்டச் சான்றிதழில் துணைவேந்தர்தான் கையெழுத்திட வேண்டும், அதற்கு மாறாக பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திடக் கூடாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ஆர்.தாண்டவன் பதவிக் காலம் கடந்த ஜனவரியோடு முடிவுக்கு வந்தது. அதன் பிறகு 9 மாதங்களுக்கு மேலாகியும் துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. உயர்கல்வித் துறைச் செயலர் தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழுதான் பல்கலைக்கழகத்தை நிர்வகித்து வருகிறது. துணைவேந்தர் இல்லாததால் பட்டமளிப்பு விழா நடத்துவது இழுபறியில் இருந்து வருகிறது.

இதன் காரணமாக, துணைவேந்தர் எப்போது நியமிக்கப்படுவார், பட்டமளிப்பு விழா எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு பேராசிரியர்களிடையேயும், மாணவர்களிடையேயும் எழுந்தது. இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், துணைவேந்தர் இல்லாமலேயே பட்டமளிப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு, விழா தேதிக்கு ஒப்புதல் பெறுவதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு ஆட்சிக் குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆட்சிக் குழு உறுப்பினர் ஒருவர் கூறியது:

பட்டச் சான்றிதழில் துணைவேந்தர் கையெழுத்திடுவதே மரபு. அதை மாற்றி, பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் தாற்காலிக ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, இதுதொடர்பாக சட்ட ஆலோசனை பெற்று முடிவு எடுக்கலாம் என்று கூறி அந்தத் தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தத் தீர்மானத்துக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இடிபாடுகளுக்கு இடையில்...


இடிபாடுகளுக்கு இடையில்...

By ஆசிரியர் | Last Updated on : 04th November 2016 12:55 AM | அ+அ அ- |

சென்னை மெளலிவாக்கத்தில் புதன்கிழமை தகர்க்கப்பட்ட 11 மாடிக் கட்டடத்தின் இடிபாடுகள் அகற்றப்பட்ட பிறகு, அந்த நிலம் நீதிமன்ற உத்தரவின்படி, அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டும் நிறுவனத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தவறான இடத்தில் கட்டப்பட்டதால்தான் அந்தக் கட்டடம் தகர்க்கப்பட்டது. அந்த இடத்தை மீண்டும் அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டுநரிடம் கொடுப்பானேன்?

இரண்டு கேள்விகள் எழுகின்றன. இந்த இடம் நீர்நிலைப் பகுதிக்கு உட்பட்டது என்றால் இதனைக் கட்டுமான நிறுவனத்துக்கு ஏன் திரும்ப அளிக்க வேண்டும், அரசே எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே என்பது முதல் கேள்வி.

இந்த இடத்தை அரசு திரும்ப எடுத்துக்கொள்ள முடியாது என்கிற பட்சத்தில் இந்த இடத்தில் வீடு வாங்குவதற்காக ரூ.20 கோடி செலுத்திய 48 பேர் அத்தொகையை திரும்பப் பெற முடியாத நிலையில், இந்த இடத்தை கட்டுமான நிறுவனத்துக்கு திரும்ப அளிக்காமல் அரசே விற்பதன் மூலம், இந்த 48 பேருக்கு இழப்பீடு வழங்கலாகாதா என்பது அடுத்த கேள்வி.

மெளலிவாக்கத்தில் இரு ஆண்டுகளுக்கு முன்பு ஓர் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து 61 பேர் இறந்த சம்பவத்தில் விசாரணை நடத்திய நீதிபதி ரகுபதி தனது அறிக்கையை ஆகஸ்ட் 2015-இல் அளித்தபோது, அந்த நிறுவனத்தில் வீடு வாங்கப் பணம் செலுத்தியவர்களுக்கும், கட்டடம் சரிந்தபோது பாதிப்படைந்தவர்களுக்கும் நியாயமான இழப்பீடு வழங்க, ஒரு குழுவை அமைக்கலாம் என்று பரிந்துரைத்திருந்தார். இன்னும் அத்தகைய ஒரு குழு அமைக்கப்படவில்லை. ஒருவேளை, இனி அமைக்கப்படக்கூடும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
நீதிபதி ரகுபதி தனது பரிந்துரையில் முக்கியமானதாக, கட்டுநர், வீடு வாங்குவோர், வங்கி மூன்று தரப்பினரும் இணைந்ததான ஒரு காப்பீட்டு முறை ஏற்படுவதற்கு தற்போதைய சட்டத்தை வலுப்படுத்த அல்லது புதிய சட்டத்தை பிறப்பிக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டிருந்தார். அப்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டாக வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மனைவணிக ஒழுங்காற்றுச் சட்டத்திலும்கூட இதுபற்றிய தெளிவு காணப்படவில்லை.

மத்திய வீட்டுவசதி மற்றும் ஊரக ஏழ்மை ஒழிப்பு அமைச்சகம் கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி, வீடு கட்டுநர் மற்றும் வீடு வாங்குபவர் செய்துகொள்ள வேண்டிய விற்பனை ஒப்பந்த விதிமுறைகளை (அஞ்ழ்ங்ங்ம்ங்ய்ற் ச்ர்ழ் ள்ஹப்ங் தன்ப்ங்ள் 2016) வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்த விதிமுறையில், கட்டுநர் அல்லது வீடு வாங்குபவர் இருவரில் யார் வேண்டுமானாலும், வாக்கு தவறும் நிலையில் ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள முடியும். வீடு வாங்குபவர் தனது ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள விரும்பாவிட்டால், கட்டுமான நிறுவனம் அவருக்கு வீட்டைக் கட்டி ஒப்படைக்கும்வரை வட்டிப் பணம் அளிக்க வேண்டும். ஆனால், கட்டுநரின் சக்திக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளால், அதாவது போர், வெள்ளம், புயல், வறட்சி போன்றவற்றால் ஒரு கட்டடம் கட்டுவதற்கு தாமதமானால், இந்த விதி பொருந்தாது. அவர் வீடு வாங்குபவருக்கு காலதாமதத்துக்காக எந்தத் தொகையும் தர வேண்டியதில்லை என்கிறது அந்த விதிமுறை.
கட்டுநரின் ச
க்திக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளால் தாமதமானால் அவருக்கு எந்தப் பொறுப்பேற்பும் கிடையாது. ஆனால் காலதாமதமாகும் ஆண்டுகளுக்கு வீடு வாங்குபவர் வங்கியில் வட்டிப் பணம் செலுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இது எந்த வகையில் சரி? வங்கிகளால் கட்டுநர்களுக்குத் தரப்படும் அதே விதிமுறைத் தளர்வு கடன் பெற்றவர்களுக்கும் தரப்படுவதுதானே நியாயம்?

மத்திய அரசு குறிப்பிடும் இந்த விற்பனை ஒப்பந்த விதிமுறைகள், வீடு வாங்குபவருக்கு கடன் வழங்கும் வங்கிகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை. ஆனால் நீதிபதி ரகுபதி விசாரணைக் கமிஷன் தனது பரிந்துரையில் வங்கியையும் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்கிறது. இதுவே சரியான அணுகுமுறை என்பது தற்போது மெளலிவாக்கம் விவகாரத்தில் வெளிப்படையாகத் தெரிகிறது.

மெளலிவாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்பு விவகாரத்தில் சிருஷ்டி ஹவுஸிங் பிரைவேட் லிட். நிறுவனக் கணக்கில் வீடுவாங்கியவர்கள் கோரிய கடன் தொகையை நேரடியாக வங்கியே காசோலை அல்லது பணப்பரிமாற்றம் மூலம் வழங்கியுள்ளது. கடன் வாங்கியவர் அந்தத் தொகையை வேறு பயன்பாட்டுக்கு எடுத்துக்கொண்டார் என்கிற பேச்சுக்கே இடமில்லை.
2014 ஜூன் மாதம், இரு கட்டடங்களில் ஒன்று இடிந்து விழுந்தவுடன் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுவிட்டன. இருந்தும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக, வீடு வாங்க பணம் செலுத்தியோர் அனைவரும் அவர்கள் வாங்காத பணத்துக்கான வட்டியை, எந்தப் பயனுமின்றி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் வீடு வாங்கிய 48 பேருக்கும் நீதிமன்றம் எத்தகைய தீர்ப்பு அளிக்கும் என்பது தெரியாது. எத்தகைய இழப்பீடு கிடைக்கும் என்பதும் தெரியாது. இந்நிலையில், இந்த இடத்தில் வீடு வாங்கக் கடன் பெற்ற அனைவருக்கும், நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகும் வரை, வட்டி விலக்கு அளிக்கும் குறைந்தபட்ச சலுகையையாவது வங்கிகள் வழங்க வேண்டும்.

இந்த வழக்கில் அரசு அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த கட்டுமானத் துறை சார்ந்தவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் என்பது உறுதி. ஆனால், 48 வீடுகளுக்கு பணம் செலுத்தியவர்கள் நிலை என்ன? இவர்களுக்கான இழப்பீடாக, குறைந்தது 50% தொகையை அளித்து, மீதித் தொகையை நீதிமன்றத் தீர்ப்பின் முடிவில் கணக்குப் பார்ப்பதுதான் மனிதாபிமான செயல்பாடாக இருக்கும்!

நோயின்றி வாழ்வோம்!

நோயின்றி வாழ்வோம்!

By ஆர்.எஸ். நாராயணன்  |   Last Updated on : 05th November 2016 01:33 AM

நலம் விசாரிப்பது மனித மரபு. இதில் பல பாணிகள் உண்டு. "செளக்கியமா?'"நல்லாயிருக்கீங்களா?' "நலந்தனா?' இதற்கெல்லாம் வரக்கூடிய பதில் பொய்யானது. நலந்தானா என்று கைபேசியில் விசாரிக்கும்போது, மூன்று விதமான மாத்திரைகளை உள்ளே தள்ளியபடி ரொம்ப நல்லாருக்கேன் என்பார்.

தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்தால் நூறு சேனல்கள் வருகின்றன. ஐம்பது சேனல்களில் மருத்துவ விளம்பரம். விதவிதமானவை. சிறப்பாக சித்த - ஆயுர்வேத மருத்துவர்கள் உலகத்தில் உள்ள சகல நோய்களுக்கும் தீர்வு கண்டு விட்டதாகக் கூறுவார்கள்.

இவர்கள் மருந்துகளை உண்டு நோய் குணமானதாக நோயாளிகளிடமே சான்றிதழ் பெறுவார்கள். இன்னாரின் மருந்தை உட்கொண்டு, சிகிச்சை பெற்று மூட்டுவலி நீங்கியது, முதுகு வலி பறந்தது, மூக்கில் நீர்வடிவது நின்றது, முகம் பிரகாசமானது, என்றெல்லாம் நோயாளிகளாக நடிப்பவர்கள் பேசுவார்கள். காண்பவர்கள் நிஜமென்று நம்பி ஏமாந்து போவதுண்டு.
மற்றொரு வகையான விளம்பரம். வெள்ளைக்காரப்பெண் அல்லது வெள்ளையான இந்திய இளம் பெண் கூச்சமின்றி அங்க அவயங்களைக் காட்டுவாள். குண்டாயிருந்த ஆண் - பெண் பெல்ட் அணிந்து மெலிந்து விடுவார்கள். இக்கால ஜங்க் உணவால் பலருக்கு உடம்பே மலைபோல் ஆகிவிடுவது உண்மைதான். இதைக் குணப்படுத்துவதாகக் கூறும் பொய்யான விளம்பரங்களும் உண்மைதான்.

