Thursday, December 7, 2017

ஆம்பூர் பிரியாணி மாஸ்டர்கள் ஆர்.கே. நகருக்கு படையெடுப்பு

Added : டிச 07, 2017 01:27

ஆம்பூர்: ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் நடப்பதால், ஆம்பூர் பிரியாணி மாஸ்டர்கள் பலர், அங்கு சென்றுள்ளனர். இதனால், உள்ளூரில் மாஸ்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆம்பூர் பிரியாணி மாஸ்டர்கள் சங்க தலைவர் அப்துல் ரகீம், செயலர் பீர்முகமது ஆகியோர் கூறியதாவது: ஆம்பூர் பிரியாணி மாஸ்டர்கள் சங்கத்தில், 234 பேர் பதிவு செய்துள்ளனர். இதில், 132 மாஸ்டர்கள், ஆர்.கே., நகர் இடைத்தேர்தலுக்கு, பல்வேறு கட்சிகள் சார்பில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆம்பூரில், இவர்களுக்கு தினமும், 500 முதல், 1,000 ரூபாய் வரை, கூலி வழங்கப்படும். ஆனால், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு செல்லும் இவர்களுக்கு, தினமும், 1,500 ரூபாய் முதல், 3,000 ரூபாய் வரை, கூலி வழங்கப்படுகிறது. இதுதவிர, தங்குமிடம், வாகன போக்குவரத்து, சாப்பாடு வசதி செய்து கொடுத்துள்ளனர். ஏராளமான பிரியாணி மாஸ்டர்கள் சென்று விட்டதால், உள்ளூரில் பிரியாணி மாஸ்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நெல்லையிலும் கவர்னர் ஆய்வு : 'பார்மாலிட்டி' ஆனது பட்டமளிப்பு விழா

Added : டிச 07, 2017 00:02

திருநெல்வேலி: நெல்லை பல்கலை பட்டமளிப்பு விழாவிற்கு வந்த கவர்னர் புரோஹித், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ததோடு, பஸ் நிலையத்தில் துாய்மை பணியிலும் ஈடுபட்டார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில், நேற்று மதியம், 1:00 மணிக்கு, 25வது பட்டமளிப்பு விழா நடந்தது. கவர்னர் புரோஹித் பங்கேற்று, 752 மாணவ - மாணவியருக்கு, பட்டங்களை நேரடியாக வழங்கினார். முன்னதாக, பல்கலை வளாகத்தில், 1 மெகாவாட் சோலார் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு, கவர்னர் அடிக்கல் நாட்டினார்.
விழா முடிந்து, 2:00 மணிக்கு புறப்பட்ட கவர்னர் புரோஹித், நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு, மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தில் நடந்த துப்புரவு பணிகளை பார்வையிட்டார். கவர்னர் வருகையை முன்னிட்டு, நடைபாதை கடைகள், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பஸ் நிலையம் பளிச் என இருந்தது. மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கவர்னரும், கைகளில் ரப்பர் உறைகளை மாட்டி, சுத்தம் செய்யும் பணியில்ஈடுபட்டார். பின், அவரே குப்பையை கையால் எடுத்து போட்டார். கலெக்டர் சந்தீப் நந்துாரி உள்ளிட்ட அதிகாரிகளும் குப்பை அள்ளினர்.

அங்கிருந்த மாநகராட்சி கமிஷனர் நாராயணன் நாயரிடம், 'குப்பையை போட மக்கும் குப்பை, மக்காத குப்பைக்கு தனித்தனியாக கூடைகள் வைத்துக் கொள்ள கூடாதா... ஒரு அதிகாரிக்கே தெரியவில்லை என்றால், நீங்கள் எப்படி சாதாரண மக்களுக்கு தெரிவிப்பீர்கள்...' என, கவர்னர் கேள்வி எழுப்பினார். பின், துாய்மை பாரத இயக்கத்தின் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார். பஸ் ஸ்டாண்டில் நின்ற ஒரு மாணவியிடம் துண்டு பிரசுரத்தை கொடுத்து, சத்தமாக படிக்க சொன்னார். தொடர்ந்து, தெற்கு பஜார் பகுதியில், துாய்மைப் பணி விழிப்புணர்வு மேற்கொண்டார். பின், வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். சுற்றுலா மாளிகையில், 2:00 மணியில் இருந்து, பல்வேறு துறை அதிகாரிகள், பைல்களுடன் காத்திருத்தனர். இதில், சுகாதாரம் உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட முக்கிய துறை அதிகாரிகளுடன், கவர்னர் ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆலோசனை நடத்தினார்.
மாலையில் மக்கள் பிரதி நிதிகள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், எளிய மக்களை சந்தித்து, குறைகளை கேட்டறிந்தார். இரவு, கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார்.


அ.தி.மு.க.,வினர் ஓட்டம் : வழக்கமாக பல்கலை பட்டமளிப்பு விழாக்களில், அமைச்சர்கள் பங்கேற்பதால், முதல் வரிசையை, அ.தி.மு.க.,வினர் ஆக்கிரமித்து கொள்வர். ஆனால், நேற்று ராஜ்யசபா, எம்.பி., விஜிலா தவிர அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் - எம்.பி.,க்கள் ஒருவர் கூட, பல்கலை பக்கமே எட்டிப்பார்க்கவில்லை.
சபரிமலை படி பூஜை 2034 வரை முன்பதிவு

Added : டிச 07, 2017 01:36

சபரிமலை: சபரிமலை படி பூஜைக்கான முன்பதிவு, 2034ம் ஆண்டு வரை முடிந்துள்ளது. இதனால், பக்தர்கள் படி பூஜை செய்ய 17 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். சபரிமலையில் அதிக கட்டணம் உடைய பூஜை, படிபூஜை. 18 படிகளிலும் பட்டு விரித்து அதில் குத்து விளக்கு தேங்காய் மற்றும் நிவேத்ய பொருட்கள் வைத்து, தந்திரி பூஜை நடத்துவார். 18 படிகளிலும் 18 மலை தேவதைகளுக்காக இந்த பூஜை நடத்தப்படுகிறது. ஒரு மணி நேரம் இந்த பூஜை நடைபெறும். இந்த நேரத்தில் பக்தர்கள் படியேற முடியாது என்பதால் மண்டல மகரவிளக்கு காலத்தில் படி பூஜை நடைபெறாது. மாத பூஜை, விஷூ, திருவிழா போன்றவற்றுக்காக நடை திறக்கும் போது படி பூஜை நடைபெறும். இதற்கான முன்பதிவு, 2034, நவம்பர் மாதம் வரை முடிந்து விட்டது. இதனால், பக்தர்கள் இனி படி பூஜை நடத்த, 17 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். 75 ஆயிரம் ரூபாய் செலுத்தி தற்போது முன்பதிவு செய்யலாம், படி பூஜை செய்யும் காலத்தில் அப்போதைய கட்டணத்தை கூடுதலாக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்பதிவு ஏற்கப்படுகிறது.


Wednesday, December 6, 2017

நலம் தரும் நான்கெழுத்து 11: எதிலும் ‘பெர்ஃபெக்ட்’டா நீங்கள்?

Published : 02 Dec 2017 11:11 IST

டாக்டர் ஜி. ராமானுஜம்



கடவுள்தன்மை என்பது நுணுக்கங்களில் உள்ளது

– லுட்விக் மீஸ்

நீங்கள் துல்லியவாதியா?

தீவிரவாதி, பயங்கரவாதியெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதென்ன துல்லியவாதி என்கிறீர்களா? எதையுமே துல்லியமாக, மிகவும் முழுமையாக, மிகச் சரியாகச் செய்ய வேண்டும் என எண்ணும் மனப்பான்மையே துல்லியவாதம். இது ஆங்கிலத்தில் ‘பெர்ஃபெக்ஷனிசம்’ என அழைக்கப்படுகிறது.

விடாமுயற்சி, பொறுமை, திட்டமிடுதல் போன்ற பண்புகளின் குடும்பத்தைச் சேர்ந்த , அப்பண்புகளுடன் ஒரே ரேஷன் கார்டில் பெயர் இடம்பெறக் கூடிய உடன்பிறப்புதான், எதிலும் மிகச் சரியாக இருக்க வேண்டும் என எண்ணும் பண்பு. உடனடிப் பலன்களை எதிர்பாராமல், உடனடித் தோல்விகளை கண்டுகொள்ளாமல் முழுமையை நோக்கிப் பயணிப்பதே துல்லியவாதம்.

வெற்றிபெற்ற பெரிய மனிதர்களின் குணாதிசயங்களை ஆராய்ந்தவர்கள், விடாமுயற்சியோடு எதையும் மிகச் சரியாகச் செய்யும் துல்லியவாத குணமும் அவர்களது வெற்றிக்கு மிக முக்கியக் காரணியாக அமைந்துள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

நேரம் தவறாமை முக்கியம்

துல்லியவாதிகள், நூறு சதவீத முழுமையின்றி வேறெதிலும் திருப்தி அடைய மாட்டார்கள். இவர்களிடம் இருக்கும் இன்னொரு முக்கியமான குணம், நேரம் தவறாமை. சில நானோ விநாடிகள்கூடத் தாமதமாக வருவது அவர்களுக்குப் பிடிக்காது.

சில இடங்களில் எல்லாமே மிகச் சரியாக இல்லாவிட்டால், ஆபத்தாகக்கூட முடியும். உதாரணத்துக்கு ஒரு அறுவைசிகிச்சை நிபுணர் மிகத் துல்லியமாக எல்லாவற்றையும் வைத்திருந்தாக வேண்டும். அதேபோல் விமான ஓட்டி விமானம் கிளம்புவதற்கு முன் எல்லாவற்றையும் சரிபார்த்தல் இன்றியமையாதது.

விதிமுறைகளைப் பின்பற்றுதல்

கச்சிதவாதி, கறார்வாதி என்றெல்லாம்கூடத் துல்லியவாதிகளை அழைக்கலாம். அவர்களுக்கு இருக்கும் இன்னொரு முக்கியமான பண்பு, விதிமுறைகளை அப்படியே கடைப்பிடித்தல். இன்று நம்முடைய பிரச்சினைகளில் பலவற்றுக்குக் காரணம் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் நாம் காட்டும் அலட்சியமே. தலைக்கவசம் அணிவதிலிருந்து தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதுவரை விதிமுறைகளைப் பின்பற்றுவதில் நாம் காட்டும் அலட்சியம் பல தீமைகளை நமக்குத் தந்துள்ளது.

சுதந்திரம் அடைந்தபின் தமிழகத்தின் முதல் முதல்வரான ஓமந்தூர் ராமசாமியைப் பற்றி ஒரு சுவையான சம்பவத்தைக் கூறுவார்கள். அவர் தனது மகனை அழைத்துக்கொண்டு ஒரு முறை ரயிலில் பயணம் செய்தாராம். இரவு 12 மணி ஆனபோது டிக்கெட் பரிசோதகரை அழைத்து ‘இன்றுடன் என் மகனுக்கு 18 வயது தொடங்குகிறது. ஆகவே, அவனுக்கு முழு டிக்கெட் எடுக்க வேண்டும். ஆகவே மீதித் தொகையை என்னிடம் வசூல் செய்துகொள்ளுங்கள்’ என்று சொன்னாராம். இதுதான் விதிகளைப் பின்பற்றுவதில் சமரசமற்ற துல்லியம்.

ஆக, மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய பண்புகளில் முக்கியமான ஒன்று சமரசமற்ற தன்மை. ஆனால், இந்தத் தொடரைத் தொடர்ச்சியாகப் படிப்பவர்களுக்கு ஒன்று இந்நேரம் தெரிந்திருக்கும். எல்லாப் பண்புகளையும் போன்றே சமரசமற்ற துல்லியவாதமும் அளவுக்கு அதிகமாக இருந்தால், சமநிலைச் சீர்குலைவு ஏற்படும். சரியாக இருப்பது ஒரு குற்றமா என்பவர்கள் அடுத்த வாரம் சரிபார்த்துக் கொள்ளவும்!

கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com
2ஜி அலைக்கற்றை வழக்கில் டிசம்பர் 21-ம் தேதி தீர்ப்பு: சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு

Published : 05 Dec 2017 10:52 IST

புதுடெல்லி

முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிரான, 2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 21-ம் தேதி அறிவிக்கப்படும் என சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ 2 வழக்குகளை தொடுத்தது.

இந்த வழக்கு மீதான இறுதி வாதம் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி முடிந்ததையடுத்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு தயாராக காலதாமதம் ஆனதால் தீர்ப்பு தேதி டிசம்பர் 5-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி தீர்ப்பு தேதியை அறிவித்தார். அப்போது அவர் கூறுகையில், ''2ஜி அலைக்கற்றை வழக்கில் டிசம்பர் 21ம் தேதி காலை 10 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும்'' என தெரிவித்தார்.
சங்கடங்கள் தீர்ப்பார் கணபதி! சங்கடஹர சதுர்த்தியை மறந்துடாதீங்க!

Published : 05 Dec 2017 14:59 IST

வி.ராம்ஜி



எந்தவொரு காரியத்தைத் தொடங்குவதாக இருந்தாலும் பிள்ளையாரை வணங்கிவிட்டுத்தான் காரியங்களில் இறங்குவோம். அப்படித் தொடங்குகிற காரியங்களில் துணையாய் இருந்து தும்பிக்கையான் நம்மைக் காத்தருள்வார் என்கின்றனர் பக்தர்கள். இவரை சங்கடஹர சதுர்த்தி நாளில், ஏராளமான பக்தர்கள் வழிபடுவார்கள்.

விநாயகருக்கு உகந்தது அருகம்புல். சங்கடஹர சதுர்த்தி நாளில், இவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வணங்கினால், எல்லாக் கஷ்டங்களும் விலகிவிடும். சந்தோஷம் மனதிலும் இல்லத்திலும் குடிகொள்ளும் என்பது ஐதீகம்.

அதேபோல், வெள்ளெருக்கம்பூவை மாலையாகக் கட்டி, பிள்ளையாருக்கு சார்த்தி பிரார்த்தனை செய்தால், வீட்டில் உள்ள தோஷங்கள் யாவும் நீங்கிவிடும். காரியத்தடைகள் அகலும் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

சங்கடஹர சதுர்த்தி நாளில், அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கு மாலையில் சென்று, விநாயகருக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை தரிசிப்பது நன்மைகளைத் தரும்.

முடிந்தால், அபிஷேகப் பொருட்களை வழங்கலாம். அதேபோல், சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், அருகம்புல் மாலையோ வெற்றிலை மாலையோ வெள்ளெருக்கம்பூ மாலையோ சார்த்தி வேண்டிக் கொள்வது வினைகள் அனைத்தையும் தீர்க்கும்.

இன்னும் இயலும் என்றால், பிள்ளையாருக்குக் கொழுக்கட்டையோ சுண்டலோ நைவேத்தியமாகப் படைக்க உதவுங்கள். உங்கள் வாழ்க்கை இன்னும் வளமாகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

நாளை 6.12.17 புதன்கிழமை அன்று சங்கடஹர சதுர்த்தி. மறக்காமல், விநாயகரைத் தரிசியுங்கள். நம் சங்கடங்களையெல்லாம் தீர்த்தருள்வார் மகா கணபதி!
ரூ.1 கோடி வரதட்சணை கேட்டதால் கடைசி நிமிடத்தில் திருமணத்தை நிறுத்திய டாக்டர் மணப்பெண்

Published : 06 Dec 2017 09:21 IST

கோட்டா



திருமண நாளில் ரூ.1 கோடி வரதட்சணை கேட்டதால் பெண் பல் மருத்துவர் ஒருவர் தனது திருமணத்தை கடைசி நிமிடத்தில் நிறுத்தினார்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பேராசிரியராக பணியாற்றி வரும் அனில் சக்ஸேனா என்பவரின் மகள் ரஷி. பல் மருத்துவரான ரஷிக்கும் உ.பி.யின் மொராபாத் மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் சாக்ஷம் மாதோக் என்பவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை திருமணம் நடைபெறவிருந்தது.

கடந்த சனிக்கிழமை திருமணம் நிச்சயம் செய்யப்பட்டபோது மணமகனுக்கு காரும் 50 கிராம் தங்க நாணயங்களும் பரிசாக வழங்கப்பட்டன. கார் தவிர வரதட்சணை மற்றும் பிற ஏற்பாடுகளுக்காக ரூ.35 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது என மணமகள் தரப்பில் தெரிவிக்கின் றனர்.

இந்நிலையில் திருமணத்துக்கு முன்பு மணமகன் குடும்பத்தினர் திடீரென பரிசுப் பொருட்கள், பணம், நகை என கூடுதலாக ரூ.1 கோடி வரதட்சணை கேட்டதால் அனில் சக்ஸேனாவும் அவரது மனைவியும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் தங்கள் மகள் ரஷியிடம் பேசினர். ரஷி தொலைபேசியில் மணமகனிடம் பேசினார். ஆனால் அவர் வரதட்சணையில் பிடிவாதமாக இருந்ததால் அவரை திருமணம் செய்துகொள்ள ரஷி மறுத்துவிட்டார்.

என்றாலும் திருமண விருந்து பரிமாறப்பட்ட பிறகே இந்த விஷயத்தை உறவினர்களிடம் அனில் சக்ஸேனா குடும்பத்தினர் தெரிவித்தனர். திருமணத்துக்கு மறுத்த ரஷியின் முடிவை விருந்தினர்கள் பாராட்டினர்.

இதுதொடர்பாக மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக நயாபுரா காவல் நிலையத்தில் சக்ஸேனா புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.- பிடிஐ
சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பும் விஜயகாந்தை கைது செய்யக்கூடாது: பிடிவாரண்டுக்கு உயர் நீதிமன்றம் தடை

Published : 06 Dec 2017 20:12 IST

சென்னை



விஜயகாந்த் - கோப்புப் படம்

தேமுதிக தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்துக்கு எதிராக ஆலந்தூர் நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்ட்டினை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் சென்னை திரும்பும் அவரை கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

விஜயகாந்த் 2011-க்குப் பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கோபமாக நடந்துகொண்டார். மதுரை செல்வதற்காக கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை விமான நிலையம் வந்த போது அவரிடம் கேள்வி கேட்க வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பாலுவிடம் மோதலில் ஈடுபட்டு வாக்குவாதம் ஆனது. இதில் அவர் தாக்கப்பட்டதாக அளித்த புகாரின் பேரில் சென்னை விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


இது சம்பந்தமான வழக்கு சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் விசாரணை முடிந்து போலீஸார் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டனர். எதிர்தரப்பான குற்றம்சாட்டப்பட்ட விஜயகாந்துக்கு குற்றப்பத்திரிகை நகலை வழங்க விஜயகாந்தை நேரில் ஆஜராக ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பலமுறை ஆஜராகாத விஜயகாந்துக்குப் பதில் அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.

டிச.5 அன்று கட்டாயம் ஆஜராக உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது. கடந்த வாரம் சிகிச்சைக்காக விஜயகாந்த் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயகாந்த் சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக சென்றிருப்பதால் அவரால் ஆஜராக இயலவில்லை என்று தெரிவித்தார். அவர்களது விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத ஆலந்தூர் நீதிமன்றம், விஜயகாந்த் மீது ஜாமீனில் வெளிவராத பிடிவாரண்ட்டினை பிறப்பித்து வழக்கை அடுத்த ஆண்டு பிப்.13-க்கு ஒத்திவைத்தது.

இந்த உத்தரவை எதிர்த்து விஜயகாந்த், அனகை முருகேசன் ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது, அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு வழக்கறிஞர் வி.டி.பாலாஜி முறையிட்டார்.


அதனை ஏற்ற நீதிபதி வழக்கை விசாரித்து, பிடிவாரண்ட்டினை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் நாளை சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பும் விஜயகாந்தையும் கைது செய்யக் கூடாது என விமான நிலைய காவல் நிலையத்துக்கு அறிவுறுத்தவும் அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.

ஜெ., மரண விசாரணை : அரசு மருத்துவர்கள் ஆஜர்

Added : டிச 05, 2017 22:15

சென்னை: ஜெ., மரணம் தொடர்பான விசாரணை கமிஷன் நீதிபதி, நேற்று, இரு அரசு மருத்துவர்களிடம் விசாரணை நடத்தினார். இன்று, தீபாவின் கணவர், மாதவன் மற்றும் அரசு மருத்துவரிடம், விசாரணை நடைபெற உள்ளது.

'சம்மன்' : ஜெ., மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக, அரசு மருத்துவர்களிடம், நீதிபதி, ஆறுமுகசாமி விசாரணை நடத்துகிறார். இதுவரை, தி.மு.க., பிரமுகர், சரவணன், முன்னாள் மருத்துவக் கல்வி இயக்குனர்கள், விமலா, நாராயணபாபு ஆகியோரிடம் விசாரணை நடந்தது. சென்னை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, மயக்கவியல் துறை பேராசிரியர், கலா; மருந்தியல் துறை துணை பேராசிரியர், முத்துசெல்வன் ஆகியோர், நேற்று விசாரணைக்கு ஆஜராகினர். காலை, 10:30 மணியில் இருந்து, பிற்பகல், 2:15 மணி வரை அவர்களிடம், நீதிபதி, ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார். அவர்கள் இருவரும், முதல்வருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் குழுவில் இடம் பெற்றிருந்தனர். அவர்களிடம், ஜெ., உடல் நலம் குறித்த விபரங்களை, நீதிபதி விசாரித்ததாக கூறப்படுகிறது. இன்று, அரசு மருத்துவர், டிட்டோ, ஜெ., அண்ணன் மகள், தீபாவின் கணவர், மாதவன் ஆகியோர் ஆஜராக, கமிஷன் சார்பில், 'சம்மன்' அனுப்பப்பட்டு உள்ளது.

மனு : அதே போல், அரசு மருத்துவர்கள், பாலாஜி, தர்மராஜன் ஆகியோர், நாளை விசாரணை கமிஷனில் ஆஜராக, சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இதற்கிடையில், அ.தி.மு.க., - ஜெ., என்ற அமைப்பை துவக்கியுள்ள, பசும்பொன் பாண்டியன் என்பவர், 'முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம் விசாரணை நடத்த வேண்டும்' என, மனு கொடுத்து உள்ளார்.
தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: தலைமை ஆசிரியர்களுக்கு அதிகாரம்

Added : டிச 05, 2017 22:09 

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள இடங்களில், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 6,000க் கும் மேற்பட்ட, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. 

இவற்றில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்கள் நடத்துகின்றனர். பள்ளிகளில், 3,000க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், காலியாக உள்ளன. அதனால், பல பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில், பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி, காலியிடங்களை தற்காலிகமாக நிரப்ப, முடிவு செய்துஉள்ளனர்.


அதன்படி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் மேற்பார்வையில், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே, தற்காலிக ஆசிரியர்களை நியமித்து கொள்ளலாம். 


மாதம், 7,500 ரூபாய் என, பெற்றோர் - ஆசிரியர் கழகம் வழியே, மாத சம்பளம் வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

- நமது நிருபர் -
புத்தாண்டு முதல், '4ஜி' சேவை : பி.எஸ்.என்.எல்., துவக்கம்

Added : டிச 05, 2017 22:12 |
தமிழகத்தில், புத்தாண்டு முதல், பி.எஸ்.என்.எல்., நிறுவனம், '4ஜி' சேவையை துவங்க உள்ளது. 

இது தொடர்பாக, சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய, சென்னை தொலை தொடர்பு வட்ட, தலைமை பொது மேலாளர், கலாவதி கூறியதாவது:


பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள், எதிர்பார்க்கும், '4ஜி' சேவை, ஜன., முதல் துவங்கும். அதற்காக, 'நோக்கியா' நிறுவனம் வாயிலாக, 200 கோபுரங்களை நிறுவுவதற்கு, கருவிகள் வாங்கப்பட்டு உள்ளன. மேலும், 480, '3ஜி' கோபுரங்கள் மற்றும், 265, '2ஜி' கோபுரங்கள் என, 1,000க்கும் மேற்பட்ட கோபுரங்கள், அதற்கான கட்டுப்பாட்டு அறை அமைப்பதற்கான கருவிகள், நோக்கியாவிடம் வாங்கப்படுகின்றன. இதனால், பி.எஸ்.என்.எல்., சேவை பல மடங்கு அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
சட்ட சிக்கலில் பாரதிதாசன் பல்கலை

Added : டிச 05, 2017 22:08 |

பாரதிதாசன் பல்கலை யில், விதிகளை மீறி பணி நியமனம் மேற்கொள்வதை தடுக்கும்படி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர, சிண்டிகேட் உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.

