Tuesday, August 14, 2018

FASTER TRAVEL

S Rly speeds up 18 trains, suburban train timings tuned


TIMES NEWS NETWORK

Chennai:14.08.2018

Southern Railway has speeded up 18 trains with effect from August 15. Changes have been made with the running time schedules of Nagercoil-Mumbai and Tambaram-Tirunelveli Antyodaya Express decreasing by 60 minutes.

The Coimbatore-Chennai Central Shatabdi Express has been speeded up by 15 minutes while the train that will travel in the return direction has been speeded up by five minutes.

The Chennai-Madurai Pandian express has become faster by 10 minutes. In the return direction, it has been speeded up by five
minutes.

These were the highlights of the new railway time-table which was released by Southern Railway on Monday evening.

The Tambaram-Sengottai Antyodaya Express has been announced which will leave at 7am and reach Sengottai at 10:30pm and in the return direction it would leave at 6am and reach Tambaram at 10:15pm. The date of introduction of the train will be notified in a later period.

Guwahati – Chennai Egmore - Guwahati Weekly Express (15630/15629) and Dibrugarh-Chennai Egmore-Dibrugarh Weekly express (15930/159290 have been extended to Tambaram. The motive behind such a move is to decongest Egmore station.

In the suburban train time-table, 13 trains will start earlier than its usual.

For instance, the Tiruttani-Moore Market Complex (MMC) train at 1:15pm will leave 35 minutes earlier. The Arakkonam-MMC service at 9:25pm will leave 15 minutes earlier.

The Chennai Beach-Tiruvallur service at 5:35am and Chennai Beach-Velachery service at 4:40am will leave 10 minutes earlier.

Seven suburban trains will have a late start; for instance the Chengalpet-Beach service at 11:43am will leave late by 15 minutes, while the Kancheepuram-Beach service at 10:56am will leave 14 minutes later.

Chennai division of Southern Railway has also stopped the Beach to St Thomas Mount turn-back service and has extended the trains till Tambaram.

It would leave Beach at 8:32am and reach Tambaram at 9:27am, leave at 9:32am and reach Beach at 10:27am.

All the changes that have been made in the scheduling of the trains will be effective from August 15.
Extra students in 2nd yr points to cash-for-seats scam at AU
Docus Show ‘Suspected Students’ Pursuing Most Sought-After Courses


Ram.Sundaram@timesgroup.com

Chennai  14.08.2018

: After the cash-for marks expose, it could well be a cash-for-seats scam at Anna University.

More than 60 students, whose names were not present in the final admission list last year, are attending second year classes in College of Engineering, Guindy (CEG) which is ranked first in Tamil Nadu among state-run technical institutions. Insiders say this points to a probable scam of inducting ineligible students through the backdoor.

These students couldn’t have made a legal lateral entry as the university rules make no provision to admit diploma students directly into the second year. Documents show these ‘suspect students’ are pursuing some of the most sought-after courses like electronic and communication engineering (ECE) and electrical and electronics engineering (EEE) for which only students who score more than 190 out of 200 in science and maths in their board exams qualify.

In 2017, medical counselling was conducted only after engineering counselling ended because of the uncertainty over NEET. Many students who got medical seats withdrew from the engineering course, leaving seats vacant. Courts had directed Anna University not to fill these seats, and set August 30 as the deadline to complete the admission process.



‘Seats in colleges were being sold, some top authorities involved’

Chennai: “We got credible information from within the university that seats in top colleges were being sold for cash, and some top authorities were involved in this,” said a source. The source filed an RTI petition on October seeking the number of students who got admitted in CEG before and after medical counselling.

The reply from CEG dean T V Geetha said 167 students withdrew from the college after medical counselling. “There were discrepancies when we compared the final list of students admitted in four streams of CEG – ECE, EEE, manufacturing engineering and mining engineering – with the present attendance register,” the source told TOI.

Sixty-four names, which were not in the final admission list given by the dean through RTI in October 2017, are now present in the second-year attendance register. Nobody seems to know under which quota these students were admitted as lateral entry seats are not available in CEG.

The register number of these students start with 2017, indicating they joined the college last year. Register numbers are allotted to students in the alphabetical order. The questionable admissions are clearly out of sync with the original admission list. This is apparent as alphabetical order is not followed after the last name of the original admission list.

For instance, of the total 28 mining engineering students, names of only 23 students feature in the original admission list. The last name in this list begins with the alphabet ‘T’. A student’s name begins with ‘A’, but appears in the register after ‘T’.

When contacted, Anna University vice-chancellor MK Surappa said he would look into the issue after confirming the veracity of the documents. University admissions director G Nagarajan said nearly 20 % of the seats are filled through quotas for other states, NRIs, foreign countries and consortium of industries. “Only the dean can answer other queries on admission,” he said. The dean was unavailable for a comment.
பாம்பன் பாலத்தில் ரயிலுக்கு தடை

Added : ஆக 14, 2018 02:09

ராமேஸ்வரம்: கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டதால், பாம்பன் பாலத்தில் ரயில் செல்ல தடை விதிக்கப்பட்டது.தென்மேற்கு பருவக் காற்று தீவிரமடைந்து நேற்று ராமேஸ்வரத்தில், 50 முதல், 60 கி.மீ., வேகத்தில் வீசியது. இதனால் பாம்பன், தனுஷ்கோடி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு, 10 அடி உயரத்திற்கு அலைகள் எழுந்தன. நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.காற்று, 55 கி.மீ., வேகத்தில் வீசினால், 'சிக்னல்' தடைபடும். இதனால், ரயில்கள் செல்ல தடை விதித்தனர்.
சத்யம்' திரையரங்க குழுமம் வாங்குகிறது பி.வி.ஆர்.,

Added : ஆக 13, 2018 23:55

சென்னை: சென்னை, 'சத்யம்' திரையரங்க குழுமத்தை, பி.வி.ஆர்., சினிமாஸ் நிறுவனம், 850 கோடி ரூபாய்க்கு, ரொக்கம் மற்றும் பங்கு ஒதுக்கீடு வாயிலாக கையகப்படுத்த உள்ளது.வெங்கடகிரி ராஜா என்பவரால், 1974 ஏப்ரலில், சத்யம் திரையரங்கம் திறக்கப்பட்டது. முதல் படமாக, ராஜேஷ் கன்னா, அமிதாப் பச்சன் நடித்த, 'நமக்ஹராம்' திரையிடப்பட்டது. அடுத்து, 'சாந்தம், ஸ்ரீ, சுபம்' என்ற சிறிய திரைஅரங்குகளை திறந்து, சென்னையின் முதல், 'மல்டிபிளக்ஸ் தியேட்டர்' என்ற பெருமையை பெற்றது.இந்நிலையில், 1980ல், சத்யம் திரையரங்கம், ரெட்டி குடும்பத்திற்கு கைமாறியது. தற்போது, கிரண் ரெட்டி, ஸ்வரூப் ரெட்டி ஆகியோர் தலைமையிலான, எஸ்.பி.ஐ., சினிமாஸ் குழுமத்தின் கீழ், 'எஸ்2, எஸ்கேப், பலேசா' உள்ளிட்ட பெயர்களில், 68 திரையரங்குகளுடன், சத்யம் சினிமாஸ் செயல்பட்டு வருகிறது.குர்கானைச் சேர்ந்த, அஜய் பிஜிலி தலைமையிலான, பி.வி.ஆர்., சினிமாஸ், 51 நகரங்களில், 628 திரையரங்குகளை நடத்தி வருகிறது. சத்யம் சினிமாஸ் குழுமத்தை, 850 கோடி ரூபாய்க்கு வாங்குவதன் வாயிலாக, பி.வி.ஆர்., தென்னிந்தியாவில் மேலும் வலுவாக காலுான்றும். மேலும், 2020க்குள், ஆயிரம் திரையரங்குகளை இயக்கவும், பி.வி.ஆர்., திட்டமிட்டுள்ளதுஇந்நிலையில், 'சத்யம் சினிமாஸ் கைமாறினாலும், அதன் தனிச்சுவை உடைய, 'பாப்கார்ன்' விற்பனை தொடர வேண்டும்' என, சமூக வலைதளங்களில் ஏராளமானோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்டாலினுக்கு பயம்: அழகிரி ஆவேசம்   dinamalar 14.08.2018


சென்னை,:''தி.மு.க.,வில், என்னை மீண்டும் சேர்த்தால், நான் வலிமையான தலைவராகி விடுவேன் என்ற பயம், ஸ்டாலினுக்கு உள்ளது,'' என, முன்னாள் மத்திய அமைச்சர், அழகிரி கூறினார். சென்னையில்,நேற்று ஆங்கில, 'டிவி' சேனலுக்கு, அழகிரி அளித்த பேட்டி:



உங்கள் ஆதங்கம் தான் என்ன?

எனக்கு பல ஆதங்கங்கள் இருக்கின்றன; அந்த ஆதங்கங்களை எல்லாம், ஆறு மாதத்தில், தொண்டர்கள் நிறைவேற்றுவர்.

மீண்டும், தி.மு.க.,வில் இணைந்து செயல்பட விரும்புகிறீர்களா?

என்னை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில், அவர்கள் இல்லை.

கட்சியில் சேருவது தொடர் பாக, நீங்கள் பேச்சு நடத்தியுள்ளீர்களா?

நான் எந்த பேச்சும் நடத்தவில்லை. 'செய்தி தொடர்பாளர்கள் யாரும், 'டிவி'க்களில், என்னை பற்றி பேட்டி அளிக்கக் கூடாது' என, ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். அதற்கு என்ன அர்த்தம்; பின், எப்படி என்னைக் கட்சியில் சேர்ப்பர்?

கருணாநிதி மரணம் அடைந்துள்ள நிலையில், உங்களை புறக்கணிப்பது, சரியான முடிவா?

இதுபற்றி, அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நான், ஏற்கனவே கூறியுள்ளேன். இன்னும், ஆறு மாதத்தில் தேர்தல் வருகிறது. இப்போதே பலரும், ரஜினியிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். லோக்சபா தேர்தலில், தி.மு.க., தோல்வி அடைந்தால், கட்சி சின்னாபின்னமாகி விடும்.

அவர்கள் பேச்சு நடத்த வந்தால், நீங்கள் பேசத் தயாரா?

அதெல்லாம், அந்த நேரத்தில் தான் முடிவெடுக்க முடியும். கண்டிப்பாக, காலம் பதில் சொல்லும். அவர்களை எல்லாம், கருணாநிதியே தண்டிப்பார். கருணாநிதியின் ஆத்மா, அவர்களைச் சும்மா விடாது.

கட்சியில், உங்களை சேர்க்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?

எனக்கென்ன தெரியும்? எனக்குப் புகழ் இருக்கிறது; கட்சித் தொண்டர்கள், என்னை விரும்புகின் றனர். அதனால், அவர்களுக்குப் பயம் இருக்கிறது. நான் வந்தால், வலிமையான தலைவராகி விடுவேன் என்ற, எண்ணமாக இருக்கலாம்.

குடும்ப உறுப்பினர்களிடம் பேசி சரி செய்யலாமே?

குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும், இதில் அக்கறை இல்லை. நான் கட்சிக்குள் வருவது பற்றி, யாரும் பேசியதில்லை.

தற்போதைய சூழ்நிலையில், தி.மு.க., சரியாக செயல்படுகிறது என, நினைக்கிறீர்கள்.

சரியாகச் செயல்பட்டால், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், 'டிபாசிட்' பறி


போகுமா; தொடர்ந்து, தேர்தல் தோல்விகளை சந்திக்கின்றனர். 'கட்சிக்காரன் பணம் வாங்கி விட்டான்' என, துரைமுருகன் பேசுகிறார். கட்சிக்காரன், தலைவருக்காக எவ்வளவு உழைத்திருப்பான்! அண்ணாதுரை காலத்திலிருந்து உழைத்து வருகிறான். இந்த பேச்சை, அவன் எப்படி எடுத்துக் கொள்வான். இதெல்லாம் தான் என் ஆதங்கம்.பணம் கொடுத்தால், பதவி கொடுக்கின்றனர். முன்பு, ஒரு செயலர் இருந் தால், ஒரு துணைச் செயலர் இருப்பர். தற்போது, 10, 15 பேர் இருக்கின்றனர்.இவ்வாறு அழகிரி கூறினார்.

இன்று தி.மு.க., செயற்குழு

தி.மு.க., செயற்குழு கூட்டம், சென்னையில் இன்று நடக்கிறது.சென்னை, அறிவாலயத்தில், இன்று காலை, 10:00 மணிக்கு நடக்கவுள்ள, இந்தக் கூட்டத்திற்கு செயல் தலைவர், ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாநில நிர்வாகிகள் என, 750 பேர் பங்கேற்க உள்ளனர்.முதலில், கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில், நிர்வாகிகள் பேசுவர். அடுத்த தலைவராக ஸ்டாலினை, பொதுக்குழுவில் தேர்வு செய்வது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. முக்கியமாக, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை, கட்சியில் சேர்ப்பதா, வேண்டாமா என்பது குறித்தும், அவரால் எழுந்துள்ள சர்ச்சை பற்றியும் விவாதிக்கப்படும் என, தெரிகிறது.- நமது நிருபர் -

அழகிரி,போர்க்கொடி,D.M.K,DMK,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம்


தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, திடீர் போர்க்கொடி துாக்கி உள்ளார். தி.மு.க.,வில், தனக்கே செல்வாக்கு என, செயல் தலைவர் ஸ்டாலினுக்கு, சவால் விட்டுள்ளார். விரைவில், ஆதரவாளர்களுடன் ஆலோசித்து, அதிரடி முடிவெடுக்கப் போவதாகவும், மிரட்டல் விடுத்துள்ளார். கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, கட்சியின் செயற்குழு, இன்று கூடும் நிலையில், தடலாடி நடவடிக்களை, அழகிரி துவக்கியுள்ளார்.

