Friday, October 20, 2017

This 91-year-old ‘Postman’ still serves the department

At people’s service P.M. Gurusamy helping a visitor to Ramanathapuram Head post Office.   | Photo Credit: ; - L_Balachandar

Helps people who visit post office fill up forms, promotes postal products

When he joined the Department of Posts as an ‘outsider’ in 1940, P.M. Gurusamy, popularly known as ‘PMG’ in the department circle, would have never imagined that he would remain integrated with the department for more than seven decades and continue his ‘service’ even after retirement.
While serving as an ‘outsider’ (casual worker) at Ramanathapuram Head Post Office after completing his third form (Class VIII), Mr. Gurusamy joined Quit India Movement in 1942.
He was sent to jail, but released the very next day as the jailor found him hardly 16 years old.
The jailor informed the Postmaster that Mr. Gurusamy faced no case and there was no bar on him to continue his service in the department.
On March 3, 1943, Mr. Gurusamy was posted as a Class IV employee at the post office in Mandapam.
After retiring as a Selection Grade Postman in 1985, Mr. Gurusamy – he is now 91 years old – has been visiting the Head Post Office for 32 years, helping people who visit the post office and promoting postal products, especially ‘My Stamp’, the personalised sheets of postage stamps of India Post.
He has been visiting the Head Post Office for two hours in the morning and an hour in the evening, helping people fill up forms, and deposit and withdraw money. He has also been encouraging them to start recurring deposit and savings bank accounts or join ‘Sukanya Samriddhi Yojana,’ designed for rural people who fall victims to dubious financial companies.
“God is keeping me in good health and I will continue the service as long as I can,” he told The Hindu during an interaction. Recently, the Postmaster ‘pulled him up’ for coming late and he considered the ‘reprimanding’ as the biggest compliment. No one would visit the post office after retirement and Mr. Gurusamy is an exception, says N.J. Udaya Singh, Superintendent of Posts. He has popularised ‘My Stamp’ product in a big way, he adds.
“I have a passion for ‘My Stamp’ and have got the personalised stamps for more than 150 people, including former President A.P.J. Abdul Kalam and his elder brother A.P.J. M. Maraikayar,” says Mr. Gurusamy. Appreciating his service, Karaikudi Kamban Kazhagam has honoured him with ‘Seva Ratna’ award.
Mr. Gurusamy had served as a Postman in Dhanushkodi for five years since 1945 and continues to be the living link to the 1964 cyclonic tragedy that destroyed the post office and the once flourishing town.

Metro rail completes one tunnel under Anna Salai, second tunnel to be ready in Nov

TNN | Oct 19, 2017, 23:55 IST

Chennai: Chennai metro rail completed building of one of the two tunnels in arterial Anna Salai on Wednesday, a day after its engineers attempted in vain to achieve a break through. The tunnel will connect May Day Park to AG-DMS covering a distance of 3.7km. The line is expected to get operational by December 2018.

Metro rail officials said the giant tunnel boring machine broke the fibre reinforced concrete wall and entered AG-DMS station at around 3pm on Wednesday, signalling completion of one of the two tunnels. This comes a day after they suffered a setback when engineers found the boring machine's cutter head had worn out when they had only 10cm of the wall left to bore through to complete the job. They attempted other means to break the wall, including the use of a hydraulic breaking equipment. "But the wall was strong," a senior Metro rail official said.

It was after seven hours and restarting the machine several times, engineers gave up and decided to change the cutters again. They completed the task on Wednesday afternoon. "We now have the other tunnel to complete which is about 450m away from achieving break through. We will complete it by next month," an official said.

The tunnel boring machine bores through a thick diaphragm wall of the underground station to enter the station box. The boring machine is then taken out using the space excavated for the station.

Once the tunnelling under Anna Salai is complete, officials said traffic will be restored to its original by December end after removing the tunnel boring machine from the site and closing the shafts cut to build the stations. Station work will progress faster.

It has been seven years since traffic restrictions were imposed on Anna Salai and the four-lane road has been converted into single lane or double lane at some stretches.
New AC express train from Chennai Central to Madurai to be announced soon

TNN | Updated: Oct 19, 2017, 23:59 IST

Chennai: Southern Railway has planned to run an air-conditioned express trainbetween Chennai Central and Madurai, highly placed sources said. This is likely to be announced with the new timetable which will be in force from November 1 and is aimed at meeting the burgeoning demand to Madurai.

The other major additions to the new timetable will be two other trains — Tambaram-Sengottai and Tambaram-Tirunelveli — which will be formally announced soon, the sources said.

All the trains to Madurai are run from Chennai Egmore, barring the bi-weekly Duronto which is run from Chennai Central. The AC express train would run on Friday night from Chennai and return on Saturday night from Madurai. It will have stoppages at Katpadi, Salem, Karur and Dindigul and in the return direction it will stop at Perambur, sources said.

LATEST COMMENTNow that Chennai/ Madurai track is almost doubled--- except for a very small strech --- Railways should plan a All second class un reserved Super gfast train ---one in day time another in Night Time ... Read MoreGopalarathnam Krishna Prasad

Apart from this, two other trains — Tambaram-Sengottai and Tambaram-Tirunelveli — are already run as specials by the zonal railway and have been regularised. The train from Chennai Egmore to Bhagat ki Kothi near Jodhpur in Rajasthan which operates once a week, will also start from Tambaram.

Interestingly, the Chennai Central-Madurai Duronto runs with very poor patronage and takes the longer route through Jolarpet and Salem. A proposal has been given to route it through Egmore for which there will be greater popularity, a senior official said.
Fewer animals get burn injuries this Diwali

Shruti Suresh and P Oppili| TNN | Oct 20, 2017, 07:31 IST

As smoke and noise from firecrackers engulfed the city on Diwali, animal welfare groups and volunteers stayed alert to carry out rescue of distressed animals.