இரவு பதினோரு மணியிலிருந்து மன்மத விளம்பரங்கள் தொடங்கும். ஆண்மைத் தன்மை பெற விதம் விதமான சிட்டுக்குருவி லேகியங்கள், டானிக்குகள், விளம்பரமாகும். இதில் ரகசியம் எதுவுமில்லை. அப்படிப்பட்ட மருந்துகளைச் சோதித்துப்பார்த்தால் அபினியையோ கஞ்சாவையோ கலந்திருப்பார்கள்.

உண்மையில் அப்படிப்பட்ட மருந்துகளைத் தொடர்ந்து உண்பவர்கள் நாளைடைவில் நரம்புத்தளர்ச்சி, மூளைச்சிதைவு நோய்களுக்கு ஆளாகலாம் என்கிறது ஒரு மருத்துவ புள்ளிவிவரம்.
தொலைக்காட்சிகளில் நீண்ட தொட ரோ, திரைப்படமோ ஒளிபரப்பு செய்யும் போது எத்தனை நோய் விளம்பரங்கள்? அவற்றில் கிரிக்கெட் நட்சத்திரங்கள், நடிகர், நடிகைகள் பங்கேற்று, மூக்கடைப்பு நின்றது, இருமல் நின்றது, சக்தி வந்தது என்றெல்லாம் கூறி குறிப்பிட்ட மருந்துக் கம்பெனிக்கு விளம்பரம் தேடுவார்கள்.

இன்று ஒரு யோகாகுரு பெரிய பெரிய மருந்து நிறுவனங்களுக்கு சவால்விடுகிறார். இருமல் மருந்து. தேன், நூடுல்ஸ், ஆட்டா, சக்திபானம் என்றெல்லாம் விளம்பரங்கள். நோய்க்கு மருந்து யோகாசனங்கள் மட்டுமல்ல, குடல் பசிக்கும் உணவு, மருந்து வழங்குகிறார்.

பிணிதீர்க்கும் பெரிய பெரிய மருத்துவ நிபுணர்களின் மருத்துவ விளம்பரங்கள் நாளிதழ்களிலும் வாரப்பத்திரிகைகளிலும் அடிக்கடி வருவதுண்டு.

ஒவ்வோர் ஊரிலும் புதிய புதிய மருத்துவ மனைகள் திறக்கப்படும் போது விளம்பரங்கள். இதயத்தில் பிரச்னையா வருகை தாருங்கள். சிறுநீரகப் பிரச்சினையா? புற்றுநோயா? வயிற்றுவலியா? குடல்நோயா? கால்வலி, கைவலி, இடுப்புவலி போன்ற சகல வலிகளுக்கும் நரம்பியல் நிபுணர்களும், மூட்டு இயல் எலும்பு வைத்தியர்களும் தத்தம் மருத்துவனைகளுக்கு வருமாறு அழைப்பு விடுப்பார்கள்.

முன்பெல்லாம் ஒவ்வொரு நகரத்திலும் நான்கு தங்கும் விடுதிகள் இருந்தால் ஒன்று அல்லது இரண்டு தனியார் மருத்துவ மனைகள் இருக்கும். இன்று அப்படி இல்லை. தங்கும் விடுதிகள் நான்கு எட்டானால், மருத்துவமனைகள் இரண்டு என்பது இருபதாக உயர்ந்து கொண்டு வருகிறது. இதன் காரணம் நோய்ப் பெருக்கம் மட்டுமல்ல, மருந்து மாத்திரை உற்பத்தியிலும் இந்தியா ஒரு முன்னணி நாடுதான்.
இந்திய மக்கள்தொகையில் 20 சதவீதம் பேர் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிப்பு அடைந்து தினமும் மாத்திரைகள் உண்ண வேண்டிய நிலையில் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் எட்டு சதவீதம் பேர் சர்க்கரை நோயால் தாக்கப்பட்டுள்ளனர். சுமார் 30 சதவீதம் மக்கள் அளவு மீறிய எடை போட்டுள்ளனர். எடைக்குறைவான மக்களை விட எடைபோட்ட மக்களே அதிகம்.சிறார் இறப்பு வீதம் 27 சதவீதம்.
இந்தியாவில் மாநில வாரியாக நோய்களின் புள்ளிவிவரங்களை (2015-16) ஐ.நா. உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள அடிப்படையில் சராசரி கணக்கிடப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளின் கணக்கில் முதலிடம் மேற்கு வங்கம். ரசகுல்லா வேலை செய்துள்ளது. இரண்டாவது இடம் தமிழ்நாடு. திருநெல்வேலி அல்வா, தெருக்கடைகளில் விற்கப்படும் தின்பண்டங்கள், லாலா மிட்டாய்க்கடைகளில் வழங்கப்படும் இனிப்புகளுக்கு அளவே இல்லை.

தமிழ் நாட்டில் 11 சதவீதம் மக்கள் சர்க்கரை நோயாளிகள். அதே சமயம் குண்டு - தொப்பையர்கள் மேற்கு வங்கத்தில் குறைவு. தமிழ்நாடு, புதுச்சேரியில் அதிகம். குறிப்பாக தமிழர்களில் ஆண்களை விடப் பெண்களே அதிகம் குண்டு (31%) ஆண்கள் 28 சதவீதம் குண்டு - தொப்பை போட்டவர்கள். இந்தப் பட்டியலில் தமிழன் முதலிடம் வகிக்கிறான்.

பட்டி தொட்டிவரை தமிழ்நாட்டில் ஜங்க் உணவு விற்பனையிலும் தமிழ்நாடே முதல் நிலையில் உள்ளது. இது ஐ.நா. உலக சுகாதாரப் புள்ளிவிவர மதிப்பீடு.

ஒரு காலத்தில் இந்தியாவில் புற்றுநோய் அபூர்வமாயிருந்தது. புகை பிடிப்போருக்கு மட்டுமே புற்றுநோய் ஏற்படும் என்பது உண்மையின் ஒரு பக்கமே. முன்னைவிட இப்போது புகையிலைப் பயன் குறைந்துவிட்டது. இந்தியப் புகையிலை நிறுவனம் புகையிலை பயிரிட்ட இடங்களில் இன்று காகிதப் பயன் கருதி மரவளர்ப்பு செய்து வருகிறது.

புகையிலைப் பயன் குறைந்தாலும் புற்றுநோய் வளர்வது ஏன்? குறிப்பாகப் புகையிலைப் பயன்படுத்தாமல் வாழும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயும், கருப்பையில் புற்றுநோயும் வருவது எப்படி?
விஷமான பூச்சி மருந்து அமோனியா தெளித்த விளைபொருள்களை உண்ணுவது, ஜங்க் உணவு, மரபணு மாற்றிய விதைகளிலிருந்து பெறும் உணவு, நிறத்திற்காகவும், உணவு கெடாமல் பாதுகாக்கவும் பயன்படும் பல்வேறு ரசாயனப் பொருள்கள் இவற்றால் புற்றுநோய் ஏற்படுகிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் (Indian Council Of Medical Research)  வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவில் சுமார் 30 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், நாளுக்கு நாள் புற்றுநோய் சிகிச்சைக்காக வருவோர் எண்ணிக்கை கூடிவ ருவதாகவும், 2020-ஐ நெருங்கும் போது 50 லட்சம் மக்கள் புற்றுநோய் சிகிச்சைக்கு வருவார்கள் என்றும் எச்சரித்துள்ளது.
14 வயதுக்குட்பட்ட மாணவ - மாணவிகளுக்குப் புற்றுநோய் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போவதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது. பெண்களுக்கு மார்பகம், கருப்பை, தொண்டைக் குழாய் போன்றவை புற்றுநோய்க்கு இலக்காகின்றன. ஆண்களுக்கு சுவாசப்பை, தொண்டை, வாய், வயிறு, சிறுநீரகம், பெருங்குடல் போன்றவை பாதிப்புறுகின்றன. புற்றுநோயிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலம் என்பது கவலை தருகிறது.

நோய்களில் பலவகை உண்டு. சிறுநீரகம், இதயம், மூளை, நரம்பு மண்டலம், சுவாசப்பை ஆகியவை பாதிக்கப்பட்டால் அவை தீராத பெருநோய்கள். ஜலதோஷம், காய்ச்சல், வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு ஆகியவை தீரும் என்றாலும் தொடரும் சிறுநோய்கள். மஞ்சள் காமாலை, டைஃபாய்டு, பன்றிக் காய்ச்சல், சிக்குன் குனியா போன்றவை பாக்டீரியா, வைரஸ் மூலம் ஏற்படும் அபாயகரமான நோய்கள் - சுகாதாரக் கேடுகளினாலும் அசுத்தநீர் பருகுவதாலும் தொற்றும் இயல்புள்ளவை.

பாக்டீரியா வைரஸ் தொற்றுநோய்களுக்கு "பென்சிலின்' ஒரு தீர்வாயிருந்த காலம் போய் "டெட்ராசைக்ளின்' வந்தது. அதன்பின் "ஆம்பிசிலின்'. அதுவும் போய் "அமாக்ளீன்' என்கிறார்கள். இந்த "ஆண்டிபயாட்டிக்'கில் எவ்வளவோ மருந்துகள் உண்டு. சில நோயாளிகளுக்கு எந்த ஆண்டிபயாட்டிக்கும் வேலை செய்யவில்லையாம்.

குறிப்பாக கோழிக்கறி உண்பவர்கள், தேன் பருகுவோர் ஆகியோருக்கு இப்படிப் பிரச்னை வரலாம். ஏனெனில் கோழிவளர்க்கும்போது அதற்கு நோய் வராமல் இருக்க கோழித் தீவனத்தில் "ஆக்சிடெட்ராசைக்ளின்', "குளோர் டெட்ராசைக்ளின்', "டாக்சி சைக்ளின்', "என்ரோஃப்ளாக்சாசின்', "சிப்ரோஃப்ளாக்சாசின்' ஆகிய ஆண்டிபயாட்டிக் மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. இம்மருந்துகளின் எச்சம் கோழிக்கறியில் எஞ்சி அதை உண்ணும் மனிதனுக்குத் தேவையில்லாமல் ரத்தத்தில் எதிர்விஷம் சேர்ந்து விடுகிறது.

