Tuesday, December 26, 2017

ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு: பணமா, பொருளா?

ரேஷன் கடைகளில், பொங்கலை முன்னிட்டு, தலா, ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரையுடன், 100 ரூபாய் ரொக்கம் அல்லது முந்திரி, திராட்சை, ஏலம் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பாக, அரசு ஆலோசித்து வருகிறது.





தமிழக ரேஷன் கடைகளில், 2017 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தலா, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை; தலா, 20 கிராம் முந்திரி, திராட்சை; ஐந்து கிராம் ஏலம்; இரண்டு அடி கரும்பு துண்டு ஆகியவை வழங்கப்பட்டன. இவை, அரிசி கார்டுதாரர், காவலர்கள், முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்கள் என, 1.80 கோடி ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்பட்டன. இதற்காக, தமிழக அரசு, 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.

பணமா, பொருளா?

இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தி.மு.க.,ஆட்சியில், பொங்கலுக்கு, பச்சரிசி, வெல்லம், ஏலம், முந்திரி, திராட்சை ஆகியவை அடங்கிய, பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. பின், முதல்வரான ஜெயலலிதா, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இரண்டு அடி கரும்பு மற்றும், 100 ரூபாய் ரொக்கம் வழங்கினார். அவர் மறைவால், ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார்.

அந்த சமயத்தில், செல்லாத நோட்டு அறிவிப்பால், 100 ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடும் நிலவியது. ஏற்கனவே, அரசும், நிதி நெருக்கடியில் இருந்ததால், இந்த ஆண்டு பொங்கலுக்கு, பச்சரிசி, சர்க்கரை உடன், 100ரூபாய் ரொக்கத்திற்கு பதில், முந்திரி, திராட்சை, ஏலம், கரும்பு துண்டு வழங்கப்பட்டன.

ஒரு வாரத்திற்குள் இறுதி முடிவு

வரும் பொங்கலுக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அதில், 100 ரூபாய்

ரொக்கமா அல்லது பரிசு பொருட்களா என்பது குறித்து, நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், 100 ரூபாய்க்கு பதில், ஏற்கனவே வழங்கியது போல்,

முந்திரி, திராட்சை, ஏலம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கவே வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக, ஒரு வாரத்திற்குள் இறுதி முடிவு எடுத்து, அரசிடம் ஒப்புதல் பெறப்படும். அப்போது தான், ஜனவரி துவங்கியதும், 10 நாட்களுக்குள் அனைவருக்கும் வினியோகிக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
தினகரனின் தில்லுமுல்லு வெற்றி குறித்து விசாரணை!

சென்னை : ''ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தினகரன் செய்த தில்லுமுல்லு குறித்து, விரிவான விசாரணை நடத்தும்படி, தேர்தல் கமிஷனில், புகார் அளிக்க உள்ளோம். கட்சிக்கு துரோகம் செய்தவர்கள், கட்சி சட்ட விதிகளை மதிக்காமல் நடந்தவர்கள் மீது, உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, முதல்வர், பழனிசாமி, துணை முதல்வர், பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்தனர்.




சென்னை, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், முதல்வர் பழனிசாமி அளித்த பேட்டி: இடைத்தேர்தலை பொறுத்தவரை, மக்களை அணுகி தினகரன் வெற்றி பெறவில்லை. பல்வேறு தில்லுமுல்லு செய்து, வெற்றி பெற்றுள்ளார்.

அ.தி.மு.க.,விற்கு துரோகம்

தினகரனும், தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலினும், கூட்டு சதி செய்து, இரட்டை இலையை தோற்கடித்துள்ளனர். 'தனக்கு, ஒரு கண் போனாலும் பரவாயில்லை; எதிரிக்கு, இரண்டு கண்ணும் போக வேண்டும்' என, ஸ்டாலின் நினைத்தார். ஆனால், அவருக்கு, இரண்டு கண்களும் போய் விட்டன.

தினகரன் பின்னால் இருக்கும் நிர்வாகிகள் மட்டுமின்றி, அ.தி.மு.க.,விற்கு துரோகம் செய்த அனைவர் மீதும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இது, அ.தி.மு.க.,விற்கு தோல்வி அல்ல. தினகரன் தில்லுமுல்லு செய்து, மாயாஜாலம் செய்து, வெற்றி பெற்றுள்ளார்.தேர்தல் நேரத்தில், ஜெ., சிகிச்சை வீடியோவை வெளியிட்டனர். உண்மையான அ.தி.மு.க., தொண்டர் எவரும், இப்படிப்பட்ட வீடியோவை வெளியிட மாட்டார். ஜெ., மீது பாசமும்,விசுவாசமும் இருந்திருந்தால், இந்த காரியத்தை செய்திருக்க மாட்டார். நாங்கள், ஜனநாயக முறைப்படி தேர்தலை சந்தித்தோம்.

ஆட்சி கலைந்து விடும்

ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, இடைத்தேர்தலை எப்போதும் சந்தித்தது இல்லை.
ஒவ்வொரு முறையும், 'ஆட்சி கலைந்து விடும்' என, தினகரன் கூறுகிறார். பிப்., 16ல், ஆட்சி பொறுப்பேற்றோம். 11 மாதங்களாக, மக்கள் விரும்புகிற ஆட்சியை தந்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

துணை முதல்வர், பன்னீர்செல்வம் கூறியதாவது: தேர்தலில் நடந்த தில்லுமுல்லு குறித்து, தகுந்த விசாரணை நடத்த வேண்டும் என, தேர்தல் கமிஷனில், புகார் அளிக்க உள்ளோம். 'பிரசாரம் முடிந்ததும், வெளியூர் நபர்கள் வெளியேற வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. தினகரன் ஆதரவாளர்கள் வெளியேறாமல், 20 ரூபாய் நோட்டு கொடுத்து, 10 ஆயிரம் தருவதாகக் கூறியுள்ளனர். தற்போது, அவர்களை மக்கள் தேடி வருகின்றனர்.

தினகரன் பேசுவதெல்லாம் பொய்

இது குறித்து, தேர்தல் கமிஷன் விசாரிக்க வேண்டும்.தேர்தலில், நாங்கள் பணம் கொடுக்கவில்லை. தினகரனை, எனக்கு நன்றாக தெரியும்.

அவர் ஒரு மாயமான். அவரை நம்பி போனவர்களுக்கு, ராமாயணத்தில் ஏற்பட்ட நிலை தான் ஏற்படும்.

எங்கள் பக்கம் இருப்போர் அனைவரும், புடம்போட்ட தங்கங்கள். இன்றைய சூழ்நிலையில், ஒருவர் கூட அங்கு செல்லவில்லை. தினகரன் பேசுவதெல்லாம் பொய். 'பன்னீர்செல்வத்தை, நான் தான் அரசியலில் அறிமுகப்படுத்தினேன்' என, கூறினார்.

அவர் பெரியகுளத்திற்கு, 1998ல் வந்தார். நான், 1980ல் இருந்து அரசியலில் உள்ளேன்; அரசியலில், நான் சீனியர். ஜெ., மருத்துவமனையில் இருந்த போது, அவரை, அமைச்சர்கள் யாரும் சந்திக்கவில்லை. 'சந்திக்க வேண்டும்' என, கேட்டபோது, 'நோய் தொற்று ஏற்படும்' என கூறினர். 'நம்மால் நோய் தொற்று ஏற்படக் கூடாது' என்ற நல்லெண்ணத்தில், அமைதியாக இருந்தோம்.

ஜெ.,வை அமைச்சர்கள் பார்த்த, 'வீடியோ' இருந்தால், அதை வெளியிடலாம். ஜெ., சிகிச்சை பெற்ற காலத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இருந்தால், விசாரணை கமிஷனில் கொடுப்பதை, யாரும் தடுக்கவில்லை. கட்சியிலிருந்து யாரும், தினகரன் பக்கம் செல்ல மாட்டார்கள். இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.
வங்கி ரூ.50 ஆயிரம் இழப்பீடு தர உத்தரவு

Added : டிச 26, 2017 00:00

சென்னை: 'வாகன கடன் தொகையை முழுவதும் செலுத்தியும், தடையின்மை சான்றிதழ் வழங்க மறுத்த தனியார் வங்கி, வாடிக்கையாளருக்கு, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை, அண்ணாநகர், வைகை காலனியை சேர்ந்தவர், ராதாகிருஷ்ணன். நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள, தனியார் வங்கி ஒன்றில், கார் வாங்க, 3.50 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். வட்டியுடன் முழு தொகையை செலுத்தியும், தடையின்மைசான்றிதழையும், கடன் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட, காசோலைகளை வழங்கவும், வங்கி மறுத்து வந்தது.

எனவே, 'தடையின்மை சான்றிதழ், காசோலைகளை வழங்க வேண்டும்; மன உளைச்சலுக்கு, உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்' என, சென்னை, மாவட்ட வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி, ஜெயபாலன், நீதித்துறை உறுப்பினர், உயிரொலி கண்ணன் பிறப்பித்த உத்தரவு: வங்கி உரிய சேவை வழங்கவில்லை. தடையின்மை சான்றிதழுடன், ஆறு காசோலைகளையும், மனுதாரருக்கு தாமதமின்றி வழங்க வேண்டும். அத்துடன் இழப்பீடாக, 50 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவு தொகையாக, 5,000 ரூபாயும் தர வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.
பொங்கல் பஸ் முன்பதிவு முடிந்தது

Added : டிச 26, 2017 00:09

சென்னை: பொங்கல் பண்டிகைக்கான, அரசு பஸ் டிக்கெட்டுகள் தீர்ந்து விட்டதால், சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணியர் தவித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு, இன்னும், 20 நாட்களே உள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து, வெளியூர் செல்லும் அரசு பஸ்களுக்கான டிக்கெட்டுகள் தீர்ந்து விட்டன. அதனால், சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவை உடனே துவக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:பொங்கலுக்கு, சென்னையில் இருந்தும், மற்ற ஊர்களில் இருந்தும், தென் மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்களை இயக்குவது வழக்கம்.
இந்த ஆண்டும், சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். தற்போது, அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில், இரவு நேர பயணத்துக்கான டிக்கெட்டுகள் மட்டுமே தீர்ந்துள்ளன.
பகலில் பயணம் செய்வோர், இப்போதே முன்பதிவு செய்தால், கடைசி நேர பதற்றத்தைக் குறைக்கலாம். இரவில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளோருக்கு, சிறப்பு பஸ்கள் குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பஸ் கட்டணம் உயருகிறது

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பு 20–க்கும் மேற்பட்ட அரசு போக்குவரத்துக்கழகங்கள் இருந்தன. ஆனால், தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், மாநகர் போக்குவரத்துக்கழகம் (சென்னை) மற்றும் விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் 8 போக்குவரத்துக்கழகங்களாக இயங்குகின்றன. இந்த போக்குவரத்துக்கழகங்களில் 1,757 உபரி பஸ்கள் உள்பட 22 ஆயிரத்து 203 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 1 கோடியே 80 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 195 பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். பொதுவாக தனியார் பஸ் வைத்திருந்தால் நிச்சயமாக லாபகரமாக இயங்கும். ஒரு பஸ் வாங்கும் தனியார் பஸ் முதலாளி சில ஆண்டுகளிலேயே பல பஸ்களை வாங்கி, பெரிய பஸ் அதிபராக மாறி விடுகிறார். தனியார் பஸ்களின் பராமரிப்பும் நன்றாக இருக்கிறது. குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் போக வேண்டிய இடங்களுக்கு போய்ச்சேர்ந்து விடுகிறது. அரசு போக்குவரத்து பஸ்களை விட, தனியார் பஸ்களில் கட்டணம் அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை, தனியார் பஸ்சிலேயே போய்விடலாம் என்ற உணர்வு பொதுமக்களுக்கு ஏற்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் கடைசியாக பஸ் கட்டணம் 18–11–2011 அன்று உயர்த்தப்பட்டது. 6 ஆண்டுகளாக பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை. ஆனால் அரசு போக்குவரத்துக்கழகங்கள் தொடர்ந்து நஷ்டத்தில்தான் இயங்கி வருகின்றன. அரசு பஸ்கள் நஷ்டத்தில் இயங்கி வருவதால், அனைத்து பஸ் டிப்போக்களும், ரூ.10 ஆயிரத்து 546 கோடி ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நஷ்டம் ரூ.19 ஆயிரத்து 828 கோடியாக இருக்கும் நிலையில், தினமும் 9 கோடியே 42 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. அரசு பஸ்களில் பயணம் செய்வோர்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே இருக்கிறது. மாணவ–மாணவிகளுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர, மேலும் ஏராளமானவர்களுக்கு இலவச பஸ்பாஸ் மற்றும் சலுகைக்கட்டணம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், நிர்வாக செலவுகளை குறைப்பதற்காகவும் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்காகவும், 8 போக்குவரத்துக்கழகங்களின் எண்ணிக்கையை குறைப்பது பற்றி தமிழக அரசு தீவிரமாக யோசித்து வருகிறது. 4 போக்குவரத்துக்கழகங்களாக மாற்றலாமா? அல்லது ஒரே போக்குவரத்துக்கழகமாக மாற்றலாமா? என்பது குறித்து ஆராய 7 அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. நிச்சயமாக இது வரவேற்கத்தகுந்த முடிவாகும். இதுமட்டுமல்லாமல், கடனில் தத்தளிக்கும் போக்குவரத்துக்கழகங்களின் நிதி நிலையை சீராக்க விரைவில் பஸ் கட்டணத்தை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பஸ் கட்டணத்தை உயர்த்துவது தவிர்க்க முடியாதது என்றாலும், நகர்ப்புற பஸ்கள், குறைந்த தூரம் ஓடும் புறநகர் பஸ்களுக்கு குறைவான அளவிலும், தொலைதூர பஸ்களுக்கு பொதுமக்கள் தாங்கக்கூடிய அளவிலும், பஸ் கட்டணத்தை உயர்த்தலாம். பஸ் கட்டணத்தை உயர்த்துகிற நேரத்தில் நிர்வாகத்தை செம்மைப்படுத்தி பஸ் பராமரிப்பிலும், பயணிகளுக்கு சுகமான பயணமாக இருக்கும் வகையிலும் நல்ல வசதிகளுடன் கூடிய பஸ்களாக இருக்க செய்ய வேண்டும். அப்படி இருந்தால்தான் பஸ் கட்டண உயர்வு சுமையை பொதுமக்கள் பொருட்படுத்தமாட்டார்கள்.