Three cows and a calf were charred to death in Chitlapakkam on Thursday night when a barn caught fire from crackers. Blue Cross of India (BCI) volunteers rescued five cows, of which one had burns.

Starting Tuesday night, volunteers from groups like BCI and People for Cattle in India were busy with rescue operations. They were on alert for the next two days as several animals ran helter skelter driven by noise.

BCI received 392 calls on the night of Diwali, which Dawn Williams, the general manager of the organisation, said, was an abnormal spike."We rescued 63 animals including dogs, a calf and a cat.Many animals scared by noise ran looking for shelter.A pet dog that ran away was rescued near Raj Bhavan," he said. However, the number of injured animals due to bursting of firecrackers has come down this year when compared to last year, said K Shravan, the coordinator of Be sant Memorial Animal Dispensary .

Animals get injured when they try to cross roads after they panic on hearing highdecibel sounds.

Very few animals got burn injuries this Diwali season, he said.

Last year more than 50 dogs, cats and birds were brought to their dispensary for treatment. However, this year only 30 of them came in for treatment in the last couple of days.

Doctors at the facility had to amputate the fore legs for two of the dogs that were brought to the dispensary as they were severely injured.Another puppy had a burn injury on its mouth. It was treated at the dispensary, he said.

தீபாவளி விடுமுறை நிறைவு: பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்

By திருநெல்வேலி  |   Published on : 20th October 2017 08:13 AM  |
train

தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு பயணிகள் ஏராளமானோர் வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றதால் திருநெல்வேலியில் பேருந்து, ரயில் நிலையங்களில் வழக்கத்தைவிட கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தது.
தீபாவளி பண்டிகை புதன்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை, திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் திருநெல்வேலி மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி தீபாவளியைக் கொண்டாடினர். விடுமுறை முடிந்து அவரவர் வசிக்கும் பகுதிகளுக்கு வியாழக்கிழமை புறப்பட்டுச் செல்லத் தொடங்கினர். இதனால் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் ஆகியவற்றில் பயணிகளின் கூட்டம் வழக்கத்தைவிட மிகவும் அதிகமாக இருந்தது.
சிறப்புப் பேருந்துகள்: திருநெல்வேலியில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் வழக்கமாக சுமார் 65 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், வியாழக்கிழமை கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னைக்கு 10, கோவைக்கு 4, திருப்பூருக்கு 2 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டதாக போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதவிர கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கூடுதலாக இயக்கப்பட்ட விரைவுப் பேருந்துகளும் திருநெல்வேலி வழியாக வந்து பயணிகளை ஏற்றிச் சென்றனர். இதுதவிர தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மதுரை, திருச்சி, கோவை, திருப்பூருக்கு ஆகிய ஊர்களுக்கு கூடுதலாக சுமார் 20 பேருந்துகள் இயக்கப்பட்டன.
அடிப்படை வசதிகள் இல்லை: திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் தீபாவளி விடுமுறை முடிந்து செல்லும் பயணிகளுக்காக பேருந்துகள் மட்டுமே கூடுதலாக இயக்கப்பட்டன. ஆனால், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் போதுமான அளவுக்குச் செய்யப்படவில்லை. குடிநீர்க் குழாய்களில் தண்ணீர் வராமல் மக்கள் பெரும் சிரமப்பட்டனர். இ-டாய்லெட் வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்த வேண்டும் என்ற பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதல் டிக்கெட் கவுன்ட்டர்கள், விசாரணை அலுவலகங்கள் திறக்கப்பட்டன. அதனால் பொதுமக்கள் மிகுந்த பயனடைந்தனர். திருநெல்வேலியில் கூடுதல் கவுன்ட்டர்கள் உள்ளிட்டவை இல்லை. இதுதவிர வழக்கத்தைவிட அதிக பயணிகள் வந்து விசாரணை அலுவலகத்தில் பேருந்து குறித்து விசாரிக்க வந்தனர். அதற்கு தகுந்த முன்னேற்பாடுகள் செய்யாததால் பயணிகள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துச் செல்லும் நிலை ஏற்பட்டது.
ரயில் நிலையம்: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலும் வியாழக்கிழமை பயணிகள் கூட்டம் மிகவும் அதிகமிருந்தது. நெல்லை விரைவு ரயில், கன்னியாகுமரி விரைவு ரயில் உள்ளிட்ட சென்னை செல்லும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிகள் படிக்கட்டுகளில் அமர்ந்து பயணிக்கும் அளவுக்கு கூட்டம் அதிகமிருந்தது. முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிக்க நண்பகலில் இருந்தே பயணிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் வரிசையில் காத்திருந்ததைக் காண முடிந்தது. அடுத்த ஆண்டில் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு ரயில்களை மேலும் அதிகரிக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

மெர்சல் சாதனை! வசூலில் நம்பர் 1 இடம் பிடித்தார் நடிகர் விஜய்!