பாரதிதாசன் பல்கலையில், இந்த ஆண்டு, ஜூன் முதல், துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. புதிய துணை வேந்தரை நியமிக்க, தேடல் குழு அமைக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 241 பேர் விண்ணப்பித்து உள்ளதாக, அவர்களின் பெயர் விபரங்களை, பல்கலை இணையதளத்தில், உயர்கல்வித்துறை வெளியிட்டது. விண்ணப்பித்தோரில், தகுதியானவரை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து, தகுதியான மூன்று பேர் பட்டியலை, தேடல் குழுவினர், கவர்னரிடம் வழங்குவர். இதனிடையே, துணைவேந்தர் நியமிக்கப்படும் முன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, பதிவாளர் மற்றும் தொலைநிலை கல்வி இயக்குனர் பதவிகளை நிரப்ப, உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
உயர்கல்வித்துறை செயலர், சுனில் பாலிவால், கல்லுாரி கல்வி இயக்குனர், மஞ்சுளா ஆகியோர் கொண்ட, பாரதிதாசன் பல்கலையின் தற்காலிக நிர்வாக கமிட்டி, இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்காக, வரும் 12ல், சிண்டிகேட் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, பல்கலையின் சிண்டிகேட் உறுப்பினர்கள், கல்லுாரி பேராசிரியர்கள் தரப்பில், கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த ஆண்டு, ஏப்., 20ல், உயர்கல்வி செயலர், சுனில் பாலிவால் பிறப்பித்த உத்தரவில், 'துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிவதற்கு, மூன்று மாதம் உள்ள நிலையில், எந்த பல்கலையும் பணி நியமனம் மேற்கொள்ளக்கூடாது' என, குறிப்பிட்டுள்ளார். இதன்படி, பல்கலை துணைவேந்தர் இல்லாதபோது, பணி நியமனம் செய்யக்கூடாது. ஆனால், பாரதிதாசன் பல்கலைக்கு மட்டும், உயர்கல்வி செயலர், தான் பிறப்பித்த உத்தரவை, தானே மீறுவது போல் உள்ளது என, சிண்டிகேட் உறுப்பினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதுதொடர்பாக, முதல்வரின் தனிப்பிரிவு, கவர்னர், உயர்கல்வி அமைச்சர் ஆகியோருக்கு, சிண்டிகேட் உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 


'வரும், 12ல் நடக்க உள்ள சிண்டிகேட் கூட்டத்தை நடத்தக்கூடாது; பணி நியமன நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை, சிண்டிகேட் உறுப்பினர்கள் எழுப்பி உள்ளனர். இந்த பிரச்னை தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக, சிண்டிகேட் உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -
11 வயது பிள்ளையை MRT ரயிலில் மானபங்கம் செய்த ஆடவர் கைது 

5/12/2017 21:30

சிங்கப்பூரில், 11 வயதுப் பிள்ளையை MRT ரயிலில் மானபங்கம் செய்ததற்காக 26 வயது ஆடவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் நேற்று பிற்பகல் கிளமெண்டி மற்றும் ரெட்ஹில் நிலையங்களுக்கு இடையே நடந்தது.

14 வயதிற்குக் கீழானவரை மானபங்கம் செய்ததற்காக ஆடவர் நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

குற்றத்திற்கு ஈராண்டுச் சிறைதண்டனை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

சக கட்டுமான ஊழியரைத் தாக்கிய இந்தியக் கட்டுமான ஊழியருக்குச் சிறை, பிரம்படிகள்

https://seithi.mediacorp.sg/mobilet/singapore/06-dec-sungei-attack/3904176.html

இந்தியாவைச் சேர்ந்த அருணாசலம் மணிகண்டன், 21 வயது கணேசன் அருண்பிரகாஷைக் கத்தியால் பலமுறை கழுத்திலும் நெஞ்சிலும் வெட்டினார்.

இருவருக்கும் இடையில் மூண்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அருணாசலம் அவ்வாறு செய்தார். ஓல்ட் சுவா சூ காங் ரோட்டிலுள்ள சுங்கை தெங்கா ஊழியர் தங்குமிடத்தில், கட்டுமான ஊழியர்களான அவ்விருவரும் வசித்து வந்தனர்.

இவ்வாண்டு மார்ச் 21ஆம் தேதி,  குடிபோதையில் தங்குமிடத்துக்குத் திரும்பிய அருணாசலம், அங்கு வாந்தி எடுத்தார். அதனைச் சுத்தப்படுத்த கணேசன் அவரிடம் கோரினார். அருணாசலமோ, அதற்குச் செவிசாய்க்க மறுத்து கணேசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அமளியைச் செவியுற்ற அவர்களது மேற்பார்வையாளர் தலையிட்டு, அருணாசலத்தைச் சுத்தம் செய்யச் சொன்னார்.

அப்போதும், அருணாசலம் சுத்தம் செய்யாமல், துணியைக் கொண்டு வாந்தியை மறைத்தார்.
சற்று நேரத்திற்குப் பிறகு, அருணாசலம் 30 செண்டிமீட்டர் நீளக் கத்தியை எடுத்துக்கொண்டு, கட்டிலில் படுத்திருந்த கணேசனைப் பலமுறை வெட்டியதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் திரு கணேசனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. வெட்டுக் காயங்களில் ஒன்று அவரது மூச்சுக்குழாய்க்கு அருகில் இருந்தது.
காயங்கள் பலமாக இருந்தபோதும் அவர் உயிர் தப்பினார்.வேண்டுமென்றே பலத்த காயத்தை ஏற்படுத்திய குற்றத்திற்கு, ஆயுள் தண்டனையுடன் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.
1.31 கிலோகிராம் போதைப்பொருள் பறிமுதல் 

6/12/2017 19:42

https://seithi.mediacorp.sg/mobilet/singapore/06-dec-drug-bust/3904392.html

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நடத்திய சோதனையில் 1.31 கிலோகிராம் போதைமிகு அபின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்பில், சந்தேக நபர்கள் ஐந்து பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் சந்தை மதிப்பு, 138,000 வெள்ளிக்கும் அதிகம். தோ பாயோ ஈஸ்ட்டிலுள்ள அடுக்குமாடி வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது அங்கு இரண்டு ஆடவர்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டனர். அந்த வீட்டிலிருந்து சுமார் 1 கிலோகிராம் போதைமிகு அபின் கைப்பற்றப்பட்டது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தம்பனீஸ் ஸ்ட்ரீட் 44-இல், போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின் பேரில், 44-வயது ஆடவர் ஒருவர் கைதானார்.அந்த நபரிடம் இருந்து 313 கிராம் போதைமிகு அபின் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதுச் சம்பவத்துக்கு முன்னர் அந்த ஆடவரைச் சந்திக்கச் சென்ற சந்தேகத்துக்குரிய போதைப் புழங்கி ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

விசாரணை தொடர்கிறது.

போதைப் பொருளுக்கு எதிரான சட்டத்தின்படி, 15 கிராமுக்கு அதிகமான போதைமிகு அபினைக் கடத்துவோருக்கு மரண தண்டனை விதிக்கமுடியும்.


சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜயகாந்த்தின் புதிய புகைப்படம்! 
















மருத்துவ சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் சென்றுள்ள தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த், ஏற்கெனவே சிங்கப்பூர் சென்று சிகிச்சைபெற்று வந்திருந்தார். ஆனால், விஜயகாந்த்துக்கு பேசுவதில் தொடர்ந்து சிரமம் இருந்துவந்தது. இந்தநிலையில், கடந்த 28-ம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் சென்றிருந்த நிலையில், அங்கு அவர் ஹோட்டல்களில் விஜயகாந்த் இருக்கும் போட்டோக்கள் வெளிவந்து சமூக வலைதளங்களில் வைரலாகியது.

தற்போது, சிகிச்சைப் பெறும் உடை அணிந்து மருத்துவமனை ஊழியருடன் விஜயகாந்த் நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படம் தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 


Dailyhunt

"இந்த விவகாரத்தை சும்மா விட மாட்டோம்..!" முஷ்டி முறுக்கும் விஷால்
தரப்பு




செ ன்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் அறிவித்துடன், வேட்புமனுவையும் தாக்கல் செய்தது, தமிழக அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தத் தேர்தல் குறித்து அவருடன் சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், நடிகர் விஷால் சுயேச்சையாக ஆர்.கே.நகரில் நிற்க, டிசம்பர் 4-ம் தேதி தேர்தல் அலுவலரிடம் தன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விஷால் தேர்தலில் போட்டியிடுவதற்கு இயக்குனரும், தயாரிப்பாளருமான சேரன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழ்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி முன்னிலையில், இத்தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் பரிசீலனை டிசம்பர் 5-ம் தேதி நடந்தது. விஷால் மனுவில் பல்வேறு குறைகள் இருப்பதால் அதனை ஏற்கக்கூடாது என அ.தி.மு.க, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. எனவே, விஷால் வேட்பு மனு நிராகரிக்கப்படும் என்ற தகவல் வெளியானதால் ஆர்.கே.நகரில் பெரும் பரபரப்பு நிலவியது. 'தன் மனுவை நிராகரிக்கக் கூடாது' என விஷால்தரப்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டது.

பிற்பகலுக்குப் பிறகு விஷால் மனுவில் அவரை முன்மொழிந்தவர்கள் என தெரிவிக்கப்பட்ட இருவர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரின் மனு நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. தேர்தல் அலுவலகம் முன் விஷால் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு தொடர்ந்து நீடித்தது. அதன் பின்னர் தன்னை முன் மொழிந்தவர்களை, அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் ஆதரவாளர்கள் மிரட்டியதற்கான தொலைபேசிய ஆடியோ ஆதாரங்களை தேர்தல் அலுவலரிடம் விஷால் சமர்ப்பித்தார். மீண்டும் தேர்தல் அலுவலரைச் சந்தித்துமுறையிட்டார் "தேர்தலில் நின்று வெற்றி பெற்று இத்தொகுதி மக்களுக்கு எதாவது செய்யவேண்டும் என எண்ணுகிறேன்" என்று கேட்டுக்கொண்டார். பின்னர் விஷால் மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு 11 மணியளவில், போதிய எண்ணிக்கையிலானோர் விஷால் மனுவை முன்மொழியவில்லை என்று கூறி அவரின் மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த விவகாரம் அரசியல்களத்தில் பெரும் தீயாகப் பற்றிக் கொண்டுள்ளது.



அரசியல் அழுத்தம் காரணமாகவே விஷால் மனு நிராகரிக்கப்பட்டிருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். முன் மொழிந்தவர்கள், மிரட்டப்பட்டதற்கான முகாந்திரம் இருப்பதால் இந்த விவகாரத்தை சட்ட ரீதியில் விஷால் அணுக வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமன்றி விஷால் வேட்பு மனு விவகாரம் முடியும்வரை இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக விஷாலின் செய்தித் தொடர்பாளர் முருகராஜைத் தொடர்பு கொண்டு பேசினோம். "சுயேச்சை வேட்பாளர்களில் நேர்மையான ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவருக்கு ஆதரவாக விஷால் பிரசாரம் செய்யவுள்ளார். அதேநேரத்தில் இந்த விவகாரத்தை சும்மா விடப்போவதில்லை. மனு நிராகரிக்கப்பட்டது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அரசியல் அழுத்தம் காரணமாக இவ்வாறு செய்துள்ளனர். இதனை அவ்வளவு எளிதாக விட்டுவிட மாட்டோம். தேர்தல் அலுவலரிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே, அவர் வெளியில் சென்று பேசிவிட்டு வந்து, விஷாலின் மனுவை நிராகரித்தார். அதனால் அவருடைய மொபைல் போனுக்கு வந்துள்ள அனைத்து அழைப்புகளின் பட்டியலைத் தயரித்து வருகிறோம். தேர்தல் ஆணையத்தை அணுகி, அனைத்து ஆவணங்களையும் வழங்க இருக்கிறோம். மேலும் முன் மொழிந்தவர்கள் இருவர் மிகவும் பயத்துடன் உள்ளனர். அந்த நபர்களிடமும் பேசி வருகிறோம். சட்ட வல்லுநர்களிடமும் ஆலோசனை நடத்தி வருகிறோம். விரைவில் இந்த விவகாரத்தில் எங்களுக்கு நீதி கிடைக்கும்" என்றார்.