Monday, December 25, 2017


In Rajasthan, a railway station run by the people, for the people 

India has a number of low-traffic stations where railways has outsourced ticket sales to individuals and does not depute staff, but officials believe Rashidpura Khori stands apart for its of the people, by the people initiative. india Updated: Dec 25, 2017 07:59 IST



Urvashi Dev Rawal
 
Hindustan Times, Rashidpura Khori (Sikar)


Mahendra Kumar uses a portable chest to sell tickets at the Rashidpur Khori railway station in Rajasthan.(Himanshu Vyas/HT Photo)

After a break of two years, wheels are turning again in Rajasthan’s Rashidpura Khori, one of the most unique railway stations in India.

The station in Sikar district is as nondescript as hundreds that dot the nearly 120,000 km rail track network across the country, but it is run and maintained solely by villagers and not railway staff.

India has a number of low-traffic stations where railways has outsourced ticket sales to individuals and does not depute staff, but officials of North Western Railway zone believe their Rashidpura Khori stands apart for its of the people, by the people initiative.

“I am not aware of any other station that is being run by such participation of people,” says Tarun Jain, chief public relations officer of North Western Railway.

Top railway officials in Delhi did not commit on record to this uniqueness, but said it was likely Rashidpura Khori was one of a kind.

On December 9, a passenger train rolled into Rashidpura Khori, about 125 km north of Jaipur, and rail operations resumed after being stopped in November 2015 for work to broad gauge the track.

Almost 90 years old, the station has had a stop-start history. Railways stopped operations at the British-era station — dating back to 1929, when it was part of princely Jaipur state — in May 2005 as it was deemed commercially unviable.

“This happened due to meagre passenger load,” says Jagdish Burdak, a member of Sikar Rail Salahkar Samiti.

“Before operations stopped, five trains between Jaipur and Churu and one between Sikar and Churu stopped at the station.”

Nearly 25,000 residents of three villages — Palthana, Rashidpura and Khori — that rely on the station were disheartened, but kept appealing to railway authorities to continue services in some manner.

The railways relented, but with conditions. Villagers could keep Rashidpura Khori functional if they managed to generate adequate revenue.

“This adequate revenue was deemed to be Rs 40,000 per month,” says Pratap Singh Burdak, a government school principal and resident of Palthana, whom villagers credit for taking their voice to railway authorities.

“We gave a memorandum (to railways) that the 25,000 residents would run the station and meet the target. The officials agreed to temporary three-month stoppage for one train from January 2009,” Singh adds.

The villagers grabbed the offer and formed a committee to motivate people to use the train.

“We collected Rs 5 lakh from villagers and used the money to publicise train schedules. A vehicle was used for a door-to-door campaign seeking people’s cooperation in meeting the monthly target. People responded enthusiastically,” recalls Singh. “The initial enthusiasm to make the project viable for the railways saw villagers buy even multiple tickets and ensure no one travelled ticketless.”

The temporary arrangement turned into a longer than expected victory of sorts for the villagers as they took charge.

A villager was designated to sell tickets, the rest joined hands to maintain the station. Over time, four more trains got stoppage at Rashidpura Khori.

By the time broad gauge work necessitated stalled operations again, the villagers had sustained their station for more than seven years.

After the restart earlier this month, Mahendra Kumar of Palthana village is the designated ticket seller. Kumar, who teaches in a local private school, operates under a tree with a small wooden chest holding tickets in slots to different stations.

He buys the tickets from Sikar station and earns 15% commission on sales.

A ticket to Laxmangarh, the nearest to Rashidpura Khori , or Sikar costs Rs 10 and one to Churu costs Rs 20. Bus fares to the same locations are up to three times higher.

“Without the train, government employees, army personnel, students, farmers, milkmen and many others faced problems and relied on buses,” says principal Singh.

Farmer Siddharth Singh of Palthana says, “Without the train, it becomes difficult to ferry vegetables to Sikar, a large agriculture and onion centre.”

Karan Singh, an ex-armyman from Khori, says many active services personnel from the region use the train to travel to Sikar and onwards to Delhi.

An onion mandi is proposed at Sikar. Railway officials say if passengers and commercial activity increase, more trains could stop at Rashidpura Khori.
Lalu gets TV, special meals 

VIJAY DEO JHA Dec 25, 2017 00:00 IST


 

Raghuvansh and RJD members protest outside Birsa Munda Jail in Ranchi on Sunday. (Manob Chowdhary)

Ranchi: Senior RJD leader Raghuvansh Prasad Singh, along with some 100 RJD leaders and supporters, demonstrated outside Birsa Munda Central Jail on Sunday for over an hour from 12.45pm after not being allowed to meet their party chief Lalu Prasad, who is lodged in a VIP cell.

According to the jail manual, no inmate can entertain visitors on Sundays.

"People can meet their friends, relatives lodged in jail between 8am and noon from Monday to Saturday. If they come tomorrow (Monday) they will be allowed to meet whom they want," said jail superintendent Ashok Kumar Choudhary, referring to Lalu and 15 others who were convicted on Saturday in a fodder scam case.

The RJD battalion raised slogans that got more and more creative with time, from " jail ka fatak tootega Lalu Yadav chhootega (The jail wall will break, Lalu will emerge)" to "dam hai kitna daman me tere dekh liya hai dekhenge, jagah hai kitni jail me tere dekh liya hai dekhenge, kitni lambi jail hai teri, dekh liya hai dekhenge (we'll see how strong your bullying is, how big your jail is)".

Sadar police station officer-in-charge Dayanand Kumar said the protesters withdrew after being told repeatedly that under the jail manual, a meeting could not be allowed.

A jail staff said Lalu, who is sharing his cell with another fodder scam convict Jagdish Sharma, was examined by the jail doctor and is taking medicines. "He has demanded vegetarian food. He read all newspapers, especially news related to his conviction," he said.

VIP cell inmates get cushioned beds and special meals. Lalu's cell also has a TV set.

குடிநுழைவு, சோதனை அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்துவரும் தொலைபேசி அழைப்புகள் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

sihttps://seithi.mediacorp.sg/mobilet/singapore/22-dec-ica-checkpoint/3917178.htmlngapore 

குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்துவரும் தொலைபேசி அழைப்புகள் பற்றி ஆணையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அழைப்பவர்கள், விசாரணை தொடர்பிலும் நடவடிக்கை தொடர்பிலும் பணம் மாற்றச்சேவை செய்யுமாறு கூறுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.ஆணையத்தின் இணையத்தளத்தில் இருக்கும் தொலைபேசி எண்களைக்கொண்டு அந்த மோசடி அழைப்புகள் வருவதாக ஆணையம் தெரிவித்தது.
வரும் மோசடி அழைப்புகளைப் புறக்கணிக்குமாறும் அழைப்பவர்கள் கேட்டுக்கொண்டதிற்கு இணங்க பண மாற்றுச்சேவையில் ஈடுபட வேண்டாம் என்றும் ஆணயம் பொதுமக்களுக்கு ஆலோசனை கூறியது.
நாம் வீசும் குப்பைகளைத் தினமும் அப்புறப்படுத்துவோர் 

23/12/2017 12:09 Update: 23/12/2017 21:27

சிங்கப்பூரில் கைக்கு எட்டும் தூரத்தில் உள்ள குப்பைத் தொட்டிகளில் நிரம்பிவழியும் குப்பைகளைத் தினமும் அப்புறப்படுத்தும் பணிகள் நடக்கின்றன.



அவை மீண்டும் நிரம்புவதற்கு அதிக நேரம் எடுக்காது.

கடந்த ஆண்டு சிங்கப்பூரில் மொத்தம் 7.81 ட்டன் குப்பைகள் சேர்ந்தன.
3 பெரிய நீச்சல் குளங்களின் அளவு அது.




2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அது 140,000 ட்டன் அதிகம்.
பிளாஸ்டிக் குப்பைகளும் உணவுப் பொருட்களும் ஆக அதிக அளவில் தூக்கிப் போடப்படுவதாகக் கூறப்படுகிறது.

அத்தகைய குப்பைகளை அப்புறப்படுத்தும் ஊழியர்களின் ஒரு நாள் வேலை எப்படி இருக்கிறது என்று அறிய முற்பட்டது சேனல் நியூஸ்ஏஷியா.



அதன் செய்தியாளர் ஒருவர், குப்பைகளை அப்புறப்படுத்தும் ஊழியருடன் இணைந்து சில நாட்களுக்கு வேலை பார்த்தார்.

புக்கிட் பஞ்சாங்கில் 29 புளோக்குகளில் இருந்து குப்பைகளை அப்புறப்படுத்தும் ஊழியர்கள் எத்தகையச் சூழலில் வேலை செய்கின்றனர் என அதன் வழி தெரியவந்தது.



27 வயது சுவேலின் வேலை குப்பைகளை அப்புறப்படுத்துவது.

சுற்றுவட்டாரத்தைத் தூய்மையாக வைத்திருப்பது.

காலை 7 மணிக்குத் தொடங்குகிறது அவரது வேலை.
இரவு 7 மணிக்குத் தான் முடிகிறது அயராத பணி.



கொஞ்சம் ஆங்கிலம், மலாய் பேசத் தெரிந்த சுவேல் பங்களாதேஷைச் சேர்ந்தவர். திருமணமாகி 6 மாதங்கள் கூட ஆகவில்லை.



மாதந்தோறும் 700 வெள்ளி சம்பளம். அதற்காக தினந்தோறும் குனிந்து நிமிர்ந்து கனமான பொருட்களைத் தூக்கி, அசுத்தம், பூச்சிகள் என முகம் சுளிக்காமல் வேலை செய்ய வேண்டும்.
சிரமங்கள் நிறைந்திருந்தாலும் நேர்மையாக வாழ்வதில் பெருமை என்றார் மலர்ந்த முகத்துடன் சுவேல்.

சாங்கி விமான நிலையத்தில் புதிய டாக்சி நிறுத்துமிடம்

24/12/2017 20:20

சிங்கப்பூர்: அண்மையில் நீங்கள் சாங்கி விமான நிலையத்திற்குச் சென்றிருந்தால், முதலாம் முனையத்தில் புதிய டாக்சி நிறுத்துமிடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதைக் கண்டிருக்கலாம்...
தரைக்குக் கீழே உள்ள முதல் தளத்தில் இருக்கிறது புதிய டாக்சி நிறுத்துமிடம். இவ்வாரம் செவ்வாய்க்கிழமை அது திறக்கப்பட்டது.

முதலாம் முனையத்திற்கான விரிவாக்கப்பணிகளில் புதிய நிறுத்துமிடமும் அடங்கும்.
2019ஆம் ஆண்டில் திறக்கப்படவுள்ள ஜூவல் சாங்கி விமான நிலையத்திற்குத் தயாராகும் விதத்தில் அது அமைந்துள்ளது.

தேவைக்கேற்ப பயணிகளிடம் டாக்சிகளைக் கொண்டுசேர்க்க அங்குள்ள அதிநவீன உணர்கருவிகள் உதவுகின்றன. அத்தகைய தொழில்நுட்பத்தால் தனது சாலை நிர்வாகிகளின் வேலைகள் சிலவற்றைக் குறைத்திருப்பதாக சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்தது.
அதிமுகவுக்கு மாற்றாக உருவான தினகரன்.. ஸ்டாலின் செய்ய தவறியது இதுதான்!
 
 Posted By: Veera Kumar Published: Sunday, December 24, 2017, 16:25 [IST]
 
  சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக வாக்குகள் இரண்டாக பிரியும் என நினைத்திருந்தபோதிலும், திமுகவால் 3வது இடத்திற்கே வர முடிந்தது. கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், ஜெயலலிதா அரசுக்கு எதிராக தீவிர எதிர்ப்பலை இருந்தபோதிலும், அதை பயன்படுத்திக்கொள்ள முடியாமல் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. இதற்கு முன்பாக நடைபெற்ற லோக்சபா தேர்தலிலும் திமுக ஒரு சீட்டை கூட வெல்ல முடியவில்லை. ஆனால் பாஜக கன்னியாகுமரியிலும், பாமக தருமபுரியிலும் வெற்றி பெற்று திமுகவுக்கு கூடுதல் ஷாக்.
 
தகராறுகள் நடுவே அதிமுக தகராறுகள் நடுவே அதிமுக இது பரவாயில்லை. அப்போதாவது ஜெயலலிதா என்ற ஆளுமை திமுக தோல்விக்கு காரணமாக இருந்தது. ஆனால் இப்போது அதிமுக எடப்பாடி அணி, ஓபிஎஸ் என பிரிந்து பிறகு சேர்ந்து, தினகரன் தரப்பு ஒருபக்கம் தனி ஆவர்த்தனம் பாடி.. சொல்லும்போதே மூச்சு முச்சு முட்டும் இத்தனை தகராறுகளுக்கு நடுவே நடந்த ஒரு இடைத் தேர்தலில் திமுக 3வது இடத்திற்கு போயுள்ளது. கருணாநிதி மாஜிக் கருணாநிதி மாஜிக் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திமுகவில் இன்னும் கொஞ்சம் எழுச்சியை எதிர்பார்க்கிறார்கள் திமுகவினர். இதில் கருணாநிதி செய்த ஒரு மாஜிக்கை ஸ்டாலின் செய்ய தவறி வருகிறார். ஆனால் அதை தினகரன் சரியாக செய்கிறார் என்பதில் ஒளிந்துள்ளது தினகரனை மக்கள் தேர்ந்தெடுப்பதற்கான காரணம். ஏன் திமுக மாற்றாக இல்லை? ஏன் திமுக மாற்றாக இல்லை? அதிமுகவுக்கு மாற்றாக அதே அதிமுகவிலிருந்து வந்த சுயேச்சை தினகரனை தேர்ந்தெடுத்த மக்கள் ஏன் நீண்ட கால போட்டியாளரான திமுகவை மாற்றாக ஏற்கவில்லை? 
 