By DIN  |   Published on : 19th October 2017 07:08 PM  
mersal

ஒரு ஹீரோவின் மார்கெட் வேல்யூ என்பது அவர்கள் குவிக்கும் வசூல் சாதனையில் உள்ளது.  ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என உலகத் திரைப்படத்துக்கான இலக்கணம் இதுதான்.
அதுவும் ஸ்டார் வேல்யூ அதிகமுள்ள நடிகர்களை பொறுத்த வரையில் FDFS (First day first show) முதல் நாள் முதல் காட்சி மிகவும் முக்கியம். அது படத்தைப் பற்றிய ரசிகர்களின் முதல் ரியாக்‌ஷனை வெளிப்படுத்திவிடும். மீடியா விமரிசனங்கள், ஸ்டார் ரேட்டிங் என படத்தைப் பற்றிய கருத்துக்கள் வெளி வரும். சமூக வலைத்தளங்களிலும் அந்தப் படத்தைப் பற்றிய பதிவுகள் வைரலாகும்.
கமர்ஷியல் திரைப்படங்களின் முதல் நாள் வசூல் என்பது மிகவும் முக்கியம், பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட மாஸ் ஹீரோ படங்களுக்கு முதல் நாள் வசூல் லாபம் தருவதாக இருந்தால் தான் அவர் அந்த நட்சத்திர அந்தஸ்த்தை தக்க வைத்துக் கொள்ள முடியும், படத் தயாரிப்பாளரும் முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுக்க முடியும்.
தீபாவளி அன்று உலகம் முழுவதும் 3500 திரையரங்குகளில் வெளிவந்த மெர்சல் ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. வசூலைப் பொருத்த வரையில் மெர்சல் தமிழ் நாட்டில் இதுவரை ரூ 22 கோடிக்கு மேல் முதல் நாளே வசூல் செய்துவிட்டது. இதற்கு முன் முதல் நாள் வசூலில் முதலிடத்தில் இருந்து வந்தது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த கபாலி என்பது குறிப்பிடத்தக்கது.
கபாலியின் முதல் நாள் வசூல் ரூ 21.5 கோடி. சமீபத்தில் வெளியான விவேகம் ரூ 17 கோடி முதல் நாள் வசூல் சாதனை செய்திருந்தது. இவற்றை தாண்டிய மெர்சல் 22 கோடியை வசூலித்து தமிழகத்தின் வசூலில் நம்பர் 1 படமாகிவிட்டது. தளபதி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் விஜய் வசூல் சாதனையில் முதல் இடத்திற்கு வந்துள்ளார்.

    என்ன செய்யப் போகிறோம்?