உடல் நலக்குறைவு காரணமாக, கருணாநிதி, 7ம் தேதி, மரணம் அடைந்தார். அவரது உடல், சென்னை, மெரினாவில் உள்ள அண்ணாதுரை நினைவிட வளாகத்தில், அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கருணாநிதியின் சமாதிக்கு, நேற்று அழகிரி, தன் மனைவி காந்தி, மகள் கயல்விழி, மகன் தயாநிதி மற்றும் சென்னை மாவட்ட ஆதரவாளர்களுடன் சென்றார். சமாதியில் மலர் துாவி, தந்தையை வணங்கினார்.

பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: என் தந்தையிடம், ஆதங்கத்தை கொட்டினேன். என்ன ஆதங்கம் என்பது, இப்போது உங்களுக்குத் தெரியாது. கருணாநிதியின் உண்மையான, விசுவாசமுள்ள உடன்பிறப்புகள், என் பக்கம் தான் உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விசுவாசிகளும், என் பக்கம் இருக்கின்றனர். அவர்கள், என்னை ஆதரிக்கின்றனர். எனவே, இதற்கு காலம், பின்னால் பதில் சொல்லும். இவ்வாறு அழகிரி கூறினார்.

பின், நிருபர்களின் கேள்விகளுக்கு, அழகிரி அளித்த பதில்:

உங்கள் ஆதங்கம் கட்சி தொடர்பானதா; குடும்பம் தொடர்பானதா?
கட்சி தொடர்பானது தான்.
தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பீர்களா?
நான், இப்போது தி.மு.க.,வில் இல்லை. செயற்குழு பற்றி, என்னிடம் கேட்காதீர்கள்; எனக்குத் தெரியாது.
நீங்கள் மீண்டும், தி.மு.க.,வில் இணைய வாய்ப்புள்ளதா?
அதுபற்றி, எனக்குத் தெரியாது. என் ஆதங்கத்தை, தலைவரிடம் கூறியுள்ளேன். இவ்வாறு அழகிரி கூறினார்.

ஒதுங்கிய ஸ்டாலின் :

கருணாநிதி நினைவிடத்தில்



அஞ்சலி செலுத்தியதும், கோபாலபுரம் வீட்டிற்கு அழகிரி சென்றார். அப்போது அங்கு, ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து விட்டு, வெளியே புறப்பட்டார். அந்த நேரத்தில், அழகிரி வீட்டுக்குள் நுழைவதை பார்த்த ஸ்டாலின், அவருக்கு வழி விட்டு ஒதுங்கினார். இருவரும் சந்திக்கும் வாய்ப்பு இருந்தும், ஸ்டாலின் ஒதுங்கி கொண்டார். அழகிரி உள்ளே சென்றதும், அங்கிருந்து, ஸ்டாலின் புறப்பட்டு சென்றார். அழகிரி, விறுவிறு என, உள்ளே சென்று, தன் தாயார் தயாளுவை சந்தித்து பேசினார்.

ஆலோசிப்பேன் :

இதன்பின், நமது நாளிதழுக்கு, தொலைபேசியில், அழகிரி அளித்த பேட்டி:

கருணாநிதியின் சமாதியில், நீங்கள், கட்சி தொடர்பான ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள்; அடுத்த கட்டமாக, உங்கள் நடவடிக்கை என்ன?
இப்போது, எந்த முடிவும் எடுக்கவில்லை. தமிழகம் முழுவதும் உள்ள, என் ஆதரவாளர்களையும், கருணாநிதியின் விசுவாசிகளையும் அழைத்து பேசி, முடிவு எடுப்பேன்.

ஆதரவாளர்களை, சென்னையில் சந்திப்பீர்களா அல்லது மதுரையில் சந்திப்பீர்களா?

மதுரைக்கு செல்லவில்லை. கருணாநிதி மறைவு தொடர்பான நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. அதில், நான் பங்கேற்க இருப்பதால், சென்னையில் தான் இருப்பேன். இவ்வாறு அழகிரி கூறினார்.
அழகிரியின் போர்க்கொடி குறித்து,


ஸ்டாலின் ஆதரவாளரான, சென்னை மேற்கு மாவட்ட செயலர், ஜெ.அன்பழகன் கூறியதாவது: கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் அழகிரி. அது, கருணாநிதி எடுத்த முடிவு. கட்சி கட்டுக்கோப்பாக உள்ளது. அவர் பின்னால், யாரும் செல்ல மாட்டார்கள். அழகிரியின் கருத்துக்கு, பதில் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அழகிரியுடன் யாரும் தொடர்பில் இல்லை. தி.மு.க., செயற்குழு கூட்டத்தில், ஸ்டாலின் விரிவான பதிலை தருவார். இவ்வாறு அவர் கூறினார்.

குடும்ப பஞ்சாயத்தில் நடந்தது என்ன?

இதுபற்றி, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: இரு தினங்களுக்கு முன், சென்னை, கோபாலபுரம் வீட்டில், அழகிரியை கட்சியில் சேர்ப்பது தொடர்பான பஞ்சாயத்து நடந்தது. அதில், கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அழகிரி, தமிழரசு, செல்வி, செல்வம், அமிர்தம் உள்ளிட்டோரும், கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலரும் பங்கேற்றனர்.

அப்போது, மூத்த நிர்வாகி ஒருவர், 'கருணாநிதியின் பிள்ளைகளான, அழகிரி, ஸ்டாலின், கனிமொழியை, தொண்டர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால், ஸ்டாலின் மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் போன்றவர்களின் தலையீட்டை, கட்சியினர் ரசிக்கவில்லை. எனவே, அவர்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்' என்றார்.

'பொருளாளர் பதவியை, துரைமுருகனுக்கும், துணை பொதுச்செயலர் பதவியை, கனிமொழிக்கும் வழங்கலாம். ஆனால், அழகிரிக்கு, எக்காரணம் கொண்டும், கட்சியில் பதவி கிடையாது; அவரை

சேர்க்கவும் வாய்ப்பு இல்லை' என, ஸ்டாலின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறினார்.

உடனே, அழகிரி ஆவேசமாக பேசியதாவது: தி.மு.க., தனிப்பட்ட ஒருவருக்கு சொந்தமல்ல. உதயநிதி பணம் விவகாரம் எல்லாம், என்னிடம் இருக்கிறது. கட்சி என்பது, லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு சொந்தமானது. தவறு செய்கிற மாவட்ட செயலர்கள் மீது, நடவடிக்கை எடுக்கவில்லை. பணம் வாங்கி விட்டு, கட்சி பதவிகளை, மாவட்ட செயலர்கள் விற்பனை செய்துள்ளனர்.

கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த, மாவட்ட செயலர்களின் பொருளாதார வசதியையும், தற்போதைய மா.செ.,க்களின் பண வசதியையும் பார்த்தால் தெரியும். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டு, அப்பாவி நகர, ஒன்றிய செயலர்கள் மீது, நடவடிக்கை எடுப்பது நியாயமா?இவ்வாறு அவர் பேசியதாக, கட்சி வட்டாரங்கள் கூறின.

கலைஞர் தி.மு.க., உதயமாகுமா?

அழகிரி ஆதரவாளர்கள் கூறியதாவது: கருணாநிதியை போல, அழகிரியும் ஒரு போராளி தான். அழகிரியை, மீண்டும் கட்சியில் சேர்ப்பது பற்றி, ஸ்டாலின் எந்த முடிவும் எடுக்கவில்லை. கருணாநிதியின் விசுவாசிகளை ஒருங்கிணைப்போம். ஸ்டாலின் தலைமை மீது நம்பிக்கை இல்லாத, அதிருப்தியாளர்களை் அரவணைப்போம். லோக்சபா தேர்தலுக்கு முன், அழகிரியின் தலைமையில், 'கலைஞர் தி.மு.க.,' உதயமாகலாம். ரஜினி கட்சியுடன் கூட்டணி வைத்து, நாங்கள் வெற்றி பெற்றால், கட்சி தானாக, அழகிரியின் கையில் வந்து விடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

'அழகிரி வேண்டாம்!'

தி.மு.க., செயற்குழுவில் பேச வேண்டிய விஷயங்கள் குறித்தும், கருணாநிதிக்காக அடுத்தடுத்து நடத்த உள்ள, இரங்கல் கூட்டங்கள் குறித்தும் ஆலோசிப்பதற்கு, தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகனை, செயல் தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அழகிரியை, மீண்டும் கட்சியில் சேர்க்கும் விஷயம் குறித்து விவாதித்துள்ளார். அதற்கு அன்பழகன், 'எந்த நெருக்கடி, யாரிடம் இருந்து வந்தாலும் சரி; குடும்பத்துக்குள் நெருக்கடி வந்தாலும் சரி; எக்காரணம் கொண்டும், அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டாம்' என, கூறியதாக, அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது நிருபர் -
பக்தர்கள் வெள்ளத்தில் ஆண்டாள் தேரோட்டம்

Added : ஆக 14, 2018 06:05

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது.ஆக.5ல் ஆண்டாள் ஆடிப்பூர உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி இரவு 2:00 மணியளவில் ஏகாந்த திருமஞ்சனம் முடிந்து, 3:30 மணிக்கு திருத்தேருக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர். அங்கு பாலாஜிபட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார்.காலை 7:20 மணிக்கு தேர் வடம்பிடிக்கப்பட்டது. கோவிந்தா, கோபாலா கோஷம் முழங்க பக்தர்கள் தேரை இழுத்தனர். நான்கு ரதவீதிகளையும் சுற்றி, காலை 9:46 மணியளவில் தேர் நிலை வந்தடைந்தது.விழாவில் எம்.எல்.ஏ. சந்திரபிரபா, டி.ஐ.ஜி. பிரதீப்குமார், தக்கார் ரவிச்சந்திரன், அறநிலையத்துறை அதிகாரிகள் ஜெகநாதன், ஹரிஹரன், நாகராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். எஸ்.பி., ராஜராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.விழாத்துளிகள்* ஆண்டாள் தேரோட்ட வரலாற்றில் முதல்முறையாக புறப்பட்ட 2 மணி நேரத்தில் தேர்நிலை வந்தடைந்தது.* கருணாநிதியின் மறைவிற்கு 7 நாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டிருந்ததால், அரசு பிரமுகர்கள் துவக்கி வைக்காத தேரோட்டமாக நேற்று அமைந்தது.* காலை 7:20 க்கு தேரோட்டம் அறிவிக்கபட்ட நிலையில் அதிகாலை முதலே பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து தேர் இழுத்தனர்.
பல்கலை அதிகாரிகளிடம் விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு அனுமதி

Added : ஆக 14, 2018 03:27

சென்னை: அண்ணா பல்கலை விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரத்தில், அதிகாரிகளிடம் நேரடி விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.அண்ணா பல்கலையில், விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு நடந்தது தொடர்பாக, முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, விடை திருத்த மைய பொறுப்பாளர்கள் சிவகுமார், விஜயகுமார் ஆகியோர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்கள் மூவரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில், பேராசிரி யர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்த, பல்கலை மற்றும் உயர்கல்வி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.இதன்படி, பேராசிரியர்களுக்கு, 'சம்மன்' அனுப்பி, விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுஉள்ளனர். பேராசிரியர்கள் தரப்பில் முன் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளதால், முதலில் விசாரணை நடத்தவும், விசாரணை முடியும் போது, நீதிமன்ற வழக்கின் நிலையை பொறுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும், போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
தாம்பரம் - செங்கோட்டை இடையே தினமும் அந்தியோதயா ரயில் அறிமுகம் : புதிய ரயில் கால அட்டவணையில் அறிவிப்பு

Added : ஆக 14, 2018 03:23

சென்னை: தாம்பரம் - செங்கோட்டை இடையே, தினசரி அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலை, தெற்கு ரயில்வே அறிமுகம் செய்கிறது. புதிய ரயில் கால அட்டவணையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வே, 2018 - 19க்கான புதிய ரயில்வே கால அட்டவணையை, இன்று இணையதளத்தில் வெளியிடுகிறது.