இதற்கு கருணாநிதி ஸ்டைல் அரசியலை இப்போது ஸ்டாலின் மேற்கொள்ளவில்லை என்பது முக்கிய காரணம். கருணாநிதி ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், எப்போதுமே செய்திகளின் நாயகனாக அவர்தான் இருப்பார். தன்னை சுற்றியே தமிழக அரசியல் சுழல காரணமாக இருப்பார். பதிலளிக்கும் திறமை பதிலளிக்கும் திறமை ஒரு சாரார் விமர்சனம் செய்வார்கள் என்று தெரிந்தாலும் அதை கூட அச்சமின்றி செய்வார் கருணாநிதி. பூடகமாக பேசுவது, இரட்டை பொருள்படும்படி பேசுவது என அவரது ஸ்டைல் அரசியல் லாவகமாக இருக்கும். மேலும், அவர் பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கும் திறமை நீண்டகாலமாகவே புகழப்படும் ஒன்று. ஞாபக சக்தியும் அபாரமானது. 
 
ஸ்டாலின் மீது எதிர்பார்ப்பு ஸ்டாலின் மீது எதிர்பார்ப்பு அதேநேரம், ஸ்டாலின் இந்த விஷயங்களில் கருணாநிதி போன்ற கூர்மையோடு செயல்படவில்லை என்ற ஆதங்கம் அரசியல் விமர்சகர்களுக்கு உள்ளது. சட்டசபையில் நடைபெற்ற சட்டை கிழிப்புக்கு பிறகு ஸ்டாலின் செய்திகளில் பெரிதாக பேசப்படும் சூழல் உருவாகவில்லை. செய்திகளில் எப்போதும் தினகரன் செய்திகளில் எப்போதும் தினகரன் அதேநேரம், தினகரன் கருணாநிதி ஸ்டைல் அரசியலைத்தான் செய்து வருகிறார். கடந்த ஓராண்டாகவே தினகரனை சுற்றியேதான் செய்திகள் வலம் வருகின்றன. அவர் செய்தியாளர்களை எதிர்கொள்ளும் விதமும் பல தரப்பாலும் தொடர்ச்சியாக புகழப்படுகிறது. லைம் லைட் வாய்ப்பு இருந்தும் ஸ்டாலின் அதை பயன்படுத்தவில்லை. ஆனால் புதிதாக அந்த லைம் லைட் ஒளிவட்டத்தை தன்னை சுற்றி உருவாக்கிவிட்டார் தினகரன். இதுதான் மக்கள் அதிமுகவுக்கு மாற்றாக தினகரனை தேர்ந்தெடுக்க காரணம்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/though-splitting-aiadmk-votes-the-rk-nagar-poll-dmk-comes-3rd/articlecontent-pf283969-306225.html

RK NAGAR ELECTION RESULT 2017


சொல்லியடித்த தினகரன்.. நவகிரகங்களின் நல் ஆசி மொத்தமாக கிடைச்சிருச்சோ!

Posted By: Mayura Akilan Published: Monday, December 25, 2017, 8:02 [IST]

  சென்னை: சனி, குரு, ராகு கேது மட்டுமல்ல, நவகிரகங்களின் மொத்த பார்வையும் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு சாதகமாகவே திரும்பியுள்ளது. அந்தளவிற்கு தினகரனுக்கு திகட்ட திகட்ட வெற்றியை பரிசாக கொடுத்துள்ளனர் ஆர்.கே. நகர் தொகுதி மக்கள். மூக்குப்பொடி சாமியார் தொடங்கி கால பைரவர் வரை விடாமல் விரட்டி விரட்டி தரிசனம் செய்தார் டிடிவி தினகரன். திகார் சிறையில் இருந்து திரும்பிய பின்னர் கடந்த 5 மாதகாலமாக அவரது கவனம் முழுவதுமே ஆர்.கே.நகர் மீதுதான் இருந்தது. இடைத்தேர்தல் அறிவிக்கப்படாவிட்டாலும், தான்தான் வேட்பாளர் என்பது போல நடந்து கொண்டார்

தினகரன். எப்போது போய் பார்த்தாலும் கை நிறைய பணத்தை அள்ளிக்கொடுத்தாராம் தினகரன். சுயேச்சை தினகரன் சுயேச்சை தினகரன் கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே. நகரில் அதிமுக அம்மா அணி வேட்பாளராக களமிறங்கிய டிடிவி தினகரன், தொப்பி சின்னத்தை போட்டியிட்டார். அந்த தேர்தல் பணப்பட்டுவாடா புகாரினால் ரத்தானது. டிசம்பர் 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. மீண்டும் தொப்பி சின்னம்தான் கேட்டார் கிடைத்ததோ குக்கர். புத்தம் புது குக்கர்கள் புத்தம் புது குக்கர்கள் பிரசாரத்தில் குக்கர்தான் பிரதான இடம் பிடித்தது. வீட்டில் இருந்தே குக்கர் கொண்டு வந்தார் தலைக்கு 500 ரூபாய் கொடுத்தனர் தினகரன் ஆட்கள். எப்படி எல்லாம் பணம் கொடுக்கவேண்டும் அந்த வழிகளை எல்லாம் தேர்ந்தெடுத்தனர்.

 80 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானால் தான்தான் வெற்றி பெறுவேன் என்று கூறியிருந்தார் தினகரன். கருத்துக்கணிப்புகளும் தினகரனுக்கு சாதகமாகவே இருந்தது. சொன்னது போலவே ஜெயித்து விட்டார் தினகரன். மகிழ்ச்சியில் ஆர்.கே. நகர்வாசிகள் மகிழ்ச்சியில் ஆர்.கே. நகர்வாசிகள் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போதே பண்டிகை செலவுக்கு பயமில்லை என்று பேச்சு எழுந்தது. சொன்னது போலவே ஒரு ஓட்டு 10 ஆயிரத்திற்கு மேல் கிடைத்துள்ளது. அடகு வைத்த நகைகள் திருப்பப் பட்டு விட்டன.

பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் ஆர்.கே.நகர்வாசிகள். ஆர்.கே.நகரில் எங்கு திரும்பினாலும் புத்தம் புது குக்கர்கள் பளபளக்கின்றனவாம். எல்லா கிரகங்களின் பார்வையும் எல்லா கிரகங்களின் பார்வையும் டிடிவி தினகரனுக்கு சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சிதான் நல்லதாக இருந்திருக்கும் என்றில்லை. டிடிவி தினகரனுக்கு நவகிரகங்களின் நல் ஆசியும் கிடைத்திருக்க வேண்டும். அதனால்தான் இப்படி திகுடு முகுடான வெற்றியை பெற்றுள்ளார் தினகரன். தினகரனின் யாகங்கள் தினகரனின் யாகங்கள் கோவில் கோவிலாக சுற்றி வந்த தினகரன் கால பைரவருக்கு யாகம் செய்தார். பிரத்யங்கிரா தேவியை அமாவாசை நாளில் பூஜித்தார். குலதெய்வத்தை விடாமல் கும்பிட்டார். யாகங்களும், ஹோமங்களும் செய்த கடவுளை குளிர்வித்தது போல, மக்களையும் குளிர குளிர பணத்தால் குளிர்வித்து வெற்றியை பெற்றுள்ளார் டிடிவி தினகரன்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/rk-nagar-bypoll-result-navagraham-support-ttv-dinakaran/articlecontent-pf284009-306264.html
ஆங்கிலம் அறிவோமே 191: ஆட்டுக்குட்டி எப்படிக் குழந்தை ஆனது?

Published : 19 Dec 2017 10:33 IST
Updated : 19 Dec 2017 10:33 IST

ஜி.எஸ்.எஸ்.






கேட்டாரே ஒரு கேள்வி

‘சிகப்பு ரோஜாக்கள்’ திரைப்படத்தில் கமலஹாசன் ஏற்று நடித்த திலிப் கதாபாத்திரம், மனநிலைக் கோளாறு காரணமாகப் பல பெண்களைக் கொலை செய்யும். அவரை ஒரு சைக்கோ என்பார்கள். சைக்கோ என்றால் புத்தி சுவாதீனமற்ற கொடூரமானவனா? அப்படியானால் சைக்காலஜி என்பது அப்படிப்பட்டவர்களைக் குணப்படுத்தும் மருத்துவமா?

***********

Point black என்பதற்கும், வில்வித்தைப் பயிற்சிக்கும் என்ன தொடர்பு என்கிறார் ஒரு வாசகர்.

நண்பரே அது point black அல்ல (சொல்லப்போனால் அது பெரும்பாலும் வெள்ளை) point blank. பிரெஞ்சு மொழியில் ‘blanc’ என்றால் வெள்ளைக் குறி என்று அர்த்தம்.

வில்வித்தைப் பயிற்சியில் அம்பு சேர வேண்டிய மைய இடம்தான் Point blank . மிக அருகில் நின்றுகொண்டு இப்படிக் குறிபார்க்கும்போது வில்லின் கோணத்தை ஏறவோ இறக்கவோ செய்யாமல் நேரடியாகக் குறிபார்த்தால் போதுமானது.

இப்போதெல்லாம் ஒரு விஷயத்தை நேரடியாகப் போட்டு உடைப்பதை (straight talking) point blank என்கிறார்கள்.




Child என்பதும் Kid என்பதும் ஒன்றுதானா?

16-ம் நூற்றாண்டுவரை Kid என்ற வார்த்தை ஆட்டுக் குட்டியைக் குறிக்கத்தான் பயன்பட்டது. மெல்ல மெல்ல அது மறைந்து மனிதக் குட்டிகளையும் (குழந்தைகளை) குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.

Kids என்பது சில நேரம் மட்டம்தட்டவும் பயன்படுத்தப்படுகிறது. உடல் வளர்ந்தும் மனதளவில் பக்குவப்படாதவர்களை Kids என்று குறிப்பிடுவதுண்டு.

Kids’ stuff என்றால் மிக எளிமையாகச் செய்யக்கூடிய ஒன்று என்று அர்த்தம்.

Verb ஆகப் பயன்படுத்தப்படும்போது அற்பமாக நடந்துகொள்வது, கிண்டலடிப்பது போன்ற பொருள்களில் இது பயன்படுத்தப்படுகிறது. Beware just kidding around.

ஒன்றை சீரியஸாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதைக் குறிக்கவும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. I am ready for another marriage (just kidding).

***********

கேட்டாரே ஒரு கேள்வி இம்முறை கொஞ்சம் ஆபத்தானதாக இருக்கிறது. காரணம் கொஞ்சம் உண்மையும் நிறைய தவறான புரிதலும் கலப்பது ஆபத்தானது இல்லையா?

‘சைக்’ (Psyche) என்பது மனதைக் குறிக்கிறது. சைக்காலஜி (Psychology) என்பது மனம் தொடர்பான கல்வி. மனநலம்.

சைகியாட்ரி (Psychiatry) என்பது மனம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரு மருத்துவப் பிரிவு.

சைக்கோ (Psycho) என்பது மனநலம் பிறழ்ந்ததன் காரணமாக குரூர சிந்தனை வயப்பட்ட ஒருவரைக் குறிக்கிறது. சைக்கோ என்பது முன்னொட்டாக (prefix) பயன்படுத்தப்படும்போது ‘மனம் தொடர்பான’ என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. எடுத்துக்காட்டாக Psycho Pharmacology என்பது மனநலப் பாதிப்புக்கான மருந்துகள் குறித்த கல்வி.

***********

“Accessories என்று பெண்கள் பேச்சில் இடம்பெறும் வார்த்தைக்கு என்ன பொருள்?”

வாசகரே ஒருவேளை நீங்கள் இதுபோன்ற ஒரு வாக்கியத்தைக் கேட்டிருக்கலாம். “I found a lovely dress for the function but I need to find some matching accessories”.

உடைக்குப் பொருத்தமான கைப்பை, காதணி, சங்கிலி, காலணி போன்றவற்றை accessories என்போம். Accessories என்பதைத் தோராயமாக அணிகலன்கள் எனலாம்.

அதாவது ஒன்றை அதிகப் பயனுள்ளதாகவோ அதிக அழகானதாகவோ ஆக்குவதற்காக இணைக்கப்படும் பிற பொருளை accessories என்பார்கள்.

ஆனால், சட்டத்தின் பார்வை வேறு. Accessory என்றால் ஒரு குற்றம் நடக்கத் துணையாக இருப்பவர். அதாவது, நேரடியாக ஒரு குற்றத்தில் ஈடுபடாமல் அந்தக் குற்றம் நடக்க தூண்டுபவர் அல்லது துணை நிற்பவரைச் சட்டம் accessory என்று அழைக்கிறது.

ஒரு இயந்திரம் அல்லது கருவியைச் சரியாக இயக்குவதற்காக அதில் சேர்க்கப்படும் அதிகப்படி விஷயங்களையும் accessory எனக் குறிப்பிடுவதுண்டு. Accessories for a premium car include electric windows and a sunroof.