இதுகுறித்து தேர்தல் அலுவலர்களை பலமுறை தொடர்பு கொண்டும் நமது அழைப்பை அவர்கள் யாரும் ஏற்கவில்லை. விஷால் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியைத் தொடர்பு கொண்டு பேசினோம்.. "உங்களுடைய கேள்விகளை 'வாட்ஸ்அப்' மூலம் அனுப்பி வையுங்கள். நான் பதில் தருகிறேன்" என்றார். ஆனால், அவருக்கு கேள்விகளை அனுப்பி வைத்து விட்டு மீண்டும் பலமுறை தொடர்பு கொண்டோம். ராஜேஷ் லக்கானியும் நம்முடைய கேள்விகளுக்குப் பதில் அளிக்கவில்லை.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, வாக்குப்பதிவுக்கு இரண்டு நாள்கள் முன்னதாக, பணப்பட்டுவாடாவைக் காரணம் காட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்தமுறை நீதிமன்ற தலையீட்டால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படாமல், முறையாக, நேர்மையாக வாக்குப்பதிவு நடந்தால் சரி...

Dailyhunt
திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா: 350 சிறப்பு பஸ்கள் இயக்கம் 



காரைக்கால்: திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தெர்பாரண்யேஸ்வரர் கோயில்(சனி பகவான் கோயில்) உள்ளது. இங்கு வரும் 19ம் தேதி சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இதையொட்டி பக்தர்கள் வசதிக்காக போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தருவது குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கேசவன் பேசுகையில், 'தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து பக்தர்களை திருநள்ளாறுக்கு அழைத்து வருவதுபோல் மீண்டும் அதே பகுதிக்கு பக்தர்களை கொண்டு செல்வதிலும் பேருந்து நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

சென்னை உள்ளிட்ட தொலைதூர பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் விழா முடியும் வரை சீர்காழி, சிதம்பரம், கும்பகோணம் போன்ற பகுதிகளில் ஏறி இறங்கும் பயணிகளை ஏற்ற மாட்டோம் என்று கூறக்கூடாது. பக்தர்கள் வசதிக்காக காரைக்கால்- கும்பகோணம் வழியாக 100 சிஆர்சி பேருந்துகள், காரைக்கால்- சென்னை வழியாக 100 சிஆர்சி பேருந்துகள், எஸ்இடிசி பேருந்துகள் 50, காரைக்கால்- புதுச்சேரி வழியாக 40 புதுச்சேரி சாலை போக்குவரத்து பேருந்துகள், 25 தனியார் பேருந்துகள் உள்ளிட்ட 350 பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் திருநள்ளாறு யாத்ரிகா நிவாஸ் அருகில் ஒரு பேருந்து நிலையம், தேனூர் சுரக்குடி அருகில் ஒரு பேருந்து நிலையம் உட்பட 3 பேருந்து நிலையங்கள் மற்றும் வேன், கார், டூவீலர்கள் நிறுத்த தனி இடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார். கோயில்கள் நிர்வாக அதிகாரி விக்ராந்தராஜா, போக்குவரத்துத்துறை ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் புதுச்சேரி சாலை போக்குவரத்துக்கழக, தமிழக சாலை போக்குவரத்துக்கழக அதிகாரிகள் பங்கேற்றனர். 

 
Dailyhunt

Doctor who does not use computer can not regain license: Judge

Doctor who does not use computer can not regain license: Judge

Age Limit of Senior Residentship revised in New Delhi

Age Limit of Senior Residentship revised in New Delhi
MBBS student fails by one mark, but Karnataka HC gives no respite 

DECCAN CHRONICLE. | SHASHIPRASAD SM

Published Dec 3, 2017, 3:21 am IST


He has been a good student and he does not have any backlog subjects.

Karnataka High Court

Bengaluru: Every mark scored has its own value, especially in situations when that single mark turns out to be a decider about your academic standard and even your future.

In one such situation, a final year MBBS student, who fell short of a mark to obtain minimum pass marks in a subject had approached High Court seeking directions to the authorities to revaluate his answer scripts pertaining to Obstetrics and Gynaecology, Theory papers 1 and 2 and to further apply the system of moderation or awarding of grace marks in accordance with MCI guidelines and other incidental and ancillary reliefs.

However, the court refused to grant any relief to the student citing that it cannot interfere in matters pertaining to academic standards, particularly with regard to evaluation of answer scripts.

It said that no relief can be granted to the student except directing the University to accept the fee for supplementary examination, which is to take place in December-2017, in the event the student tenders the fee within a stipulated period as directed.

Earlier the advocate for the student had submitted that the student appeared for the examination in Obstetrics and Gynaecology in his Final Year MBBS Course. He has been a good student and he does not have any backlog subjects. It is also noted that he has failed in Theory Papers 1 and 2, Theory Viva-voce in Obstetrics and Gynaecology paper, his advocate had argued, adding that the University ought to have granted 'five' grace marks.

But even after getting those grace marks, his total would be 119 out of 240 marks (currently it is 114). He would still be short by 'one' mark, as it is necessary to have at least 120 out of 240 marks (50%) to secure a pass in a subject.

In respect of certain answers, it was argued that the evaluator has awarded 'zero' marks, which is impermissible. In circumstances, the advocate had sought relief for the petitioner, so that he could clear the final year MBBS course and take up his housemanship or permit him to enroll for housemanship and in the interregnum he would clear his papers in Obstetrics and Gynaecology.

However, the advocate for the University submitted that no doubt grace marks have not been awarded in this case, but even after grace marks the petitioner would be short by one mark. That revaluation of the papers has already taken place. Despite that, the petitioner has not been able to clear his papers. That the Rules do not provide for revaluation of the answer scripts once again through an expert of the University or an outside expert, it argued.

After taking the submissions into account, the court was of the option that in this case no right of the student has been violated. "Even if a direction is to be issued to the respondent-University to award grace marks to the petitioner in the instant case, as it has not been awarded, that would not give any redressal of petitioner's grievance as he would still be short by one mark and cannot clear the papers in the subject Obstetrics and Gynaecology. In the circumstances, writ petition is dismissed," court ordered.

300 தனியார் பொறியியல் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்க்க தடை: ஏ.ஐ.சி.டி.இ

By DIN  |   Published on : 04th December 2017 11:22 AM  |
aicte
நாடு முழுவதும் உள்ள 300 தனியார் பொறியியல் கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் புதிய மாணவர் சேர்க்கை நடத்த அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தடை விதித்துள்ளது. 
இந்தியாவில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான தனியார் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 13.56 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவற்றில் 800 கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை 50 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. 
கடந்த சில வருடங்களாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது. என்ஜினீயரிங் படிப்பு மீதுள்ள மோகம் குறைந்ததால் கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டவில்லை.

சிறந்த கட்டமைப்பு வசதிகள் கொண்ட கல்லூரிகளை மட்டும் மாணவர்கள் தேர்வு செய்து வருவதால் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத கல்லூரிகளை புறக்கணித்தனர். இதனால் அந்த கல்லூரிகளில் மாணவர்கள் சேராததால் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறியியல் இடங்கள் நிரப்பப்படாமலேயே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் சேர்கை இல்லாமலும் மிக குறைந்த எண்ணிக்கையில் சேர்ந்த மாணவர்களை வைத்துக்கொண்டு தொடர்ந்து கல்லூரிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் தொடர்ச்சியாக 30 சதவீதத்திற்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளை விரைவில் மூடப்பட வேண்டும். அந்த கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டிற்கான புதிய மாணவர்களை சேர்க்கையை உடனிடியாக நிறுத்த வேண்டும் என அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) அனுமதி அளித்துள்ளது.

மேலும் மாணவர் சேர்க்கை 30 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள 500 பொறியியல் கல்லூரிகளை கண்காணித்து வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவர் சேர்க்கைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள கல்லூரிகள் விரும்பினால், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாகவோ, தொழில்பயிற்சி கல்லூரிகளாகவோ மாறிக்கொள்ளலாம் என ஏ.ஐ.சி.டி.இ. கூறியுள்ளது. 

பொறியியல் கல்லூரிகளின் வங்கிக்கடன், முதலீட்டுத்தொகை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கலை, அறிவியல் கல்லூரிகளாக மாற வாய்ப்பு அளிக்கப்படுவதாக ஏ.ஐ.சி.டி.இ. விளக்கமளித்துள்ளது.

ஜெயலலிதா நினைவுநாளில் சசிகலா என்ன செய்து கொண்டிருந்தார்?

By DIN  |   Published on : 06th December 2017 04:49 PM 
0000sasi_pays_homage_to_j

ஜெயலலிதா நினைவுநாளான நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் தலைமையில் அனைத்து அமைச்சர்களும் கருப்புச் சட்டை அணிந்து மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு பேரணி சென்றனர். அங்கே அவர்களது ‘அம்மா’ விற்கு அஞ்சலி செலுத்தியபின் அம்மா வழியில், புரட்சித் தலைவர் எம்ஜிஆரை முன்மாதிரியாகக் கொண்டு தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சியை நடத்திக் கொண்டு செல்வதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இவையெல்லாம் அனைத்து தமிழ் ஊடகங்களிலும் காணொலிக்காட்சிகளாக விவரிக்கப்பட்டு செய்தியாகின.

ஆனால், அதே நேரம் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக ஜெயலலிதாவுடனே இருந்து அவர் முதல்வராக இருந்த போதும் நிழல் ஆட்சி நடத்தியவராகக் கருதப்பட்ட சசிகலா என்ன செய்து கொண்டிருந்தார் என்பதையும் மக்கள் அறிந்து கொள்ளத்தானே வேண்டும். சசிகலா தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருப்பது அனைவரும் அறிந்ததே. கடந்த அக்டோபர் மாதம் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சென்னை குளோபல் மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேறிய சமயம், கணவரை உடனிருந்து கவனித்துக் கொள்ள சசிகலாவுக்கு பரோல் வழங்கப்பட்டது. அதே போல, தற்போது ஜெயலலிதா நினைவுநாளன்றும் மெரினாவில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி துக்கம் அனுஷ்டிக்க தனக்கு பரோல் கிடைக்குமா என சசிகலா தனது வழக்கறிஞர் வட்டாரத்தில் விசாரித்ததாகவும். ரத்த சம்மந்தம் உடையவர்களுக்கு மட்டுமே அப்படி அனுமதி வழங்க சட்டத்தில் வாய்ப்பு இருப்பதால், இவரது பரோல் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும் எனக் கூறப்பட்டதால் அந்த முயற்சியைத் தவிர்த்து விட்டு, பெங்களூர் அதிமுக நிர்வாகியான புகழேந்தி மூலமாக ஜெயலலிதாவின் புகைப்படம் ஒன்று நேற்று சசிகலா இருக்கும் சிறை வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா புகைப்படத்தில் கண்ணாடி இருக்கக் கூடாது என்ற உத்தரவின்படி லேமினேட் செய்யப்பட்ட புகைப்படம் சிறைக்குள் சசிகலா இரங்கல் தெரிவிக்க வேண்டி அனுமதிக்கப்பட்டது. ஜெயலலிதா நினைவுநாளான நேற்றைய தினம் அதிகாலையில் விழித்தெழுந்த சசிகலா, உடனே தயாராகி ஜெயலலிதா புகைப்படத்துக்கு மாலை சூட்டி அஞ்சலி செலுத்தி விட்டு, புகைப்படத்தின் முன்பாகவே அமர்ந்து சுமார் 1 மணி நேரம் தியானத்தில் ஆழ்ந்து விட்டாராம். தியானம் முடிந்ததும் ஜெயலலிதா படத்தைப் பார்த்து கதறி அழுத சசிகலா, ‘அக்கா இறந்து ஒரு வருடம் முடிந்து விட்டதா? என்னால் நம்பவே முடியவில்லை, அவர் இப்போதும் என்னுடனேயே இருப்பது போலத்தான் உணர்கிறேன்’ என்றாராம்.

