Wednesday, December 6, 2017

ரூ.1 கோடி வரதட்சணை கேட்டதால் கடைசி நிமிடத்தில் திருமணத்தை நிறுத்திய டாக்டர் மணப்பெண்

Published : 06 Dec 2017 09:21 IST

கோட்டா



திருமண நாளில் ரூ.1 கோடி வரதட்சணை கேட்டதால் பெண் பல் மருத்துவர் ஒருவர் தனது திருமணத்தை கடைசி நிமிடத்தில் நிறுத்தினார்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பேராசிரியராக பணியாற்றி வரும் அனில் சக்ஸேனா என்பவரின் மகள் ரஷி. பல் மருத்துவரான ரஷிக்கும் உ.பி.யின் மொராபாத் மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் சாக்ஷம் மாதோக் என்பவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை திருமணம் நடைபெறவிருந்தது.

கடந்த சனிக்கிழமை திருமணம் நிச்சயம் செய்யப்பட்டபோது மணமகனுக்கு காரும் 50 கிராம் தங்க நாணயங்களும் பரிசாக வழங்கப்பட்டன. கார் தவிர வரதட்சணை மற்றும் பிற ஏற்பாடுகளுக்காக ரூ.35 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது என மணமகள் தரப்பில் தெரிவிக்கின் றனர்.

இந்நிலையில் திருமணத்துக்கு முன்பு மணமகன் குடும்பத்தினர் திடீரென பரிசுப் பொருட்கள், பணம், நகை என கூடுதலாக ரூ.1 கோடி வரதட்சணை கேட்டதால் அனில் சக்ஸேனாவும் அவரது மனைவியும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் தங்கள் மகள் ரஷியிடம் பேசினர். ரஷி தொலைபேசியில் மணமகனிடம் பேசினார். ஆனால் அவர் வரதட்சணையில் பிடிவாதமாக இருந்ததால் அவரை திருமணம் செய்துகொள்ள ரஷி மறுத்துவிட்டார்.

என்றாலும் திருமண விருந்து பரிமாறப்பட்ட பிறகே இந்த விஷயத்தை உறவினர்களிடம் அனில் சக்ஸேனா குடும்பத்தினர் தெரிவித்தனர். திருமணத்துக்கு மறுத்த ரஷியின் முடிவை விருந்தினர்கள் பாராட்டினர்.

இதுதொடர்பாக மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக நயாபுரா காவல் நிலையத்தில் சக்ஸேனா புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.- பிடிஐ

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...