***********

“I am providing my best to my children” என்று நான் குறிப்பிட்டேன். வீட்டுக்கு வந்திருந்த, நான் பெரிதும் மதிக்கும் ஒருவர், “You are providing the best to your children” என்றார். My best என்பதற்கும் the best என்பதற்கும் வித்தியாசம் உண்டா?

“என்னாலே அதிகபட்சம் எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவையும் நான் என் குழந்தைகளுக்காகச் செய்கிறேன்” என்பது நீங்கள் கூறியதற்குப் பொருள்.

“மிக அதிகபட்சமாக ஒருவர் தன் குழந்தைகளுக்கு எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவையும் நீங்கள் செய்கிறீர்கள்” என்பது வந்திருந்தவர் கூறியதற்குப் பொருள்.

நீங்கள் அவரை மதிப்பதுபோலவே அவரும் உங்களை மதிக்கிறார். பாராட்டுகிறார். உங்களை நீங்கள் அளவீடாகக் கொள்கிறீர்கள். அவர் இந்த விஷயத்தில் மற்றவர்களையும் ஒப்பிட்டு உங்களை மிக உயர்வாகக் குறிப்பிடுகிறார்.

தொடக்கம் இப்படித்தான்

“From Pillar to Post” என்பதற்குப் பொருள் எல்லா இடத்திலும் என்று வைத்துக்கொள்ளலாமா, எதற்காக இதை உணர்த்த pillar, post ஆகிய இரு வார்த்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன?

Pillar to post என்பது ஓரிடத்தில் தங்காமல் பல இடங்களுக்கு அலைக்கழிக்கப்படுவதைக் குறிக்கிறது. முக்கியமாக எந்தவொரு பயனும் கிடைக்காத அலைச்சல். He was driven from pillar to post because he opposed the local leader.

இங்கிலாந்தில் ஒரு காலத்தில் pillary மற்றும் wihipping post ஆகிய இரண்டும் இருந்தன.

ஏமாற்று வேலை செய்த வணிகர்கள் உள்ளிட்ட குற்றவாளிகளை pillory என்ற இடத்தில் வைத்து அவர்கள் கைகளையும் தலைப் பகுதியையும் கட்டிவிடுவார்கள். அங்கு வரும் மக்கள் அவர்களைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பார்கள்.

செய்த குற்றம் பெரிதாக இருந்தால் அவர்கள் pillory என்ற இடத்திலிருந்து whipping post பகுதிக்கு இழுத்துச் செல்லப்படுவார்கள். அங்கே பொதுமக்கள் அவர்களைச் சவுக்கால் அடிப்பதுண்டு.

இப்படித்தான் Pillar to Post உருவானது.
சிப்ஸ்

Wear என்றால்?

Ware என்றால்?

Wear என்றால் உடுத்துவது அல்லது அணிவது. Ware என்றால் விற்பதற்காகத் தயாரிக்கப்படும் பொருள் எனலாம்.

Enemity என்றால்

முன்விரோதமா, பகைமையா?

இரண்டும்தான். Enemy என்பதில் ‘என்’னின் இருபுறமும் ஈக்கள் உண்டு. ஆனால், Enmity-ல் ஒரு ‘e’தான் என்பதைக் கவனியுங்கள்.

Hurled என்ற வார்த்தை

நாளிதழ்களில் தொடர்ந்து இடம்பெறுகிறது. இது எதைக்

குறிக்கிறது?

நாட்டில் சகிப்புத்தன்மையும் கட்டுப்பாடும் இல்லாமல் போனதைக் குறிக்கிறது! Hurl என்றால் விசையுடன் ஒன்றைத் தூக்கி எறிவது நாளிதழில் hurled என்பதன் கூடவே ‘கல்’ அல்லது ‘காலணி’ என்ற வார்த்தையும் இடம்பெற்றிருக்குமே!

தொடர்புக்கு:

aruncharanya@gmail.com

ஆளுமை மேம்பாடு: திட்டமிடல் எல்லாமே எளிதுதான்!



நேரமில்லை என்று சொல்வதைப் பலர் பெருமையாக எண்ணுகின்றனர். ஆனால், உண்மையில் அது அவர்களது குறை என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஏனென்றால், காலம் யாருக்கும் எந்தச் சலுகையும் அளிப்பதில்லை.
“பிறகு நான் ஏன் நேரமின்மையால் படிக்க அவதிப்படுகிறேன்?” என்று நீங்கள் கேட்கலாம். உங்களுக்கு நேரத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரியவில்லை என்பதுதான் அதற்கான பதில். நேரத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்துகொள்வது மிகவும் எளிது. எளிய வழிமுறைகள் மூலம் நீங்கள் நேரத்தைக் கைவசப்படுத்தலாம்.

நேர மேலாண்மை என்பது என்ன?

நம்முன் இருக்கும் செயல்களை அதன் முக்கியத்துவத்துக்கு ஏற்ப வரிசைப்படுத்த வேண்டும். அதன்பின் ஒவ்வொரு செயலையும் முடிக்க ஆகும் நேரத்தைக் கணித்து, தகுந்த நேரத்தை அவற்றுக்கு ஒதுக்க வேண்டும். பின் அந்தச் செயல்களை அதற்கென ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள் செய்து முடிக்க வேண்டும். இவ்வாறு ஒரு செயலை அதற்கென ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள் சரியான முறையில் செய்து முடிப்பதுதான் நேர மேலாண்மை. இந்த நேர மேலாண்மை மாணவர்களுக்குப் படிப்பில் மட்டுமல்லாமல் அவர்கள் வாழ்நாள் முழுமைக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

வாழ்வின் லட்சியம்

உங்கள் வாழ்வின் லட்சியம் எது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். ஒரு நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் நீங்கள் ஐந்து வருடங்கள் கழித்து என்னவாக இருப்பீர்கள் என்று நினைப்பதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், எதை அடைய வேண்டும் என்ற தெளிவு இருந்தால்தான் நம் பாதையும் பயணமும் தெளிவடையும்.

படிக்கும் இடத்தை ஒழுங்குபடுத்துதல்

படிக்கும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். புத்தகங்களையும் குறிப்பேடுகளையும் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் முறையாக அடுக்கிவையுங்கள். பேனா, பென்சில், ரப்பர் போன்றவற்றைப் படிக்கும் மேஜை மேல் பரத்தி வைக்காமல், அதற்கான பெட்டியில் அடுக்குங்கள். இவற்றின் மூலம் தேடுவதில் நேரம் விரயமாகாமல் தடுக்கலாம்.

திட்டமிட்டுப் படித்தல்

எந்தப் பாடம் முக்கியமானது, எதை முதலில் படிக்க வேண்டும் என்பதைத் தீர்மானியுங்கள். உங்கள் பாடத்திட்டத்தைக் கவனமாக ஆராயுங்கள். பாடத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் எவ்வளவு மதிப்பெண் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். பின், இந்தப் புரிதலின் அடிப்படையில் எப்படிப் படிக்க வேண்டும் என்பதைத் திட்டமிட்டு அட்டவணை தயார்செய்யுங்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். எப்போதும் கடினமான பாடத்தை முதலில் படிக்க ஆரம்பியுங்கள். அதிலிருந்து படிப்படியாக எளிதான பாடத்தைப் படிக்கச் செல்லுங்கள். ஏனென்றால், மூளை சுறுசுறுப்பாக இருக்கும்போது அது கடினமான பாடத்தை எளிதில் கிரகித்துக்கொள்ளும், தினமும் அன்று படித்ததை மீண்டும் வாசிப்பதற்கு என்று சிறிது நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுங்கள்.

பாராட்டுங்கள்

ஒவ்வொரு நாளும் நீங்கள் படித்து முடித்த பாடங்களை அட்டவணையில் குறித்துக்கொள்ளுங்கள். நீங்கள் திட்டமிட்டபடி அந்த நாளில் படித்து முடித்திருந்தால் உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள். உங்களை நீங்களே ஊக்குவித்துக்கொள்வது மிகுந்த தன்னம்பிக்கை அளிக்கும்.

நொறுக்குத் தீனி வேண்டாமே!

படிக்கும்போதே சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக பர்கர், பீட்சா, நொறுக்குத் தீனிகள் போன்றவற்றைக் கண்டிப்பாகத் தவிருங்கள். அது உங்கள் எடையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் தூக்கத்தையும் வரவழைக்கும். அதற்குப் பதில் பழங்கள், சாலட் போன்றவற்றைச் சாப்பிடலாம். இது உங்களைக் களைப்படையாமல் பார்த்துக் கொள்ளும்.

கவனச் சிதறலைத் தவிர்த்தல்

நீங்கள் படிக்கும் அறையில் உங்கள் கவனத்தைத் திசை திருப்பும் எதுவும் இல்லாமல் இருக்குபடி பார்த்துக்கொள்வது அவசியம். குறிப்பாக, பத்திரிகைகள், காமிக்ஸ் புத்தகங்கள், கதைப் புத்தகங்கள், வீடியோ கேம்ஸ் போன்றவை இருக்கக் கூடாது. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே படிப்பதில் எந்தப் பயனுமில்லை. படிக்கும் நேரத்தில் படிப்பைத் தவிர எதற்கும் இடமில்லை என்பதை உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள்.

கைபேசியைத் தவிர்த்தல்

நண்பர்கள் எங்கும் ஓடிவிடப் போவதில்லை. நீங்கள் சிரத்தையுடன் படித்து நன்றாகத் தேர்வு எழுதிய பின்னும் அவர்கள் இருக்கத்தான் போகிறார்கள். எனவே, படிக்கும் நேரத்தில் படிப்புக்கு மட்டும் முக்கியத்துவம் அளியுங்கள், நண்பர்களுடன் கைபேசியில் உரையாடுவது உங்கள் நேரத்தை வீணாக்கிவிடும் என்பதை மறக்கலாகாது. பாடம் தொடர்பான தவிர்க்க முடியாத உதவிக்கு கைபேசியைப் பயன்படுத்தலாம்.

வெளிச்சமும் காற்றோட்டமும்

படிக்கும் அறையை நல்ல காற்றோட்டத்துடனும் வெளிச்சத்துடனும் வைத்து கொள்ளுங்கள். காற்றோட்டம் மூளையையும் மனதையும் புத்துணர்வுடன் வைத்துக்கொள்ளும். கண்கள் எளிதில் களைப்படையாமல் வெளிச்சம் பார்த்துக்கொள்ளும்.

இடை ஓய்வு

படிப்புக்கு இடையே ஓய்வுக்கு என்று தகுந்த நேரத்தை ஒதுக்குங்கள். எந்நேரமும் படித்துக்கொண்டிருந்தால் மூளை ஆற்றல் மங்கிவிடும். மேலும், மனதின் உள்வாங்கும்தன்மை குறையும். இதனால், படிப்பின் மீது வெறுப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. ஓய்வு என்பது தொலைக்காட்சி பார்ப்பதோ வீடியோ கேம்ஸ் விளையாடுவதோ அல்ல. ஏனென்றால், அவை மூளையை மேலும் களைப்படையச் செய்யும். சொல்லப்போனால், அதன் தாக்கம் நாம் படிக்கும்போதும் தொடரும். எனவே, முடிந்த அளவு அந்த நேரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து ஏதாவது விளையாட்டில் ஈடுபடுங்கள். இல்லையென்றால் காலாற நடந்துவிட்டுத் திரும்புங்கள்.

காலம் பொன் போன்றது

‘காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது’ என்று ஒரு பழமொழி உண்டு. மாணவப் பருவத்தில் படிப்பதுதான் முக்கியக் கடமை. எனவே, அந்தப் படிப்பை எப்போதும் முதன்மை விருப்பமாக வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், காலம் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்காமல் நிற்காமல் ஓடிக்கொண்டேயிருக்கும். நேரத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்தால் காலம் நம்மை வெற்றிக்கு இட்டுச்செல்லும்.

மாணவர் மனம் நலமா 08: கையில் செல்ஃபோனை வைத்திருப்பதைக் கைவிடுங்கள்!

ஏதோ ஆர்வத்தில் ஸ்மார்ட்ஃபோனை அடிக்கடி பயன்படுத்திய நிலையிலிருந்து தற்போது அதிகப்படியான நேரம் ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்தும் நிலைக்கு என்னை அறியாமலேயே தள்ளப்பட்டிருக்கிறேன். இதனால் ஏற்படும் உடல், மனப் பிரச்சினைகளைப் பற்றிய தெளிவு வேண்டும்.
- ராஜேந்திரகுமார், பள்ளிக்கரணை, சென்னை.

இருந்த இடத்திலிருந்தே யாரையும் உடனடியாகத் தொடர்புகொள்ள, உலகத்துடன் எந்நேரமும் தொடர்பில் இருக்க இணையத்துடன்கூடிய செல்ஃபோன் உதவுகிறது. இதனால் நம்முடைய தினசரி வாழ்வின் இன்றியமையாத தேவைகளுள் ஒன்றாக செல்ஃபோனும் மாறிவிட்டது. 100-ல் 72 பேர் தங்கள் செல்ஃபோனை ஐந்தடி தூரத்துக்குள் வைத்திருக்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. எங்கே இந்த உலகத்தின் தொடர்புநிலையிலிருந்து தான் மட்டும் விலக்கப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தின் விளைவிது. இதை ‘நோமோஃபோபியா’ என்பார்கள்.

குடி, புகைப்பிடித்தல் ஆகியவற்றுக்கு அடிமையாவதைப் போல, செல்ஃபோனைச் சார்ந்திருப்பதும் ஒருவித ‘நடத்தை அடிமைத்தனம்’. அதீதமாக செல்ஃபோன் பயன்படுத்துவதற்கு மனவருத்தம்கூட ஒரு காரணமாக இருக்கலாம். பிரச்சினைகளைக் கையாள முடியாத கையறுநிலை, கவனக்குறைவு, பொதுஇடங்களில் மற்றவர்களோடு இயல்பாகப் பழக பதற்றம் ஏற்படுவது போன்றவற்றிலிருந்து தப்பிக்க சிலர் அதிகப்படியாக செல்ஃபோன்களைப் பயன்படுத்துகின்றனர்.

