Sunday, October 15, 2017


Nurses strike in two pvt hospitals illegal, declares HC

TNN | Updated: Oct 14, 2017, 23:40 IST

Chennai: Declaring illegal the ongoing strike by nurses of two private hospitals in the city, the Madras high court has said that when seriously injured patients are fighting for their lives in the hospitals, the staff nurses cannot be oblivious to the serious consequences of their strike.

Justice T Raja passed the common interim order while admitting two separate pleas moved by Kanchi Kamakoti Child Trust hospital, Nungambakkam, and SRM Institutes for Medical Science, Vadapalani. "If the members of Global Nurses Association of Tamil Nadu, who are indulging in strike are not prohibited from resorting to strike, life of patients would be put to irreparable loss and injury. Therefore, the nurses are hereby injuncted from continuing their strike till further orders," the judge said.

The court also directed the city police to provide protection to the premises of two hospitas to ensure smooth ingress and egress of patients, doctors, and other staff till further orders.

Aarushi-Hemraj murder case: Intercourse theory takes a knock

Abhinav Garg| TNN | Updated: Oct 14, 2017, 10:51 IST

HIGHLIGHTS

Doctors who floated the sexual intercourse theory did it on questionable premises coloured with subjectivity, the HC found.

Dr Naresh Raj, who conducted the autopsy of Hemraj, concluded that the dead man's swollen penis proved he had sex before being killed.



NEW DELHI: A medical expert who insisted sexual intercourse between Aarushiand Hemraj was the motive for their murder cited his "marital experience" as the reason for his claim.

Dr Naresh Raj, who conducted the autopsy of Hemraj, concluded that the dead man's swollen penis proved he had sex before being killed. When an incredulous Allahabad high court bench examined his testimony to find out why he gave such an opinion, it found he had stated "on the basis of my marital experience I have stated that the reason for the swelling in Hemraj penis was that either he was in the midst of sexual intercourse or was about to indulge in the same."

Dr Sunil Dohre, who had conducted the postmortem of Aarushi, told the trial court that her vaginal cavity contained a white colour discharge suggesting sexual assault. The bench pointed out that Dohre didn't give "even a faint indication" of sexual intercourse either in the postmortem report or in his next three statements to the prosecution. It was in his fourth statement given in court that he made the claim which formed the basis for CBI's allegation attributing a motive to the parents — that Aarushi and Hemraj were caught in the midst of sexual intercourse. Such "material improvements were a matter of subjective findings which have no place in forensic science," observed the court.

The testimony of Dr Mohinder Singh Dahiya, a forensic doctor who investigated the crime scene but believed an investigator's claim to record in his official report that Hemraj's blood was found on the pillow in Aarushi's bedroom, strengthening the sexual intercourse theory, also came under scrutiny.

The court found that CFSL had after forensic tests detected blood and DNA of Aarushi alone on the bedsheet, pillow along with cover and part of mattresses. Dr B K Mahapatra, DNA expert, and Suresh Kumar Singla, serologist, confirmed this in court.

TOP COMMENTBesides being murdered The little girl''s character was assassinated just to prove an assumption made by the prosecution. Shows the harsh and untruthful theories made by the prosecution.Bculas

It was left to gynaecologist Dr Urmila Sharma to rebut the testimonies of the three doctors. Dr Sharma testified that presence of the white colour discharge was normal as this starts in every girl between 13 and 14 years of age when hormonal changes start taking place in the ovary after the beginning of a menstrual cycle.

She explained that the vaginal orifice is open only in those women who have given birth to several children when Dr Dohre had claimed that Aarushi's vaginal cavity was prominently open and the cervix and entire vaginal canal was visible when he conducted an external examination. The swelling of Hemraj's penis was attributed to his body lying on the terrace for more than 24 hours in heat.

Aadhaar linkage: Telcos use pressure tactics on users

Pankaj Doval| TNN | Oct 15, 2017, 01:39 IST


HIGHLIGHTS

Those who use Airtel, Vodafone and Idea Cellular have been fielding frequent SMS alerts and tele-calls

Telecom firms justify the pressure tactics citing the “potential rush if everyone comes for verification 



NEW DELHI: Telecom operators are bombarding their consumers with messages to link their SIM cards with Aadhaar, going so far as to threaten a disconnection in services.

Those who use Airtel, Vodafone and Idea Cellular, among others, have been fielding frequent SMS alerts and tele-calls from mobile operators and their field associates, asking them to link their numbers with Aadhaar. Telecom companies cite a directive from the Department of Telecom (which cited a Supreme Courtorder on security) to re-verify all existing connections with Aadhaar by February 6, 2018.

While the DoT has used an observation by the court as a binding directive, an interim order by the court states that Aadhaar enrolment could not be made mandatory. Also, the manner in which private telecom companies are seeking this Aadhaar linkage is creating much resentment among users. Some operators have told customers that their numbers would be disconnected if the verification is not "immediately completed". This when even the DoT circular gives time until next February. So why these empty threats, ask users.

Is this fair?" asks a Delhi-based user, who was told by Airtel to link with Aadhaar or "please contact the service centre" to continue services.

The linking process is a bigger hassle. On many occasions, the biometric machines at the service centres do not work and customers are asked to "return later".

"My fingerprints are fading and they keep asking me to do it again. I can't keep going to them. It is essential for me to have a phone, since I live alone," says Krishan Lal Dubey, a 90-year-old former army man who feels the order was passed without enough focus on execution.

"This is a big problem for people living in smaller towns and villages, or hilly areas where the service centres are located far. One can't go over and over again," says a customer.

Those with disabilities or other constraints also face problems. Users are being pushed to link their phone numbers with Aadhaar in other ways too. A Gurugram-based resident was trying to book a safari in Ranthambore tiger reserve, using Aadhaar as her profile on the Rajasthan forest department website. She was told that her Aadhaar would have to be linked to her mobile number and email address to proceed, and gave her no other option. The government says it is mindful of these concerns, and held a meeting with mobile operators and the UIDAI (Unique Identification Authority of India, which manages the Aadhaar database), telecom secretary Aruna Sundararajan told TOI.

"We are trying to smooth things for both telcos and customers. We are particularly concerned for older customers," Sundararajan said.

Telecom firms justify the pressure tactics citing the "potential rush if everyone comes for verification towards the February deadline." They have no answer to questions about the pains that customers face.

"As per the SC order, the Department of Telecom (DoT) has issued a directive to all mobile operators to complete Aadhaar based verification of all their subscribers by February. At Airtel, we are working round the clock and requesting our customers to link their Aadhaar with their mobile numbers before the deadline," was Airtel's response.

A Vodafone spokesperson justified the "urgency to scale up", saying that back-end infrastructure needed to simultaneously re-verify all mobile connections could not be created, should all customers wait for the last few days. By the end of September, 50% of its 21-croreplus customers have complied. "We need about 8.5 lakh connections to be re-verified every day over the next 120 days," said the V odafone spokesperson. These firms are spending nearly Rs 1,000 crore to re-verify a total of 110 crore mobile connections, said Rajan Mathews, director-general of industry body COAI. Around 50 crore connections have been linke

31 பேருக்கு வாரிசு வேலை


சென்னை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில், பணியின் போது இறந்த, 31 பேரின் வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, 31 பேருக்கான பணி நியமன ஆணைகளை, சென்னை, தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
அதே போல், நுகர்பொருள் வாணிபக் கழகத்தில், 10 ஆண்டுகள் பணி முடித்த, 92 சுமை பணியாளர்களுக்கு, பச்சை நிற அடையாள அட்டை, ஓராண்டு பணி முடித்த, 952 சுமை பணியாளர்களுக்கு, இளஞ்சிவப்பு அடையாள அட்டைகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் காமராஜ், தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு முதன்மை செயலர், குமார் ஜெயந்த் பங்கேற்றனர்.
டிராபிக் போலீஸாக மாறிய கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ்


தமிழக அளவில், ஆங்காங்கே மாவட்ட வாரியாக, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருவதையொட்டி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு வருவதால் ஆங்காங்கே மற்ற மாவட்டங்களுக்கும், மேலும் ஒரு சில மாவட்டங்களுக்கும், மாவட்டம் விட்டு மாவட்டம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு, தீபாவளி சமயம் என்பதினால், ஆங்காங்கே திருட்டு, டிராபிக் ஆகாமல் போலீஸார் தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், கரூர் மாவட்ட கலெக்டர் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பொருட்டும், மர்ம காய்ச்சலை ஏற்படுத்தும் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பொருட்டு தீவிர பணியை மேற்கொள்ள கரூர் நகராட்சிக்கு உத்திரவிட்டதன் பேரில், கரூர் காமராஜர் மார்க்கெட் பகுதியில் திடீரென்று விசிட் அடித்ததோடு, அங்குள்ள பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். 