 இதன் முக்கிய அம்சங்கள் குறித்த விபரங்களை, செய்திக்குறிப்பாக நேற்றிரவு வெளியிட்டது. அதன் விபரம்:சென்னை, சென்ட்ரலில் இருந்து புறப்படும், 14 ரயில்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து சென்ட்ரல் வரும், 23 ரயில்களின் நேரம், ஐந்து முதல், 15 நிமிடங்கள் வரை மாற்றப்பட்டுள்ளது.எழும்பூரில் இருந்து புறப்படும், 14 ரயில்களின் நேரம், ஐந்து முதல், 30 நிமிடங்கள் வரையும், வெளியூர்களில் இருந்து எழும்பூர் வரும், 18 ரயில்களின் நேரம், ஐந்து முதல், 25 நிமிடங்கள் வரையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

.பகல் நேர புதிய ரயில்  தாம்பரம் - செங்கோட்டை இடையே, தினசரி அந்தியோதயா ரயில், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி வழியாக பகல் நேரத்தில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில், தாம்பரத்தில் இருந்து, காலை, 7:00க்கு புறப்பட்டு, இரவு, 10:30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும் செங்கோட்டையில் இருந்து, காலை, 6:00க்கு புறப்பட்டு, இரவு, 10:15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். ரயில் போக்குவரத்து துவக்கம் மற்றும் வழியில் உள்ள நிறுத்தங்கள் குறித்து, பின்னர் அறிவிக்கப்படும்எக்ஸ்பிரஸ்கள் நீட்டிப்பு இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள், இரண்டு பயணியர் ரயில்கள், முக்கிய நகரங்கள் இடையே, நாளை முதல் நீட்டிக்கப்பட்டுள்ளன. கவுஹாத்தி - சென்னை எழும்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ், திப்ரூகர் - சென்னை எழும்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள், தாம்பரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன கடலுார் - விருத்தாசலம் பயணியர் ரயில், திருப்பாதிரிபுலியூர் வரையும், நாகூர் - திருச்சி பயணியர் ரயில், காரைக்கால் வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளனவேகம்

அதிகரிப்பு தாம்பரம் - நெல்லை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் உட்பட, 18 ரயில்களின் வேகம், ஐந்து நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் முன்னதாக சென்றடையும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது மும்பை சி.எஸ்.டி., - நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ், 45 நிமிடங்களும்; நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.டி., இடையே, வாரத்திற்கு நான்கு நாட்கள் இயக்கப்படும், சி.எஸ்.டி., எக்ஸ்பிரஸ், 30 நிமிடங்களும் முன்னதாக சென்றடையும் வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப்படும், நிஜாமுதீன் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், 25 நிமிடங்கள் முன்னதாக செல்லும் வகையில் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் - காச்சிக்குடா எக்ஸ்பிரஸ், கோவை - சென்னை சென்ட்ரல்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள், 15 நிமிடங்கள் முன்னதாக சென்றடையும்

கன்னியாகுமரி - ஹவுரா வாராந்திர எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் - ஆலப்புழை எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ், மும்பை சி.எஸ்.டி. - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், கொல்லம் - விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் வேகமும், பயண நேரம், 10 நிமிடம் குறையும் வகையில் அதிகரிக்கப்பட்டு உள்ளது மதுரை - சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் சிலம்பு, திருச்செந்துார், நெல்லை மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து, கோவைக்கு இயக்கப்படும் சதாப்தி ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட்டு ள்ளது.

சித்தா, ஆயுர்வேதம் படிக்க இன்று விண்ணப்பம்

Added : ஆக 13, 2018 23:31

சென்னை: சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, இன்று முதல் விண்ணப்பம் வினியோகம் துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள, ஆறு அரசு கல்லுாரிகளில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கு, 396 இடங்கள் உள்ளன. தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 916 இடங்கள் உள்ளன.இந்த படிப்புகளுக்கான கவுன்சிலிங், 'நீட்' தேர்வு அடிப்படையில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என, தமிழக அரசு தெளிவுபடுத்தி உள்ளது.இதற்கான விண்ணப்ப வினியோகம், சென்னை - அரும்பாக்கம், நெல்லை - பாளையங்கோட்டை, மதுரை - திருமங்கலம், நாகர்கோவில் - கோட்டார் அரசு மருத்துவ கல்லுாரிகளில், இன்று துவங்குகிறது. செப்., 5, மாலை, 3:00 மணி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செப்., 5 மாலை, 5:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
மருத்துவ கவுன்சிலிங் இடங்கள், 'ஹவுஸ்புல்'

Added : ஆக 13, 2018 23:30

சென்னை: இரண்டாம் கட்ட மருத்துவ கவுன்சிலிங்கில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும் நிரம்பின.அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான, 3,501 இடங்களுக்கும், பி.டி.எஸ்., படிப்பிற்கான, 1,198 இடங்களுக்குமான முதற்கட்ட கவுன்சிலிங், ஜூலை, 1 முதல், 7ம் தேதி வரை நடந்தது. இதில், அனைத்து இடங்களும் நிரம்பின.இந்நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாதவை மற்றும் கவுன்சிலிங்கில் இடங்கள் ஒதுக்கீடு பெற்று, கல்லுாரிகளில் சேராதோர் என, 268 இடங்கள் காலியாகின.இதற்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், ஆக., 11ல் துவங்கியது. இரண்டு நாட்களில், 192 இடங்கள் நிரம்பி, 76 இடங்கள் மீதமிருந்தன. மூன்றாம் நாளான நேற்று, 76 இடங்களும் நிரம்பின.இது குறித்து, மருத்துவ தேர்வுக்குழு செயலர், செல்வராஜன் கூறியதாவது:இரண்டாம் கட்ட மருத்துவ கவுன்சிலிங்கில், இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள், 17ம் தேதிக்குள், கல்லுாரிகளில் சேர வேண்டும். தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, நிர்வாக ஒதுக்கீட்டிற்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், விரைவில் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
நிறை புத்தரிசி பூஜை: சபரிமலை நடை இன்று திறப்பு பக்தர்கள் வரவேண்டாம் என வேண்டுகோள்

Added : ஆக 14, 2018 06:06

சபரிமலை: நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறக்கிறது. பம்பை ஆறு கரைபுரண்டு ஓடுவதால் பக்தர்கள் வரவேண்டாம் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது.சபரிமலை நடை இன்று மாலை 5:00 மணிக்கு திறக்கிறது. நாளை காலை 6:00 முதல் 6:30 மணிக்குள் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுகிறது.மழை காரணமாக பம்பை கரைபுரண்டுஓடுகிறது. பக்தர்கள் பம்பையில் கடக்கும் இரண்டு பாலங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. பம்பையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் தேவஸ்தான மண்டபங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.எனவே பக்தர்கள் தரிசனத்துக்கு வரவேண்டாம் என்றும், மீறி வருபவர்கள் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.பக்தர்கள் அனுமதிக்கப்படாவிட்டாலும், சன்னிதானத்தில் நிறைபுத்தரிசி பூஜை வழக்கம் போல் நடைபெறும்.
முன்னாள் சபாநாயகர் சோம்நாத் காலமானார்

Added : ஆக 13, 2018 23:41



கோல்கட்டா: லோக்சபா முன்னாள் சபாநாயகரும், முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவருமான, சோம்நாத் சாட்டர்ஜி, 89, உடல் நலக் குறைவால், கோல்கட்டாவில் நேற்று காலமானார்.மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, சோம்நாத் சாட்டர்ஜி, 1968ல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அக்கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினராக பதவி வகித்துள்ள அவர், 10 முறை, லோக்சபா உறுப்பினராக பணியாற்றி உள்ளார்.கடந்த, 2004 - 2009ல், லோக்சபா சபாநாயகராக பதவி வகித்தார். கடந்த மாதம் உடல் நிலை பாதிக்கப்பட்ட சோம்நாத், மருத்துவமனையில், 40 நாட்கள் சிகிச்சை பெற்றார்.பின், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, சமீபத்தில், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.இருப்பினும், 7ல், உடல் நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார்.அங்கு, சிறுநீரகம் உட்பட முக்கிய உறுப்புகள் செயல் இழந்ததால், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, நேற்று காலை காலமானார். அவருக்கு மனைவி, ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர்.இறப்புக்கு பின், தன் உடலை தானம் செய்வதாக, சோம்நாத் சாட்டர்ஜி ஏற்கனவே அறிவித்துள்ளார். இதன்படி, அவரது உடல், கோல்கட்டாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட உள்ளது.சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், 'இந்திய அரசியலில் மாபெரும் தலைவராக திகழ்ந்தவர், சோம்நாத் சாட்டர்ஜி; நம் பார்லிமென்ட் ஜனநாயகத்தை செம்மைப்படுத்தியவர்' என, கூறியுள்ளார்.
காங்., தலைவர் ராகுல் வெளியிட்ட செய்தியில், 'சிறந்த தலைவராக திகழ்ந்த சோம்நாத் சாட்டர்ஜி, கட்சி பேதமின்றி, அனைத்து அரசியல் தலைவர்களாலும் உயர்வாக மதிக்கப்பட்டவர்' என, தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், 'லோக்சபா சபாநாயகராக, 2004 ஜூன் முதல், 2009 மே வரை பதவி வகித்து, சபையை திறம்பட வழி நடத்தியவர். 'அவர் இறந்த செய்தி அறிந்து, மிகவும் வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்' என, கூறியுள்ளார்.

முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், அ.ம.மு.க., துணை பொதுச் செயலர் தினகரன் உட்பட பல்வேறு தலைவர்கள், சோம்நாத் சாட்டர்ஜி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.


நேர்மை... துாய்மை... எளிமை!

சிறந்த பார்லிமென்ட் உறுப்பினராக திகழ்ந்த சோம்நாத் சாட்டர்ஜி, பொதுவாழ்வில் நேர்மை, துாய்மையை கடைபிடித்தார். சபாநாயகராக இருந்தபோது அரசு மாளிகையில் தங்கினார். அரசு நிதியை பயன்படுத்திக் கொள்ள சட்டத்தில் இடமிருந்தும், சொந்த தேவைகளை தன் செலவிலேயே நிறைவேற்றினார். வெளிநாடுகளுக்கு அரசு முறை பயணம் சென்றபோது, குடும்பத்தினர் உடன் வந்தால், அவர்களுக்கான செலவை சொந்தப் பணத்திலிருந்து செலுத்தினார்.

முன்னாள் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, அசாமின் தேஜ்பூரில், 1929 ஜூலை, 25ல் பிறந்தார். இவரது தந்தை நிர்மல் சந்திர சாட்டர்ஜி, அகில பாரதிய ஹிந்து மகா சபையின் நிறுவனர்களில் ஒருவர். கோல்கட்டாவில் கல்லுாரிப் படிப்பை முடித்த சோம்நாத், சட்டம் பயின்று சிறந்த சட்ட வல்லுனராக விளங்கினார். அரசியலில் நுழைவதற்கு முன், கோல்கட்டா உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். எம்.பி.,யாக இருந்த இவரது தந்தை இறந்தவுடன், பர்தவான் தொகுதிக்கு, 1971ல் நடந்த லோக்சபா தேர்தலில் மார்க்சிஸ்ட் ஆதரவுடன், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு முதன்முறையாக லோக்சபா, எம்.பி., ஆனார். பின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த அவர், மேற்கு வங்கத்தின், ஜாதவ்பூர் (இரண்டு முறை), போல்பூர் (ஏழு முறை) தொகுதிகளில் போட்டியிட்டு, 10 முறை லோக்சபாவுக்கு தேர்வானார்.கடந்த, 1989 - 2004 வரை லோக்சபாவில் மார்க்சிஸ்ட் தலைவராக இருந்தார். இவரின் சிறந்த செயல்பாட்டை பாராட்டி, 1996ல், சிறந்த பார்லிமென்ட் உறுப்பினர் விருது வழங்கப்பட்டது. 2004 - -2009 வரை, மத்தியில், ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது, லோக்சபா சபாநாயகராக பதவி வகித்தார். இவரே கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முதல் சபாநாயகர். பதவிக்காலத்தில் லோக்சபாவை சிறப்பாக வழிநடத்தினார். மக்களின் வரிப்பணத்தில் பார்லிமென்ட் செயல்படுகிறது என்பதை அடிக்கடி சுட்டிக் காட்டிய இவர், சபை நடவடிக்கைகளை சீர்குலைத்து, மக்கள் பணத்தை வீணடிக்கக் கூடாது என, அறிவுறுத்தினார்.

கடந்த, 2008ல், காங்., அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கொண்டு வந்தது. ஆனால், சோம்நாத் சாட்டர்ஜி இதை ஆதரிக்கவில்லை. இதையடுத்து, மார்க்., கம்யூ., கட்சியிலிருந்து சாட்டர்ஜி நீக்கப்பட்டார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், 'என் வாழ்நாளில் மிக சோகமான நாள்' என, குறிப்பிட்டார்.

10 முறை எம்.பி., : மறைந்த சோம்நாத் சாட்டர்ஜி, 1971 - 2004 வரை மேற்கு வங்கத்தில் இருந்து, 10 முறை, எம்.பி.,யாக வெற்றி பெற்றார்.ஒருமுறை மட்டும், 1984ல் ஜாதவ்பூர் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். லோக்சபா வரலாற்றில் அதிகபட்சமாக, 11 முறை, எம்.பி.,யாக இருந்தவர், இ.கம்யூ., கட்சியை சேர்ந்த இந்திரஜித் குப்தா.இரண்டாவது இடத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், காங்கிரசின் சயீத் ஆகியோருடன் சோம்நாத் சாட்டர்ஜியும் உள்ளார். மூவரும், 10 முறை, எம்.பி., யாக இருந்துள்ளனர்.