அதுமட்டுமல்ல, இளவரசி மகன் விவேக்கை அழைத்து, சென்னையில் ஏதாவது ஒரு ஆதரவற்றோர் இல்லத்துக்குச் சென்று அவர்களது அன்றைய சாப்பாட்டுச் செலவை ஏற்றுக் கொண்டு உணவிடச் சொல்லி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி விவேக்கும், அவர் மனைவி கீர்த்தனாவும் நேற்று சென்னை தாம்பரம் அருகே உள்ள ஆதரவற்றோர் இல்லம் ஒன்றுக்குச் சென்று மதியம் மற்றும் இரவு உணவுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அங்கே ஜெயலலிதா நினைவாக உணவிட்டுத் திரும்பினர்.

ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய எம்.ஜி.ஆர்!

By வழக்கறிஞர் சி.பி. சரவணன்  |   Published on : 06th December 2017 01:56 PM 
00000_ayiraththil_oruvan

தமிழ்த் திரையுலகில் பல சாதனைகள் புரிந்து, சரித்திரம் படைத்தவர் டைரக்டர் பி.ஆர்.பந்துலு.
தேசப்பற்று மிக்கவர். “கப்பலோட்டிய தமிழன், “வீர பாண்டிய கட்டபொம்மன்” போன்ற படங்களை பத்மினி பிக்சர்ஸ் சார்பில் அவர் தானே தயாரித்து வழங்கினார். கொடைக்கே கொடை வழங்குவதைப் போல “கர்ணன்” திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கியவர்.
“ஆயிரத்தில் ஒருவன்” படத்திற்காக கதை எழுதப்பட்டு, கதாநாயகனாக நடிப்பதற்கு ஒரு நடிகரை ஒப்பந்தம் செய்யவும் முடிவு செய்துவிட்டார் பி.ஆர்.பந்துலு.

இந்நிலையில்... பழுத்த அனுபவமிக்க தயாரிப்பாளரான வீனஸ் கிருஷ்ணமூர்த்தியும், பி.ஆர்.பந்துலுவும் சந்தித்தனர். தான் அடுத்து தயாரிக்கப்போகும் படத்தின் கதையை பந்துலு அவரிடம் கூறினார். நடிகரைக் கூட முடிவு செய்துவிட்டதாகத் தெரிவித்தார்.

“இது எம்.ஜி.ஆர் நடிக்க வேண்டிய கதை. இந்த மாதிரி படத்தில் அவர் நடித்தால் தான் நன்றாக இருக்கும், படமும் அமோகமாக வெற்றி பெறும்’ எனப் பிரகாசமான முகத்துடன் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி உறுதியாகக் கூறினார்.

”அவரை வைத்து நான் படம் எடுக்க முடியுமா? அவர் சம்மதிப்பாரா? பி.ஆர்.பந்துலு தயங்கிக் கேட்டார்.
“ஏன் முடியாது? நானே அவரிடத்தில் இதைப்பற்றி பேசிவிட்டு, உங்களிடம் சொல்கிறேன்’ என நம்பிக்கை விதையை விதைத்து, புறப்பட்டுச் சென்றார்.

எம்.ஜி.ஆரைப் பார்த்து இது குறித்து பேசினார். எம்.ஜி.ஆர் சம்மதம் தெரிவித்தார்.
பி.ஆர்.பந்துலு உடனே எம்.ஜி.ஆரை சந்திக்க விரும்பினார். ராமாவரம் தோட்டத்திற்குப் போன் செய்தார். தான் புறப்பட்டு வருவதாக” எம்.ஜி.ஆரிடம் சொன்னார்.
எம்.ஜி.ஆரோ, “நீங்கள் பெரியவர் ..உங்களைப் பார்க்க நான் வருவது தான் முறை. நானே வந்து சந்திக்கிறேன்” என்று கனிவோடு கூறினார். 

  “இல்லை... இதோ நான் புறப்பட்டுவிட்டேன். நானே வந்து உங்களை சந்திக்கிறேன். அது தான் சரி!” என்று பி.ஆர்.பந்துலு பதில் கூறிவிட்டு உடனே ராமவரம் தோட்டத்திற்குச் சென்றார்.
அன்னை சத்யா இல்லத்தில் எம்.ஜி.ஆர் வாசலில் நின்று வரவேற்று, அவரை உள்ளே அழைத்துச் சென்றார். இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.

“ஆயிரத்தில் ஒருவன் “ படத்தில் நடிப்பதற்கு எம்.ஜி.ஆர் ஒப்புதல் அளித்ததற்கு பி.ஆர்.பந்துலு  நன்றி தெரிவித்துக் கொண்டார். கலையுலகைப் பற்றி சிறிது நேரம் உரையாடினர்.
பி.ஆர்.பந்துலு தன்  படத்தில் நடிப்பதற்கு எவ்வளவு சம்பளம் வேண்டும், முன்பணம் எவ்வளவு தர வேண்டும் என தயங்கித் தயங்கி கேட்டார்.

எம்.ஜி.ஆர் ”கலகல” வென்று சிரித்தார். பந்துலு வியப்போடு இமையாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“சம்பளம்… முன்பணம்…! சரி ஒரு ரூபாய் கொடுங்கள்…” என அமைதியாகப் புன்னகை புரிந்தார்.
ஒரு லட்ச ரூபாய் முன் பணம் கேட்பதற்குத் தான்.... “ஒரு ரூபாய்” என்று மறைமுகமாக அவர் சொல்கிறார் என்று கருதி, நோட்டுகளை பையிலிருந்து எடுக்க முயன்றார்.

“ஏன் சிரமப்படுகிறீர்கள்? என்ன எடுக்கிறீர்கள். ஒரு ரூபாய்… ஒரே ஒரு ரூபாய்… சாதாரண நாணயம் இருந்தால் கொடுங்கள் போதும்” என எம்.ஜி.ஆர் தீர்மானமாகச் சொன்னார்.
அதிசயத்தை ஆச்சரியத்தோடு பார்ப்பது போல் பந்துலு பார்த்தார்.
“இல்லை…வந்து…” என மறுப்பதற்கு முயன்றார்.

“இந்த விசயத்தில் நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும், தயவு செய்து ஒரு ரூபாய் கொடுங்கள் பெற்றுக் கொள்கிறேன்” என்றார்.

பெரிய தயாரிப்பாளர், பிரமாண்டப் படங்களை இயக்கிய பி.ஆர்.பந்துலு இப்படி ஒருவரை சந்தித்ததில்லை.

அவர் எழுந்து வெளியில் சென்று, தன் உதவியாளர்களிடம் கேட்டு, தேடிப் பிடித்து ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார்.

பந்துலு வருவதைக் கண்ட எம்.ஜி.ஆர் எழுந்து நின்றார் புன்னகை மாறாமல்…
ஒரு ரூபாய் நாணயத்தை “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் நடிப்பதற்கு முன் பணமாக எம்.ஜி.ஆரிடம் பந்துலு வழங்கினார்.

“ஆயிரத்தில் ஒருவன் “ படத்திற்காக கோவாவில் 35 நாட்கள் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர் கலந்து கொண்டார்.

இந்தப்படத்தில் தான் ஜெயலலிதா அவருடன் இணைந்து முதன்முதலில் நடித்தார். பாய்மரக் கப்பலிலும், இயற்கை எழில் சூழ்ந்த கோவா பகுதி கார்வார் கடற்கரையிலும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றது.

பத்மினி பிக்சர்ஸ் கதை இலாக்காவில் அப்போது இருந்தவர்கள் தான் ஆர்.கே.சண்முகமும், ஓம்சக்தி ஜெகதீசனும். ஆயிரத்தில் ஒருவன், படத்திற்கு முதன் முதலாக உரையாடல்களை எழுதிய ஆர்.கே.சண்முகம், பின்பு அவரது பல படங்களுக்கு  எழுதினார். இயக்குனராகவும் உயர்ந்தார்.

படம் வெளிவந்து, அமோக வெற்றி பெற்று, வெற்றிச் செய்தியோடு பந்துலு ஒருநாள் ராமாவரம் தோட்டத்திற்குச் சென்றார். திடீரென்று தாமாகவே உரிய சம்பளத்தை எம்.ஜி.ஆரிடம் அளித்தார்.
எம்.ஜி.ஆர் எவ்வளவோ மறுத்தும், அவருக்கு சேர வேண்டியதை வற்புறுத்தி வழங்கினார்.

ஜெயலலிதா இல்லாத ஓர் ஆண்டு! - அமைச்சர்களின் பர்ஃபாமென்ஸ் என்ன?

ஜோ.ஸ்டாலின், அ.சையது அபுதாஹிர், சூரஜ்ஓவியங்கள்: நெடுமாறன், பிரேம் டாவின்ஸி

ஜெயலலிதா மரணமடைந்து ஓர் ஆண்டு நிறைவடைகிறது. எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் கடந்துவிட்டன. ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தவர்கள்தாம், எடப்பாடியின் ஆட்சியிலும் அமைச்சர்களாகத் தொடர்கின்றனர். ஆனால், ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, எந்த இலாகாவுக்கு, யார் அமைச்சராக இருந்தார் என்பதே பொதுமக்களுக்குத் தெரியாமல் இருந்தது. எடப்பாடி ஆட்சியில், இவர்கள் எப்படி அமைச்சர்கள் ஆனார்கள் என்பதே மக்களுக்குப் புரியாமல் இருக்கிறது! அந்த அளவுக்கு இந்த ஆட்சியின் மீதான விமர்சனங்களும், அமைச்சர்கள் கொடுக்கும் பேட்டிகளும், அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளும் விவாதத்துக்குள்ளாகின்றன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிரடியாக வெளிச்சத்துக்கு வந்த அமைச்சர்களும்... துறை சார்ந்து அவர்களுடைய செயல்பாடுகளும் எப்படி இருக்கின்றன?
ஓ.பன்னீர் செல்வம்
துணை முதல் அமைச்சர்
தர்ம யுத்தத்திற்கு `பெப்பே’ காட்டிவிட்டு , டெல்லி தூதர்களின் ஆணைக்கிணங்க எடப்பாடி பழனிசாமியுடன் சமரசம் ஆன ஓ.பன்னீர்செல்வத்துக்குத் துணை முதல் அமைச்சர் என்ற அந்தஸ்து கிடைத்ததோடு,  நிதி, சட்டம், சட்டமன்றம், வீட்டுவசதி, குடிசைமாற்றுவாரியம், சி.எம்.டி.ஏ துறைகள் அவரது ஆளுகையின் கீழ் வந்தன. ஆனால், இவற்றில் பன்னீரின் செயல்பாடுகள் மணக்கவில்லை. பன்னீர் கையில் இருக்கும் எந்தத் துறையிலும் அவரால் ஸ்கோர் பண்ண முடியவில்லை. இத்தனைக்கும் மூன்று முறை முதல் அமைச்சராக இருந்ததால், அரசாங்க நிர்வாகம் பன்னீருக்கு அத்துப்படிதான். ஆனால், இப்போது அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. காரணம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரை எதுவும் செய்யவிடுவதில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள் பன்னீரின் ஆதரவாளர்கள்.