    By ஆசிரியர்  |   Published on : 20th October 2017 03:26 AM  
    இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வீணான மின்னணு, மின்சாதனக் கழிவுகளின் அளவு ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டே போகிறது. இ-வேஸ்ட் என்று பரவலாக அறியப்படும் மின்னணு, மின்சாதனக் கழிவுகள் உலகம் முழுமைக்கும் அச்சுறுத்தலாக இருந்தாலும்கூட, பெரும்பாலான மேலைநாடுகளும் வளர்ச்சியடைந்த நாடுகளும் முறையான செயல்திட்டத்தின் மூலம் இதுகுறித்த நடவடிகைகளை முடுக்கிவிட்டிருக்கின்றன. இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும், இதனைக் கட்டுப்படுத்துவதற்கு கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் செயல்படாமல் இருப்பதும் இந்தியாவை பேராபத்துக்கு தள்ள இருக்கிறது. 
    "மின்னணு - மின்சாதனக் கழிவுகள் மேலாண்மை விதிகள் 2011'-இல் சில திருத்தங்களை ஏற்படுத்தி, கடந்த ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 
    இ-வேஸ்ட் மேலாண்மை விதிகள் 2016-ஐ அறிவித்தது. அரசு இந்தப் பிரச்னையில் முழு மூச்சுடன் இறங்கி ஏனைய உலக நாடுகளைப்போல மின்னணு, மின்சாதனக் கழிவுகளை கையாள, தகுந்த நடவடிக்கைகளை என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது.
    2011 இ-வேஸ்ட் மேலாண்மை விதிகளில் காணப்பட்ட மின்னணு, மின்சாதனக் கழிவுகள் மட்டுமல்லாமல் இது தொடர்பான கருவிகள், உதிரிபாகங்கள் அனைத்தையும் 2016-இல் கொண்டு வரப்பட்ட திருத்தம் உள்ளடக்கியது. மேலும், சி.எஃப்.எல். எனப்படும் புளோரஸன்ட் விளக்குகள் உள்ளிட்ட பாதரசத்தை பயன்படுத்தும் அனைத்து மின்சாதனங்களும் இ-கழிவுகளாக அந்தத் திருத்தத்தில் இணைக்கப்பட்டது. 
    2016-இல் திருத்தம் செய்யப்பட்ட இ-வேஸ்ட் மேலாண்மை விதிகளின்படி மின்னணு, மின்சாதனக் கழிவுகளை சேகரிக்கும் பொறுப்பு அதன் உற்பத்தியாளர்களுக்கு நீட்டிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் விற்பனை செய்த மின்னணு, மின்சாதனங்களின் கழிவுகளை அரசு கண்காணித்து உறுதிப்படுத்தவில்லை.
    வாடிக்கையாளர்கள் பயன்படுத்திய பழுதான மின்னணு, மின்சாதனப் பொருள்களைத் திரும்பப் பெற்று மறுசுழற்சிக்கு அல்லது அழித்தொழிப்புக்கு தயாரிப்பாளர்கள் வழிகோல வேண்டும் என்பதைத் திருத்தப்பட்ட விதிமுறை விரிவாகவே விளக்கியது. உற்பத்தியாளர்கள் தங்களது விற்பனை முகவர்கள் அல்லது நியமிக்கப்பட்ட சேகரிப்பாளர்கள் மூலம் தங்கள் நிறுவனத்தின் மின்னணு, மின்சாதனக் கழிவுகளை திரும்பப் பெற வேண்டும் என்று சட்டம் வலியுறுத்துகிறதே தவிர, அது நடைமுறைப்படுத்தப்படாமல் தொடர்கிறது. 
    சட்டத்திருத்தத்தின்படி ஏழு ஆண்டுகளில் விற்பனை செய்த மின்னணு, மின்சாதனப் பொருள்கள் 30% முதல் 70% வரை தயாரிப்பாளர்களால் திரும்பப் பெறப்பட வேண்டும் என்பது விதி. இதற்கு விற்பனையாளர்கள் குறிப்பிட்ட தொகையை முன்பணமாக பெற்று கழிவுகளை பொருள்களை தரும்போது திருப்பித் தரலாம் அல்லது வாடிக்கையாளர் புதிதாக வாங்கும் மின்னணு, மின்சாதனங்களின் விலையில் ஒரு குறிப்பிட்டத் தொகை கழித்துக் கொள்ளப்
    படலாம் என்றெல்லாம் அந்த சட்டத்திருத்தத்தில் பரிந்துரைகள் தரப்பட்டிருக்கின்றன. 
    ஆண்டொன்றுக்கு இந்தியாவில் ஏறத்தாழ 17 லட்சம் டன் மின்னணு, மின்சாதனக் கழிவுகள் உருவாகின்றன. ஆசியாவில், சீனாவுக்கும் ஜப்பானுக்கும் அடுத்தபடியாக மிக அதிகமான மின்னணு, மின்சாதனக் கழிவுகள் உருவாகும் நாடு இந்தியா. ஆனால், நமது நாட்டில் உருவாகும் மொத்த மின்கழிவுகளில் 1.5% மட்டுமே மறுசுழற்சிக்கோ அல்லது அழித்தொழிப்புக்கோ உட்படுகின்றன. மின்கழிவுகளின் அளவு ஆண்டுக்கு 10 விழுக்காடு என்ற அளவில் அதிகரிக்குமானால், இந்தக் கழிவுகளிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு ஒட்டுமொத்த இந்தியர்களையும் மிக மோசமான பாதிப்புகளுக்கு ஆளாக்கக்கூடும்.
    அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் பழைய செல்லிடப்பேசிகள் (1800%), கணினிகள் (500%), ஏனைய மின்னணு சாதனங்களின் கழிவுகள் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கக்கூடும். அவற்றில் 98% ஏனைய சாதாரணக் கழிவுகளுடன் கலந்து குப்பைகளாகச் சேர்க்கப்படும்போது, அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பும், சுகாதாரக் கேடும் மிகவும் கடுமையானதாக இருக்கும். 
    இந்த மின்னணு, மின்சாதனக் கழிவுகளில் காணப்படும் பாதரசம், ஈயம் உள்ளிட்ட நச்சு உலோகங்கள் மிகவும் ஆபத்தானவை. பாதுகாப்பில்லாத இ-கழிவுகளின் மறுசுழற்சி அல்லது குப்பைக் கூளங்களில் சேர்க்கப்படுதல் மூலமாக நிலத்தடி நீர், வாயு மண்டலம் ஆகியவற்றில் இவற்றின் கதிர்வீச்சு கலந்துவிடுகிறது. இ-கழிவுகளைக் கையாளும் தொழிலாளர்களில் 80% பேர் கடுமையான நுரையீரல் நோய்களுக்கு ஆளாகிறார்கள் எனும்போது தண்ணீரிலும், காற்றிலும் ஏற்படுத்தும் நச்சு எந்த அளவுக்கு பொதுமக்களின் உடல் நலனை பாதிக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.
    குழல் விளக்குகள், கணினி மதர்போர்டு உள்ளிட்ட உதிரிபாகங்கள், கணினி பிரிண்டர்களின் டோனர் கார்ட்ரிட்ஜ்கள் ஆகியவை பாதரசம், காட்மியம் ஆகியவற்றை காற்று மண்டலத்தில் பரப்புகின்றன. இது தெரிந்தும்கூட தயாரிப்பாளர்கள் அவர்கள் விற்பனை செய்யும் பொருள்களில் 10% கூட கழிவுகளாக திரும்பப் பெற்று அவற்றை அழித்தொழிப்பதில் கவனம் செலுத்துவதில்லை. 
    ஜப்பானில் 50% முதல் 60%, தென்கொரியாவில் 55% முதல் 70%, பிரிட்டனில் 50% முதல் 80%, நெதர்லாந்தில் 45% முதல் 75% கழிவுகள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அல்லது ஒழித்தலுக்கு அனுப்பப்படும்போது இந்தியாவில் ஏன் இன்னும் 1.5% மட்டுமே திரும்பப் பெறப்படுகிறது? மின்னணு, மின்சாதனப் பொருள்கள் வளர்ச்சியின் அடையாளம் மட்டுமல்ல, பேராபத்தின் அடையாளங்களும்கூட என்பதை எப்போதுதான் நாம் உணரப்போகிறோமோ?
    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை : இல.கணேசன் நம்பிக்கை


    மதுரை: ''மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வாய்ப்புகள் இருப்பதாக, மத்திய அமைச்சர் நட்டா என்னிடம் தெரிவித்தார். எய்ம்ஸ் அமைய மதுரை ஏற்ற நகரம்,'' என பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் எம்.பி., கூறினார்.
    அவர் கூறியதாவது:அலோபதி டாக்டர்கள் கூட நிலவேம்பு கஷாயத்தை ஏற்றுக் கொண்டனர். வித்தியாசமாக சொல்ல வேண்டும் என்பதற்காக, நிலவேம்பு குறித்து கமல் கருத்து 
    தெரிவித்துள்ளார் என நினைக்கிறேன். டெங்குவை ஒழிக்க, உடனடி தேவையாக நிலவேம்பு உள்ளது. மாற்று மருந்து இருந்தால், அதுபற்றி கமல் கூறியிருக்கலாம். டெங்கு மரணங்கள் அதிகரிக்காமல் அரசு முழு கவனம் செலுத்த வேண்டும். மக்களும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்.தஞ்சைக்கும், திருச்சிக்கும் இடையே உள்ள சிங்கப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பதாக கூறினர். தஞ்சை எனது சொந்த மாவட்டமாக இருந்தாலும், சிங்கப்பட்டியை ஏன் தேர்வு செய்தார்கள் என தெரியவில்லை. மத்திய அமைச்சர் நட்டாவை சந்தித்தபோது, 'தென் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் மதுரையில் எய்ம்ஸ் அமைவது பொருத்தமாக இருக்கும்' என என்னிடம் கூறினார். எய்ம்ஸ் அமைய ஏற்ற நகரம் மதுரைதான். மத்திய அரசு வரைமுறைப்படி மாநில அரசு பரிந்துரை செய்யும் இடத்தில் எய்ம்ஸ் அமையும்.
    தேசிய வழிபாட்டு தலங்களில் மதுரை திருமலை நாயக்கர் மகால், உ.பி.,யில் தாஜ்மகால் உள்ளிட்டவை இடம் பெறவில்லை. தாஜ்மகால் பராமரிப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் நான் பேசியுள்ளேன். தாஜ்மகால் என்றுமே சுற்றுலாத்தலம் தான், 
    என்றார்.நிர்வாகிகள் சீனிவாசன், சசிராமன், மகாலட்சுமி, ஹரிஹரன், பாரதிராஜ் 
    உடனிருந்தனர்.
    மொபைல் போன் எண் - 'ஆதார்' இணைப்பு  கைரேகை பொருந்தாததால் சிக்கல்