இனி வினாத்தாள், 'அவுட்' ஆகாதுசி.பி.எஸ்.இ.,க்கு மைக்ரோசாப்ட் உதவி 


dinamalar 14.08.2018

புதுடில்லி : இந்தாண்டு, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளுக்கான வினாத்தாள் வெளியானதால், சர்ச்சையில் சிக்கிய, சி.பி.எஸ்.இ., வருங்காலத்தில் இதுபோன்ற தவறு நிகழாமல் தடுக்கும் வகையில், 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.





சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம், இந்தாண்டு நடத்திய, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளின் வினாத்தாள்கள் வெளியானதால் சர்ச்சை எழுந்தது. இதனால், சி.பி.எஸ்.இ.,க்கு பல தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில், வருங்காலத்தில், வினாத்தாள் வெளியாகாமல் தடுக்க திட்டமிட்ட, சி.பி.எஸ்.இ., அமெரிக்காவை ச் சேர்ந்த, தகவல் தொடர்பு துறை ஜாம்பவான் நிறுவனம், மைக்ரோசாப்டுடன் கைகோர்த்துள்ளது.

இரு நிறுவனங்களும் செய்துள்ள ஒப்பந்தப்படி, சி.பி.எஸ்.இ.,யின் டிஜிட்டல் கேள்வித்தாள்கள், வெளியாகாத வகையில், அதீத பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த தொழில்நுட்ப தீர்வை, மைக்ரோசாப்ட் நிறுவனம் அளிக்கும்.

இதுகுறித்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்திய பிரிவு மேலாண்மை இயக்குனர், அனில் பன்சாலி, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: நாடு முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், சி.பி.எஸ்.இ., கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. சி.பி.எஸ்.இ., நடத்தும் தேர்வுகளின்போது, டிஜிட்டல் முறையிலான கேள்வித் தாள்கள், தேர்வு துவங்குவதற்கு, 30 நிமிடங்களுக்கு முன் வரை,

பார்க்க முடியாத வகையில், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக உருவாக்கப்படும்.

அதற்கென, பிரத்யேக தொழில் நுட்பத்தை மைக்ரோசாப்ட் உருவாக்கி உள்ளது. புதிய தொழில் நுட்பத்தில் தயாராகும் வினாத்தாள்கள், சிறப்பு குறியீடு உடையவை. எனவே, எந்த சமயத்தில் தவறு நிகழ்ந்தாலும், எளிதில் கண்டுபிடிக்க முடியும். இந்த தொழில் நுட்பம் தொடர்பாக நடந்துள்ள அனைத்து சோதனைகளும் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய ரயில்வே அட்டவணை : நாளை வெளிவரும்

Added : ஆக 14, 2018 05:27



புதுடில்லி: நாளை முதல் புதிய ரயில்வே கால அட்டவணை இணையதளத்தில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ரயில்வே கால அட்டவணை ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ரயில்வே அட்டவணை தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், ஆகஸ்டு 14 வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த முறை புதிய ரயில்வே கால அட்டவணையை ஐ.ஆர்.சி.டி.சி. தயாரித்துள்ளது. இந்தப் புதிய கால அட்டவணை நாளை முதல் (ஆக.15) முதல் நடைமுறைக்கு வர உள்ளதாகவும், நாளையே இணையத்தளத்தில் வெளியிடப்பட உள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய கால அட்டவணையில் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பல விரைவு ரயில்களின் புறப்படும் நேரமும் சேரும் நேரமும் மாற்றப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. தவிர புதிய கால அட்டவணையைப் புத்தகமாக அச்சிடும் பணி மும்பையில் நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஒருவாரத்தில் புத்தகங்கள் ரயில்நிலையங்களில் விற்பனைக்கு வரும்


Monday, August 13, 2018

கருணாநிதியின் நினைவிடத்தில் அவரது மூத்த மகன் மு.க. முத்து அஞ்சலி

By DIN | Published on : 12th August 2018 04:33 PM |



சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அவரது மூத்த மகன் மு.க. முத்து ஞாயிறன்று முதன்முறையாக அஞ்சலி செலுத்தினார்.

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் கடந்த செவ்வாய் மாலை 06.10 மணியளவில் மரணமடைந்தார். பின்னர் புதனன்று அவரது உடல் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் மெரீனா கடற்கரையில் அண்ணா சமாதி வளாகத்தின் உள்ளே நல்லடக்கம் செய்ப்பட்டது.

இந்நிலையில் கருணாநிதியின் நினைவிடத்தில் அவரது மூத்த மகன் மு.க. முத்து ஞாயிறன்று முதன்முறையாக அஞ்சலி செலுத்தினார்.

மு.க.முத்துவுடன் அவரது குடும்பத்தினரும் உடன் வந்து இருந்தனர். கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் மகன் மு.க. முத்து என்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக உடல்நலக் குறைவின் காரணமாக வெளியே எங்கும் செல்லாமல் இருந்த அவர், தற்போது தனது தந்தை கருணாநிதியின் நினைவிடத்திற்கு முதன்முறையாக வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார் எண்பது கவனிக்கத்தக்கது.
வரிகளால் ஆய பயன் என்?

By வெ.ந. கிரிதரன் | Published on : 13th August 2018 02:45 AM |

பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் நண்பர் ஒருவரை அண்மையில் சந்தித்தேன். நாட்டு நடப்புகள் குறித்து கலந்துரையாடி கொண்டிருந்தபோது வருமான வரி குறித்து பேச்சு வந்தது. "நாங்கள் எல்லாம் உயர் வருவாய் பிரிவின்கீழ் வருவதால் 30 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. அதிகமாக சம்பாதிப்பவர்களுக்கு அதிகமாக வரி விதிப்பது எந்த விதத்தில் நியாயம்' என பேச்சை ஆரம்பித்தவர், "எங்களை இத்துடன் விட்டுவிட்டால் பரவாயில்லை. ஹோட்டலுக்கு சென்றால் ஜி.எஸ்.டி., தியேட்டருக்கு போனால் ஜி.எஸ்.டி., பெட்ரோல், டீசலுக்கு 50 சதவீதத்துக்கு மேல் வரி, போதாகுறைக்கு சமையல் எரிவாயு மானியத்தையும் விட்டுக் கொடுங்கள் எனவும் கேட்கின்றனர்.

சரி, நாம் நன்றாக சம்பாதிப்பதன் பயனாக வருமான வரி செலுத்துவதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறோம் என மகிழ்ச்சி கொள்ளலாம் என்றால் அதுவும் முடியவில்லை' என வருந்தினார்.
"மின்னல் வேகத்தில் வாகனங்கள் பறக்கும் நான்கு வழி, ஆறு வழி, எட்டு வழி சாலைகள் உள்ள இதே நாட்டில்தான், குண்டும் குழியுமான சாலைகளும், இன்னும் சாலை வசதியையே காணாத ஆயிரக்கணக்கான கிராமங்களும் இருக்கின்றன. ஆனால், நாட்டின் எந்த மூலையில் வசிப்பவராக இருந்தாலும், அவர் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வாங்கும்போது, அவற்றை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யும்போது ஆயுள்கால சாலை வரி என மொத்தமாக ஒரு தொகையை வசூலித்து விடுகின்றனர்.
சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு மணி நேரம் தொடர்ந்தால் போல் மழை பெய்தால் போதும். மழைநீரும், கழிவுநீரும் கலந்து சாலைகளில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து குளம் போல் தேங்கி நிற்கும்படிதானே உள்ளன இங்கு உள்கட்டமைப்பு வசதிகள்?

உயர்கல்விக்கு 2 சதவீதம், பள்ளிக்கல்விக்கு 1 சதவீதம் என கல்விக்கென தனியாக வரி வசூலிக்கப்பட்டாலும் (எஜுகேஷன் செஸ்), மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீடு தரவேண்டியது கட்டாயமென சட்டம் போட்டிருப்பது, அரசாங்கமே தனியார் பள்ளிகளை மறைமுகமாக ஊக்குவிப்பது போல இல்லையா?

அரசு மருத்துவமனைகள் இருந்தாலும், அவசர மருத்துவத் தேவைக்கு நாம் விரும்பியோ, விரும்பாமலோ தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று லட்சக்கணக்கில் செலவு செய்துதானே மருத்துவம் பார்க்க வேண்டியுள்ளது?
உள்ளாட்சி அமைப்புகளுக்கு, குறிப்பாக, சென்னை போன்ற மாநகராட்சிகளுக்கு குடிநீருக்காக வரி செலுத்திவிட்டு, அன்றாட தேவைகளுக்காக லாரி தண்ணீரையும், குடிநீருக்கு கேன் தண்ணீரையும் விலை கொடுத்து வாங்கும் அவலநிலை நம் மக்களைத் தவிர உலகின் வேறெந்த நாட்டு மக்களுக்காவது ஏற்பட்டிருக்கிறதா எனத் தெரியவில்லை.
குடிநீருக்காக குடங்களைச் சுமந்துக் கொண்டு மக்கள் வீதி வீதியாக அலைவதும், தண்ணீர் கேட்டு தொண்டைநீர் வற்ற பொதுமக்கள் சாலை மறியல் செய்வதும் ஒவ்வொரு கோடையிலும் நடக்கும் கொடுமைகளாகத்தானே தொடர்கின்றன?

அரசு இயந்திரத்தின் அலட்சிய போக்கால், தங்கள் ஊரின் ஏரி, குளம், கால்வாய்களை தங்களது சொந்த செலவில் தூர்வார வேண்டிய துர்பாக்கிய நிலைக்கும் அல்லவா நம் மக்கள் தள்ளப்படுகின்றனர்?
இவையெல்லாவற்றுக்கும் மேலாக, செய்யும் வேலைக்கான சரியாக ஊதியம் எல்லோருக்கும் கிடைக்கிறதா என்றால் அதுவும் கிடையாது. "அவுட்சோர்சிங்' எனப்படும்

அயல்பணி நியமனமுறையை கொண்டு வந்து, பணியாளர்களின் சம்பளத்திலும் மாதந்தோறும் கைவைத்து விடுகின்றனர்.
ஏடிஎம்-களில் இவ்வளவு முறைக்கு மேல் பணம் எடுத்தால் அபராதம், சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் இவ்வளவு தொகை இல்லையென்றால் அதற்கும் அபராதம், ரொக்கமில்லா பணபரிவர்த்தனைக்கும் வரி என,வங்கிகளும் தங்கள் பங்குக்குக் கொள்ளை அடித்து வருகின்றன.

இப்படி தரமான கல்வி, மருத்துவம், சுத்தமான குடிநீர், சிறப்பான உள்கட்டமைப்பு வசதி, உழைப்பை சுரண்டாத வேலை என ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யாமல் வருமான வரி, சாலை வரி, ஜி.எஸ்.டி. என பல்வேறு வரிகளை ஓர் அரசு வசூலிப்பதால் ஆன பயன் என்ன' என்று தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார் நண்பர்.
"இதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன? நம் நாடு வளர்ச்சி அடையவே இல்லையென சொல்கிறீர்களா?' என அவரிடம் கேட்டேன். "அப்படிச் சொல்லிவிட முடியாது; நம் தேசத்தின் வளர்ச்சி சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கான ஒட்டுமொத்த வளர்ச்சியாக இல்லை என்பதுதான் என் வருத்தம்' என்றார் அவர்.

அவரது இந்த வருத்தத்தை நேர்மையாக வரி செலுத்தும் அனைவரின் ஒட்டுமொத்த குரலாகதான் நாம் பார்க்க வேண்டும். இத்தகையோரின் ஆதங்கத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து வருமான வரிவிதிப்பு மற்றும் வசூலிக்கும் முறையில் அதிரடி சீர்திருத்தங்களை கொண்டு வருவது அவசியமாகும். 

அதாவது, அதிகமாக சம்பாதித்தால் அதிக வரிவிதிப்பு என்றில்லாமல், அனைவருக்கும் சமமான அளவு வரி விதிக்கும் முறையை கொண்டுவர வேண்டும். அத்துடன், அரசு மற்றும் தனியார் நிறுவனப் பணியாளர்களுக்கு வருமான வரி விதிப்பில் கடைப்பிடிக்கப்படும் டி.டி.எஸ். முறை போன்று, பல்வேறு சுயதொழில் புரிவோர், வணிகர்கள், பலவித சேவை நிறுவனங்களை நடத்துவோர் என பலதரப்பினரும் வருமான வரி ஏய்ப்பு செய்யாதபடி புதிய வழிமுறையை கண்டறிந்து அதனைக் கடுமையாக செயல்படுத்த வேண்டும். 

பல்வேறு வரி இனங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் வகுக்கப்படும் பல வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பை, பெருநிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் மட்டும் ஒப்படைக்காமல், வாய்ப்புக்காக காத்திருக்கும் நம் இளைஞர்களை கொண்டு நடத்தப்படும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கும் அவற்றில் சரி பங்கு தர வேண்டும்.
மேலும், ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட் தாக்கலின்போது, முந்தைய நிதியாண்டில் கிடைத்த மொத்த வரி வருவாய் எவ்வளவு, அதில் எந்தெந்தத் திட்டங்களுக்கு எவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது, அத்திட்டங்களில் தற்போதைய நிலை என்ன என்பவை குறித்தும் மத்திய, மாநில அரசுகள் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவைதான், நேர்மையாக வரி செலுத்தும் குடிமக்களுக்கு ஓர் நல்லரசு தரும் வெகுமதியாக இருக்கும்.

ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் பெருமாள் பட்டு

Added : ஆக 13, 2018 01:55




ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் இன்று நடக்கும் ஆடித்தேரோட்டத்தை முன்னிட்டுஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் இருந்து பட்டு மற்றும் மங்கலபொருட்கள் நேற்று கொண்டு வரப்பட்டது. ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் ஜெயராமன், தினமலர் திருச்சி பதிப்பு ஆசிரியர் ஆர். ராமசுப்பு, அறங்காவலர்கள் டாக்டர் ஸ்ரீனிவாசன், ரெங்காச்சாரி, கவிதா மற்றும் சுந்தர் பட்டர் ஆகியோர் கொண்டு வந்த பட்டுவஸ்திரம் மற்றும் மங்கல பொருட்களை, ஆண்டாள் கோயில் தக்கார் ரவிசந்திரன், செயல்அலுவலர் நாகராஜன் மற்றும் கோயில் பட்டர்கள் எதிர்கொண்டு வரவேற்றனர். பின்னர் மாடவீதிகள் சுற்றி, வரபட்டு ஆண்டாளுக்கு சாற்றப்பட்டது.திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதைப்போல் மதுரை கள்ளழகர் கோயிலிலிருந்தும் நேற்று மாலை 6:00 மணியளவில் பரிவட்டங்கள் கொண்டு வரப்பட்டு, ஆண்டாளுக்கு சாற்றப்பட்டது.
கனமழை அறிவிப்பால் அச்சத்தில் மூணாறு மக்கள்

Added : ஆக 13, 2018 00:55

மூணாறு: மூணாறில் கடந்த மூன்று நாட்களாக மழை குறைவாக இருந்தாலும்,கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.கேரளாவில் தென்மேற்கு பருவமழை மற்ற பகுதிகளைக்காட்டிலும், மூணாறில் அதிகம் பெய்யும். இந்தாண்டு பருவமழை மே 29ல் துவங்கி ஒரு வாரம் பெய்தது. அதன்பிறகு அவ்வப்போது கன மழை பெய்த நிலையில், இம்மாத துவக்கத்தில் மழை குறைந்து வெயில் முகம் காட்டியது.இந்நிலையில் ஆக.6 முதல் மழை தீவிரமடைந்து ஆக.9ல், 34.64 செ.மீ., பெய்தது. அதனால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டு,போக்குவரத்து பாதிக்கப்பட்டது .அதன்பின் மழை வெகுவாக குறைந்தது. ஆக.10ல் 7.04, 11ல் 8.10, நேற்று காலை 8:30மணிப்படி 6.34 செ.மீ., என பதிவானது. எனினும் கன மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். -----
மருத்துவம்: 76 இடங்களுக்கு கவுன்சிலிங்

Added : ஆக 13, 2018 01:35

சென்னை : எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில், இரண்டு நாட்களில், 192 இடங்கள் நிரம்பின. மீதமுள்ள, 76 இடங்களுக்கு இன்று கவுன்சிலிங் நடக்கிறது.அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, 3,501 எம்.பி.பி.எஸ்., - 1,198 பி.டி.எஸ்., இடங்களுக்கான முதற்கட்ட கவுன்சிலிங், ஜூலை, 1 முதல், 7 வரை நடந்தது. இதில், அனைத்து இடங்களும் நிரம்பி வகுப்புகள் துவங்கின. அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாதவை, கவுன்சிலிங்கில் இடம் பெற்று, கல்லுாரியில் சேராதவர்கள் என, 268 இடங்கள் காலியிடங்களாக அறிவிக்கப்பட்டன. இரண்டாம் கட்ட கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார், அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாளில், 35 இடங்கள் நிரம்பின. நேற்று நடந்த கவுன்சிலிங்கில், 940 மாணவர்கள் பங்கேற்றதில், 157 பேர் இடங்கள் பெற்றனர். இரண்டு நாட்களில், மொத்தம், 192 இடங்கள் நிரம்பின. மீதமுள்ள, 76 இடங்களை நிரப்ப, இன்று கவுன்சிலிங் நடக்கிறது.
சிறார்களை தற்கொலைக்கு தூண்டும், 'மோமோ' : பெற்றோர், ஆசிரியர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

Added : ஆக 12, 2018 23:21


சிறுவர்கள் மற்றும் மாணவர்களை தற்கொலைக்கு துாண்டும், 'ப்ளூ வேல்' என்ற, 'ஆன் லைன்' விளையாட்டு போல, தற்போது, 'மோமோ' என்ற, அரக்கன் தலை துாக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 'குழந்தைகள் பாதுகாப்பில், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் உஷாராக இருக்க வேண்டும்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.சிறுவர்கள் மற்றும் வாலிபர்களை தற்கொலைக்கு துாண்டும், 'ப்ளூவேல்' என்ற, 'ஆன் லைன்' விளையாட்டு, 2017ல், தமிழகம் உட்பட, உலகம் முழுவதும் உள்ள நாடுகளை அச்சுறுத்தி வந்தது. அதாவது, மொபைல் போனில், 'ப்ளூவேல்' என்ற, ஆன் லைன் விளையாட்டிற்கான, 'ஆப்'பை பதிவிறக்கம் செய்தால் போதும். அவர்களுக்கு, 50 நாட்களுக்கு, 'டாஸ்க்' தரப்படும்.கட்டளைகள் உதாரணமாக, 'உன் கையில் பிளேடால், மூன்று முறை கிழித்துக் கொள்; அதை போட்டோ எடுத்து அனுப்பு. அதிகாலையில் பேய் படம் பார்; 'செல்பி' எடுத்து அனுப்பு. 'நள்ளிரவில், ரயில்வே டிராக்கில் நில்; அந்த, 'வீடியோ' காட்சியை, சமூக வலைதளங்களில் பதிவேற்று. உயரமான கட்டடம் மற்றும் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்' என, அடுக்கடுக்காக, கட்டளைகள் பிறப்பிக்கப்படும். இதை எல்லாம் செய்யமாட்டேன் என்று, சொல்ல முடியாது. 

ஏனெனில், இந்த ஆன்லைன் விளையாட்டிற்கான, 'ஆப்'பை பதிவிறக்கம் செய்யும் போதே, உங்கள் மொபைல் போனில் இருக்கும் அனைத்து தகவல்களும், இந்த விளையாட்டு தொடர்பான, சர்வருக்கு சென்று விடும். 'டாஸ்க்கை செய்யவில்லை என்றால், உங்கள் தகவல்கள் அனைத்தும், பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்' என, மிரட்டல் வரும். மொபைல் போன்களை, 'ஹேக்' செய்பவர்களால் நடத்தப்பட்டு வந்த, இந்த விளையாட்டால், பலர் பலியாகினர். தமிழகத்தில், மதுரையை சேர்ந்த, விக்கி, 19 என்ற, தனியார் கல்லுாரி மாணவர், 'ப்ளூவேல்' விளையாட்டில் சிக்கி, தற்கொலை செய்து கொண்டார்.தற்போது, புளூவேலுக்கு நிகராக, ஆன்லைனில் விளையாடக் கூடிய, 'மோமோ' என்ற, அரக்கன் தலை துாக்கி உள்ளான். இந்த விளையாட்டிற்கான இணைய இணைப்பு, 'வாட்ஸ் ஆப்'பில் வேகமாக பரவி வருகிறது.

கண்காணிக்க வேண்டும் : இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:இணையதளம் வழியாக தகவல் திருட்டில் ஈடுபடும், ஹேக்கர்களால், 'ஆன் லைன்' விளையாட்டிற்கான, 'ஆப்'வடிவமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள், ப்ளூவேல், மோமோ என, பல்வேறு பெயர்களில், 'ஆப்'கள் துவங்கி, பலவீனமானவர் களை தற்கொலைக்கு துாண்டி வருகின்றனர். இதுபோன்ற விளையாட்டு களை தடை செய்ய, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.பெற்றோர், தங்கள் குழந்தைகள், நள்ளிரவு மற்றும் அதிகாலையில், கணினி மற்றும் மொபைல் போனில், நேரத்தை அதிகமாக செலவிடுகின்றனரா என, பார்க்க வேண்டும். அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். பள்ளிகளில், மாணவர்களின் செயல்பாடுகளை, ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். நடவடிக்கைகளில் மாற்றம் இருந்தால், அவர்களுடன் பேசி, சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் --


சிறுமியரை,கற்பழித்தால்,துாக்கு தண்டனை,சட்டம்,அமலானது,அரசு,அதிரடி

dinamalar 13.08.2018

புதுடில்லி : பெண்கள், சிறுமியரை பாதுகாக்கும் நோக்கில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பலாத்காரம் செய்வோருக்கு, துாக்கு தண்டனை அளிக்கும் சட்டத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து, அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டப்படி, 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பலாத்காரம் செய்யும் கொடியவருக்கு, முன் ஜாமின் கிடைக்காது. பலாத்கார குற்றங்கள் அனைத்துக்கும், புதிய சட்டப்படி, தண்டனைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.

உ.பி., மாநிலம், உன்னாவோ மாவட்டத்தில், ஒரு பெண்ணும், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தில் ஒரு சிறுமியும், இந்தாண்டு துவக்கத்தில், கொடூர கும்பல்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின. இதையடுத்து, சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய, பலதரப்பில் கோரிக்கைகள் எழுந்தன.

ஒப்புதல் :

இதைத் தொடர்ந்து, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை உட்பட, கடுமையான தண்டனைகளை வழங்கும் ஷரத்துகளுடனான அவசர சட்டத்தை, மத்திய அரசு, சில மாதங்களுக்கு முன் இயற்றியது.



இந்நிலையில், அவசர சட்டத்துக்கு மாற்றாக, கிரிமினல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட மசோதா, கடந்த வாரம், பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேறின. இந்நிலையில், புதிய கிரிமினல் சட்டத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்து உள்ளார்.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பாலியல் குற்றங்களை தடுக்கும் அவசர சட்டத்துக்கு மாற்றாக, பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டம், 'கிரிமினல் சட்டம்- 2018' என அழைக்கப்படும்;

இது, 2018, ஏப்., 21ல், அமலுக்கு வந்ததாக கருதப்படும்.

இந்த புதிய சட்டம், இந்திய குற்றவியல் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் ஆகியவற்றில் தக்க திருத்தங்களுக்கு வகை செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாழ்நாள் சிறை :

புதிய சட்டப்படி, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு, இறக்கும் வரை வாழ்நாள் சிறை அல்லது துாக்கு தண்டனை அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. மேலும், 12 - 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பாலியல் பலாத்காரம்  செய்தால், குறைந்தபட்ச தண்டனை, 10 ஆண்டுகளில் இருந்து, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த தண்டனை, குற்ற வாளி இறக்கும் வரை, வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் வரை, அதிகரிக்கப்படலாம். 16 வயதுக்கு உட்பட்ட சிறுமி யரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யும் கொடியவர்களுக்கு, இறக்கும் வரை வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கான குறைந்தபட்ச தண்டனை, ஏழு ஆண்டில் இருந்து, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தண்டனை, ஆயுள் தண்டனையாக நீட்டிக்கும் வாய்ப்பும் உள்ளது.

நிர்ணயம் :

பாலியல் பலாத்கார வழக்கு விசாரணையை விரைவில் முடிக்க, புதிய சட்டம் வகை செய்கிறது. பாலியல் பலாத்கார வழக்குகள் அனைத்தையும், இரண்டு மாதங்களில் முடிக்க வேண்டும் என, நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேல்முறையீடுகள் மீதான விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும். 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர், முன்ஜாமின் பெற முடியாது.

கேரளா :பாஸ்போர்ட்டை இலவசமாக மாற்றி தர சுஷ்மா உத்தரவு

Added : ஆக 13, 2018 03:05 |



புதுடில்லி: கேரளாவில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பாஸ்போர்ட்டுகள் இலவசமாக மாற்றித்தரப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். 

கேரளாவில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகிறது. மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து திறந்து விடப்பட்டது. இதனையடுத்து ஏராளமான நகரங்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றன. மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தனது டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது:




Sushma Swaraj
✔@SushmaSwaraj



There are unprecedented floods in Kerala causing huge damage. We have decided that as the situation becomes normal, passports damaged on account floods shall be replaced free of charge. Please contact the concerned Passport Kendras. #KeralaFloods Pls RT
5:52 PM - Aug 12, 2018
10.1K
3,262 people are talking about this
Twitter Ads info and privacy

சேதமடைந்த அல்லது இழந்த பாஸ்போர்ட்டுகளுக்குப் பதிலாக வழக்கமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது, ஆனால் கேரளாவில் ,பாஸ்போர்ட்டுகள் வெள்ளம் அல்லது மழைக்காலத்தில் சேதமடைந்திருந்தால் இலவசமாக மாற்றித்தர முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பாஸ்போர்ட் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
Special trains for Onam, Velankanni festival

SALEM, AUGUST 13, 2018 00:00 IST

The Railways will operate special trains in connection with the Onam and Velankanni shrine annual festival.

The train No. 82615 Chennai Central to Ernakulam junction Suvidha special train will leave Chennai Central at 10.30 p.m. on August 23 and will reach Ernakulam at 10.55 a.m. the next day.

