Wednesday, December 6, 2017

1.31 கிலோகிராம் போதைப்பொருள் பறிமுதல் 

6/12/2017 19:42

https://seithi.mediacorp.sg/mobilet/singapore/06-dec-drug-bust/3904392.html

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நடத்திய சோதனையில் 1.31 கிலோகிராம் போதைமிகு அபின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்பில், சந்தேக நபர்கள் ஐந்து பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் சந்தை மதிப்பு, 138,000 வெள்ளிக்கும் அதிகம். தோ பாயோ ஈஸ்ட்டிலுள்ள அடுக்குமாடி வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது அங்கு இரண்டு ஆடவர்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டனர். அந்த வீட்டிலிருந்து சுமார் 1 கிலோகிராம் போதைமிகு அபின் கைப்பற்றப்பட்டது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தம்பனீஸ் ஸ்ட்ரீட் 44-இல், போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின் பேரில், 44-வயது ஆடவர் ஒருவர் கைதானார்.அந்த நபரிடம் இருந்து 313 கிராம் போதைமிகு அபின் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதுச் சம்பவத்துக்கு முன்னர் அந்த ஆடவரைச் சந்திக்கச் சென்ற சந்தேகத்துக்குரிய போதைப் புழங்கி ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

விசாரணை தொடர்கிறது.

போதைப் பொருளுக்கு எதிரான சட்டத்தின்படி, 15 கிராமுக்கு அதிகமான போதைமிகு அபினைக் கடத்துவோருக்கு மரண தண்டனை விதிக்கமுடியும்.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...