குறிப்பாக, குழந்தைகள் ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம். எது சரி, எது தவறு என்று தெரிந்துகொள்ள நேரிடையாகக் குழந்தை மற்றவர்களோடு தொடர்புகொள்ள வேண்டும். அப்போதுதான், சரியான ஆளுமையை நோக்கி குழந்தை வளரத் தொடங்கும். ஸ்மார்ட்ஃபோன்கள் மூலமாகச் செய்தி அனுப்புதல்,பேசுதல், இணையத்தில் உலாவுதல் மூலமாக குழந்தையால் எதனையும் கற்றுக்கொள்ள முடியாது.

வயது முதிர்ந்தவர்கள் அதிக நேரம் ஸ்மார்ட்ஃபோன் தொடுதிரையைப் பயன்படுத்தும்போது, மெலடோனின் என்ற ரசாயனப் பொருளின் அளவு குறைந்து, தூக்கம் கெடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. தூக்கமின்மையால் கவனம் குறைந்து மனதில் பதிய வேண்டிய விஷயங்கள் நீர்த்துப்போகும். இதனால், அடுத்த நாள் நிகழ்வுகள் அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாகும்.
சமூக ஊடகங்களில் தங்களின் கருத்துகளைப் பதிவுசெய்வது சிலருக்கு ஒருவித அடையாளத்தைத் தருகிறது. அடிப்படையில், வித்தியாசமான, பிரச்சினைக்குரிய ஆளுமைகளோடு இருப்பவர்கள், சமூக ஊடகங்களில், போலியான முகமூடிகளோடு தங்களை நகைச்சுவை மிகுந்தவர்களாகவும் நல்லவர்களாகவும் வெளிப்படுத்திக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. அதீத அளவில் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துவதால், ‘டெக்ஸ்டோஃபிரினியா’ என்ற பிரச்சினை தோன்ற வாய்ப்பிருக்கிறது. அழைப்போ மெசேஜோ வராதபோதும், அடிக்கடி செல்ஃபோனைப் பார்க்கும் பழக்கம், ‘டெக்ஸ்டோஃபிரினியா’ என்றழைக்கப்படுகிறது.

மூன்று மாதங்களுக்கும் அதிகமாகத் தினசரி ஆறு மணிநேரத்துக்கு மேல் ஸ்மார்ட் ஃபோனைப் பயன்படுத்துபவர்களுக்கு, மற்ற வேலைகள் பாதிக்கப்படுவதுடன், உடல், மனப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அலைபேசியால் உண்டாகும் உடல்பிரச்சினைகள்

1. கண்களில் எரிச்சல்
2. பார்வை மங்குதல் போன்ற உணர்வு
3. கண்களில் தளர்வு
4. தலைவலி
5. கழுத்துவலி

அலைபேசியால் உண்டாகும் மனப் பிரச்சினைகள்

1. தூக்கமின்மை
2. மனவருத்தம்
3. உறவுநிலைகளில் பிரச்சினைகள்
4. பதற்றம்

எப்படி மீள்வது?

1. செல்ஃபோனைப் பற்றிய கருத்தில் முதலாவதாக மாற்றம் கொண்டுவருவோம். அவசியமான நேரத்தில் ஃபோனைப் பயன்படுத்தினால்போதும் என்று ஒரு உடன்படிக்கையை முதலில் செய்துகொள்ளுங்கள்.
2. ஒரு நாளைக்கு எவ்வளவு மணிநேரம் செல்ஃபோனைத் தேவையில்லாமல் பயன்படுத்துகிறீர்கள் என்பதைக் கணக்கிடுங்கள்.
3. பயன்பாட்டைத் திட்டமிடுங்கள். குறிப்பிட்ட நேரத்துக்கு அலைபேசியிலேயே அலாரம் வைத்துக்கொண்டு அந்த நேரத்தில் மட்டும் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
4. செல்ஃபோனில் செலவழிக்கும் நேரத்தில் உங்களுக்குப் பிடித்த ஹோட்டலில் சாப்பிடுவது, பிடித்த உடை எடுத்துக்கொள்வது என்று நீங்களே உங்களுக்கு வெகுமதி கொடுத்துக்கொள்ளலாம்.
5. ஃபோனை அடிக்கடி ‘செக் பண்ணுவதை’ தவிருங்கள் அல்லது தள்ளிப்போடுங்கள்.
6. எந்நேரமும் கையில் செல்ஃபோனை வைத்திருப்பதைக் கைவிடுங்கள். பார்க்காத இடத்தில், வெகுதூரத்தில் ஃபோனை வையுங்கள்.
7. ஒவ்வொரு முறை மெசேஜ் வரும்போது, சிறு ஒலி எழுப்பி உங்கள் கவனத்தை ஈர்ப்பதை மாற்றிவிடுங்கள்.
8. முடிந்தவரை சிலரிடம் நேரில் பார்க்கும்போது பேசிக்கொள்ளலாம் என்று முடிவெடுங்கள்.
9. ஓய்வு நேரத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செயல்களில் ஈடுபடுங்கள்.
10. சமூக நிகழ்வுகளில் நேரடியாக ஈடுபடுங்கள்
11. முடிந்தால் புதிய பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபடுங்கள்.
12. எப்போதுமே உங்களை ‘பிஸியாக’ வைத்திருங்கள்.
‘மாணவர் மனம் நலமா?’ கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் மனநல மருத்துவர் டாக்டர் டி.வி. அசோகன் (தொடர்புக்கு: tvasokan@gmail.com). வாசகர்கள் தங்களுடையப் படிப்புத் தொடர்பான உளவியல் சந்தேகங்களை இப்பகுதிக்கு அனுப்பலாம்.

முகவரி: வெற்றிக்கொடி, தி இந்து-தமிழ் நாளிதழ், கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை-600 002,
மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in

  வாழ்க்கை எப்போதும் இனிதாக இருப்பதில்லை. சூழல் மிக இக்கட்டாக இருக்கலாம். பிரச்சினைகள் சவால் மிகுந்ததாக இருக்கலாம். ஆனால், இவை அனைத்தையும் சமாளிக்கும் தெளிவும் மனோதிடமும் நம்மிடம் இருக்க வேண்டும். இவற்றை நமக்கு அளிப்பதுதான் உண்மையான தலைமைப் பண்பு. அப்படியானால், தலைமைப் பண்பு என்பது பிறரை வழிநடத்துவதும் ஆளுவதும் இல்லையா? தன்னை ஆள முடியாதவர் தலைவராக முடியாது.

தலைமைப் பண்பின் தேவை

வீட்டில் நீங்கள் செல்லப் பிள்ளையாக இருக்கலாம். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் அங்கே பூர்த்தி செய்யப்படலாம். நீங்கள் விழுவதற்கு முன்பே தூக்கிப் பிடிக்கப்படலாம். உங்கள் தவறுகள் உங்கள் மனம் கோணாமல் கண்டிக்கப்படலாம். ஆனால், வெளி உலகம் கண்டிப்பாக இதற்கு நேரெதிரானது. தொட்டால் சிணுங்கியாக நீங்கள் இருந்தால் உலகம் உங்களைப் பந்தாடும். எனவே, உலகை எதிர்கொள்வதற்குக் கீழே விழுந்தால் தானே எழுந்து நிற்கும் திறனும் உங்களுக்குத் தேவை. தலைமைப் பண்பை வளர்த்தால், இத்தகைய இயல்புகள் உங்களைத் தானே வந்தடைந்து வெற்றிக்கு இட்டுச் செல்லும்.
அத்தகைய தலைமைப் பண்பைப் பயிலத் தொடங்குவதற்கான மிகச் சிறந்த இடம் கல்வி நிலையம்தான். ஏனென்றால், வெளி உலகுடனான முதல் தொடர்பை நமக்கு அளிப்பது பள்ளிக்கூடமும் கல்லூரியும்தானே! அங்கே பாடத்தைப் படிப்பதோடு மட்டும் கற்றலை சுருக்கிக்கொள்ளக் கூடாது. பிற்காலத்தில், நாம் சந்திக்கப்போகும் சவால்களை எதிர்கொள்ளத் தேவைப்படும் தலைமைப் பண்பையும் அங்கே கற்றுப் பழகலாம். கீழே உள்ள எளிய வழிமுறைகள் அவற்றுக்கு உதவும்.

ஒழுக்கம் பழகுதல்

ஒழுக்கம் என்பது வெளியிலிருந்து நம் மீது திணிக்கப்படும் ஒன்றாக இருக்கக் கூடாது. அது எந்த நிர்ப்பந்தமுமின்றி நம்மிடமிருந்து வெளிப்படும், இயல்பாக மாற வேண்டும். சுலபமான பயிற்சிகள் மூலம் இது சாத்தியம். நேரம் தவறாமல் இருக்கப் பழகுதல், குறித்த நேரத்தில் தூங்கி எழுதல், ஆசிரியர் சொன்ன நேரத்துக்குள் படித்து முடித்தல், தினமும் சுத்தமான உடை அணிதல், நகங்களை ஒழுங்காக வெட்டுதல், தலைமுடியை ஒழுங்காகப் பேணுதல், தினமும் உடற்பயிற்சி செய்தல் ஆகியவை இந்த இயல்பைப் பலப்படுத்த உதவும்.

பொறுப்புகளை விரும்பி ஏற்கப் பழகுதல்

நிறைய பொறுப்புகளை விரும்பி ஏற்பது தலைமைப் பண்பை வளர்ப்பதற்கான சிறந்த வழிமுறை. படிப்பதற்கே நேரமில்லை, இதில் எங்கே கூடுதல் பொறுப்புகளை ஏற்பது என்று தோன்றலாம். இப்படி யோசித்துப் பாருங்கள், 100 மீட்டர் ஓடுவது என்பது இன்று உங்களுக்குச் சிரமமாகத் தோன்றலாம். ஆரம்ப நாட்களில் உசேன் போல்ட்டுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். ஆனால், அவர் அதையும் மீறி தன்னுடைய திறனைச் சவாலுக்கு அழைத்தார். அதனால்தான் அவரால் 100 மீட்டர் தூரத்தை 9.58 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைக்க முடிந்தது.

எனவே, உங்களுடைய ஆற்றலின் அளவு எல்லையற்றது என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். கூடுதலாகப் பொறுப்புகளை ஏற்க ஏற்க உங்களுடைய ஆற்றலின் அளவும் அதிகரிக்கும். பொறுப்புகளை விரும்பி ஏற்றுக்கொள்ளுங்கள். வகுப்புக்குத் தலைமை வகிப்பது, விளையாட்டு அணிகளில் பங்கேற்பது, சாரணர் அணியில் இணைவது, சமூக சேவையில் ஈடுபடுவது, வீட்டு நிர்வாகத்தை ஏற்கப் பழகுவது போன்றவை உங்களுடைய திறனை அதிகரிக்க உதவும்.

பின் செல்லப் பழகுதல்

கண்மூடித்தனமாக யாரையும் பின்பற்றுவது மடமை. ஆனால், சில விஷயங்களில் நம்மைவிடச் சிறந்தவர்கள் பலர் இருப்பார்கள். அவர்களை நாம் பின்பற்றிச் செல்லத் தயாராக இருப்பது நல்லது. அதை இழுக்கென்று எண்ணத் தேவை இல்லை. முக்கியமாக அவர்களைப் போட்டியாளராகக் கருதாமல் மதிப்பளித்து உரிய மரியாதையை அவர்களுக்கு அளித்துப் பழக வேண்டும்.

விழித்திருக்கப் பழகுதல்

சூழ்நிலையை முழுமையாக உணர்வதன் மூலம் பிரச்சினைகள் வரும் முன்னே அவற்றை ஊகிப்பவர் தலைவர் ஆகிறார். அதற்கு முதலாவதாக, எப்போதும் நம்முடைய சூழல் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். அதில் அவ்வப்போது வரும் பிரச்சினைகளையும் கவனிக்க வேண்டும். பின்பு அந்தப் பிரச்சினைகளையும் சூழலையும் பொருத்திப் பார்க்க வேண்டும். அவ்வாறு நேராமல் இருக்க ஏதும் வழியுண்டா என்று யோசிக்க வேண்டும். அந்த வழிமுறையை அடுத்த முறை பிரச்சினை வரும்முன்னே செயல்படுத்திப் பார்க்க வேண்டும். இதைப் பள்ளி, கல்லூரியில் மட்டுமில்லாமல் வீட்டிலும் செயல்படுத்திப் பழகலாம்.

பிறரை ஊக்குவித்தல்

தன் வேலையை மட்டும் சிறப்பாகச் செய்வது தலைவருக்கான அடையாளம் அல்ல. தன் குழுவினரின் தனித்துவத்தைக் கண்டறிந்து, அவர்களை ஊக்குவித்து, அவர்கள் ஆகச் சிறந்த திறனை வெளிப்படுத்தச் செய்வதுதான் தலைமைப் பொறுப்பை வகிப்பவரின் முக்கியப் பணி. எனவே, யாரையும் போட்டியாகக் கருதாதீர்கள். பொறாமைகொள்வதைத் தவிர்த்து அனைவரின் திறமைகளையும் அங்கீகரித்து ஊக்குவித்துப் பழகுங்கள். சில நேரங்களில் உங்களுடைய சிறிய ஊக்குவிப்பு அவர்களின் வாழ்க்கையையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டதாக இருக்கலாம். நீங்கள் ஏதேனும் ஒரு குழுவின் தலைவராக இருந்தால், உங்கள் அதிகாரத்தை மற்றவர்களுக்கும் பகிர்ந்து அளித்துப் பழகுங்கள். இது உங்கள் பணியை மட்டும் சுலபமாக்காது, அந்த நபரின் தன்னம்பிக்கையையும் பன்மடங்கு அதிகரிக்கும்.
பணி பிரம்மாக்கள்!