The train will halt at Katpadi, Jolarpettai, Salem, Erode, Tirupur, Coimbatore, Palakkad, Thrisur, Aluva and Ernakulam Town.

The No. 06014 Ernakulam Junction – Chennai Central special fare special train will leave Ernakulam at 2.45 p.m. on August 24 and will reach Chennai Central at 4.50 a.m. the next day.

The train will halt at Aluva, Thrisur, Palakkad, Coimbatore, Tirupur, Erode, Salem, Jolarpettai, Katpadi and Perambur.

The No. 06047 Chennai Central – Kochuveli special fare special train will leave Chennai Central at 3 p.m. on August 21 and will reach Kochuveli at 6.45 a.m. the next day.

The No.06048 Kochuveli – Chennai Central special fare special train will leave Kochuveli at 12.30 p.m. on August 22 and 28 and will reach Chennai Central at 7.40 a.m. the next day.

These trains will halt at Arakkonam, Katpadi, Jolarpettai, Salem, Erode, Tirupur, Coimbatore, Palakkad, Thrisur, Aluva, Ernakulam Town, Kottayam, Tiruvalla, Chengannur, Kayamkulam and Kollam.

The No. 06046 Thiruvananthapuram – Velankanni special fare special train will leave Thiruvananthapuram at 3.30 p.m. on August 29 and September 5 and will reach Velankaani at 3.45 a.m. the next day.

Train No.06045 Velankanni – Thiruvananthapuram special fare special train will leave Velankanni at 10.10 p.m. on August 30 and September 6 and will reach Thiruvananthapuram at 12.15 p.m. the next day.

These trains will stop at Kulitturai, Eraniel, Nagercoil Town, Valliyur, Tirunelveli, Kovilpatti, Satur, Virudhunagar, Madurai, Dindigul, Tiruchchirappalli, Thanjavur, Tiruvarur and Nagapattinam.

The No. 06016 Ernakulam Junction – Velankanni special fare special train will leave Ernakulam at 11 p.m. on August 28 and 31 and September 4 and 7 and will reach Velankanni at 1 p.m. the next day.

The No.06019 Tirunelveli – Mangalore Junction special fare special train will leave Tirunelveli at 5.55 p.m. on August 23 and will reach Mangalore at 12.30 p.m. the next day.

The No.06020 Mangalore Junction. – Tirunelveli special fare special train will leave Mangalore at 3.40 p.m. on August 24 and will reach Tirunelveli at 9.45 a.m. the next day. These trains will halt at Nagercoil Town, Kulitturai, Neyyattinkara, Thiruvananthapuram, Kollam, Kayamkulam, Chengannur, Tiruvalla, Kottayam, Ernakulam Town, Aluva, Thrisur, Shoranur Jn., Tirur, Kozhikode, Vadakara Thalassery, Kannur, Payyanur, Kanhangad and Kasaragod.

The No.06023 Nagercoil Junction – Mangalore Junction special fare special train will leave Nagercoil at 4.15 p.m. on August 26 and will reach Mangalore at 6.30 a.m. the next day.

The No.06024 Mangalore Junction – Nagercoil special fare special train will depart Mangalore at 8.30 a.m. on August 27 and will reach Nagercoil at 10.15 p.m. the same day.

These trains will halt at Thiruvananthapuram, Kollam, Kayamkulam, Chengannur, Tiruvalla, Kottayam, Ernakulam Town, Aluva, Thrisur, Shoranur Jn., Kozhikode, Kannur and Kasaragod. Advance reservation for all these trains commenced on August 8, an official press release of Salem Railway Division said.
Advocate couple suspended for ‘waylaying’ High Court judge’s car

CHENNAI, AUGUST 13, 2018 00:00 IST

They also went to his residence and picked a quarrel with his driver

The Bar Council of Tamil Nadu and Puducherry has suspended from practice an advocate couple accused of waylaying a Madras High Court judge’s car and scolding the driver in filthy language for overtaking their car.

The Bar Council passed the order of interim suspension following a complaint lodged by the Personal Security Officer of the judge against advocates S. Sahul Hameed and his wife L. Shika Sarmadan.

While Mr. Hameed had enrolled with the Bar Council in 2001, Ms. Sarmadan had enrolled in 1999.

The PSO alleged that the couple was agitated when the judge’s car, on its way to the High Court on July 30, overtook their car in Chennai.

Thereafter, Mr. Hameed allegedly chased the judge’s car and honked continuously much to the annoyance of other motorists and the judge.

Moments later, the advocates allegedly waylaid the judge’s car and started scolding the driver using filthy language, despite knowing well that the judge was travelling in the vehicle on official duty.

The entire episode took place on a busy road at Anna Nagar.

Professional misconduct

The Bar Council, in its proceedings, said the advocates by their action “have damaged the faith and confidence of the people in the honourable judges and the judiciary as a whole” and thereby conducted themselves in an unprofessional manner.

On August 3, the couple allegedly went to the residence of the judge, when he was about to leave for the court in the morning and picked up a quarrel with his driver again and abused him in the presence of the judge.

“The same was witnessed by so many people and thus you have damaged the reputation of the judiciary and shaken the confidence of the people. Prima facie, this would also amount to professional misconduct,” the proceedings read.

A special committee comprising Advocate-General Vijay Narayan, senior counsel R. Singaravelan and advocate N. Chandrasekharan of the Bar Council had taken the decision to suspend the advocate couple from practising in any court or tribunal across the country.

Action in public interest

The special committee’s proceedings, ordered to be communicated to the couple by Bar Council secretary S. Rajkumar, stated that the couple was being suspended from practice in public interest and to uphold the confidence and faith of people in the judiciary.

The action was taken on the basis of a complaint lodged by the judge’s PSO on August 4 and the advocates had been given 15 days’ time to reply to the charges against them. If they do no reply by then, the matter would be referred to the disciplinary committee for enquiry.
DVAC gathers crucial evidence

CHENNAI, AUGUST 13, 2018 00:00 IST



Summons to be issued to the former Controller of Examinations and others in a week.File photo 

Documents seized from Anna University, top officials’ statements recorded

The Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) has examined senior officials of the Anna University and recorded their statements in connection with the answer scripts revaluation scam.

Crucial documents relating to the alleged irregularity of awarding marks grossly disproportionate to the performance of thousands of engineering students who applied for revaluation in April/May 2017 were seized. Investigators said they met the Controller of Examinations and others to record their version on the process of revaluation.

‘Violation of procedures’

“We have established a clear violation of the procedures. The students who are suspected to have been benefitted from the scam did not enter the number of pages they used for writing the answers (in the relevant column). There are reasons to believe that answers could have been written by the students at the time of revaluation...answer scripts are being sent for forensic analysis to rule out this suspicion,” a DVAC officer told The Hindu on Sunday.

The officer said that professors of some engineering colleges affiliated to Anna University had brokered the deal between the examiners and the students.

Answer scripts that were usually kept in safe custody for at east one year were disposed of in a bid to destroy evidence.

“Dozens of answer scripts that were picked for an internal inquiry have also been seized,” the officer said.

“The university has issued fresh guidelines on the process of revaluation and storage of answer scripts,” he added.

Investigators said the process of issuing summons to the suspended former Controller of Examinations, Prof. G.V. Uma, and others would commence in a week. Investments and property documents seized during searches on the office and residential premises of the accused officials were examined to check if there was any accumulation of assets disproportionate to their known sources of income.

Fresh revaluation

After obtaining the forensic report and opinion of document experts, the answer scripts seized in the case would be referred to a panel of examiners for fresh revaluation.

Enquiries revealed that the answer scripts of over 3.02 lakh engineering students were sent to the Tamil Nadu Newsprint and Papers Limited for recycling.
Use Aadhaar freely, without fear: UIDAI

NEW DELHI, AUGUST 13, 2018 00:00 IST

After TRAI chief’s Aadhaar dare ignited a debate on the security of the 12-digit number, theUnique Identification Authority of India (UIDAI) is planning a user outreach to sensitise people to the dos and don’ts of sharing their biometric identifier.

The UIDAI intends to draw a parallel between the Aadhaar number and other personal information such as PAN and bank account number to caution users against placing such details in the public domain, particularly on digital platforms.
Holiday for all schools, PU colleges in Dakshina Kannada, Udupi today

MANGALURU, AUGUST 13, 2018 00:00 IST

Deputy Commissioners of Dakshina Kannada and Udupi have declared holiday for all schools and pre-university colleges in the two districts on Monday in view of the heavy to very heavy rainfall warning.

A release from the Department of Information and Public Relations here said that the holiday is applicable to all anganwadis and polytechnic colleges and not for degree colleges.

Udupi Deputy Commissioner Priyanka Mary Francis said on Sunday that according to the weather department warning, heavy to very heavy rainfall exceeding 115 mm accompanied with heavy winds is likely to occur in the coastal belt in 24 hours.

Meanwhile, an India Meteorological Department bulletin said on Sunday that heavy to very heavy rain is likely to lash the coastal region till Wednesday. The coastal belt is likely to receive heavy rainfall exceeding 65 mm on August 16 and August 17.

Fishermen have been advised not to venture into the south-west and central Arabian Sea.

“Strong winds from westerly to north-westerly direction, with speeds reaching 25-35 kmph gusting to 45-55 kmph occasionally, is likely along and off Karnataka, Kerala coast and over Lakshadweep area,” the department said.

High waves in the range of 3 m to 3.8 m are forecast up to 11.30 p.m. on Monday along the Karnataka coast. Current speeds will vary between 55-104 cm/sec, it said.

Heavy rain lashed several parts of Dakshina Kannada and Udupi on Sunday.
How smartphones are making us miserable

Excessive Use Leaves People Distracted & Drained And Makes Even Eating Less Enjoyable

Toronto:  TOI 13.08.2018

Our digital lives and excessive smartphone use may be making us more distracted, distant and drained, a study has found.

For instance, even minor phone use during a meal with friends was enough to make the diners feel distracted and reduced their enjoyment of the experience, researchers said. “People who were allowed to use their phones during dinner had more trouble staying present in the moment,” said Ryan Dwyer, of the University of British Columbia in Canada.

“Decades of research on happiness tell us that engaging positively with others is critical for our well-being. Modern technology may be wonderful, but it can easily sidetrack us and take away from the special moments we have with friends and family in person,” Dwyer said.

Researchers conducted two studies — a field experiment in a restaurant and a survey. The restaurant experiment included more than 300 adults and university students in Vancouver, British Columbia.

Participants were either asked to keep their phones on the table with the ringer or vibration on or to put their phones on silent and place them in a container on the table during the meal.

After eating, the participants filled out a questionnaire detailing their feelings of social connectedness, enjoyment, distraction and boredom, as well their phone use during the meal.

The researchers found that people who had their phones easily accessible not only used them more, but they also reported feeling more distracted and enjoyed the experience less.

The survey portion included more than 120 participants, who were surveyed five times a day for one week and were asked to report on how they were feeling and what they had been doing in the 15 minutes before completing the survey.

Results showed that people reported feeling more distracted during face-to-face interactions if they had used their smartphone.

The students also said they felt less enjoyment and interest in their interaction if they had been on their phone.

“The survey findings were especially notable because of the negative effects of phone use among university students, who are commonly known as digital natives,” said Elizabeth Dunn, of the University of British Columbia.

Another study found that compassionate people spend less time on social media than people who are more self-centered and narcissistic. In addition, people with lower emotional intelligence, or those who have difficulty identifying, describing and processing their emotions, used social media more often than those who are more in touch with their feelings, according to the study.

“People who are uncomfortable with their own and others’ emotions may be more comfortable online,” said Sara Konrath, from Indiana University in the US. PTI




TIME TO SWITCH IT OFF

Kerala gets ₹100cr relief from Centre

Preliminary Estimates Peg Loss At ₹8,316Cr Due To Landslides, Floods & Rain

TIMES NEWS NETWORK

Kochi:13.08.2018

Union home minister Rajnath Singh on Sunday announced an immediate central flood relief of ₹100 crore to Kerala. Singh, who made an aerial survey of affected areas in Idukki and Ernakulam districts, said the rains and floods had caused “massive damage” to the farming sector and infrastructure like roads and power.

Singh was accompanied by Kerala chief minister Pinarayi Vijayan, Union minister of state for tourism K J Alphons and other senior government officials in reviewing the situation.

“Kerala is facing unprecedented floods. Never before in the history of independent India has the state witnessed such massive floods. It was back in 1924 when Kerala faced such a big calamity. The floods have damaged crops, infrastructure and individual property as well. The tourism sector has also been hit,” Singh said.

Singh said the Centre was sensitive to the state’s needs and it would leave no stone unturned in ensuring support. He visited a relief camp in Elanthikara, Paravur and interacted with those housed there before attending a meeting with Vijayan, opposition leader Ramesh Chennithala and officials.

The Kerala government had submitted a memorandum to Singh, seeking the urgent sanction of ₹1,220 crore from the national disaster relief fund to meet the situation. Vijayan said preliminary estimates suggested that Kerala suffered a loss of ₹8,316 crore in the rain, floods and landslides.

Meanwhile, rain lashed several parts of the state since Sunday morning after a brief lull, posing problems to relief work in affected regions. However, the water level in Idukki and Idamalayar dams has come down.