இப்படிப்பட்டவர்களுக்கு நோய் வந்தால் எந்த ஆண்டிபயாட்டிக்கும் வேலை செய்யாது. அதை "சூப்பர் பக்'(Super Bug) என்கிறார்கள். தேனீ வளர்ப்பிலும் இவ்வாறே மேற்கூறிய அதே ஆண்டிபயாட்டிக் மருந்துகள் தேனீக்கள் மீது தெளிக்கப்படுகின்றன. ஆகவே தேனில் ஆண்டிபயாட்டிக் எஞ்சியுள்ளது.

தேன் குறைவாக சாப்பிடுவார்கள். கோழிக்கறி அதிகம் சாப்பிடுவார்கள். ஆகவே, தேனைவிட கோழிக்கறியில் சூப்பர் பக் நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

குழந்தையிலிருந்தே ஐஸ்கிரீம், சாக்லேட்டுகளை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டதால் குழந்தைகள் குண்டாகிவிட்டன. பெரும்பாலான மாணவமணிகள் கைபேசியில் அல்லது கணினி முன் உட்காந்தபடி செட் செய்யப்பட்ட விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்களே தவிர, உடல் வியர்க்கும் படியான விளையாட்டுகளில் ஈடுபடுவது இல்லை.

எவ்வளவு நோய்வந்தாலும் துரிதமான எதிர்ப்பு சக்தியை உடல் பயிற்சி மூலம் பெற்றுவிடலாம். "நலந்தானா' என்று நண்பர்கள் கேட்கும்போது "நலமே' என்று பொய் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது!

Friday, November 4, 2016

Allowance scam: Railway union men among 13 TTEs suspended

TOI

CHENNAI: Thirteen travelling ticket examiners (TTEs) of Southern Railway were suspended on Tuesday after officials busted a scam in the commercial department where the TTEs were claiming travel allowance without being on duty.

The suspended TTEs of Trichy division include S Veerasekaran and P Anthonysamy, assistant general secretary and assistant divisional secretary of Southern Railway Mazdoor Union (SRMU) the sole recognised union in the zone.

Revealing the details, a senior railway official said the TTEs were claiming travel allowance (TA) for the entire month without setting foot on the trains concerned. "One of these 13 worked only five days, but claimed TA for 27 days. This not only causes a loss of revenue to the railways, but passengers are inconvenienced as passengers with unreserved tickets can enter and travel freely," he said.

The TA claims of each TTE were in the range of 15,000- 20,000 a month, officials said. "This would translate into a notional loss of around 15 lakh a year for the 13 TTEs," the official said.

The racket was allegedly flourishing for years, but the officers concerned continued to approve the TA as a majority of the offenders are key office-bearers of SRMU, officials said. It was thoroughly investigated after chief commercial manager Ajeet Saxena ordered an inquiry last month.

Latest Commentvery good initiative. negligence of duty is not tolerable and that too claiming TA. these type of checking is must throughout india by authorities in all type of duties.Radhakrishnan Mm

Veerasekaran was always available at the SRMU leadership's beck and call at the Golden Rock Workshop in Trichy, observers say. "It was always a mystery as to how he found time for carrying out his duties as a TTE," said A Janakiraman, working president of Dakshin Railway Employees Union (DREU), a rival to SRMU.

A similar scam had been busted in mid-2015 by officials in the Chennai division after it was found that TTEs were employing porters and other proxies to fine ticket-less passengers at railway stations like Chennai Central. Though they were immediately transferred, SRMU intervened to stop their transfer. The other TTEs suspended on Thursday are F M A Jayaraj, M Thamaraiselvan, S Muruganandam, M Raja, E Manohar, H Abdul Sirajudeen, A Periyanan, S Durairaj, A Nazeer Ahmed, R Ravi and Jermiah Melvin.

பியூன் அம்மாவின் பணி நிறைவு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த கலெக்டர், டாக்டர், எஞ்சினியர் மகன்கள்!

By DIN  |   Last Updated on : 03rd November 2016 

ஜார்கண்ட் மாநிலத்தின் ராம்கார்க் நகரில் பியூனாகப் பணியாற்றி பணி நிறைவு பெறவிருந்த சுமித்ரா தேவியின் வாழ்வில் கடந்த திங்கள் (1.10.2016) ஒரு உன்னதமான நாளாகி விட்டது. பணி நிறைவு பெறுவதென்பது அரசுத் துறை, தனியார் துறை எனும் வேறுபாடுகளின்றி எல்லோருக்கும் பொதுவான விசயம் தானே! இதிலென்ன உன்னதம் வந்தது? என்று கேட்கலாம். சுமித்ரா தேவியால் மட்டும் தான் அந்த நாளின் பரிபூரணத்துவத்தை முற்றிலுமாக உணர முடியும். ஏனெனில் சுமித்ரா ஏனைய பியூன்களைப் போல சாதரணமானவர் அல்லவே! பியூனாக ஒரு பெண் பணி நிறைவு பெறுவதென்பது மிக மிகச் சாதாரணமான விசயம் தான்.

ஆனால் கடின உழைப்பும், போராட்ட வாழ்வும் கொண்ட சுமித்ராவை நன்கறிந்த ராம்கார்க் வாசிகளுக்கு அது ஒரு சாதாரண நாளாகத் தெரியவில்லை தான். ஏனெனில் அந்த நாள் அந்தத் தாயின் பல வருடக் கனவு நனவான தருணம் ஆயிற்றே! பியூன் சுமித்ராவின் மூன்று மகன்களும் கலெக்டராகவும், டாக்டராகவும், எஞ்சினியராகவும் வெற்றிகரமாகப் படித்துப் பட்டம் பெற்று பணி புரிவதோடு, தங்களது தாயின் பணி நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு அம்மாவைக் கவுரவப் படுத்தி இருக்கிறார்கள்.

மூத்த மகன் வீரேந்திரக் குமார் ரயில்வே எஞ்சினியர்., இரண்டாவது மகன் தீரேந்திர குமார் ஒரு டாக்டர், கடைக்குட்டி மகேந்திர குமார் பிகார் சிவான் மாவட்ட கலெக்டர். மகன்கள் இப்படி குரூப் ஒன் அலுவலர்களாக கடின உழைப்பில் கலக்கிக் கொண்டிருந்த போதும் சுமித்ரா தேவி தனது பியூன் உத்யோகத்தை கைவிடவில்லை. பணி நிறைவு பெறும் கடைசி நாள் வரை பொறுப்பாகவும், பொறுமையாகவும் அர்ப்பணிப்பு உணர்வோடு உழைத்து பிற பெண்களுக்கு நல்ல முன்மாதிரியாகவே செயல்பட்டுள்ளார் என ’டைனிக் ஜகரான்’ ஹிந்தி தினசரிப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

திங்கள் அன்று தனது மூன்று மகன்களும் கலந்து கொண்டு சிறப்பித்த பணி நிறைவு விழாவில் சுமித்ரா தேவி மிகவும் நெகிழ்ந்து காணப்பட்டார். அம்மாவுக்கு பொன்னாடை போர்த்தி மலர் செண்டு அளித்து பாராட்டிப் பேசிய மூத்த மகன் வீரேந்திர குமார், ‘தனது தாயின் கடின உழைப்புக்கும், போராட்ட குணத்துக்கும் கிடைத்த வெற்றியே தங்களது சிறப்பான கல்வி மற்றும் உயர்பதவிகள்’ என்று குறிப்பிட்டார். மேலும் தங்களது தாயாரின் வாழ்க்கைப் போராட்டத்தைப் பார்த்து தான் மகன்களான தாங்கள் மூவரும் குடும்ப நிலையை உணர்ந்து கொண்டதாகவும், அந்த உணர்வுகளே தங்களது சிறப்பான கல்விக்கு மிகுந்த உத்வேகமாக அமைந்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும் மனித வாழ்வில் செய்ய முடியாத கடுமையான வேலை என்று எதுவும் இல்லையென்றும், முயற்சியும் தொடர்ந்த பயிற்சியும் இருந்தால் எல்லாமே எளிதான வேலை தான். இதை உணர்ந்து செயல்பட்டதே தங்களது குடும்பத்தின் வெற்றி என்றும் அவர் தெரிவித்தார்.

கெளரவப் பிரச்னை!
By ஆசிரியர் | Last Updated on : 03rd November 2016 12:48 AM | அ+அ அ- |


டாடா குழும நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பிலிருந்து சைரஸ் மிஸ்திரி திடீரென அகற்றப்பட்டது, கார்ப்பரேட் உலகில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சாமானிய நடுத்தர வர்க்கத்தினர்கூடப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது வழக்கமாகிவிட்ட சூழலில், இந்தியாவின் தலைசிறந்த, கெளரவமான மூத்த கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் ஏற்படும் மாற்றங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை.

இதன் பின்னணியில், மிகப்பெரிய நிர்வாகக் குழப்பமோ, சைரஸ் மிஸ்திரியின் செயல்பாட்டில் குறைபாடோ காரணமாக இருப்பதாகத் தெரியவில்லை. டாடா குழுமத்தின் தலைவர் என்கிற முறையில், எதிர்பார்த்ததுபோல செயல்படாத சில குழும நிறுவனங்களைக் கைகழுவிவிடலாம் என்கிற சைரஸ் மிஸ்திரியின் சிந்தனைதான் அவரைப் பதவியிலிருந்து அகற்றும் முடிவுக்கு முன்னாள் தலைவரும் "டாடா' குடும்பத்து வாரிசுமான ரத்தன் டாடாவைத் தூண்டியது என்று கூறப்படுகிறது. தனது கெளரவப் பிரச்னையாக அதை அவர் எடுத்துக் கொண்டார் என்றும், குழுமத்தின் அனைத்து நிறுவனங்களும் லாபத்தில் மட்டுமே இயங்க வேண்டும் என்கிற சைரஸ் மிஸ்திரியின் கொள்கையில் அவர் உடன்படவில்லை என்றும் தெரிகிறது.

பழைய இரும்புகளைத் தெருத் தெருவாகச் சென்று வாங்கி விற்றுக் கொண்டிருந்த ஜாம்ஷெட்ஜி டாடாவால் 1868-இல் தொடங்கப்பட்ட டாடா நிறுவனம், தனது 148 ஆண்டு பயணத்தில் அடைந்திருக்கும் அபார வளர்ச்சியைப் பார்த்து மேலைநாட்டு வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களே ஆச்சரியப்படுகின்றன. சர்வதேச அளவில் முதன்மையான இடத்தை வகிக்கும் இந்தியப் பன்னாட்டு வணிகக் குழுமமாக டாடா நிறுவனம்தான் இருந்து வருகிறது.

கடந்த நிதியாண்டின் புள்ளிவிவரப்படி டாடா நிறுவனத்தின் மொத்த வியாபார அளவு 103 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 6 லட்சத்து 90 ஆயிரம் கோடி). ஐந்து லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் டாடா நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். நூற்றுக்கும் அதிகமான நாடுகள், ஆறு கண்டங்கள் என்று வியாபித்திருக்கும் இந்தியாவின் பெருமைக்குரிய டாடா நிறுவனம், இப்போதும் டாடா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது என்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியம்.