இந்நிலையில் சனிக்கிழமையென்றால் கரூர் நகரம் கூட்ட நெரிசல் காணப்படும் நிலையில் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் போலீஸார் யார் துணையும் இல்லாமல் கொசுக்களை ஒழிக்கும் விதம், நிலவேம்பு கசாயம் கொடுப்பதை ஆய்வு மேற்கொண்டு சுமார் 3 மணி நேரம் அப்பகுதி மக்களுடன் மக்களாக இருந்த நிலையில், ஏற்கனவே காமராஜர் மார்க்கெட் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், இவருடைய வருகையால் மீண்டும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க கூடாது என்பதற்காக, அதே பகுதியில் சில நிமிடங்கள் போக்குவரத்து நெரிசலை சரி செய்தார். 

இந்த காட்சி பொதுமக்களிடையேயும், அதிகாரிகளிடையேயும், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, மாவட்ட கலெக்டர் வருகை என்றால் மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்களிடையே இந்த கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ், எனக்காக மக்களை யாரும் காக்க வைக்க வேண்டாம் என்று கர்ராராக உத்திரவிட்டதோடு, அவரே ஏற்கனவே, அதாவது எப்போதும் டிராபிக் ஆகி விடும் இடத்தை சரி செய்த காட்சி மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது.

கலாமுக்கு நம் சலாம்! இன்று பிறந்த நாள்

கலாமுக்கு நம் சலாம்! இன்று பிறந்த நாள்
ஏழை குடும்பத்தில் பிறந்து, தினசரி நாளிதழ்களை அதிகாலையில் வீடுகளுக்கு வினியோகிக்கும் சிறுவனாய் வளர்ந்து, கல்வி கற்க பல மைல் துாரம் நடந்து, சிவசுப்பிரமணிய ஆசிரியரின் பாடசாலையில், பைலட்டாக வேண்டும் என்ற கனவினை வளர்த்து, ராக்கெட் இன்ஜினியராக பயணித்து, தேசத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பரிணமித்து, உழைப்பின் உன்னதத்தால், நம் தேசத்தில் பதினோறாவது குடியரசுத் தலைவராக, குன்றின் மேலிட்ட விளக்காய் உயர்ந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம் 86-வது பிறந்த நாள் இன்று.

இந்தியாவின் உயர்ந்த பதவியை அடைந்த பின்பும், தனது சுகங்களைத் துறந்து, கடைக் கோடியில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒருவகையில் உதவ பாடுபட்ட மக்கள் ஜனாதிபதி.ராஷ்டிரபதி பவனை ஆராய்ச்சி சாலையாக மாற்றிய அற்புத விஞ்ஞானி.
“இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்துான்றும் துாண்”

என்ற திருவள்ளுவரின் வரிகளுக்கேற்ப இன்பத்தை விரும்பாமல், செயல்படுதலையே விரும்பியவர். அதன்மூலம் நம் இந்திய தேசத்தின் துன்பங்கள் போக்கி நம்மைத் தாங்கி நின்ற துாணானார். ஆதலால்தான்,19-ம் நுாற்றாண்டின் சிறந்த மனிதர் சுவாமி விவேகானந்தர், 20-ம் நுாற்றாண்டின் சிறந்த மனிதர் மகாத்மா காந்தி, 21-ம் நுாற்றாண்டின் சிறந்த மனிதர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்று ஆந்திரப்பிரதேச சட்டசபை புகழ்மாலை சூட்டியது.

மாணவர்களுக்கு கவிதை

இளைஞர்களிடம் குறிப்பாக உயர்நிலைப்பள்ளி மாணவர்களிடம் பேசுவது மிகவும் பிடிக்குமென்று சொல்லும் மாணவர்களின் எழுச்சி நாயகர், அவர்களுக்கு ஒரு கவிதையைத் தந்திருக்கிறார். அக்கவிதையை நாமெல்லாம் இந்நாளில் உரத்த குரலில் வாசிக்கின்றபோது வாழ்வில் உயரவேண்டும் என்ற லட்சியம் உயிர்த்தெழும். அப்துல் கலாமின் ஆத்மாவும் மகிழ்ச்சியுறும்.

“நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்,
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்,
நான் பிறந்தேன் கனவுடன், 
வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்,
நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த,
நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்,
நான் பிறந்தேன் என்னால் முடியும் 
என்ற உள்ள உறுதியுடன்,
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க,
நான் பூமியில் ஒரு போதும் தவழமாட்டேன்,
தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்,
பறப்பேன், பறப்பேன், 
வாழ்வில் பறந்துகொண்டே இருப்பேன்”
வாழ்வின் வெற்றிச் சூத்திரங்களைக் கடைபிடித்து உயர்ந்த தமிழ்ஞானி, ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் வெற்றிபெற நான்கு வெற்றி சூத்திரத்தை தந்துள்ளார். முதலாவது மிகப்பெரிய லட்சியம் கொள், அந்த லட்சியத்தை அடைய அறிவாற்றலைத் 
தொடர்ந்து பெருக்கு, கடினமாக உழை, நான்காவது விடா முயற்சி.

வாட்சன் எழுதிய “விளக்குகள் பல தந்த ஒளி” என்னும் புத்தகம் அவரது தோழன். அவரது பார்வையில் புத்தகம் என்பது நமது பழைய காலத்தை நினைத்துப் பார்த்து, நிகழ்காலத்தின் அனுபவம் கொண்டு எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு சக்தி. ஒரு அறிவார்ந்த சமூகமாக நம் நாடு மாற நாம் வரலாற்றையும், பூகோளத்தையும், கலாசாரத்தையும், கலையையும், அறிவியலையும், தொழில் நுட்பத்தையும் நல்ல புத்தங்களின் மூலம் கற்றுத் தேரவேண்டும் என அழுத்தம் திருத்தமாக சொல்கிறார், நம் தேசத்தின் அறிவியல் தந்தை.

காந்தியின் உதவியாளராக இருந்த கல்யாணராமன் அவர்களிடம் காந்திக்கு பின்பு பண்புகள் நிறைந்த ஒரு மனிதர் இந்தியாவில் தோன்றவில்லையே என்று கேட்ட போது, ஏன் இல்லை? அப்துல் கலாம் இருக்கிறாரே என்று இந்தியாவின் இரண்டாவது மகாத்மாவை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

“கணத்திற்கு கணம், நீண்ட நாள் முழுவதும், நேர்மையாய், துணிவாய், உண்மையாய் உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்” என்று உழைப்பை உயர்த்திய நவீன சாக்ரடீஸ்.
2007-ம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் நாள் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தமிழ் சங்க இலக்கியமான புறநானுாற்றில் கனியன் பூங்குன்றனாரின் வைரவரிகளை மேற்கோள் காட்டி நான் இந்த உலகத்தின் குடிமகன். உலகில் பிறந்த அனைவரும் எனது உறவினர்கள் என்று விரித்துப் பொருளுரைத்து தமிழகத்தை வியந்து பார்க்க வைத்த தமிழ்த் துாதர்.

இயற்கையை நேசியுங்கள். அதன் ஆசிர்வாதங்களின் மீது அக்கறை காட்டுங்கள். பிறகு எங்கு பார்த்தாலும் தெய்வீகம் மிளிர்வதை நீங்கள் காண முடியும் என்று தனது ஜனாதிபதி இருக்கையின் கடைசி நாளான 2007 ஜூலை 24ல் எழுதிய அவர், இயற்கையின் ஓர் அங்கம்.
மண்ணிலே அணுகுண்டு சோதனை செய்து சாதனை, வானிலே ஏவுகணையைச் செலுத்தி சாதனை, விண்ணிலே செயற்கை கோளைச் செலுத்தி சாதனை என புவியின் மூவுலகிலும் சாதித்த ஒற்றைச் சாதனையாளர்.

போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோலையும், இதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவியையும், கண்டுபிடித்து (கலாம் ஸ்டென்ட்) அவர்கள் ஒவ்வொருவரின் கால்களிலும், இதயங்களிலும், துாணாகவும், துடிப்பாகவும் நின்றவர்.
“கனவு காணுங்கள்” என்னும் ஒற்றை வரியில் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒன்றிணைத்த அப்துல் கலாமுக்கு நம் சலாம்.ஆர்.திருநாவுக்கரசு, ஐ.பி.எஸ்.,காவல் துணை ஆணையாளர் 
நுண்ணறிவுப் பிரிவு, சென்னைthirunavukkarasuips@gmail.com
Advertisement
தரமற்ற இனிப்பு, காரம் விற்றால் 'வாட்ஸ் ஆப்'பில் புகார்
தெரிவிக்கலாம்

 தரமற்ற இனிப்பு, காரம் விற்றால்  'வாட்ஸ் ஆப்'பில் புகார் தெரிவிக்கலாம்
சென்னை, :'தீபாவளியை முன்னிட்டு, தரமற்ற இனிப்பு மற்றும் காரம் பொருட்களை விற்றால், 'வாட்ஸ் ஆப்'பில் புகார் தெரிவிக்கலாம்' என, உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு, இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பு மற்றும் விற்பனையாளர்களுடன், உணவு பாதுகாப்பு துறை சார்பில், சென்னை, புரசைவாக்கத்தில், நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின், இனிப்பு மற்றும் காரம் விற்பனை செய்யும் கடைகள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த, 'நோட்டீஸ்' கடைகளுக்கு வழங்கப்பட்டது.அதே போல், இனிப்பு பொருட்கள் வாங்க, நுகர்வோர் கவனிக்க வேண்டியவை குறித்தும், நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது:
● அதிகப்படியான வண்ண நிறமிகள் சேர்த்த, இனிப்பு வகைகளையும், ஈக்கள் மொய்க்கும் துர்நாற்றம் வீசும், இனிப்பு மற்றும் கார வகைகளையும் தவிர்க்க வேண்டும்
● 'பேக்கிங்' செய்யப்பட்ட பால் வகை இனிப்புகள், மற்ற இனிப்புகளுடன் சேர்ந்திருந்தால், வாங்குவதை தவிர்க்க வேண்டும். பாலால் செய்யப்பட்ட இனிப்புகள், சேமிக்கும் நிலை, காலாவதியாகும் தேதி குறிப்பிடப்பட்டு உள்ளதா என்பதை, கவனிக்க வேண்டும்
● உணவு அங்காடிகளில், முறையான ரசீது பெற்றிருத்தல் வேண்டும். அங்கு பணியாளர்கள் சுத்தமாக இருக்கின்றனரா; சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய், நெய் விபரங்கள், தகவல் பலகையில் குறிப்பிடப்பட்டு உள்ளதா; அங்கு உள்ள பிளாஸ்டிக் கொள்கலன்கள் தரமாக உள்ளதா என்பதை, கவனிக்க வேண்டும்
● 'பேக்கிங்'கில் சேர்ம பொருட்களின் விபரம், உணவு பாதுகாப்பு துறையின் உரிமம், தயாரிப்பாளரின் முகவரி போன்றவை உள்ளனவா என, கவனித்து வாங்க வேண்டும். மேலும், இது குறித்த புகார்களை, உணவு பாதுகாப்பு துறையின், 94440 42322 என்ற, 'வாட்ஸ் ஆப்' எண்ணில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை - நெல்லைக்கு முன்பதிவு இல்லா ரயில்






சென்னை: தீபாவளியை முன்னிட்டு, சென்னை - திருநெல்வேலி இடையே, முழுவதும் முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சென்னை, எழும்பூரில் இருந்து, இந்த ரயில், 17ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, திருநெல்வேலிக்கு புறப்படும்.

திருநெல்வேலியில் இருந்து, 20ம் தேதி இரவு, 7:20க்கு, எழும்பூருக்கு புறப்படும். இந்த ரயில்கள், முற்றிலும் முன் பதிவு செய்யப்படாத, இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன.
சர்க்கரை அளவை குறைக்கும் வெண்டைக்காய்

2017-10-13@ 14:41:54




நமக்கு அருகில் எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடை சரக்குகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிமையான மருத்துவத்தை பார்த்து வருகிறோம்.அந்தவகையில், சிறுநீர்தாரை எரிச்சலை போக்க கூடியதும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மை கொண்டதும், மூட்டுவலியை குணப்படுத்த கூடியதுமான வெண்டைக்காயின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.

பல்வேறு நன்மைகளை உடையது வெண்டைக்காய். இந்த செடியின் இலைகள், வேர், காய்கள் ஆகியவை மருந்தாகி பயன்தருகிறது. மலச்சிக்கலை போக்குகிறது. ஆண்மலட்டு தன்மையை சரிசெய்கிறது. எலும்புகளுக்கு பலம் தருகிறது. புற்றுநோய்களுக்கு காரணமாக விளங்கும் நச்சுக்களை அளிக்கிறது. வெண்டைக்காயை பயன்படுத்தி சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் தேனீர் தயாரிக்கலாம். செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர் எடுக்கவும். இதில், வெண்டை செடியின் வேரை நசுக்கி போட்டு கொதிக்க வைக்கவும். இந்த தேனீர் கொளகொளப்பு தன்மையுடன் இருக்கும். இதை வடிகட்டி குடித்துவர வெள்ளைப்படுதல், சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். கொப்புளங்களை குணப்படுத்துகிறது. தோல்நோய்களை சரிசெய்கிறது. பால்வினை நோய்க்கு மருந்தாகிறது.

உணவாக மட்டுமின்றி மருந்தாக பயன்படும் வெண்டை காய்களை சாப்பிடும்போது உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது. வெண்டைக்காயை பயன்படுத்தி சர்க்கரையின் அளவை குறைக்கும் மற்றும் மூட்டுவலியை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: வெண்டைக்காய், மிளகு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விடவும். அதிக முற்றாத 2 வெண்டை பிஞ்சுகள் எடுத்து நீளவாக்கில் வெட்டவும். இதை தண்ணீரில் ஊற வைக்கவும். இதனுடன் மிளகுப்பொடி சேர்த்து இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் இந்த நீரை குடித்துவர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். மூட்டுவலி குணமாகும். எலும்புகள் பலவீனமடைவதால் ஏற்படும் வலியை போக்கும். மூட்டுகளில் நீர் தேங்கி ஏற்படும் பிரச்னை சரியாகும். 
 
வெண்டையின் துளிர் இலைகளை பயன்படுத்தி கழிச்சல், சீத கழிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: வெண்டை இலைகள், சர்க்கரை.செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விடவும். இதனுடன் வெண்டை இலைகளை துண்டுகளாக்கி போடவும். சிறிது சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காலை, மாலை வேளைகளில் குடித்துவர கழிச்சல், சீத கழிச்சல் சரியாகும்.வெண்டை இலைகள் மருத்துவ குணங்கள் கொண்டவை. நுண்கிருமிகளை போக்கும். நோய்கிருமிகளை நீக்கும். வயிற்று போக்கை நிறுத்தும். வெண்டை இலை, இளம் காய்களை அரைத்து மேலே பூசும்போது அரிப்பு தரும் தோல்நோய்கள் சரியாகும். வெண்டைக்காய் எலும்புக்கு பலம் தரக்கூடியது. அற்புதமான உணவாக விளங்கும் இதை அடிக்கடி உணவில் சேர்ப்பது பலன் தரும். கம்பளி பூச்சி கடிப்பதால் ஏற்படும் அரிப்பை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். கம்பளி பூச்சியின் மயிர்கால்கள் படுவதன் மூலம் தோலில் அரிப்பு ஏற்படும். இதற்கு முருங்கை இலை மருந்தாகிறது. கம்பளி பூச்சியால் ஏற்படும் அரிப்பு உள்ள இடத்தில் முருங்கை இலைகளை அரைத்து மேலே பூசுவதால் வெகு சீக்கரத்தில் அரிப்பு அகன்று போகும்.
டெங்குவுக்கு சிகிச்சையளித்த 2 போலி டாக்டர்கள் கைது
2017-10-15@ 01:22:12




