Thursday, December 7, 2017

ஆம்பூர் பிரியாணி மாஸ்டர்கள் ஆர்.கே. நகருக்கு படையெடுப்பு

Added : டிச 07, 2017 01:27

ஆம்பூர்: ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் நடப்பதால், ஆம்பூர் பிரியாணி மாஸ்டர்கள் பலர், அங்கு சென்றுள்ளனர். இதனால், உள்ளூரில் மாஸ்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆம்பூர் பிரியாணி மாஸ்டர்கள் சங்க தலைவர் அப்துல் ரகீம், செயலர் பீர்முகமது ஆகியோர் கூறியதாவது: ஆம்பூர் பிரியாணி மாஸ்டர்கள் சங்கத்தில், 234 பேர் பதிவு செய்துள்ளனர். இதில், 132 மாஸ்டர்கள், ஆர்.கே., நகர் இடைத்தேர்தலுக்கு, பல்வேறு கட்சிகள் சார்பில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆம்பூரில், இவர்களுக்கு தினமும், 500 முதல், 1,000 ரூபாய் வரை, கூலி வழங்கப்படும். ஆனால், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு செல்லும் இவர்களுக்கு, தினமும், 1,500 ரூபாய் முதல், 3,000 ரூபாய் வரை, கூலி வழங்கப்படுகிறது. இதுதவிர, தங்குமிடம், வாகன போக்குவரத்து, சாப்பாடு வசதி செய்து கொடுத்துள்ளனர். ஏராளமான பிரியாணி மாஸ்டர்கள் சென்று விட்டதால், உள்ளூரில் பிரியாணி மாஸ்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...