Friday, January 11, 2019

டீன் பணியிடங்களை நிரப்புவது எப்போது: உயர்நீதிமன்றம் கேள்வி

Added : ஜன 11, 2019 06:14

மதுரை:மதுரை பீ.பி.குளம் விஜயலட்சுமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை, திருச்சி, சேலம், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் டீன் பணியிடங்கள் காலியாக உள்ளன. பல்வேறு அரசு மருத்துவமனைகளில் மருத்துவக் கண்காணிப்பாளர்கள், நிலைய மருத்துவ அலுவலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் மருத்துவமனைகளில் நிர்வாகம் மற்றும் இதர பணிகள் முடங்கியுள்ளன. டீன் மற்றும் இதர பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

மதுரை அரசு மருத்துவமனையை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். கழிவுகள் தேங்காமல் அகற்ற நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு விஜயலட்சுமி மனு செய்தார்.நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு அமர்வு:டீன் மற்றும் இதர பணியிடங்கள் எவ்வளவு கால அவகாசத்திற்குள் நிரப்பப்படும் என தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஜன.,21 ல் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 29.09.2024