சென்னை: பெரிய காஞ்சிபுரம் குள்ளப்பன் தெருவை சேர்ந்தவர் திருமலை (35). பிஎஸ்சி கெமிஸ்ட்ரி பட்டதாரி. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக அதே பகுதியில் கிளினிக் வைத்து, இப்பகுதி மக்களுக்கு காய்ச்சல், சளி உள்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். தற்போது, மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி சுகாதார துறை அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தி, டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதே நேரத்தில், காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் போலி மருத்துவர்களையும் கண்டுபிடித்து கைது செய்கின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மண்டல அதிகாரி கல்பனா, நகராட்சி நகர் நல அலுவலர் முத்து ஆகியோர் தலைமையில் சுகாதார அதிகாரிகள் நேற்று மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, திருமலை முறையான மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்தது தெரிந்தது. மேலும், டெங்கு காய்ச்சல் உள்பட பல நோய்களுக்கும் சிகிச்சை மற்றும் மருந்து, ஊசி போடுவது தெரியவந்தது. புகாரின்படி சிவ காஞ்சி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரிக்கின்றனர்.மற்றொரு சம்பவம்: திருவள்ளூர் மாவட்டம் சோளிங்கர், பாண்டியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராபர்ட் (41). இவர், திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகையில் ரத்த பரிசோதனை மையம் நடத்தி வந்தார். இங்கு, அப்பகுதி மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், ராபர்ட் 10 வகுப்பு படித்துவிட்டு டாக்டர் தொழில் செய்து வருவதாகவும், தற்போது டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதாகவும் மாவட்ட சுகாதராத்துறை இணை இயக்குனர் தயாளனுக்கு தகவல் கிடைத்தது. அவர், திருத்தணி போலீசார் துணையுடன் மேற்கண்ட பரிசோதனை மையத்தில் விசாரணை நடத்தினர். அப்போது, ராபட் போலி டாக்டர் என்பது உறுதியானது. அவரை கைது செய்த போலீசார், திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களுக்கு மாதம் ரூ.20,000 வழங்க வேண்டும் : அன்புமணி வலியுறுத்தல்


2017-10-15@ 00:53:00




சென்னை: பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ெவளியிட்ட அறிக்கை: டெங்குக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், அந்த நோயைக் கட்டுப்படுத்துவதில் தனியார் மருத்துவமனையின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். ஆனால், செவிலியர்களின் போராட்டத்தால் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், குறிப்பாக குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் என்பது மிகமிகக் குறைவு ஆகும். தனியார் மருத்துவமனை செவிலியர்களின் பரிதாப நிலை குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர்களின் வாழ்க்கை நிலை குறித்து ஆய்வு செய்யவும், அவர்களுக்கான ஊதிய விகிதங்கள் குறித்து அரசுக்கு பரிந்துரைக்கவும் வல்லுனர் குழு அமைக்கும்படி மத்திய அரசுக்கு ஆணையிட்டது.

அதன்படி ஆய்வு செய்த குழு அளித்த பரிந்துரைகளின்படி தனியார் மருத்துவமனை செவிலியர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்தது. அதை உடனடியாக செயல்படுத்தும்படி மாநில தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதிய மத்திய அரசு, இதுதொடர்பாக சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றும்படியும் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், கேரளம் தவிர்த்து இந்தியாவின் எந்த மாநிலத்திலும் செவிலியருக்கு புதிய ஊதிய விகிதம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

செவிலியர்களுக்கு தமிழக அரசின் ஆதரவு இல்லை என்பதால் அவர்களை மிரட்டிப் பணிய வைக்கும் முயற்சிகளில் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன. சில தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்கள் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு அறிவுரைப்படி செவிலியர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக 20,000 ரூபாயும், 200 படுக்கைகளுக்கு மேல் உள்ள மருத்துவமனைகளின் செவிலியர்களுக்கு அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியமும் வழங்கப்பட வேண்டும். இதற்கான சட்டத்தை உடனடியாக நிறைவேற்றுவதாக உறுதியளித்து, செவிலியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும், நோயாளிகளுக்கு தடையின்றி சிகிச்சை கிடைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஸ்டேட் வங்கி ஏடிஎம் கார்டில் ரூ.5 லட்சம் வரை வாங்கலாம்

2017-10-14@ 00:02:14




பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் கட்டணம் ஏதுமின்றி ஒரு நாளில் ரூ.2 லட்சம் வரை பணம் எடுக்கலாம். ரூ.5 லட்சம் வரை ஏடிஎம் கார்டு மூலம் 5 லட்சம் வரை ஆன்லைனில் பொருட்கள் வாங்கலாம். பாரத ஸ்டேட் வங்கி கிளாசிக் டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.40,000 வரை பணம் எடுக்கவும், ஆன்லைன் பரிவர்த்தனைக்கு நாளொன்றுக்கு ரூ.50,000 வரையிலும் பயன்படுத்தலாம். இந்த கார்டு வழங்க ரூ.300, ஆண்டு கட்டணமாக ரூ.100 ஜிஎஸ்டியுடன் சேர்த்து வசூலிக்கப்படுகிறது.

இதுபோல் பிரைடு மாஸ்டர் டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் நாளொன்றுக்கு ரூ.1 லட்சம் வரையிலும், ஆன்லைன் பரிவர்த்தனைக்கு ₹2 லட்சம் வரையிலும் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் பயன்படுத்தலாம். இந்த கார்டு வழங்க ரூ.300, ஆண்டு பராமரிப்பாக ரூ.250 ஜிஎஸ்டியுடன் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. பிளாட்டினம் டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வரையிலும், ஆன்லைன் ்பரிவர்த்தனையாக ₹5 லட்சம் வரையிலும் பயன்படுத்தலாம் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரத்தில், ரிசர்வ் வங்கி விதிகளின்படி ஏடிஎம்களில் மாதத்துக்கு 5 முறை இலவச ஏடிஎம் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.
குழந்தையின் இருமலுக்கு வாங்கிய மருந்து பட்டு தங்க நகை வெளுத்தது : புகார் செய்த பெற்றோருக்கு மருந்து கம்பெனி மிரட்டல்
2017-10-15@ 00:28:20




திருவனந்தபுரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள எல்லையை ஒட்டியுள்ள காட்டாக்கடை அருகே பிலாவிளை பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியரின் இரண்டரை வயது குழந்தைக்கு கடுமையான இருமல் ஏற்பட்டதால் அருகில் ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர் இருமலுக்கான டானிக் ஒன்றை எழுதி கொடுத்தார்.

பெற்றோர் அதை வாங்கி குழந்தைக்கு கொடுத்தனர். இரண்டாவது முறை மீண்டும் மருந்தை கொடுக்க முயன்றபோது குழந்தை தட்டி விட்டுள்ளது. இந்த மருந்து தெறித்து குழந்தை கழுத்தில் கிடந்த தங்க செயினிலும், தாயின் தங்க செயினிலும் பட்டுள்ளது. சிறிது நேரத்தில் செயினில் மருந்து பட்ட இடம் அப்படியே வெளுக்க தொடங்கியது. இதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவமனை உதவியுடன் மருந்து நிறுவன பிரதிநிதியிடம் பேசியபோது, மாதம் 10,000 மேல் விற்கும் மருந்து இது. இதுபற்றி சமூக வலைதளத்தில் ஏன் பதிவு போட்டீர்கள். நாங்கள் யார் என்று உங்களுக்கு காட்டுகிறோம்; எச்சரிக்கை என்று குழந்தையின் பெற்றோரை மிரட்டியுள்ளார்.

இறக்கும்போதும் கலைஞனாகவே இறக்க விரும்புகிறேன், அரசியல்வாதியாக அல்ல: பாரதிராஜா
2017-10-14@ 18:58:50

சென்னை: இறக்கும்போதும் கலைஞனாகவே இறக்க விரும்புகிறேன், அரசியல்வாதியாக அல்ல என்று இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார். மேலும் ரஜினி, கமலை அரசியலுக்கு வரவேண்டாம் எனக்கூறக் காரணம் அவர்களை பிள்ளையாக நினைப்பதால்தான் என்றும் சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சங்க விழாவில் இயக்குனர் பாரதிராஜா பேசினார்.

