Thursday, December 7, 2017

சபரிமலை படி பூஜை 2034 வரை முன்பதிவு

Added : டிச 07, 2017 01:36

சபரிமலை: சபரிமலை படி பூஜைக்கான முன்பதிவு, 2034ம் ஆண்டு வரை முடிந்துள்ளது. இதனால், பக்தர்கள் படி பூஜை செய்ய 17 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். சபரிமலையில் அதிக கட்டணம் உடைய பூஜை, படிபூஜை. 18 படிகளிலும் பட்டு விரித்து அதில் குத்து விளக்கு தேங்காய் மற்றும் நிவேத்ய பொருட்கள் வைத்து, தந்திரி பூஜை நடத்துவார். 18 படிகளிலும் 18 மலை தேவதைகளுக்காக இந்த பூஜை நடத்தப்படுகிறது. ஒரு மணி நேரம் இந்த பூஜை நடைபெறும். இந்த நேரத்தில் பக்தர்கள் படியேற முடியாது என்பதால் மண்டல மகரவிளக்கு காலத்தில் படி பூஜை நடைபெறாது. மாத பூஜை, விஷூ, திருவிழா போன்றவற்றுக்காக நடை திறக்கும் போது படி பூஜை நடைபெறும். இதற்கான முன்பதிவு, 2034, நவம்பர் மாதம் வரை முடிந்து விட்டது. இதனால், பக்தர்கள் இனி படி பூஜை நடத்த, 17 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். 75 ஆயிரம் ரூபாய் செலுத்தி தற்போது முன்பதிவு செய்யலாம், படி பூஜை செய்யும் காலத்தில் அப்போதைய கட்டணத்தை கூடுதலாக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்பதிவு ஏற்கப்படுகிறது.


No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...