சென்னையில் இருக்கும் நாள்களில் `கடமையைச் செய்ய’  கோட்டைக்கு வருகிறார் பன்னீர். முதல்வர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தால், முதல்வரைப் போய்ச் சந்திக்கிறார். தமிழகத்தின் நிதி நிலை தள்ளாட்டத்தில் இருப்பது உறுத்துவதால் அவ்வப்போது அதிகாரிகளுடன் சில ஆலோசனைகள் நடத்துகிறார். ஆனால், அந்த ஆலோசனைகள் நடவடிக்கைகளாக மாறுவதில்லை.
கடந்த இரண்டு மாதங்களில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் ஏகப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. சென்னையில் வீட்டுவசதி வாரியத்திற்குச் சொந்தமான மனைகள், முறைகேடான ஆவணங்களைப் பயன்படுத்தி விற்பனை செய்யப் பட்டுள்ளதாகப் புகார்கள் மலைபோல் குவிந்துகிடக்கின்றன. ஆனால், ஒன்றிலும் உருப்படியான நடவடிக்கை இல்லை. `தனக்குத் தேவையான செயலாளர்களைக்கூடக் கேட்டு வாங்க முடியவில்லை; கட்சியில் உரிய மரியாதை இல்லை; ஆட்சியிலும் தேவையான அதிகாரம் இல்லை என்ற அதிருப்தியில் இருக்கும் பன்னீர் செல்வத்தால், அவர் துறையில் மட்டும் என்ன பெரிதாக சாதித்துவிட முடியும் என்கிறார்கள் பன்னீரின் விசுவாசிகள்.

தங்கமணி
மின்சாரத்துறை அமைச்சர்
“உங்களால்தான் எங்களுக்கும் ஆட்சிக்கும் பிரச்னை; அதனால், நீங்கள் ஒதுங்கிக்கொள்ளுங்கள்” என்று தினகரனுக்கு  அதிர்ச்சி கொடுத்த இரண்டு அமைச்சர்களில் ஒருவர். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக இருக்கிறார் தங்கமணி. சமீபகாலமாக தமிழகத்தை மின்வெட்டு பெரிதாக பாதிக்கவில்லை என்பதால் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கிறார் தங்கமணி. ஆனால், மின்சாரத்துறை கடனில் தத்தளிக்கிறது.

 தனியாரிடமிருந்து ஒரு யூனிட் சுமார் நான்கு ரூபாய் வீதம் மின்சாரத்தை விலைகொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. தனியாரிடம் போடப்பட்ட  ஒப்பந்தங்களுக்காகவும், அதிக விலைகொடுத்து வாங்கியதற்காகவும் தமிழ்நாடு மின்சாரவாரியத்திற்கு 96 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.  இதில் 22 ஆயிரம் கோடியைத் தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. எஞ்சியுள்ள கடனை எப்படித் தமிழ்நாடு மின்சார வாரியம் அடைக்கப் போகிறது என்பது தெரியவில்லை.

மின்சாரத்தோடு டாஸ்மாக்கும் இவர் வசம்தான் இருக்கிறது. இந்த நிலையில், மதுபானங்களின் விலையை திடீரென தமிழக அரசு சமீபத்தில் உயர்த்தியது. இந்த விலை உயர்வினால் வரும் தொகையில் கணிசமான தொகையை மதுபானம் சப்ளை செய்கிறவர்களுக்கு வழங்குவது வழக்கம். ஆனால், இந்தமுறை ஒன்றரை மாதங்களுக்குப் பிறகே  வழங்கினார்கள். இடையில் என்ன `பேச்சுவார்த்தை’ நடந்ததோ?!
தமிழகத்தில் மொத்தமுள்ள 11 மதுபான உற்பத்தி நிறுவனங்களில் இரண்டு நொண்டி அடிக்கின்றன. நிர்வாகப் பிரச்னைகளில் அவை சமாளிக்கமுடியாத அளவிற்குப் போய்க்கொண்டிருக்கின்றன. அதேபோல், கொங்கு மண்டலத்துடன் தொடர்புடைய ஒரு மதுபான நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக சரிவரச் செயல்படவில்லை. அது சமீபத்தில் ஆளுங்கட்சி வட்டாரத்துக்குக் கைமாறியிருக்கிறது என்கிற பேச்சு டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் பலமாகக் கேட்கிறது. மத்திய அரசு பண மதிப்பிழப்பு செய்த கால கட்டத்தில், சில இடங்களில் டாஸ்மாக் கடைகளின் மூலம் வங்கியில் செலுத்தப்பட்ட தொகையில் செல்லாத நோட்டுகளும் இருந்திருக்கின்றன. அப்படிச் செலுத்தப்பட்ட செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 800 கோடி ரூபாய் என்கிறார்கள் எதிர்க்கட்சியினர். ``65 கோடிக்கும் குறைவு’’ என்கிறார் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கிர்லோஸ் குமார். அதாவது, ஆளுங்கட்சி பிரமுகர்களின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க டாஸ்மாக் உதவியிருக்கிறது என்ற குற்றச்சாட்டும் விசாரணையும் தற்போது நிலுவையில் இருக்கிறது.

வேலுமணி
நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர்

எடப்பாடி பழனிசாமியின் இருகரங்களில் ஒருவர் அமைச்சர் வேலுமணி. நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி  இரண்டும் இவருடைய துறைகளில் பிரதானமானவை.  இந்த நேரத்தில், உள்ளாட்சித் தேர்தல் இன்னும் தொங்கலில் இருக்கிறது. அதனால், நகராட்சி நிர்வாகம் அதிகாரிகளை வைத்து நடத்தப்படுகிறது. ஆய்வுக்கூட்டங்களை மட்டும் சரிவர நடத்திக்கொண்டிருக்கிறார் அமைச்சர் வேலுமணி.

முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒருமுறை அதிகாரிகள் மத்தியில் `தமிழக உள்ளாட்சித்துறை நிர்வாகம் சீர்கெட்டிருக்கிறது’ என்று குற்றம் சாட்டினார். மத்திய அரசிடம் இருந்து உள்ளாட்சித்துறைக்கு வந்த தொகை பல ஊராட்சிகளுக்கு முழுமையாக இன்னும் போய்ச்சேரவில்லை. கொங்கு மண்டல பிரமுகர்கள் சிலர் இந்தத் தொகையை ஏப்பம் விட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், இந்தப் புகார்கள் எதையும் அமைச்சர் கண்டுகொள்வதாக இல்லை.
செங்கோட்டையன்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
தமிழகத்தின் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா, இன்றைய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் பன்னீர் செல்வம் என அனைவருக்கும் அரசியலில் சீனியர் செங்கோட்டையன்.
செங்கோட்டையனுக்கும் மற்ற மூத்த அமைச்சர்களுக்கும் இருக்கும் வேறுபாடு என்னவென்றால், அவர்களைப்போல் இவர் காமெடி பேட்டிகளைத் தட்டுவதில்லை. பள்ளிக் கல்வித்துறையின் செயலாளராக உதயச்சந்திரன் இருந்தபோது, சில வேலைகள் வேகவேகமாக நடைபெற்றன. அதில் உதயச்சந்திரனுக்குத்தான் பெயர் கிடைத்தது. செங்கோட்டையனுக்குப் பெயரும் கிடைக்கவில்லை; வேறு பிரயோஜனமும் இருக்கவில்லை. அதனால், உதயச்சந்திரனை அந்தத் துறையில் டம்மியாக்குவதற்காக, முதன்மைச் செயலாளர் என்றொரு புதிய பதவியை உருவாக்கி, அந்த இடத்துக்கு பிரதீப் யாதவைக் கொண்டுவந்தார் அமைச்சர். உதயச்சந்திரனுக்குப் பிறகும், பள்ளிக் கல்வித்துறையில் வேலைகள் வேகமாக நடக்கின்றன; அதில் எந்தக் குறையும் இல்லை என்று காட்டத்துடிக்கிறார் செங்கோட்டையன். அதற்காக, ஆய்வுக்கூட்டங்களைத் தொடர்ந்து நடத்திவருகிறார் செங்கோட்டையன்.

அதுவும் ‘நீ்ட்’ பிரச்னைக்குப் பிறகு, கல்வித்துறை அதிகாரிகளுடன் வாரம் ஒருமுறை கூட்டம் போடுகிறார் அமைச்சர். ஆனால், அவரைச் சுற்றி உள்ள டீம் செங்கோட்டையனுக்குச் சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்தக் கும்பல் ஆசிரியர்கள் பணியிடமாற்றம் முதல் பணி நியமனம் வரை, வாரிச்சுருட்டுகிறது என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள். தன் பெயரைப் பயன்படுத்திப் பணம்பார்க்கும் டீமின் ஆதிக்கத்தை அமைச்சர் தடுக்கவும் இல்லை, கண்டுகொள்வதும் இல்லை. காரணம், அமைச்சரின் நெருங்கிய உறவே இந்த டீமில் இருப்பதுதான் என்கிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டுவரும் முயற்சியில் கல்வித்துறை இறங்கியுள்ளது. அதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் தொடங்குவதற்கு முன்பே, கமிஷன் வசூல் வேகம் பிடித்துவிட்டது என்கிறார்கள். அதே நேரம், பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால், பள்ளிக்கல்வித்துறையை நவீனப் படுத்தவேண்டும் என்ற எண்ணம் அமைச்சருக்கு இருப்பதே பாராட்டுதலுக்குரிய விஷயம்தான் என்கிறார்கள் பள்ளிக்கல்வித்துறையினர்.     
விஜயபாஸ்கர்
மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்
ஜெயலலிதா காலத்திலிருந்து இப்போதுவரை மக்கள் நல்வாழ்வுத்துறையை அப்படியே கையில் வைத்திருக்கிறார் விஜயபாஸ்கர்.

குட்கா விவகாரம் உச்சத்தில் இருந்தபோது, தமிழகம் முழுவதும் குட்கா பொருள்கள் விற்பனை முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், இப்போது வழக்கம்போல் மீண்டும் குட்கா விற்பனை சக்கைப்போடு போடுகிறது.

டெங்கு ஒழிப்பிற்காக சுகாதாரத்துறையினர் அனைத்து இடங்களிலும் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், அரசு மருத்துவனைகள், டி.எம்.எஸ் வளாகம் ஆகியவற்றின் சுகாதாரத்தைப் பார்த்தால், அதற்கெல்லாம் ‘ஃபைன்’ தொகையை நிர்ணயமே செய்ய முடியாது. அந்த லட்சணத்தில் இருக்கிறது அவற்றின் சுகாதாரம். கடந்த டிசம்பர் மாதத்திலிருந்தே டெங்குவின் தாக்கம் தமிழகத்தில் தெரிய ஆரம்பித்துவிட்டது. ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சையில் இருந்த நேரத்திலேயே, டெங்கு மரணங்கள் தமிழகத்தில் தொடங்கிவிட்டன. ஆனால், அந்த மரணங்களுக்கான காரணங்களை வேறு பெயர்களில் மாற்றி எழுதி, வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தது மக்கள் நல்வாழ்வுத்துறை.
அதேசமயம் மத்திய அரசின் சுகாதாரத் திட்டங் களை முழுமையாகச் செயல்படுத்திய மாநிலம் என்ற பெருமையைத் தமிழகம் பெற்றுள்ளது. உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. ஆனால், எய்ம்ஸ் மருத்துவனை தமிழகத்திற்குக் கொண்டுவரப்படும் என்று அறிவித்தும் இடம் தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கிறது. 

ஆர்.பி.உதயகுமார்
வருவாய்த்துறை அமைச்சர்
யார் அதிகாரத்தில் இருக்கிறார்களோ அவர்களின் விசுவாசியாக கணநேரத்தில் தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் அரசியல் அறிந்தவர் ஆர்.பி.உதயகுமார்.

பேரிடர் மேலாண்மைத்துறையும், வருவாய்த்துறையும் ஆர்.பி.உதயகுமாரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. தமிழகத்தை நூற்றாண்டு காணாத பஞ்சம் தாக்கியுள்ளது. ஆனால், அதைச் சமாளிக்க வேண்டிய பேரிடர் மேலாண்மை என்ற ஒன்று செயல்படவே இல்லை. பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதே இல்லை. மாலிக் என்பவர்தான் ஆர்.பி.உதயகுமாரின் பி.ஏ. ஆனால், இவர்தான் அந்தத் துறையின் அமைச்சரைப்போல் செயல்படுகிறார் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர். விளைநிலங்களில் கட்டடம் கட்ட பட்டா வேண்டுமா... பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் நிதி வேண்டுமா... எல்லாவற்றுக்கும் மாலிக்கைத்தான் சந்திக்க வேண்டும்.