பார் கவுன்சிலில் இரு முறை பதிவு வழக்கறிஞர் தொழில் புரிய தடை

சென்னை, இரண்டு முறை, பார் கவுன்சிலில் பதிவு செய்தவர், வழக்கறிஞராக தொழில் புரிய, தமிழ்நாடு பார் கவுன்சில் தடை விதித்துள்ளது. வழக்கறிஞர் பதிவை ஏன் ரத்து செய்யக் கூடாது என, விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்தவர்களில், முகவரி இடம் பெறாத, ௪௨ வழக்கறிஞர்களுக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
பார் கவுன்சில் இணைய தளத்திலும், அந்த நோட்டீஸ் வெளியிடப்பட்டது; வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கும் அனுப்பப்பட்டது.
இதையடுத்து, கும்ப கோணத்தைச் சேர்ந்த வழக்கறிஞர், திவான் மைதீன் என்பவர், மாணிக்கம் என்பவரது பதிவு எண் பற்றி, பார் கவுன்சிலுக்கு கடிதம் அனுப்பினார். அதைதொடர்ந்து, மாணிக்கம் தொடர்பான ஆவணங்களை, பார் கவுன்சில் சரிபார்த்தது.
பின், வழக்கறிஞர், டி.ஜி.மாணிக்கத்துக்கு, பார் கவுன்சில் அனுப்பிய உத்தரவு:
கல்வி தகுதி மற்றும் சரியான முகவரி இல்லாமல், ௧௯௯௮ல், பார் கவுன்சிலில், நீங்கள் பதிவு செய்துள்ளீர்கள்.
வழக்கறிஞர், திவான் மைதீன் என்பவர் அளித்த பதிவு எண்ணை பார்க்கும் போது, ௨௦௧௪ல், தேவையான ஆவணங்களை அளித்து, பார் கவுன்சிலில், மீண்டும் பதிவு செய்திருப்பது தெரிய வந்தது.
ஏற்கனவே, ௧௯௯௮ல் பதிவு செய்ததை மறைத்துள்ளீர்கள். அதனால், ௧௯௯௮ல் இருந்து, ௨௦௧௪ வரை, வழக்கறிஞராக நீங்கள் தொழில் செய்தது, சட்ட விரோதமானது. 
இரண்டு முறை, பார் கவுன்சிலில் பதிவு செய்து மோசடி செய்துள்ளீர்கள். வழக்கறிஞராக, தொழில் புரிய, உங்களுக்கு தகுதியில்லை. உங்கள் மீது, தகுந்த கிரிமினல் நடவடிக்கை எடுக்க, பார் கவுன்சிலுக்கு உரிமை உள்ளது.
வழக்கறிஞராக பதிவு செய்ததை, ஏன் ரத்து செய்யக் கூடாது என்பதற்கு, நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும். விளக்கம் அளிக்க தவறினால், பார் கவுன்சில் அமைத்துள்ள சிறப்பு குழு, இந்த பிரச்னையை சட்டப்படி பைசல் செய்யும். அது வரை, வழக்கறிஞராக தொழில் புரிய, உங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் வாங்கும் கடனுக்கு வட்டி நிர்ணயம்



அரசு ஊழியர்கள், வீடு கட்ட அரசிடம் வாங்கும் கடனுக்கு, நடப்பாண்டு வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கும் கடன்களுக்கு, நடப்பாண்டு வட்டி நிர்ணயம் செய்து, உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன் விபரம்:
கடன் விபரம் வட்டி 
சதவீதம்
வீடு கட்ட, 50 ஆயிரம் ரூபாய் வரை 5
50 ஆயிரம் முதல், 1.50 லட்சம் ரூபாய் வரை 6.50
1.50 லட்சம் முதல், 5 லட்சம் ரூபாய் வரை 8.50
ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் 9.50
கார் வாங்க பெறும் கடன் 11
டூவீலர் கடன் 8.50
சைக்கிள் கடன் 5
கம்ப்யூட்டர் கடன் 9.50
இதர கடன் 9.50
அபராத வட்டி 2.50
அரசு நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சிகளில், வளர்ச்சி பணிகளுக்கு வழங்கும் கடன் 11
முதலீட்டு கடன் 13
கூட்டுறவு வங்கி மற்றும் நில வள வங்கி 9.50 - நமது நிருபர் -


போராட்ட நாளை ஈடுசெய்ய தீபாவளியன்றும் பணியாற்ற வேண்டும்


திண்டுக்கல், ஜாக்டோ -ஜியோ நடத்திய ஏழு போராட்ட நாட்களை ஈடு செய்ய, தீபாவளி பண்டிகை நாளை வேலை நாட்களாக அறிவித்தது ஆசிரியர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர், அரசு ஊழியர் கூட்டமைப்பானஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்தவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.7ம் தேதி முதல் செப்.15ம் தேதி வரை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவினை தொடர்ந்து போராட்டம் முடிவிற்கு வந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 'நோ ஒர்க், நோ பே' என அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் வேலைநிறுத்த நாட்களை ஈடுசெய்யும் வகையில், சனி மற்றும் விடுமுறை நாட்களில் 7 நாட்கள் பணி செய்ய அரசு அறிவுறுத்தியது. இதை
யடுத்து அக்.14, 18, 21, 28, நவ.4, 11 மற்றும் நவ.18 வேலை நாட்களாக நடைமுறைப்படுத்தப்படும் என, அக்.9ம் தேதி அரசு இணைச்செயலாளர் வேதரத்தினம் பிறப்பித்துள்ள ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: 
அக்.18ம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. நாடு முழுவதும் கொண்டாட்டம் நடைபெறும் நேரத்தில், பள்ளியை நடத்த 
உத்தரவிடப்பட்டுள்ளது. 
அன்றைய தினம் 
ஆசிரியர்கள் பணிக்குச் சென்றாலும், மாணவர்கள் பள்ளிக்கு வரமாட்டார்கள்.
இதைக் கூட கவனிக்காமல் வேலைநாளாக 
அறிவித்துள்ளது ஆச்சரியம் அளிக்கிறது என்றனர்.

சம்பள குழு அறிக்கையால் அரசு ஊழியர், ஆசிரியர்கள் கொதிப்பு உயர்நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு

ஏழாவது சம்பளக்குழு தாக்கல் செய்த அறிக்கையில், அரியர்ஸ் இல்லாதது, சம்பள முரண்பாடுகளை களையாதது, புதிய ஓய்வூதிய திட்ட ரத்து போன்ற அம்சங்கள் இல்லை என குற்றம் சாட்டியுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உயர்நீதிமன்றத்தின் 
கவனத்திற்கு கொண்டு செல்லவும் முடிவு செய்துள்ளனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது குறித்து, செப்டம்பரில் காலவரையற்ற போராட்டத்தை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 

கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ துவக்கியது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும்படி, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினருக்கு அறிவுறுத்தியதுடன், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து, அரசுக்கு காலக்கெடுவும் நிர்ணயித்தது. இதுகுறித்த வழக்கு அக்., 23ல் வரவுள்ளது.

இந்நிலையில் ஏழாவது சம்பளக்குழுவின் தலைவர் சண்முகம், அறிக்கையை முதல்வர் பழனிசாமியிடம் தாக்கல் செய்தார். இதை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஒரு தரப்பினர் வரவேற்றுள்ளனர். ஆனால் இந்த அறிக்கை ஏமாற்றமளிப்பதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து, சென்னையில் கூட்டமைப்பினர் கூடி விவாதித்தனர். 