டாடா குழும நிறுவனங்கள் அனைத்தின் உடைமையும் டாடா சன்ஸ் என்கிற தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வருகிறது. இந்த டாடா சன்ஸ் நிறுவனத்தின் பங்குகளில் 66% தர்ம அறக்கட்டளைகளைச் சார்ந்தவை. இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்கள் தனித்தனி இயக்குநர்கள் குழுவால் சுதந்திரமாக நிர்வகிக்கப்படுகின்றன. 29 நிறுவனங்களை உள்ளடக்கியதுதான் டாடா குழுமம். டாடா ஸ்டீல்ஸ், டாடா மோட்டார்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா பவர், டாடா கெமிகல்ஸ், டாடா க்ளோபல் பெவரேஜஸ், டாடா டெலி சர்வீசஸ், டைட்டன் வாட்ச், டாடா கம்யூனிகேஷன்ஸ், இந்தியன் ஹோட்டல்ஸ் என்று இந்தக் குழும நிறுவனங்களின் பட்டியல் நீளுகிறது.

டாடா கம்யூனிகேஷன்ஸ்தான் உலக அளவிலான முதன்மையான "வாய்ஸ் ப்ரொவைடர்'; டாடா மோட்டார்ஸ், உலகின் முதல் பத்து சரக்கு வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று; உலகின் 15 சிறந்த இரும்பு உருக்குத் தயாரிப்புகளில் டாடா ஸ்டீல்ஸ் ஒன்று; லாப அடிப்படையில் உலகின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்; டாடா க்ளோபல் பெவரேஜஸ்தான் உலகின் இரண்டாவது பெரிய தேயிலை தயாரிப்பாளர்கள்; மனித வாழ்வில் எந்தவொரு செயல்பாட்டை எடுத்துக் கொண்டாலும் அதில் டாடா நிறுவனத்தின் முத்திரை இல்லாமல் இருக்காது என்கிற அளவில் புகழ்பெற்ற நிறுவனம் டாடா குழுமம்.
ரத்தன் டாடா இந்த நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது எடுத்த சில முடிவுகள் லாபகரமாக இல்லை என்பதுதான் உண்மை. அதற்கு சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரத் தேக்கமும் ஒரு காரணம். பிரிட்டிஷ்காரர்களே அதிர்ச்சி அடையும் விதத்தில் ஜாக்குவார் லாண்ட்ரோவர் மோட்டார் நிறுவனத்தை டாடா குழுமம் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து சர்வதேச இரும்பு உருக்கு நிறுவனமான "கோரஸ்' நிறுவனத்தையும் கைப்பற்றியது. இந்த இரண்டாவது முடிவு லாபகரமானதாக இல்லை. அதேபோல, மிகப்பெரிய விளம்பரத்துடன் உருவாக்கப்பட்ட லட்சம் ரூபாய் கார்களான "நானோ' வெற்றி பெறவும் இல்லை, லட்ச ரூபாயில் தயாரிக்கவும் இயலவில்லை.

இதன் பின்னணியில் இன்னொரு உண்மையும் இருக்கிறது. 2008-க்கு முன்பு வெளிநாடுகளில் தங்களது நிறுவனங்களை ஏற்படுத்திப் பன்னாட்டு நிறுவனங்களாக முற்பட்ட "டாடா'வைப் போன்ற பல முக்கிய நிறுவனங்களும், சர்வதேச பொருளாதாரத் தேக்கத்தாலும், பின்னடைவாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் சைரஸ் மிஸ்திரி நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களைக் கை கழுவ முற்பட்டதும், அது "டாடா' குழுமத்தின் கெளரவத்தை பாதிக்கும் என்பதால் ரத்தன் டாடா அவரைத் தலைமைப் பொறுப்பிலிருந்து அகற்றியதும் நிகழ்ந்திருக்கிறது.
லட்சக்கணக்கானவர்களின் பங்குகள் முதலீடாக இருப்பதால், கார்ப்பரேட் நிறுவன நிகழ்வுகளைத் தனியார் நிறுவன நிகழ்வுகளாக நாம் ஒதுக்கிவிட முடியாது. இதில் சராசரி இந்தியனின் சேமிப்பு முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. "டாடா' குழுமத்தின் பிரச்னைகள் பொது வெளியில் விவாதமாகாமல் பாதுகாத்துத் தலைமை மாற்றம் நிகழ வேண்டும். இந்தப் பிரச்னை தெருச் சண்டையாகவோ, நீதிமன்ற வழக்காகவோ மாறாமல் இருப்பதுதான் முதலீட்டாளர்களுக்கு நல்லது!

அழைப்பு வாகன ஆபத்து

By எஸ். ரவீந்திரன் 

அண்மைக்காலமாக வாடகைக் கார்களை இயக்கும் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இத்தனை அழைப்பு வாகனச் சேவை நிறுவனங்கள் இல்லை. இப்போதுதான் அவை பெருகியுள்ளன.
போட்டி போட்டுக்கொண்டு இவர்கள் பண்ணும் களேபரம் ஏராளம். கிலோமீட்டருக்கு ரூ.7 முதல் ரூ.10 வரையில் வரம்பு வைத்துக் கொண்டு வரம்பு மீறிச் செயல்படுவதைப் பார்க்கிறோம்.
அழைத்த சில நிமிடங்களில் இவர்களின் வாகனங்கள் வந்துவிடும் என்பதால் தற்போது சொந்த வாகனங்கள் வைத்திருக்கும் பலர்கூட இவர்களை அணுகுகின்றனர்.

இப்படி வாடிக்கையாளர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ள அழைப்பு வாகனச் சேவை நிறுவனங்களின் குளறுபடிகள் அவற்றின் மீது நம்பிக்கை இழக்க வைக்கின்றன.

குறிப்பாக இரவு நேரங்களில் இது போன்ற அழைப்பு வாகனங்களை நம்பி பயணிப்பதை பெரும்பாலோர் தவிர்த்து வருகின்றனர். காரணம் தில்லி, சென்னை போன்ற பெருநகரங்களில் அழைப்பு வாகன ஓட்டுநர்கள் சிலர், பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானதுதான்.

ஒரு சிறந்த நிறுவனத்தின் வாகனத்தை இயக்குபவர்கள் முழு நம்பிக்கையுடனும், பயணிகளின் பாதுகாவலனாகவும் இருக்க வேண்டும். ஆனால் இதை மறந்து விட்டு தவறான வழிகளைப் பின்பற்றி இத் தொழிலுக்கே கேடு விளைவித்து வருகின்றனர்.
சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை முடித்துவிட்டு பாதுகாப்பாக வீட்டுக்குச் செல்வதற்காக இந்த நிறுவன வாகனத்தைத் தொடர்புகொண்ட பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்ட திகில் அனுபவத்தை முகநூலில் பதிவிட்டார்.

அதன்பிறகே வாகன ஓட்டுநர்களின் வக்கிரபுத்தி பற்றி ஊடகங்கள் பரபரப்பு செய்திகளை வெளியிட்டன. இதேபோல பல சம்பவங்கள் கவனத்துக்கு வராமலேயே நடந்துள்ளன.

பொதுவாக வாடகைக்கு வாகனங்களை அமர்த்துவது என்பது ரொம்பவும் கவனமாகக் கையாளவேண்டிய விஷயமாகும். கிராமப்புறங்களில் இந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருப்பார்கள். கோயில் விழாக்கள், சுற்றுலா செல்லும்போது பாதுகாப்பு அவசியம் என்பதைக் கருத்தில் கொள்வார்கள்.
தமக்கு வரும் ஓட்டுநர் நம்பிக்கையானவராக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பார்கள்.

பொதுவாக தனியார் வாடகை வாகனங்களை இயக்கும் நிறுவனங்கள் தமக்கென பிரத்யேக வாடிக்கையாளர்களை வைத்திருப்பார்கள். அவர்களுக்கு சிறந்த முறையில் சேவை அளித்து நற்பெயரைச் சம்பாதித்திருப்பார்கள்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் அந்த நம்பிக்கை தகர்ந்துவிட்டது எனலாம். இத்தனைக்கும் ஊழியர்களின் பின்புலம், செயல்பாட்டை நன்கு அறிந்த பின்பே நிர்வாகம் அவர்களை வேலைக்கு அமர்த்துகிறது. அப்படி இருந்தும் இது போன்ற தவறுகள் நிகழ்கின்றன.

மேலும் ஓட்டுநர் உரிமம் இல்லாமை, வாகன விதிகளை மீறல்,விபத்துகளை ஏற்படுத்தல் போன்றவற்றை மனதில் வைத்தே இந் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

வாடகைக்கு வாகனங்களை ஓட்டும் நபர்கள் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு அவ்வப்போது மாட்டிக் கொள்கின்றனர். போதை மருந்து, மது வகைகள் கடத்துதல், வன்முறை, பயங்கரவாதம் போன்றவற்றுக்கும் இவ்வாகனங்களை சிலர் பயன்படுத்தி அவர்கள் காவல்துறையினரிடம் பிடிபட்டிருப்பதையும் காண்கிறோம்.

இது ஒருபுறமிருக்க சவாரிக்கு அழைத்துச் செல்லப்படும் வாகனங்கள் கடத்தப்படுவதும், ஓட்டுநரை கொலை செய்வதும் நடந்து வருகின்றன. எனவே இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அதிரடி நடவடிக்கைகள் அவசியம்.
இரவில் சவாரிக்குச் செல்லும் வாகனங்களைக் கண்காணிக்க வேண்டியது அந்நிறுவனத்தின் கடமை. இதற்காக நவீன கருவிகள் வந்துள்ளன. அதை கட்டாயம் வாகனத்தில் பொருத்துவதுடன் பயணி இறங்கும் வரையில் திரையில் நடவடிக்கைகளை கண்காணிப்பதன் மூலம் குற்றச் செயல்களைத் தடுக்கலாம்.

மேலும் அவசர அழைப்புக்காக வாகனத்திலேயே வசதிகள் செய்யப்பட வேண்டும். ஆளில்லாமலே வாகனங்கள் இயக்கப்படும் இக் காலகட்டத்தில் இவையெல்லாம் சாதாரண விஷயங்கள்தான்.
வாகனம் ஓட்டுபவருடன் ஒரு உதவியாளரையும் நிறுவனங்கள் அனுப்ப வேண்டும். வாகனங்கள் செல்லும் இடம், நபர்களின் விவரத்தை மின்அஞ்சல் வழியாக காவல்துறைக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

இரவில் அழைப்பு வாகனங்களை நம்பி நீண்ட தொலைவு பயணிப்பதையும், தனியாக செல்வதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். வேறு வழியின்றி அவசரமாக செல்ல நேரிட்டால் காவல்துறை உதவியை நாடுவதும் நலமே.
வாகனத்தை இயக்குவோர் பெரும்பாலும் இளைஞர்களாக இருப்பதை மறு பரிசீலனை செய்யலாம். அழைப்பு வாகனச் சேவை மூலம் குற்றச் செயல்கள் நடைபெறுவதைத் தடுக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Thursday, November 3, 2016

அச்சமூட்டும் சாலை விபத்துகளும், அதிகரிக்கும் இறப்புகளும்: தமிழகத்தில் 9 மாதங்களில் 13,142 பேர் பலியான சோகம்


தமிழகத்தில் கடந்த 9 மாதங்களில் நடந்த சாலை விபத்துகளில் மொத்தம் 13 ஆயிரத்து 142 பேர் இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளால் சராசரியாக ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் இறக்கின்றனர். 4 நிமிடங்களுக்கு ஒருவர் சாலை விபத்தால் இறக்கிறார். தினமும் 16 குழந்தைகள் உயிரிழக்கின்றன. தினமும் சராசரியாக நடக்கும் 1,214 சாலை விபத்துகளில் 400 பேர் இறக்கின்றனர்.