WORDS OF HOPE: Union home minister Rajnath Singh interacting with the residents of the flood relief camp in Elanthikara, Paravur, on Sunday. Minister of state for tourism K J Alphons (in blue) is also seen along with Kerala chief minister Pinarayi Vijayan (behind Rajnath)

DMK announces ₹1cr flood relief
Chennai :

The DMK working president M K Stalin on Sunday announced a ₹1 crore flood relief, on behalf of his party, to the Kerala government for carrying out relief measures to those affected in heavy rain and resultant floods. He also expressed his condolences to the bereaved families.

“Unprecedented floods in Kerala have affected many people and has caused damage to properties worth several crores of rupees. The party’s working president M K Stalin has decided to contribute ₹1 crore to Kerala chief minister’s relief fund,” a DMK statement said.

“I have just spoken with @CMOKerala to enquire about the flood situation. On behalf of DMK trust, we have made a contribution of ₹1 crore towards #KeralaFloodRelief. Our thoughts are with those who are affected by the floods and landslides,” Stalin later tweeted.

Tamil Nadu chief minister Edappadi K Palaniswami has already announced a contribution of ₹5 crore to carry out relief works in the rain ravaged Kerala as a mark of support to the neighbouring state. TNN

‘Damaged passports to be replaced free of cost’
New Delhi:

External affairs minister Sushma Swaraj on Sunday announced that passports damaged in floods in Kerala will be replaced free of cost by the government.

“There are unprecedented floods in Kerala causing huge damage. We have decided that as the situation becomes normal, passports damaged on account (of) floods shall be replaced free of charge. Please contact the concerned Passport Kendras,” Swaraj tweeted.

Kerala has been reeling under massive floods in which over 35 people have lost their lives and thousands of people were rendered homeless. Around 10 of the 14 districts in state have been affected by the floods. PTI
Pregnant for the 10th time, woman flees health centre as docs suggest birth control

Sambath.Kumar@timesgroup.com

Trichy: 13.08.2018

A pregnant woman whose delivery date was approaching disappeared with her family members from a primary health centre (PHC) despite pleas from doctors for her immediate hospitalisation. The curious incident happened in Vethiyangudi near Aranthangi when the woman identified as Aarayi, 52, wife of Anandan, 56, learned that she was pregnant on being treated for low hemoglobin.

Already a mother of nine, Aarayi was unaware that she was carrying her tenth after 13 years as she visited the PHC at Singavanam after developing uneasiness. Doctors said that she disappeared when they suggested immediate hospitalization and a birth control measure after the delivery.

She has been living with her husband and five of her children in a 60sqft house in Vethiyangudi near Aranthangi for over five years now. The nomadic family moved from place to place and never stayed anywhere for far too long. While four of her children are married and living with their family, Aarayi fell pregnant but was not aware of it. Doctors said she was under the impression that she had attained menopause and would never bear a child again.

According to local residents, Aarayi delivered all her nine children at home and didn’t want to go to hospital for her tenth delivery due on August 18. They said she may have wanted to avoid doctors as PHC workers were insisting that she undergo family planning surgery. Aarayi came to the PHC with extremely low haemoglobin about four months ago. She was then taken to Pudukkottai Medical College Hospital where she was given two units of blood. Since then she was missing only to be found a couple months ago, M Ayyappan, medical officer Singavanam PHC, told TOI. “We found her two months ago and took her to Aranthangi hospital. She disappeared from there too and was found again 10 days ago. Her blood pressure was high and we asked her to get admitted to Pudukkottai government hospital. She has been missing since then,” said Singavanam.
DMK, AIADMK rivalry spills over to Bharat Ratna

D.Govardan @timesgroup.com

Chennai: 13.08.2018

The decades-old bitter political rivalry between the two major Dravidian parties, DMK and AIADMK, has now spilled over to awarding Bharat Ratna to the stalwarts from both the sides – DMK president M Karunanidhi, who passed away on August 7, and AIADMK general secretary J Jayalalithaa, who died on December 5, 2016.

Following the death of nonagenarian leader Karunanidhi, demands came to the fore last week asking the Centre to honour his services to society for seven decades by awarding him the Bharat Ratna.

DMK MP Tiruchi Siva raised the issue in the Rajya Sabha last week and several other MPs supported him. TNCC president S Thirunavukkarasar too issued a statement the same day, backing their demand.

On Sunday, the AIADMK too joined the fray in seeking the Bharat Ratna for Jayalalithaa. The party reminded the Centre of the pending demand of the AIADMK for conferring the honour on the former chief minister.

In a post on social media, AIADMK Rajya Sabha MP V Maitreyan noted that newspapers have carried a lot of information about the Bharat Ratna and listed out recipients of the award from Tamil Nadu that included C Rajagopalachari, C V Raman, K Kamaraj, MGR, APJ Abdul Kalam and M S Subbulakshmi.

“After the sad demise of Puratchi Thalaivi Amma on December 5, 2016, the general council of AIADMK met on December 29, 2016 and passed a unanimous resolution, urging the Union government to accord Bharat Ratna for Amma. The state cabinet also passed a resolution urging the Centre to confer the highest civilian award on her,” Maitreyan said in his Facebook post, while adding that the AIADMK MPs also raised the issue in both the houses of Parliament in January and February 2017.

More than 600 days have passed since Jayalalithaa’s sad demise, Maitreyan wrote in his post. He added, “The AIADMK cadres, Amma loyalists and the people of Tamil Nadu are eagerly awaiting the response of the NDA government in this regard on conferring Bharat Ratna on their beloved people’s chief minister Puratchi Thalaivi Amma.”
After holidays, air fares to Gulf hit ₹30k

Travellers Opt For Cheaper Flights From Delhi, Mumbai

TIMES NEWS NETWORK: 13.08.2018

Chennai:

Air fares to West Asia and Europe are heading to stratospheric levels, boosted by high demand from flyers heading back from the country after the September holidays.

Due to high fares via Chennai, travel agents have started to route travellers to Europe via Mumbai and Delhi. Fares to Chennai are already high because of tourist traffic.

One-way fare has touched ₹30,000 for non-stop flights on Chennai-Dubai route while the fare is ₹16,000 to ₹18,000 on flights with a stopover in Delhi or Mumbai. This is an all time high for the season, say travel agents.

There are only four direct flights to Dubai, three flights to Abu Dhabi and two flights to Doha. The one way fares are in the range of ₹19,000 to ₹30,000 for most of the days next month. One-way fares to the Gulf should be in the range of ₹12,000 to ₹15,000 during this season. In contrast, one-way fare to Singapore is in the range of ₹4,000 to ₹10,000. The travel time to both the Gulf and Singapore is more or less the same from Chennai. However, there are seven flights between Chennai and Singapore every day and a majority of travellers are tourists heading to Southeast Asia.

Seats to West Asian destinations are costlier on weekends because of the number of tourists heading to these destinations for short holidays.

Basheer Ahmed of Metro Travels said, “Flights are going full to Dubai, Abu Dhabi and Doha. This has increased the fare. Dubai and Abu Dhabi are also transit hubs for travelling to Europe and the US. Seats are full because the number of people travelling to the US is also high.”

He also said flights out of Chennai are the costliest. “It is cheaper to fly from Mumbai and Delhi. Many travel agents have started to route passengers through these gateways,” he added. The best fares are also not available though bookings are made much in advance.

Flights via Delhi or Mumbai to Europe are cheaper than direct flights from Chennai. The high round trip fares have started to impact tourists. Chennai has direct flights to Paris, London and Frankfurt. These flights are not enough to handle the demand, said an airport official. Passengers also do not enjoy convenient travel for the money invested in the ticket because low-cost carriers like IndiGo and Air Arabia, which do not offer free food and beverages and other inflight facilities, are also expensive.

Majority of the tourists fly to Europe and the US till mid-November which is the best time to visit after which the weather there gets cold and snowy.

Sunday, August 12, 2018

முக நூலில் படிக்கப் பட்ட பதிவு

முக நூலில் படித்தது

எங்கே போனாய் தாவணியே....
எங்கே போனாய்
கடந்த நூற்றாண்டின்
காணாமல்போனவைகளின் பட்டியலில்கூட
காணவில்லை உன் பெயரை.
கிராமபுறங்களில்
விளைநிலங்களோடு சேர்ந்து
நீயும்
தொலைந்து போய்விட்டாயே.
வயல்வெளிகளையும்,உன்னையும்
இனிவரும்
தலைமுறை
இன்டர்நெட்டில்தான்
காணமுடியும்.
சுடிதார்,மிடி,ஜீன்ஸ்
என மேற்கத்திய எதிரிகள்
உன்னை குற்றூயிராய் போட..
மிச்ச உயிரையும்
எடுத்துவிட்டது
நைட்டி.
இன்று
கொஞ்சமாவது
தன் படங்களில்
உன்னை
வாழவைத்து கொண்டிருக்கும்
தமிழ்சினிமா இயக்குனர்களுக்கு
நன்றி சொல்வாய்...
தொலைந்துபோன அல்லது
தொலைக்கப்பட்ட
தாவணியே...

ஒரு நண்பரின் பதிவு முகநூலில்.

இனி, முழுநேரம் விவசாயம் தான் ! பணி ஓய்வு போலீஸ் அதிகாரி அசத்தல்

ந.பா.சேதுராமன்

தொடர்ச்சியாக இரண்டுமுறை கார்களை ஏற்றிக் கொல்ல முயற்சி நடந்தது, ஆனால் ராஜேந்திரன் அதிலிருந்து தப்பித்தார். விவகாரம் அப்போதைய போலீஸ் கமிஷனர் விஜயகுமார் கவனத்துக்குப் போனது. ராஜேந்திரனுக்கு, 'துப்பாக்கி பாதுகாப்பு'க்கு கமிஷனர் உத்தரவிட்டார்.



முழுநேர விவசாயமே, இனி என் வாழ்க்கை என்கிறார், இன்று பணி ஓய்வு பெறும் போலீஸ் டி.எஸ்.பி ராஜேந்திரன். 1987-ம் ஆண்டு 'பேட்ச்' நேரடி சப்-இன்ஸ்பெக்டராக காவல்துறைக்கு வந்தவர், என்.பி.ராஜேந்திரன். 35 ஆண்டு காலம் காவல் பணியாற்றி, பதவி உயர்வில் டி.எஸ்.பி வரை வந்த ராஜேந்திரன் தற்போது காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் உட்கோட்ட டி.எஸ்.பியாகி பணி ஓய்வு பெற்றுள்ளார். கடந்த 31.7.2018 அன்று பணி ஓய்வு பெற்றவருக்கு இன்று (12.8.2018) மதுராந்தம், சோத்துப்பாக்கம் கிராமத்தில் பிரிவுஉபசார விழா நடக்கிறது. விழாவை உள்ளூர் கிராம மக்களே முன்வந்து நடத்துகின்றனர்.

2002- மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் சென்னை விபசாரத் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டராக ராஜேந்திரன் பணியாற்றினார். குறிப்பிட்ட அந்த இரண்டாண்டுகளில் மட்டுமே கைது நடவடிக்கையாக 2015 பேரை ராஜேந்திரன் சிறையில் அடைத்திருக்கிறார், 120 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறார். பல முன்னணி நடிகைகள், துணை நடிகைகள் நாள்தோறும் கைது நடவடிக்கையில் சிக்கியதும் அந்த காலகட்டத்தில்தான். விபசார உலகின் தரகர்களாக அறியப்பட்ட பூங்கா வெங்கடேசன், ஐதராபாத் பிரசாத், டெய்லர் ரவி, ராயப்பேட்டை சுரேஷ், விக்கி, மும்பை நாகேஸ்வரராவ் போன்ற பலர், சிறைக்குப் போன பட்டியலில் இடம் பெற்றனர். ராஜேந்திரனால், 'தொழில்' பெரிதும் பாதிக்கப்படுவதாகக் கருதிய விபசாரக் கும்பல், ராஜேந்திரனைக் கொலை செய்து விட்டு அதை விபத்து போல சித்தரிக்கத் திட்டம் போட்டது. அதன் தொடர்ச்சியாக இரண்டுமுறை கார்களை ஏற்றிக் கொல்ல முயற்சி நடந்தது, ஆனால் ராஜேந்திரன் அதிலிருந்து தப்பித்தார். விவகாரம் அப்போதைய போலீஸ் கமிஷனர் விஜயகுமார் கவனத்துக்குப் போனது. ராஜேந்திரனுக்கு, 'துப்பாக்கி பாதுகாப்பு'க்கு கமிஷனர் உத்தரவிட்டார்.