    கைரேகை பொருந்தாததால், மொபைல் போன் எண்ணை, 'ஆதார்' எண்ணுடன் இணைக்க முடியாமல், ஏராளமானோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.





    நாடு முழுவதும், மொபைல் போன் வாடிக்கையாளர்கள், 2018 பிப்ரவரிக்குள், மொபைல் போன் எண்ணை, 'ஆதார்' எண்ணுடன் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், மொபைல் போன் வாடிக்கையாளர் சேவை மையங்களில், கூட்டம் நிரம்பி வழிகிறது. நீண்ட நேரம் காத்திருந்தும், பலர், ஆதார் எண்ணை இணைக்க முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்புவதாக புகார்
    எழுந்துள்ளது.

    ஒத்துப் போவது இல்லை

    இது குறித்து, மத்திய அரசின், பொது சேவை மையத்தை நடத்துவோர் கூறியதாவது:ஆதார் எண்ணை, மொபைல் போன் எண்ணுடன் இணைப்பதற்கு, 'பயோ மெட்ரிக்' கருவியில், கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யும் முதியோரின் விரல் ரேகை, ஆதார் தகவல் பதிவேட்டில் பதிவாகி உள்ள, விரல் ரேகைகளுடன் ஒத்துப் போவது இல்லை.முதியோர் மட்டுமின்றி, பாத்திரம் தேய்த்தல் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ள, ஏராளமானோரின் கை ரேகையும் ஒத்துப் போவதில்லை. 

    அதனால், ஆதார் மையங்களுக்கு சென்று, கைவிரல் ரேகையை புதிதாக பதிவு செய்து, மீண்டும் வருகின்றனர்.அந்த புதிய ரேகை கூட, பலருக்கு ஒத்துப் போகவில்லை. அதனால், ஆயிரக்கணக்கானோர், 'ஆதார்' எண்ணை, மொபைல் எண்ணுடன் இணைப்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. பலரது விரல் ரேகைகள், தேய்ந்து போனது காரணமாக இருக்கக் கூடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கவனம் செலுத்துமா அரசு?

    பொதுமக்களின், 'ஆதார்' விபரங்கள் மற்றும் கைவிரல் ரேகைகளை, தமிழக அரசின், கேபிள், 'டிவி' நிறுவனத்தின், ஆதார் பதிவு மையத்தினர் தான் பதிவு செய்கின்றனர். அது, பெங்களூரில் உள்ள, ஆதார் அட்டை தயாரித்து அனுப்பும், யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், தனித்துவ எண் அடையாள ஆணையத்தின் அலுவலகத்திற்கு அனுப்பப்படுகிறது. எனவே, அரசு அதிகாரிகள், யு.ஐ.டி.ஏ.ஐ., நிறுவனத்துடன் பேசி, இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே, பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பு.

    - நமது நிருபர் -
    ஊதிய உயர்வில் ஆசிரியர்கள் 'மெர்சல்'  முதல்வரிடம் குவியும் மனுக்கள்
    தமிழக அரசின் ஊதிய உயர்வு அறிவிப்பில், பல்வேறு குழப்பங்கள் உள்ளதால், ஊதிய உயர்வு எப்படி கிடைக்குமோ என, ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து, முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.




    மத்திய அரசின், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது; அக்., 11ல், அரசாணையும் வெளியிடப்பட்டது.

    இன்று விளக்க கூட்டம்

    இந்த உயர்வு அறிவிப்பு, அதிருப்தியை ஏற்படுத்துவதாக, ஆசிரியர், அரசு ஊழியர்கள்தெரிவித்துள்ளனர். நிலுவை தொகை கிடையாது என்ற அறிவிப்பாலும், அவர்கள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து, அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' நிர்வாகிகள், மாநிலம் முழுவதும், கலெக்டர் அலுவலகம் முன், இன்று விளக்க கூட்டம் நடத்துகின்றனர்.

    அதன்பின், 'நீதிமன்றத்தை அணுகுவோம்; அதிலும், முடிவு கிடைக்காவிட்டால், போராட்டம் குறித்து முடிவு எடுப்போம்' என, ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

    முதல்வரிடம் மனுக்கள்

    அரசுக்கு ஆதரவான, 'ஜாக்டோ -ஜியோ கிராப்' உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில், இது தொடர்பாக, முதல்வர் பழனிசாமியிடம் மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளன. இதுபற்றி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க தலைவர், சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது:

    ஆசிரியர், அரசு ஊழியர்களை திருப்திப்படுத்தும் வகையில், ஊதிய உயர்வு வரும் என, எதிர்பார்த்தோம். ஆனால், 21 மாத நிலுவை தொகையை தர, தமிழக அரசு மறுத்து விட்டது.