சாலைகள் விரிவாக்கம், மேம்பாலம் கட்டுதல், தற்போது உள்ள முக்கிய சாலைகளை 2 வழி அல்லது 4 வழி பாதைகளாக மாற்றும் பணிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. இது போன்ற புதிய வசதி மூலம் வாகனங் களின் வேகத்தை அதிகரித்து ஓட்டவே ஆர்வம் காட்டுகிறோம். ஆனால், போக்குவரத்து விதி முறைகளை முழுமையாக பின் பற்றுவதில்லை என புள்ளிவிவ ரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. விதிமுறைகளை பின்பற்றாததால், சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.

உதாரணத்துக்கு தமிழகத்தில் 2001-ம் ஆண்டில் நடந்த 51 ஆயிரத்து 978 சாலை விபத்துகளில் 9,571 பேர் இறந்துள்ளனர். இதேபோல், கடந்த ஆண்டில் நடந்த 69,059 சாலை விபத்துகளில் 15,642 பேர் இறந்துள்ளனர். ஓட்டுநர்களின் கவனக்குறைவு, வாகனங்களின் வேகம் அதிகரிப்பு, பாதசாரிகளின் கவனக்குறைவு, மோசமான சாலை கள், வாகனங்கள் அதிகரிப்பு உள்ளிட்டவை முக்கியக் காரணங் களாக இருக்கின்றன. 55 சதவீத விபத்துகளுக்கு ஓட்டுநர்களின் கவனக்குறைவே காரணம் என அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கடந்த 9 மாதங்களில் 54 ஆயிரத்து 676 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில், 13 ஆயிரத்து 142 பேர் இறந்துள்ளனர். உயிரிழப்பை ஏற்படுத்திய 15,642 விபத்துகளில் 85 சதவீத விபத்துகள் நெடுஞ்சாலைகளில் நடந்துள்ளன.



இது தொடர்பாக போக்கு வரத்து ஆணையரக அதிகாரி களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

வாகனங்களின் பெருக்கம், அதிக வேகமாக செல்வது சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. தமிழகத்தில் தினமும் 6,210 வாகனங்கள் புதியதாக பதிவு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1 லட்சத்து 36 ஆயிரத்து 620 வாகனங்கள் புதியதாக பதிவு செய்யப்படுகின்றன. தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் பல்வேறு போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இதுதவிர, விபத்து அதிகமாக நடக்கும் இடங்களைக் கண்டறிந்து ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள மாவட்டங்கள் தோறும் அரசு அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழுக்களும் அமைத்து கண்காணித்து வருகிறோம். போக்குவரத்து விதிமீறல்களை மீறக்கூடாது, என்ற பொறுப்பு பொதுமக்களிடம் வர வேண்டும். கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். குறுகிய சாலைகளில் அதிக வேகமாக செல்லக்கூடாது, செல்போன் பேசிக்கொண்டு வாகனங்கள் ஓட்டிச் செல்லக்கூடாது என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இதற்கிடையே, புதிய சாலை பாதுகாப்பு சட்டத்திருத்த மசோ தாவை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. இதில், போக்குவரத்து விதியை மீறுபவர்களுக்கு அபராதத் தொகை பல மடங்கு அதி கரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விபத்துகளையும் கட்டுப்படுத்த முடியும் என நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

மது... மயக்கம் என்ன? டாக்டர் ஷாம்

மதுபோதையும் ஈகோவும் மிக மோசமான இணைகள்! உண்பது, உறங்குவது போன்ற அத்தியாவசிய கடமைகளில் ஒன்றாகவே குடிப்பதும் மாறி விடுகிறது மது மனிதர்களுக்கு. குடிக்காமல் கட்டுப்பாடாக இருப்பது என்பது இவர்களைப் பொறுத்த வரையில் மிகவும் சிரமமான விஷயமே. இருப்பினும் சில ஆலோசனைகள் அல்லது இணைந்த செயல்பாடுகள் மூலமாக மதுவைக் கட்டுக்குள் கொண்டு வரலாம். உதாரணமாக...இரவில் மட்டும் குடிக்கிறவர்களே பெரும்பாலும் அதிக அளவு இருக்கிறார்கள். நல்ல வேளை. இவர்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகச் செயல்படும் வகையில் திட்டமிட வேண்டும்.

இரவில் கோயில் போன்ற மது வாசம் அற்ற இடங்களுக்கு அழைத்துச் செல்வதை வழக்கம் ஆக்கலாம். அலுவலகப் பணியாளர்களில் இப்படி ஒரு குழுவே உண்டு. 6 மணி அடித்ததும் சக ஊழியர்களுடன் ஆர்வத்தோடு கிளம்பிப் போய் உற்சாக பானம் அருந்திய பின்பே வீடு நோக்குவார்கள். ஆரம்பத்தில் சுவாரஸ்யமான பொழுதுபோக்காகவே தொடங்கும் இப்பழக்கம் காலத்தின் கோலத்தில் அடிமை நிலைக்கு அழைத்துச் சென்று விடும். இப்படிப்பட்டவர்கள் உடனடியாக அக்குழுவிலிருந்து விலகி, மாலை நேர மயக்கத்திலிருந்து விடுபட வேண்டும்.
திரைப்படங்கள் பார்க்கவோ, விளையாட்டுகளில் ஈடுபடவோ அந்த மாலையைப் பயன்படுத்தலாம்.

சிலர் குடிப்பது யாருக்கும் தெரியாது. ஆனால், சில நண்பர்களோடு மட்டும் எல்லை இல்லாமல் குடித்துத் திளைப்பார்கள். அந்த நண்பர்களை தவிர்ப்பதுதான் நல்வழி. மன அழுத்தம் ஏற்படும்போது மதுவை நாடுவது சிலருக்கு வாடிக்கை. ‘ரொம்ப ஸ்டெரெஸா இருக்கு’,‘மேனேஜர் திட்டிட்டாரு’ என இவர்கள் சொல்லத் தொடங்கினாலே, அடுத்து வண்டியை நிறுத்துவது டாஸ்மாக் வாசலில்தான். மன அழுத்தத்தைப் போக்க மது ஒரு மருந்து அல்ல என்கிற உண்மையை உணர்ந்து கொள்வது அவசியம்.

மன அழுத்தத்துக்குக் காரணமான பிரச்னைக்கு எப்படி தீர்வு காண்பது என்றே பார்க்க வேண்டும். குடித்தாலும் மன அழுத்தம் ஒருபோதும் குறையாது. மாறாக அதிகரிக்கவே செய்யும். யோகா, தியானம், மனநல ஆலோசனை போன்றவையே பலன் தரும். சிலர் தனியாக இருக்கும்போது மட்டும் குடிப்பார்கள். ’தனிமை’, ’போர் அடிக்குது’ என இவர்களுக்குக் காரணங்கள் கிட்டக்கூடும். தனிமையை தவிர்ப்பதே இவர்களுக்கு முதல் மருந்து. குடும்பத்தோடும், குடிப்பழக்கம் இல்லாத நண்பர்களோடும் அதிக நேரம் செலவிட வேண்டும்.

‘ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்’ போன்ற குடிப்பழக்கத்தை கைவிட உதவும் அமைப்புகளில் இணையலாம். ‘ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்’ என்கிற மது அருந்தாதவர்கள் குழு, 1935ம் ஆண்டு முதல், உலக அளவில் செயல்படும் ஓர் அமைப்பு. மதுவைத் தவிர்க்க இங்கு ஆலோசனைகள் வழங்கப்படும்... அனுபவங்கள் பகிரப்படும்... ஆதரவு அளிக்கப்படும். 1957 முதல், இந்தியாவின் முக்கிய நகரங்களில் செயல்படும் இவ்வமைப்பு, தமிழ்நாட்டில் சென்னை, கடலூர், அருப்புக் கோட்டை, கோவை, கூடலூர் (நீலகிரி), மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி ஆகிய இடங்களில் பங்காற்றுகிறது.

தொடர்பு முகவரி மற்றும் தொலைபேசி எண்களை www.aagsoindia.org என்ற இணையதளத்தில் காணலாம்.
‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதோ’ என்கிற மனப்புலம்பலுக்கு ஆளாகிறவர்களும் எளிதில் மதுவின் போதைக்குள் விழுகிறார்கள். வாழ்வின் சிரம கட்டங்களுக்கு இது ஆறுதல் அளிப்பதாக அவர்களுக்குத் தோன்றுகிறது. முறையான வழிமுறைகளில் பிரச்னைகளை எதிர்கொள்வதற்குப் பதிலாக மதுவை நாடுகிறார்கள். காலப்போக்கில் அப்பிரச்னை மறந்தோ, மறைந்தோ போகும். மதுவே பிரச்னையாகி நிற்கும்.

உறவுகள் மற்றும் நட்பு வட்டத்தை பேணுவது பிரச்னைகளைச் சமாளிக்க கை கொடுக்கும். மதுவினால் ஏற்படும் உறவுச்சிக்கல்களை சரிசெய்யவும் மது விடுதலே ஒரே வழி. ஓய்வாக இருக்கும் போதும், விடுமுறை நாட்களிலும் மது ஆசை தூண்டப்படக்கூடும். கிடைத்ததற்கரிய அந்த நேரத்தை எப்படி பயனுள்ள வகையில் செலவழிப்பது எனச் சிந்தியுங்கள். நல்ல பொழுதுபோக்குகளில் ஆர்வம் காட்டுவது மாயையிலிருந்து விடுபட உதவும். குழந்தைகளோடு நேரம் செலவிடுவதைப் போல மகத்தான மாற்று வேறில்லை.

எந்த ஒரு சூழலையும் எதிர்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். பிரச்னைக்குப் பயந்து மதுவை நாடுவதால் பயன் ஏதும் இல்லை என்கிற கசப்பு உண்மையையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். குடி என்பது குடிப்பவரைத் தாண்டி குடும்பத்தில் உள்ள குழந்தை முதல் குடுகுடு தாத்தா வரை அத்தனை பேரையும் பாதிக்கிறது என்பது அறிந்ததே. ஒரு குடும்பத்தில் கணவனோ, மகனோ குடிப்பதற்கு மனைவியோ, தாயோ நிச்சயமாகக் காரணமாக இருக்க முடியாது.