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவருமான சுப்பிரமணியன், நமது நிருபரிடம் கூறியதாவது:

2014ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் , நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் வாசித்த போது, ''2016-17 முதல் ஏழாவது சம்பள குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும். முந்தைய சம்பளக்குழுக்கள் போல அன்றி, இக்குழு பரிந்துரைகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும். பிந்தைய ஆண்டுகளில் தவணைகளில் நிலுவை தொகை வழங்க வேண்டிய சூழ்நிலை ஏழாது,'' என்றார். 1.1.2016 முதல் கிடைக்க வேண்டிய 21 மாத நிலுவை தொகையை, கருத்தியலாக மட்டும் கணக்கில் எடுத்து கொண்டு, மிகப்பெரிய சம்பள இழப்பை முதல்வர் பழனிசாமி அரசு ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால் 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். ஆறாவது சம்பள குழு முரண்பாடுகளை களைவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. 

சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர் உட்பட சிறப்பு காலமுறை சம்பளம் பெறும் மூன்று லட்சம் பேருக்கு வரையறுக்கப்பட்ட சம்பளம் வழங்குவது குறித்தும், எந்த அறிவிப்பும் இல்லை. 
புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்தும் எந்த அறிவிப்பும்இல்லை. அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச சம்பள உயர்வு 
14 சதவீதமும், அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக 20 சதவீத உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. 
இதுபோன்ற பிரச்னைகளை சுட்டிகாட்டி, சம்பள மாற்றத்தில் அரசு செய்துள்ள குறைபாடுகள் குறித்து உயர்நீதிமன்றத்தில் அக்., 23 ம் தேதி விளக்கி, உரிய உத்தரவு பெற நடவடிக்கை எடுக்கப்படும். அக்., 20ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு விளக்க கூட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார். 

தவறான புரிதல் ஏற்படுத்தும் அரசு

ஏழாவது சம்பளக் குழு பரிந்துரைகளை தாக்கல் செய்த அன்றே தமிழக அரசு, டாஸ்மாக் மதுக்களின் விலைகளையும் உயர்த்தி உத்தரவிட்டிருக்கிறது. இதன் மூலம் அரசு ஊழியர், ஆசிரியர் சம்பள உயர்வு சரிகட்ட மது விலையை உயர்த்தியிருப்பது போன்ற தவறான எண்ணத்தையும், புரிதலையும் மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது எனவும் சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.

-நமது சிறப்பு நிருபர்-
மாநில செய்திகள்

செவிலியர்கள் போராட்டத்துக்கு தடை; ஐகோர்ட்டு உத்தரவு

தனியார் ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் செவிலியர்களின் போராட்டத்துக்கு தடை விதித்தும், இந்த போராட்டத்தை சட்டவிரோதமானது என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அக்டோபர் 15, 2017, 04:45 AM

சென்னை,

மத்திய அரசு அமைத்த குழு, செவிலியர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் சம்பளம் ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.

இந்த சம்பளத்தை வழங்கக்கோரி நுங்கம்பாக்கத்தில் உள்ள காஞ்சி காமகோடி குழந்தைகள் நல ஆஸ்பத்திரி, வடபழனியில் உள்ள எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரி ஆகிய ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் செவிலியர்கள் கடந்த 11–ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த போராட்டத்தை சட்டவிரோதமாக அறிவிக்க வேண்டும். போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆஸ்பத்திரிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று இந்த இரு ஆஸ்பத்திரி நிர்வாகமும், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜா பிறப்பித்த உத்தரவில், இந்த இரு ஆஸ்பத்திரிகளுமே குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரிகள் ஆகும். அப்பாவி நோயாளிகள், குழந்தைகள் உயிருக்கு போராடும் நிலையில், செவிலியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினால், அது கண்டிப்பாக நோயாளிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

அதனால், இந்த போராட்டத்துக்கு தடை விதிக்கிறேன். இந்த போராட்டத்தை சட்டவிரோதம் என்று அறிவிக்கிறேன். இந்த இரு ஆஸ்பத்திரிக்கும் தகுந்த பாதுகாப்பை போலீசார் வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
தேசிய செய்திகள்

20 பல்கலைக்கழகங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு - பிரதமர் மோடி தகவல்



உலக அளவிலான கல்வித் தரத்தை உறுதிப்படுத்த இந்தியாவின் 20 பல்கலைக்கழகங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.

அக்டோபர் 15, 2017, 05:15 AM

பாட்னா,

பாட்னா பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசும்போது கூறியதாவது:-

கல்வி நிறுவனங்கள் மாணவர்களை மனப்பாடம் செய்யவைத்து அறிவை திணிப்பது போன்ற பழமையான கல்வி பயிற்றுவிக்கும் முறைகளை கைவிடவேண்டும். தற்காலத்திற்கு ஏற்ப மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கற்றல் மற்றும் புதுமைகளை உருவாக்குதலுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும். அப்போதுதான் மாணவர்களின் அறிவாற்றல் வெளிப்படும்.

ஐ.ஐ.எம். போன்ற கல்வி நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், ஒழுங்குமுறைகள் ஆகியவற்றில் இருந்து விடுவிக்க எனது அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக உயர் கல்வியில் நமது பல்கலைக்கழகங்கள் உலக நாடுகளுடன் போட்டியிட்டு தரவரிசையில் முதல் 500 இடங்களுக்கு இருப்பது உறுதி செய்யப்படும்.

இதற்காக மத்திய அரசு 20 அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடியை 5 ஆண்டுகளுக்கு ஒதுக்கீடு செய்யும். இந்த தொகையை அந்த 20 பல்கலைக்கழகங்களும் பயன்படுத்தி உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகங்கள் என்பதை உறுதி செய்யும் விதத்தில் இந்திய மாணவர்களை உருவாக்கிடவேண்டும்.

இந்த பல்கலைக்கழகங்கள் பிரதமர், மாநில முதல்-மந்திரிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோரால் தேர்வு செய்யப்படமாட்டார்கள். அவற்றின் திறமையான செயல்பாடுகள் மூன்றாவது முகமையின் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு நிதி உதவி அளிக்கப்படும். பாட்னா பல்கலைக்கழகமும் இந்த அரிய வாய்ப்பினை பெறுவதற்கு முயற்சிக்கவேண்டும்.


ஒரு காலத்தில் இந்தியா என்றால் பாம்பாட்டிகள், பேய் ஓட்டுபவர்கள், மூடநம்பிக்கை கொண்டவர்களின் நாடு என்று உலக நாடுகளால் கூறப்பட்டது. இப்போதோ இந்திய தொழில்நுட்ப வல்லுனர்களின் திறமையால் இந்தியாவை பற்றிய உலக நாடுகளின் பார்வை மாறிவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் முதல்-மந்திரி நிதிஷ்குமாரும் பங்கேற்றார். பா.ஜனதாவுடன் கூட்டணி ஆட்சி அமைத்து முதல்வரான பிறகு பீகாரில் மோடியும், நிதிஷ்குமாரும் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி இதுதான். மத்திய மந்திரிகள் ரவிசங்கர் பிரசாத், ராம்விலாஸ் பஸ்வான், அஸ்வினி சவுபே, உபேந்திர குஷ்வாஹா ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.

முன்னதாக, நேற்று காலை பாட்னா வந்த பிரதமர் மோடியை பாட்னா விமான நிலையத்தில் நிதிஷ்குமார் வரவேற்றார்.
தேசிய செய்திகள்

சபரிமலையில் பெண்களை அனுமதி: செக்ஸ் டூரிசமாக மாற்ற அனுமதிக்க மாட்டோம் தேவசம் போர்டு தலைவர் சர்ச்சை கருத்து!


சபரிமலை கோவிலின் புனிதம் காக்கப்பட வேண்டும், தாய்லாந்து கோவில் போல இதையும் செக்ஸ் டூரிசமாக மாற்ற அனுமதிக்க மாட்டோம் என்று தேவசம்போர்டு தலைவர் பேசியிருப்பது சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

அக்டோபர் 14, 2017, 02:13 PM


திருவனந்தபுரம்

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல அனுமதி கிடையாது. இதை எதிர்த்தும், அனைத்து பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க உத்தரவிட கோரியும் இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் என்ற அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தது.

சபரிமலை கோவிலை நிர்வாகம் செய்யும் திருவாங்கூர் தேவசம் போர்டு மற்றும் ஆலயத்தின் பரம்பரை அறங்காவலரான பந்தளம் மகாராஜா ஆகியோர் தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அமர்வு இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே பெண்களை சபரிமலை கோவிலுக்கு அனுமதிப்பது குறித்து சர்ச்சை கருத்தை கூறி இருந்தார் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன். பெண்கள் தீட்டுபடாமல் இருக்கிறார்களா என்பதை கருவி வைத்தா பரிசோதிக்க முடியும் என்று பேசி இருந்தார்.