கடந்த வருடம் பருவமழை பொய்த்துவிட்டது. அதனால், மழையால் எந்தப் பேரிடரும் நிகழவில்லை. ஆனால், இந்தமுறை பருவ மழை கொஞ்சம் தீவிரம் காட்டிய நேரத்தில், தனியாகக் கட்டுப்பாட்டு அறை அமைத்து ஆர்.பி.உதயகுமார் முனைப்பாகச் செயல்பட்டார். ஆனால், மதுரையில் ஒரு தனியார் நிறுவனத்துக்குப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை தாரைவார்க்கச்சொல்லி அமைச்சர் தரப்பினர் அழுத்தம் கொடுப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் புலம்புகிறார்கள்.
ஜெயக்குமார்
மீன் வளத் அமைச்சர்
ஆர்.கே.நகர்த் தொகுதியில் டி.டி.வி.தினகரனுக்காக ஓட்டு கேட்டவர். அதன்பிறகு, தினகரனைக் கட்சியிலிருந்து நீக்கியதாகத் தொலைக்காட்சிகளுக்கு முதன்முதலாகப் பேட்டியும் கொடுத்தவர் அமைச்சர் ஜெயக்குமார். இவர் அமைச்சராகச் செயல்படுவதைவிட ஆளும் கட்சிப் புள்ளியாகத்தான் தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார். தன்னிடமிருந்து நிதித்துறையைப் பறித்து, பன்னீருக்குத் தாரைவார்த்துவிட்டதால் கடும் அதிருப்தியில் இருக்கும் ஜெயக்குமார், பரபரப்பில்லாத மீன்வளத்துறையைக் கையில் வைத்துள்ளார். உலகத்தின் மீன்சுரங்கம் என்று சொல்லப்படக்கூடிய  ‘வெட்ஜ் பேங்க்’ தமிழகக் கடற்கரைப் பகுதியில்தான் இருக்கிறது. அங்கு நம் மீனவர்கள் போக முடிவதில்லை. மாறாக, இலங்கை மீனவர்கள் அந்தப் பகுதியைச் சூறையாடுகின்றனர். ஆனால், அதற்காகப் பெரிதாக எதுவும் ஜெயக்குமார் கவலைப்பட்டதுபோல் தெரியவில்லை.

பிடிக்கப்பட்ட மீன்களை வைப்பதற்கான மீன் பதனக் கிடங்குகள் தமிழகக் கடற்கரை ஓரங்களில் கிடையாது. ராமேஸ்வரத்தில் இருக்கும் ஒரு கிடங்கில் ஒரு வேன் லோடு மீனைக்கூட வைக்க முடியாது. எல்லாக் கடற்கரை கிராமங்களிலும் மீன் வைக்க பதனக் கிடங்குகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஜெயக்குமாரின் மேஜையில் நீண்டகாலமாக இருக்கிறது.

மத்திய அரசின் நிதி உதவியில் கடலோரப் பகுதிகளில் கடல் அரிப்பைத் தடுக்கக் கற்கள் கொட்டுவதற்கான பணிகள் மீன்வளத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. ராமநாதபுரம், நாகப்பட்டினம், கடலூர், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் இந்தப் பணிகள் நடைபெறவுள்ளன. இந்தப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் அனைத்தும் ஜெயக்குமாருக்கு வேண்டியவர்கள் வசமே ஒப்படைக்கப்பட்டுள்ளன என்கிறார்கள் ஜெயக்குமாரின் எதிர் அணியினர்.
சீன இன்ஜின்கள் பொருத்தப்பட்ட போட் விவகாரம் சமீபத்தில் மிகப்பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. அது தடைசெய்யப்பட்ட இன்ஜின் என்று அரசாங்கம் அறிவித்தது. ஆனால், அந்த இன்ஜின்களைப் பொருத்தி காசிமேட்டில் ஓடிய எட்டு போட்களும் அமைச்சரின் நெருக்கமானவருக்குச் சொந்தமானவை என அந்தப் பகுதியின் மீனவர்கள் குற்றம்சாட்டி, காவல்நிலையத்தில் புகாரே அளித்தனர். ஆனால், புகார் கொடுத்தவர்கள் மீதே காவல்துறை வழக்கு பதிவு செய்ய, மீனவர்கள் மறியல், ஆர்ப்பாட்டம் என்று தெருவில் இறங்கிவிட்டார்கள். இந்த விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரின் தலை உருண்டதால், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் `சூப்பர் முதல்வர் ஜெயக்குமார்’ என்று கமென்ட் அடித்தார்.

ராஜேந்திர பாலாஜி
பால்வளத்துறை
ஏடாகூடமாகவும், பரபரப்பாகவும் பேசி ‘நெட்டிசன்’களிடம் சிக்கிச் சின்னாபின்னமாகும் ஓரிரு அமைச்சர்களில் ராஜேந்திர பாலாஜியும் ஒருவர். ராஜேந்திர பாலாஜியின் மாவட்டம் விருதுநகர். பட்டாசுத் தொழிற்சாலை அதிகம் உள்ள மாவட்டமும் அதுதான். இந்த வகையில், பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் என்ன தொடர்பு என திடீர் சந்தேகத்தைக் கிளப்பினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன். தீபாவளியை முன்னிட்டு, பால் உற்பத்தியாளர்களுக்கு தலா 150 ரூபாய் மதிப்புடைய வெடி, ஸ்வீட் கட்டாயமாக வழங்கப்பட்டன. இதற்கான தொகையை 3 தவணைகளில்  பிடித்தம் செய்வோம் என்றது பால்வளத்துறை. ``இந்த விவகாரத்தில் ராஜேந்திர பாலாஜிக்கும் பட்டாசு ஆலை அதிபர்களுக்கும் என்ன தொடர்பு எனத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்”என்றார் முத்தரசன். இதற்கு ராஜேந்திர பாலாஜி தரப்பில் மௌனம்தான் பதில்.  தமிழகத்தில் விற்கப்படும் தனியார் பாக்கெட் பாலில் கலப்படம் இருப்பதாகத் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தமிழக மக்களிடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

தமிழகத்தில்  பால் உற்பத்தியைப் பெருக்கும் வகையில் பெரிய அளவில் நவீனத் தொழிற்சாலைகளைக் கொண்டுவர உரிய முயற்சியை ராஜேந்திர பாலாஜி  இதுவரை எடுக்கவில்லை.
செல்லூர் ராஜூ
கூட்டுறவுத்துறை அமைச்சர்
40 வருடங்களாக அ.தி.மு.க-வில் இருக்கிறார். 2011-தேர்தலில் வெற்றி பெற்று, ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த அமைச்சரவையில், கூட்டுறவுத்துறை அமைச்சராக ஆனார். 2016 தேர்தலிலும் வெற்றி பெற்று, அதே கூட்டுறவுத்துறைக்கு அமைச்சர் ஆனார். ஆனால், மதுரையைத் தாண்டி செல்லூர் ராஜூவை யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அமைச்சர்கள் ஆளுக்கு ஆள் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், செல்லூர் ராஜூ தன்னுடைய அரிய திட்டம் ஒன்றின் மூலம் உலகப்புகழ் பெற்றார். வைகை அணையில் தண்ணீர் ஆவியாவதைத் தடுக்க, தெர்மாகோல்களைப் போட்டு மூடி வைப்பதுதான் அந்தத் திட்டம். தெர்மாகோலைப் போட்ட நேரத்திலேயே, அவை காற்றில் கரை ஒதுங்கின.

கூட்டுறவுத்துறை வங்கிகளின் வளர்ச்சிக்காக வைத்தியநாதன் கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் 1500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த நிதியை, முறைப்படுத்தி வழங்கவில்லை. அந்தத் துறையின் ஒட்டுமொத்த அவமானம் என்று சொல்லவேண்டுமானால், புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிக்க வழியில்லாமல், கடந்த பல வருடங்களாக ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்டி, பொருள் விநியோகம் செய்துகொண்டிருந்ததைக் குறிப்பிடலாம். ஆனால், ஒவ்வொருமுறை சட்டமன்றத்தில் பேசும்போதும், `கூட்டுறவுத்துறையை நவீனப்படுத்துவோம்’ என்று அறிவிப்பு மட்டும் வெளியாகும்.  பொதுவிநியோகத் திட்டத்திற்கு மாநில அரசு வழங்கும் மானியத்தைக்கூட முறைப்படி  வழங்காமல் இருப்பதால், பொதுவிநியோகத் திட்டத்தில் தேக்க நிலை அதிகரித்துவருகிறது. பக்கத்து மாநிலமான கேரளாவில் கூட்டுறவு வங்கிகள் முதல் தொடக்க  வேளாண்மைச் சங்கங்கள் வரை அனைத்தையும் கணினிமயமாக்கிவிட்டார்கள். வேளாண்மைச் சங்கங்கள், நியாய விலைக்கடைகளை விடுங்கள்... தமிழகக் கூட்டுறவு வங்கிகளைக்கூட இன்னும் கணினிமயப்படுத்தவில்லை. நபார்டு வங்கிதான் கூட்டுறவு வங்கிகளுக்கு நிதி வழங்கும் கேந்திரம். ஆனால், நபார்டு வங்கி கூட்டுறவு வங்கிகளை நவீனப்படுத்துங்கள் என்று வலியுறுத்தினாலும், அதை அமைச்சர் கண்டுகொள்வதே இல்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது,  கூட்டுறவு வங்கிகள் மூலமாகவும் முறைகேடான பணப் பரிவர்த்தனை நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. அதற்கு அமைச்சரிடமிருந்து இன்னும் முறையான பதில் இல்லை.
இந்த ஆட்சிக்கே மூலவரான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் புகழைத் தமிழகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்பதில் பிஸியாக இருப்பதால், துறைரீதியான நடவடிக்கைகள் எடுப்பதற்கு அவருக்குப் போதுமான நேரம் இல்லை என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள். முதலமைச்சர்னாலே பிஸிதானே!

Docs, medical students protest against DME 

DECCAN CHRONICLE. | SHWETA TRIPATHI

Published Dec 6, 2017, 6:07 am IST

The protest intensified as doctors strike work and demanded to discuss the issue with the health secretary.



Doctors want the recruitment board to re-consider the recruitment made based on walk-in interviews, which is done only in case of emergency and not on a regular basis.

Chennai: More than 700 service doctors, postgraduate students and non-service postgraduate doctors from all over the state gathered to protest on Directororate of Medical Education campus in Kilpauk on Tuesday. Service doctors demanding recruitment through regular counselling alleged of non-transparency in the counselling of the doctors done owing to the emergency need of service doctors due to a surge in dengue cases in the state.

Doctors claim that around 465 vacancies were allotted to private college students through the emergency counselling even though a large number of government postgraduate students and non-service postgraduate doctors were available.

"Walk-in interview for recruitment is only on a temporary basis, in case of emergency. The Medical Recruitment Board takes the ranking and merit into consideration, but it was ignored in the recent counselling. Authorities had conducted recruitment violating the GO number 131 that lays down the regulations for emergency counselling and have allotted seats in Chennai, Madurai and other areas," said Dr D. Silambarasan, service doctor from a government medical college.

The protest intensified as doctors strike work and demanded to discuss the issue with the health secretary. Doctors want the recruitment board to re-consider the recruitment made based on walk-in interviews, which is done only in case of emergency and not on a regular basis.

"The allotment made for a group of private doctors leaving behind the righteous group of assistant professors, non-service doctors with two years of service bond to the government has affected the doctors who have already served the service. We expect the health secretary to look into the issue and resolve it as soon as possible," said Dr G.R. Rabindranath, Doctors' Association for Social Equality.

However, the senior officials of state health department have said that a notification regarding the recruitment was already issued to the doctors and there was no violation of regulations. Further discussion and clarifications will be made at a meeting to be held on Thursday along with the director of medical education and health secretary.
HC: Why can’t Goondas Act be slapped on corrupt babus?Suresh Kumar

 | TNN | Dec 6, 2017, 06:36 IST


CHENNAI: How about Goondas Act detention for corrupt bureaucrats, the Madras HC asked on Tuesday, and said that till a special law on preventive detention was brought out, government could invoke Goondas Act to detain corrupt officers. Justice N Kirubakaran said corruption too resulted in public order disturbance — the legal goad for invoking the Goondas Act — and pointed to a Transparency International survey that said: " India is the most corrupt nation in Asia, followed by Vietnam, Thailand and Pakistan."