Published : 19 Dec 2017 10:44 IST
 
ம.சுசித்ரா



பயிலரங்கத்தில் பங்கேற்ற மாணவி

படித்த படிப்புக்கு உரிய வேலை கிடைப்பதில்லை. வேலைவாய்ப்பு சந்தையின் தேவைக்குக் கல்லூரியில் படித்த பாடம் ஈடுகொடுப்பதில்லை. கையில் பட்டம் வாங்கிய பிறகு கல்வி கற்பித்த நிறுவனத்துக்கும் நமக்கும் தொடர்பற்றுப் போய்விடுகிறது.

இவைதான் இந்தியாவில் தொழில்துறை படிப்புகள் முதற்கொண்டு வெவ்வேறு பாடப் பிரிவுகளைப் படித்த பெரும்பாலோரின் நிலை. ஆனால், அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம், மாசாசூசட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் போன்ற கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதோடு நின்றுவிடுவதில்லை. தங்களுடைய சிறந்த மாணவர்களுக்கு அக்கல்வி நிறுவனங்களே வேலை அளிப்பது மட்டுமல்லாமல் அவர்களுடைய புதிய தொழில் முயற்சிகளுக்கும், தொழில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கும் வாய்ப்பு வசதிகளைப் பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளேயே செய்துதருகின்றன.

தங்களிடம் படித்த மாணவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளைக் கல்வி நிறுவனங்களே உருவாக்கித் தரும் நிலை இந்தியா போன்ற நாட்டில் சாத்தியமா? டெல்லி, ஹைதராபாத், பெங்களூருவில் மட்டுமின்றி சென்னையிலும் சாத்தியம் என நிரூபித்துள்ளது சென்னை ஐ.ஐ.டி. தங்களுடைய முன்னாள் மாணவர்களுக்கு மட்டுமல்லாது மற்ற கல்வி நிறுவனங்களில் படித்த திறன்வாய்ந்த இளைஞர்களுக்கும் பணிவாழ்க்கையை உருவாக்கித் தந்துகொண்டிருக்கிறது இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் சென்னை ஆராய்ச்சி பூங்கா.

அசத்தும் ஸ்டார்ட் அப்

அழகிய பூங்காபோலக் காட்சி அளிக்கும் ஐ.ஐ.டி.எம். ரிசர்ச் பார்க்கில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தன்னம்பிக்கை மிளிர வேலைபார்த்துக்கொண்டிருக்கிறார்கள். டைட்டன், செயின்ட்கோபைன் உள்படப் பன்னாட்டு நிறுவனங்களின் ஆராய்ச்சிக் கூடங்களில் சிலர் இளம் ஆராய்ச்சியாளர்களாகப் பணிபுரிகின்றனர். அதைவிடவும் ஆச்சரியப்படுத்தும் விஷயம் தங்களுடைய சொந்த ஸ்டார்ட் அப்புகளை நிறுவியுள்ள இளம் சாதனையாளர்கள் இங்கு பலர் உள்ளனர். ஐ.ஐ.டி.யின் முன்னாள் மாணவர்கள் சிறிய குழுக்களாகப் பிரிந்து தொடங்கிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பல இங்கு செயல்பட்டுவருகின்றன.

இவர்கள் சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளைபோன்ற வழக்கமான வேலைகளைச் செய்யவில்லை. சூரியஒளி மின்சாரம் மூலமாக வாகனங்களை இயக்கும் ஆராய்ச்சி நிறுவனமான ‘Pibeam Labs’, வாகன நிறுத்தத்தைத் தானியங்கி அமைப்புக்குள் கொண்டுவரும் திட்டத்தை வடிவமைத்துவரும் ‘Wiitronics’ நிறுவனம், நீர் மேலாண்மையில் ஈடுபடும் ‘Green Environment’ என வித்தியாசமான பல நிறுவனங்கள் இங்குச் செயல்படுகின்றன. புதிய கண்டுபிடிப்புகள், அடுத்த தலைமுறையினருக்கான தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் எனப் படைப்பாற்றல் மிக்க வேலைகள் இங்குச் சத்தமில்லாமல் நடைபெற்றுவருகின்றன.

அவற்றில் குழந்தைகளின் படைப்பாற்றலை வளர்க்கும் மாற்றுக் கல்வி திட்டத்தை வடிவமைக்கும் ‘ஸ்கில் ஏஞ்சல்ஸ்’, பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ், எம்பெடட் சிஸ்டம், இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ், கம்ப்யூட்டர் விஷன் அண்ட் மிஷின் லேர்னிங் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பக் கல்வியை வழங்கும் ‘லேமா லாப்ஸ்’ போன்றவை கவனத்தை ஈர்க்கின்றன.


படைப்பாற்றல்மிக்க கற்றல் முறை

ரிசர்ச் பார்க்கின் முதல் மாடியில் இருந்த ஒரு அறையில் ‘ஸ்கில் ஏஞ்சல்ஸ்’ இயங்கிக்கொண்டிருக்கிறது. ஏழு, எட்டு இளைஞர்கள் தங்களுடைய கணினியில் ஏதோ வீடியோ கேம்ஸ் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த அறையின் நடுவில் மூன்றடி உயரத்தில் மஞ்சள் நிறத்தில் சிரித்த முகத்துடன் நின்றுகொண்டிருந்தது ‘எக்ஸ்புளோரா’ (‘Explora’) என்னும் அவர்கள் வடிவமைத்த ரோபோட்.

‘இவர்கள் யாரும் வேலை பார்க்கிற மாதிரித் தெரியலையே!’ என்கிற நம்முடைய மனவோட்டத்தைக் கணித்த அதன் நிறுவனர் சரவணன் சுந்தரமூர்த்தி, “இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை கணினி, தொலைக்காட்சி, மொபைல்ஃபோன் என ஏதோ ஒரு திரையைத்தான் அதிகப்படியான நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதில் வெறும் பார்வையாளர்களாக இருக்கிறார்களே தவிரப் பங்கேற்பாளராக இருப்பதில்லை.


இதை மாற்ற நாங்கள் ‘கேம் பேஸ்டு லேர்னிங்க்’ எனப்படும் விளையாட்டின் மூலமாகக் கற்பிக்கும்முறையில் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறோம். தொடக்கநிலை முதல் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள்வரை அவர்களுடைய நுண்ணறிவை கூர்மைப்படுத்த இது கைகொடுக்கும். அதேநேரத்தில் கற்றலைச் சுமையாக உணராமல் சுவாரசியமாக மாற்றும் முயற்சி இது.

வழக்கமான பாடங்கள் தவிர்த்துப் போட்டித் தேர்வுகளில் சோதிக்கப்படுவது பகுப்பாய்வுத் திறன். நினைவாற்றல், காட்சி நுண்ணறிவு, கணிதப் புதிர்களுக்குத் தீர்வு காணுதல், கவனக்குவிப்பு, மொழி ஆற்றல் போன்றவற்றை வளர்க்கும் விளையாட்டுகளை இங்கு வடிவமைத்துவருகிறோம். பன்னாட்டு நிறுவனங்களும் பணியாளர்களுக்கான தேர்வில் எங்களுடைய ‘கேம் பேஸ்ட் லேர்னிங்க்’-ஐ தற்போது பயன்படுத்துகிறார்கள். ஆக, பொழுதுபோக்கு என்கிற நிலையிலிருந்து படைப்பாற்றல்மிக்க கற்றல் முறை என்கிற புதிய அர்த்தத்தை நாங்கள் விளையாட்டுகளுக்குத் தந்துகொண்டிருக்கிறோம்” என்றார் உற்சாகமாக.

இயந்திரம் டூ எந்திரம்

அங்கிருந்து வெளியேறிக் கீழ்த்தளத்துக்கு வந்தால் ‘கெயிஜன் ரோபோட்டிக்ஸ் புரோகிராம்’ ஆங்காங்கே பரபரப்பாக நடந்துகொண்டிருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் உத்வேகத்தோடு குட்டி ரோபோட்களை இயக்கியபடி வகுப்பில் விரிவுரையாற்றிக்கொண்டிருந்த இளைஞர்களை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் கல்லூரி மாணவர்கள்கூட அல்ல என்பது பின்பு தெரியவந்தது. “குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நான் தற்போது சிங்கப்பூரில் ஃபிசியோதெரபிஸ்டாக இருக்கிறேன். கூடிய சீக்கிரம் மருத்துவத் தொழிலுக்கும் ரோபோட் தொழில்நுட்பம் அத்தியாவசியமாகிவிடும் என்பதால் இந்தப் பயிலரங்கம் குறித்துக் கேள்விப்பட்டு வந்தேன்” என்றார் தாரா. கோயம்புத்தூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராகப் பணிபுரிந்துவரும் அனிதா, “நான் தயாரிப்பு பிரிவில் வேலை பார்க்கிறேன். இன்று இயந்திர வடிவில் இருக்கும் பல பொருள்கள் விரைவில் எந்திர வடிவமாக மாறவிருப்பதால் இங்கு அடுத்தகட்டத் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள வந்திருக்கிறேன்” என்றார்.

கண்டுபிடிப்புகளுக்கான இடம்

தனிக் குழுக்களாகப் பிரித்து இவர்களுக்கு ரோபோட்டிக்ஸ் வகுப்பு எடுத்த இளைஞர்களில் ஒருவரான பார்த்திபன், “நான் சாதாரண குடும்பச்சூழலில் இருந்து வந்தவன். என்னுடைய பெற்றோர் செங்கல் சூளையில் வேலை பார்த்துத்தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ. எம்பெடட் டெக்னாலஜி வரைக்கும் என்னைப் படிக்கவைத்தார்கள். ஆனால், படித்துமுடித்த பிறகு ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்க விருப்பமில்லை. இன்று பொறியியல் படித்த பல இளைஞர்கள் அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்தகட்டத் தொழில்நுட்பக் கல்வியைக் கற்பித்து வழிநடத்தும் ஐ.ஐ.டி.யின் லேமா லேப்ஸில் 2012-ல் இணைந்தேன். இது புதிய படைப்பாற்றலுக்கான, கண்டுபிடிப்புகளுக்கான இடம்.


மாணவிகளுக்கு ரோபோட்டிக்ஸ் வகுப்பு எடுக்கும் பார்த்திபன்

இங்கு வாராவாரம் 40 மணி நேரத்துக்கு ரோபோட்டிக்ஸ் உட்படப் புதிய தலைமுறை தொழில்நுட்பங்களை செயல்முறை விளக்கத்தோடு கற்பிக்கிறோம். அதில் சேரும் மாணவர்களை 4 மாதங்களுக்குப் புதிய புராஜெக்ட்டுகள் மற்றும் சர்வதேசப் போட்டிகளுக்குத் தயார்படுத்துவோம். 10 ரோபோட்களை ஒவ்வொருவரும் தானாக உருவாக்கும் ஆற்றலை வழங்குவோம். இப்படி எங்களிடம் பயிற்சி பெற்ற பல இளைஞர்கள் ஐ.ஐ.டி. ரிசர்ச் பார்க்கில் உள்ள புதிய நிறுவனங்களில்கூடப் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இளைஞர்களுக்கு மட்டுமின்றிப் பள்ளி எட்டாம் வகுப்பு அதற்கு மேற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கும் குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளிக்கிறோம். டிசம்பர் 26 முதல் பள்ளி மாணவர்களுக்கான பயிலரங்கம் தொடங்கவிருக்கிறது. பள்ளிக்கூடங்கள் மூலமாக மட்டுமல்லாமல் நேரடியாகவும் lemalabs.com/register என்கிற இணையதளத்தில் பதிந்து இங்கு சேர்ந்து எதிர்காலத்தை எதிர்கொள்ள உங்களைத் தயார்படுத்திக்கொள்ளலாம்” என்கிறார்.

ஏதோ ஒரு பணியில் சேர நம்மைத் தயார்படுத்தும் கல்வி நிறுவனங்களுக்கு மத்தியில் புதிய பணிகளை உருவாக்கும் இளைஞர்களுக்கு தாய்மடியாகத் திகழும் இதுபோன்ற கல்வி நிறுவனங்கள்தான் இன்றைய அவசியத் தேவை.

Fake PAN, Aadhaar card racket busted in Uttar Pradesh's Shamli: Police

By PTI  |   Published: 24th December 2017 09:06 PM  |  
Last Updated: 24th December 2017 09:28 PM 
Image used for representational purpose only
MUZZAFARNAGAR: Police in Uttar Pradesh's Shamli district today claimed to have busted a gang which made fake Aadhaar and PAN cards with the arrest of one person.
The accused was arrested from a house in Khurgan village in Shamli's Kairana during a police raid yesterday, officials said.

A car, a laptop, a camera and a large number of fake Aadhaar and permanent account number (PAN) cards were seized from the accused, Javed, station house officer (SHO), Kairana police station, Bhagwat Singh said.

The SHO said two of Javed's accomplices managed to give police the slip during the action and a hunt has been launched for them.

Interrogation of the arrested accused was underway, Singh added.

Aadhaar is a 12 digit unique-identity number issued by the government to all residents based on their biometric and demographic data.
Reliance Jio introduces Happy New Year 2018 plan starting at Rs 199 

DECCAN CHRONICLE.

Published Dec 24, 2017, 3:06 pm IST

Under the new plans, users will get 1.2GB and 2GB 4G data respectively with a validity of 28 days.


As the telecom battle gets stiff, major service providers have started pushing dirt cheap offers, each passing day. Now Reliance Jio has introduced its Happy New Year 2018 offer with Rs 199 and Rs 299 prepaid recharges.