    அதேபோல், ஊதிய முரண்பாடுகள் களையப்படவில்லை. இந்த பிரச்னைகளால், ஊதிய உயர்வில் குழப்பம் அதிகரித்துள்ளது. அவற்றை சரிசெய்ய, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    -நமது நிருபர் -
    நீட்' தேர்வு பயிற்சி: பதிவு எப்படி?

    சென்னை : 'நீட்' தேர்வுக்கான அரசின் சிறப்பு பயிற்சிக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் வழிகாட்டுதல் வழங்கி உள்ளார்.





    3,௦௦௦ ஆசிரியர்கள்

    'நீட்' தேர்வால், தமிழக அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளதாக, கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில், தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' நுழைவு தேர்வுக்கான சிறப்பு பயிற்சியை, பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்து உள்ளது.
    இந்த பயிற்சி, நவம்பரில் துவங்கப்பட உள்ளது. இதற்காக, 3,௦௦௦ ஆசிரியர்கள், ஆந்திராவில் உள்ள நுழைவு தேர்வுக்கான சிறப்பு அகாடமியில், சிறப்பு பயிற்சி பெறுகின்றனர்.

    வழிகாட்டுதல்கள்

    பின், தமிழக மாணவர்களுக்கு, 'நீட்' மற்றும் ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெற, சிறப்பு 

    பயிற்சி அளிக்க உள்ளனர்.இந்நிலையில், நுழைவு தேர்வு பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களின் பெயர்களை, ஆன் - லைனில் பதிவு செய்ய, புதிய இணையதளம் துவங்கப்பட்டு உள்ளது. அமைச்சர் செங்கோட்டையன், ஒரு வாரத்திற்கு முன், இணையதளத்தை துவக்கினார். இதையடுத்து,பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களை, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் அறிவித்துள்ளார்.

    அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள், நுழைவு தேர்வு பயிற்சிகளில் சேரலாம். தமிழகத்தில்,412 மையங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி மையத்தை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

    மாணவர்கள், தலைமை ஆசிரியர்கள் வழியாக, http://tnschools.gov.in என்ற, இணையதளத்தில், தங்கள் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். இதற்கு, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, ஒருங்கிணைந்த அடையாள எண்ணை பயன்படுத்த வேண்டும்.பதிவுக்கு பின், ஒப்புகை சீட்டை மாணவர்கள் பெற்று கொள்ள வேண்டும். வரும், 26 ம் தேதி வரை ஆன்லைனில் பதிவுசெய்யலாம். பயிற்சி துவங்கும் நாள், நேரம் பின் அறிவிக்கப்படும் என, இயக்குனரின் வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.

    இரண்டு அரையாண்டு தேர்வு

    தமிழக அரசு பள்ளி மாணவர்கள், பொது தேர்வில் அதிகம் தேர்ச்சி பெறும் வகையில், சிறப்பு கவனம் செலுத்தும்படி, அதிகாரிகளுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தி உள்ளார். இதையொட்டி, பொது தேர்வு எழுத உள்ளவர்களுக்கு, சனி, ஞாயிறுகளில், மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

    இந்நிலையில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், பொது தேர்வுகளில், தனியார் மாணவர்களுக்கு நிகராக, மதிப்பெண் பெற, அரையாண்டு தேர்விலேயே அவர்களை தயார்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக, அரசு பள்ளி மாணவர்களுக்கு, டிசம்பரில் நடக்கும் அரையாண்டு தேர்வுக்கு முன், மாதிரி அரையாண்டு தேர்வு நடத்த, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார். அதற்கு முன், தேர்வுக்கான பாடங்களை முடித்து, மாணவர்களை தயார் செய்யும்படி, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
    டி.சி., மறுக்கப்பட்ட மாணவனுக்கு ரூ.1 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு

    சென்னை: மாணவனுக்கு மதிப்பெண் சான்றிதழ் தராத பள்ளி, ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற, 'நோட்டீஸ்'க்கு பதில் அளிக்காததால், வழக்கு செலவு தொகையாக, ஒரு லட்சம் ரூபாய் விதித்தும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே, வெற்றி விகாஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. 
    இங்கு, கார்த்திக் என்ற மாணவன், பிளஸ் ௨ படித்தான். ௨௦௧௭ மார்ச்சில் தேர்வு எழுதி, வெற்றி பெற்றான். மதிப்பெண் மற்றும் மாற்று சான்றிதழ் வழங்க, பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டது.
    இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், கார்த்திக் தந்தை மணி, மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:
    ஆவணங்களை பார்க்கும் போது, பள்ளிக்கு செலுத்த வேண்டிய பாக்கி தொகை எதுவும் இல்லை. மொத்தம், ௭௫ ஆயிரம் ரூபாய், மனுதாரர் தரப்பில் செலுத்தப்பட்டுள்ளது. 
    அரசு தரப்பில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம், ௧௧ ஆயிரத்து, ௬௦௦ ரூபாய் என்றாலும், கூடுதல் கட்டணத்தை, மனுதாரர் செலுத்தி உள்ளார்.
    பள்ளி தரப்பில், யாரும் ஆஜராகவில்லை; அவர்கள் தரப்பில், பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை. எனவே, மனுதாரர் தரப்பு வழக்கை, பள்ளி நிர்வாகம் ஏற்று கொண்டிருப்பதாக கருத வேண்டியதுள்ளது. 
    பள்ளி தரப்பில் முன்வைக்க வாதம் இல்லை என்பதால், நீதிமன்றத்தை தவிர்ப்பதாக கருதுகிறேன். உள்நோக்கத்தோடு, நீதிமன்றம் அனுப்பிய நோட்டீசுக்கு கூட, பதில் தரப்படவில்லை.
    வேண்டுமென்றே மாணவனுக்கு மதிப்பெண் மற்றும் மாற்று சான்றிதழ் வழங்கப்படவில்லை. மாணவனின் படிப்பு, ஓராண்டு வீணாகி உள்ளது. 
    எனவே, மனுதாரருக்கு, ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும். இரண்டு வாரங்களில், சான்றிதழ்கள் கிடைப்பதை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால், ௨௫ம் தேதி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
    தனியார் பள்ளியாக இருந்தாலும், பொதுப்பணி ஆற்றி வருவதால், நீதிமன்றம் அனுப்பிய நோட்டீசுக்கு, பதில் அளித்திருக்க வேண்டும். 
    ஒரு பள்ளியே பதில் அளிக்காமல் இருக்கும் போது, சாதாரண மனிதர்களிடம் இருந்து, எதிர்பார்க்க முடியாது. நோட்டீசுக்கு பதில் அளிக்காததால், பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய், வழக்கு செலவு தொகை விதிக்கப்படுகிறது. 
    அதை, சென்னை, அடையாறில் உள்ள அவ்வை இல்லத்துக்கு, இரண்டு வாரங்களில் வழங்க வேண்டும். செலுத்த தவறினால், பள்ளியின் சொத்தை ஏலத்தில் விற்க, ராசிபுரம் தாசில்தார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    சென்னையில் புகை மூட்டம் : விமான சேவைகள் பாதிப்பு