இந்த முறையும் சர்ச்சையான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். சபரிமலைக் கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் இந்த கோவிலுக்கென்று தனி மரியாதை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

பெண்களை நெரிசல் காலத்தில் கோவிலுக்குள் அனுமதித்தால் அது பல பிரச்சினைகளை எழுப்பும். அவர்களின் பாதுகாப்பிற்கு யாரும் உத்தரவாதம் தர முடியாது. விரும்பத்தகாத செயல்கள் நடைபெறவும் வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

சபரிமலைக் கோவிலை நாங்கள் தாய்லாந்தில் உள்ள செக்ஸ் டூரிசம் கோவில்கள் போல மாற்ற விரும்பவில்லை. நீதிமன்றமே அனுமதித்தாலும் சுயமரியாதை உடைய பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் தைரியமாக செல்ல விரும்புவார்கள் என்று நான் கருதவில்லை என்றும் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தேவசம்போர்டு தலைவரின் இந்த கருத்திற்கு அமைச்சர் சுரேந்திரன் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். எப்படி இந்த மாதிரியான முட்டாள்தனமான ஒப்பீட்டை அவரால் செய்ய முடிகிறது. பெண்களையும், கோவிலையும் அவர் சிறுமைப்படுத்திவிட்டார். இந்த கருத்திற்கு நிச்சயம் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சுரேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
மாவட்ட செய்திகள்

சேலத்தில் பலத்த மழை: குமரகிரி ஏரி நிரம்பி 250 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது


சேலத்தில் பெய்த பலத்த மழையால் குமரகிரி ஏரி நிரம்பி 250 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

அக்டோபர் 15, 2017, 04:15 AM
சேலம்,

சேலம் மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் மழை பெய்தது. சேலம் மாநகரில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் கழிவுநீருடன், மழைநீர் சாலையில் சென்றது.

சேலம் அம்மாபேட்டை பகுதியில் பெய்த தொடர் மழையால் குமரகிரி ஏரி நிரம்பியது. இதனால் ஏரி தண்ணீர் ராஜவாய்க்கால் வழியாக வெளியேறி பச்சப்பட்டி கிராமத்திற்குள் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் முழங்கால் அளவிற்கு நனைந்தவாறு சாலையில் நடந்து சென்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள 250-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் ஏரி தண்ணீர் புகுந்தது.

இதைத்தொடந்து அவர்கள் தண்ணீரை பாத்திரம் மூலம் வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

சேலத்தில் பலத்த மழையால் வாகனங்கள் ஊர்ந்தவாறு சென்றன. இதையொட்டி சேலம் பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம், 4 ரோடு, 5 ரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து
மாவட்ட செய்திகள்

நெய்வேலி அருகே 1 மணி நேரம் ரெயில்வே கேட்டை மூடியதால் கேட் கீப்பருக்கு அடி-உதை



நெய்வேலி அருகே 1 மணி நேரம் ரெயில்வே கேட்டை மூடியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கேட் கீப்பரை அடித்து உதைத்தனர். அந்த சமயத்தில் ஆய்வுக்காக வந்த பாதுகாப்பு அதிகாரியுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அக்டோபர் 14, 2017, 04:00 AM
மந்தாரக்குப்பம்,

நெய்வேலி நகரத்துக்கும், மந்தாரக்குப்பத்துக்கும் இடையே வடக்கு வெள்ளூரில் ரெயில்வே கேட் உள்ளது. கடலூர்-விருத்தாசலம் இடையே தண்டவாளத்தில் ரெயில் செல்லும்போது மட்டும், அந்த குறிப்பிட்ட நேரத்தில் வடக்கு வெள்ளூரில் கேட் மூடப்படும். பின்னர் ரெயில் சென்றதும், மீண்டும் ரெயில்வே கேட் திறக்கப்படும். இந்த நிலையில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் வடக்குவெள்ளூர் ரெயில்வே கேட் திடீரென மூடப்பட்டது. ரெயில் வரும், அதனால் ரெயில்வே கேட் மூடப்பட்டதாக நினைத்து சாலையில் இருபுறமும் பொதுமக்கள் வாகனத்துடன் காத்திருந்தனர். 2.30 மணி வரையிலும் அந்த ரெயில்வே கேட் திறக்கப்படவில்லை.இதனால் சாலையின் இருபுறமும் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

வெகுநேரமாக காத்திருந்த பொதுமக்கள், எதற்காக ரெயில்வே கேட் மூடி வைத்துள்ளர்கள் என்று கேட் கீப்பரான கபூர் மீனாவிடம் கேட்டனர். அதற்கு அவர், திருச்சி கோட்ட ரெயில் தண்டவாள பாதுகாப்பு அதிகாரி டிராலி மூலம் ஆய்வு செய்து வருவதாகவும், அதற்காக மூடியிருப்பதாகவும் கூறினார்.

ஆய்வுக்காக ஒரு மணி நேரமாக ரெயில்வே கேட்டை மூடுவதா? என்று பொதுமக்கள் கேட்டனர். இதனால் ரெயில்வே கேட் கீப்பருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஒரு சிலர், கேட் கீப்பர் கபூர் மீனாவை அடித்து உதைத்தனர்.

அந்த சமயத்தில் விருத்தாசலம் மார்க்கத்தில் இருந்து டிராலியில் பாதுகாப்பு அதிகாரி தலைமையிலான ஒரு குழுவினர் கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இதை பார்த்ததும் பொதுமக்கள், டிராலியை வழிமறித்து அதிகாரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் அவரையும் தாக்க முயன்றனர். அவர்களை சிலர், அதிகாரியை தாக்குவது நல்லதல்ல என்று கூறி தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அதிகாரி உத்தரவை தொடர்ந்து உடனடியாக ரெயில்வே கேட் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வாகன ஓட்டிகள் அந்த வழியாக சென்றனர்.

வாகனங்கள் அனைத்தும் சென்றபிறகுதான் ஆய்வுக்காக செல்ல வேண்டும் என்று கூறி பொதுமக்கள், அந்த அதிகாரி செல்லாத வகையில் டிராலியின் முன்பு நின்று கொண்டனர். சாலையின் இருபுறமும் நின்ற வாகனங்கள் செல்ல 20 நிமிடங்கள் ஆகின.

இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மந்தாரக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அந்த அதிகாரி ஆய்வுக்காக செல்ல வழிவிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மாநில செய்திகள்

தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அலைமோதிய மக்களால் திக்குமுக்காடிய தியாகராயநகர்



தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் வாங்க அலைமோதிய மக்களால் தியாகராயநகர் பகுதி திக்குமுக்காடி வருகிறது.

அக்டோபர் 15, 2017, 04:45 AM


சென்னை,

தீபாவளி பண்டிகை 18–ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சென்னையின் வர்த்தக பகுதியான தியாகராயநகருக்கு ஜவுளி வாங்க மக்கள் குடும்பம், குடும்பமாக திரள்கின்றனர். தங்களுக்கு தேவையான ஆடை, அணிகலன்கள், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர். அலைமோதிய மக்கள் கூட்டத்தால் தியாகராயநகரில் உள்ள ஓட்டல்கள், வணிக வளாகங்கள், துணிக்கடைகள் திக்குமுக்காடி வருகின்றன.பொதுமக்கள் பெரும்பாலும் கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் வருவதால் வடக்கு, தெற்கு உஸ்மான் சாலை, பாண்டி பஜார், பர்கிட் சாலை என தியாகராயநகர் முழுவதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமத்தை மனதில் கொண்டு பெரும்பாலானோர் மின்சார ரெயிலையே தேர்வு செய்து பயணிக்கின்றனர். இதனால் மின்சார ரெயில்களும் கூட்டம் நிரம்பி வழிகிறது.இந்த கூட்டத்தை பயன்படுத்தி பிக்பாக்கெட், வழிப்பறி, சங்கிலி பறிப்பு போன்ற செயல்களில் கொள்ளையர்கள் ஈடுபடாத வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க தியாகராயநகர் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் பொருத்தி உள்ளனர்.