As the telecom battle gets stiff, major service providers have started pushing dirt cheap offers, each passing day. Now Reliance Jio has introduced its Happy New Year 2018 offer with Rs 199 and Rs 299 prepaid recharges.

Under the new plans, users will get 1.2GB and 2GB 4G data respectively. Both plans come with a validity of 28 days and are one of the cheapest in the category.

Jio subscribers will also be able to make free unlimited local, STD and roaming voice calls and SMS to any other operators. The offers also allow excess to Jio apps such as MyJio, JioChat, JioCinema, JioTV, JioMusic, JioXpressNews, JioMoney, and more.

Recently the company also announced to extend its triple cash back offer which was announced last month. This is the second time the company has extended the validity of the plan. Earlier, the expiry date was extended until December 15, but now users can avail the plan till December 25, 2017.

The special offer for the Prime customers includes triple cashback of up to Rs 2,599 on every recharge of Rs 399 or above.

Jio will give Rs 400 cashback in the form of eight vouchers of Rs 50. These vouchers can be used to deduct Rs 50 while purchasing future recharge packs on MyJio app or www.jio.com. Users cannot use multiple of these vouchers for a single recharge, meaning they will have to make eight recharges for utilising these vouchers completely.
200 scorpions rescued from hawker

Trichy: Representatives of Animal Welfare Board of India (AWBI) rescued 200 venomous scorpions, including a few black scorpions, from a hawker selling oil extracts for headache in Trichy on Sunday. The scorpions retrieved from the 60-year-old hawker were later let out into a suitable forest habitat near Kaatukeelakurichi.

According to AWBI sources, the board was informed about the hawker displaying scorpions on a road near Ponmalai Market to attract locals for selling oil extracts products. On information, AWBI members rushed to Ponmalai and found S Samsudeen of Kanda Nagar in Musiri with the scorpions.

For the past 30 years, Samsudeen had been selling oil extracts. “It seems, to attract people and also to project himself as a natural healer, the hawker displayed at least 200 scorpions including a few black scorpions in plastic boxes,” an AWBI member said. TNN
Dentist stabs friend to death at hotel 
 Had A Heated Exchange Of Words Over His Ex-Wife

TIMES NEWS NETWORK

Chennai: A dentist allegedly stabbed to death his friend, a 32-year-old call centre employee, at a beach side hotel in Mamallapuram on Saturday night after an argument turned ugly .

The deceased was identified as Sanjeev Raj, a native of Udumalaipet who was working in Guindy. Police arrested Senthil Raj, 42, a dentist working as a senior manager in a private firm at Ekkatuthangal and charged him with the murder.

Police said Senthil, a divorcee living with his son, was not happy with Sanjeev’s friendship with his former wife Surekha. Sanjeev was a colleague of Surekha.

Sanjeev along with 20 other friends had organised a Christmas party at the hotel. They came on Saturday morning and decided to leave on Sunday evening.

They booked five rooms to spend the weekend. Sanjeev also brought his dentist friend Senthil, from Guindy, to the party.

“While the women colleagues retired to their rooms after dinner at 10pm, the men gathered for drinks in a room,” said an investigating officer.

All of them began joking with each other, when Sanjeev, who had invited Surekha also to the party, confronted Senthil. A scuffle broke out when Senthil questioned him on his relationship with his ex-wife.

The others tried to pacify Senthil but in vain. In a fit of rage, Senthil took out a pen knife and stabbed Sanjeev.

The victim suffered serious injuries to his stomach and chest, police said. The frightened female members of the group vacated the hotel soon after the murder.

Senthil too fled the spot. He reportedly took a bus to Chennai. The other friends took the victim to a nearby private hospital where the doctors on duty declared him brought dead.

The Mamallapuram police registered a case and launched a hunt for the suspect. They sent the body of the victim to the Chengalpet government hospital for postmortem.

After an intense search, the police nabbed the dentist from a bus near Kovalam. He was booked on murder charges and later arrested.

Police sources said that Sanjeev was trying to patch up the discord between the estranged couple, which led to a heated exchange of words and culminated in the murder.

Police are questioning Senthil further in this connection. They are also interrogating the others who were present at the party on Saturday.



MURDERED: Sanjeev Raj

After complaints, Madras university plans to improve guest houses

| TNN | Dec 25, 2017, 06:53 IST

CHANGE FOR THE BETTER:The vice-chancellor's official residence in Kotturpuram will be converted into a VIP guest house. 
 
CHANGE FOR THE BETTER:The vice-chancellor's official residence in Kotturpuram will be converted into a VIP guest house.
 
CHENNAI: After an audit report in March found that the international hostel and guest houses of University of Madras were being utilised poorly, the university has framed detailed guidelines to improve the facilities ensuring that the rooms aren't misused.
The vice-chancellor has relinquished his official bungalow, beside the Anna Centenary library in Kotturpuram, which will be converted into a VIP guest house for international and national visiting professors, scientists and other top officials.

Though the university has several properties for visiting faculty and students in the city, most of them remain vacant or were used by politicians and research scholars for unlawful activities, said sources. Professors said international students and academics invited for conferences and PhD viva-voce had to stay in hotels as facilities in the university guest houses were poor. The university authorities recently formed a committee which looked into the issue and came out with a set of recommendations, sources said. All the guest houses and the international hostel will be managed by a professor rank faculty nominated by the vice-chancellor.

The university has a beach-facing guest house beside its Marina campus and another such facility, known as the UGC-Human Resource Development Centre (HRDC) hostel behind it. This is the only such sea-facing guest-house on the stretch owned by the government. A separate hostel for international students has been constructed at the Taramani campus. But the March audit report stated that though crores of rupees had been pumped into construction of the hostel in Taramani, 203 rooms remained unoccupied. The HRDC guest-house was completed in May 2016 but that too was not put to use. There was considerable loss in revenue because of this, the report noted.

Vice-chancellor P Duraisamy said the syndicate had given approval for the revamp of these facilities and had prepared guidelines for its usage. "Earlier, the registrar and public relations officer were in-charge and it was inefficiently managed, now a professor has been put in charge and a separate bank account has been created," he said. The maximum rent for a suite is Rs2,500 per day. Guidelines on who can use the rooms, period of stay and who will be authorised to give permission for use has been laid out. Senate, syndicate members, visiting academics, experts on exam duty and parents will be allowed to use the facilities.
 ஆருத்ரா தரிசன திருவிழா துவக்கம்
Added : டிச 25, 2017

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. விழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை, சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. பின் பஞ்சமூர்த்திகள் கொடி
மரம் அருகே எழுந்தருளினர்.கொடி மரத்தடியில், அட்ஷராயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பன்னிரு திருமுறை வழிபாடும், காலை, 8.30 மணிக்கு, உற்சவக்கொடி ஏற்றப் பட்டு, மகா தீபாராதனையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள், தரிசனம் செய்தனர். ஆருத்ரா விழாவில், சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு, தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகளும், காலையில், பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், மாலையில், சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. வரும், 28ம் தேதி, தெருவடைச்சான் உற்சவமும், ஜனவரி, 1ல் தேரோட்டமும், 2ல், ஆருத்ரா மகா தரிசனம் நடக்கிறது.
 வாருங்கள் துணைவேந்தர்களே வாருங்கள்!
Added : டிச 25, 2017

சமீபத்தில், ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு, 241 பேரும், இன்னொரு பல்கலையில், 194 பேரும் விண்ணப்பித்துள்ளனர். வி.ஏ.ஓ., எனப்படும், கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு தான், அதிகமான விண்ணப்பங்கள் குவிந்ததை பார்த்திருக்கிறோம்.'பசையுள்ள' பதவி என்பதால், அப்படியொரு விண்ணப்ப சாதனை படைத்தது, வி.ஏ.ஓ., பதவி. இப்போது, துணைவேந்தர் பதவியும் அப்பெருமையை பெற்றுள்ளது

.தேர்வுக்குழுக்கள் இரவு பகலாக பாடுபட்டு, விண்ணப்பித்தவர்களின் பண்புகளை ஆராய்ந்து, மதிப்பெண்கள் போட்டு, அவர்களின் ஆளுமை திறன்களை கணித்து, இரண்டு பல்கலைக்கழகங்களும், தலா, பத்து பேரை தேர்ந்தெடுத்துள்ளன.

இன்னுமொரு சல்லடை சலிப்பில், பத்தை மூன்றாக்கி, பெயர் பட்டியல் கொடுக்கப்பட்டு விடும். தேர்வுக்குழுவால் ஒரு முறையும், பிறகு கவர்னரால் இன்னொரு முறையுமாக, இரண்டு நேர்முகத் தேர்வுகள் நடக்கும்.பிறகென்ன, வடித்தெடுத்த திறமை மிக்கவர்கள், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாக அமரப் போகின்றனர்.பதவியில் அவர்கள் அமர போவது இருக்கட்டும். அவர்கள் தலைமையேற்க போகும் பல்கலைக்கழகங்களின் அருமை, பெருமை என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமல்லவா!-சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லையில் உள்ள பல்கலைக்கழகங்களில் சில உள்கட்டமைப்புகள் உள்ளன.

 தமிழ்த்துறை, இயற்பியல் துறை போன்ற தனித்தனிப் பாடங்களுக்காக அமைந்திருக்கும் துறைகள் என்பது ஓர் அமைப்பு.இவை ஒவ்வொன்றிலும், அந்தப் பாடத்தில் அல்லது அதன் உட்பிரிவுகளில் சிறப்பறிவும், பயிற்சியும் பெற்றவர்கள் பேராசிரியர், இணை பேராசிரியர், துணை பேராசிரியர் பணிகளில் அமர்த்தப்படுவர்.தனியாக ஆய்வுகள் செய்வதும், ஆய்வு மாணவர்களூக்கு வழிகாட்டுவதும், பட்ட மேற்படிப்பு வகுப்புகளில் கற்பிப்பதும், தேர்வுகள் நடத்துவதும் இவர்களின் தலையாய பணிகளாகும்.ஓரளவுக்கு இந்தப் பணிகளை செய்ய, குறைந்தது ஏழு ஆசிரியர்களாவது, ஒரு துறையில் இருக்க வேண்டுமென, பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுகிறது.

துறைகளோடு, மையங்கள் மற்றும் பள்ளிகள் என, இரண்டு சிறப்பு அமைப்புகளும், பல்கலைக்
கழகங்களில் உண்டு. ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவில் உயராய்வுகளில் உலகப் புகழ்பெற்ற அளவுக்கு சிலர் விளங்கினால், அவர்கள் தலைமையில் சிறப்பு அமைப்புகள் உருவாக்கப்படும்.
ஒரு பாட ஆய்வுக்கோ அல்லது பட்ட மேற்படிப்பு பயிற்சிக்கோ, ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளின் உதவி தேவைப்படலாம். அப்படி, ஒன்றுக்கொன்று பயன்பெறும் வகையிலான துறைகள் சில இணைந்து, 'பள்ளி' என்ற அமைப்பு செயல்படும்.இங்கு பொதுமையான கட்டமைப்பு வசதிகளை எளிதில் பெற்று, ஆசிரியர்கள் கூட்டாய்வுகள் செய்தும், பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு களம் விரிந்த பயிற்சிகள் கொடுத்தும், பயன் விளைவிப்பர். பல்கலைக்கழக நிர்வாகத்தையும், இந்த அமைப்பு எளிமைப்படுத்தும்.ஆனால், நம் பல்கலைக்கழகங்களில் தற்போது இயங்கும் துறைகள், மையங்கள், பள்ளிகள், அவற்றில் பணியாற்றும் ஆசிரியர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர்.இந்தப் பல்கலைக்கழகங்களின் துறைகள், பள்ளிகள், மையங்களின் பணி- பயன்களை ஆராய்ந்து பார்த்தால், வேதனைகள் வெடிக்கின்றன. எந்த துறையிலும் துறை தாண்டிய பாடத்திட்டங்கள் இல்லை. பெயருக்குத்தான் விருப்பப்பாடத்திட்ட முறை உள்ளது.