அதனால் குடும்ப உறுப்பினர்கள் தங்களை ஒரு குறையாக எண்ண வேண்டிய அவசியம் இல்லை. குடியின் காரணமாக அவர்களின் குடும்பத்திலுள்ள பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதே யதார்த்தம். ஆண்மைக்குறைவு போன்ற குடிநோய் காரணமான இயலாமைகள் ஒரு பக்கம், குடும்ப வன்முறை, பலாத்காரம் போன்ற விருப்பமில்லா உறவுப் பிரச்னைகள் இன்னொரு பக்கம் என எத்திசை சிக்கலுக்கும் குடி காரணமாகிறது. இதனால் குடும்பத்தினருக்கு பதற்றமும் மனச்சோர்வும் ஏற்படுகிறது.

மன அழுத்தமோ மிக அதிகமாகிறது. தொடர்ச்சியாக மனநலப் பிரச்னைகளுக்கும் ஆளாகின்றனர். அது மட்டுமல்ல... குழந்தைகள் உள்பட எல்லோருக்குமே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. மது சார் சிக்கல்களுக்கு மது அருந்துபவரே தீர்வை நாடுவதுதான் முழுமையாக இருக்கும். எனினும் அவருக்கு குடும்பத்தினர் உதவ முடியும். உங்கள் குடும்ப உறுப்பினர் / நண்பர் அபாய கட்டத்தில் இருக்கிறாரா? உடல், மனம், சமூகம் இம்மூன்றுக்கும் குழப்பம் விளைவிக்கும் அளவுக்கு ஒருவர் மது அருந்துகிறார் எனில், அவர் அபாய கட்டத்தில் இருக்கிறார் என்றே பொருள்.

அடிக்கடி வாய்ப்புண் அல்லது வயிற்றுப்புண்ணால் அவதிப்படுகிறாரா? அதற்குக் குடியே காரணமாக இருக்கலாம். காயங்கள், வயிற்றில் ரத்தக்கசிவு, மஞ்சள் காமாலை, பாலுறவுத் தொற்று போன்றவற்றுக்கும் அதீத குடி காரணமாகலாம். குடும்ப வன்முறையில் ஈடுபடுகிறவர்கள், மனைவி விருப்பமின்றி உறவுப் பலாத்காரத்தில் ஈடுபடுகிறவர்கள் பெரும்பாலும் குடியால் பாதிக்கப்பட்டவர்களே. மனநலம் குன்றிய நிலையில் இருக்கிறவர்களுக்கும் மது காரணமாக இருக்கக்கூடும்.

எப்படி உதவ முடியும்? கோபம், எரிச்சல் போன்றவை உதவாது. ஆறுதலாக இருப்பதன் மூலமே, குடியிலிருந்து விடுபடச் செய்ய முடியும். ஆகவே, அவரது தனிமையை தவிர்க்கும் வகையிலும் செயல்படுங்கள். சிலர் உணவுக்குப் பின் மது அருந்த மாட்டார்கள். அதனால் கூடிய மட்டிலும் சீக்கிரமாகவே அவரை உணவருந்தச் செய்து விடுங்கள். குடிப்பழக்கம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டவர் மருத்துவரிடம் செல்லும்போது, நீங்களும் உடன் செல்லுங்கள்.

டாக்டரிடம் இது பற்றி கூறுங்கள். உண்மை நிலை அறிந்தால் மட்டுமே சரியான சிகிச்சையை பெற முடியும். குடும்பத்தினரின் ஆதரவு, மனநல ஆலோசனை, போதை நிறுத்தப் பின் விளைவுக்குச் சிகிச்சை, ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் போன்ற ஆதரவுக் குழுக்களில் இணையச் செய்தல் ஆகியவை நிச்சயம் பலன் தரும்.

அதிர்ச்சி டேட்டா

மது மற்றும் புகையிலையை தவிர்ப்பதன் மூலமாகவே 30 சதவிகித கேன்சர் நோய்களை தவிர்க்க முடியும். 2013ம் ஆண்டு வரை ரஷ்யாவில் பியர் என்பது மதுபானமாகவே கருதப்படவில்லை. அங்கு மட்டுமே ஆண்டுக்கு 5 லட்சம் உயிர்கள் மதுசார் நோய்கள் மற்றும் பிரச்னைகளால் மடிகின்றன. ஆல்கஹால் விஷமாவதால், அமெரிக்காவில் தினமும் 6 பேர் இறக்கின்றனர்.

அலுவலகப் பணியும் குடும்பப் பொறுப்பும் இரண்டையும் எப்படி சமாளிப்பது?


நன்றி குங்குமம் தோழி

உழைக்கும் தோழிகளுக்கு...ரஞ்சனி நாராயணன்

உத்தியோகம் புருஷ லட்சணம் என்று ஒருகாலத்தில் சொன்னார்கள். இப்போது பெண்களின் லட்சணமும் அதுவே என்றாகிவிட்ட நிலையில் எப்படி இரண்டையும் சமாளிப்பது? இந்திரா நூயி கூட பெண்களுக்குக் குற்ற உணர்வுதான் மிச்சம் என்கிறாரே! என்ன செய்யலாம்?

ஒரு பெண்ணோ ஆணோ அவர்களுடைய நிறுவனப் பணிகளில் வெற்றி அடைந்திருக்கிறார்களா என்று தீர்மானிப்பது எது? பணம்? அங்கீகாரம்? சுய அதிகாரம்? இவை எதுவுமே இல்லை என்கிறது சமீபத்தில் அக்சென்ஷர் நிறுவனம் நடத்திய ஓர் ஆய்வு. எப்படி குடும்ப வாழ்க்கை மற்றும் நிறுவனப் பணிகளை சமாளிக்கிறார்கள் என்பதுதான் அவர்கள் தங்கள் பணிகளில் வெற்றி அடைந்திருக்கிறார்களா என்பதை தீர்மானிக்கிறதாம்.

நீங்கள் தினமும் அலுவலகத்திலிருந்து தாமதமாகத் திரும்புகிறீர்களா? இரவு நெடுநேரம் உட்கார்ந்து கொண்டு அலுவலகத்தில் முடிக்க முடியாமல் போன வேலைகளை வீட்டில் செய்கிறீர்களா? உங்கள் பணிவாழ்க்கை சமநிலை ஆபத்தில் இருக்கிறது என்று இதற்கு அர்த்தம். உங்கள் எரிச்சல்களையும் கோபத்தையும் குழந்தைகளின் மேலும், கணவனின் மேலும் காட்டுகிறீர்களா? ஆபத்து! 9லிருந்து 5 வரை மட்டுமே அலுவலகப்பணி என்று இருக்க வேண்டாம்
என்றாலும், ஒவ்வொரு நாள் மாலையையும் அலுவலகத்தில் கழிப்பது என்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

அலுவலகப்பணிகளை அலுவலக நேரத்தில் முடிப்பது என்பது இயலாத காரியம். அதே நேரம் தொழில் வாழ்க்கையில் முதலிடம் வகிப்பதும் அவசியம். எப்படி? இதோ சில யோசனைகள்... தேவை சுய அலசல். வாரம் 40 மணிநேர வேலை என்பது கொஞ்சம் கொஞ்சமாக 60 மணி நேரமாக மாறத்தொடங்கி விட்டது என்றால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது சுய அலசல்தான். பணிநாட்களில் அலுவலகத்தில் உங்களது பெரும்பாலான நேரத்தை எப்படிச் செலவழிக்கிறீர்கள் என்று கவனியுங்கள்.

உள்பெட்டி செய்திகளுக்கு பதில் சொல்லுவதிலும், அதிகாரிகளுடனான சந்திப்புகளிலும் நேரம் வீணாகிறதா? இவற்றின் நேரத்தை மாற்றியமையுங்கள். அல்லது அவற்றுக்கான நேரத்தைப் பாதியாகக் குறையுங்கள். பெரிய வேலைகளை முதலில் முடியுங்கள் முக்கியமான, நேரம் அதிகம் செலவழிக்க வேண்டிய வேலைகளை முதலில் முடித்துவிடுங்கள். காலை வேளைகளில் நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். அதனால் பெரிய வேலைகளை முடிப்பதும் சுலபமாக இருக்கும். அதிக வேலைகளை குறைந்த நேரத்தில் செய்யலாம்.

உள்பெட்டி செய்திகளுக்கு பதில் சொல்வது, அதிகாரிகளைச் சந்திப்பது போன்றவற்றை மதிய உணவுக்குப் பின் வைத்துக் கொள்ளுங்கள். ஓர் அட்டவணை போடுங்கள் இன்று என்னென்ன செய்யவேண்டும் என்பதை சிலர் தினமும் எழுதுவார்கள். ஆனால், அதில் பாதி கூட செய்து முடித்திருக்க மாட்டார்கள். அப்படிச் செய்யாமல் இன்றைக்கு 8 மணிநேரம் அலுவலகத்தில் இருக்கப்போகிறீர்கள் என்றால் ஒவ்வொரு வேலைக்கும் எத்தனை மணிநேரம் செலவழிக்கப் போகிறீர்கள் இத்தனை மணியிலிருந்து இத்தனை மணிவரை என்று எழுதுங்கள்.

எவ்வளவு நேரம் ஒதுக்கி இருக்கிறீர்களோ, அத்தனை மணி நேரத்துக்குள் ஒவ்வொரு வேலையையும் முடிக்கப் பாருங்கள். அப்படி திட்டமிடப்பட்ட நேரத்தில், மின்னஞ்சல்களுக்கு பதில் எழுதுவது, தவறவிட்ட தொலைபேசி அழைப்புகளை கூப்பிடுவது போன்று நேரத்தை வீணடிக்கும் செயல்களில் ஈடுபடாதீர்கள். இவற்றுக்கென்று தினமும் அரை மணிநேரம் ஒதுக்குங்கள். தொலைபேசி பேச்சுகளை சுருக்கமாக முடியுங்கள். மின்னஞ்சல்களை விஷயத்தை மட்டும் சொல்லி முடித்து விடுங்கள்.

கவனச் சிதறல்களை தவிர்த்துவிடுங்கள் கவனத்தை சிதற அடிக்கக்கூடிய விஷயங்களைத் தவிர்த்து வேலையில் அதிக கவனம் செலுத்துங்கள். உங்கள் கணினியில் அனாவசியமாக நிறைய ஜன்னல்களைத் (tabs) திறந்து வைக்காதீர்கள். குறிப்பிட்ட வேலை முடியும்வரை தொலைபேசியை பார்ப்பதை தவிர்த்துவிடுங்கள். முடிந்தால் தொலைபேசியை மௌனப்படுத்தி விடுங்கள். அவ்வப்போது இடைவெளி தேவை தொடர்ச்சியாகப் பலமணிநேரம் வேலை செய்வதைவிட அவ்வப்போது சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு வேலையைத் தொடர்வது உங்கள் வேலைத்திறமையை அதிகரிக்கும்.