பிக்பாக்கெட்டில் ஈடுபடும் திருடர்களின் புகைப்படங்களை சுவரொட்டிகளாகவும், அகன்ற திரையில் ஒளிபரப்பியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தீபாவளி திருடர்கள் மூலம் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக போலீசார் அவ்வப்போது ஒலிபெருக்கிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சாதாரண உடையிலும், உயரமான கோபுரங்களில் நின்றபடி பைனாகுலர் மூலமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாம்பலம் ரெயில் நிலைய வளாகத்தில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.தியாகராயநகரை போலவே புரசைவாக்கம், எம்.சி.ரோடு, வணிக தளமான பிராட்வே என்.எஸ்.சி.போஸ் சாலை, மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளிலும் ஜவுளி பொருட்கள், அணிகலன்கள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் அலங்கார பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். விடுமுறை நாளான நேற்று பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம், கூட்டமாக வந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

Saturday, October 14, 2017

If Talwars didn't kill Aarushi, who did?


Sanjay Pandey, Lucknow, DH News Service, Oct 13 2017, 1:29 IST
Whodunit: Mystery continues around 2008 double murders
Advocate Tanveer Ahmed Mir leaves the Allahabad High Court following the  acquital of his clients Rajesh and Nupur Talwar on Thursday. AFP
Advocate Tanveer Ahmed Mir leaves the Allahabad High Court following the acquital of his clients Rajesh and Nupur Talwar on Thursday. AFP
The Allahabad high court's judgement acquitting the Talwars in the murder of Aarushi and Hemraj may finally have done justice to the parents but it has raised another question as to who had committed the twin murders, that had shaken the entire country nine years back.

Although the CBI court in Ghaziabad had found Rajesh Talwar and his wife Nupur Talwar guilty of murdering their daughter and servant Hemraj and sentenced them to life imprisonment, a section of the legal luminaries had expressed reservations over CBI's theory and had pointed out toward loopholes in the prosecution claims.

Even the CBI itself had concluded that it did not have sufficient evidence to charge the Talwar couple and hence it had filed a closure report with the lower court.

CBI had contended in the lower court that the Talwars had found Aarushi and Hemraj in a compromising position and had murdered them in a fit of rage. Even the Uttar Pradesh police, who had conducted initial probe into the case, claimed that it was a case of honor killing.

Ironically the Talwars had challenged the CBI closure report and during the hearing of the matter the lower court had directed the CBI to prosecute the parents.

CBI lawyers on Thursday said that they were contemplating to challenge the high court verdict in the Supreme Court.

Leading criminal lawyers here said that the matter should be investigated a fresh. ''The murder will remain a mystery if the Talwars are acquitted by the apex court also..there is a need to have a re-look at the evidence and fresh efforts should be made to link the chain of evidence,'' said a criminal lawyer here.

Reckless speeding by students leaves three severely injured


By M Sathish  |  Express News Service  |   Published: 13th October 2017 02:42 AM  |  

CHENNAI: Reckless speeding by two cars driven by college students, reportedly engaged in racing, resulted in a major road accident on the Chennai Bypass road on Thursday. Such was the high speed driven by the students that one of the cars lost control after being hit on the backside by the other. The two cars, Volkswagen Vento and Hyundai i20, were attempting to overtake each other.
The heavily damaged
i20 car, which crashed
into the median on the
Chennai Bypass on
Thursday
Losing control, the i20 car hit the central median, flipped and slammed into an oncoming vehicle, a Honda Amaze. The collision left three passengers in the Honda car, including the driver, a senior citizen, seriously injured, while four students in the i20 narrowly escaped with injuries.
Poonamallee Traffic Investigation Police told Express that the incident occurred around 3 PM near Kovur bridge before Porur tollgate.
The police have identified Pramod, a 21 year old first year MBA student of SRM University, Kattankulathur, as the one who drove the Volkswagen. His friends, Prashanth Kumar, Gokul and Nagaraj, were seated in the car. The second car, i20, was driven by Vignesh Kumar (21), also a first year MBA student at SRM.  Two other students, Sridhar and Hariharan, were fellow passengers. All of them were reportedly proceeding towards Villivakkam after college hours.
Narrating the incident, police said they believe both the cars were racing each other and Pramod allegedly lost control. “While the Volkswagen came to a halt after hitting the median, the i20 overturned and crashed into the oncoming Honda car on the other side of the road.”
The Honda and i20 was heavily damaged.Police said the Honda, car belonging to a travel agency was driven by Murthy (61). He was taking two customers, Ramesh (39) and Kumaraguruban (41) from Anna Nagar to Kelambakkam. All the three were severely injured due to the impact and were taken to a private hospital.
An investigating officer said, “Surprisingly, no one in the i20 car was injured despite being involved in the collision. “Based on a complaint, we have registered a case. Both Pramod and Vignesh have been arrested.” They were not drunk and they possessed valid licence.” Further investigation is on.

TN medical lab fined after mosquito breeding source was found on its premises

Devanathan Veerappan| TNN | Oct 13, 2017, 15:19 IST




MADURAI: Revenue officials on Friday imposed a fine of Rs 50, 000 on a private medical lab in Sivaganga district of Tamil Nadu after a mosquito breeding source was found on its premises.

As dengue is spreading in the state, officials have intensified crackdown on the owners of buildings and vacant lands where sources for mosquito breeding are found.

On Friday morning, a team of officials led by the revenue divisional officer of Devakottai inspected Raj Medical Lab at TT Nagar in Karaikudi and found a mosquito breeding source.

LATEST COMMENTInstead of fine, that idiot should be jailed.Evans Chris Sumitra

Officials said the proprietor of the lab, identified as Vadivelu, had been asked to pay the fine. He was asked to keep the premises clean.

A notice was served on him seeking an explanation for the poor upkeep of the premises.



Mosquitoes make travel in AC coaches miserable

Siddharth Prabhakar| TNN | Updated: Oct 13, 2017, 23:49 IST

CHENNAI: For those travelling in an air-conditioned railway carriage this festival season, the journey may not be all that comfortable. Chances are that passengers in these coaches will be troubled by mosquitoes more than those in the second class coaches and hence carrying mosquito repellents to avoid bites is recommended.

Southern Railway officials said they have been getting complaints from passengers of mosquitoes in AC coaches. The insects enter a coach when the doors are opened and unlike in second class coaches, the mosquitoes cannot fly out of the carriage once the doors are closed. They travel with, and then trouble, the passengers. Complaints have poured in from worried parents who would be travelling with their children this festival season. And the dengue situation in Tamil Nadu has only added to their fears.

Officials in the maintenance department said despite the 'best efforts' to clean coaches, mosquitoes infest them as the coaching depots at Basin Bridge and Egmore are located near polluted water bodies like Buckingham Canal or garbage dumps, where mosquitoes breed freely. Besides the midges, the garbage mounds are a source of rodents that often find their way to the depots.

"The problem is seen in trains like Bengaluru and Coimbatore Shatabdis which are cleaned the previous night and are run in the morning. Mosquitoes fly in when the doors are opened either carelessly or unknowingly after maintenance," said a senior official.

With the dengue outbreak spiralling out of control, an official of the Chennai division said the frequency of using anti-larvicidal sprays has been increased from once every fortnight to once every five days from October 1. "At the Egmore station this is sprayed between platforms, remote corners and also inside trains," said the official. The medical department has a routine including fogging at stations, spraying pesticides and larvicides, and clearing any water puddle in the vicinity of the station, he said. At the maintenance sheds, the coaches are fogged after cleaning. "However, this cannot be done for platform turnaround trains as it is not allowed on a train inside the station due to railway rules," said the official.

Some passengers said mosquitoes were more conspicuous at Chennai Central than Egmore which is also the cleaner station even if the ratings suggest otherwise. "The foul stench at the Central is overpowering because of its vicinity to the canal. The waterbody also brings in the mosquitoes," said R Sivakaman, a regular traveller to Coimbatore.

Blank screen? Might be a sextortion call

Blank screen? Might be a sextortion call  NEW TRICK Dwaipayan.Ghosh@timesofindia.com 20.10.2024 Kolkata : Sextortion calls have become more ...