    சென்னை: இரவில் புகை மூட்டம் நிலவியதால், சென்னைக்கு வந்து செல்லும், 23 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
    தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததால், சென்னை நகர் முழுவதும், நேற்று முன்தினம் இரவு, புகை மண்டலம் சூழ்ந்தது. அதனால், சென்னை விமான நிலையத்தில், இரவு, 10:00 மணி முதல், அதிகாலை, 2:00 மணி வரை, விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. ஐதரபாத்திலிருந்து, இரவு, 10:30 மணிக்கு, சென்னை வந்த விமானம், பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
    சிங்கப்பூர், கோலாலம்பூர், தோகா, பாங்காக், ஹாங்காங், டில்லி, மும்பை, மதுரை, ஹைதராபாத், பூனே, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்து, சென்னை வந்து செல்லும், 23 விமானங்களின் புறப்பாடு மற்றும் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பெங்களூரு திருப்பிவிடப்பட்ட விமானம், நள்ளிரவு, 2:00 மணிக்கு மேல், சென்னையில் தரை இறங்கியது.

    பயணி புகார்: ஆம்னி பஸ் பறிமுதல்


    நாகர்கோவில்: தீபாவளியை ஒட்டி, ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்தது. 
    ஆனால், பல பஸ்களிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை சென்னையில் இருந்து நாகர்கோவிலிலுக்கு புறப்பட்ட பஸ்சில், 1,000 ரூபாய் கட்டணத்துக்கு பதிலாக, 2,850 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
    இதுபற்றி பயணியர் அலைபேசியில் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.
    இதை தொடர்ந்து, சென்னை போக்குவரத்து அதிகாரிகள் பஸ் கிளம்பும் இடத்திற்கு செல்லும் முன், பஸ் அங்கிருந்து நாகர்கோவிலுக்கு புறப்பட்டு விட்டது. இதுபற்றி அவர்கள் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர்.
    நேற்று காலை இந்த பஸ் நாகர்கோவில் வந்ததும், அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதில், பஸ்சில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அந்த பஸ் பறிமுதல் செய்யப்பட்டது.


    தீபாவளி மது விற்பனை ரூ.240 கோடி : ரூ.90 கோடி சரிந்தது ஏன்?

    தீபாவளி மது விற்பனை ரூ.240  கோடி : ரூ.90 கோடி சரிந்தது ஏன்?
    தமிழகத்தில், தீபாவளியை ஒட்டி, இரண்டு நாட்களுக்கு, 500 கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனை நடக்கும் என, எதிர்பார்த்த நிலையில், 240 கோடி ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகி உள்ளது. இது, 2016 தீபாவளியை விட, 90 கோடி ரூபாய் குறைவு.
    தமிழக அரசின், 'டாஸ்மாக்' கடைகளில், ஆண்டு தோறும், தீபாவளிக்கு, பீர் மற்றும் மது வகைகள் விற்பனை அதிகம் இருக்கும். 2016 தீபாவளியை முன்னிட்டு, இரு தினங்களுக்கு, 330 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகின. 
    அதனால், இந்த தீபாவளிக்கு, 500 கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனை இருக்கும் என, டாஸ்மாக் நிர்வாகம் எதிர்பார்த்தது. ஆனால், 240 கோடி ரூபாய்கு மட்டுமே, மது விற்பனை நடந்துள்ளது.

    இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சமீபத்தில், மது வகைகள் விலை உயர்த்தப்பட்டும், விற்பனை பாதிக்கவில்லை. தீபாவளிக்கு, பணப்புழக்கமும் நன்கு இருந்ததால், 500 கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனை நடக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. 
    இதனால், 700 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள், கடைகளில் இருப்பு வைக்கப்பட்டன.
    தீபாவளிக்கு முந்தைய நாள் தான், மது விற்பனை நன்றாக இருக்கும். 
    ஆனால், அன்று, 80 கோடி ரூபாயும், தீபாவளி நாளில், 160 கோடி ரூபாய் என, இரண்டு நாட்களில், 240 கோடி ரூபாய்க்கு தான் மது பானங்கள் விற்று உள்ளன. 2016 தீபாவளியின் போது விற்பனையான, 330 கோடி ரூபாயை ஒப்பிடும்போது, 90 கோடி ரூபாய் குறைவு.
    தீபாவளிக்கு முதல் நாளான, 17ம் தேதி, இரவு வரை, மழை பெய்வது போல், மேகங்கள் சூழந்து காணப்பட்டன. முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால், வழக்கமாக மதுக்கடைக்கு வருவோரும் வரவில்லை. புரட்டாசியை முன்னிட்டு, பல நாட்களாக, அசைவ உணவு சமைக்காதவர்கள், தீபாவளிக்கு அறுசுவை உணவு செய்தனர். இதனால், வீட்டை விட்டு, பலர் வெளியே வரவில்லை. இதுதவிர, சென்னை போன்ற நகரங்களில் இருந்து, எப்போதும் இல்லாத வகையில், பல லட்சம் பேர் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இதனாலும், மது விற்பனை சரிந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    - நமது நிருபர் -

