Wednesday, December 6, 2017

சக கட்டுமான ஊழியரைத் தாக்கிய இந்தியக் கட்டுமான ஊழியருக்குச் சிறை, பிரம்படிகள்

https://seithi.mediacorp.sg/mobilet/singapore/06-dec-sungei-attack/3904176.html

இந்தியாவைச் சேர்ந்த அருணாசலம் மணிகண்டன், 21 வயது கணேசன் அருண்பிரகாஷைக் கத்தியால் பலமுறை கழுத்திலும் நெஞ்சிலும் வெட்டினார்.

இருவருக்கும் இடையில் மூண்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அருணாசலம் அவ்வாறு செய்தார். ஓல்ட் சுவா சூ காங் ரோட்டிலுள்ள சுங்கை தெங்கா ஊழியர் தங்குமிடத்தில், கட்டுமான ஊழியர்களான அவ்விருவரும் வசித்து வந்தனர்.

இவ்வாண்டு மார்ச் 21ஆம் தேதி,  குடிபோதையில் தங்குமிடத்துக்குத் திரும்பிய அருணாசலம், அங்கு வாந்தி எடுத்தார். அதனைச் சுத்தப்படுத்த கணேசன் அவரிடம் கோரினார். அருணாசலமோ, அதற்குச் செவிசாய்க்க மறுத்து கணேசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அமளியைச் செவியுற்ற அவர்களது மேற்பார்வையாளர் தலையிட்டு, அருணாசலத்தைச் சுத்தம் செய்யச் சொன்னார்.

அப்போதும், அருணாசலம் சுத்தம் செய்யாமல், துணியைக் கொண்டு வாந்தியை மறைத்தார்.
சற்று நேரத்திற்குப் பிறகு, அருணாசலம் 30 செண்டிமீட்டர் நீளக் கத்தியை எடுத்துக்கொண்டு, கட்டிலில் படுத்திருந்த கணேசனைப் பலமுறை வெட்டியதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் திரு கணேசனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. வெட்டுக் காயங்களில் ஒன்று அவரது மூச்சுக்குழாய்க்கு அருகில் இருந்தது.
காயங்கள் பலமாக இருந்தபோதும் அவர் உயிர் தப்பினார்.வேண்டுமென்றே பலத்த காயத்தை ஏற்படுத்திய குற்றத்திற்கு, ஆயுள் தண்டனையுடன் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

No comments:

Post a Comment

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...