'Corruption rampant in all govt departments'

The judge said, "When it comes to bribery, an article published by Forbes has rated India as the highest on the list with 69% bribery rate. Corruption has become rampant in all government departments, in spite of enactment of the Prevention of Corruption Act, 1988. It is being said that corruption has become the order of the day and most of the official functions are done only on payment of illegal gratification."

The judge made the observations on a plea moved by T Boopathy seeking a direction to sub-registrar of Pammal to release property documents presented for registration. The petitioner said his documents had been withheld by the authorities for more than a year, as he had refused to pay bribe demanded by them. Noting that the case was only the tip of the iceberg and almost all the government offices were said to have become bedrocks of corruption, the judge said some urgent preventive measures should be taken in the interest of the administration and people.

The judge then posed 15 queries to be answered by the state government and the vigilance commissioner. The queries include details of raids conducted by the DVAC in the past 10 years, criminal cases registered and rate of conviction. The authorities were directed to file their replies by December 11.

Justice Kirubakaran underlined the pressing need to bring out a special law (Preventive Detention Act) to detain corrupt public officials, and added, "Till such an act is enacted, why should the government not invoke the Goondas Act to detain corrupt officials on the ground that their corrupt acts affect or are likely to affect the maintenance of public order adversely."

Tuesday, December 5, 2017

ஆதார் கார்டில் திருத்தம் செய்ய எளிய வழி உங்களுக்காக

*சிறப்புத்தகவல்கள் ஆதார்கார்டில் பிழைகளை திருத்தம் செய்தல்
இந்தியாவில் உள்ள அனை வருக்கும். ஆதார் கார்டு மிக முக்கியமான ஒன்றாக தற்போது இந்திய அரசால் வழங்கப்பட்டிருக் கிறது,இருப்பினும் ஒரு சிலருக்கு
பெயர், வயது, மொபைல் எண், முகவரி அல்லது மற்ற குறிப்பு களில்ஏதாவது பிழைகள் ஏற்பட்டிருக்கலாம்* இதையடுத்து, ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்கு குறிப்புகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய முடியும்அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்

ஆன்லைன் மூலம் ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை மாற்றம் செய்வது எப்படி?

✅ஆதார் அடையாள அட்டைக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் ஆக வேண்டும்.

✅மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.

✅ஆவணங்களை அப்டேட் செய்ய வேண்டும்.

✅ இந்திய குடிமக்கள் தங்களு டைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்

*ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்*

✅ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக மொபைல் எண் மிக முக்கியம்.

✅ஆதார் கார்டு வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஓடிபி) அனுப்பி வைக்கப்படும்.

✅ஒரு வேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஓடிபி பெற முடியும். ஒரு வேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.

✅ ஓடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.

✅ எந்தெந்த குறிப்புகளை அப்டேட் செய்ய வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

✅தேர்ந்தெடுத்த குறிப்புகளை, தாய்மொழி மற்றும் ஆங்கிலத்தில் அப்டேட் செய்யவும். அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.

✅ பெயர் திருத்தம் அல்லது முகவரி திருத்தம் செய்ய பாஸ்போர்ட், பான் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவண நகல்களை பயன்படுத்தலாம்.

✅பிறந்த தேதியை திருத்தம் செய்வதற்கு பிறப்பு சான்று, கல்விச்சான்று, பாஸ்போர்ட், குரூப்-ஏ நிலையிலான அரசு அதிகாரிகளிடம் பெற்ற கடிதம் என, ஏதாவது ஒரு நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

✅ தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.

✅இதன் மூலம் உங்களுக்கு தேவையான குறிப்புகளை எளிதில் மாற்றம் செய்து சரியான ஆதார் அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்
V-C aspirants list raises questions

DECEMBER 04, 2017 00:00 IST

Candidates’ credentials should be provided: academicians

The Bharathidasan University, which released the list of applicants for the post of vice-chancellor last Monday, has received as many as 241 applications for the post.

On its website, the university has also listed out the aspirants whose applications were rejected along with the reason for doing so.

While only one person had applied to the convenor of the V-C search committee in violation of the rules, the other applications were received via e-mail after the deadline. Though teachers’ associations have welcomed the change, they have certain reservations. One senior professor felt the committees should also list the applicant’s credentials to enable people to better judge his or her calibre.

Teachers are surprised that the university has received more applications than the Thiruvalluvar University.

But a source in the higher education department said the search committee of the Bharathidasan University had written to many institutions abroad inviting applications.

The Association of University Teachers wants the V-C search committees to recommend persons with “academic credibility and administrative ability”.

The V-C should not be bureaucrats but academicians who are not facing any corruption charges currently, the association has urged.
Recharge hubs are a big draw in blacked-out Kanniyakumari

B. Kolappan

NAGERCOIL, DECEMBER 04, 2017 00:00 IST



Powering up:Residents charging their electronic devices in Kanniyakumari .Special Arrangement
Residents of cyclone-hit district throng well-to-do households with UPS facility for help ranging from water supply to charging phones

The saying o or k oodi t her i zhuthal (when the village comes together to pull the temple car) in Tamil aptly describes unity. In Ockhi-hit Kanniyakumari district, people have come together to recharge their devices. As most of the district is still reeling from a power cut and UPS (Uninterrupted Power Supply) back-ups have drained out, people throng houses that can afford a generator to lift water to overhead tanks — the generator also serves as a mode to recharge mobile phones, emergency lamps and torches.

Meanwhile, in Vallankumaravilai near Nagercoil, T. Vaikundamani, a wholesale mango vendor, has set up a hub for recharging mobile batteries . “I have a generator and I have decided to use it for the benefit of the public,” said Mr. Vaikundamani, whose fruit shop has become a stopover of a couple of hours for commuters charging their mobiles. A crowd throngs the shop continuously.

“The shop will remain open between 7 a.m. and 1 p.m., and again between 2 p.m. and 9 p.m.,” he says, telling the waiting people that priority should be given to phones with completely drained-out batteries.

Hotels in most of the district are selling wheat-based food like chappathi, puri and parotta, since flour for making idli, dosai and idiyappam cannot be ground without electricity. Big restaurants that have generators draw huge crowds by selling varieties of food.

“The power cut has also raised the demand for generators. By the time I visited the local dealer for a Honda generator, I was told it would take a couple of days to get a new machine as all stock has been sold,” said H. Rajesh, a local electrician.

Some owners make a killing out of renting out generators. “In the beginning, they charged Rs. 400 per hour, but they increased the rate to Rs. 500 per hour after there was heavy demand. You also have to keep a bottle of kerosene handy as modern generators require kerosene for ignition,” said actor and film director Alagamperumal, who is visiting his village for a family wedding.

The availability of phone recharge facilities spreads word-by-mouth, and people rush to homes having generators, or Mr. Vaikundamani’s shop.

In a nearby residence, Mr. Ravi, who owns a generator, supplies drinking water to people in the morning and evening. Even though there's plenty of water, people depend on tankers in many places, since water cannot be pumped without power.
Syndicate at war with higher education secy.

CHENNAI, DECEMBER 04, 2017 00:00 IST



Sunil Paliwal
Seven members write to Governor

The tug-of-war for power at the Bharathidasan University has taken a vicious turn with members of the syndicate accusing the Higher Education Secretary of violating norms.

Seven syndicate members (past and present) have sent a letter to Governor-chancellor Banwarilal Purohit stating that the Secretary, Sunil Paliwal, had appointed himself the chairman of the convenor committee without the syndicate’s consent and overstepped his position by going ahead with the appointments for the statutory posts of Registrar, Controller of Examination and Director of Distance Education.

The letter further states that Mr. Paliwal had fixed December 12 as the date for interview for the post of Registrar. He had also convened a syndicate meeting on the same evening at 3.30 p.m. to approve the selection to enable the officials to join duty on the same day.

“The whole process – interview, selection and appointment for the three senior positions of the university – appears to be hasty, illegal and erroneous, especially when the vice-chancellor is to be appointed in a month,” the letter states.

Mr. Paliwal, however, said the appointment process was set in motion in May. “It was the first item in all the syndicate meetings of the universities. For Bharathidasan University, the applications were called for on July 20 and the last date to receive applications was August 18.

“The scrutiny was done on September 15. The interview is fixed for December 12, allowing them enough time to travel.”

He further said a selection committee comprising the vice-chancellors of the Tamil Nadu Agricultural University and the Tiruvalluvar University had been constituted. The others in the committee are a syndicate member and two members from the convenor committee. “Being the chairman, I am on the committee and the Director of College Education is also on it. Only academicians will conduct the proceedings,” he said.

“There were litigations in the case of Bharathiar and Tiruvalluvar varsities, which have been resolved now. Are they happy with registrar in-charge or a full-time registrar?” Mr. Paliwal asked.
Govt. to take back land from RGUHS

DECEMBER 05, 2017 00:00 IST

The State government has decided to take back the 50 acres of land near Bheemanakuppe in Kengeri hobli allotted to the Rajiv Gandhi University of Health Sciences (RGUHS).

The file, approved by the tahsildar’s office, is now in the office of the Deputy Commissioner for Bengaluru Urban. Sources say this move was initiated as the university did not develop the land. A public health institute was supposed to be set up there. University authorities, shocked at the development, said the land was purchased by the mand they had the khata documents.
‘Virudhunagar, Ramnad backward’

DECEMBER 05, 2017 00:00 IST

The Central government has identified Ramanathpuram and Virudhunagar as backward districts of Tamil Nadu.

The identification has been made on four broad parameters – poverty, health, education and infrastructure. All over the country, 115 districts have been chosen.

Ramanathapuram has been ranked 38th under the pararmeter of poverty; 111th both under health and education and 104 under infrastructure, while Virudhunagar has been placed 16th, 100th, 114th and 105th ranks under the four parameters respectively.

The Centre has also appointed Praveen Kumar and S. Gopalakrishnan, both IAS officers of the Tamil Nadu cadre and on Central deputation, ‘prabhari’ officers for Virudhunagar and Ramanathapuram. They will coordinate the efforts of the Centre and State in "achieving rapid transformation" of the identified districts by addressing their specific developmental needs. The initiative is in consonance with Prime Minister Narendra Modi’s vision programme, New India by 2022, according to an order issued by the Union government's Department of Personnel and Training two weeks ago.

At present, Mr. Praveen Kumar is an Additional Secretary in the Union Ministry of New and Renewable Energy and Mr. Gopalakrishnan, Joint Secretary in the Union Ministry of Electronics and Information Technology.

On Tuesday, they will conduct their inaugural visit to the two districts and hold discussions with officials. The State government has posted IAS officers Santhosh Babu and P. Amudha as nodal officers, who will also be there along with those nominated by the Union government.
Register Digital Life Certificate in banks before December 31’

STAFF REPORTER

PUDUCHERRY, DECEMBER 05, 2017 00:00 IST

Aadhaar card original among the documents required

The digital submission of life certificate/non-remarriage certificate for 2018 by Employees Pension Scheme (1995) and Family Pension Scheme (197l) pensioners through Jeevan Pramaan Patra should be completed on or before December 31, to continue the payment of pension from January 2018.

Jeevan Pramaan

A press note from the office of the Regional PF Commissioner said that all eligible pensioners are requested to register their Digital Life Certificate through Jeevan Pramaan at their respective banks where pensioner's savings bank accounts were maintained or at their nearby Common Service Centres.

Designated branches

They were requested to carry the following documents for registration purpose — Aadhaar card (original/photocopy); bank pass book; mobile and pension payment order number.

The pensioners drawing pension through the State Bank of India, Indian Bank and Indian Overseas Bank may contact the following branches for registration of their respective Digital Life Certificate: State Bank of India (Gandhinagar branch and Puducherrv Main Branch), and the Indian Overseas Bank (J.N. Street Branch, 100 Feet Road Branch, Reddiyarpalayam Branch, Orleanpet Branch, Municipal Campus Branch, Karaikal Branch, and Nedungadu Branch).

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...