    'மெர்சல்' ஆன்லைன் டிக்கெட் : அனுமதி மறுப்பால் ஆவேசம்


    தஞ்சாவூர்: கும்பகோணத்தில், மெர்சல் படம் வெளியாகியுள்ள தியேட்டரில், 'ஆன்லைன்' டிக்கெட் வாங்கியவர்களை அனுமதிக்காததால், ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    விஜய் நடித்த மெர்சல் படம், நேற்று முன்தினம், 'ரிலீஸ்' ஆனது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், மூன்று தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. வாசு தியேட்டரில் நேற்று காலை, படம் பார்க்க ரசிகர்கள் குவிந்தனர்.
    'நியூ டாட்காம்' என்ற இணையதளம் மூலம், ஆன்லைனில் டிக்கெட் பெற்றவர்களுக்கு, தியேட்டர் நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டது. தொடர்ந்து, ரசிகர்கள் தியேட்டர் நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    உறுதி செய்யப்பட்ட டிக்கெட் இருந்தும், கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்க, தியேட்டர் நிர்வாகம் மோசடி செய்வதாக, ரசிகர்கள் புகார் கூறினர். இதனால், தியேட்டர் நிர்வாகம், ஆன்லைனில் டிக்கெட் பெற்ற, சிலரை மட்டும் அனுமதித்தது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன், படம் திரையிடப்பட்டது.

    மெர்சல் படத்துக்கு பெங்களூரில் எதிர்ப்பு


    பெங்களூரு: நடிகர் விஜய் நடித்த, மெர்சல் திரைப்படம் திரையிடப்பட்டிருந்த, பெங்களூரின் பல தியேட்டர்களில், அவரது பேனர்கள், கட் அவுட்கள் அகற்றப்பட்டன. 
    கன்னட அமைப்பினருக்கும், விஜய் ரசிகர்களுக்கும் மோதல் அபாயம் நிலவுகிறது.
    கர்நாடகா மாநிலம், பெங்களூரில், 43 தியேட்டர்களில், விஜய் நடித்த, மெர்சல் திரைப்படம், திரையிடப்பட்டுள்ளது. ராதாகிருஷ்ணா தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த, விஜய், கட் அவுட்கள், பேனர்கள், நேற்று முன்தினம் கிழிக்கப்பட்டன. இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள், போராட்டம் நடத்தினர்; போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து, நகரின் பல திரையரங்குகளில் வைக்கப்பட்டிருந்த விஜய் பேனர்கள் அகற்றப்பட்டன. நேற்று, மல்லேஸ்வரம் சம்பிகே திரையரங்கில், ரசிகர்களுக்கும், கன்னட அமைப்பினருக்கு இடையே, மோதல் ஏற்பட்டதாகவும், கன்னடர்கள் தாக்கப்பட்டதாகவும் தகவல் பரவியது.
    இதையறிந்த, கன்னட அமைப்பை சேர்ந்த சிவராமே கவுடா, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் கோவிந்த், பிரவீன் ஷெட்டி உட்பட பலர், சம்பிகே திரையரங்கு முன், போராட்டத்தில் ஈடுபட்டனர். 
    அங்கு வைக்கப்பட்டிருந்த விஜய், கட் - அவுட்டுகள், பேனர்களை கிழித்தனர். இதையடுத்து, திரையரங்கில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    'தினமலர்' செய்தி எதிரொலி : கல்லூரியில் சேர்ந்த மாணவி


    பெரம்பலுார்: அரியலுார் மாவட்டம், கீழசிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் மகள் பத்மப்ரியா, 17. பிளஸ் 2 தேர்வில், 1,114 மதிப்பெண் பெற்று, 'நீட்' தேர்வில், 77 மதிப்பெண்கள் எடுத்தார். இதனால், சித்தா படிப்புக்கு விண்ணப்பித்தார்.
    கவுன்சிலிங்கில், கோவையில் உள்ள தனியார் சித்த மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைத்தது. ஏழ்மை காரணமாக, கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வந்தார். இது குறித்து, நமது நாளிதழில், 17ம் தேதி, படத்துடன் செய்தி வெளியானது.
    தினமலர் வாசகர்கள் பலர், மாணவியின் படிப்புக்கு உதவுவதாக உறுதி அளித்ததுடன், அவரது மொபைல் போனில் தொடர்பு கொண்டு, வங்கி கணக்கில், பணம் செலுத்தினர். சிலர் நேரில் சென்றும் உதவி செய்தனர். இதையடுத்து, 65 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்திய பத்மப்ரியா நேற்று, கோவை, ஆர்.வி.எஸ்., தனியார் சித்த மருத்துவ கல்லுாரியில் சேர்ந்தார்.

    சேலம், காட்பாடி வழியாக ஐதராபாதுக்கு சிறப்பு ரயில்


    சென்னை: கேரள மாநிலம், கொச்சுவேலியில் இருந்து, சேலம், காட்பாடி, திருப்பதி வழியாக, ஆந்திர மாநிலம், ஐதராபாதுக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது.
    இந்த ரயில், கொச்சுவேலியில் இருந்து, நவ., 6, 13, 20 மற்றும் 27ல், காலை, 7:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம், 2:00 மணிக்கு ஐதராபாத் சென்றடையும். இதில், 14 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் உட்பட, 18 பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு துவங்கிவிட்டது.

    NEWS TODAY