ஒரு பெரிய வேலையை முடித்தவுடன் நாற்காலியிலிருந்து எழுந்து சிறிது கை கால்களை நீட்டிக் கொள்ளுங்கள். சுடச்சுட காபி அல்லது வேறு ஏதாவது பானம் குடித்துவிட்டு வேலையைத் தொடருங்கள். அதற்காக தோழிகளுடன் அரட்டை அடிக்கவோ, ஃபேஸ்புக் பார்க்கவோ ஆரம்பித்து விடாதீர்கள். இவைதான் உங்கள் நேரத்தை விழுங்கும் பகாசுரன்கள்! ‘நோ’ சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் இன்றைக்கு வேலை கழுத்துவரை இருக்கிறது என்று தெரிந்தும், நமக்குத் தெரிந்தவர்கள் என்று தயவு தாட்சண்யம் பார்த்து சில விஷயங்களை செய்து தருவதாக ஒப்புக்கொண்டு விடுவோம்.

முடியாது என்று சொல்லவும் தயக்கம். இப்படிப்பட்ட சூழ்நிலையை உறுதியாக தவிர்த்து விடுங்கள். முடியாது என்று சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள். அதுவும் குறிப்பாக வேலை மும்முரமாக இருக்கும்போது அனாவசிய வேலைகளைச் செய்ய ஒப்புக்கொள்ளாதீர்கள். முன்னோக்குடன் செயல்படுங்கள் சின்னச் சின்ன விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, பெரிய விஷயங்களைக் கோட்டை விடாதீர்கள். இரண்டொரு நாளில் முடிக்க வேண்டிய வேலைகளை உடனடியாக முடித்து விடுங்கள். உங்களுக்கான பணிகள் வரும்போதே உங்களுக்குத் தெரியும் எந்த வேலையை எத்தனை நாட்களுக்குள் முடிக்க வேண்டும், காலக்கெடு எப்போது என்று.

அதற்குத் தகுந்தாற்போல உங்கள் நேர ஒதுக்கீடு இருக்கட்டும். இன்று செய்ய வேண்டியவை என்று பட்டியல் போடும்போதே சில விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள். நாம் நினைத்தபடி நடக்காது சில வேலைகள் அல்லது நீங்கள் ஒருவரே சில வேலைகளை செய்து முடிக்க முடியாது. வேறொருவரின் உதவி தேவைப்படலாம். அவர் அவரது வேலைகளை முடித்து விட்டுத்தான் உங்களுக்கு உதவுவார் என்று தெரியும். இந்த மாதிரியான வேலைகளுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள். அவருக்கும் உங்களுக்கும் ஒத்துப்போகும் வேலை நேரத்தைத் தேர்ந்தெடுங்கள்.

அதேபோல நீங்கள் இன்னொருவருக்கு உதவ நேரலாம். அவருடன் நேரத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும். முன்கூட்டியே இருவருமாக திட்டமிட்டால் சின்னச் சின்ன மனஅழுத்தங்களைத் தவிர்க்கலாம். அடுத்த வாரம் உங்கள் பாஸ் வருகிறார் என்றால் உங்கள் திட்டப்படி எதுவும் நடக்காது என்று தெரியும். அந்த நேரங்களில் நீங்கள் நினைத்தபடி நடக்காமல் போகலாம். அதையெல்லாம் கருத்தில் கொண்டு உங்கள் வேலை நேரங்களைத் திட்டமிடுங்கள்.
செய்வன திருந்தச் செய் ஒருவேலையைச் செய்யும்போதே கூடியவரை திருத்தமாகச் செய்துவிடுங்கள்.

ஒருமுறை செய்து முடித்த வேலையை மறுமுறை செய்யும்படி இருக்கக்கூடாது. அன்றைக்கு செய்ய வேண்டிய வேலை முடிந்துவிட்டது என்றால் உடனே அலுவலகத்தை விட்டுக் கிளம்பி விடுங்கள். மிகமிக முக்கியமானது
அலுவலக நேரத்தை அலுவலகப்பணிகளுக்கு மட்டுமே செலவழியுங்கள். அரட்டை அடிக்கவோ, ஃபேஸ்புக் பார்க்கவோ உங்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுவதில்லை என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் மாலை வேளைகளை குழந்தைகள், கணவன், பெற்றோர்களுடன் செலவழியுங்கள்.

இப்படிச் செய்வது உங்களுக்கும் நல்லது. குடும்பத்தினரும் உங்களை அனுசரித்துக் கொண்டு போவார்கள். பெரும்பாலான நாட்கள் இப்படி இருந்தால் அலுவலகத்தில் வருடாந்திர முடிவின்போது நீங்கள் தாமதமாக வந்தாலும் குடும்பத்தினர் உங்களைப் புரிந்துகொள்வார்கள். வீட்டில் அமைதி நிலவினால்தான் அலுவலகத்தில் உங்கள் பணி சிறக்கும்.
எல்லோருக்கும் இருப்பது 24 மணி நேரம்தான். அதை நாம் எப்படி செலவிடுகிறோம் என்பதில்தான் நமது சாமர்த்தியம் அடங்கியிருக்கிறது!



துப்பாக்கி ரவைகள் நெஞ்சைத் துளைக்கும் முன்' இந்திராவின் ஆசை!



“இன்று நான் இங்கிருக்கிறேன். நாளை இருப்பேனா என்று தெரியாது. என்னைச் சுட்டுக் கொல்ல எத்தனை முயற்சிகள் நடைபெற்றன என்பதை யாரும் அறியமாட்டார்கள். வாழ்வு, சாவு பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு இரண்டும் ஒன்றுதான். நான் கணிசமான காலம் வாழ்ந்துவிட்டேன். அந்தக் காலத்தை, நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும் செலவிட்டதில் பெருமைப்படுகிறேன். இது ஒன்றுதான் எனக்குப் பெருமையே தவிர, வேறு எதற்காகவும் நான் பெருமைப்படவில்லை. என் கடைசி மூச்சு உள்ளவரை நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் சேவை செய்வேன். நான் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தமும் இந்த நாட்டை வளப்படுத்தும்; பலப்படுத்தும்.”






முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, தான் கொலை செய்யப்படுவதற்கு முந்தின நாள், 1984-ம் ஆண்டு அக்டோபர் 30-ல் ஒரிசா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு,அன்றிரவு ஒரிசாவின் தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், வழக்கமாக தன் சொற்பொழிவுப் பிரிவு செயலாளர் தயாரித்துக் கொடுத்திருந்த குறிப்புகளின் அடிப்படையில் பேசத்தொடங்கினாலும், இறுதியாக அதிலிருந்து விலகி, புதிதாகப் பேசிய உணர்ச்சிமயமான வார்த்தைகள் இவை.

இந்திரா காந்தி இவ்வாறு பேசியதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாநில கவர்னர், “வன்முறையால் உங்களுக்கு மரணம் சம்பவிக்கும் என்ற பொருள்பட பொதுக்கூட்டத்தில் பேசினீர்களே. ஏன்? அதைக்கேட்டு நான் ரொம்பவும் கவலையும், அதிர்ச்சியும் அடைந்தேன்” என்று இந்திராவிடம் கூறியபோது, “நான் என் மனதில் பட்டதைச் சொன்னேன். என் தாத்தாவும், அம்மாவும் அணு அணுவாக இறப்பதைக் கண்ணால் கண்டு, மனம் நொந்தவள் நான். நோய்வாய்ப்பட்டு, துயரப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக சாவது மிகவும் கொடுமை. ஆரோக்கியமாக இருக்கும்போது, திடீரென்று மரணத்தைத் தழுவுவதையே நான் விரும்புகிறேன்” என்று இந்திரா காந்தி பதிலளித்தார்.

மறுநாள். நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய கொடூரமான இரண்டாவது படுகொலையாக, இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டார். 16 ஆண்டு காலம் பிரதமராகப் பதவி வகித்த இந்திரா காந்தி, அவருடைய வீட்டில் பாதுகாவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

சீக்கியர் பொற்கோவிலில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த போருக்குப் பிறகு, இந்திரா காந்தி மீது சீக்கியர்களில் பலர் ஆத்திரம் கொண்டிருந்தனர். அதன் காரணமாக, இந்திரா காந்தியின் வீட்டில் காவல் பணியில் சீக்கியர்களை அமர்த்தக் கூடாது என்று ரகசியத்துறையின் இயக்குநர் கருத்து தெரிவித்திருந்தும், அவர் அதை ஏற்கவில்லை.




1984 அக்டோபர் 31-ம் தேதி காலை 8 மணிக்கு, இந்திரா காந்தி பற்றி டெலிவிஷன் படம் ஒன்றை எடுப்பதற்காக, வெளிநாட்டுப் படப்பிடிப்பாளர் ஒருவர் வந்து, பிரதமரின் அலுவலகத்தில் காத்திருந்தார். ஒரு கட்டடத்திலிருந்து மற்றொரு கட்டடத்துக்குச் செல்ல இடையில் இருந்த தூரம் சுமார் 300 அடி. அதைக் காரிலேயே கடந்திருக்க முடியும் என்றாலும், வந்திருந்தவருக்குப் பேட்டியளிக்க இந்திரா காந்தி நடந்தே சென்றார். அப்போது, புதர் போன்ற செடிகளுக்குப் பின்னால் பிரதமரின் இல்ல பாதுகாவலர்கள் பியாந்த்சிங், சத்வந்த்சிங் ஆகியோர் நின்றிருந்தனர்.

பியாந்த்சிங் தன் கைத்துப் பாக்கியால், இந்திரா காந்தியை நோக்கி ஐந்து முறை சுட்டார். அதே நேரத்தில், சத்வந்த்சிங் இயந்திரத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார். கண்மூடிக் கண் திறப்பதற்குள் இந்திரா காந்தியின் நெஞ்சிலும், வயிற்றிலும் குண்டுகள் பாய்ந்தன.

ரத்தம் பெருக்கெடுக்க உயிரிழந்த இந்திரா காந்தி, பிறப்பு முதலே சிறப்புப் பெற்றவர். அப்போது, முதல் உலகப் போர் முடிந்திருந்த சமயம். இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் தொடங்கியிருந்த காலம். ஜவஹர்லால் நேரு - கமலா நேரு தம்பதியின் மகளாக, புகழ்பெற்ற குடும்பத்தில் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் அலகாபாத்தில், 1917 நவம்பர் 19ல் பிறந்தார் இந்திரா பிரியதர்ஷினி.

பெரும் பணமும் புகழும் கொண்ட குடும்பம் என்றாலும் தாத்தா, அப்பா, அம்மா என இந்திராவின் குடும்பத்தினர் அனைவருமே சுதந்திரச் சிந்தனைகளோடு வாழ்ந்தவர்கள். அதனால், அதிக காலத்தை சிறையிலேயே அவர்கள் கழித்தார்கள். அந்தக் காலகட்டத்தில் குடும்பத்தின் மற்ற பெண்களுடன் சபர்மதி ஆசிரமத்தில் தங்கிய அனுபவம், இந்திரா காந்தியின் இளைமைக் காலத்தில் அவரை வாட்டியது.

தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய மகாத்மா காந்தி, இந்திராவின் குடும்பத்துடன் சுதந்திரப் போராட்டம் குறித்து அடிக்கடி பேசிவந்ததும், போராட்ட காலத்தில் மக்கள் பட்ட துன்பங்களை நேரடியாகப் பார்த்துவந்ததும், இந்திராவின் நெஞ்சில் சுதந்திரப் போராட்ட உணர்வுகளை எழுப்பின.

ஜவஹர்லால் நேரு, தன் மகள் இந்திராவோடு இருந்து அவருக்குக் கல்வி அறிவூட்ட முடியவில்லை என்றாலும், சிறையில் இருந்துகொண்டே 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகளையும், உயிர்களின் தோற்றம், கண்டங்கள் பிறப்பு, பேரரசுகள், உலகப் போர், அறிவியல் கண்டுபிடிப்புகள், உலகில் குறிப்பிடத்தக்க மனிதர்கள், தொழிற் புரட்சி, பொருளாதாரம், இயற்கை வளம் என எந்தப் பல்கலைக்கழகமும் சொல்லித்தர முடியாத விஷயங்களைத் தன் கடிதங்களின் மூலம் தன் மகளுக்குக் கற்பித்தார். லால் பகதூர் சாஸ்திரியின் மந்திரி சபையில் அமைச்சராக இருந்து, தன் அரசியல் பணியைச் சிறப்பாக்கினார், இந்திரா. தன் தந்தையுடன் பல நாட்டுத் தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அவற்றையெல்லாம் பிற்காலத்தில், தன் அரசியல் ஸ்திரத்தன்மை வெளிப்பாட்டுக்கு பயன்படுத்திக்கொண்டார்.

கோடிகளைக் குவிக்கும் அரசியல் செய்யவில்லை இந்திரா காந்தி. தன்னை, தன் குடும்பத்தையே நாட்டுக்காகத் தியாகம் செய்தவர். அதனால்தான், நேருவின் மறைவுக்குப் பின் இந்திராவை பிரதமராக்கினார், கர்மவீரர் காமராஜர்.

தேசிய ஒருமைப்பாட்டை நேசித்தவர் இந்திரா காந்தி. தன் ஆட்சிக்காலத்தில் நாட்டின் முன்னேற்றத்துக்காகவும், ஏழை எளிய மக்களின் நிலை உயரவும் பாடுபட்டார். நம்மை எதிரியாக நினைத்த நாடுகளையோ, உள்நாட்டிலே தன்னை எதிர்த்தவர்களைக் கண்டோ, ஒருபோதும் அஞ்சாதவர்.

இந்திரா சராசரி அரசியல்வாதி அல்ல. இந்தியாவின் வரலாறும் அன்னை இந்திராவின் வரலாறும் ஒன்று கலந்தது. வரலாறாக நிலைத்த நெஞ்சுரம் மிக்க அன்னையை நினைவில் வைப்போம்!

இடிக்கப்பட்டது மெளலிவாக்கம்.... மிச்சமிருக்கும் கட்டடங்கள் எத்தனை...? என்ன சொல்கிறது சட்டம்?



விதிமீறல்... அத்துமீறல்... முறைகேடுகள்... இவற்றின் பின்னணியில்தான், சென்னை மாநகர், கான்கிரீட் காடாக வளர்ந்து நிற்கிறது. அதிகாரம், அரசியல் வியாபாரத்தோடு சென்னையில் சொந்தமாக இடமும், கட்டடமும் வைத்துள்ள சாதாரண குடிமகன்களும் கூட்டுச்சேர்ந்து அரங்கேற்றிய அராஜகத்தின் அடையாளங்களே, மாநகரம் முழுவதும் ஓங்கி உயர்ந்து நிற்கும் வரைமுறையற்ற கட்டடங்கள். சென்னை மாநரின் கடும் போக்குவரத்து நெரிசல், சுகாதாரக்கேடு, மிக காஸ்ட்லியான ஏரியாக்கள்கூட இரண்டு நாட்கள் மழையில் மூழ்கிப்போகும் நிலை என்று மாநகரின் இன்றைய மூச்சுத்திணறலுக்கு இந்த வரைமுறையற்ற கட்டடங்களே காரணம். 1990-களுக்குப் பிறகு சென்னைக்கு ஏற்பட்ட இந்த நிலை, 2000-த்துக்குப் பிறகு தமிழகத்தின் முக்கிய மாநகரங்களுக்கு நேர்ந்தது.

இதை மிகமிகத் தாமதமாக உணர்ந்துகொண்ட தமிழக அரசாங்கம் 1999-ம் ஆண்டு, ‘வரைமுறையற்ற கட்டடங்கள் மறுவரையறை’ என்று ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தது. தமிழகத்தில் உள்ள நகராட்சிகளில் விதிமுறைகளை மீறிக் கட்டி... அதில் சிக்கியவர்கள், இந்தச் சட்டம் ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “சட்டம் சரிதான்... ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதில் ஓர் ஒழுங்குமுறை வேண்டும்” என்று சொல்லி சில வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தச் சொன்னது. அதன்படி, ‘சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்க வேண்டும். அந்த கமிட்டியின் கூட்டம் மாதம் ஒரு முறை நடைபெற வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

தமிழக அரசு இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையே உறுதி செய்தது. அதையடுத்து, சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. ஆனால், அதன் கூட்டம் மாதம் ஒருமுறை நடக்கவில்லை என்று அந்தக் கமிட்டி உறுப்பினரான தேவசகாயம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதுபோல, தமிழகத்தில் விதிமீறிக் கட்டப்பட்ட கட்டடங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக நகரமைப்புச் சட்டம் ஒரு திருத்தம் கொண்டுவந்தது. அது செல்லாது என்று ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது. அதோடு, ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். ராஜேஸ்வரன் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைத்துப் புதிய விதிகளைப் பரிந்துரைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அந்தக் குழுவும் புதிய விதிகளை வகுத்துத் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்தது. இந்த வழக்கும், சென்னை தி.நகர் பகுதியில் விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் தொடர்பான வழக்கும் கடந்த நவம்பர் 1-ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்களை ஒழுங்குபடுத்த, இந்த நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்தது. ஆனால், அவை எதுவும் பின்பற்றப்படவில்லை.

அசம்பாவித சம்பவங்கள் நடந்தபின்பே நடவடிக்கை எடுப்போம் என்ற மனநிலையில் அரசு அதிகாரிகள் இருக்கின்றனர். ஒருபுறம், அரசாங்கம் கொள்கைரீதியாக எந்த முடிவையும் எடுப்பதில்லை. மறுபுறம், நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளையும் பின்பற்றுவதில்லை. விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்கள் மீது சி.எம்.டி.ஏ., எந்தவிதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பினர். அதன்பிறகு, “நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையிலான கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தை ஒரு வாரத்துக்குள் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் கூட்ட வேண்டும். மேலும், நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாத சி.எம்.டி.ஏ-வின் உறுப்பினர் செயலர், அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராக வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளனர்



தீயணைப்பு வசதிகள் இல்லாத கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்த மனுவைப் பொறுத்தமட்டில், தீ தடுப்புப் பாதுகாப்பு இல்லாத கட்டடங்கள் குறித்து ஆய்வுசெய்து, அந்த விதமான வசதிகள் இல்லாத கட்டடங்கள் பாதுகாப்பற்ற கட்டடங்கள் என்பதற்கான எச்சரிக்கை நோட்டீஸை ஒட்டவேண்டும். அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 16-ம் தேதிக்குத் தள்ளி வைக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

சட்டத்தின் சந்துபொந்துகள்... மவுலிவாக்கம் ஒரு சாட்சி!

தமிழகம் முழுவதும் உள்ள விதிமுறை மீறிய கட்டடங்களை வரைமுறைப்படுத்த 1999-ம் ஆண்டு தமிழக அரசு சட்டம் இயற்றியது. ஆனால், அதையே 17 ஆண்டுகளாகத் தமிழக அரசால் நடைமுறைப்படுத்த முடியவில்லையா? அதுவும் நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்த பிறகும் அதைச் செய்ய முடியவில்லையா என்று ஆச்சர்யப்படுவதில் அர்த்தமே இல்லை. ஏனென்றால், நம்முடைய சிஸ்டம் அப்படி. மவுலிவாக்கத்தில் கட்டடம் இடிந்து 61 பேர் இறந்தபிறகும்கூட, பக்கத்தில் இருக்கும் ஒரு கட்டடத்தை இடிக்க 2 ஆண்டுகள் ஆகியிருக்கிறது தமிழக அரசுக்கு. அரசின் மெத்தனம் ஒருபக்கம் என்றால், அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் வாய்தாக்களும் நிலுவையில் இருந்தது மற்றொரு காரணம்.

தமிழகத்தில் உள்ள விதிமீறிய கட்டடங்களை நெறிப்படுத்த, சென்னை உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் இழுத்துக்கொண்டிருந்த நேரத்தில்தான், மவுலிவாக்கம் கட்டட விபத்து ஏற்பட்டது. 2014-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி மவுலிவாக்கத்தில் அருகருகே, கட்டப்பட்டுக்கொண்டிருந்த இரண்டு கட்டடங்களில் ஓன்று பூமிக்குள் புதைந்தது. கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 61 பேர் மரணமடைந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள், வட இந்திய கட்டடத் தொழிலாளிகள். இதையடுத்து, நீதிமன்றம் இந்த விவகாரத்தைக் கொஞ்சம் சீரியஸாகக் கையில் எடுத்தது. மவுலிவாக்கம் கட்டடத்துக்குப் பக்கத்தில் இருக்கும் மற்றொரு கட்டடத்தை இடிக்க காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவிட்டார். கலெக்டரின் உத்தரவை எதிர்த்து, கட்டட உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் போனார் கட்டட உரிமையாளர். அங்கு வழக்கு இழுத்தடிக்கப்பட்டு, ‘இறுதியில் கலெக்டரின் உத்தரவும், அதை உறுதிப்படுத்திய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவும் சரியே என்று சொல்லி, கட்டடத்தை இடிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது. இதற்கே இரண்டரை ஆண்டுகள் இழுத்துவிட்டன. ஒரு கட்டடத்தை இடிக்கவே இத்தனை ஆண்டுகள் என்றால், தமிழகம் முழுவதும் உள்ள விதிமுறைகளை மீறிய கட்டடங்களை வரைமுறைப்படுத்துவது என்றால், அது சாதாரண காரியமா? ஏனென்றால், நம்முடைய சிஸ்டம் அப்படி!


ஜோ.ஸ்டாலின்

MUMBAI Bombay floods