குடியரசுத் தலைவரின் மெச்சத் தகுந்த காவல் பணிக்கான பதக்கம், தமிழகக் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்கான மெச்சத்தகு முதல் விருது என ராஜேந்திரன் விருதுகளால் கௌரவிக்கப் பட்டார். சென்னை நகரே 2015-ல் வெள்ளத்தில் மூழ்கியபோது கோட்டூர்புரம் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்போது தத்தளித்த ஏராளமான பொதுமக்களை நீரில் சென்று காப்பாற்றிய வகையில், போலீஸ் உயரதிகாரிகளின் பாராட்டும் ராஜேந்திரனுக்குக் கிடைத்திருக்கிறது. பணி ஓய்வு குறித்து நம்மிடம் பேசிய ராஜேந்திரன், "காவல் பணியில், உயரதிகாரிகளிடம் எந்தத் தண்டனையும் பெறாமல், பொது மக்களின் குற்றச் சாட்டுக்கும் ஆளாகாமல் என்னுடைய 35 ஆண்டுகால சர்வீஸை முடித்ததே பெரிய சாதனை என்றுதான் நினைக்கிறேன். போலீஸை நம்பித்தான் பொதுமக்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட மக்களின் குறைகளைக் காதுகொடுத்துக் கேட்க சில நிமிடங்கள் ஒதுக்கினாலே போதுமானது. குடும்பச் சண்டைகள் தொடர்பான 90 சதவிகிதம் பிரச்னைகளுக்கு அதிலேயே தீர்வு கிடைத்து விடும். ரோந்துப் பணியில் தீவிர கவனம் செலுத்தினால் சமூக விரோதிகளின் நடமாட்டமே இல்லாமல் போய்விடும். இந்த யூனிபார்ம் முழு மனநிறைவோடு விடைபெறுகிறது. அதே மனநிறைவை நான் மீண்டும் பெற, இடுப்பில் துண்டோடு கழனியில் இறங்கி விவசாயம் பார்க்கப் போகிறேன், இனி அதுதான் என் உலகம்" என்கிறார் ராஜேந்திரன்.
``பால் ஊற்றியது மத சடங்கில்லை... தமிழ் மரபு!” கருணாநிதி சமாதிக்குப் பால் ஊற்றியது குறித்து மதன் கார்க்கி ..vikatan 12.08.2018

சனா

மறைந்த முதல்வர் கருணாநிதி பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்துகொள்கிறார் பாடலாசிரியர் மதன் கார்க்கி.



``என் சின்ன வயசுல இருந்தே கலைஞர் ஐயாவை தெரியும். என் வாழ்க்கையின் முக்கியமான காலகட்டங்களில் அவர் என் கூட இருந்திருக்கிறார். அவரை நினைக்கும்போதே கண்ணீர் வருகிறது'' எதிர்முனையில் அவர் அழுகிறார் என்பது புரிந்தது. தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்து பேசுகிறார் பாடலாசிரியர் மதன் கார்க்கி.

''அப்பாவுக்கும் கலைஞர் ஐயாவுக்குமான உறவு அரசியல் சார்ந்ததுனு நிறையபேர் நினைச்சிட்டு இருக்காங்க. அது தவறு. ரெண்டு பேருக்கும் இடையிலே இருக்கிறது இலக்கியம் சார்ந்த உறவு. காலையில் எழுந்ததும் அப்பா 'முரசொலி'யைப் படிச்சுட்டு, அதில் இருக்கக்கூடிய கவிதைகள், கட்டுரைகள் பற்றி கலைஞர் ஐயாவுக்குப் போன் பண்ணி பேசுவார். அந்த உரையாடல் நீண்ட நேரம் தொடரும்.




கலைஞர் ஐயாவும் அப்பாவுடைய நூல்களைப் படிச்சிட்டு அவருடைய கருத்துகளை சொல்லுவார். பலநாள் அப்பாவோட சிரிப்பொலி கேட்டு அதிகாலை நேரங்களில் எழுந்திருக்கேன். கலைஞர் ஐயாவும் அப்பாவும் சிரிச்சிட்டே பேசுற அதிரொலி வீடு முழுக்க எதிரொலிக்கும். ஆமாம், அந்த அதிகாலை நேரத்திலேயே எங்கள் வீடு முழுக்க கலைஞர் வாசம்தான் வீசும்.

அப்பா எந்தச் சூழ்நிலையிலும் கலைஞர் ஐயாவிடம் எந்த உதவியும் கேட்டதில்லை. ஆனா, முதல்முறையா எனக்காக ஓர் உதவி கேட்டார். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புல எனக்கு ஆர்வம் இருந்தது. அண்ணா பல்கலைக்கழகத்துல படிக்கணும்னு நினைச்சேன். ஆனா, என்கிட்ட குறைவான மதிப்பெண்தான் இருந்தது. அதனால எனக்கு சீட் கிடைப்பது கஷ்டமான காரியமா இருந்தது. அந்தச் சூழ்நிலையில் அப்பா, கலைஞர் ஐயாகிட்ட உதவி கேட்டார். உடனே, 'தமிழ் அறிஞர்' கோட்டா மூலமா சி.எம் செல்லுல இருந்து பேசி எனக்கு சீட் கிடைத்தது.

சிலர் மட்டும்தான் அந்தக் கோட்டா வழியே படிக்க வருவாங்க. அதில் நானும் ஒருவன். அதற்கு முழு காரணம் கலைஞர் ஐயாதான். அதுக்காக அவருக்கு நான் பெரிய நன்றிக்கடன் பட்டிருக்கேன். ஏன்னா, எனக்கான கல்வி ஆரம்பிச்சதே அண்ணா பல்கலைக்கழகத்துலதான். ஸ்கூல் படிக்கும்போதெல்லாம் படிப்பு மேலே பெரிய ஆர்வம் இருந்ததில்லை. ஆனா, அண்ணா பல்கலைக்கழத்துல இருந்த பேராசிரியர்கள், நண்பர்கள் கொடுத்த ஊக்கத்துலதான் நல்லா படிக்க ஆரம்பிச்சேன். என் வாழ்க்கையே அங்கிருந்துதான் தொடங்கிச்சு.



கலைஞர் ஐயா டைடல் பார்க் திறந்துபோது, நான் அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சொசைட்டி செகரட்டரி. அந்தச் சொசைட்டியில் இருந்த மாணவர்களெல்லாம் ஒண்ணா சேர்ந்து கலைஞர் ஐயாவுக்கு நன்றி சொல்றதுக்காக அவரை நேரில் சந்தித்து கவிதை ஒண்ணு படிச்சு காட்டினோம். உங்களுடைய இந்தத் திட்டம் எதிர்காலத்தையே மாற்றப்போகுதுங்கிற நோக்கில் எழுதிய கவிதை அது.

''இந்த மாதிரி பூங்கா கட்டிய உங்களுடைய கைகளுக்கு, எங்களால் பூக்களை மட்டுமே கொடுக்க முடிந்தது. ஆனால், எதிர்காலத்தில் நாங்கள் எங்கே இருந்தாலும் எங்களுடைய அறிவும் ஆற்றலும் இந்த மண்ணுக்குதான் பயன்படும். நாங்கள் இங்கே வந்துதான் உழைப்போம்''னு அவர் முன்னால் உறுதி எடுத்துக்கிட்டோம். இப்ப என் நண்பர்கள் பலரும் அவர் கட்டித்தந்த டைடல் பார்க்கில்தான் வேலை பார்த்துட்டு இருக்காங்க. பலருக்கும் அவர் வாழ்க்கை கொடுத்திருக்கார்.

என் மனைவி நந்தினியை அண்ணா பல்கலைக்கழகத்தில்தான் சந்திச்சேன். எங்களுக்கிடையேயான காதல் அங்குதான் தொடங்குச்சு. எங்கக் காதலை வீட்டில் சொன்னப்ப அப்பா தயங்கினார். யோசிச்சார். அந்தச் சமயத்துல அப்பாவின் நண்பர்கள் யார்கிட்டயாவது இந்த விஷயத்தைச் சொல்லலாம்னு தோணுச்சு. அப்பாவுக்கு நண்பர்கள் மிகவும் குறைவு. அதனால கலைஞர் ஐயாகிட்ட சொல்லி அப்பாகிட்ட பேசச் சொல்லலாம்னு முடிவு பண்ணினேன். தயாளு அம்மா மூலமா கலைஞர் ஐயாவை பார்த்து என் காதல் பற்றிச் சொன்னேன்.

கவிபேரசரின் மகனார் அவர்களே! , தமிழ்ப் பேறிஞர் அவர்களே! "பால் தெளித்து வணங்குவதும் மரபு சார்ந்த விஷயம்தான். இதுபற்றி தொல்காப்பியத்திலும் இருக்கு." எந்த இடத்தில் இருக்கு என்று இடஞ் சுட்டிப் பொருள் வி...
View Comments Post comment

''நீ, கவலைப்படாத தம்பி. கோபாலபுரத்தில் நிறைய பேர் காதல் திருமணம் புரிந்தவர்கள்தான். அப்பாகிட்ட நான் பேசுறேன்''னு சொன்னார். சொன்ன மாதிரியே அப்பாகிட்ட வந்து பேசுனார். அவர் வீட்டுக்குள்ள போய் அப்பாகிட்ட பேசிட்டு திரும்பிவரும்போது வீட்டு வாசலில் நானும் நந்தினியும் நின்னுட்டு இருந்தோம். எங்களைப் பார்த்து சிரிச்சிட்டு, 'நான், சொன்ன மாதிரியே சம்மதம் வாங்கிக் கொடுத்துட்டேன். என்னோட தலைமையிலதான் உங்க கல்யாணம் நடக்கும்''னு சொல்லிட்டுப்போனார்.

அவர் சொன்ன மாதிரியே அவர் தலைமை தாங்கி எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். என் பையன் பிறந்தவுடனேயே அவரிடம் எடுத்துச் சென்று ஆசீர்வாதம் வாங்கினேன். நேரடியா, கலைஞர் ஐயா எங்க வாழ்க்கையில் நடத்திய விஷயங்கள் இதெல்லாம். இதுதவிர, அவருடைய திரைப்பட வசனங்கள் மூலமா, அரசியல் திட்டங்கள் மூலமா நிறைய கற்றிருக்கேன். 'பாகுபலி' படத்துக்கு வசனம் எழுதும் போது அவருடைய திரைப்படங்கள் பார்த்து வசனங்கள் பற்றி தெரிஞ்சிகிட்டேன்.



கலைஞர் ஐயாவுடைய உடல்நிலை சரியில்லனு கேள்விப்பட்டவுடனே அப்பா ரொம்ப வருத்தப்பட்டார். அவருடைய இறப்புக்கு இரண்டு நாளுக்கு முன்னால் அப்பா உடைந்துபோய் உட்கார்ந்திருந்தார். கலைஞர் ஐயாவுடைய இறப்பு அப்பாவுக்கு மிகப்பெரிய இழப்பு. அப்பாவுடைய வாழ்க்கையில் கலைஞர் எவ்வளவு முக்கியமான மனிதர் என்கிற விஷயம் எனக்கு நல்லா தெரியும். ரொம்ப நாளாவே கலைஞர் ஐயாவுடைய குரல் கேட்க முடியலைனு அப்பா ரொம்ப வருத்தப்பட்டார். இந்தளவுக்கு அப்பா எமோஷனல் ஆகி நான் பார்த்ததே இல்லை. அப்பாவை தேற்றவே முடியலை. ஐயாவின் இறுதிசடங்கு வரைக்கும் உடன் இருந்தார்.

குடும்பத்தில் இருந்த எல்லாரிடமும் கலைஞர் பற்றிய நிறைய விஷயங்களை சொல்லிட்டு இருந்தார். கலைஞர் ஐயாவுடைய இறப்பிலிருந்து அப்பா இன்னும் மீளவே இல்லை. எங்க அப்பா உட்பட எங்க குடும்பத்தில் இருக்கின்ற எல்லாரையும் கலைஞர் ஐயா, தம்பினுதான் அழைப்பார். இனி அந்தக் குரலை எப்போது கேட்கப்போறோம். கலைஞர் ஐயாவுடைய சமாதியில் அப்பாவோட சென்று பூக்கள் போட்டு, பால் ஊற்றிட்டு வந்தோம்.

‘பால் ஊற்றினது கலைஞர் பின்பற்றும் பகுத்தறிவுக்கு எதிரானது. இந்துமுறை சடங்கு. அதை அப்பா பண்ணினது ஏன்’னு சிலர் கேட்கறாங்க. ஆனா, அது உண்மையில்ல. 'நீத்தார்க்கு பால் வார்த்தல்'னு நம்ம தமிழ் மரபில் இருக்கு. இறந்தவர் இடத்தை ஈரமா வைக்கிறது தமிழ் மரபு. இது இந்து மத சடங்கு கிடையாது. மலர்களை வைத்து எப்படி அஞ்சலி செலுத்துறோமோ அதேமாதிரி பால் தெளித்து வணங்குவதும் மரபு சார்ந்த விஷயம்தான். இதுபற்றி தொல்காப்பியத்திலும் இருக்கு. என் தாத்தா இறந்த நேரத்தில் எங்கள் குடும்பத்தில் இருந்த யாரும் கடவுள் வழிபாடு, இந்துமுறை சடங்குகள் எதுவும் செய்யவில்லை. பால் தெளித்தோம். அது, நம்ம மனசை அமைதிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு மரபு. அப்பாவுடைய கிராமத்தில் அதை இன்னும் கடைப்பிடிக்கிறாங்க.



எனக்கும் அப்பாவுக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது. என் மனைவியும் சாமி கும்பிட மாட்டாங்க. அதை யார்மீதும் நாங்க திணித்ததும் இல்லை. என் அம்மாவுக்கும் தம்பிக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு. அம்மா என்னை கோயிலுக்குக் கூட்டிட்டுப் போகச் சொன்னால் அவங்களைக் கூட்டிட்டுப் போவேன். எங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. அதற்காக நாங்க கடவுள் எதிர்ப்பாளர்கள் கிடையாது.”

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated  Delay In Int’l Flights Testing Patience Of Loyal Customers  New Delhi :...