பல துறைகளில் பட்ட மேற்படிப்பு வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கம் தான்; சிலவற்றில் மாணவர்கள் இல்லை.எந்தப் பள்ளியிலும் கூட்டு ஆய்வுகள், பயிற்றுவிப்புகள் இல்லை. பள்ளிகளும், மையங்களும் ஆய்வு, பயிற்சி மேம்பாட்டுக்கு எந்த
விதத்திலும் உதவி செய்யவில்லை.சில ஆசிரியர்கள் மட்டுமே உள்ள துறைகளும் உடைக்கப்பட்டு, ஓராசிரியர், இரண்டாசிரியர் துறைகள் -உருவாக்கப்பட்டுள்ளன. துறைகளை உடைப்பதில் இரண்டு நன்மைகள்!ஒரு துறைத்தலைவர், துணைவேந்தருக்கு உடன்படாதவர்
என்றால் அவர் துறையை உடைத்து, அதே துறையிலிருக்கும் இன்னொருவரை, புதிய துறைக்கு தலைவராக்கி விட்டால், அவர் துணைவேந்தரின் கட்டுக்குள் வந்து விடுவார்.
இப்படித்தான், இத்தனை ஆண்டுகளை கடந்தும், இந்த பல்கலைக்கழகங்கள் இன்னும் ஆசிரியர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லாமலும், ஓரிரு ஆசிரியர்களுடனும், இணை, துணைப் பேராசிரியர்களை தலைவர்களாக கொண்டும், தம்மை அடையாளம் காட்டி கொண்டிருக்கின்றன.இந்நிலையில், எங்கிருந்து, யாரிடமிருந்து, உயராய்வுக் கட்டுரைகளையும், கண்டுபிடிப்புக்களையும், உரிமங்களையும், தேசிய, பன்னாட்டு விருதுகளையும் பல்கலைக்கழகத்தால் எதிர்பார்க்க முடியும்...இங்கு பார்வைக்குக் கொண்டு வராத ஏனைய மாநிலப் பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கிக் கருத்து கூறலாம். இவை வெளியுலகுக்கு - கூட்டமைப்புள்ள பள்ளிகள், துறைகள், ஆய்வுகள், பாடங்கள், கற்பித்தல் - என்றெல்லாம் தம்மை வெளிச்சம் போட்டுக்காட்டி, உண்மையில் காட்சிப்பிழைகளாக இருக்கின்றன.உயர்கல்வி மாளிகையின் உச்சப்பகுதிகளில், இப்படி தோன்றிய விரிசல்களையும், ஒட்டடை படலங்களையும் அண்ணாந்து பார்க்காமல், நாம் போய்க் கொண்டிருக்கிறோம்.இந்த அவலங்களை வெளிக்காட்டும் போது, ஒன்றை நாம் மறந்து விடலாகாது. 'சென்னை, மதுரை, திருச்சிப் பல்கலைக்கழகங்களில் அண்மை காலம் வரை ஒரு சில ஆசிரியர்கள் தம் ஆய்வுகளால் உலக அளவில் தலை நிமிர்ந்து நின்றனர்' என்பது தான் அந்த உண்மை.அவர்களெல்லாம் இந்தியாவின் உயரிய விருதுகளை பெற்று, நமக்கு பெருமை சேர்த்தனர். அவர்களெல்லாம் இப்போது ஓய்வுபெற்று வெளியேறி விட்டனர். அவர்களை பாராட்டுவோம்.'அத்தகையவர்களை இனி மேல் நம் பல்கலைக்கழகங்களால் உருவாக்க முடியுமா...' என்ற கேள்விக்கு உரிய விடை நமக்குக் கிடைக்கும் என்ற எண்ணம், தொடு வானத்தைத் தொடும் நம்பிக்கை தான்!இறுதியாக, இப்போதெல்லாம் தேர்வு செய்யப்படும் துணைவேந்தர்களின் நெஞ்சை நெருடும் ஒரே ஓரு உண்மை, பதவியேற்கும் பல்கலைக்கழகத்தில் நீண்ட காலமாக இருக்கும் ஆசிரியர் வெற்றிடங்கள் தான்!அவற்றை விரைந்து நிரப்ப வேண்டுமென்ற தீவிர நல்லுணர்வை நாம் குறை சொல்லக் கூடாது. ஆனால், நிகழ்வுகள் சரியில்லையே!நாம் விவரித்த ஐந்து பல்கலைக்கழகங்களில் ஒன்றில் நான்காசிரியர்களுக்கு குறைவான துறைகளே இல்லை என்று மகிழ்ந்தோமே, உண்மையில் அதுவும் ஒரு வேதனை தரும் காட்சிப்பிழை தான்!அண்மைக்காலங்களில் அங்கு நடைபெற்ற ஆசிரியர் தேர்வுகளை நாம் சுட்டாமல் இருக்க முடியவில்லை. பல்கலைக்கழக வகுப்புகளில் காலடி வைத்து, பட்டங்கள் பெறாமல், இடம் கிடைத்த கல்லுாரிகளில் பட்டங்கள் பெற்று, பி.எச்டி., பட்டங்கள் பெற்றவர்கள், 40 பேருக்கு குறையாமல் இணைப் பேராசிரியர்களாகவும், துணைப்பேராசிரியர்களாகவும் நியமனம் பெற்றிருப்பதை செரிக்க முடியவில்லையே!இத்தகைய நிகழ்வுகள், வேறு வளாகங்களிலும் தொடரும் சூழ்நிலையென்றால், வரும் காலத்தில் நம் உயர்கல்வி மாளிகையின் கூரையே வீழ்ந்து விடுமே!தேர்வுக்குழுக்கள் துணைவேந்தர்களையும், ஆசிரியர்களையும்
தேடித்தேடி, 'பொறுக்கும்' முறைகள் இனியும் தொடர வேண்டுமா?இப்போதைக்கு 'வாருங்கள்
துணைவேந்தர்களே' என, வாழ்த்துவோம்.

ப.க.பொன்னுசாமி, முன்னாள் துணைவேந்தர், சென்னை பல்கலைக்கழகம்
இ-மெயில்: ponnu.pk@gmail.com
 பெரியார் பல்கலையில் ஆவணங்கள் மாயம் : பதிவாளரிடம் அறிக்கை கேட்பு
Added : டிச 25, 2017

சேலம்: பெரியார் பல்கலையில், ஆவணங்கள் மாயமான விவகாரத்தில், அறிக்கை அளிக்கும்படி, பதிவாளரிடம் கேட்டுக்கொண்டுள்ள போலீசார், அதில் சிக்கப்போகும் அதிகாரிகளின் உத்தேச பட்டியலை தயாரித்து, அவர்களை கண்காணிக்க துவங்கியுள்ளனர்.

சேலம், பெரியார் பல்கலையில், 2012 முதல், 2015 வரை பணியில் சேர்ந்த பேராசிரியர்கள், இணை, உதவி பேராசிரியர்களின் நியமன உத்தரவு உள்ளிட்ட ஆவணங்கள் மாயமாகின.
இதுகுறித்து, ஏற்கனவே பதவி வகித்த பதிவாளர்கள், அவர்களின் கீழ் பணிபுரிந்த அதிகாரி
களுக்கு விளக்கம் கேட்டு, பதிவாளர் மணிவண்ணன், 'மெமோ' அனுப்பியிருந்தார். அவர்கள் விளக்கம் அளிக்கவில்லை.இதனால், அவர் கடந்த, 16ல், போலீஸ் கமிஷனர் சங்கரிடம் புகார்
அளித்தார். இதையடுத்து, மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார், கடந்த, 18ல், ஆவணங்கள் மாயமான விவகாரத்தில், முன்னாள் பதிவாளர் அங்கமுத்து, 57, மற்றும் நிர்வாகத்தினர் மீது,
வழக்குப்பதிந்தனர்.போலீசார், விசாரணையை துவங்க இருந்த நிலையில், அங்கமுத்து தற்கொலை செய்தார். கடந்த, 20ல், போலீசார் விசாரணையை துவக்கினர்.

முதல் கட்டமாக, பதிவாளர் மணிவண்ண னிடம், 2012 முதல், 2015 வரை பதிவாளர்
பதவி வகித்தவர்கள், அவர்களின் கீழ் பணிபுரிந்த ஊழியர்கள், அதற்கு பின்னர் வந்த அதிகாரி
களின் தகவல்களை, அறிக்கையாக அளிக்கும்படி கேட்டுள்ளனர்.இதை பெற்ற பின்,
தங்கள் முழு விசாரணையை, போலீசார் துவக்க உள்ளனர். இந்நிலையில், இதுதொடர்பாக சந்தேகிக்கப்படும் பெண் அதிகாரி உள்பட, 20 பேரை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து, மாநகர மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:பெரியார் பல்கலையில், ஆவணங்கள் மாயமானதால், 20க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், இணை, உதவி பேராசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.நியமன உத்தரவு இருந்தால் மட்டுமே, சம்பள நிர்ணயம், உயர்வு உட்பட பிற சலுகைகளை, அவர்கள் பெற முடியும். இதனால், ஆவணங்கள் மாயமானதில், பெரிய சதி நடந்துள்ளதாக சந்தேகிக்கிறோம்.பதிவாளர் அளிக்கும் அறிக்கைப்படி, முழு விசாரணை நடத்தப்பட்டு, உண்மை வெளிவரும்.இதில், முதல் குற்றவாளியாக உள்ள அங்கமுத்து மறைந்து விட்டதால், வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்படலாம். ஆனால், ஒருவர் மட்டும், இத்தவறை செய்திருக்க வாய்ப்பில்லை.தவறு செய்ய துாண்டியவர்கள், உடந்தையாக செயல்பட்டவர்களின் விபரங்களை, பதிவாளர் அறிக்கை அளிக்கும் முன், சந்தேகத்தின் அடிப்படையில் சேகரித்து வருகிறோம்.அறிக்கையில், சந்தேகப்படும் நபர்கள் பெயர் இடம் பெற்றிருந்தால், முதலில், அவர்களிடம் இருந்து விசாரணை தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஏழுமலையான் தரிசனம் 15 மணி நேரம் காத்திருப்பு

Added : டிச 25, 2017
 
திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள், 12 மணிநேரம் காத்திருக்கின்றனர்.
கிறிஸ்துமஸ், வார இறுதி விடுமுறை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை இணைந்து வந்ததால், ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். டிச.,23 வரை, தர்ம தரிசன பக்தர்களுக்கு நேர ஒதுக்கீடு முறை அமலில் இருந்ததால், பக்தர்கள் எளிதாக ஏழுமலையானை தரிசித்தனர். மீண்டும் நேர ஒதுக்கீடு முறை, வரும் மார்ச் மாதம் முதல் நிரந்தரமாக அமல்படுத்தப்பட உள்ளது. எனவே, நேற்று முதல் பழைய நடைமுறை மீண்டும் அமலுக்கு வந்தது. அதனால், ஏழுமலையானை தரிசிக்க, 31 காத்திருப்பு அறைகளை கடந்தும், பக்தர்கள் காத்திருந்தனர். தர்ம தரிசனத்திற்கு, 15 மணி நேரமும், திவ்ய தரிசனத்திற்கு, எட்டு மணி நேரமும் ஆனது.
 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் “தோல்வி அடைந்தது தி.மு.க. அல்ல, தேர்தல் ஆணையம்தான்” மு.க.ஸ்டாலின் அறிக்கை
 
“சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தது தி.மு.க. அல்ல, தேர்தல் ஆணையம் தான்”, என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். 
 
சென்னை,

இதுகுறித்து தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

1967-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அண்ணாவின் தலைமையில் தி.மு.க மாபெரும் வெற்றி பெற்றிருந்தது. அதற்குமுன், தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்து முடிந்த உடன் தர்மபுரியில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றியைப் பறி கொடுக்க நேர்ந்தது. பாளையங்கோட்டை சிறையில் இருந்து வெளிவந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம், பத்திரிகையாளர்கள் ‘தர்மபுரி இடைத்தேர்தல் வெற்றி குறித்து என்ன கருதுகிறீர்கள்?’, என்று கேட்டனர். உடனே, ‘தர்மபுரியில் வாக்காளர்களுக்கு கொடுத்த தர்மம் வென்றது’, என குறிப்பிட்டார்.

அதேபோல இன்று ஆர்.கே.நகர் தொகுதியிலும் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட ‘தாராளமானதும் ஏராளமானதுமான தர்மம்’ வென்றுள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.

பாதாளம் வரை பாய்ந்த பணத்தையும் தாண்டி, தி.மு.க. வேட்பாளர் மருது கணேசுக்கு 24 ஆயிரத்து 651 வாக்காளர்கள், தங்களின் விலைமதிக்க முடியாத வாக்குகளை அளித்திருப்பது நேர்மையான, உயிரோட்டமுள்ள தேர்தல் ஜனநாயகத்தின் மீது, இன்றைய சூழலிலும் அவர்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது.

சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தலுக்குத் துணைநின்று, ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை பண மழையிலிருந்து ஜனநாயகத்தை, எப்படிப்பட்ட சவாலாக இருந்தாலும் அதனை சந்தித்துப் போராடிப் பாதுகாத்திட வேண்டும் என்ற சீரிய நோக்கத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தி.மு.க. சந்தித்தது.

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பில் தொடங்கி வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்படுவது வரை பல முனைகளிலும் தேர்தல் ஆணையத்தின் சட்டப்படியான உதவியையும், முறையான கண்காணிப்பையும் நாடினோம். தேர்தல் ஆணையம் அலட்சியம் காட்டியபோது, ஐகோர்ட்டு சென்று போராடினோம்.

ரூபாய் நோட்டுகள் குத்தீட்டிபோல் தேர்தல் ஜனநாயகத்தின் மார்பில் ஊடுருவி உயிருக்கே உலை வைத்துக்கொண்டிருந்த நேரத்தில், தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையம் பாராமுகமாக இருந்ததே தவிர, பண வினியோகத்தைத் தடுக்கவில்லை. சுதந்திரமான தேர்தலை நடத்திட தேர்தல் ஆணையம், காவல்துறை மற்றும் அதிகார எந்திரமும் துரும்பைக்கூட எடுத்துப்போட முயற்சிக்கவில்லை. இதற்குமுன் நடைபெற்ற எந்த இடைத்தேர்தலிலும் இப்படியொரு கரும்புள்ளியை தேர்தல் ஆணையம் தனக்குத்தானே திலகம் என நினைத்து இட்டுக்கொண்டது இல்லை நடுநிலையாளர்கள் கருதும் அளவுக்கு தேர்தல் ஆணையம் பரிதாபமாக நின்றதைக் காணமுடிந்தது.

தேர்தல் பார்வையாளர்கள் வந்தார்கள், சென்றார்கள்; அவ்வளவுதான். சுதந்தி ரமாகத் தேர்தலை நடத்துவதற்கு இரும்புக்கரம் கொண்டு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தி.மு.க. தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு கண்டிப்பான உத்தரவிட்டும்கூட, ஹவாலா பாணியில் வாக்குப்பதிவு தினத்தன்று கூட வாக்காளர்களுக்குப் பணம் வாரி வாரி இறைக்கப்பட்டதை தேர்தல் ஆணையமும், போலீசாரும் கை கட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்த்தது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்குத் தோல்வி என்பதைவிட, இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்துள்ள இமாலய தோல்வி என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். இப்படிப்பட்ட நிலைமை, மக்கள் ஜனநாயகத்தை காப்பாற்ற உதவுமா? என்பதை அனைவரும் எண்ணிப்பார்க்கவேண்டும் என்பதே எனது விருப்பம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...